படங்கள் : பிள்ளை.– வி.ரேவதி, தஞ்சை. "நீ கூட்டுக் குடித்தனத்துல இருக்கிறதா சொல்றியே, உன்கூட யாராரு இருக்காங்க?". "நான், என் மனைவி, ரெண்டு குழந்தைகள்… எல்லாருமே ஒரே வீட்டுலதான் இருக்கோம்!".*********************************."கல்யாணம் எதுக்கும் போனா, செருப்பு, கிருப்பு எடுத்துத் தொலையாதீங்க?". "ஏன்… திடீர்னு அப்படிச் சொல்ற?"."உங்களுக்குச் செருப்புல கண்டம்னு ஜோசியர் ஒருத்தர் சொன்னாரு…" . *********************************."தூக்கத்துல யார் எழுப்பினாலும் என் மனைவிக்குக் கடுங்கோபம் வந்துடும்!'."அதான் பீரோ சாவி கேட்ட திருடனை, பின்னி பெடல்எடுத்துட்டாங்களா..?".*********************************.-எஸ். பவானி, திருச்சி. "ஆபரேஷன் தியேட்டருக்குப் போகும்போது பேஷண்ட் கொஞ்சமும் பயப்படாமல் சிரிக்கிறாரே!"."இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார்.".*********************************. "மாப்பிள்ளையின் காது மந்தம்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?"."டவுரி எவ்வளவு எதிர்பார்க்கிறீங்கன்னு கேட்டால் பெண்ணுக்கு சவுரிமுடி இருந்தாலும் பரவாயில்லைன்னு அவர் சொன்னதை வைத்துத்தான்."
படங்கள் : பிள்ளை.– வி.ரேவதி, தஞ்சை. "நீ கூட்டுக் குடித்தனத்துல இருக்கிறதா சொல்றியே, உன்கூட யாராரு இருக்காங்க?". "நான், என் மனைவி, ரெண்டு குழந்தைகள்… எல்லாருமே ஒரே வீட்டுலதான் இருக்கோம்!".*********************************."கல்யாணம் எதுக்கும் போனா, செருப்பு, கிருப்பு எடுத்துத் தொலையாதீங்க?". "ஏன்… திடீர்னு அப்படிச் சொல்ற?"."உங்களுக்குச் செருப்புல கண்டம்னு ஜோசியர் ஒருத்தர் சொன்னாரு…" . *********************************."தூக்கத்துல யார் எழுப்பினாலும் என் மனைவிக்குக் கடுங்கோபம் வந்துடும்!'."அதான் பீரோ சாவி கேட்ட திருடனை, பின்னி பெடல்எடுத்துட்டாங்களா..?".*********************************.-எஸ். பவானி, திருச்சி. "ஆபரேஷன் தியேட்டருக்குப் போகும்போது பேஷண்ட் கொஞ்சமும் பயப்படாமல் சிரிக்கிறாரே!"."இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார்.".*********************************. "மாப்பிள்ளையின் காது மந்தம்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?"."டவுரி எவ்வளவு எதிர்பார்க்கிறீங்கன்னு கேட்டால் பெண்ணுக்கு சவுரிமுடி இருந்தாலும் பரவாயில்லைன்னு அவர் சொன்னதை வைத்துத்தான்."