கரூரில் வசித்து வருபவர் மை. வஹிதாபானு. சமூக சேவையாளர். வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலும் பணியாற்றி வருகிறார். அவரது முகநூல் பக்கத்தில் ‘வெந்தய இட்லி’ குறித்து படங்களுடன் தகவல்களைப் பதிவு செய்திருந்தார். “அது என்னங்க? வெந்தயக் களி கேள்விப்பட்டு உள்ளோம். அபூர்வமாக வீடுகளில் எப்போதாவது செய்து தருவார்கள். வேண்டா வெறுப்பாக (உடலுக்கு நல்லதுதான்) கொஞ்சம் வெந்தயக் களியினை உள்ளே தள்ளி வைப்போம். இது என்னங்க வெந்தய இட்லி?” எனக் கேட்டிருந்தோம் அவரிடம். “எங்க வீட்டில் நாங்கள் வாரத்துக்கு இரண்டு தடவை வெந்தய இட்லி செய்து சாப்பிட்டு வருகிறோம். உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லது” என்றார் வஹிதாபானு.. வெந்தயம் உடலுக்கு அவ்வளவு நல்லதா?மதுரை சித்தா ஆயுர்வேத மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன் என்பவரிடம் பேசினோம்.“வெந்தய இட்லியா? இதுவரை நான் கேள்விப்படாத உணவு வகையாக உள்ளதே. சபாஷ். அதுவும் நல்லதுதான். வெந்தயம் நம் பாரம்பரிய மூலிகைகளில் ஒன்று. மருத்துவ மூலிகைப் பயன்பாடும் வெந்தயத்தில் அடங்கியுள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட வெந்தயம், உடல் சார்ந்த பிரச்னைகளையும் வியாதிகளையும் போக்க வல்லது. இது ஆண், பெண் இருபாலருக்கும் சிறப்பான மருத்துவ நன்மைகளை அள்ளித் தரக்கூடியது. ஆனால், நம்மில் பலருக்கும் இதன் மகத்துவம் புரிவதில்லை. வெந்தயம் பொதுவாக சர்க்கரை நோய் பிரச்னையைக் குறைக்க வல்லது. மேலும் ஆண், பெண் உடல் சார்ந்து தனித்தனியே இருபாலருக்கும் பலப்பல நன்மைகளைத் தரக் கூடியது வெந்தயம்.வெந்தயத்தில் உள்ள நொதிகள் ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்கிறது. வெந்தயத்தை முறையாக தினமும் உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து, டெஸ்டோஷ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. ஆண்களின் பாலியல் பலவீனங்களை வெந்தயம் சரி செய்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான ஆண்களுக்கு உணவுப் பழக்கம் சரியில்லாததால் அவர்கள் இரைப்பை மற்றும் செரிமானப் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். காலையில் உணவுக்கு முன்பாக அவர்கள் சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டு வந்தால் பல்வேறு இரைப்பைக் கோளாறுகள், அஜீரணம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளில் இருந்து விடுதலை பெறலாம். .வெந்தயம் ஆண்களுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ அதைவிடப் பெண்களுக்கு அதிகமாகவே நன்மைகள் தருகிறது. பெண்கள் பூப்படைதல் தொடங்கி, மாதவிடாய் சுழற்சி பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, கடைசியாக மாதவிடாய் நிற்கும் பருவம் வரை சீராக இயங்கவேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, மிகக் குறைவான ரத்தப்போக்கு, நீடித்த ரத்தப்போக்கு போன்றவை எல்லாமே கர்ப்பப்பை பிரச்னையோடு தொடர்பு கொண்டவையாகும். மாதவிடாயின்போது வயிற்றின் அடிப்புற வலி, பின்புறத்தில் அடிமுதுகு வலி போன்றவை சில பெண்களுக்கு இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் குறைபாடுதான் காரணம். அந்த ஹார்மோன் சுரப்பு சீரானால் கர்ப்பப்பை வலுவாகும். கர்ப்பப்பை பிரச்னைகள் உருவாகாது. இதற்கு வெந்தயம் பெண்களுக்கு மிகச் சிறப்பாக உதவுகிறது.வெந்தயத்தில் இருக்கும் டயாஜினின் என்னும் வேதிப்பொருள் பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சீர் செய்து பல்வேறு கர்ப்பப்பை பிரச்னைகளைச் சீர் செய்கின்றது. கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வெந்தயத்தை விழுங்கச் சொல்வார்கள். பிரசவத்துக்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பூண்டு சேர்த்து வைக்கப்படும் வெந்தயக் குழம்பு சிறந்த பலன் தந்து வருவதாகும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டினைக் குறைக்கவல்லது. இதில் பொட்டாசியமும் இருப்பதால் அதிக ரத்தக்கொதிப்பு, அதிக இதயத் துடிப்பு இரண்டையுமே கட்டுப்படுத்த உதவக் கூடியது. வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்தும். வெந்தயத்தில் சபோனின் என்னும் நார்ச்சத்து உள்ளது. அது நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி பெருங்குடலில் புற்றுநோய் வராமல் காக்கிறது..இனிமேலாவது நம் வீடுகளில் வெந்தய இட்லி செய்து வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிடுவோம்” என்கிறார் மதுரை, சித்தா ஆயுர்வேத மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன்.சரிங்க. “வெந்தய இட்லி” எப்படிங்க தயாரிக்கிறது?“இட்லி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி அரை கிலோ, வெந்தயம் சுமார் ஐம்பது கிராம். இரண்டையும் சேர்த்து ஆறு அல்லது ஏழு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டர் அல்லது மிக்சியில் இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான உப்பு சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை சோடா மாவு கலந்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வெள்ளைத் துணி மீதாக இட்லித் தட்டுக் குழிகளில் ஊற்றி வெந்தவுடன் எடுத்து சுடச்சுட சாப்பிடலாம். வெந்தய இட்லி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி ஒத்து வராது. காரச் சட்னி நல்ல காம்பினேனஷன். நாட்டு சர்க்கரை அல்லது நல்லெண்ணெய் தொட்டுக்கொள்ளலாம். சில ஆண்டுகளாகவே நாங்கள் இதனை வீட்டில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தயாரித்து சாப்பிட்டு வருகிறோம். எங்கள் உடல் நலனுக்குப் பெரிதும் உதவுகிறது வெந்தய இட்லி” என்கிறார் கரூர் வஹிதாபானு.
கரூரில் வசித்து வருபவர் மை. வஹிதாபானு. சமூக சேவையாளர். வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திலும் பணியாற்றி வருகிறார். அவரது முகநூல் பக்கத்தில் ‘வெந்தய இட்லி’ குறித்து படங்களுடன் தகவல்களைப் பதிவு செய்திருந்தார். “அது என்னங்க? வெந்தயக் களி கேள்விப்பட்டு உள்ளோம். அபூர்வமாக வீடுகளில் எப்போதாவது செய்து தருவார்கள். வேண்டா வெறுப்பாக (உடலுக்கு நல்லதுதான்) கொஞ்சம் வெந்தயக் களியினை உள்ளே தள்ளி வைப்போம். இது என்னங்க வெந்தய இட்லி?” எனக் கேட்டிருந்தோம் அவரிடம். “எங்க வீட்டில் நாங்கள் வாரத்துக்கு இரண்டு தடவை வெந்தய இட்லி செய்து சாப்பிட்டு வருகிறோம். உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லது” என்றார் வஹிதாபானு.. வெந்தயம் உடலுக்கு அவ்வளவு நல்லதா?மதுரை சித்தா ஆயுர்வேத மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன் என்பவரிடம் பேசினோம்.“வெந்தய இட்லியா? இதுவரை நான் கேள்விப்படாத உணவு வகையாக உள்ளதே. சபாஷ். அதுவும் நல்லதுதான். வெந்தயம் நம் பாரம்பரிய மூலிகைகளில் ஒன்று. மருத்துவ மூலிகைப் பயன்பாடும் வெந்தயத்தில் அடங்கியுள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட வெந்தயம், உடல் சார்ந்த பிரச்னைகளையும் வியாதிகளையும் போக்க வல்லது. இது ஆண், பெண் இருபாலருக்கும் சிறப்பான மருத்துவ நன்மைகளை அள்ளித் தரக்கூடியது. ஆனால், நம்மில் பலருக்கும் இதன் மகத்துவம் புரிவதில்லை. வெந்தயம் பொதுவாக சர்க்கரை நோய் பிரச்னையைக் குறைக்க வல்லது. மேலும் ஆண், பெண் உடல் சார்ந்து தனித்தனியே இருபாலருக்கும் பலப்பல நன்மைகளைத் தரக் கூடியது வெந்தயம்.வெந்தயத்தில் உள்ள நொதிகள் ஆண்களின் உடல் வலிமையை அதிகரிக்கிறது. வெந்தயத்தை முறையாக தினமும் உட்கொள்வதால் உடலில் உள்ள கொழுப்பு குறைந்து, டெஸ்டோஷ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. ஆண்களின் பாலியல் பலவீனங்களை வெந்தயம் சரி செய்வதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான ஆண்களுக்கு உணவுப் பழக்கம் சரியில்லாததால் அவர்கள் இரைப்பை மற்றும் செரிமானப் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். காலையில் உணவுக்கு முன்பாக அவர்கள் சிறிதளவு வெந்தயம் சாப்பிட்டு வந்தால் பல்வேறு இரைப்பைக் கோளாறுகள், அஜீரணம், வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளில் இருந்து விடுதலை பெறலாம். .வெந்தயம் ஆண்களுக்கு எவ்வளவு நன்மைகள் தருகிறதோ அதைவிடப் பெண்களுக்கு அதிகமாகவே நன்மைகள் தருகிறது. பெண்கள் பூப்படைதல் தொடங்கி, மாதவிடாய் சுழற்சி பிரச்னை, கர்ப்பப்பை பிரச்னை, கடைசியாக மாதவிடாய் நிற்கும் பருவம் வரை சீராக இயங்கவேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, மிகக் குறைவான ரத்தப்போக்கு, நீடித்த ரத்தப்போக்கு போன்றவை எல்லாமே கர்ப்பப்பை பிரச்னையோடு தொடர்பு கொண்டவையாகும். மாதவிடாயின்போது வயிற்றின் அடிப்புற வலி, பின்புறத்தில் அடிமுதுகு வலி போன்றவை சில பெண்களுக்கு இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் குறைபாடுதான் காரணம். அந்த ஹார்மோன் சுரப்பு சீரானால் கர்ப்பப்பை வலுவாகும். கர்ப்பப்பை பிரச்னைகள் உருவாகாது. இதற்கு வெந்தயம் பெண்களுக்கு மிகச் சிறப்பாக உதவுகிறது.வெந்தயத்தில் இருக்கும் டயாஜினின் என்னும் வேதிப்பொருள் பெண்களின் ஹார்மோன் சுரப்பிகளை சீர் செய்து பல்வேறு கர்ப்பப்பை பிரச்னைகளைச் சீர் செய்கின்றது. கிராமங்களில் மாதவிடாய் காலங்களில் வயிற்று வலி வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வெந்தயத்தை விழுங்கச் சொல்வார்கள். பிரசவத்துக்குப் பின்னர் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க பூண்டு சேர்த்து வைக்கப்படும் வெந்தயக் குழம்பு சிறந்த பலன் தந்து வருவதாகும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டினைக் குறைக்கவல்லது. இதில் பொட்டாசியமும் இருப்பதால் அதிக ரத்தக்கொதிப்பு, அதிக இதயத் துடிப்பு இரண்டையுமே கட்டுப்படுத்த உதவக் கூடியது. வெந்தயத்தில் அமினோ அமிலம் உள்ளதால் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரை நோயினைக் கட்டுப்படுத்தும். வெந்தயத்தில் சபோனின் என்னும் நார்ச்சத்து உள்ளது. அது நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி பெருங்குடலில் புற்றுநோய் வராமல் காக்கிறது..இனிமேலாவது நம் வீடுகளில் வெந்தய இட்லி செய்து வாரத்தில் இரண்டு நாட்களாவது சாப்பிடுவோம்” என்கிறார் மதுரை, சித்தா ஆயுர்வேத மருத்துவர் சந்தோஷிமா கார்த்திகேயன்.சரிங்க. “வெந்தய இட்லி” எப்படிங்க தயாரிக்கிறது?“இட்லி அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி அரை கிலோ, வெந்தயம் சுமார் ஐம்பது கிராம். இரண்டையும் சேர்த்து ஆறு அல்லது ஏழு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை கிரைண்டர் அல்லது மிக்சியில் இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான உப்பு சேர்த்து அதனுடன் ஒரு சிட்டிகை சோடா மாவு கலந்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் வெள்ளைத் துணி மீதாக இட்லித் தட்டுக் குழிகளில் ஊற்றி வெந்தவுடன் எடுத்து சுடச்சுட சாப்பிடலாம். வெந்தய இட்லி இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு சாம்பார், தேங்காய் சட்னி ஒத்து வராது. காரச் சட்னி நல்ல காம்பினேனஷன். நாட்டு சர்க்கரை அல்லது நல்லெண்ணெய் தொட்டுக்கொள்ளலாம். சில ஆண்டுகளாகவே நாங்கள் இதனை வீட்டில் வாரத்துக்கு இரண்டு நாட்கள் தயாரித்து சாப்பிட்டு வருகிறோம். எங்கள் உடல் நலனுக்குப் பெரிதும் உதவுகிறது வெந்தய இட்லி” என்கிறார் கரூர் வஹிதாபானு.