கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியர் வில்லியம் ஸ்டரங் ஜூனியர் (William Strunk jr) 1918ம் ஆண்டு, எலிமன்ட்ஸ் ஆப் ஸ்டைல் (Elements of Style) அதாவது நடையின் அடிப்படைகள் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் எழுத்து நடையை மேம்படுத்த பல்வேறு அருமையாக குறிப்புகளை வெளியிட்டுள்ளார். அது பின்னர், 1959 ம் ஆண்டு வில்லியம் ஸ்டரங்கின் மாணவரான பிரபல எழுத்தாளரான ஈ.பி. ஒயிட் (E.B. White) அவர்களால் விரிவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இன்றும், அது லட்சக்கணக்கில் விற்று வரும் ஒரு புத்தகமாக உள்ளது. கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட 100 தலைசிறந்த ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.அந்தப் புத்தகத்தில் எழுத்து நடையை மேம்படுத்து வதற்கான 10 அடிப்படைகளை எழுத்தாளர் பகிர்கிறார். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவர் ஒரு சிறிய அரைப்பக்க குறிப்பிலிருந்து, ஒரு கடிதத்திலிருந்து, ஒரு பெரிய நாவல் வரை சிறப்பாக எழுத முடியும்..1. பாராக்கள் (பத்திகள்) நடையின் அலகுகள். ஒரு தலைப்பிற்கு ஒரு பாரா; ஒரு கருப்பொருளினைக் குறித்து, கட்டுரை அல்லது கதை எழுதும்போது, அதை, அந்த கருப்பொருள் சம்பந்தப்பட்ட தலைப்புகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு பாராவினை ஒதுக்குவது, படிப்பவர்களுக்கு எளிதாக அமைகிறது. ஒரு பாராவிலிருந்து மற்றொரு பாராவிற்கு நகரும்போதே, அந்த கருப்பொருளின் மற்றொரு கட்டத்திற்கு, வாசகன் நகர்வது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, ஒரு வரலாற்று நிகழ்வினைக் குறித்த கட்டுரை எழுதும்போது, பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்:வரலாற்று நிகழ்வின் பின்புலம்வரலாற்று நிகழ்வின் விவரிப்புவரலாற்று நிகழ்வின் தாக்கம் (இப்படியாக...) 2. விதிப்படி, பாராவின் முதல் வரி தலைப்பு வாக்கியமாக இருக்கவேண்டும். இறுதி வரி, தலைப்பு வாக்கியத்துடன் ஒத்துக்கொண்டு, முடியவேண்டும்; இவ்வாறு ஒரு பாராவினை எழுதும்போது, அந்த தலைப்பினைக் குறித்து நம்மால் நன்றாக எழுத முடிகிறது. பின்வருமாறு, பாரா எழுதப்பட வேண்டும்.வள்ளிக்கு முருகன் தன் மீது காதல் கொள்கிறான் என்பது தெளிவாயிற்று. முருகன் அவளிடம் கூட்டத்தில் தனியாக வந்து பேசினான். அவளை அவனது கண்கள் கூட்டத்தில் தேடின. அவளைக் கண்டதும், அவனது முகம் மலர்ச்சி அடைந்தது. அவளுக்கான பிரத்யேகமான கைப்பட செய்த ஒரு பரிசுப்பெட்டியை நீட்டினான். அந்தப் பரிசுப் பெட்டியில், இதயத்தின் படம் இருந்தது. முருகன் தனது காதலைத் தெரிவிக்கிறான் என்று வள்ளிக்கு தெளிவாகியது. தனது காதலை அவனிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று யோசனைக்குள் ஆழ்ந்தாள்.மேலேயுள்ள பாராவில், வள்ளிக்கு முருகன் மீதான காதல் என்ற தலைப்பு, பின்வரும் வரிகளில் விரிவாக கூறப்பட்டு, இறுதியில் அது நமக்கு ஊர்ஜிதம் ஆகிறது. மேலும், வள்ளியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நமக்கு கதையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. 3. செயல்வினையைப் (active voice) பயன்படுத்துங்கள்; செயல்வினையில் ஒரு கருத்தினை சொல்லும்போது, அது அழுத்தம் திருத்தமாக அமைகிறது. அது நேரடியாக இருக்கிறது.முருகன் வள்ளியுடன் கொடைக்கானல் சென்ற நிகழ்வுகளை அசைப்போட்டான். - செயல் வினைவள்ளியுடன் கொடைக்கானல் சென்ற நிகழ்வுகள் முருகனால் அசை போடப்பட்டன. - செயல்பாட்டு வினைஇதில் முதல் வாக்கியம் செயல்வினையில் உள்ளதால், இன்னும் தெளிவாக , நேரடியாக அமைகிறது. அரிதான சில சமயங்களில் செயல்பாட்டு வினை அவசியமாக இருக்கும். அப்போது பயன்படுத்தப்படலாம்.4. வாக்கியங்களை நேரடியாக அமையுங்கள். சொல்ல வந்தக் கருத்தினை நேரடியாக கூறும்போது, அது தெளிவாகப் புரிகிறது. சுற்றி வளைத்துக் கூறுவது, அயர்ச்சி ஏற்படுத்துகிறது. பொதுவாக, முருகன் வள்ளியைச் சந்திக்க தாமதமாக வருவான் - நேரடியாக எழுதுவதுபொதுவாக, முருகன் வள்ளியைச் சந்திக்க வரும் காலங்கள் பின்தங்கி அமையும். - சுற்றி வளைத்து எழுதுவது சுற்றி வளைத்து எழுதவது, குழப்பத்தை ஏற்படுத்தும். எளிய வார்த்தைகளை பயன்படுத்தி, நேரடியாக எழுதுவது வாசகர்களுக்கு உற்சாகமூட்டும். உதாரணங்கள்:நான் சொல்லவருவது என்னவென்றால் - நான் சொல்கிறேன்நல்லவன் இல்லை - கெட்டவன்கவனமாக இல்லை - அலட்சியமாக இருந்தான் 5. குறிப்பிட்டு, அறுதியிட்டு, ஆணித்தரமாக எழுதுங்கள் ; மேலோட்டமாக எழுதுவது, வாசகர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தும். உங்கள் எழுத்துகள் தெள்ளத் தெளிவாக இருக்கட்டும்.கடந்த சில காலமாகவே, வள்ளிக்கு முருகன் மீது காதல். (கடந்த சில காலம் என்றால் எவ்வளவு காலம்? இது மேலோட்டமாக எழுதுவது)கடந்த ஒரு வாரமாகவே, வள்ளிக்கு முருகன் மீது காதல். (இங்கு தெளிவாக கடந்த ஒரு வாரமாக வள்ளிக்கு காதல் என்பது புரிகிறது.).மற்றுமொரு உதாரணம்;முருகன் அளித்த பரிசைக் கண்டு, வள்ளியின் முகம் மாறியது. (இங்கு மகிழ்ச்சியா, கோபமா என்று தெரியவில்லை.)முருகன் அளித்த பரிசைக் கண்டு, வள்ளி புன்முறுவலித்தாள். (இங்கு வள்ளிக்கு மகிழ்ச்சி என்பது புரிகிறது.) 6. தேவையற்ற வார்த்தைகளைத் தவிருங்கள். ஒரு ஓவியத்தில் எவ்வாறு தேவையற்ற கோடுகள் இல்லையோ, ஒரு இயந்திரத்தில் எவ்வாறு தேவையற்ற பாகங்கள் இல்லையோ, அவ்வாறே உங்களது நடையில் தேவையற்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது,அவன் எப்படிப்பட்ட மனிதன் என்றால் ý - அவன் þஇந்தக் கட்டுரை எத்தகைய தலைப்பு என்றால் ý - இந்தக் கட்டுரை þஇந்தச் செயலுக்கான காரணம் என்னவென்றால் ý - ஏனென்றால் þ இவ்வாறு தேவையற்ற வார்த்தைகளை எடுக்கும் போது, நடை சுருங்கச் சொல்லி, விளங்க வைத்தலாக அமைகிறது. 7. மேலோட்டமான வாக்கியங்களை தொடர்ந்து எழுதாதீர்கள். மேலோட்டமான வாக்கியங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, மேலும், மற்றும் என்று தொடர்ந்து எழுதுவது வாசகர்களுக்கு சலிப்பு தரும். நாம் சொல்ல வந்த விஷயம் சொல்லமுடியாமல் போய் விடலாம். நறுக்கு தெறித்தாற்போல், சுருக்கமாக எழுதவேண்டும்.அவனுக்கு அது எளிமையான ஒன்று, அது எதுவென்றால், நன்றாக சமைப்பது, மேலும், பாத்திரங்களைக் கழுவுவது. ýநன்றாக சமைப்பதும், பாத்திரங்களை கழுவுவதும் அவனுக்கு எளிமையானவை. þ 8. ஒன்றுக்கொன்று சம்பந்தமான விஷயங்களை ஒரே வார்த்தையில் குறிப்பிடுங்கள்; இது, வாசகர்களுக்கு நன்கு புரிய உதவுகிறது. மேலும், படிப்பதற்கு எளிமையாக உள்ளது.அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். (கம்பராமாயணம்)இதற்கு மாறாக, ‘அண்ணல் நோக்கினான். அவள் பார்த்தாள்’ என்று எழுதியிருந்தால், அது எளிமையாக இல்லை. வாசகர்களுக்கு குழப்பத்தை உருவாக்கலாம்.9. இரண்டு சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருங்கள். இவ்வாறு சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருப்பது, நாம் சொல்ல வருவதை சரியாக வாசகர்கள் புரிந்துக் கொள்ள உதவுகிறது.‘பாரதியார், பாஞ்சாலி சபதம் புத்தகத்தில், சூதின் பிரச்னைகளை விவரிக்கிறார்.’ இங்கு பாரதியாரும் சூதின் பிரச்னைகளை விவரிப்பதும் தள்ளி உள்ளன. இது எளிமையாக இல்லை.‘பாஞ்சாலி சபதம் புத்தகத்தில், சூதின் பிரச்னைகளை பாரதியார் விவரிக்கிறார்.’ இங்கு பாரதியார் விவரிப்பது என்ற சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருக்க, படிப்பது எளிதாகிறது. 10. உணர்வுபூர்வமான வார்த்தைகளை வாக்கியத்தின் கடைசியில் வையுங்கள். அப்போது அது தெளிவாக புரியும். வள்ளியின் திருமணம் நிறைவாக நடந்தேறியது, பல்வேறு தடைகள் இருந்தபோதிலும்.இங்கு நிறைவாக நடந்தேறியது என்பது உணர்வுப்பூர்வமான வார்த்தை. அது முன்கூட்டியே இருக்கும்போது, தெளிவாக இல்லை.பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், வள்ளியின் திருமணம் நிறைவாக நடந்தேறியது.இங்கு உணர்வுப்பூர்வமான வார்த்தை இறுதியில் வரும்போது, தெளிவாக உள்ளது.முடிந்தால், இந்தப் புத்தகம் படியுங்கள். நமது எழுத்து நடையை மேம்படுத்த இது உதவும்.
கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பேராசிரியர் வில்லியம் ஸ்டரங் ஜூனியர் (William Strunk jr) 1918ம் ஆண்டு, எலிமன்ட்ஸ் ஆப் ஸ்டைல் (Elements of Style) அதாவது நடையின் அடிப்படைகள் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் எழுத்து நடையை மேம்படுத்த பல்வேறு அருமையாக குறிப்புகளை வெளியிட்டுள்ளார். அது பின்னர், 1959 ம் ஆண்டு வில்லியம் ஸ்டரங்கின் மாணவரான பிரபல எழுத்தாளரான ஈ.பி. ஒயிட் (E.B. White) அவர்களால் விரிவாக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இன்றும், அது லட்சக்கணக்கில் விற்று வரும் ஒரு புத்தகமாக உள்ளது. கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட 100 தலைசிறந்த ஆங்கிலப் புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.அந்தப் புத்தகத்தில் எழுத்து நடையை மேம்படுத்து வதற்கான 10 அடிப்படைகளை எழுத்தாளர் பகிர்கிறார். இவற்றைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவர் ஒரு சிறிய அரைப்பக்க குறிப்பிலிருந்து, ஒரு கடிதத்திலிருந்து, ஒரு பெரிய நாவல் வரை சிறப்பாக எழுத முடியும்..1. பாராக்கள் (பத்திகள்) நடையின் அலகுகள். ஒரு தலைப்பிற்கு ஒரு பாரா; ஒரு கருப்பொருளினைக் குறித்து, கட்டுரை அல்லது கதை எழுதும்போது, அதை, அந்த கருப்பொருள் சம்பந்தப்பட்ட தலைப்புகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு பாராவினை ஒதுக்குவது, படிப்பவர்களுக்கு எளிதாக அமைகிறது. ஒரு பாராவிலிருந்து மற்றொரு பாராவிற்கு நகரும்போதே, அந்த கருப்பொருளின் மற்றொரு கட்டத்திற்கு, வாசகன் நகர்வது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக, ஒரு வரலாற்று நிகழ்வினைக் குறித்த கட்டுரை எழுதும்போது, பின்வருமாறு பிரித்துக் கொள்ளலாம்:வரலாற்று நிகழ்வின் பின்புலம்வரலாற்று நிகழ்வின் விவரிப்புவரலாற்று நிகழ்வின் தாக்கம் (இப்படியாக...) 2. விதிப்படி, பாராவின் முதல் வரி தலைப்பு வாக்கியமாக இருக்கவேண்டும். இறுதி வரி, தலைப்பு வாக்கியத்துடன் ஒத்துக்கொண்டு, முடியவேண்டும்; இவ்வாறு ஒரு பாராவினை எழுதும்போது, அந்த தலைப்பினைக் குறித்து நம்மால் நன்றாக எழுத முடிகிறது. பின்வருமாறு, பாரா எழுதப்பட வேண்டும்.வள்ளிக்கு முருகன் தன் மீது காதல் கொள்கிறான் என்பது தெளிவாயிற்று. முருகன் அவளிடம் கூட்டத்தில் தனியாக வந்து பேசினான். அவளை அவனது கண்கள் கூட்டத்தில் தேடின. அவளைக் கண்டதும், அவனது முகம் மலர்ச்சி அடைந்தது. அவளுக்கான பிரத்யேகமான கைப்பட செய்த ஒரு பரிசுப்பெட்டியை நீட்டினான். அந்தப் பரிசுப் பெட்டியில், இதயத்தின் படம் இருந்தது. முருகன் தனது காதலைத் தெரிவிக்கிறான் என்று வள்ளிக்கு தெளிவாகியது. தனது காதலை அவனிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது என்று யோசனைக்குள் ஆழ்ந்தாள்.மேலேயுள்ள பாராவில், வள்ளிக்கு முருகன் மீதான காதல் என்ற தலைப்பு, பின்வரும் வரிகளில் விரிவாக கூறப்பட்டு, இறுதியில் அது நமக்கு ஊர்ஜிதம் ஆகிறது. மேலும், வள்ளியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் நமக்கு கதையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது. 3. செயல்வினையைப் (active voice) பயன்படுத்துங்கள்; செயல்வினையில் ஒரு கருத்தினை சொல்லும்போது, அது அழுத்தம் திருத்தமாக அமைகிறது. அது நேரடியாக இருக்கிறது.முருகன் வள்ளியுடன் கொடைக்கானல் சென்ற நிகழ்வுகளை அசைப்போட்டான். - செயல் வினைவள்ளியுடன் கொடைக்கானல் சென்ற நிகழ்வுகள் முருகனால் அசை போடப்பட்டன. - செயல்பாட்டு வினைஇதில் முதல் வாக்கியம் செயல்வினையில் உள்ளதால், இன்னும் தெளிவாக , நேரடியாக அமைகிறது. அரிதான சில சமயங்களில் செயல்பாட்டு வினை அவசியமாக இருக்கும். அப்போது பயன்படுத்தப்படலாம்.4. வாக்கியங்களை நேரடியாக அமையுங்கள். சொல்ல வந்தக் கருத்தினை நேரடியாக கூறும்போது, அது தெளிவாகப் புரிகிறது. சுற்றி வளைத்துக் கூறுவது, அயர்ச்சி ஏற்படுத்துகிறது. பொதுவாக, முருகன் வள்ளியைச் சந்திக்க தாமதமாக வருவான் - நேரடியாக எழுதுவதுபொதுவாக, முருகன் வள்ளியைச் சந்திக்க வரும் காலங்கள் பின்தங்கி அமையும். - சுற்றி வளைத்து எழுதுவது சுற்றி வளைத்து எழுதவது, குழப்பத்தை ஏற்படுத்தும். எளிய வார்த்தைகளை பயன்படுத்தி, நேரடியாக எழுதுவது வாசகர்களுக்கு உற்சாகமூட்டும். உதாரணங்கள்:நான் சொல்லவருவது என்னவென்றால் - நான் சொல்கிறேன்நல்லவன் இல்லை - கெட்டவன்கவனமாக இல்லை - அலட்சியமாக இருந்தான் 5. குறிப்பிட்டு, அறுதியிட்டு, ஆணித்தரமாக எழுதுங்கள் ; மேலோட்டமாக எழுதுவது, வாசகர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தும். உங்கள் எழுத்துகள் தெள்ளத் தெளிவாக இருக்கட்டும்.கடந்த சில காலமாகவே, வள்ளிக்கு முருகன் மீது காதல். (கடந்த சில காலம் என்றால் எவ்வளவு காலம்? இது மேலோட்டமாக எழுதுவது)கடந்த ஒரு வாரமாகவே, வள்ளிக்கு முருகன் மீது காதல். (இங்கு தெளிவாக கடந்த ஒரு வாரமாக வள்ளிக்கு காதல் என்பது புரிகிறது.).மற்றுமொரு உதாரணம்;முருகன் அளித்த பரிசைக் கண்டு, வள்ளியின் முகம் மாறியது. (இங்கு மகிழ்ச்சியா, கோபமா என்று தெரியவில்லை.)முருகன் அளித்த பரிசைக் கண்டு, வள்ளி புன்முறுவலித்தாள். (இங்கு வள்ளிக்கு மகிழ்ச்சி என்பது புரிகிறது.) 6. தேவையற்ற வார்த்தைகளைத் தவிருங்கள். ஒரு ஓவியத்தில் எவ்வாறு தேவையற்ற கோடுகள் இல்லையோ, ஒரு இயந்திரத்தில் எவ்வாறு தேவையற்ற பாகங்கள் இல்லையோ, அவ்வாறே உங்களது நடையில் தேவையற்ற வார்த்தைகள் இருக்கக்கூடாது,அவன் எப்படிப்பட்ட மனிதன் என்றால் ý - அவன் þஇந்தக் கட்டுரை எத்தகைய தலைப்பு என்றால் ý - இந்தக் கட்டுரை þஇந்தச் செயலுக்கான காரணம் என்னவென்றால் ý - ஏனென்றால் þ இவ்வாறு தேவையற்ற வார்த்தைகளை எடுக்கும் போது, நடை சுருங்கச் சொல்லி, விளங்க வைத்தலாக அமைகிறது. 7. மேலோட்டமான வாக்கியங்களை தொடர்ந்து எழுதாதீர்கள். மேலோட்டமான வாக்கியங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, மேலும், மற்றும் என்று தொடர்ந்து எழுதுவது வாசகர்களுக்கு சலிப்பு தரும். நாம் சொல்ல வந்த விஷயம் சொல்லமுடியாமல் போய் விடலாம். நறுக்கு தெறித்தாற்போல், சுருக்கமாக எழுதவேண்டும்.அவனுக்கு அது எளிமையான ஒன்று, அது எதுவென்றால், நன்றாக சமைப்பது, மேலும், பாத்திரங்களைக் கழுவுவது. ýநன்றாக சமைப்பதும், பாத்திரங்களை கழுவுவதும் அவனுக்கு எளிமையானவை. þ 8. ஒன்றுக்கொன்று சம்பந்தமான விஷயங்களை ஒரே வார்த்தையில் குறிப்பிடுங்கள்; இது, வாசகர்களுக்கு நன்கு புரிய உதவுகிறது. மேலும், படிப்பதற்கு எளிமையாக உள்ளது.அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். (கம்பராமாயணம்)இதற்கு மாறாக, ‘அண்ணல் நோக்கினான். அவள் பார்த்தாள்’ என்று எழுதியிருந்தால், அது எளிமையாக இல்லை. வாசகர்களுக்கு குழப்பத்தை உருவாக்கலாம்.9. இரண்டு சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருங்கள். இவ்வாறு சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருப்பது, நாம் சொல்ல வருவதை சரியாக வாசகர்கள் புரிந்துக் கொள்ள உதவுகிறது.‘பாரதியார், பாஞ்சாலி சபதம் புத்தகத்தில், சூதின் பிரச்னைகளை விவரிக்கிறார்.’ இங்கு பாரதியாரும் சூதின் பிரச்னைகளை விவரிப்பதும் தள்ளி உள்ளன. இது எளிமையாக இல்லை.‘பாஞ்சாலி சபதம் புத்தகத்தில், சூதின் பிரச்னைகளை பாரதியார் விவரிக்கிறார்.’ இங்கு பாரதியார் விவரிப்பது என்ற சம்பந்தப்பட்ட வார்த்தைகளை அருகருகே வைத்திருக்க, படிப்பது எளிதாகிறது. 10. உணர்வுபூர்வமான வார்த்தைகளை வாக்கியத்தின் கடைசியில் வையுங்கள். அப்போது அது தெளிவாக புரியும். வள்ளியின் திருமணம் நிறைவாக நடந்தேறியது, பல்வேறு தடைகள் இருந்தபோதிலும்.இங்கு நிறைவாக நடந்தேறியது என்பது உணர்வுப்பூர்வமான வார்த்தை. அது முன்கூட்டியே இருக்கும்போது, தெளிவாக இல்லை.பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், வள்ளியின் திருமணம் நிறைவாக நடந்தேறியது.இங்கு உணர்வுப்பூர்வமான வார்த்தை இறுதியில் வரும்போது, தெளிவாக உள்ளது.முடிந்தால், இந்தப் புத்தகம் படியுங்கள். நமது எழுத்து நடையை மேம்படுத்த இது உதவும்.