பாகம் -15..–சுசீலா மாணிக்கம், ஓவியம்: பத்மவாசன்.உலகின் அறநெறி இலக்கியமாம் நம் திருக்குறளின் பதினைந்தாம் அதிகாரம் 'பிறனில் விழையாமை' (பிறன் இல் விழையாமை). குடும்ப சமுதாய உறவு மேம்பாட்டுக் கருத்துக்கள் எவ்வளவோ தன்னுள் பதித்துக்கொண்டுள்ள நம் தமிழ்மறை தனி மனிதனுக்குமான பல நெறிமுறைகளை வகுத்துச் சொல்லி இருக்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்துகொண்டு, அத்தகைய வரைமுறைகளுள் தனி மனிதஒழுக்கம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அதிலிருந்து தவறும் மனிதனுக்கு ஏற்படும் பேரிழிவும் பேரழிவும் எத்தகையது என்பதையும் மன்னர் முதல் இன்றைய சாதாரண மனிதன் வரை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். பாடங்களையும் கற்றுத்தெளிகிறோம்..வாசிக்கும் தருணமெல்லாம் சோழ மண்டலத்தையே சுற்றி வரச் செய்யும் ஒரே மந்திரச் சொல்லாம் "பொன்னியின்செல்வன்" புதினத்தில் 'பிறனில் விழையாமை' 'வரைவின் மகளிர்' போன்ற அதிகாரங்களுக்கு மிகச் சரியான உதாரணங்கள் காட்ட இயலாவிட்டாலும் இக்குறிப்பிட்ட 'பிறனில் விழையாமை' அதிகாரத்திற்கு பெரிய பழுவேட்டரையரின் தருமபத்தினி நந்தினி தேவியை சுற்றிச் சுற்றி வந்து தன்னிலை மறந்தவர்களைச் சுட்டிக்காட்டுமாறு மனம் கட்டளை இடுகிறது..பெரிய பழுவேட்டரையர் மாளிகை. நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமமாகியிருக்க, வெளியில் சென்றிருந்த பெரிய பழுவேட்டரையர் மாளிகைக்குள் பிரவேசிக்கிறார். சில விஷயங்களை நந்தினியிடம் நேரில் கேட்கவேண்டும் என்று கோபமாய் நுழையும் அவரிடம் ஊடல் கொள்கிறாள் நந்தினி..நந்தினி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. 'ஆகா'! இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே? மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம்! ஆனால், இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை!' – இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர். அவளைக் கேள்வி கேட்பது, கடிந்துக்கொள்வது என்கிற உத்தேசம் போயே போய்விட்டது! நந்தினி காலால் இட்டப் பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்! எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான்! ஆனால், பெண்ணடிமைத் தனத்தைப்போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை!.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.அடுத்தவன் மனைவியை மனதுள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும்அன்று; சான்றோர்க்கு நிறையவான ஒழுக்கமும் ஆகும்..பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்..பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை..(லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் நந்தினி அமர்ந்திருக்கிறாள். தாதிப்பெண் அழைத்து வந்த கந்தமாறன் அவளெதிரில்…).தாதி சென்று கந்தமாறனை அழைத்து வந்து விட்டு விட்டு சற்று விலகிப் போய்நின்றாள்.. கந்தன்மாறனின் கண்கள் நந்தினியை ஏறிட்டுப் பார்ப்பதற்கு கூசின. எங்கேயோ தோட்டத்தைப் பார்த்தவண்ணம் கந்தன்மாறன் நின்றான்.. "ஐயா! உட்காருங்கள்!" என்று கூறிய நந்தினியின் குரல் நடுக்கம் சுந்தன்மாறனை அவளுடைய முகத்தை உற்றுப் பார்க்கும்படி செய்தது.. நந்தினிதொடர்ந்து, "குந்தவை தேவியைப் பார்த்த கண்களினால் என்னைப் பார்க்க முடியாமலிருப்பதில் வியப்பில்லை!" என்று கூறிப் புன்னகை புரிந்தாள்.. அந்தச் சொற்கள் கந்தன்மாறனுடைய நெஞ்சைப் பிளந்தன. அவளுடைய புன்னகையோ அவனுடைய தலையை கிறுகிறுக்கச்செய்தது.. தட்டுத்தடுமாறி, "ஆயிரம் குந்தவைகள் ஒரு நந்தினி தேவிக்கு இணையாக மாட்டார்கள்!" என்றான்.. "ஆயினும் இளையபிராட்டி விரலை அசைத்தால் வானுலகம் சென்று இந்திரனுடைய சிம்மாசனத்தைக் கொண்டு வந்து விடுவீர்கள். நான் வருந்தி வேண்டிக்கொண்டால், உட்காரக்கூட மாட்டீர்கள்!".கந்தமாறன் உடனே எதிரில் இருந்த மேடையில் உட்கார்ந்து "தாங்கள் பணித்தால் பிரம்மலோகம் சென்று பிரம்மாவின் தலையைக் கொய்த்துக் கொண்டு வருவேன்!" என்றான்..(அவர்களின் நீண்ட உரையாடலில் ஆங்காங்கே சில…)."இந்தச் சோழ நாட்டிலேயே மதிநுட்பம் அதிகம் உள்ளவர் யார் என்று கேட்டால், தாங்கள்தான் என்று நான் சொல்லுவேன். இந்த உலகத்தில் அறிவு படைத்தவர்கள் உண்டு; அழகு படைத்தவர் உண்டு. இரண்டும் சேர்ந்துள்ளவர்களை பிரம்மசிருஷ்டியில் காண்பது அபூர்வம். தங்களிடந்தான் அழகு, அறிவு இரண்டும் பொருந்தியிருக்கக் காண்கிறேன்!" என்று பரவசமாகக் கூறினான் கந்தமாறன்.."இதோ இந்த ஓலையை சர்வ ஜாக்கிரதையாகக் கொண்டு போய்க் காஞ்சியில் ஆதித்த கரிகாலரிடம் கொடுக்கவேண்டும். கொடுப்பீர்களா?" என்று சொல்லிக்கொண்டே ஓலைச்சுருளையும் அதைப் போட வேண்டிய குழலையும் நீட்டினாள். மோக வெறியில் மூழ்கிப் போய் இருந்த கந்தமாறன் ஓலைச்சுருளையும் குழலையும் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக நந்தினியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு "தங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்!" என்று உளறினான்..(மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் ஆதித்த கரிகாலன் தன் நண்பன் பார்த்திபேந்திரனிடம் தன் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்த சமயம்…)."பார்த்திபா! கடற்பிரயாணம் செய்வோரின் அனுபவங்களை நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? சமுத்திரத்தில் சில இடங்களில் அளவில்லாத சக்தியுடனும் வேகத்துடனும், கூடிய நீரோட்டங்கள் இருக்குமாம். அந்த நீரோட்டங்களில் கப்பல்கள் அகப்பட்டுக்கொண்டால் சிறிது நேரத்தில் சுக்குசுக்காகப் போய்விடுமாம். நந்தினியின் முன்னிலையில் நான் இருந்தபோது, கடல் நீரோட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட கப்பலின் கதியை அடைந்தேன். என்உடல், உள்ளம், இருதயம் எல்லாம் ஆயிரம் சுக்கல்களாகி விட்டன. என்னுடைய நாவிலே வந்த வார்த்தைகள் எனக்கே வியப்பை அளித்தன. 'ஐயோ! இது என்ன இப்படிப் பேசுகிறோம்?' என்று நெஞ்சில் ஒரு பக்கம் தோன்றிக்கொண்டிருந்தபோது, வாய் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தது. எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதைப் பற்றி நந்தினி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.. 'எனக்கு அதில் ஒன்றும் மகிழ்ச்சி இல்லை!' என்றேன்..'ஏன்?' என்று கேட்டாள்.."இது என்ன கேள்வி கேட்கிறாய்? எனக்கு எவ்வாறு மகிழ்ச்சி இருக்கும்? நீதான் இப்படி அநியாயம் செய்துவிட்டாயே?' என்றேன்..(மேலும்…).'நான் ஏன் உன்னைக் கொல்கிறேன்? நீயல்லவா என்னை உயிரோடு வதைத்துக்கொண்டிருக்கிறாய்!' என்றேன்.. கடைசியில், இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கம் தருகிற வார்த்தைகளை என் வாய் சொல்லிற்று. 'இன்னமுங்கூட மோசம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை. நீ ஒரு வார்த்தை சொல்லு! இந்தக் கிழவனை விட்டுவிட்டு வந்து விடுவதாகச் சொல்லு! உனக்காக நான் இந்த ராஜ்யத்தை விட்டுவந்துவிடுகிறேன். இருவரும் கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய்விடுவோம்!' என்றேன்..நந்தினி அதைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தாள். அதை நினைத்தால் இப்போதுகூட எனக்கு ரோமம் சிலிர்க்கிறது..(கோடியக்கரை! நந்தினியை நேரில் கண்ட பார்த்திபேந்திரனின் நிலையைப் பாருங்கள்…).'இது சத்தியமா, ஐயா? ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காக, அவள் எது சொன்னாலும் செய்யக்கூடிய மனிதரா நீங்கள்?". "எந்தப் பெண் என்பதைப் பொறுத்தது, தேவி! நேற்றுவரைக்கும் நான் பார்த்திருக்கும் எந்தப் பெண்ணின் விருப்பத்துக்காகவும் எதுவும் செய்திருக்கமாட்டேன்! சொன்னால் சிரித்திருப்பேன். இன்று அப்படியல்ல! தாங்கள் சொல்லிப்பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என்வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டுவந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால், போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்…!.இவ்விதம் பார்த்திபேந்திரன் வெறிகொண்டவனைப் போல் கூறியபோது அவனுடைய உடம்பு தலையிலிருந்து கால்வரையில் நடுநடுங்கியது; அவனுடைய வாயிலிருந்து வந்த சொற்கள் குளறின; உதடுகள் துடித்தன; பற்கள் கடித்தன; ரோமங்கள் குத்திட்டுநின்றன; மூச்சுவிடும் சத்தம் கொல்லன் உலைச் சத்தத்தைப் போல கேட்டது..(இந்த அத்தியாயத்திற்கு நம் கல்கி அவர்களின் எழுத்துக்களாலேயே ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம்…)."எத்தனையோ மேதாவிகள் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?. வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள்..இதற்குமாறாக, நெடுங்காலமாய்த் தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள்.".(இதற்கு மேலும் நாம் வேறு ஏதாவது சொல்லவிட முடியுமா என்ன?!)
பாகம் -15..–சுசீலா மாணிக்கம், ஓவியம்: பத்மவாசன்.உலகின் அறநெறி இலக்கியமாம் நம் திருக்குறளின் பதினைந்தாம் அதிகாரம் 'பிறனில் விழையாமை' (பிறன் இல் விழையாமை). குடும்ப சமுதாய உறவு மேம்பாட்டுக் கருத்துக்கள் எவ்வளவோ தன்னுள் பதித்துக்கொண்டுள்ள நம் தமிழ்மறை தனி மனிதனுக்குமான பல நெறிமுறைகளை வகுத்துச் சொல்லி இருக்கிறது என்பதையும் இங்கே பதிவு செய்துகொண்டு, அத்தகைய வரைமுறைகளுள் தனி மனிதஒழுக்கம் என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் அதிலிருந்து தவறும் மனிதனுக்கு ஏற்படும் பேரிழிவும் பேரழிவும் எத்தகையது என்பதையும் மன்னர் முதல் இன்றைய சாதாரண மனிதன் வரை பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். பாடங்களையும் கற்றுத்தெளிகிறோம்..வாசிக்கும் தருணமெல்லாம் சோழ மண்டலத்தையே சுற்றி வரச் செய்யும் ஒரே மந்திரச் சொல்லாம் "பொன்னியின்செல்வன்" புதினத்தில் 'பிறனில் விழையாமை' 'வரைவின் மகளிர்' போன்ற அதிகாரங்களுக்கு மிகச் சரியான உதாரணங்கள் காட்ட இயலாவிட்டாலும் இக்குறிப்பிட்ட 'பிறனில் விழையாமை' அதிகாரத்திற்கு பெரிய பழுவேட்டரையரின் தருமபத்தினி நந்தினி தேவியை சுற்றிச் சுற்றி வந்து தன்னிலை மறந்தவர்களைச் சுட்டிக்காட்டுமாறு மனம் கட்டளை இடுகிறது..பெரிய பழுவேட்டரையர் மாளிகை. நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமமாகியிருக்க, வெளியில் சென்றிருந்த பெரிய பழுவேட்டரையர் மாளிகைக்குள் பிரவேசிக்கிறார். சில விஷயங்களை நந்தினியிடம் நேரில் கேட்கவேண்டும் என்று கோபமாய் நுழையும் அவரிடம் ஊடல் கொள்கிறாள் நந்தினி..நந்தினி தன் கண்களைத் துடைத்துக்கொண்டு பழுவேட்டரையரை நிமிர்ந்து பார்த்தாள். தங்க விளக்கின் பொன்னொளியில் அவளுடைய முகத்தில் மலர்ந்த முத்து முறுவலைப் பார்த்தார் தனாதிகாரி. 'ஆகா'! இந்தப் புன்சிரிப்புக்கு மூன்று உலகத்தையும் கொடுக்கலாமே? மூன்று உலகமும் நம் வசத்தில் இல்லாதபடியால், நம் உடல், பொருள், ஆவி மூன்றையும் இவளுக்காகத் தத்தம் செய்யலாம்! ஆனால், இவளோ நம்மிடம் ஒன்றும் கேட்கிறாள் இல்லை!' – இவ்விதம் எண்ணினார் அந்த வீராதி வீரர். அவளைக் கேள்வி கேட்பது, கடிந்துக்கொள்வது என்கிற உத்தேசம் போயே போய்விட்டது! நந்தினி காலால் இட்டப் பணியைத் தலையால் நடத்தி வைக்கும் நிலைமைக்கு வந்துவிட்டார்! எந்தவித அடிமைத்தனமும் பொல்லாததுதான்! ஆனால், பெண்ணடிமைத் தனத்தைப்போல் ஒருவனை மதி இழக்கச் செய்வது வேறொன்றுமில்லை!.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.அடுத்தவன் மனைவியை மனதுள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும்அன்று; சான்றோர்க்கு நிறையவான ஒழுக்கமும் ஆகும்..பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்..பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை..(லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் நந்தினி அமர்ந்திருக்கிறாள். தாதிப்பெண் அழைத்து வந்த கந்தமாறன் அவளெதிரில்…).தாதி சென்று கந்தமாறனை அழைத்து வந்து விட்டு விட்டு சற்று விலகிப் போய்நின்றாள்.. கந்தன்மாறனின் கண்கள் நந்தினியை ஏறிட்டுப் பார்ப்பதற்கு கூசின. எங்கேயோ தோட்டத்தைப் பார்த்தவண்ணம் கந்தன்மாறன் நின்றான்.. "ஐயா! உட்காருங்கள்!" என்று கூறிய நந்தினியின் குரல் நடுக்கம் சுந்தன்மாறனை அவளுடைய முகத்தை உற்றுப் பார்க்கும்படி செய்தது.. நந்தினிதொடர்ந்து, "குந்தவை தேவியைப் பார்த்த கண்களினால் என்னைப் பார்க்க முடியாமலிருப்பதில் வியப்பில்லை!" என்று கூறிப் புன்னகை புரிந்தாள்.. அந்தச் சொற்கள் கந்தன்மாறனுடைய நெஞ்சைப் பிளந்தன. அவளுடைய புன்னகையோ அவனுடைய தலையை கிறுகிறுக்கச்செய்தது.. தட்டுத்தடுமாறி, "ஆயிரம் குந்தவைகள் ஒரு நந்தினி தேவிக்கு இணையாக மாட்டார்கள்!" என்றான்.. "ஆயினும் இளையபிராட்டி விரலை அசைத்தால் வானுலகம் சென்று இந்திரனுடைய சிம்மாசனத்தைக் கொண்டு வந்து விடுவீர்கள். நான் வருந்தி வேண்டிக்கொண்டால், உட்காரக்கூட மாட்டீர்கள்!".கந்தமாறன் உடனே எதிரில் இருந்த மேடையில் உட்கார்ந்து "தாங்கள் பணித்தால் பிரம்மலோகம் சென்று பிரம்மாவின் தலையைக் கொய்த்துக் கொண்டு வருவேன்!" என்றான்..(அவர்களின் நீண்ட உரையாடலில் ஆங்காங்கே சில…)."இந்தச் சோழ நாட்டிலேயே மதிநுட்பம் அதிகம் உள்ளவர் யார் என்று கேட்டால், தாங்கள்தான் என்று நான் சொல்லுவேன். இந்த உலகத்தில் அறிவு படைத்தவர்கள் உண்டு; அழகு படைத்தவர் உண்டு. இரண்டும் சேர்ந்துள்ளவர்களை பிரம்மசிருஷ்டியில் காண்பது அபூர்வம். தங்களிடந்தான் அழகு, அறிவு இரண்டும் பொருந்தியிருக்கக் காண்கிறேன்!" என்று பரவசமாகக் கூறினான் கந்தமாறன்.."இதோ இந்த ஓலையை சர்வ ஜாக்கிரதையாகக் கொண்டு போய்க் காஞ்சியில் ஆதித்த கரிகாலரிடம் கொடுக்கவேண்டும். கொடுப்பீர்களா?" என்று சொல்லிக்கொண்டே ஓலைச்சுருளையும் அதைப் போட வேண்டிய குழலையும் நீட்டினாள். மோக வெறியில் மூழ்கிப் போய் இருந்த கந்தமாறன் ஓலைச்சுருளையும் குழலையும் வாங்கிக்கொள்வதற்கு பதிலாக நந்தினியின் கரத்தைப் பிடித்துக்கொண்டு "தங்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்!" என்று உளறினான்..(மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் ஆதித்த கரிகாலன் தன் நண்பன் பார்த்திபேந்திரனிடம் தன் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்த சமயம்…)."பார்த்திபா! கடற்பிரயாணம் செய்வோரின் அனுபவங்களை நீ கேட்டிருக்கிறாய் அல்லவா? சமுத்திரத்தில் சில இடங்களில் அளவில்லாத சக்தியுடனும் வேகத்துடனும், கூடிய நீரோட்டங்கள் இருக்குமாம். அந்த நீரோட்டங்களில் கப்பல்கள் அகப்பட்டுக்கொண்டால் சிறிது நேரத்தில் சுக்குசுக்காகப் போய்விடுமாம். நந்தினியின் முன்னிலையில் நான் இருந்தபோது, கடல் நீரோட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட கப்பலின் கதியை அடைந்தேன். என்உடல், உள்ளம், இருதயம் எல்லாம் ஆயிரம் சுக்கல்களாகி விட்டன. என்னுடைய நாவிலே வந்த வார்த்தைகள் எனக்கே வியப்பை அளித்தன. 'ஐயோ! இது என்ன இப்படிப் பேசுகிறோம்?' என்று நெஞ்சில் ஒரு பக்கம் தோன்றிக்கொண்டிருந்தபோது, வாய் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தது. எனக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதைப் பற்றி நந்தினி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.. 'எனக்கு அதில் ஒன்றும் மகிழ்ச்சி இல்லை!' என்றேன்..'ஏன்?' என்று கேட்டாள்.."இது என்ன கேள்வி கேட்கிறாய்? எனக்கு எவ்வாறு மகிழ்ச்சி இருக்கும்? நீதான் இப்படி அநியாயம் செய்துவிட்டாயே?' என்றேன்..(மேலும்…).'நான் ஏன் உன்னைக் கொல்கிறேன்? நீயல்லவா என்னை உயிரோடு வதைத்துக்கொண்டிருக்கிறாய்!' என்றேன்.. கடைசியில், இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கம் தருகிற வார்த்தைகளை என் வாய் சொல்லிற்று. 'இன்னமுங்கூட மோசம் ஒன்றும் நேர்ந்து விடவில்லை. நீ ஒரு வார்த்தை சொல்லு! இந்தக் கிழவனை விட்டுவிட்டு வந்து விடுவதாகச் சொல்லு! உனக்காக நான் இந்த ராஜ்யத்தை விட்டுவந்துவிடுகிறேன். இருவரும் கப்பல் ஏறிக் கடல் கடந்து தூர தேசத்துக்குப் போய்விடுவோம்!' என்றேன்..நந்தினி அதைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தாள். அதை நினைத்தால் இப்போதுகூட எனக்கு ரோமம் சிலிர்க்கிறது..(கோடியக்கரை! நந்தினியை நேரில் கண்ட பார்த்திபேந்திரனின் நிலையைப் பாருங்கள்…).'இது சத்தியமா, ஐயா? ஒரு பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காக, அவள் எது சொன்னாலும் செய்யக்கூடிய மனிதரா நீங்கள்?". "எந்தப் பெண் என்பதைப் பொறுத்தது, தேவி! நேற்றுவரைக்கும் நான் பார்த்திருக்கும் எந்தப் பெண்ணின் விருப்பத்துக்காகவும் எதுவும் செய்திருக்கமாட்டேன்! சொன்னால் சிரித்திருப்பேன். இன்று அப்படியல்ல! தாங்கள் சொல்லிப்பாருங்கள். எனக்கு நூறு உயிர்கள் இருந்தால் அவ்வளவையும் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணம் செய்வேன். ஆயிரம் சாம்ராஜ்யங்கள் என்வசம் இருந்தால் அவ்வளவையும் தங்கள் விருப்பத்திற்காகத் தியாகம் செய்வேன். இகத்தையும் பரத்தையும் என்றென்றைக்கும் இழக்கும்படி சொன்னால் அதற்கும் சித்தமாயிருப்பேன். கொடிய பகைவர்களை மன்னிக்கச் சொன்னால் மன்னிப்பேன். அத்தியந்த நண்பர்களின் தலையைக் கொண்டுவந்து தங்கள் காலடியில் போடச் சொன்னால், போட்டுவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்…!.இவ்விதம் பார்த்திபேந்திரன் வெறிகொண்டவனைப் போல் கூறியபோது அவனுடைய உடம்பு தலையிலிருந்து கால்வரையில் நடுநடுங்கியது; அவனுடைய வாயிலிருந்து வந்த சொற்கள் குளறின; உதடுகள் துடித்தன; பற்கள் கடித்தன; ரோமங்கள் குத்திட்டுநின்றன; மூச்சுவிடும் சத்தம் கொல்லன் உலைச் சத்தத்தைப் போல கேட்டது..(இந்த அத்தியாயத்திற்கு நம் கல்கி அவர்களின் எழுத்துக்களாலேயே ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம்…)."எத்தனையோ மேதாவிகள் காலமெல்லாம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மனித உடம்பின் அமைப்பு இரகசியத்தை நம்மால் முழுதும் அறிந்துகொள்ள முடியவில்லை. மனித இதயத்தின் அமைப்பு இரகசியத்தை நாம் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்?. வாழ்நாளெல்லாம் பழி பாவங்களில் முழுகிக் கிடந்தவர்கள் திடீரென்று ஒருநாள் வைராக்கிய சீலர்களாகிறார்கள்; பக்தி பரவசமடைந்து ஆடிப்பாடுகிறார்கள்; இறைவன் கருணைக்குப் பாத்திரமாகிறார்கள்; மனித சமூகத்துக்கு ஒப்பற்ற தொண்டுகளும் புரிகிறார்கள்..இதற்குமாறாக, நெடுங்காலமாய்த் தூய்மையான களங்கமற்ற வாழ்க்கை நடத்தியவர்கள் திடீரென்று ஒருநாள் வழுக்கி விழுகிறார்கள்! அப்படி விழும்போது அதல பாதாளத்திலேயே விழுந்துவிடுகிறார்கள்.".(இதற்கு மேலும் நாம் வேறு ஏதாவது சொல்லவிட முடியுமா என்ன?!)