அன்பு வாசகர்களே, பாரதியைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும்போது, பாரதியின் இல்லத்தரசி செல்லம்மாவின் நிலையை எடுத்துரைத்தார். பாரதி போன்ற படைப்பாளிகளுடன் வாழ்வதே ஒரு போராட்டம்தான் என்பதாக அவர் கூறிய கருத்து ஏற்புடையதாகவே இருந்தது. இருந்தாலும், இது பாரதிக்கு மட்டும்தானா? மற்ற எழுத்தாளர்களுக்கும் பொருந்துமா? என்பதை அறிய முற்பட்டு, சில எழுத்தாளர்களின் படைப்புகளோடு அவர்களின் சொந்த வாழ்க்கையினையும் உற்று கவனித்ததில், ஒவ்வொரு எழுத்தாளனின் வாழ்வும் மற்றவரோடு ஒப்பிட முடியாதபடி வெவ்வேறு விதமாக உள்ளது. ‘படைப்பாளிகளோடு வாழ்வது என்பது போராட்டம்தான்’ என்று விமர்சிக்கப்படுவது உண்மைதானா என்பதை அறிய சில எழுத்தாளர்களின் பொது மற்றும் சொந்த வாழ்க்கையையும் உற்றுக் கவனித்ததில் முழுமையாக போராட்டம் என்று சொல்லிட இயலாது. அதில் சோகம், துயரம், இன்பம் ஏன் போராட்டத்தோடு, கொண்டாட்டத்தையும்கூட காண முடிகிறது.எனவே, ‘படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?’ என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக உருவானதே இந்தத் தொடர். படித்து ரசியுங்கள்; உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.பெ.மாடசாமி, உதவி ஆணையாளர் (ஓய்வு).புதுமைப்பித்தன் – கமலா-1“இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகி விடுவாயே...”சேர்ந்தே இருப்பது ‘வறுமையும் புலமையும்...’ “கவிராயர்களுக்கும் தரித்திரத்திற்கும் எக்காலத்திலும் நீங்காத நட்புரிமை உண்டு போலும். தரித்திரமில்லாத கவிராயர் விதிவிலக்கு என்றே கூறிவிடலாம். ஒளவை முதல் பாரதி வரை எல்லாம் தரித்திரத்தின் தவப்புதல்வர்கள்தான். ஒருவேளை இந்த தரித்திரம் மனிதன் மனதில் உதிக்கும் கவிதையுணர்ச்சியை இயக்கும் சாட்டை போலும்” என்கிறார் புதுமைப்பித்தன்.ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்துக்களுக்கும் அவன் வாழ்ந்த காலமே ஒரு களமாக இருப்பது இயல்பாக இருந்தாலும், அவன் வாழ்ந்தது, வாழ நினைத்தது, வாழ முடியாதது அவன் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.சமகால எழுத்தாளர்களின் வரிகளிலிருந்து மாறுபட்டு அவர்கள் தெரிந்துகொள்ள முடியாத, ஏன் தெரிந்துகொள்ள விரும்பாத மக்களின் வலியை வரிகளால் வடித்து, ‘எழுத்துக்கு இலக்கணம் தனக்கென்று ஒரு தலைக்கனம்’ என்று வாழ்ந்த விருத்தாச்சலம் என்ற புதுமைப்பித்தனின் கடைசி மூச்சு வரை அவரோடு பொறுமையாகக் காத்திருந்தது வறுமைதான்.வழக்கம்போல் எல்லா தகப்பனார் போன்றே மகனுக்கு வசதியுள்ள பெண் வேண்டும் என்று விரும்பியபோது, “என்னை விலைக்குக் கொடுப்பதை நான் விரும்பவில்லை” என்றதோடு மட்டுமல்ல, “தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுவே போதும்” என்று எண்ணிய அவருக்கு, அவர் எண்ணம்போல் அவருடைய வாழ்வில் கிடைத்த ஒன்று அவருடைய மனைவி ‘கமலா’தான்.குறும்பு, கொப்பளிக்கும் கிண்டல் பேச்சு, அன்பிற்கு இளகும், நட்பிற்கு உருகும் மனம் படைத்தவர் புதுமைப்பித்தன்.தன் மனைவியும் எழுத வேண்டும் என்று வேண்டி, விரும்பி மனைவியை உற்சாகப்படுத்தியவர் புதுமைப்பித்தன்.“அண்ணா, நீங்க மதினிக்கு ரொம்ப இளக்காரம் கொடுக்கிறீங்க. அவர்கள் வேலையை நீங்க எதுக்கு செய்றீங்க?” என்று தம்பி கேட்டபோது, “பெண்டாட்டியினா நம்ம வீட்டுப் பொழக்கடையில் நிற்கும் கிள்ளுக்கீரையா என்ன?” என்று அந்தப் ‘பித்தன்’ சொல்ல, வாயடைத்து போனான் தம்பி.“தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்ற வித்தியாசம் விரும்பாத கணவன். வறுமையில் சேர்ந்து வாழ முடியாத நிலையில் என்னை தாய் வீட்டுக்கு அனுப்பியபோது, ‘என்னைச் சுற்றிவளைக்கும் தீ நாக்குகள் உன்னையும் பொசுக்கி விடக்கூடாது என்ற பயம்தான் எனக்கு’ என்று குறிப்பிட்டார்” என கமலா குறிப்பிடுகிறார்..தாய் இல்லாத நிலையில் கிடைக்காத அன்பு, மனைவி வந்தபோது கிடைத்தும், அதனை அனுபவிக்க முடியாத நிலையில் துரத்தியது வறுமை. அந்த வறுமையிலும், குடும்ப விவகாரம் மட்டுமல்ல; எழுத்துக்கள், படைப்புகள், கவிதை, கதைகள் பற்றி இரவு இரண்டு மணி வரை கலந்துரையாடி மகிழ்ந்தனர் இருவரும்.தாய் வீட்டிலிருந்த மனைவிக்கு தினமும் ஒரு கடிதத்தின் வாயிலாக ஆறுதல் கூறினார். தன் மனைவிக்கு 28 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை உலகில் வேறு யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை.சுவர் ஓரமாக விரிக்கப்பட்ட ஒரு தாழம்பாயும் ஒரு கூஜா நிறைய தண்ணீரும், திறந்து வைக்கப்பட்ட வெற்றிலை செல்லமும் கையில் எழுதும் பலகையும் பேப்பரும் பேனாவுமாக, இடுப்பில் மட்டும் வேஷ்டியோடு, ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டித் தலையணையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நெற்றியில் வந்துவிழும் தலைமயிரை இடையிடையே கையினால் ஒதுக்கி விட்டுக்கொண்டு, வாய் நிறைய வெற்றிலையோடு தலையைச் சாய்த்து எழுதிக் குவித்த வரிகள்தான் இன்று நாம் வாசிப்பது.‘குழந்தையின் நிலை கவலைக்கிடம்... உடனே புறப்பட்டு வரவும்’ என்று மனைவி அடித்த தந்தியை, ‘தினமணி’ பத்திரிகை அலுவலகத்திலிருந்த புதுமைப்பித்தனிடம் “தந்தி” என்று ஒருவர் கொடுக்கவும், வாங்கிய தந்தியை ஏற்கெனவே வந்திருந்த தந்திகளுக்கு அடியில் வரிசைக்கிரமமாக வைத்துவிட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு வழக்கம்போல் தந்திகளைப் பார்க்கும்போதுதான் அது, மனைவியின் தந்தி என்பது தெரிய வருகிறது. மாசக் கடைசி... செப்புக்காசுகூட கையில் கிடையாது. நண்பர் ஒருவர் 25 ரூபாய் கொடுக்க, சாப்பிட்டு விட்டு போகலாம் என ஓட்டலில் சாப்பிடும்போது, கல்லா அருகே மற்றொரு எழுத்தாளன் பணம் கொடுக்க முடியாது அவமானப்படுவதைப் பார்த்து, “ஓய் ஹோட்டல்காரரே, வார்த்தையை அளந்துபேசும்“ என்று அதட்டி, அந்த எழுத்தாளனுக்கான 22 ரூபாய் கொடுத்த பின்புதான் ஊருக்குப் போகணுமென்கிற நினைப்பே வந்துள்ளது..ஊர் போய் சேர்ந்தவர் கால தாமதத்திற்குக் காரணத்தைக் கூற, “தனக்குப் போகத்தான் தானம்” என்று கமலா சொல்ல, “நானும் பழமொழியிலிருந்து சற்றும் பிறழவில்லையே” என்றார். மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது. “தனக்கு என்பது தன் இனம், தன் இனம் என்றால் எழுத்தாளர் இனம். அதனால்தான் எழுத்தாளனுக்கு உதவினேன்” என்று கூற, இருவருமே சேர்ந்து சிரித்திருக்கிறார்கள்.அவருடைய எழுத்துக்களில் “சாதாரண மனிதர்களை அசாதாரணமாகக் காட்டியிருப்பதைக் காட்டிலும், அசாதாரண மனிதர்களைச் சாதாரணமாக்கி சந்திக்கு இழுத்துவந்து உலவவிட்டு வேடிக்கை பார்த்திருப்பதை உணர முடிகிறது என்று ‘புதுமைப்பித்தன் படைப்புலகம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார் இராம.குருநாதன்.எவரையும் எதையும் சிறுகதை ஆக்கலாம் என்பதிற்கு வித்திட்டவர் புதுமைப்பித்தன். ‘ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று கமலா கேட்டதற்கு, “ஒரு எழுத்தாளனின் பேனாவுக்கு அவன் விரும்புவதை எழுத உரிமை உண்டு. தைரியமிருந்தால் பிரசுரிக்கட்டும். இல்லாவிட்டால் நானே பிரசுரித்துக் கொள்கிறேன்“ என்கிறபோது எழுத்தாளனுக்கே உரிய இறுமாப்பைக் காண முடிகிறது.அறிவியல் மற்றும் இலக்கியம் பற்றி கூறும்போது, “இரண்டும் அவசியமே. அறிவியல் இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும். இலக்கியம் இல்லாவிட்டால் நாம் உணர்ச்சியற்ற யந்திரங்களாகி விடுவோம்” என்கிறார்.“புதுமைப்பித்தன் மகா துணிச்சல் ஆசாமி” என்கிறார் கமலா. நெல்லை, வண்ணாரப்பேட்டையில்தான் திருமணம். நான்கு நாட்களுக்கு முன்னமே பிள்ளை வீட்டினர், பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். வந்த மூன்றாவது நாள் சாயங்காலம் பின்பக்க முற்றத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த மணப்பெண் கமலாவின் கையை யாரோ பிடிக்க திடுக்கிட்டு திரும்பியபோது, ‘பயப்படாதே நாளைக்கு நான்தான் உன் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன்’ என்று கூறியிருக்கிறார் புதுமைப்பித்தன். மணமகளோ அவரைப் பார்த்ததில்லை. ‘அடுத்த நாள் திருமணத்தன்று (புதுமைப்பித்தனே) மணையில் வந்தமர்ந்த பிறகே தனக்கு உயிர் திரும்பி வந்தது’ என்கிறார் கமலா புதுமைப்பித்தன்.அவர் விரும்பியபடி மனைவி கிடைத்ததுபோல், அவர் நம்பியபடி நண்பர்கள் அமையவில்லை என்பது அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வருத்தம்.சினிமாவுக்கு (ராஜமுக்தி) வசனம் எழுதியதில் ஒரு ஆயிரத்தையாவது உடம்பிற்குச் செலவிட்டிருந்தால் தமிழ்த்தாய்க்கு இன்னும் பல படைப்புகள் கிடைத்திருக்கும். அந்தப் பணத்தையும் நண்பர்களுக்கே செலவழித்திருக்கிறார்..தன் மனைவியிடம், “கமலா, கவலைப்படாதே, தைரியத்தைக் கைவிடாதே, மனதைத் தளரவிடாதே. மகள் தினகரியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள். உன் கவலைக்கு அவள்தான் மாற்று மருந்து. உன்னை நல்ல நிலையில் வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். முடிவில் எதிர்பாராத நிலையில் விதி என்னை இப்படிக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் இதைத்தான் நான் உனக்குச் சொல்ல முடியும்” என்று உயிர் பிரியும் வரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.நோய்க்கு உதவி வேண்டி, தமிழ் இலக்கிய உலகிற்கு எழுதிய கடிதத்திற்கு பணம் வருமென்று எதிர்பார்த்தபோது மரணம்தான் வந்தடைந்தது. கணவன் மரணித்துக் கிடந்தபோது கதறிய நிலையில், “இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகி விடுவாயே” என வருந்தினார், விம்மினார் கமலா.“அப்பா பிரிந்தபோது எனக்கு வயது இரண்டு. அவருடைய அன்பை, ஆற்றலை, ஆசையை அறியவைத்து, புரியவைத்து ஆளாக்கிய என் அம்மா எனக்குத் தந்தையுமானார். இன்று இருவருமே இல்லை! ஆனாலும் என்ன?மரணம் வந்து போனாலும்மறைந்தே அவர்கள் போனாலும்இறந்து போனார் அவர்கள் என்றுஎன்றுமே கூட நான் நினைப்பதில்லைஎன் மனத்தே அவர்கள் வாழ்வதினால்”என்று தந்தைக்கே உரிய இறுமாப்போடு உரைக்கிறார் அவரின் மகள் தினகரி.
அன்பு வாசகர்களே, பாரதியைப் பற்றி ஒரு பேச்சாளர் பேசும்போது, பாரதியின் இல்லத்தரசி செல்லம்மாவின் நிலையை எடுத்துரைத்தார். பாரதி போன்ற படைப்பாளிகளுடன் வாழ்வதே ஒரு போராட்டம்தான் என்பதாக அவர் கூறிய கருத்து ஏற்புடையதாகவே இருந்தது. இருந்தாலும், இது பாரதிக்கு மட்டும்தானா? மற்ற எழுத்தாளர்களுக்கும் பொருந்துமா? என்பதை அறிய முற்பட்டு, சில எழுத்தாளர்களின் படைப்புகளோடு அவர்களின் சொந்த வாழ்க்கையினையும் உற்று கவனித்ததில், ஒவ்வொரு எழுத்தாளனின் வாழ்வும் மற்றவரோடு ஒப்பிட முடியாதபடி வெவ்வேறு விதமாக உள்ளது. ‘படைப்பாளிகளோடு வாழ்வது என்பது போராட்டம்தான்’ என்று விமர்சிக்கப்படுவது உண்மைதானா என்பதை அறிய சில எழுத்தாளர்களின் பொது மற்றும் சொந்த வாழ்க்கையையும் உற்றுக் கவனித்ததில் முழுமையாக போராட்டம் என்று சொல்லிட இயலாது. அதில் சோகம், துயரம், இன்பம் ஏன் போராட்டத்தோடு, கொண்டாட்டத்தையும்கூட காண முடிகிறது.எனவே, ‘படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?’ என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக உருவானதே இந்தத் தொடர். படித்து ரசியுங்கள்; உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.பெ.மாடசாமி, உதவி ஆணையாளர் (ஓய்வு).புதுமைப்பித்தன் – கமலா-1“இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகி விடுவாயே...”சேர்ந்தே இருப்பது ‘வறுமையும் புலமையும்...’ “கவிராயர்களுக்கும் தரித்திரத்திற்கும் எக்காலத்திலும் நீங்காத நட்புரிமை உண்டு போலும். தரித்திரமில்லாத கவிராயர் விதிவிலக்கு என்றே கூறிவிடலாம். ஒளவை முதல் பாரதி வரை எல்லாம் தரித்திரத்தின் தவப்புதல்வர்கள்தான். ஒருவேளை இந்த தரித்திரம் மனிதன் மனதில் உதிக்கும் கவிதையுணர்ச்சியை இயக்கும் சாட்டை போலும்” என்கிறார் புதுமைப்பித்தன்.ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்துக்களுக்கும் அவன் வாழ்ந்த காலமே ஒரு களமாக இருப்பது இயல்பாக இருந்தாலும், அவன் வாழ்ந்தது, வாழ நினைத்தது, வாழ முடியாதது அவன் எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.சமகால எழுத்தாளர்களின் வரிகளிலிருந்து மாறுபட்டு அவர்கள் தெரிந்துகொள்ள முடியாத, ஏன் தெரிந்துகொள்ள விரும்பாத மக்களின் வலியை வரிகளால் வடித்து, ‘எழுத்துக்கு இலக்கணம் தனக்கென்று ஒரு தலைக்கனம்’ என்று வாழ்ந்த விருத்தாச்சலம் என்ற புதுமைப்பித்தனின் கடைசி மூச்சு வரை அவரோடு பொறுமையாகக் காத்திருந்தது வறுமைதான்.வழக்கம்போல் எல்லா தகப்பனார் போன்றே மகனுக்கு வசதியுள்ள பெண் வேண்டும் என்று விரும்பியபோது, “என்னை விலைக்குக் கொடுப்பதை நான் விரும்பவில்லை” என்றதோடு மட்டுமல்ல, “தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுவே போதும்” என்று எண்ணிய அவருக்கு, அவர் எண்ணம்போல் அவருடைய வாழ்வில் கிடைத்த ஒன்று அவருடைய மனைவி ‘கமலா’தான்.குறும்பு, கொப்பளிக்கும் கிண்டல் பேச்சு, அன்பிற்கு இளகும், நட்பிற்கு உருகும் மனம் படைத்தவர் புதுமைப்பித்தன்.தன் மனைவியும் எழுத வேண்டும் என்று வேண்டி, விரும்பி மனைவியை உற்சாகப்படுத்தியவர் புதுமைப்பித்தன்.“அண்ணா, நீங்க மதினிக்கு ரொம்ப இளக்காரம் கொடுக்கிறீங்க. அவர்கள் வேலையை நீங்க எதுக்கு செய்றீங்க?” என்று தம்பி கேட்டபோது, “பெண்டாட்டியினா நம்ம வீட்டுப் பொழக்கடையில் நிற்கும் கிள்ளுக்கீரையா என்ன?” என்று அந்தப் ‘பித்தன்’ சொல்ல, வாயடைத்து போனான் தம்பி.“தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்ற வித்தியாசம் விரும்பாத கணவன். வறுமையில் சேர்ந்து வாழ முடியாத நிலையில் என்னை தாய் வீட்டுக்கு அனுப்பியபோது, ‘என்னைச் சுற்றிவளைக்கும் தீ நாக்குகள் உன்னையும் பொசுக்கி விடக்கூடாது என்ற பயம்தான் எனக்கு’ என்று குறிப்பிட்டார்” என கமலா குறிப்பிடுகிறார்..தாய் இல்லாத நிலையில் கிடைக்காத அன்பு, மனைவி வந்தபோது கிடைத்தும், அதனை அனுபவிக்க முடியாத நிலையில் துரத்தியது வறுமை. அந்த வறுமையிலும், குடும்ப விவகாரம் மட்டுமல்ல; எழுத்துக்கள், படைப்புகள், கவிதை, கதைகள் பற்றி இரவு இரண்டு மணி வரை கலந்துரையாடி மகிழ்ந்தனர் இருவரும்.தாய் வீட்டிலிருந்த மனைவிக்கு தினமும் ஒரு கடிதத்தின் வாயிலாக ஆறுதல் கூறினார். தன் மனைவிக்கு 28 பக்கம் கொண்ட ஒரு கடிதத்தை உலகில் வேறு யாரும் எழுதியிருக்க வாய்ப்பில்லை.சுவர் ஓரமாக விரிக்கப்பட்ட ஒரு தாழம்பாயும் ஒரு கூஜா நிறைய தண்ணீரும், திறந்து வைக்கப்பட்ட வெற்றிலை செல்லமும் கையில் எழுதும் பலகையும் பேப்பரும் பேனாவுமாக, இடுப்பில் மட்டும் வேஷ்டியோடு, ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டித் தலையணையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நெற்றியில் வந்துவிழும் தலைமயிரை இடையிடையே கையினால் ஒதுக்கி விட்டுக்கொண்டு, வாய் நிறைய வெற்றிலையோடு தலையைச் சாய்த்து எழுதிக் குவித்த வரிகள்தான் இன்று நாம் வாசிப்பது.‘குழந்தையின் நிலை கவலைக்கிடம்... உடனே புறப்பட்டு வரவும்’ என்று மனைவி அடித்த தந்தியை, ‘தினமணி’ பத்திரிகை அலுவலகத்திலிருந்த புதுமைப்பித்தனிடம் “தந்தி” என்று ஒருவர் கொடுக்கவும், வாங்கிய தந்தியை ஏற்கெனவே வந்திருந்த தந்திகளுக்கு அடியில் வரிசைக்கிரமமாக வைத்துவிட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு வழக்கம்போல் தந்திகளைப் பார்க்கும்போதுதான் அது, மனைவியின் தந்தி என்பது தெரிய வருகிறது. மாசக் கடைசி... செப்புக்காசுகூட கையில் கிடையாது. நண்பர் ஒருவர் 25 ரூபாய் கொடுக்க, சாப்பிட்டு விட்டு போகலாம் என ஓட்டலில் சாப்பிடும்போது, கல்லா அருகே மற்றொரு எழுத்தாளன் பணம் கொடுக்க முடியாது அவமானப்படுவதைப் பார்த்து, “ஓய் ஹோட்டல்காரரே, வார்த்தையை அளந்துபேசும்“ என்று அதட்டி, அந்த எழுத்தாளனுக்கான 22 ரூபாய் கொடுத்த பின்புதான் ஊருக்குப் போகணுமென்கிற நினைப்பே வந்துள்ளது..ஊர் போய் சேர்ந்தவர் கால தாமதத்திற்குக் காரணத்தைக் கூற, “தனக்குப் போகத்தான் தானம்” என்று கமலா சொல்ல, “நானும் பழமொழியிலிருந்து சற்றும் பிறழவில்லையே” என்றார். மனைவிக்கு ஆச்சரியமாக இருந்தது. “தனக்கு என்பது தன் இனம், தன் இனம் என்றால் எழுத்தாளர் இனம். அதனால்தான் எழுத்தாளனுக்கு உதவினேன்” என்று கூற, இருவருமே சேர்ந்து சிரித்திருக்கிறார்கள்.அவருடைய எழுத்துக்களில் “சாதாரண மனிதர்களை அசாதாரணமாகக் காட்டியிருப்பதைக் காட்டிலும், அசாதாரண மனிதர்களைச் சாதாரணமாக்கி சந்திக்கு இழுத்துவந்து உலவவிட்டு வேடிக்கை பார்த்திருப்பதை உணர முடிகிறது என்று ‘புதுமைப்பித்தன் படைப்புலகம்’ என்னும் நூலில் குறிப்பிடுகிறார் இராம.குருநாதன்.எவரையும் எதையும் சிறுகதை ஆக்கலாம் என்பதிற்கு வித்திட்டவர் புதுமைப்பித்தன். ‘ஏன் இப்படி எல்லாம் எழுதுகிறீர்கள்?’ என்று கமலா கேட்டதற்கு, “ஒரு எழுத்தாளனின் பேனாவுக்கு அவன் விரும்புவதை எழுத உரிமை உண்டு. தைரியமிருந்தால் பிரசுரிக்கட்டும். இல்லாவிட்டால் நானே பிரசுரித்துக் கொள்கிறேன்“ என்கிறபோது எழுத்தாளனுக்கே உரிய இறுமாப்பைக் காண முடிகிறது.அறிவியல் மற்றும் இலக்கியம் பற்றி கூறும்போது, “இரண்டும் அவசியமே. அறிவியல் இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும். இலக்கியம் இல்லாவிட்டால் நாம் உணர்ச்சியற்ற யந்திரங்களாகி விடுவோம்” என்கிறார்.“புதுமைப்பித்தன் மகா துணிச்சல் ஆசாமி” என்கிறார் கமலா. நெல்லை, வண்ணாரப்பேட்டையில்தான் திருமணம். நான்கு நாட்களுக்கு முன்னமே பிள்ளை வீட்டினர், பெண் வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். வந்த மூன்றாவது நாள் சாயங்காலம் பின்பக்க முற்றத்தில் தனியாக நின்றுகொண்டிருந்த மணப்பெண் கமலாவின் கையை யாரோ பிடிக்க திடுக்கிட்டு திரும்பியபோது, ‘பயப்படாதே நாளைக்கு நான்தான் உன் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன்’ என்று கூறியிருக்கிறார் புதுமைப்பித்தன். மணமகளோ அவரைப் பார்த்ததில்லை. ‘அடுத்த நாள் திருமணத்தன்று (புதுமைப்பித்தனே) மணையில் வந்தமர்ந்த பிறகே தனக்கு உயிர் திரும்பி வந்தது’ என்கிறார் கமலா புதுமைப்பித்தன்.அவர் விரும்பியபடி மனைவி கிடைத்ததுபோல், அவர் நம்பியபடி நண்பர்கள் அமையவில்லை என்பது அவருக்கு ஏற்பட்ட மிகப் பெரிய வருத்தம்.சினிமாவுக்கு (ராஜமுக்தி) வசனம் எழுதியதில் ஒரு ஆயிரத்தையாவது உடம்பிற்குச் செலவிட்டிருந்தால் தமிழ்த்தாய்க்கு இன்னும் பல படைப்புகள் கிடைத்திருக்கும். அந்தப் பணத்தையும் நண்பர்களுக்கே செலவழித்திருக்கிறார்..தன் மனைவியிடம், “கமலா, கவலைப்படாதே, தைரியத்தைக் கைவிடாதே, மனதைத் தளரவிடாதே. மகள் தினகரியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொள். உன் கவலைக்கு அவள்தான் மாற்று மருந்து. உன்னை நல்ல நிலையில் வைக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். முடிவில் எதிர்பாராத நிலையில் விதி என்னை இப்படிக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் இதைத்தான் நான் உனக்குச் சொல்ல முடியும்” என்று உயிர் பிரியும் வரை பேசிக்கொண்டே இருந்திருக்கிறார்.நோய்க்கு உதவி வேண்டி, தமிழ் இலக்கிய உலகிற்கு எழுதிய கடிதத்திற்கு பணம் வருமென்று எதிர்பார்த்தபோது மரணம்தான் வந்தடைந்தது. கணவன் மரணித்துக் கிடந்தபோது கதறிய நிலையில், “இன்னும் கொஞ்ச நேரத்தில் சாம்பலாகி விடுவாயே” என வருந்தினார், விம்மினார் கமலா.“அப்பா பிரிந்தபோது எனக்கு வயது இரண்டு. அவருடைய அன்பை, ஆற்றலை, ஆசையை அறியவைத்து, புரியவைத்து ஆளாக்கிய என் அம்மா எனக்குத் தந்தையுமானார். இன்று இருவருமே இல்லை! ஆனாலும் என்ன?மரணம் வந்து போனாலும்மறைந்தே அவர்கள் போனாலும்இறந்து போனார் அவர்கள் என்றுஎன்றுமே கூட நான் நினைப்பதில்லைஎன் மனத்தே அவர்கள் வாழ்வதினால்”என்று தந்தைக்கே உரிய இறுமாப்போடு உரைக்கிறார் அவரின் மகள் தினகரி.