செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்று விட்டாரே!-எஸ். பிரமிளா, சென்னை.14 வயசுல டென்னிஸ் மட்டை பிடித்து ஆட ஆரம்பித்தவர், 41 வயசுல விடை பெற்றிருக்கிறார். 24 வருட பயணயத்துல, 23 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்று தடபுடல் செஞ்ச டென்னிஸ் க்வீன்! அது தவிர, ஒலிம்பிக்ஸில் அள்ளிய தங்கங்கள்… அது வேற கணக்கு!."அப்பா, உங்களுக்கு மிகவும் நன்றி. மிகவும் சக்தி வாய்ந்த பாரம் பரியத்தைப் பெண்களுக்கு விட்டுச் செல்கிறேன்!" என்று சொல்லி, தமது ரசிகர்களை நோக்கி இதய வடிவ 'லவ் சிம்பல்' காட்டி கண்ணீர் மல்கியது உண்மையிலேயே நெகிழ்ச்சியான தருணம்! அப்போது பின்னணியில் 'Simply the best' பாப் பாடல் ஒலித்தது எவ்வளவு பொருத்தம்!.ஏனென்றால், செரீனா என்பது ஒற்றை ஆள் இல்லை. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் நம்பிக்கைப் பொறி அவர்! அந்த அக்னிக்குஞ்சு, தன் தழலை நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், இன்னும் பல பெண்கள் அந்த வெற்றிச் சிகரத்தை அடைய வழி காட்டும் தீப்பந்தமாக வாழ் நாளெல்லாம் சுடர் விட்டுக்கொண்டிருப்பார்!.*********************.மேடம், மலையென செல்வமும், குன்றென புகழும் கைவசமாக்கிய டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நொடிப்பொழுதில் மரணித்து விட்டாரே?-என். கோமதி, நெல்லை."ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாற்றையும் எப்போதும் கொடுத்துவிட மாட்டான்! அவன் போடும் மரணக் கணக்கு எப்போதும் தப்பாது!" என்பது மீண்டும் மீண்டும் நிருபணமாகிறது..காரை ஓட்டிய மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனஹிதாவும் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். சைரஸ் மிஸ்ட்ரியும் பார்ஸி என்பதால் இருவரும் சேர்ந்து ஓர் அறக்கட்டளை வகித்துவந்தனர்..அருகி வரும் பார்ஸி இன மக்களின் பெருக்கத்துக்காக, குழந்தையில்லாத பார்ஸித் தம்பதிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வந்தனராம்! ஆழமான மத நம்பிக்கை உடைய இருவரும், அன்றைக்குக்கூட 'உத்வாதா' என்ற உலகின் மிகப் பழைமையான பார்ஸி கோயிலுக்குப் போய் வழிபட்டுத் திரும்பும் வழியில்தான் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது..அனஹிதா, ஒரு சமூகப் போராளியும் கூட. அனுமதியில்லாமல் வைக்கப்படும் சாலையோர கட்-அவுட், மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரப் பலைககளை நீக்குவதற்காக, மும்பை மாநகராட்சி மீது வாகன ஓட்டிகளின் சார்பாக வழக்கு போட்டார். இருபது வருடமாகப் போராடி ஆயிரக் கணக்கான ஹோர்டிங்குகளை அகற்றியவர். ஆனால், அவரே அதிவேகமாகக் காரை ஓட்டி, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்..அதேபோல, பிரபல டாடா கார்க் கம்பெனியின் பங்குதாரர், முன்னாள் தலைவர், சீட்பெல்ட் அணிவதில் அலட்சியம் காட்டியதால், கார் விபத்தில் அநியாயமாக இறந்துவிட்டார்… என்னவொரு விசித்திரமான முரண்!.*********************.தங்களால் மறக்க முடியாத ஆசிரியர் யார் மேடம்?-எஸ். கெஜலட்மி ராஜேந்திரன்.ஒண்ணாங்கிளாஸ் ஆசிரியை சரோஜினி டீச்சர்! 'டீச்சர்' என்று சொல்லவராமல் 'சீச்சர்… சீச்சர்' என்று சுற்றிவந்தோம்! மாநிறம் என்றாலும் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு நடிகை வாணிஸ்ரீ போல அழகாக இருப்பார். நெளி நெளியான கூந்தலில், ஒரு கனகாம்பர வட்டம், அதற்குள் குண்டு மல்லிகை வட்டம், நட்ட நடுவிலே ஒரு ரோஜாப்பூ! பூ சூடாமல் அவர் வந்ததாக நினைவில்லை. மூக்கு ஒழுகியபடி நிற்கும் குழந்தைகளுக்கு தன் கையாலேயே துடைத்துவிடுவார். வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, வேர்க்கடலை போன்றவற்றை எல்லா குழந்தைகளுக்கும் அவ்வப்போது கொடுப்பார். என் கைபிடித்து 'அ' எழுத வைத்ததே சரோஜினி டீச்சர்தான்!.என் மகன் யு.கே.ஜி. படிக்கும்போது அவனுக்கு என் ஸ்கூலைக் காட்ட ஆசை கொண்டு, அழைத்துப் போனேன். கையில் ஒரு கிலோ நியூட்ரின் சாக்லெட், நாலு முழம் மல்லியுடன்!."சரோஜினி டீச்சரா…? 3வது சி செக் ஷன்!" என்று சொல்லி அனுப்பினார்கள். ஆர்வத்துடன் அங்கே போனால், அங்கே வேறே யாரோ இருந்தார்கள். நான் திரும்பிவந்து தலைமை ஆசிரியரிடம் "அவங்களைக் காணலியே!" என்றேன். "இல்லையே! இப்ப அங்கதான் இருப்பாங்க!" என்று ஆயாம்மா துணையோடு அனுப்பி வைத்தார். நான் மீண்டும் அதே கிளாஸ் போனேன். "சரோஜினி டீச்சர்… உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவி வந்திருக்காங்க!" எழுந்து வந்த உருவத்தைப் பார்த்து திகைத்தேன்! அது அவர்தான்! ஆனால், என் மனக் கற்பனையில் இருந்த கண்கள் மையிட்ட இளமை கொலுவிலிருந்த வாணிஸ்ரீ அல்ல! காலம் அந்த ஓவியத்தைக் கருணையின்றிக் கலைத்திருந்தது..அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, இடுங்கிய கண்களில் ஒரு பிரகாச மின்னல்!."ரொம்ப சந்தோஷம்பா!" என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்..எனக்கு 'ஆவன்னா' சொல்லிக் கொடுத்த கரங்கள்!.அப்புறம் நான் அவரைப் பார்க்கவே விரும்பவில்லை! மறுபடி அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது அந்தப் பள்ளியே இல்லை! ஆனாலும் சரோஜினி டீச்சர் எப்பவும் கறுப்பழகி, குயில் பேச்சழகி, காந்தக் கண்ணழகி! அந்த மனபிம்பத்தை நான் கடைசிவரை அழிப்பதாயில்லை! அது அழியக்கூடியதும் அல்ல!.*********************.மனைவியுடன் வரும் தினசரித் தகராறுகளைச் சமாளிப்பது எப்படி அனுஷா?-சி.கார்த்திகேயன், வேலூர்.பெண்கள் எப்பவுமே லாலா கடை பாசந்தி மாதிரி ஸ்வீட்தாங்க கார்த்தி ஸார்! ஆனா, மாசத்துல சில நாட்கள் மட்டும் அவங்களுக்கு மூடு சரியில்லாமல் போகுங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். அந்தச் சமயத்துல மட்டும் அவங்ககூட எதையும் விவாதிக்காமல் இருந்தாலே லைஃப் ஸ்மூத்தா போகும். குறிப்பா, ஒவ்வொரு மாசமும் ஒண்ணாம் தேதி முதல் முப்பத்து ஒண்ணாம் தேதி வரை! ஹி…ஹி!
செரினா வில்லியம்ஸ் ஓய்வு பெற்று விட்டாரே!-எஸ். பிரமிளா, சென்னை.14 வயசுல டென்னிஸ் மட்டை பிடித்து ஆட ஆரம்பித்தவர், 41 வயசுல விடை பெற்றிருக்கிறார். 24 வருட பயணயத்துல, 23 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்று தடபுடல் செஞ்ச டென்னிஸ் க்வீன்! அது தவிர, ஒலிம்பிக்ஸில் அள்ளிய தங்கங்கள்… அது வேற கணக்கு!."அப்பா, உங்களுக்கு மிகவும் நன்றி. மிகவும் சக்தி வாய்ந்த பாரம் பரியத்தைப் பெண்களுக்கு விட்டுச் செல்கிறேன்!" என்று சொல்லி, தமது ரசிகர்களை நோக்கி இதய வடிவ 'லவ் சிம்பல்' காட்டி கண்ணீர் மல்கியது உண்மையிலேயே நெகிழ்ச்சியான தருணம்! அப்போது பின்னணியில் 'Simply the best' பாப் பாடல் ஒலித்தது எவ்வளவு பொருத்தம்!.ஏனென்றால், செரீனா என்பது ஒற்றை ஆள் இல்லை. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் நம்பிக்கைப் பொறி அவர்! அந்த அக்னிக்குஞ்சு, தன் தழலை நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால், இன்னும் பல பெண்கள் அந்த வெற்றிச் சிகரத்தை அடைய வழி காட்டும் தீப்பந்தமாக வாழ் நாளெல்லாம் சுடர் விட்டுக்கொண்டிருப்பார்!.*********************.மேடம், மலையென செல்வமும், குன்றென புகழும் கைவசமாக்கிய டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி நொடிப்பொழுதில் மரணித்து விட்டாரே?-என். கோமதி, நெல்லை."ஆண்டவன் எல்லாருக்கும் எல்லாற்றையும் எப்போதும் கொடுத்துவிட மாட்டான்! அவன் போடும் மரணக் கணக்கு எப்போதும் தப்பாது!" என்பது மீண்டும் மீண்டும் நிருபணமாகிறது..காரை ஓட்டிய மகப்பேறு மருத்துவர் டாக்டர் அனஹிதாவும் பார்ஸி இனத்தைச் சேர்ந்தவர். சைரஸ் மிஸ்ட்ரியும் பார்ஸி என்பதால் இருவரும் சேர்ந்து ஓர் அறக்கட்டளை வகித்துவந்தனர்..அருகி வரும் பார்ஸி இன மக்களின் பெருக்கத்துக்காக, குழந்தையில்லாத பார்ஸித் தம்பதிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளித்து வந்தனராம்! ஆழமான மத நம்பிக்கை உடைய இருவரும், அன்றைக்குக்கூட 'உத்வாதா' என்ற உலகின் மிகப் பழைமையான பார்ஸி கோயிலுக்குப் போய் வழிபட்டுத் திரும்பும் வழியில்தான் இந்தக் கோர விபத்து ஏற்பட்டுள்ளது..அனஹிதா, ஒரு சமூகப் போராளியும் கூட. அனுமதியில்லாமல் வைக்கப்படும் சாலையோர கட்-அவுட், மற்றும் எலக்ட்ரானிக் விளம்பரப் பலைககளை நீக்குவதற்காக, மும்பை மாநகராட்சி மீது வாகன ஓட்டிகளின் சார்பாக வழக்கு போட்டார். இருபது வருடமாகப் போராடி ஆயிரக் கணக்கான ஹோர்டிங்குகளை அகற்றியவர். ஆனால், அவரே அதிவேகமாகக் காரை ஓட்டி, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்..அதேபோல, பிரபல டாடா கார்க் கம்பெனியின் பங்குதாரர், முன்னாள் தலைவர், சீட்பெல்ட் அணிவதில் அலட்சியம் காட்டியதால், கார் விபத்தில் அநியாயமாக இறந்துவிட்டார்… என்னவொரு விசித்திரமான முரண்!.*********************.தங்களால் மறக்க முடியாத ஆசிரியர் யார் மேடம்?-எஸ். கெஜலட்மி ராஜேந்திரன்.ஒண்ணாங்கிளாஸ் ஆசிரியை சரோஜினி டீச்சர்! 'டீச்சர்' என்று சொல்லவராமல் 'சீச்சர்… சீச்சர்' என்று சுற்றிவந்தோம்! மாநிறம் என்றாலும் பெரிய பொட்டு வைத்துக்கொண்டு நடிகை வாணிஸ்ரீ போல அழகாக இருப்பார். நெளி நெளியான கூந்தலில், ஒரு கனகாம்பர வட்டம், அதற்குள் குண்டு மல்லிகை வட்டம், நட்ட நடுவிலே ஒரு ரோஜாப்பூ! பூ சூடாமல் அவர் வந்ததாக நினைவில்லை. மூக்கு ஒழுகியபடி நிற்கும் குழந்தைகளுக்கு தன் கையாலேயே துடைத்துவிடுவார். வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு, வேர்க்கடலை போன்றவற்றை எல்லா குழந்தைகளுக்கும் அவ்வப்போது கொடுப்பார். என் கைபிடித்து 'அ' எழுத வைத்ததே சரோஜினி டீச்சர்தான்!.என் மகன் யு.கே.ஜி. படிக்கும்போது அவனுக்கு என் ஸ்கூலைக் காட்ட ஆசை கொண்டு, அழைத்துப் போனேன். கையில் ஒரு கிலோ நியூட்ரின் சாக்லெட், நாலு முழம் மல்லியுடன்!."சரோஜினி டீச்சரா…? 3வது சி செக் ஷன்!" என்று சொல்லி அனுப்பினார்கள். ஆர்வத்துடன் அங்கே போனால், அங்கே வேறே யாரோ இருந்தார்கள். நான் திரும்பிவந்து தலைமை ஆசிரியரிடம் "அவங்களைக் காணலியே!" என்றேன். "இல்லையே! இப்ப அங்கதான் இருப்பாங்க!" என்று ஆயாம்மா துணையோடு அனுப்பி வைத்தார். நான் மீண்டும் அதே கிளாஸ் போனேன். "சரோஜினி டீச்சர்… உங்களைப் பார்க்க உங்க பழைய மாணவி வந்திருக்காங்க!" எழுந்து வந்த உருவத்தைப் பார்த்து திகைத்தேன்! அது அவர்தான்! ஆனால், என் மனக் கற்பனையில் இருந்த கண்கள் மையிட்ட இளமை கொலுவிலிருந்த வாணிஸ்ரீ அல்ல! காலம் அந்த ஓவியத்தைக் கருணையின்றிக் கலைத்திருந்தது..அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டபோது, இடுங்கிய கண்களில் ஒரு பிரகாச மின்னல்!."ரொம்ப சந்தோஷம்பா!" என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்..எனக்கு 'ஆவன்னா' சொல்லிக் கொடுத்த கரங்கள்!.அப்புறம் நான் அவரைப் பார்க்கவே விரும்பவில்லை! மறுபடி அந்தப்பக்கம் போகவில்லை. இப்போது அந்தப் பள்ளியே இல்லை! ஆனாலும் சரோஜினி டீச்சர் எப்பவும் கறுப்பழகி, குயில் பேச்சழகி, காந்தக் கண்ணழகி! அந்த மனபிம்பத்தை நான் கடைசிவரை அழிப்பதாயில்லை! அது அழியக்கூடியதும் அல்ல!.*********************.மனைவியுடன் வரும் தினசரித் தகராறுகளைச் சமாளிப்பது எப்படி அனுஷா?-சி.கார்த்திகேயன், வேலூர்.பெண்கள் எப்பவுமே லாலா கடை பாசந்தி மாதிரி ஸ்வீட்தாங்க கார்த்தி ஸார்! ஆனா, மாசத்துல சில நாட்கள் மட்டும் அவங்களுக்கு மூடு சரியில்லாமல் போகுங்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும். அந்தச் சமயத்துல மட்டும் அவங்ககூட எதையும் விவாதிக்காமல் இருந்தாலே லைஃப் ஸ்மூத்தா போகும். குறிப்பா, ஒவ்வொரு மாசமும் ஒண்ணாம் தேதி முதல் முப்பத்து ஒண்ணாம் தேதி வரை! ஹி…ஹி!