நரம்புகள் வலுப்பெற….ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உள்ள உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், பெர்னீஷியஸ், அனீமியா எனும் ரத்தத்தைப் பாதிக்கும் நரம்புநோய் நிச்சயம் ஏற்பட வாய்ப்புள்ளது..வைட்டமின்பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்..நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்?.நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க 40 வயதில் இருந்து தினமும் ஒருமுறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்..பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நரம்புகள் வலுப்பெறும். இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய்த்தூள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெற உதவுகிறது..தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பதன் மூலமாக நரம்புகள் பலம் பெறுகிறது. நரம்புப் பாதுகாப்புக்கு எல்லா உணவிலும் மஞ்சள்தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்த்துக்கொண்டால் நரம்புகள் வலுவடையும்..வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப்பொடியை ½ தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, இரவில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு வலுப்பெறும்.–ஏ.எஸ். கோவிந்தராஜன்.****************************.டூத் பிரஷ் பராமரிக்க….* டூத் பிரஷ்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றி விடவேண்டும்..* வாரத்திற்கு ஒருமுறையேனும் டூத் பிரஷ்களை வெய்யிலில் வைத்து எடுக்கவேண்டும்..* டூத் பிரஷ்களை வைக்கும் இடத்திற்கும், கழிவறைக்கும் குறைந்தது பத்துமீட்டர் இடைவெளி இருத்தல் நல்லது..* வேறு ஒருவரின் பிரஷ் உங்கள் பிரஷ்மீது படாதவாறு வைக்கவேண்டும்..* உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உபயோகித்த டூத் பிரஷ்ஷை, உடல்நிலை சரியானபின் உபயோகிக்கக்கூடாது..* உங்கள் பல்துலக்கும் பிரஷ்ஷை மூடிய கலனில் வைப்பதைத் தவிர்க்கவும். அவற்றைக் காற்று இடைவெளியுடன் வைக்கவும். மூடிய கலனில் வைப்பது பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும்..* பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் கழுவ வேண்டும்.-ஆர். பிரசன்னா, திருச்சி.****************************.வியர்வைக் கறையைத் தவிர்க்க….பதட்டமில்லாமலும், காற்றோட்டமான இடத்திலும் இருக்க முயற்சி செய்யுங்கள். தினமும் இரண்டுதடவை குளிப்பது, சருமத்திலுள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வியர்வையைக் கட்டுப்படுத்த உதவுகிறது..அக்குள் பகுதியில் உள்ள முடிகளை முறையாக நீக்குவதன் மூலம், வியர்வையைக் கட்டுப்படுத்தலாம். தரமான வியர்வை 'பேட்'களைப் பயன்படுத்துவதன்மூலம் சிலமணி நேரங்கள் 'குட்பை' சொல்லலாம். இவை மெலிதாகவும் இருப்பதால், அணிந்திருப்பதே பிறருக்குத் தெரியாது. எனவே, உறுத்தல் இன்றி நீங்கள் நடமாடமுடியும்..பிராக்களை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெல்லிய காட்டன் பிராக்கள் அணிவது சிறப்பு. இதனால் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்கும்..உணவில் நீர்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவை உங்களின் சருமத்தைப் பளபளப்பாக்குவது மட்டுமின்றி, உங்கள் உடலைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.-சௌமியா சுப்ரமணியன், பழையபல்லாவரம்.
நரம்புகள் வலுப்பெற….ஊட்டச்சத்துக் குறைவான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது அதிகமாகச் சாப்பிடுவது இரண்டுமே நரம்புகளுக்கு நல்லதல்ல. ஊட்டச்சத்து உள்ள உணவு சரிவர உடலுக்குக் கிடைக்கவில்லை என்றால், பெர்னீஷியஸ், அனீமியா எனும் ரத்தத்தைப் பாதிக்கும் நரம்புநோய் நிச்சயம் ஏற்பட வாய்ப்புள்ளது..வைட்டமின்பி 12 குறைவால் ஏற்படும் இந்த நோய் புற நரம்புகளில் வலுவைக் குறைய வைத்து, ஆரம்பத்தில் பாதம், கை, கால் எரிச்சல் எனத் தொடங்கி, தள்ளாட்டம், வலுக்குறைவு எனக் கொடுத்துவிடும்..நரம்பு வலுப்பெறவும் நரம்பியல் நோய்கள் தீரவும் என்னென்ன சாப்பிடலாம்?.நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க பழங்கள் மிக அவசியம். தற்போது உலகமெங்கும் அதிகமாகிவரும் முதுமையில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனும் மறதி, வலுக்குறைவு, தடுமாற்றம் நமக்கு வராமல் இருக்க 40 வயதில் இருந்து தினமும் ஒருமுறை ஏதேனும் பழங்களை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்..பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளிக்கீரையை பகல் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நரம்புகள் வலுப்பெறும். இரவில் ஒரு சிட்டிகை சாதிக்காய்த்தூள் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுப்பெற உதவுகிறது..தேநீரில் லவங்கப்பட்டை போட்டுக் குடிப்பதன் மூலமாக நரம்புகள் பலம் பெறுகிறது. நரம்புப் பாதுகாப்புக்கு எல்லா உணவிலும் மஞ்சள்தூள், வெந்தயத்தை மறக்காமல் சிறிதளவாவது சேர்த்துக்கொண்டால் நரம்புகள் வலுவடையும்..வயோதிகத்தில் நரம்பு வலுப்பெற அமுக்கிராங்கிழங்குப்பொடியை ½ தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, இரவில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு வலுப்பெறும்.–ஏ.எஸ். கோவிந்தராஜன்.****************************.டூத் பிரஷ் பராமரிக்க….* டூத் பிரஷ்களை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றி விடவேண்டும்..* வாரத்திற்கு ஒருமுறையேனும் டூத் பிரஷ்களை வெய்யிலில் வைத்து எடுக்கவேண்டும்..* டூத் பிரஷ்களை வைக்கும் இடத்திற்கும், கழிவறைக்கும் குறைந்தது பத்துமீட்டர் இடைவெளி இருத்தல் நல்லது..* வேறு ஒருவரின் பிரஷ் உங்கள் பிரஷ்மீது படாதவாறு வைக்கவேண்டும்..* உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உபயோகித்த டூத் பிரஷ்ஷை, உடல்நிலை சரியானபின் உபயோகிக்கக்கூடாது..* உங்கள் பல்துலக்கும் பிரஷ்ஷை மூடிய கலனில் வைப்பதைத் தவிர்க்கவும். அவற்றைக் காற்று இடைவெளியுடன் வைக்கவும். மூடிய கலனில் வைப்பது பாக்டீரியா உற்பத்தியை அதிகரிக்கும்..* பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் கழுவ வேண்டும்.-ஆர். பிரசன்னா, திருச்சி.****************************.வியர்வைக் கறையைத் தவிர்க்க….பதட்டமில்லாமலும், காற்றோட்டமான இடத்திலும் இருக்க முயற்சி செய்யுங்கள். தினமும் இரண்டுதடவை குளிப்பது, சருமத்திலுள்ள பாக்டீரியாக்கள் மற்றும் வியர்வையைக் கட்டுப்படுத்த உதவுகிறது..அக்குள் பகுதியில் உள்ள முடிகளை முறையாக நீக்குவதன் மூலம், வியர்வையைக் கட்டுப்படுத்தலாம். தரமான வியர்வை 'பேட்'களைப் பயன்படுத்துவதன்மூலம் சிலமணி நேரங்கள் 'குட்பை' சொல்லலாம். இவை மெலிதாகவும் இருப்பதால், அணிந்திருப்பதே பிறருக்குத் தெரியாது. எனவே, உறுத்தல் இன்றி நீங்கள் நடமாடமுடியும்..பிராக்களை அணிவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெல்லிய காட்டன் பிராக்கள் அணிவது சிறப்பு. இதனால் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்கும்..உணவில் நீர்ச் சத்துள்ள காய்கறிகள், பழங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவை உங்களின் சருமத்தைப் பளபளப்பாக்குவது மட்டுமின்றி, உங்கள் உடலைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.-சௌமியா சுப்ரமணியன், பழையபல்லாவரம்.