ஸ்கந்த சஷ்டி – 30.10.2022- ஆர். மீனலதா, மும்பைஎத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது. மிகவும் பழைமையான ஆய்க்குடி கோயில் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.தனித்துவம் வாய்ந்த ஸ்கந்த சஷ்டி விழா விவரங்கள்:ஏழு நாட்கள் விமரிசையாகக் கொண்டாப்படும் இவ்விழாவிற்கு, தீபாவளிக் மறுநாள் கொடியேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட சில குடும்பங்கள், சமுதாயத்தினரென அனைத்து நாட்களும் அமோகமாக கொண்டாடப்படும்.திருவிழா நாட்களாகிய 4,5,6 மற்றும் 7ஆம் தினங்களில், இரவில் ஸ்வாமி சப்பரத்தில் வீதியுலா வருவதைக் காண, மக்கள் கூட்டம் அலை மோதும்.மற்றக் கோயில்களிலிருப்பதைப் போல 10 – 12 பேர்கள் தூக்கி வரும் சப்பரம் கிடையாது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் ஆய்க்கடி கோயிலின் சப்பரத்தை 100 நபர்களுக்கு மேல் தோளில் சுமந்து வேல்! வேல்! என கரகோஷமிட்டவண்ணம் மேடு – பள்ளம்; ஏற்ற – இறக்கம் கொண்ட நான்கு வீதிகளிலும் பவனிவருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.பாடல்கள்:கோயிலிருந்து ஸ்வாமி சப்பரத்தில் அமர்ந்து வீதியுலா புறப்பட்டு, திரும்ப வரும் வரையில், முருகப் பெருமான் குறித்த பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்கும். குறிப்பாக கே.பி. சுந்தராம்பாள் பாடிய ‘சென்று வா! மகனே!’யில் ஆரம்பித்து, டி.எம். செளந்தரராஜின் ‘வருகின்றான் முருகன்! வருகின்றான்’, ‘முருகா நீ வர வேண்டும்’ போன்ற பல அருமையான பாடல்களின் ஒலிபரப்பு இந்த ஸ்தலத்திற்கே உரித்தானது. பாலமுருகன் எழுந்தருளும் காட்சியினைக் காண்கையில் மெய் சிலிர்க்கும்..பொட்டுக் குழைத்தல்ஐந்தாம் நாள் விழாவன்று இரவில் சிங்க முகன், கஜமுகன்; சூர முகன் (சூரபத்மன்) வேடமிட்ட 3 நபர்கள், கைகளில் குச்சிகள் ஏந்தி, சஷ்டியன்று முருகப்பெருமானை போருக்கு வருமாறு சூளுரைத்து அழைப்பது ‘பொட்டுக்குழைத்தல்’ எனக் கூறப்படுகிறது. இவர்கள் 7 நாட்கள் கடுமையான விரதம் இருப்பார்கள்.சூர சம்ஹாரம்பெரிய வெள்ளிச் சப்பரத்தில் முருகரும், சிறிய வெள்ளிச் சப்பரத்தில் வீரபாகுவும் போருக்கு வருகையில், கிராமத்து இளைஞர்கள், ‘அசுரர்’, ‘ஸ்வாமி’யென இரு தரப்பு பிரிவுகளாக பிரிந்து நிற்பார்கள். வீரபாகு மேற் பார்வையில், போர்க்களத்தில் சண்டையிடுவது போல பாவனை செய்வார்கள்.சிங்க முகன், கஜமுகன், சூரபத்மன் வேடமணிந்து மூவரும் சண்டையிடுவார்கள். ஊரிலுள்ள பெரிய ஆர்ச் அருகே ஸ்வாமியின் சப்பரம் நிற்கும். பூஜை செய்து வைத்திருக்கும் பெரிய வேலை, சூர சம்ஹாரத்திற்காக, கோயிலின் உள்ளே இருந்து மணி மாமா குடும்ப வாரிசு எடுத்துக்கொண்டு ஓடி வருவது பரம்பரை வழக்கமாக உள்ளது. பின்னர் சூரசம்ஹாரம் அற்புதமாக நடைபெறும்..சப்தா வர்ணம்சப்தா வர்ணமெனப்படும் ஏழாம் திருநாளன்று பெரிய சப்பரத்தை சேனைத் தலைவர் சமதாய மண்டபத்தினுள் அதே அளவு சமமான வாயில் வழியே மெதுவாக எடுத்துச் சென்று இறக்கி வைப்பார்கள். அபிஷேகம், ஆராதனை, நாதஸ்வர ஆராதனை ஆகியவை முடித்த பின்னர், மீண்டும் சப்ரத்தை வெளியில் கொண்டுவருவது பெரிய அதிசயமாகும்.எட்டாம் நாள்பாலமுருகர் ஆனதால், திருக்கல்யாண உற்சவம் கிடையாது. சூரசம்ஹாரம் செய்த காரணத்தால், அதன்பிறகு ஆற்றில் நீராடி, அதிகாலையில் ஸ்வாமி கொடியிறக்கத்திற்கு முன்பாக வீதியுலா வருகையில், கீழ அக்ரஹாரத்திலுள்ள ‘நவநீத கிருஷ்ணஸ்வாமி கோயிலின் முன்பு வைத்துவிடுவார்கள். பரம்பரை – பரம்பரையாக வசிக்கும் மந்திரக் கம்பர் குடும்பத்தினர் நாதஸ்வரத்தில் ஊஞ்சல், மல்லாரி போன்றவைகளை வாசித்த பின்னர் நவநீத கிருஷ்ணர் சார்பாக முருகருக்கு மாலை சாற்றப்படும். பின்னர் இருவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்படும் காட்சி காண வேண்டிய தொன்றாகம். வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் திருவிழா நாட்களில் உண்டு.சமூக ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்கந்த சஷ்டி விழா விளங்குகிறது. “வெற்றிவேல் முருகருக்கு அர ஹரோ ஹரா! ஆய்க்குடி பால சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அர ஹரோ ஹரா!”
ஸ்கந்த சஷ்டி – 30.10.2022- ஆர். மீனலதா, மும்பைஎத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும். மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது. மிகவும் பழைமையான ஆய்க்குடி கோயில் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.தனித்துவம் வாய்ந்த ஸ்கந்த சஷ்டி விழா விவரங்கள்:ஏழு நாட்கள் விமரிசையாகக் கொண்டாப்படும் இவ்விழாவிற்கு, தீபாவளிக் மறுநாள் கொடியேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட சில குடும்பங்கள், சமுதாயத்தினரென அனைத்து நாட்களும் அமோகமாக கொண்டாடப்படும்.திருவிழா நாட்களாகிய 4,5,6 மற்றும் 7ஆம் தினங்களில், இரவில் ஸ்வாமி சப்பரத்தில் வீதியுலா வருவதைக் காண, மக்கள் கூட்டம் அலை மோதும்.மற்றக் கோயில்களிலிருப்பதைப் போல 10 – 12 பேர்கள் தூக்கி வரும் சப்பரம் கிடையாது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் ஆய்க்கடி கோயிலின் சப்பரத்தை 100 நபர்களுக்கு மேல் தோளில் சுமந்து வேல்! வேல்! என கரகோஷமிட்டவண்ணம் மேடு – பள்ளம்; ஏற்ற – இறக்கம் கொண்ட நான்கு வீதிகளிலும் பவனிவருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.பாடல்கள்:கோயிலிருந்து ஸ்வாமி சப்பரத்தில் அமர்ந்து வீதியுலா புறப்பட்டு, திரும்ப வரும் வரையில், முருகப் பெருமான் குறித்த பாடல்கள் ஆங்காங்கே ஒலிக்கும். குறிப்பாக கே.பி. சுந்தராம்பாள் பாடிய ‘சென்று வா! மகனே!’யில் ஆரம்பித்து, டி.எம். செளந்தரராஜின் ‘வருகின்றான் முருகன்! வருகின்றான்’, ‘முருகா நீ வர வேண்டும்’ போன்ற பல அருமையான பாடல்களின் ஒலிபரப்பு இந்த ஸ்தலத்திற்கே உரித்தானது. பாலமுருகன் எழுந்தருளும் காட்சியினைக் காண்கையில் மெய் சிலிர்க்கும்..பொட்டுக் குழைத்தல்ஐந்தாம் நாள் விழாவன்று இரவில் சிங்க முகன், கஜமுகன்; சூர முகன் (சூரபத்மன்) வேடமிட்ட 3 நபர்கள், கைகளில் குச்சிகள் ஏந்தி, சஷ்டியன்று முருகப்பெருமானை போருக்கு வருமாறு சூளுரைத்து அழைப்பது ‘பொட்டுக்குழைத்தல்’ எனக் கூறப்படுகிறது. இவர்கள் 7 நாட்கள் கடுமையான விரதம் இருப்பார்கள்.சூர சம்ஹாரம்பெரிய வெள்ளிச் சப்பரத்தில் முருகரும், சிறிய வெள்ளிச் சப்பரத்தில் வீரபாகுவும் போருக்கு வருகையில், கிராமத்து இளைஞர்கள், ‘அசுரர்’, ‘ஸ்வாமி’யென இரு தரப்பு பிரிவுகளாக பிரிந்து நிற்பார்கள். வீரபாகு மேற் பார்வையில், போர்க்களத்தில் சண்டையிடுவது போல பாவனை செய்வார்கள்.சிங்க முகன், கஜமுகன், சூரபத்மன் வேடமணிந்து மூவரும் சண்டையிடுவார்கள். ஊரிலுள்ள பெரிய ஆர்ச் அருகே ஸ்வாமியின் சப்பரம் நிற்கும். பூஜை செய்து வைத்திருக்கும் பெரிய வேலை, சூர சம்ஹாரத்திற்காக, கோயிலின் உள்ளே இருந்து மணி மாமா குடும்ப வாரிசு எடுத்துக்கொண்டு ஓடி வருவது பரம்பரை வழக்கமாக உள்ளது. பின்னர் சூரசம்ஹாரம் அற்புதமாக நடைபெறும்..சப்தா வர்ணம்சப்தா வர்ணமெனப்படும் ஏழாம் திருநாளன்று பெரிய சப்பரத்தை சேனைத் தலைவர் சமதாய மண்டபத்தினுள் அதே அளவு சமமான வாயில் வழியே மெதுவாக எடுத்துச் சென்று இறக்கி வைப்பார்கள். அபிஷேகம், ஆராதனை, நாதஸ்வர ஆராதனை ஆகியவை முடித்த பின்னர், மீண்டும் சப்ரத்தை வெளியில் கொண்டுவருவது பெரிய அதிசயமாகும்.எட்டாம் நாள்பாலமுருகர் ஆனதால், திருக்கல்யாண உற்சவம் கிடையாது. சூரசம்ஹாரம் செய்த காரணத்தால், அதன்பிறகு ஆற்றில் நீராடி, அதிகாலையில் ஸ்வாமி கொடியிறக்கத்திற்கு முன்பாக வீதியுலா வருகையில், கீழ அக்ரஹாரத்திலுள்ள ‘நவநீத கிருஷ்ணஸ்வாமி கோயிலின் முன்பு வைத்துவிடுவார்கள். பரம்பரை – பரம்பரையாக வசிக்கும் மந்திரக் கம்பர் குடும்பத்தினர் நாதஸ்வரத்தில் ஊஞ்சல், மல்லாரி போன்றவைகளை வாசித்த பின்னர் நவநீத கிருஷ்ணர் சார்பாக முருகருக்கு மாலை சாற்றப்படும். பின்னர் இருவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்படும் காட்சி காண வேண்டிய தொன்றாகம். வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் திருவிழா நாட்களில் உண்டு.சமூக ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்கந்த சஷ்டி விழா விளங்குகிறது. “வெற்றிவேல் முருகருக்கு அர ஹரோ ஹரா! ஆய்க்குடி பால சுப்பிரமணிய ஸ்வாமிக்கு அர ஹரோ ஹரா!”