பாகம் – 14.– சுசீலாமாணிக்கம்.பொய்யில் புலவர் திருக்குறளின் பதினான்காம் அதிகாரம் 'ஒழுக்கமுடைமை'..ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி .ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும்பழியை அடைவார்..(நாம் நம் மாய உலகமாம் பொன்னியின் செல்வனுக்குள் நுழைவோம்… வீரநாராயணபுரம் கோயில். ஆடித் திருநாள் கோலாகலம். பூமித்தாயின் செழிப்பு. ஆழ்வார்க்கடியான் தடியை சுழற்றி சண்டைக்கு போவதும் வீரசைவப்பட்டரின் அதட்டுதலுமான சைவ வைணவ வார்த்தைப் போர். ஒரு பெரிய அடிதடியும் கலவரமும் நிகழுமோ என நினைக்கும் வேளையில் அவ்வழியே பெரும்சலசலப்பு. வேறென்ன? பெரிய பழுவேட்டரையர் வருகைதான் அச்சலசலப்பிற்குக் காரணம்.). "சூராதிசூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கிவேரோடு அறுத்த வெற்றிவேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர்; சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர். பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார் பராக்! பராக்! வழிவிடுங்கள்!" என்று இடி முழக்கக்குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது..(சோழ மன்னர்களையும் சோழநாட்டையும் தன்னுள் பதித்திருந்த மாபெரும் வீரரான பெரிய பழுவேட்டரையரின் ஒரே ஒரு செயல் அவரை எந்த இடத்தில் சென்று நிலை நிறுத்தியது என்பதை மிக அழகாக நம் கல்கி அவர்கள் கூறியிருப்பார். இது நம் அனுதின வாழ்க்கைக்கான பாடமும் கூட..தமது வயது முதிர்ந்த காலத்தில் சிறுபெண்ணான நந்தினியை மணமுடித்துக் கொண்டதும் அவளின் மோகவலையில் சிக்குண்டு கிடந்ததும் சோழ மண்டலத்திலுள்ளோர் அனைவருக்கும் கேலிக் கூத்தாகியது..இதோ பழுவேட்டரையரின் மாளிகைக்குள் செல்வோம் வாருங்கள்….நந்தினிக்கும் பெரிய பழுவேட்டரையருக்குமான உரையாடலை ஒளிந்து திருந்து பாருங்கள் புரியும். (பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கமுடைமை பற்றி. பிறர் அரண்மனையில் ஒளிந்திருந்து பார்ப்பதா என்றெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம் நட்புக்களே… பார்த்தால்தானே புரியும்.).கிளி 'கிறீச்'சிட்ட சத்தமும், தாதிப்பெண் பயத்துடன் கூவிய சத்தமும் கலந்து வந்து, நந்தினியையும் கந்தன் மாறனையும் திடுக்கிடச் செய்தன. கந்தன்மாறன் திரும்பிப் பார்த்துப் பழுவேட்டரையர் வருகிறார் என்று அறிந்ததும் கதிகலங்கிப் போனான். சற்றுமுன்னால் அவன் 'பழுவேட்டரையரை எனக்கும் பிடிக்கவில்லை" என்று சொன்னது அவர் காதில் விழுந்திருக்குமோ என்ற எண்ணம் உதயமாயிற்று. அதைவிடப் பீதிகரமான எண்ணம், நந்தினியையும் தன்னையும் பற்றி அவர் ஏதேனும் தவறாக எண்ணிக்கொள்வாரோ என்ற நினைவு, – அவனுக்குத் திகிலை உண்டாக்கிற்று. கிழப்பருவத்தில் கலியாணம் செய்துகொண்டவர்களின் போக்கே ஒரு தனி விதமாக இருக்குமல்லவா? ஆகையினாலேயே அவர் அவ்வளவு கோபமாக வந்து கொண்டிருக்கவேண்டும்! வந்து என்ன செய்யப் போகிறாரோ, தெரியவில்லை. எதற்கும் சித்தமாயிருக்க வேண்டியதுதான்..இவ்வளவும் ஒரு நொடிப் பொழுதில் கந்தன்மாறன் மனத்தில் அலை எறிந்த சிந்தனைகள். ஆனால், அவனுக்கு அன்று ஒரு பெரிய அதிசயத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவன் நினைத்ததற்கெல்லாம் மாறாக அந்த அதிசயம் நடந்தது. பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, "நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்ல வேளையாக வந்துவிட்டீர்கள்!" என்றாள்.. அவளுடைய முகத்தைப் பார்த்து அந்தக் குரலையும் கேட்டதும் பழுவேட்டரையரின் கோபாவேசமெல்லாம் பறந்துவிட்டது. அனலில் இட்ட மெழுகைப்போல் உருகிப்போனார். அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்து, "ஆமாம்; போனகாரியம் முடிந்துவிட்டது; திரும்பிவிட்டேன்" என்றார்..(இப்படி மெழுகாய் உருகிநின்ற பெரியபழுவேட்டரையர் தொடர்ந்து…)."ஆமாம், ஆமாம்!" என்று பழுவேட்டரையர் தலையை அசைத்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுகிறுத்தது. நந்தினியை எதிர்த்துப் பேசவும் அவரால் இயலவில்லை..கந்தன்மாறன் சென்ற பிறகு நந்தினி, பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சும் கிளியின் குரலில், "நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!" என்றாள்.."ஒரு நாளுமில்லை நந்தினி என்கையில் பிடித்தவேலிலும், அரையில் செருகியவாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. வீரசொர்க்கத்தில் நான் நம்பிக்கை இழந்தாலும் உன் வார்த்தையில் நான் நம்பிக்கை இழக்கமாட்டேன்!" என்றார்..(இப்போது புரிகிறதா நட்பூக்களே நான் ஏன் ஒளிந்திருந்து பார்க்கச் சொன்னேன் என்று…).நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்..நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்வுக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்..(மந்திராலோசனைசபை. தர்மபீடத்தில் சுந்தரசோழர். பழுவேட்டரையர் சகோதரர்கள், அருள்மொழி வர்மர், அநிருத்தர், கந்தமாறன், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், சம்புவரையர் உள்ளிட்டோர் கூடியிருக்க… வீரத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய பெரியபழுவேட்டரையரின் வார்த்தைகளை கேட்கலாம்.)."சோழகுலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் பழி வாங்குவதாக நீயும் நானும் சபதம் ஏற்றிருக்கிறோம். அந்தச் சபதத்தை இப்போது நானே நிறைவேற்றுவேன். உன்னை இந்தக்கணமே கொன்று நம் குலத்துக்கு நேர்ந்தபழியைத் துடைப்பேன்!" சின்னப்பழுவேட்டரையர் கத்தியை ஓங்கினார்.. "வேண்டாம்! வேண்டாம்! இங்கே இரத்தம் சிந்த வேண்டாம்!" என்றார் சுந்தர சோழச்சக்கரவர்த்தி.. இளவரசர் அருள்மொழி வர்மரும், முதன்மந்திரி அநிருத்தரும் பாய்ந்து சென்று சின்னப் பழுவேட்டரையரின் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள்.. அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் கூறினார்:- "தம்பி! நம் குலத்துக்கு என்னால் நேர்ந்த பழியைத் துடைக்கும் வேலையை உனக்கு வைக்க மாட்டேன். அத்துடன் தமையனைக் கொன்ற தம்பி" என்ற பழியை உனக்கும் ஏற்படுத்த மாட்டேன். இதோ துர்க்கா பரமேஸ்வரிக்கு என் சபதத்தை நிறைவேற்றுவேன்!" என்று கூறிக்கொண்டே தம்கையிலிருந்து சிறிய திருகுக்கத்தியைத் தமது மார்யை நோக்கி ஓங்கினார்.. முன்னொரு தடவை அவர் ஒங்கிய பெரிய வாளை மறுபடியும் உறையில் போட்டிருந்தபடியால், அவர் தமது பழைய உத்தேசத்தை விட்டுவிட்டதாக மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். பார்த்திபேந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டிருந்த திருகுக்கத்தியை அவர் உபயோகிப்யபார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. "ஐயா! வேண்டாம்!" என்று அருள்மொழி வர்மர் கூவிக்கொண்டு அவர் அருகில் பாய்ந்து வருவதற்குள் பழுவேட்டரையர் தம்உத்தேசத்தை நிறைவேற்றிவிட்டார்..நெடுங்காலம் வேர்விட்டு நெடிது வளர்ந்திருந்த தேவதாரு வேருடன் பெயர்ந்து கப்பும் கிளையுமாகக் கீழே விழுவது போலத் தரையில் சாய்ந்தார்..பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக அமைய வேண்டும். அச்சரித்திரம் ஒழுக்கத்தின் மேல் எழுதப்பட வேண்டும்…
பாகம் – 14.– சுசீலாமாணிக்கம்.பொய்யில் புலவர் திருக்குறளின் பதினான்காம் அதிகாரம் 'ஒழுக்கமுடைமை'..ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவர் எய்தாப் பழி .ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர். ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும்பழியை அடைவார்..(நாம் நம் மாய உலகமாம் பொன்னியின் செல்வனுக்குள் நுழைவோம்… வீரநாராயணபுரம் கோயில். ஆடித் திருநாள் கோலாகலம். பூமித்தாயின் செழிப்பு. ஆழ்வார்க்கடியான் தடியை சுழற்றி சண்டைக்கு போவதும் வீரசைவப்பட்டரின் அதட்டுதலுமான சைவ வைணவ வார்த்தைப் போர். ஒரு பெரிய அடிதடியும் கலவரமும் நிகழுமோ என நினைக்கும் வேளையில் அவ்வழியே பெரும்சலசலப்பு. வேறென்ன? பெரிய பழுவேட்டரையர் வருகைதான் அச்சலசலப்பிற்குக் காரணம்.). "சூராதிசூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கிவேரோடு அறுத்த வெற்றிவேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு, அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர்; சோழநாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர். பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார் பராக்! பராக்! வழிவிடுங்கள்!" என்று இடி முழக்கக்குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது..(சோழ மன்னர்களையும் சோழநாட்டையும் தன்னுள் பதித்திருந்த மாபெரும் வீரரான பெரிய பழுவேட்டரையரின் ஒரே ஒரு செயல் அவரை எந்த இடத்தில் சென்று நிலை நிறுத்தியது என்பதை மிக அழகாக நம் கல்கி அவர்கள் கூறியிருப்பார். இது நம் அனுதின வாழ்க்கைக்கான பாடமும் கூட..தமது வயது முதிர்ந்த காலத்தில் சிறுபெண்ணான நந்தினியை மணமுடித்துக் கொண்டதும் அவளின் மோகவலையில் சிக்குண்டு கிடந்ததும் சோழ மண்டலத்திலுள்ளோர் அனைவருக்கும் கேலிக் கூத்தாகியது..இதோ பழுவேட்டரையரின் மாளிகைக்குள் செல்வோம் வாருங்கள்….நந்தினிக்கும் பெரிய பழுவேட்டரையருக்குமான உரையாடலை ஒளிந்து திருந்து பாருங்கள் புரியும். (பேசிக்கொண்டிருப்பது ஒழுக்கமுடைமை பற்றி. பிறர் அரண்மனையில் ஒளிந்திருந்து பார்ப்பதா என்றெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம் நட்புக்களே… பார்த்தால்தானே புரியும்.).கிளி 'கிறீச்'சிட்ட சத்தமும், தாதிப்பெண் பயத்துடன் கூவிய சத்தமும் கலந்து வந்து, நந்தினியையும் கந்தன் மாறனையும் திடுக்கிடச் செய்தன. கந்தன்மாறன் திரும்பிப் பார்த்துப் பழுவேட்டரையர் வருகிறார் என்று அறிந்ததும் கதிகலங்கிப் போனான். சற்றுமுன்னால் அவன் 'பழுவேட்டரையரை எனக்கும் பிடிக்கவில்லை" என்று சொன்னது அவர் காதில் விழுந்திருக்குமோ என்ற எண்ணம் உதயமாயிற்று. அதைவிடப் பீதிகரமான எண்ணம், நந்தினியையும் தன்னையும் பற்றி அவர் ஏதேனும் தவறாக எண்ணிக்கொள்வாரோ என்ற நினைவு, – அவனுக்குத் திகிலை உண்டாக்கிற்று. கிழப்பருவத்தில் கலியாணம் செய்துகொண்டவர்களின் போக்கே ஒரு தனி விதமாக இருக்குமல்லவா? ஆகையினாலேயே அவர் அவ்வளவு கோபமாக வந்து கொண்டிருக்கவேண்டும்! வந்து என்ன செய்யப் போகிறாரோ, தெரியவில்லை. எதற்கும் சித்தமாயிருக்க வேண்டியதுதான்..இவ்வளவும் ஒரு நொடிப் பொழுதில் கந்தன்மாறன் மனத்தில் அலை எறிந்த சிந்தனைகள். ஆனால், அவனுக்கு அன்று ஒரு பெரிய அதிசயத்தைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவன் நினைத்ததற்கெல்லாம் மாறாக அந்த அதிசயம் நடந்தது. பழுவேட்டரையர் அருகில் நெருங்கியதும் நந்தினி முகமலர்ந்து அவரைத் தன் கரிய விழிகளால் பார்த்து, "நாதா! எங்கே தாங்கள் திரும்பி வருவதற்கு அதிக நாள் ஆகிவிடுமோ என்று பார்த்தேன். நல்ல வேளையாக வந்துவிட்டீர்கள்!" என்றாள்.. அவளுடைய முகத்தைப் பார்த்து அந்தக் குரலையும் கேட்டதும் பழுவேட்டரையரின் கோபாவேசமெல்லாம் பறந்துவிட்டது. அனலில் இட்ட மெழுகைப்போல் உருகிப்போனார். அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரித்து, "ஆமாம்; போனகாரியம் முடிந்துவிட்டது; திரும்பிவிட்டேன்" என்றார்..(இப்படி மெழுகாய் உருகிநின்ற பெரியபழுவேட்டரையர் தொடர்ந்து…)."ஆமாம், ஆமாம்!" என்று பழுவேட்டரையர் தலையை அசைத்தார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை கிறுகிறுத்தது. நந்தினியை எதிர்த்துப் பேசவும் அவரால் இயலவில்லை..கந்தன்மாறன் சென்ற பிறகு நந்தினி, பழுவேட்டரையர் மீது தன் காந்தக் கண்களைச் செலுத்தி, கொஞ்சும் கிளியின் குரலில், "நாதா; என்னிடம் தங்களுடைய நம்பிக்கை குன்றிவிட்டதாகத் தோன்றுகிறது! என் மைத்துனருடைய துர்ப்போதனை ஜயித்துவிட்டதுபோல் காண்கிறது!" என்றாள்.."ஒரு நாளுமில்லை நந்தினி என்கையில் பிடித்தவேலிலும், அரையில் செருகியவாளிலும் எனக்கு நம்பிக்கை குறைந்தாலும் உன்னிடம் நம்பிக்கை குறையாது. வீரசொர்க்கத்தில் நான் நம்பிக்கை இழந்தாலும் உன் வார்த்தையில் நான் நம்பிக்கை இழக்கமாட்டேன்!" என்றார்..(இப்போது புரிகிறதா நட்பூக்களே நான் ஏன் ஒளிந்திருந்து பார்க்கச் சொன்னேன் என்று…).நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்..நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்வுக்குக் காரணமாக இருக்கும். தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்..(மந்திராலோசனைசபை. தர்மபீடத்தில் சுந்தரசோழர். பழுவேட்டரையர் சகோதரர்கள், அருள்மொழி வர்மர், அநிருத்தர், கந்தமாறன், பார்த்திபேந்திரன், வந்தியத்தேவன், சம்புவரையர் உள்ளிட்டோர் கூடியிருக்க… வீரத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய பெரியபழுவேட்டரையரின் வார்த்தைகளை கேட்கலாம்.)."சோழகுலத்துக்குத் துரோகம் செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் பழி வாங்குவதாக நீயும் நானும் சபதம் ஏற்றிருக்கிறோம். அந்தச் சபதத்தை இப்போது நானே நிறைவேற்றுவேன். உன்னை இந்தக்கணமே கொன்று நம் குலத்துக்கு நேர்ந்தபழியைத் துடைப்பேன்!" சின்னப்பழுவேட்டரையர் கத்தியை ஓங்கினார்.. "வேண்டாம்! வேண்டாம்! இங்கே இரத்தம் சிந்த வேண்டாம்!" என்றார் சுந்தர சோழச்சக்கரவர்த்தி.. இளவரசர் அருள்மொழி வர்மரும், முதன்மந்திரி அநிருத்தரும் பாய்ந்து சென்று சின்னப் பழுவேட்டரையரின் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள்.. அச்சமயத்தில் பெரிய பழுவேட்டரையர் கூறினார்:- "தம்பி! நம் குலத்துக்கு என்னால் நேர்ந்த பழியைத் துடைக்கும் வேலையை உனக்கு வைக்க மாட்டேன். அத்துடன் தமையனைக் கொன்ற தம்பி" என்ற பழியை உனக்கும் ஏற்படுத்த மாட்டேன். இதோ துர்க்கா பரமேஸ்வரிக்கு என் சபதத்தை நிறைவேற்றுவேன்!" என்று கூறிக்கொண்டே தம்கையிலிருந்து சிறிய திருகுக்கத்தியைத் தமது மார்யை நோக்கி ஓங்கினார்.. முன்னொரு தடவை அவர் ஒங்கிய பெரிய வாளை மறுபடியும் உறையில் போட்டிருந்தபடியால், அவர் தமது பழைய உத்தேசத்தை விட்டுவிட்டதாக மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். பார்த்திபேந்திரனிடமிருந்து வாங்கிக்கொண்டிருந்த திருகுக்கத்தியை அவர் உபயோகிப்யபார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.. "ஐயா! வேண்டாம்!" என்று அருள்மொழி வர்மர் கூவிக்கொண்டு அவர் அருகில் பாய்ந்து வருவதற்குள் பழுவேட்டரையர் தம்உத்தேசத்தை நிறைவேற்றிவிட்டார்..நெடுங்காலம் வேர்விட்டு நெடிது வளர்ந்திருந்த தேவதாரு வேருடன் பெயர்ந்து கப்பும் கிளையுமாகக் கீழே விழுவது போலத் தரையில் சாய்ந்தார்..பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக அமைய வேண்டும். அச்சரித்திரம் ஒழுக்கத்தின் மேல் எழுதப்பட வேண்டும்…