சிறுகதை: -விஜிரவி.ஓவியம்: சேகர். "ரங்கசாமி… எங்க ரெண்டு பேரையும் கண் ஆஸ்பத்திரியில இறக்கி விட்டுட்டு நீ நேரா வீட்டுக்கு வந்து சேரு. ஏசி ரிப்பேர் பார்க்க மெக்கானிக் வருவான். நீ கூட இருந்து பாத்துக்கோ. இந்தா பணம்" என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டினார் மகாலிங்கம்.."சரிங்க முதலாளி…'' என்ற டிரைவர் ரங்கசாமி பணத்தை வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டான்..முதலாளியும் அவர் மனைவியும் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பினான். அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்டதும், "இங்கே எங்களுக்கு செக்கப் முடிய எப்படியும் மூணு மணி நேரமாகும். நீ வீட்டுக்குப் போயிட்டு ஒரு மணிக்கு எங்களை வந்து பிக்கப் பண்ணிக்க'' என்றார் மகாலிங்கம்..பத்தரை மணிக்கு வந்த மெக்கானிக் ஏ.சி.யை ரிப்பேர் செய்ய ஆரம்பித்தான். வேலையை முடித்துவிட்டு, "ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஆச்சுங்க…'' என்றவனிடம் பணம் கொடுத்தான் ரங்கசாமி. அவன் கிளம்பிப் போனதும் சீழக்கை அடித்தபடி சமையலறைக்குள் நுழைந்தவன், "மங்களம், சூடா, நல்ல ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டுக் கொண்டு வா…" என்றான்.."என்னய்யா ஒரே குஷியா இருக்க?" என்றாள் சமையல்காரியும் அவன் மனைவியுமாகிய மங்களம்.."ஏ.சி. ரிப்பேர் பண்ண ஆயிரத்தி முன்னூறுதான் ஆச்சு. ஆனா, நம்ம முதலாளிகிட்ட ஆயிரத்தி எண்ணூறுனு சொல்லி மீதி இருநூறு மட்டும் கொடுப்பேன். இன்னைக்கு எனக்கு லாபம் ஐநூறு ரூவா…''."அடப்பாவி… எதுக்கு இந்தத் திருட்டுப்புத்தி?''."இந்தா, சும்மாயிரு புள்ளே… எப்பவும் ரெகுலரா வர்ற மெக்கானிக் ஊர்ல இல்லை. இவனை நான்தான் சிபாரிசு பண்ணினேன் முதலாளிகிட்ட. அதனால் எவ்வளவு செலவாச்சுன்னு அவருக்குத் தெரியப்போறதில்லை. அப்புறம் என்ன? நைட்டு நாம ரெண்டு பேரும் செகண்ட் ஷோ சினிமா போலாம் புள்ளை'' என்றான் உவகையுடன்.."யோவ்… நீ பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்லை. முதலாளி எவ்வளவு நல்லவரு. உன்னைய முழுசா நம்பித்தானே இந்த வேலையை உன்கிட்ட ஒப்படைச்சாரு. அவருக்குப் போய் நீ துரோகம் பண்ணலாமா? உண்மையா ஒழைக்கிற காசே ஒட்ட மாட்டேங்குது. எதுக்கு இதெல்லாம்? வேணாம்யா… மீதிப்பணத்தை அப்படியே முழுசா மொதலாளிகிட்ட கொடுத்திடு'' என்றாள் மங்களம்.."போதும் உன் உபதேசம். போய் காபியைக் கொண்டா. ஆஸ்பத்திரிக்குப் போய் அவங்கள இட்டாரணும்'' என்றான் அதட்டலாக..அன்று இரவு எட்டு மணிக்கு வேலை முடித்து ரங்கசாமியும் மங்களமும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ரவுண்டானா தாண்டியதும், இடது புறம் செல்லும் அந்தக் குறுகலான சந்தில் வேகமாக வண்டியைத் திருப்பியவன், எதிரே சைக்கிளில் வந்த அந்த முதியவரைக் கவனிக்கவில்லை..அவனுடைய பைக்கின் முன் சக்கரம் சைக்கிளை இடித்ததில், சைக்கிளுடன் கீழே சாய்ந்தார் பெரியவர். அத்துடன் கேரியரில் வைத்துக் கட்டப்பட்டிருந்த அட்டைப் பெட்டியும் கீழே விழு, அதனுள் ஏழெட்டு அட்டைகளில் அடுக் கடுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் நாலாபுறமும் சிதறியோடி, உடைபட்டு மஞ்சள் மற்றும் வெள்ளை நிற நீரோடை ஒரு குட்டிக் கால்வாய் போல மண்ணில் கோலமிட ஆரம்பித்தது..இடுப்பைப் பிடித்தபடி சாய்ந்திருந்த பெரியவர், எழக்கூட சக்தியற்று இருந்ததைப் பார்த்த மங்களம், "மொதல்ல அவரைத் தூக்கிவிடு'' என்றதும்தான் பிரமையுடன் நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரங்கசாமி வண்டியை விட்டு இறங்கி, அவரருகே சென்று, கைகொடுத்து எழுப்பி நிற்கவைத்தான்..எழுபது வயதிருக்கும் அவருக்கு. ஒல்லியான தேகம் லேசாய் நடுங்க, "இப்படிப் பண்ணிட்டியே'' என்றார் பரிதாபமானக் குரலில்.."மன்னிச்சுக்கோங்க ஐயா… வீட்டுக்குப் போகிற அவசரம். எதிரே வந்த உங்களைக் கவனிக்கலை" என்று ரங்கசாமி இழுக்க, "உங்களுக்கு அடி எதுவும் பலமாப் படலையே'' என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.."அட என்னைய விடு தாயி… வீட்டுக்குப் போயி ஒத்தடம் கொடுத்தா வலியெல்லாம் பறந்திரும். இந்த ஒடஞ்சு போன முட்டைகளுக்கு என் முதலாளிக்கு என்ன பதில் சொல்லுவேன்? நூறு முட்டைக… இப்பத்தான் கோழிப்பண்ணையில இருந்து வாங்கியாறேன். எப்பவும் பண்ணைக் காரங்களே வேனில் கொண்டுவந்து கடையில் கொடுப்பாங்க. எல்லா வேனும் வெளியூர் ட்ரிப்புல இருக்காம். அதான் என்னைய அனுப்பிச்சார் எங்க முதலாளி. கிளம்பறப்பவே, 'பாத்து… ஜாக்கிரதை'னு சொன்னாரு. இப்படியாகிடுச்சே'' என்றார் வருத்தமாக.."எங்க வேலை செய்யறீங்க?''."சம்பத் நகர்ல இருக்கிற 'மாலதி மளிகைக் கடை' யில. ஐநூறு ரூபா சரக்கு. என் சம்பளத்திலதான் பிடிப்பாரு. ஏற்கனவே வாங்கிற நாலாயிரம் ரூபாயே இருபது நாளுக்கு தாங்க மாட்டிங்கிது.'' புலம்பியவரைக் கரிசனத்துடன் நோக்கிய மங்களம்,."பெரியவரே… இதில உங்கத் தப்பு என்ன இருக்கு? எங்க வண்டி வந்து மோதித்தானே முட்டைகள் ஒடஞ்சு, இப்படி வீணாப் போயிருச்சு. நீங்க கவலைப்படாதீங்க. நஷ்டத்தை ஈடு செய்ய, நாங்க பணம் குடுத்தர்றோம்'' என்றவள், தன் கணவனைப் பார்த்து, "ஏங்க, ஐநூறு ரூபா எடுங்க.''.பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பெரியவரிடம் நீட்டிய ரங்கசாமி, மங்களத்தின் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலை கவிழ்ந்தான்.
சிறுகதை: -விஜிரவி.ஓவியம்: சேகர். "ரங்கசாமி… எங்க ரெண்டு பேரையும் கண் ஆஸ்பத்திரியில இறக்கி விட்டுட்டு நீ நேரா வீட்டுக்கு வந்து சேரு. ஏசி ரிப்பேர் பார்க்க மெக்கானிக் வருவான். நீ கூட இருந்து பாத்துக்கோ. இந்தா பணம்" என்று இரண்டாயிரம் ரூபாய் நோட்டை நீட்டினார் மகாலிங்கம்.."சரிங்க முதலாளி…'' என்ற டிரைவர் ரங்கசாமி பணத்தை வாங்கி சட்டைப் பையில் போட்டுக்கொண்டான்..முதலாளியும் அவர் மனைவியும் ஏறி அமர்ந்ததும் காரைக் கிளப்பினான். அவர்களை மருத்துவமனையில் இறக்கிவிட்டதும், "இங்கே எங்களுக்கு செக்கப் முடிய எப்படியும் மூணு மணி நேரமாகும். நீ வீட்டுக்குப் போயிட்டு ஒரு மணிக்கு எங்களை வந்து பிக்கப் பண்ணிக்க'' என்றார் மகாலிங்கம்..பத்தரை மணிக்கு வந்த மெக்கானிக் ஏ.சி.யை ரிப்பேர் செய்ய ஆரம்பித்தான். வேலையை முடித்துவிட்டு, "ஆயிரத்தி முன்னூறு ரூபாய் ஆச்சுங்க…'' என்றவனிடம் பணம் கொடுத்தான் ரங்கசாமி. அவன் கிளம்பிப் போனதும் சீழக்கை அடித்தபடி சமையலறைக்குள் நுழைந்தவன், "மங்களம், சூடா, நல்ல ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டுக் கொண்டு வா…" என்றான்.."என்னய்யா ஒரே குஷியா இருக்க?" என்றாள் சமையல்காரியும் அவன் மனைவியுமாகிய மங்களம்.."ஏ.சி. ரிப்பேர் பண்ண ஆயிரத்தி முன்னூறுதான் ஆச்சு. ஆனா, நம்ம முதலாளிகிட்ட ஆயிரத்தி எண்ணூறுனு சொல்லி மீதி இருநூறு மட்டும் கொடுப்பேன். இன்னைக்கு எனக்கு லாபம் ஐநூறு ரூவா…''."அடப்பாவி… எதுக்கு இந்தத் திருட்டுப்புத்தி?''."இந்தா, சும்மாயிரு புள்ளே… எப்பவும் ரெகுலரா வர்ற மெக்கானிக் ஊர்ல இல்லை. இவனை நான்தான் சிபாரிசு பண்ணினேன் முதலாளிகிட்ட. அதனால் எவ்வளவு செலவாச்சுன்னு அவருக்குத் தெரியப்போறதில்லை. அப்புறம் என்ன? நைட்டு நாம ரெண்டு பேரும் செகண்ட் ஷோ சினிமா போலாம் புள்ளை'' என்றான் உவகையுடன்.."யோவ்… நீ பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்லை. முதலாளி எவ்வளவு நல்லவரு. உன்னைய முழுசா நம்பித்தானே இந்த வேலையை உன்கிட்ட ஒப்படைச்சாரு. அவருக்குப் போய் நீ துரோகம் பண்ணலாமா? உண்மையா ஒழைக்கிற காசே ஒட்ட மாட்டேங்குது. எதுக்கு இதெல்லாம்? வேணாம்யா… மீதிப்பணத்தை அப்படியே முழுசா மொதலாளிகிட்ட கொடுத்திடு'' என்றாள் மங்களம்.."போதும் உன் உபதேசம். போய் காபியைக் கொண்டா. ஆஸ்பத்திரிக்குப் போய் அவங்கள இட்டாரணும்'' என்றான் அதட்டலாக..அன்று இரவு எட்டு மணிக்கு வேலை முடித்து ரங்கசாமியும் மங்களமும் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ரவுண்டானா தாண்டியதும், இடது புறம் செல்லும் அந்தக் குறுகலான சந்தில் வேகமாக வண்டியைத் திருப்பியவன், எதிரே சைக்கிளில் வந்த அந்த முதியவரைக் கவனிக்கவில்லை..அவனுடைய பைக்கின் முன் சக்கரம் சைக்கிளை இடித்ததில், சைக்கிளுடன் கீழே சாய்ந்தார் பெரியவர். அத்துடன் கேரியரில் வைத்துக் கட்டப்பட்டிருந்த அட்டைப் பெட்டியும் கீழே விழு, அதனுள் ஏழெட்டு அட்டைகளில் அடுக் கடுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் நாலாபுறமும் சிதறியோடி, உடைபட்டு மஞ்சள் மற்றும் வெள்ளை நிற நீரோடை ஒரு குட்டிக் கால்வாய் போல மண்ணில் கோலமிட ஆரம்பித்தது..இடுப்பைப் பிடித்தபடி சாய்ந்திருந்த பெரியவர், எழக்கூட சக்தியற்று இருந்ததைப் பார்த்த மங்களம், "மொதல்ல அவரைத் தூக்கிவிடு'' என்றதும்தான் பிரமையுடன் நடந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரங்கசாமி வண்டியை விட்டு இறங்கி, அவரருகே சென்று, கைகொடுத்து எழுப்பி நிற்கவைத்தான்..எழுபது வயதிருக்கும் அவருக்கு. ஒல்லியான தேகம் லேசாய் நடுங்க, "இப்படிப் பண்ணிட்டியே'' என்றார் பரிதாபமானக் குரலில்.."மன்னிச்சுக்கோங்க ஐயா… வீட்டுக்குப் போகிற அவசரம். எதிரே வந்த உங்களைக் கவனிக்கலை" என்று ரங்கசாமி இழுக்க, "உங்களுக்கு அடி எதுவும் பலமாப் படலையே'' என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.."அட என்னைய விடு தாயி… வீட்டுக்குப் போயி ஒத்தடம் கொடுத்தா வலியெல்லாம் பறந்திரும். இந்த ஒடஞ்சு போன முட்டைகளுக்கு என் முதலாளிக்கு என்ன பதில் சொல்லுவேன்? நூறு முட்டைக… இப்பத்தான் கோழிப்பண்ணையில இருந்து வாங்கியாறேன். எப்பவும் பண்ணைக் காரங்களே வேனில் கொண்டுவந்து கடையில் கொடுப்பாங்க. எல்லா வேனும் வெளியூர் ட்ரிப்புல இருக்காம். அதான் என்னைய அனுப்பிச்சார் எங்க முதலாளி. கிளம்பறப்பவே, 'பாத்து… ஜாக்கிரதை'னு சொன்னாரு. இப்படியாகிடுச்சே'' என்றார் வருத்தமாக.."எங்க வேலை செய்யறீங்க?''."சம்பத் நகர்ல இருக்கிற 'மாலதி மளிகைக் கடை' யில. ஐநூறு ரூபா சரக்கு. என் சம்பளத்திலதான் பிடிப்பாரு. ஏற்கனவே வாங்கிற நாலாயிரம் ரூபாயே இருபது நாளுக்கு தாங்க மாட்டிங்கிது.'' புலம்பியவரைக் கரிசனத்துடன் நோக்கிய மங்களம்,."பெரியவரே… இதில உங்கத் தப்பு என்ன இருக்கு? எங்க வண்டி வந்து மோதித்தானே முட்டைகள் ஒடஞ்சு, இப்படி வீணாப் போயிருச்சு. நீங்க கவலைப்படாதீங்க. நஷ்டத்தை ஈடு செய்ய, நாங்க பணம் குடுத்தர்றோம்'' என்றவள், தன் கணவனைப் பார்த்து, "ஏங்க, ஐநூறு ரூபா எடுங்க.''.பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து பெரியவரிடம் நீட்டிய ரங்கசாமி, மங்களத்தின் பார்வையைச் சந்திக்கத் திராணியில்லாமல் தலை கவிழ்ந்தான்.