-நளினி சம்பத்குமார்.ஓவியம்; வேதா.பகுதி–9. தேவை குரு சேவை!.குருவிற்கு ஒப்பானவர் என்று யாரையும் சொல்லமுடியாது. அதைபோலவே குருவை விட உயர்ந்தவர் என்றும் யாரையும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சிறப்பான நிலையில் இருப்பவர்தான் குரு (ஆசார்யன், மகான்)..நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கி, நம் மனதை அழகாக்கி அதை இறைவனிடம் படைப்பவர், படைக்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர் சாட்சாத் குருதான். அவர் நமக்கு செய்யும் உதவிக்கு நம்மால் திரும்ப எந்தக் கைமாறுமே செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல, அந்தத் திருமாலாலேயே முடியாது என்கிறார் ஸ்வாமி தேசிகன்.."ஏற்றி மனத்து எழில் ஞானவிளக்கை இருள் அனைத்தும்மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனும்காணகில்லான்".எவ்வளவு சத்தியமான வார்த்தை இது..குருவின் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் தீய வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில் மட்டுமே நம் செயலையும் சொற்களையும் தர்ம சிந்தனையுடன் நடத்துவதுகூட ஒரு விதத்தில் நாம் நம் மீது பரிவு காட்டும் நம் குருவுக்கு செய்யும் நன்றி எனலாம்..இறைவனே கண் முன் வந்து, 'என்ன வரம் வேண்டும்?' என கேட்ட பொழுது, 'எப்பொழுதும் என் குருவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் வரம் வேண்டும். அந்த வரத்தையே இறைவா நீ தர வேண்டும்' என கேட்ட தீபகனின் கதையை இப்பகுதியில் பார்ப்போம்..கோதாவரி நதிக்கரையில் வேத தர்மர் என்ற ஒரு மஹரிஷி வாழ்ந்து வந்தார். அவரிடம் வேதமும் சாஸ்திரமும் பயில பல சீடர்கள் இருந்தனர். ஒரு நாள் தம் சீடர்களில் குரு பக்தி பற்றி ஆழமாக அறிந்து அதை சரிவர பின்பற்றுபவர் யார் என்று அவருக்கு அறிந்து கொள்ள ஆசை வந்தது. எனவே தன் சீடர்களை அழைத்து, "சீடர்களே நான் முற்பிறவியில் மிகுந்த பாவங்கள் பல செய்துவிட்டேன். அந்தப் பாவங்களின் கர்மவினைகளைக் கழிக்க இந்தப் பிறவியில் கடுந்தவம் புரிந்தேன். அப்படியும் என் பாவங்கள் முழுவதுமே கழியவில்லை. அடுத்தப்பிறவியில் மட்டுமே மீதமுள்ள என் பாவங்கள் கழியும். ஆனால், இந்தப் பிறவியிலியே பாவங்களை எல்லாம் கழித்து முக்தி அடைய நான் விரும்புகிறேன். எனவே காசிக்கு சென்று 21 வருடங்கள் அங்கே கண் பார்வை அற்றவனாய், தொழு நோயால் பீடிக்க பட்டவனாய், முடவனாய் இருந்து காலத்தை கழிக்கப் போகிறேன். அப்படிச் செய்தால் மட்டுமே என் பாவங்கள் முழுவதும் கழியும். உங்களில் யாரேனும் ஒருவர் என்னோடு காசிக்கு வந்து தங்கி, எனக்கு 21 வருடங்கள் பணிவிடை செய்ய முடியுமா?" என்று கேட்டார். எல்லாரும் எதை எதையோ நினைத்து காசிக்கு குருவோடு வந்து சேவை செய்ய தயங்க, தீபகன் என்ற சீடன் மட்டும் "குருவே உங்களுக்கு சேவை செய்வது என்பதே பெரும் பாக்கியம். எப்படிப்பட்ட சேவை என்றாலும் உங்களுக்கு நான் செய்யத் தயாராக இருக்கிறேன். உங்களது பாவங்கள் தீர அடியேன் தொழு நோயாளியாகவும், குருடனாகவும், முடவனாகவும் 21 ஆண்டுகள் கழிக்கவும்கூடத் தயாராக இருக்கிறேன்" என்றான். "ஒருவர் செய்த பாவத்தை அவரேதான் கழிக்க வேண்டும் என்பது விதி. எனக்கு சேவை செய்வது என்பது கடினமாக இருக்கும். எனவே அதற்குத் தயாராக இரு" என்று சொல்லிவிட்டு தீபகனோடு காசி நோக்கி சென்றார் வேத தர்மர்..காசிக்கு சென்று அங்கு தன் சீடன் தனக்கென கட்டித் தந்தக் குடிலில் தங்க ஆரம்பித்தார் வேத தர்மர். சில நாட்களிலேயே அவரது பார்வை முற்றிலுமாக போனது, உடலில் தொழு நோய் ஒட்டிக்கொண்டது, நடக்க முடியாமல், நிற்க முடியாமல் முடவனாகிப் போனார். குருவின் நிலை பார்த்து மனம் கலங்கினான் தீபகன். வேத தர்மர் மெல்ல மனநிலை சரியில்லாதவராகவும் மாறிப் போனார். தீபகன் சிரத்தையோடு செய்யும் அத்தனை சேவைகளையும் உதாசீனப்படுத்தினார். அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்களை தீபகன் புன்னகையோடு துடைத்து விடும்போதெல்லாம் அவன் மனம் புண்படும்படி பேசினார் வேத தர்மர். குருவிற்கும் தனக்குமாக சேர்த்து பிக்ஷை எடுத்து வந்து உணவு ஊட்டிய தீபகனை திட்டித் தீர்த்தார். 'நோய் தாக்கத்தால்தான் அவர் அப்படி எல்லாம் பேசுகிறார், ஏசுகிறார். அவர் என்னை எத்தனை கடும் சொற்களால் வசை பாடினாலும் பரவாயில்லை. அந்த காசி விச்வநாதருக்கு நான் செய்யும் சேவை இது' என நினைத்துக் கொண்டு முகம் சுளிக்காமல், மனம் சலிக்காமல் குரு சேவையை உண்மையாக செய்துவந்தான் தீபகன்..காசியிலேயே இருந்துகொண்டு தன் கோயிலுக்குக் கூட வராமல் இப்படி ஒரு அற்புதமான குரு சேவையைச் செய்யும் தீபகனை காண அந்த காசி விச்வநாதரே தீபகன் இருப்பிடம் நோக்கி வந்துவிட்டார். "தீபகா, நீ உன் குருவுக்கு மிக மிக அற்புதமாக சேவை செய்கிறாய். உன் குரு பக்தியையும் குரு சேவையையும் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்துவிட்டேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்று சொன்னார். "ஸ்வாமி. என் குருவின் அனுமதி இல்லாமல் நான் எந்த வரமும் கேட்கமாட்டேன். குருவிடம் சென்று கேட்டுவிட்டு வருகிறேன்" என கூறிய தீபகன், குருவிடம் சென்று, " குருவே, காசி விச்வநாதர் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று என்னிடம் கூறினார். உங்கள் நோயை போக்கும்படி அவரிடம் கேட்கவா?" என பணிவுடன் கேட்டான். "என்ன தீபகா சொல்கிறாய்? என் பாவங்களை நான் அனுபவித்து மட்டுமேதான் போக்கிக் கொள்ள வேண்டுமே தவிர வேறு எப்படியும் இல்லை. எனக்குச் சேவை செய்வது உனக்குக் கஷ்டமாக இருக்கிற தென்றால் நீ உடனே செல். அதை விட்டுவிட்டு எனக்காக எந்த வரத்தையும் நீ யாரிடமும் கேட்காதே" என்றார் வேத தர்மர். உடனே தீபகன்காசி பெருமானைப் பார்த்து, "ஸ்வாமி என் குருதான் எனக்கு எல்லாம். அவர் கேட்கக்கூடாது என சொல்லியபின் வேறு வரம் ஏதும் இல்லை என்னிடம்கேட்க" என்று கூறி கைகூப்பினான்..இந்த அதிசயத்தை வைகுண்ட பதியான விஷ்ணுவிடம் எடுத்துரைத்தார் விச்வ நாதர். அடடா இப்படி ஒரு குரு பக்தியா என வியந்த விஷ்ணு பகவான் தீபகனை காண வந்தேவிட்டார்.."தீபகா உன் குரு பக்திக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு பரிசு தர வேண்டும் என்று வந்திருக்கிறேன். என்ன வேண்டுமோ தயங்காமல் கேள்" என்றார்.."நாராயணா… என் குரு பக்தி என்பது பெருகிக்கொண்டே போக வேண்டும். மும்மூர்திகளின் சங்கமமாக நான் என் குருவை மட்டுமே பார்க்கிறேன். அவரை மட்டுமே வணங்குகிறேன். குருவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருள வேண்டும்" என கேட்டான் தீபகன்.."உன் குரு பக்தியில் அக மகிழ்ந்து போனேன் தீபகா, இனி எல்லாச் செல்வமும் வளமும் உன் இருப்பிடம் தேடி வரும். குருவின் அருளால் திருவின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டாய்" என்று அருளிச் சென்றார்..சந்தோஷம் மேலிட தம் குருவிடம் அப்படியே நடந்தவற்றைக் கூறினான் தீபகன். என்ன ஆச்சரியம். அத்தனை நாட்கள் நோயின் பிடியில் இருந்த குரு சர்வ லட்சணம் பொருந்திய சரீரம் கொண்டவராக மாறிப்போனார். அவரைப் பிடித்திருந்த நோய் என்பது சுவடு தெரியாமல் ஓடிப்போனது. தீபகனைப் பார்த்து வேத தர்மர், "சிஷ்ய லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாய் நீ வாழ்ந்து காட்டிவிட்டாய் தீபகா. இனி இந்தக் கலியுகம் முடியும் வரை உன் புகழ் மங்காது இருக்கும், கலியின் தோஷத்தில் தவிப்பவர்கள்கூடக் குருவின் அருளால் அந்தத் தோஷத்திலிருந்து விடுபடலாம். கல்வி, செல்வம் அனைத்தும் உன்னை வந்தடையும். உன்னை நினைப்பவர்களுக்கு அவரவர்களின் குரு அருளும் திரு அருளும் சேர்ந்தே கிட்டும்" என்று வாழ்த்திச் சென்றார்..தீபகன் காட்டிய வழி நல்வழியன்றோ… குரு சேவையிலும், குரு ஸ்மரணையிலும் மட்டுமே நம் நாட்களை இனி கழிக்க ஆரம்பிப்போம்.
-நளினி சம்பத்குமார்.ஓவியம்; வேதா.பகுதி–9. தேவை குரு சேவை!.குருவிற்கு ஒப்பானவர் என்று யாரையும் சொல்லமுடியாது. அதைபோலவே குருவை விட உயர்ந்தவர் என்றும் யாரையும் சொல்ல முடியாது. அப்படி ஒரு சிறப்பான நிலையில் இருப்பவர்தான் குரு (ஆசார்யன், மகான்)..நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கி, நம் மனதை அழகாக்கி அதை இறைவனிடம் படைப்பவர், படைக்கக்கூடிய சர்வ வல்லமை பொருந்தியவர் சாட்சாத் குருதான். அவர் நமக்கு செய்யும் உதவிக்கு நம்மால் திரும்ப எந்தக் கைமாறுமே செய்ய முடியாது. நம்மால் மட்டுமல்ல, அந்தத் திருமாலாலேயே முடியாது என்கிறார் ஸ்வாமி தேசிகன்.."ஏற்றி மனத்து எழில் ஞானவிளக்கை இருள் அனைத்தும்மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனும்காணகில்லான்".எவ்வளவு சத்தியமான வார்த்தை இது..குருவின் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் தீய வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில் மட்டுமே நம் செயலையும் சொற்களையும் தர்ம சிந்தனையுடன் நடத்துவதுகூட ஒரு விதத்தில் நாம் நம் மீது பரிவு காட்டும் நம் குருவுக்கு செய்யும் நன்றி எனலாம்..இறைவனே கண் முன் வந்து, 'என்ன வரம் வேண்டும்?' என கேட்ட பொழுது, 'எப்பொழுதும் என் குருவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் வரம் வேண்டும். அந்த வரத்தையே இறைவா நீ தர வேண்டும்' என கேட்ட தீபகனின் கதையை இப்பகுதியில் பார்ப்போம்..கோதாவரி நதிக்கரையில் வேத தர்மர் என்ற ஒரு மஹரிஷி வாழ்ந்து வந்தார். அவரிடம் வேதமும் சாஸ்திரமும் பயில பல சீடர்கள் இருந்தனர். ஒரு நாள் தம் சீடர்களில் குரு பக்தி பற்றி ஆழமாக அறிந்து அதை சரிவர பின்பற்றுபவர் யார் என்று அவருக்கு அறிந்து கொள்ள ஆசை வந்தது. எனவே தன் சீடர்களை அழைத்து, "சீடர்களே நான் முற்பிறவியில் மிகுந்த பாவங்கள் பல செய்துவிட்டேன். அந்தப் பாவங்களின் கர்மவினைகளைக் கழிக்க இந்தப் பிறவியில் கடுந்தவம் புரிந்தேன். அப்படியும் என் பாவங்கள் முழுவதுமே கழியவில்லை. அடுத்தப்பிறவியில் மட்டுமே மீதமுள்ள என் பாவங்கள் கழியும். ஆனால், இந்தப் பிறவியிலியே பாவங்களை எல்லாம் கழித்து முக்தி அடைய நான் விரும்புகிறேன். எனவே காசிக்கு சென்று 21 வருடங்கள் அங்கே கண் பார்வை அற்றவனாய், தொழு நோயால் பீடிக்க பட்டவனாய், முடவனாய் இருந்து காலத்தை கழிக்கப் போகிறேன். அப்படிச் செய்தால் மட்டுமே என் பாவங்கள் முழுவதும் கழியும். உங்களில் யாரேனும் ஒருவர் என்னோடு காசிக்கு வந்து தங்கி, எனக்கு 21 வருடங்கள் பணிவிடை செய்ய முடியுமா?" என்று கேட்டார். எல்லாரும் எதை எதையோ நினைத்து காசிக்கு குருவோடு வந்து சேவை செய்ய தயங்க, தீபகன் என்ற சீடன் மட்டும் "குருவே உங்களுக்கு சேவை செய்வது என்பதே பெரும் பாக்கியம். எப்படிப்பட்ட சேவை என்றாலும் உங்களுக்கு நான் செய்யத் தயாராக இருக்கிறேன். உங்களது பாவங்கள் தீர அடியேன் தொழு நோயாளியாகவும், குருடனாகவும், முடவனாகவும் 21 ஆண்டுகள் கழிக்கவும்கூடத் தயாராக இருக்கிறேன்" என்றான். "ஒருவர் செய்த பாவத்தை அவரேதான் கழிக்க வேண்டும் என்பது விதி. எனக்கு சேவை செய்வது என்பது கடினமாக இருக்கும். எனவே அதற்குத் தயாராக இரு" என்று சொல்லிவிட்டு தீபகனோடு காசி நோக்கி சென்றார் வேத தர்மர்..காசிக்கு சென்று அங்கு தன் சீடன் தனக்கென கட்டித் தந்தக் குடிலில் தங்க ஆரம்பித்தார் வேத தர்மர். சில நாட்களிலேயே அவரது பார்வை முற்றிலுமாக போனது, உடலில் தொழு நோய் ஒட்டிக்கொண்டது, நடக்க முடியாமல், நிற்க முடியாமல் முடவனாகிப் போனார். குருவின் நிலை பார்த்து மனம் கலங்கினான் தீபகன். வேத தர்மர் மெல்ல மனநிலை சரியில்லாதவராகவும் மாறிப் போனார். தீபகன் சிரத்தையோடு செய்யும் அத்தனை சேவைகளையும் உதாசீனப்படுத்தினார். அவர் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்களை தீபகன் புன்னகையோடு துடைத்து விடும்போதெல்லாம் அவன் மனம் புண்படும்படி பேசினார் வேத தர்மர். குருவிற்கும் தனக்குமாக சேர்த்து பிக்ஷை எடுத்து வந்து உணவு ஊட்டிய தீபகனை திட்டித் தீர்த்தார். 'நோய் தாக்கத்தால்தான் அவர் அப்படி எல்லாம் பேசுகிறார், ஏசுகிறார். அவர் என்னை எத்தனை கடும் சொற்களால் வசை பாடினாலும் பரவாயில்லை. அந்த காசி விச்வநாதருக்கு நான் செய்யும் சேவை இது' என நினைத்துக் கொண்டு முகம் சுளிக்காமல், மனம் சலிக்காமல் குரு சேவையை உண்மையாக செய்துவந்தான் தீபகன்..காசியிலேயே இருந்துகொண்டு தன் கோயிலுக்குக் கூட வராமல் இப்படி ஒரு அற்புதமான குரு சேவையைச் செய்யும் தீபகனை காண அந்த காசி விச்வநாதரே தீபகன் இருப்பிடம் நோக்கி வந்துவிட்டார். "தீபகா, நீ உன் குருவுக்கு மிக மிக அற்புதமாக சேவை செய்கிறாய். உன் குரு பக்தியையும் குரு சேவையையும் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்துவிட்டேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்" என்று சொன்னார். "ஸ்வாமி. என் குருவின் அனுமதி இல்லாமல் நான் எந்த வரமும் கேட்கமாட்டேன். குருவிடம் சென்று கேட்டுவிட்டு வருகிறேன்" என கூறிய தீபகன், குருவிடம் சென்று, " குருவே, காசி விச்வநாதர் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று என்னிடம் கூறினார். உங்கள் நோயை போக்கும்படி அவரிடம் கேட்கவா?" என பணிவுடன் கேட்டான். "என்ன தீபகா சொல்கிறாய்? என் பாவங்களை நான் அனுபவித்து மட்டுமேதான் போக்கிக் கொள்ள வேண்டுமே தவிர வேறு எப்படியும் இல்லை. எனக்குச் சேவை செய்வது உனக்குக் கஷ்டமாக இருக்கிற தென்றால் நீ உடனே செல். அதை விட்டுவிட்டு எனக்காக எந்த வரத்தையும் நீ யாரிடமும் கேட்காதே" என்றார் வேத தர்மர். உடனே தீபகன்காசி பெருமானைப் பார்த்து, "ஸ்வாமி என் குருதான் எனக்கு எல்லாம். அவர் கேட்கக்கூடாது என சொல்லியபின் வேறு வரம் ஏதும் இல்லை என்னிடம்கேட்க" என்று கூறி கைகூப்பினான்..இந்த அதிசயத்தை வைகுண்ட பதியான விஷ்ணுவிடம் எடுத்துரைத்தார் விச்வ நாதர். அடடா இப்படி ஒரு குரு பக்தியா என வியந்த விஷ்ணு பகவான் தீபகனை காண வந்தேவிட்டார்.."தீபகா உன் குரு பக்திக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு பரிசு தர வேண்டும் என்று வந்திருக்கிறேன். என்ன வேண்டுமோ தயங்காமல் கேள்" என்றார்.."நாராயணா… என் குரு பக்தி என்பது பெருகிக்கொண்டே போக வேண்டும். மும்மூர்திகளின் சங்கமமாக நான் என் குருவை மட்டுமே பார்க்கிறேன். அவரை மட்டுமே வணங்குகிறேன். குருவுக்குத் தொடர்ந்து சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருள வேண்டும்" என கேட்டான் தீபகன்.."உன் குரு பக்தியில் அக மகிழ்ந்து போனேன் தீபகா, இனி எல்லாச் செல்வமும் வளமும் உன் இருப்பிடம் தேடி வரும். குருவின் அருளால் திருவின் அருளுக்குப் பாத்திரமாகி விட்டாய்" என்று அருளிச் சென்றார்..சந்தோஷம் மேலிட தம் குருவிடம் அப்படியே நடந்தவற்றைக் கூறினான் தீபகன். என்ன ஆச்சரியம். அத்தனை நாட்கள் நோயின் பிடியில் இருந்த குரு சர்வ லட்சணம் பொருந்திய சரீரம் கொண்டவராக மாறிப்போனார். அவரைப் பிடித்திருந்த நோய் என்பது சுவடு தெரியாமல் ஓடிப்போனது. தீபகனைப் பார்த்து வேத தர்மர், "சிஷ்ய லட்சணத்துக்கு எடுத்துக்காட்டாய் நீ வாழ்ந்து காட்டிவிட்டாய் தீபகா. இனி இந்தக் கலியுகம் முடியும் வரை உன் புகழ் மங்காது இருக்கும், கலியின் தோஷத்தில் தவிப்பவர்கள்கூடக் குருவின் அருளால் அந்தத் தோஷத்திலிருந்து விடுபடலாம். கல்வி, செல்வம் அனைத்தும் உன்னை வந்தடையும். உன்னை நினைப்பவர்களுக்கு அவரவர்களின் குரு அருளும் திரு அருளும் சேர்ந்தே கிட்டும்" என்று வாழ்த்திச் சென்றார்..தீபகன் காட்டிய வழி நல்வழியன்றோ… குரு சேவையிலும், குரு ஸ்மரணையிலும் மட்டுமே நம் நாட்களை இனி கழிக்க ஆரம்பிப்போம்.