– வினோத்.பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை படித்திருக்கிறோம். இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான ஆணை தேர்வு செய்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக கருதப்பட்ட இது மன்னராட்சி காலத்தில் இருந்ததை நம் வரலாறு சொல்லுகிறது. இராமாயணம் உட்பட நமது பல புராணங்களில் இது பேசப்பட்டிருக்கிறது..ஆனால், இன்றும் நம் நாட்டின் ஒரு மாநிலத்தில் இதேபோன்று இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து, தங்களுக்கான மணமகனை பெண்கள் தேர்வு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது..இன்று நேற்றல்ல கடந்த 700 ஆண்டுகளாக இது நடைபெற்றுவருகிறது. இதை 'மாப்பிள்ளை சந்தை' என்று அழைக்கின்றனர் அந்த கிராம மக்கள்..பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தான் இந்த வினோத மாப்பிள்ளை சந்தை நடக்கிறது. இந்த வினோத சந்தையை 'சவுரத் சபா' என்றும் அழைக்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மகள்களுடன் இந்த சந்தைக்கு வந்து, தனது மகளுக்கு ஏற்ற, தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்வு செய்கின்றனர்..அரச மரத்தடியில் 9 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான மாப்பிள்ளைகள் தங்களின் பெற்றோருடன் திரளாக கலந்து கொள்கின்றனர்..மாப்பிள்ளையாக வரும் அனைவரும் வேட்டி, குர்தா, ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு மாப்பிள்ளைக்கும் அவர்களின் பின்னணி, கல்வி தகுதி அடிப்படையில் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது..மாப்பிள்ளை பிடித்த பிறகு, அவருடைய குடும்ப பின்னணி, தகுதி தகவல்கள் சரி பார்க்கப்படுகின்றன..மணப்பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளையின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சந்தையிலேயே சரிபார்க்கப்படுகின்றன. அவற்றில் அவர்கள் திருப்தி அடைந்தால், இரு வீட்டாரும் திருமணம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்கிறார்கள்..அண்மையில் பிபிசி இது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்க வந்தபோது கிராம சபை அனுமதிக்கவில்லை. சொன்ன காரணம். "எங்கள் மூதாதையர்கள் எங்கள் பெண்களுக்கு தகுந்த மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுப்பதற்காக உருவாக்கிய நடைமுறையை நீங்கள் படமெடுத்து பணமாக்குவதை நாங்கள் விரும்பவில்லை."
– வினோத்.பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை படித்திருக்கிறோம். இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான ஆணை தேர்வு செய்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக கருதப்பட்ட இது மன்னராட்சி காலத்தில் இருந்ததை நம் வரலாறு சொல்லுகிறது. இராமாயணம் உட்பட நமது பல புராணங்களில் இது பேசப்பட்டிருக்கிறது..ஆனால், இன்றும் நம் நாட்டின் ஒரு மாநிலத்தில் இதேபோன்று இளைஞர்களை வரிசையாக நிற்க வைத்து, தங்களுக்கான மணமகனை பெண்கள் தேர்வு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்பட்டு வருகிறது..இன்று நேற்றல்ல கடந்த 700 ஆண்டுகளாக இது நடைபெற்றுவருகிறது. இதை 'மாப்பிள்ளை சந்தை' என்று அழைக்கின்றனர் அந்த கிராம மக்கள்..பீகார் மாநிலத்தின் மதுபானி மாவட்டத்தில் தான் இந்த வினோத மாப்பிள்ளை சந்தை நடக்கிறது. இந்த வினோத சந்தையை 'சவுரத் சபா' என்றும் அழைக்கிறார்கள். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களின் மகள்களுடன் இந்த சந்தைக்கு வந்து, தனது மகளுக்கு ஏற்ற, தங்கள் குடும்பத்துக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேர்வு செய்கின்றனர்..அரச மரத்தடியில் 9 நாட்கள் நடக்கும் இந்த சந்தையில் ஏராளமான மாப்பிள்ளைகள் தங்களின் பெற்றோருடன் திரளாக கலந்து கொள்கின்றனர்..மாப்பிள்ளையாக வரும் அனைவரும் வேட்டி, குர்தா, ஜீன்ஸ் மற்றும் சட்டை அணிந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு மாப்பிள்ளைக்கும் அவர்களின் பின்னணி, கல்வி தகுதி அடிப்படையில் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது..மாப்பிள்ளை பிடித்த பிறகு, அவருடைய குடும்ப பின்னணி, தகுதி தகவல்கள் சரி பார்க்கப்படுகின்றன..மணப்பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளையின் ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சந்தையிலேயே சரிபார்க்கப்படுகின்றன. அவற்றில் அவர்கள் திருப்தி அடைந்தால், இரு வீட்டாரும் திருமணம் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்கிறார்கள்..அண்மையில் பிபிசி இது குறித்து ஓர் ஆவணப்படம் எடுக்க வந்தபோது கிராம சபை அனுமதிக்கவில்லை. சொன்ன காரணம். "எங்கள் மூதாதையர்கள் எங்கள் பெண்களுக்கு தகுந்த மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுப்பதற்காக உருவாக்கிய நடைமுறையை நீங்கள் படமெடுத்து பணமாக்குவதை நாங்கள் விரும்பவில்லை."