-ரேவதி பாலு.செப்டெம்பர் – 10, உலக தற்கொலைத் தடுப்பு தினம்!.கொரோனா நம் மாணவர்கள் படிப்பில் நாம் யாரும் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு நிறைய மன அழுத்தங்களைக் கொடுத்து விட்டது. 'ஆன்லைன்' வகுப்பு, அதில் நிறைய விஷயங்கள் சரிவரப் புரியாமல் போனது போன்ற பல நிலைகளைக் கடந்து, தற்போது திரும்பப் பள்ளிக்கு நேரில் செல்லவேண்டும் என்னும் நிலைமை. இந்தக் கால கட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவது வேறு மிகுந்த கவலையைக் கொடுக்கிறது..இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளதால் சென்னையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இதை அமல்படுத்த ஆரம்பித் துள்ளார்கள்..சென்னையில் ஒரு பள்ளியில் மனநல ஆலோசகராகப் பணிபுரியும் குமாரி பார்கவியைச் சந்தித்து, தற்போது அதிகரித்துவரும் தற்கொலைகள் பற்றியும், பள்ளிகளில் ஒரு மனநல ஆலோசகர் பதவி இருப்பதால் எந்த விதத்தில் மாணவர்களுக்கு நல்லது நடக்கும் என்பது பற்றியும் வினவியபோது, அவர் நம்முடன் பகிர்ந்துகொண்ட விவரங்கள்.."மனநல ஆலோசகர் என்பவர் யாரையும் மாற்றி அமைப்பவர் அல்லர். ஒரு மாணவனோடு பேசி அவனே தன்னைப்பற்றி அறிய உதவுவதுதான் அவர்கள் பணி. முதலில் மாணவர்களோடு சாதாரணமாகப் பொதுவான விஷயங்களைப் பேசி அவர்களுடன் ஒரு சகஜபாவம் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனநல ஆலோசகர் நிச்சயம் நமக்கு நல்லதுதான் செய்வாங்க என்னும் நம்பிக்கை அவர்களுக்கு முதல்ல வரணும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலை எப்படி இருக்கும்னா, யார் தன்னிடம் பேச வந்தாலும் அவர்களைக் கண்டால் பிடிக்காதுபோது, நிச்சயமாக அவர்கள் தனக்கு ஏதோ அறிவுரை கூறத்தான் வருகிறார்கள் என்று தெரிந்து, அவர்களிடம் பேசமறுப்பார்கள்..எங்க வேலை உங்களுக்கு அறிவுரை கூறுவது அல்ல. உங்களோடு பேசி உங்க மனநிலையை நீங்களே அலசி ஆராய உதவவே நாங்க இருக்கிறோம் என்று அவங்களைப் பேசவிடணும். அதுதான் முதல் ஸ்டெப்.."அடுத்தபடியாக ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவருடைய பழக்கவழக்கங்களில் நிச்சயம் மாறுதல்களைக் கவனிக்கமுடியும். வழக்கமாக அவர்கள் செய்யும் காரியங்களில் அக்கறை காட்டாமல் இருப்பார்கள். வீட்டில் சாப்பிடுவது, தன்னை ஒழுங்காக அலங்கரித்துக்கொள்வது என்று எல்லா காரியங்களிலும் கவனம் குறையும். எதையோ பறிகொடுத்ததுபோல ஒரு தோற்றம். குறிப்பாக, சரியாகப் படிக்காமல் பாடங்களில் மதிப்பெண் குறைந்துபோகும். இதெல்லாமே அவங்களுக்கு ஒரு மனஉளைச்சல் இருக்கிறது என்பதற்கு முக்கியமான அறிகுறிகள்."."நம் வீடுகளில் இந்த மாதிரி விஷயங்களை எப்படி எதிர்கொள்வோம்? உனக்கென்ன கேடு வந்துடுச்சு? கூப்ட்டா என்னான்னுகூட கேக்காம உம்முன்னு போய் உக்காந்துக்கிற. படிப்பிலேயும் அக்கறை இல்ல. இவ்வாறு எதிர்மறையான பேச்சுதான் அதிகம் இருக்கும். அந்தக் குழந்தைக்கு ஏதோ மனஉளைச்சல் என்பது பெற்றோருக்குப் புரிவ தேயில்லை. தன்னிடம் பெற்றோருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள், தான் ஒரு நல்லபிள்ளைதான் என்று வீட்டில் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம், தனக்குப் பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எதிர்பார்க்கும் ஐ.ஐ.டி. அல்லது டாக்டர் படிப்பு போன்றவற்றில் விருப்பம் இல்லாமலே ஈடுபட வேண்டிய கட்டாயங்கள் இவையெல்லாம்தான் குழந்தைகள் மனதில் மனஉளைச்சலை உருவாக்கும் விஷயங்கள்..இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன், முகநூல் என்று சோஷியல் மீடியா பெரிதாகிவிட்டதால், நிறைய விஷயங்களைக் குழந்தைகள் அவர்களே தெரிஞ்சிருக்கிறாங்க. ஒரு குழந்தை தன்னிடம் வந்து ஒரு விஷயத்தைச் சொல்லவரும் சமயம் அதை பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி, அலட்சியப்படுத்தாமல் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அப்போ அந்தக் குழந்தைக்கு நம்பமேல ஒரு நம்பிக்கை வரும். இவங்களோட நம்ம மனசில இருக்கிறதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றும். இதற்கெல்லாம் உதவத்தான் பள்ளியிலேயே ஒரு மனநல ஆலோசகரை நியமிக்கிறார்கள். வகுப்பில் ஒரு மாணவனது நடவடிக்கையில் வித்தியாசம் இருந்தால் வகுப்பு ஆசிரியரே அவனை எங்களிடம் அனுப்புவார். இந்தமாதிரி ஒரு ஆலோசனை பள்ளியிலேயே கிடைக்கிறது என்பதால் மாணவர்களேகூட தனிப்பட்ட முறையில் எங்களைச் சந்தித்து ஆலோசனை கேட்பதுமுண்டு..மற்றொரு முக்கியமான விஷயம். ஆறாவது வகுப்பிலிருந்து சோஷியல் எமோஷனல் லேர்னிங்க் வகுப்புன்னு (எஸ்.இ.எல்.) எடுக்கறோம். இந்த வகுப்பில் பொதுவாக தனக்கு ஏற்படும் உணர்வுகளை மாணவர்களை அவர்களாகவே புரிந்துகொள்ளவைக்கிறோம். இது இந்த எஸ்.இ.எல்.லின் ஒரு அங்கம். இதில எல்லா உணர்ச்சிகளையும் குழந்தைகள், தானே கண்டுபிடிச்சு இனம் காணும் வகையில் சின்னச் சின்னகதைகள், அன்றாட நிகழ்வுகள் பற்றி சொல்வோம். வீட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் பெற்றோர், மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்களின் அறிவுரைகளுக்கு மத்தியில் வளர்கிறார்கள். பள்ளியிலோ நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்னும் இலக்கு வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். மற்றபடி அவர்கள் மனவளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுவதேயில்லை. இதனால் இந்த எஸ்.இ.எல். வகுப்பு குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டுகிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம். வகுப்பை குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக கவனிக் கிறார்கள் என்பது கதை முடிவில் அவர்கள் அதில் விட்டுப்போன சில உணர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி அதைப்பற்றி ஆர்வமாகக் கேட்கும்போது தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி எல்லா உணர்ச்சிகளும் இயற்கைதான் என்றும் புரியவைப்போம்..உதாரணத்துக்கு ஒரு விஷயத்தில கோபம் வருதுன்னா அதைக் கட்டுப் படுத்தணும்னு அவசியமில்லை. ஆனால், அந்தக் கோபத்தை எப்படிக் கையாளுவது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போ அந்தக் கோபம் எதனால் வந்தது என்று ஆராய்ந்து அறியும் மனப்பான்மை வரும். பொதுவாக மனநல ஆலோசனை என்பதே குழந்தைகள் தங்களைத் தாங்களே அலசி ஆராய உதவி செய்வதேயாகும். இதில் அறிவுரைகள் சுத்தமாகக் கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிரத்யேகத் திறமை இருக்கும். அதை இனம் கண்டுகொள்ளவும் இந்த வகுப்பு உதவுகிறது..தாங்கமுடியாத மன அழுத்தங்கள்தான் தற்கொலைக்கு வழிவகுக்கிறது."நீ என்கிட்ட பேசுற விஷயம் இந்த நாலு சுவர்களுக்குள்தான் இருக்கும்" என்று நாம் சொல்லும்போது அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேற்கொண்டு நாம் கேள்விகள் கேட்டு அவர்களை பேச வைக்கவேண்டும். அவர்கள் மனம் திறந்து, அவர்கள் மனதை அழுத்திக் கொண்டு இருக்கும் பிரச்னைகள், மனஉளைச்சல்கள் மெதுவாக வெளியே வரஆரம்பிக்கும். ஒரு மனநல ஆலோசகரோடு பேசும்போது அவர் அந்த மாணவனிடம் அந்த நிலைமையை, குறிப்பிட்ட மனஉளைச்சலை எப்படிக் கையாளவேண்டும் என்பதை அவனிடம் கேள்விகள் கேட்டு அவனையே உணர்ந்துகொள்ளவைப்பார்..மாணவர்களைப் பொறுத்தவரை பரீட்சை ரிசல்ட் வந்ததும் தற்கொலை, மதிப்பெண்கள் குறைந்ததால் தற்கொலை போன்றவற்றைத் தவிர மற்ற தற்கொலைகள் கொஞ்சம் காலமாகவே திட்டமிடப்பட்டதாகக்கூட இருக்கும். அன்றாட வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகள் அவர்கள் மனஅழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்கொலைக்குத் தூண்டுவதாக இருக்கும். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுவிட்ட நிலையில் இருப்பவர்களின் நிலைமை இன்னுமே கவனமாக அணுக வேண்டிய விஷயம். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் மனநல ஆலோசனை கட்டாயம் தேவைப்படும். சம்பந்தப்பட்ட மகளையோ, மகனையோ 'உன்னால நம்ம குடும்ப மானமே போயிடுச்சு. நீ டாக்டராவேன்னு எல்லோரும் எதிர்பார்த்தோமே? இந்த வீட்டில வந்து பொறந்தியே?' என்றெல்லாம் ஆத்திரத்தில் பேசுவது மிகவும் இயல்பான விஷயம். ஆனால், முற்றிலும் தவறான விஷயம்..அப்படியெல்லாம் இல்லாமல் தங்கள் பெண் அல்லது பிள்ளையிடம் முழு மனதாக அன்புகாட்டி, 'நீ எங்களுக்கு வேணும். உன்னோட உடல்நலம் ரொம்பமுக்கியம். வா! வந்து சாப்பிடு!' என்று அன்போடு சாப்பிட வைத்து, அந்த நேரத்தில் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருக்கணும். இந்த நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற அந்தக் குழந்தைக்கு மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்க ஆரம்பித்துவிடும். 'நம்மகிட்ட இவ்வளவு அன்பு காட்டுற அம்மா, அப்பாவை விட்டா போக நெனைச்சோம்?' அப்படீன்னு தோணும். இரண்டு பேரும் பரஸ்பர அன்பு காட்டி திரும்ப வாழ்க்கையைச் சீராக வாழ ஆரம்பிக்கும்போது அந்தக் குற்றஉணர்ச்சி குழந்தைக்கும், தன் குழந்தை ஐ.ஐ.டி.க்கோ டாக்டருக்கோ படிக்கவில்லையே என்னும் ஏக்கம் பெற்றோருக்கும் மெதுவாக விலகி கரைய ஆரம்பிக்கும். இதைத்தான் நாங்கள் அந்தப் பெற்றோருக்கும் குழந்தைக்கும் எடுத்துச் சொல்வோம்..பள்ளியில் மனநல ஆலோசகர் நியமிக்கப்படுவது என்பது மிக ஆரோக்கியமான விஷயம். அவ்வப்போதே குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணித்து அவர்களுக்கு உதவமுடியும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும்போது, அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்குள் நுழைகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் என்பதால் பள்ளியில் மனநல ஆலோசனை கிடைப்பது கல்லூரி வாழ்க்கையைத் திறம்பட கையாளவும் உதவும். குழந்தைகள் மனநலம் நல்லமுறையில் பேணப்பட்டு அவர்கள் முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவும்."மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார் பார்கவி.
-ரேவதி பாலு.செப்டெம்பர் – 10, உலக தற்கொலைத் தடுப்பு தினம்!.கொரோனா நம் மாணவர்கள் படிப்பில் நாம் யாரும் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு நிறைய மன அழுத்தங்களைக் கொடுத்து விட்டது. 'ஆன்லைன்' வகுப்பு, அதில் நிறைய விஷயங்கள் சரிவரப் புரியாமல் போனது போன்ற பல நிலைகளைக் கடந்து, தற்போது திரும்பப் பள்ளிக்கு நேரில் செல்லவேண்டும் என்னும் நிலைமை. இந்தக் கால கட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவது வேறு மிகுந்த கவலையைக் கொடுக்கிறது..இப்போது ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு போட்டுள்ளதால் சென்னையில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இதை அமல்படுத்த ஆரம்பித் துள்ளார்கள்..சென்னையில் ஒரு பள்ளியில் மனநல ஆலோசகராகப் பணிபுரியும் குமாரி பார்கவியைச் சந்தித்து, தற்போது அதிகரித்துவரும் தற்கொலைகள் பற்றியும், பள்ளிகளில் ஒரு மனநல ஆலோசகர் பதவி இருப்பதால் எந்த விதத்தில் மாணவர்களுக்கு நல்லது நடக்கும் என்பது பற்றியும் வினவியபோது, அவர் நம்முடன் பகிர்ந்துகொண்ட விவரங்கள்.."மனநல ஆலோசகர் என்பவர் யாரையும் மாற்றி அமைப்பவர் அல்லர். ஒரு மாணவனோடு பேசி அவனே தன்னைப்பற்றி அறிய உதவுவதுதான் அவர்கள் பணி. முதலில் மாணவர்களோடு சாதாரணமாகப் பொதுவான விஷயங்களைப் பேசி அவர்களுடன் ஒரு சகஜபாவம் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனநல ஆலோசகர் நிச்சயம் நமக்கு நல்லதுதான் செய்வாங்க என்னும் நம்பிக்கை அவர்களுக்கு முதல்ல வரணும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலை எப்படி இருக்கும்னா, யார் தன்னிடம் பேச வந்தாலும் அவர்களைக் கண்டால் பிடிக்காதுபோது, நிச்சயமாக அவர்கள் தனக்கு ஏதோ அறிவுரை கூறத்தான் வருகிறார்கள் என்று தெரிந்து, அவர்களிடம் பேசமறுப்பார்கள்..எங்க வேலை உங்களுக்கு அறிவுரை கூறுவது அல்ல. உங்களோடு பேசி உங்க மனநிலையை நீங்களே அலசி ஆராய உதவவே நாங்க இருக்கிறோம் என்று அவங்களைப் பேசவிடணும். அதுதான் முதல் ஸ்டெப்.."அடுத்தபடியாக ஒருவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அவருடைய பழக்கவழக்கங்களில் நிச்சயம் மாறுதல்களைக் கவனிக்கமுடியும். வழக்கமாக அவர்கள் செய்யும் காரியங்களில் அக்கறை காட்டாமல் இருப்பார்கள். வீட்டில் சாப்பிடுவது, தன்னை ஒழுங்காக அலங்கரித்துக்கொள்வது என்று எல்லா காரியங்களிலும் கவனம் குறையும். எதையோ பறிகொடுத்ததுபோல ஒரு தோற்றம். குறிப்பாக, சரியாகப் படிக்காமல் பாடங்களில் மதிப்பெண் குறைந்துபோகும். இதெல்லாமே அவங்களுக்கு ஒரு மனஉளைச்சல் இருக்கிறது என்பதற்கு முக்கியமான அறிகுறிகள்."."நம் வீடுகளில் இந்த மாதிரி விஷயங்களை எப்படி எதிர்கொள்வோம்? உனக்கென்ன கேடு வந்துடுச்சு? கூப்ட்டா என்னான்னுகூட கேக்காம உம்முன்னு போய் உக்காந்துக்கிற. படிப்பிலேயும் அக்கறை இல்ல. இவ்வாறு எதிர்மறையான பேச்சுதான் அதிகம் இருக்கும். அந்தக் குழந்தைக்கு ஏதோ மனஉளைச்சல் என்பது பெற்றோருக்குப் புரிவ தேயில்லை. தன்னிடம் பெற்றோருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகள், தான் ஒரு நல்லபிள்ளைதான் என்று வீட்டில் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம், தனக்குப் பிடித்தம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் எதிர்பார்க்கும் ஐ.ஐ.டி. அல்லது டாக்டர் படிப்பு போன்றவற்றில் விருப்பம் இல்லாமலே ஈடுபட வேண்டிய கட்டாயங்கள் இவையெல்லாம்தான் குழந்தைகள் மனதில் மனஉளைச்சலை உருவாக்கும் விஷயங்கள்..இப்ப இருக்கிற காலகட்டத்தில் ஸ்மார்ட்ஃபோன், முகநூல் என்று சோஷியல் மீடியா பெரிதாகிவிட்டதால், நிறைய விஷயங்களைக் குழந்தைகள் அவர்களே தெரிஞ்சிருக்கிறாங்க. ஒரு குழந்தை தன்னிடம் வந்து ஒரு விஷயத்தைச் சொல்லவரும் சமயம் அதை பெற்றோரும் சரி, ஆசிரியரும் சரி, அலட்சியப்படுத்தாமல் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அப்போ அந்தக் குழந்தைக்கு நம்பமேல ஒரு நம்பிக்கை வரும். இவங்களோட நம்ம மனசில இருக்கிறதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றும். இதற்கெல்லாம் உதவத்தான் பள்ளியிலேயே ஒரு மனநல ஆலோசகரை நியமிக்கிறார்கள். வகுப்பில் ஒரு மாணவனது நடவடிக்கையில் வித்தியாசம் இருந்தால் வகுப்பு ஆசிரியரே அவனை எங்களிடம் அனுப்புவார். இந்தமாதிரி ஒரு ஆலோசனை பள்ளியிலேயே கிடைக்கிறது என்பதால் மாணவர்களேகூட தனிப்பட்ட முறையில் எங்களைச் சந்தித்து ஆலோசனை கேட்பதுமுண்டு..மற்றொரு முக்கியமான விஷயம். ஆறாவது வகுப்பிலிருந்து சோஷியல் எமோஷனல் லேர்னிங்க் வகுப்புன்னு (எஸ்.இ.எல்.) எடுக்கறோம். இந்த வகுப்பில் பொதுவாக தனக்கு ஏற்படும் உணர்வுகளை மாணவர்களை அவர்களாகவே புரிந்துகொள்ளவைக்கிறோம். இது இந்த எஸ்.இ.எல்.லின் ஒரு அங்கம். இதில எல்லா உணர்ச்சிகளையும் குழந்தைகள், தானே கண்டுபிடிச்சு இனம் காணும் வகையில் சின்னச் சின்னகதைகள், அன்றாட நிகழ்வுகள் பற்றி சொல்வோம். வீட்டைப் பொறுத்தவரை குழந்தைகள் பெற்றோர், மற்றும் வீட்டிலுள்ள பெரியவர்களின் அறிவுரைகளுக்கு மத்தியில் வளர்கிறார்கள். பள்ளியிலோ நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்னும் இலக்கு வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். மற்றபடி அவர்கள் மனவளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுவதேயில்லை. இதனால் இந்த எஸ்.இ.எல். வகுப்பு குழந்தைகளுக்கு மிகுந்த ஆர்வத்தை ஊட்டுகிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம். வகுப்பை குழந்தைகள் எவ்வளவு ஆர்வமாக கவனிக் கிறார்கள் என்பது கதை முடிவில் அவர்கள் அதில் விட்டுப்போன சில உணர்ச்சிகளைச் சுட்டிக்காட்டி அதைப்பற்றி ஆர்வமாகக் கேட்கும்போது தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி எல்லா உணர்ச்சிகளும் இயற்கைதான் என்றும் புரியவைப்போம்..உதாரணத்துக்கு ஒரு விஷயத்தில கோபம் வருதுன்னா அதைக் கட்டுப் படுத்தணும்னு அவசியமில்லை. ஆனால், அந்தக் கோபத்தை எப்படிக் கையாளுவது என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போ அந்தக் கோபம் எதனால் வந்தது என்று ஆராய்ந்து அறியும் மனப்பான்மை வரும். பொதுவாக மனநல ஆலோசனை என்பதே குழந்தைகள் தங்களைத் தாங்களே அலசி ஆராய உதவி செய்வதேயாகும். இதில் அறிவுரைகள் சுத்தமாகக் கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பிரத்யேகத் திறமை இருக்கும். அதை இனம் கண்டுகொள்ளவும் இந்த வகுப்பு உதவுகிறது..தாங்கமுடியாத மன அழுத்தங்கள்தான் தற்கொலைக்கு வழிவகுக்கிறது."நீ என்கிட்ட பேசுற விஷயம் இந்த நாலு சுவர்களுக்குள்தான் இருக்கும்" என்று நாம் சொல்லும்போது அவர்களுக்கு நம்மீது நம்பிக்கை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேற்கொண்டு நாம் கேள்விகள் கேட்டு அவர்களை பேச வைக்கவேண்டும். அவர்கள் மனம் திறந்து, அவர்கள் மனதை அழுத்திக் கொண்டு இருக்கும் பிரச்னைகள், மனஉளைச்சல்கள் மெதுவாக வெளியே வரஆரம்பிக்கும். ஒரு மனநல ஆலோசகரோடு பேசும்போது அவர் அந்த மாணவனிடம் அந்த நிலைமையை, குறிப்பிட்ட மனஉளைச்சலை எப்படிக் கையாளவேண்டும் என்பதை அவனிடம் கேள்விகள் கேட்டு அவனையே உணர்ந்துகொள்ளவைப்பார்..மாணவர்களைப் பொறுத்தவரை பரீட்சை ரிசல்ட் வந்ததும் தற்கொலை, மதிப்பெண்கள் குறைந்ததால் தற்கொலை போன்றவற்றைத் தவிர மற்ற தற்கொலைகள் கொஞ்சம் காலமாகவே திட்டமிடப்பட்டதாகக்கூட இருக்கும். அன்றாட வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகள் அவர்கள் மனஅழுத்தத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்கொலைக்குத் தூண்டுவதாக இருக்கும். தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுவிட்ட நிலையில் இருப்பவர்களின் நிலைமை இன்னுமே கவனமாக அணுக வேண்டிய விஷயம். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் மனநல ஆலோசனை கட்டாயம் தேவைப்படும். சம்பந்தப்பட்ட மகளையோ, மகனையோ 'உன்னால நம்ம குடும்ப மானமே போயிடுச்சு. நீ டாக்டராவேன்னு எல்லோரும் எதிர்பார்த்தோமே? இந்த வீட்டில வந்து பொறந்தியே?' என்றெல்லாம் ஆத்திரத்தில் பேசுவது மிகவும் இயல்பான விஷயம். ஆனால், முற்றிலும் தவறான விஷயம்..அப்படியெல்லாம் இல்லாமல் தங்கள் பெண் அல்லது பிள்ளையிடம் முழு மனதாக அன்புகாட்டி, 'நீ எங்களுக்கு வேணும். உன்னோட உடல்நலம் ரொம்பமுக்கியம். வா! வந்து சாப்பிடு!' என்று அன்போடு சாப்பிட வைத்து, அந்த நேரத்தில் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருக்கணும். இந்த நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற அந்தக் குழந்தைக்கு மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்க ஆரம்பித்துவிடும். 'நம்மகிட்ட இவ்வளவு அன்பு காட்டுற அம்மா, அப்பாவை விட்டா போக நெனைச்சோம்?' அப்படீன்னு தோணும். இரண்டு பேரும் பரஸ்பர அன்பு காட்டி திரும்ப வாழ்க்கையைச் சீராக வாழ ஆரம்பிக்கும்போது அந்தக் குற்றஉணர்ச்சி குழந்தைக்கும், தன் குழந்தை ஐ.ஐ.டி.க்கோ டாக்டருக்கோ படிக்கவில்லையே என்னும் ஏக்கம் பெற்றோருக்கும் மெதுவாக விலகி கரைய ஆரம்பிக்கும். இதைத்தான் நாங்கள் அந்தப் பெற்றோருக்கும் குழந்தைக்கும் எடுத்துச் சொல்வோம்..பள்ளியில் மனநல ஆலோசகர் நியமிக்கப்படுவது என்பது மிக ஆரோக்கியமான விஷயம். அவ்வப்போதே குழந்தைகளின் மனநிலையில் ஏற்படும் மாற்றத்தைக் கண்காணித்து அவர்களுக்கு உதவமுடியும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும்போது, அவர்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்திற்குள் நுழைகிறார்கள். அது அவர்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான திருப்பம் என்பதால் பள்ளியில் மனநல ஆலோசனை கிடைப்பது கல்லூரி வாழ்க்கையைத் திறம்பட கையாளவும் உதவும். குழந்தைகள் மனநலம் நல்லமுறையில் பேணப்பட்டு அவர்கள் முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவும்."மிகுந்த நம்பிக்கையோடு தெரிவித்தார் பார்கவி.