எல்லாருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதன் மூலம், நமது நிதி பிரச்னைகளிலிருந்து வெளியேறி, நிதி சுதந்திரம் அடைய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். கோடீஸ்வரர் ஆவதற்கான பத்து குணாதிசயங்களைப் பார்ப்போம். 1. வரவிற்குள்ளாக செலவு செய்து வாழ்வது:செலவினைக் கட்டுக்குள்ளாக வைத்திருந்தால் மட்டுமே ஒருவரால் கோடீஸ்வரர் ஆக முடியும். எந்த ஒரு கோடீஸ்வரரும் சிக்கனம் இன்றி உருவாகவில்லை.இதனைத்தான் திருக்குறளில் கூட, திருவள்ளுவர் கூறுகிறார்.ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. - 478பொருள்: வருமானம் அளவில் சிறியதாக இருப்பினும், செலவினம் பெரிதாகாத போது கேடு இல்லை.உதாரணமாக, உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, வாரன் பபெட் 1958ம் ஆண்டு வாங்கிய வீட்டிலேயே இன்னும் வசிக்கிறார். எவ்வளவோ கோடீஸ்வரர் ஆன பின்பும் கூட, அவர் வீடு மாறவில்லை. சிக்கனமாக வாழ்ந்து வருகிறார். 2. பொறுமையாக இருப்பது:கோடீஸ்வரர் ஆவதற்குப் பொறுமை வேண்டும். எந்த ஒரு பணக்காரரும் முதலீட்டினை செய்தபின்பு, அதனை ஒரு விதையினை தண்ணீர் உற்றி, உரமிட்டு காப்பது போல், காப்பாற்றி, போஷித்து, பொறுமையாக முதலீட்டினை வளர விடுகின்றனர். அடிக்கடி அந்த முதலீட்டு விதையினை மறுபடி மறுபடி எடுத்துப் பார்த்து, அதனுடைய வேரின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை..உதாரணமாக, 1958ம் ஆண்டு முதல் முதலீடுகள் செய்த வாரன் பபெட்டின் முதலீடுகளின் பெரிய பலன்கள் 1982ம் ஆண்டுக்குப் பிறகுதான் வரத் தொடங்கின. இத்தகைய பெரிய பலன்களைப் பெறுவதற்கு அவர் சில தசாப்தங்களைப் பொறுமையாகக் கடக்க வேண்டியிருந்தது. 3. கடன் வாங்காமல் இருப்பது:கடன் என்பது மோசமான எஜமானன். கடன்களில் மாட்டிக்கொண்ட ஒருவருக்கு, கடனை விட்டு வெளியே வருவதே பெரும்பாடாக இருக்கும்போது, கோடீஸ்வரர் ஆவதென்பது இன்னும் கடினமாகிறது. இது படுங்குழிக்குள் இருந்துகொண்டு, எவரெஸ்ட் மலை ஏற முயற்சிப்பது போல. கோடீஸ்வரர்கள் தனி மனித கடன்களை, கடன் அட்டைகளைத் தவிர்க்கின்றனர். கடனை எந்த ரூபத்திலும் தவிர்க்கிறார்கள். முதலீட்டினை பல்மடங்காக பெருக்கும் வாய்ப்புள்ள தொழிலுக்காகத் தவிர்க்கமுடியாத சமயங்களில் கடன் வாங்குவர். வாங்கிவிட்டால் கூட, அவர்கள் அதனைச் சீக்கிரமாக அடைக்கப் பார்ப்பார்கள்.உதாரணமாக, தொன்மையான சிற்றுந்துகளை ஆயிரக்கணக்கில் சேகரித்து, உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் தொன்மையான சிற்றுந்துகளைக் வைத்திருந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அமெரிக்க கோடீஸ்வரர், லீ மே (Lee May), ஒரே ஒரு கார் மட்டுமே கடன் வாங்கி, வாங்கினார். அந்தக் கடனைக்கூட, உடனே அடைத்துவிட்டார். 4. படிப்பறிவு, உலக அறிவினை வளர்த்துக்கொள்வது -உலகின் நடப்புகளைத் தினம்தினம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமே, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உலக அறிவை வளர்த்துக்கொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தினசரி அன்றைய செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். எல்லா கோடீஸ்வரர்களும் அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இத்தகைய உலக அறிவு, சரியான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.உதாரணமாக, வாரன் பபெட் தினமும் அன்றையச் செய்திகளைக் காலையிலேயே படித்து விடுகிறார். மேலும், தினமும் 80% நேரத்தினை புத்தகம் படிக்க செலவிடுகிறார்..5. பணத்தைப் பெருக்கும் வாய்ப்புகளை, மற்றவர்களைப் போல் அஞ்சாமல், தைரியமாகப் பயன் படுத்திக் கொள்வது. வாய்ப்புகள் வரும்போது, அதனை இருகரம் கொண்டு அள்ளி எடுத்து, அதனைப் பயன்படுத்திக் கொள்பவரே கோடீஸ்வரர் ஆக முடியும்.உதாரணமாக, அமெரிக்க பங்கு சந்தையின் 1988 வீழ்ச்சிக்கு பின்பு, எல்லாரும் அஞ்சியபோது, வாரன் பபெட் அஞ்சாமல் கோக்க கோலாவில், மிகவும் அதிகமாக முதலீடு செய்தார். பின்னர், அது அவருக்கு 1750% மேலாக லாபத்தினைக் கொடுத்துள்ளது. 6.கூட்டு வட்டியின் மகத்துவத்தினைப் பயன்படுத்திக் கொள்வது-கூட்டுவட்டியின் பயனை அடைய சீக்கிரமாக முதலீடு செய்து, நீண்ட காலம் பணத்தினை வளர விடுவது அவசியம். நடுவில் பணத்தினை எடுப்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்குச் சமமானது. கூட்டு வட்டியில் காலம் செல்ல செல்ல, பணம் இரட்டிப்பாகும் காலங்கள் குறைந்துக்கொண்டே செல்லும்.கூட்டு வட்டியின் பயனைப் பெற, சீக்கிரமாக முதலீடு தொடங்கி, தொடர்ந்து செய்து வர வேண்டும். 7. முதலீட்டுக்கு பிறகே செலவுகள் என இருப்பது-எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சேமிக்கிறோம். எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். கோடீஸ்வரர்கள் தங்களது முதலீடுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் வாழ்க்கையை நடத்துவர். மாதம் 75% - 80% சம்பளத்தில் சேமித்து, முதலீடு செய்பவர்கள் கூட உள்ளார்கள்..உதாரணமாக, வாயிற்காப்போனாகவும், பெட்ரோல் கிடங்கில் சாதாரண வேலை பார்த்த ரொனால்ட் ரீட் (Ronald Reed) என்ற அமெரிக்கர், முதலீட்டால் 8 மில்லியன் டாலர்களாகப் பணத்தைப் பெருக்கியுள்ளார். அவர் வாரம் சம்பாதித்த $50 பணத்தில், $40 டாலர் சேமித்து முதலீடு செய்துள்ளார். 8. கோடீஸ்வரர்கள் தாங்கள் செய்யும் தொழிலை, கடனுக்கு என்று செய்யாமல் அதனை மிகவும் விரும்பி செய்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அதில் மேன்மேலும் விரிவு படுத்துகிறார்கள். அதன் மூலம் தொழிலில் நல்லதொரு லாபத்தைப் பெறுகிறார்கள். பணத்திற்காகத் தொழில் செய்யாமல் அந்தத் தொழிலில் இருக்கும் இன்பத்திற்காக, தொழில் செய்வதால் பணம் பன்மடங்கு பெருகுகிறது. 9. நல்ல ஒரு நட்பு வட்டத்தினை வைத்திருப்பது—கோடீஸ்வரர்கள் தங்களுக்குள்ளே நல்லதொரு நட்பு வட்டத்தினை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். தங்களுடைய பணம் பெருக்கும் உத்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்கள் நேரத்தை வீணாக்கும் வீண் செலவு செய்யும் கூட்டத்தோடு தங்களைச் சேர்த்துக்கொள்வதில்லை..உதாரணமாக, வாரன் பபெட், பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் மிகவும் நட்பாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரது தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். 10. எல்லா கோடீஸ்வரர்களும் ஈகை காரியங்களுக்குத் தாராளமாக பண உதவி செய்கிறார்கள். சமுதாயத்திற்குத் தாங்கள் பட்ட கடனை மறுபடி செலுத்துகிறார்கள். ஈகை செய்வதன் மூலம் அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்து அத்தகைய மன மகிழ்ச்சியானது அவர் களுடைய வாழ்க்கையில் எல்லா அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது. அவர்களது தொழில் வீறு கொண்டு நடை போடுகிறது.உதாரணமாக, வாரன் பபெட், அசிம் ப்ரேம்ஜி போன்ற கோடீஸ்வரர்கள் தங்களது சொத்தின் பெரும் பகுதியை அறக்கட்டளைக்களுக்கு ஒதுக்கி, சமூகத்திற்கான ஈகைக்கு பணம் தாராளமாக கொடுக்கிறார்கள்.
எல்லாருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதன் மூலம், நமது நிதி பிரச்னைகளிலிருந்து வெளியேறி, நிதி சுதந்திரம் அடைய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். கோடீஸ்வரர் ஆவதற்கான பத்து குணாதிசயங்களைப் பார்ப்போம். 1. வரவிற்குள்ளாக செலவு செய்து வாழ்வது:செலவினைக் கட்டுக்குள்ளாக வைத்திருந்தால் மட்டுமே ஒருவரால் கோடீஸ்வரர் ஆக முடியும். எந்த ஒரு கோடீஸ்வரரும் சிக்கனம் இன்றி உருவாகவில்லை.இதனைத்தான் திருக்குறளில் கூட, திருவள்ளுவர் கூறுகிறார்.ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை. - 478பொருள்: வருமானம் அளவில் சிறியதாக இருப்பினும், செலவினம் பெரிதாகாத போது கேடு இல்லை.உதாரணமாக, உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, வாரன் பபெட் 1958ம் ஆண்டு வாங்கிய வீட்டிலேயே இன்னும் வசிக்கிறார். எவ்வளவோ கோடீஸ்வரர் ஆன பின்பும் கூட, அவர் வீடு மாறவில்லை. சிக்கனமாக வாழ்ந்து வருகிறார். 2. பொறுமையாக இருப்பது:கோடீஸ்வரர் ஆவதற்குப் பொறுமை வேண்டும். எந்த ஒரு பணக்காரரும் முதலீட்டினை செய்தபின்பு, அதனை ஒரு விதையினை தண்ணீர் உற்றி, உரமிட்டு காப்பது போல், காப்பாற்றி, போஷித்து, பொறுமையாக முதலீட்டினை வளர விடுகின்றனர். அடிக்கடி அந்த முதலீட்டு விதையினை மறுபடி மறுபடி எடுத்துப் பார்த்து, அதனுடைய வேரின் வளர்ச்சியைத் தடுப்பதில்லை..உதாரணமாக, 1958ம் ஆண்டு முதல் முதலீடுகள் செய்த வாரன் பபெட்டின் முதலீடுகளின் பெரிய பலன்கள் 1982ம் ஆண்டுக்குப் பிறகுதான் வரத் தொடங்கின. இத்தகைய பெரிய பலன்களைப் பெறுவதற்கு அவர் சில தசாப்தங்களைப் பொறுமையாகக் கடக்க வேண்டியிருந்தது. 3. கடன் வாங்காமல் இருப்பது:கடன் என்பது மோசமான எஜமானன். கடன்களில் மாட்டிக்கொண்ட ஒருவருக்கு, கடனை விட்டு வெளியே வருவதே பெரும்பாடாக இருக்கும்போது, கோடீஸ்வரர் ஆவதென்பது இன்னும் கடினமாகிறது. இது படுங்குழிக்குள் இருந்துகொண்டு, எவரெஸ்ட் மலை ஏற முயற்சிப்பது போல. கோடீஸ்வரர்கள் தனி மனித கடன்களை, கடன் அட்டைகளைத் தவிர்க்கின்றனர். கடனை எந்த ரூபத்திலும் தவிர்க்கிறார்கள். முதலீட்டினை பல்மடங்காக பெருக்கும் வாய்ப்புள்ள தொழிலுக்காகத் தவிர்க்கமுடியாத சமயங்களில் கடன் வாங்குவர். வாங்கிவிட்டால் கூட, அவர்கள் அதனைச் சீக்கிரமாக அடைக்கப் பார்ப்பார்கள்.உதாரணமாக, தொன்மையான சிற்றுந்துகளை ஆயிரக்கணக்கில் சேகரித்து, உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் தொன்மையான சிற்றுந்துகளைக் வைத்திருந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அமெரிக்க கோடீஸ்வரர், லீ மே (Lee May), ஒரே ஒரு கார் மட்டுமே கடன் வாங்கி, வாங்கினார். அந்தக் கடனைக்கூட, உடனே அடைத்துவிட்டார். 4. படிப்பறிவு, உலக அறிவினை வளர்த்துக்கொள்வது -உலகின் நடப்புகளைத் தினம்தினம் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதன் மூலமே, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உலக அறிவை வளர்த்துக்கொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். தினசரி அன்றைய செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். எல்லா கோடீஸ்வரர்களும் அறிவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். இத்தகைய உலக அறிவு, சரியான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுகிறது.உதாரணமாக, வாரன் பபெட் தினமும் அன்றையச் செய்திகளைக் காலையிலேயே படித்து விடுகிறார். மேலும், தினமும் 80% நேரத்தினை புத்தகம் படிக்க செலவிடுகிறார்..5. பணத்தைப் பெருக்கும் வாய்ப்புகளை, மற்றவர்களைப் போல் அஞ்சாமல், தைரியமாகப் பயன் படுத்திக் கொள்வது. வாய்ப்புகள் வரும்போது, அதனை இருகரம் கொண்டு அள்ளி எடுத்து, அதனைப் பயன்படுத்திக் கொள்பவரே கோடீஸ்வரர் ஆக முடியும்.உதாரணமாக, அமெரிக்க பங்கு சந்தையின் 1988 வீழ்ச்சிக்கு பின்பு, எல்லாரும் அஞ்சியபோது, வாரன் பபெட் அஞ்சாமல் கோக்க கோலாவில், மிகவும் அதிகமாக முதலீடு செய்தார். பின்னர், அது அவருக்கு 1750% மேலாக லாபத்தினைக் கொடுத்துள்ளது. 6.கூட்டு வட்டியின் மகத்துவத்தினைப் பயன்படுத்திக் கொள்வது-கூட்டுவட்டியின் பயனை அடைய சீக்கிரமாக முதலீடு செய்து, நீண்ட காலம் பணத்தினை வளர விடுவது அவசியம். நடுவில் பணத்தினை எடுப்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்குச் சமமானது. கூட்டு வட்டியில் காலம் செல்ல செல்ல, பணம் இரட்டிப்பாகும் காலங்கள் குறைந்துக்கொண்டே செல்லும்.கூட்டு வட்டியின் பயனைப் பெற, சீக்கிரமாக முதலீடு தொடங்கி, தொடர்ந்து செய்து வர வேண்டும். 7. முதலீட்டுக்கு பிறகே செலவுகள் என இருப்பது-எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சேமிக்கிறோம். எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம். கோடீஸ்வரர்கள் தங்களது முதலீடுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் வாழ்க்கையை நடத்துவர். மாதம் 75% - 80% சம்பளத்தில் சேமித்து, முதலீடு செய்பவர்கள் கூட உள்ளார்கள்..உதாரணமாக, வாயிற்காப்போனாகவும், பெட்ரோல் கிடங்கில் சாதாரண வேலை பார்த்த ரொனால்ட் ரீட் (Ronald Reed) என்ற அமெரிக்கர், முதலீட்டால் 8 மில்லியன் டாலர்களாகப் பணத்தைப் பெருக்கியுள்ளார். அவர் வாரம் சம்பாதித்த $50 பணத்தில், $40 டாலர் சேமித்து முதலீடு செய்துள்ளார். 8. கோடீஸ்வரர்கள் தாங்கள் செய்யும் தொழிலை, கடனுக்கு என்று செய்யாமல் அதனை மிகவும் விரும்பி செய்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அதில் மேன்மேலும் விரிவு படுத்துகிறார்கள். அதன் மூலம் தொழிலில் நல்லதொரு லாபத்தைப் பெறுகிறார்கள். பணத்திற்காகத் தொழில் செய்யாமல் அந்தத் தொழிலில் இருக்கும் இன்பத்திற்காக, தொழில் செய்வதால் பணம் பன்மடங்கு பெருகுகிறது. 9. நல்ல ஒரு நட்பு வட்டத்தினை வைத்திருப்பது—கோடீஸ்வரர்கள் தங்களுக்குள்ளே நல்லதொரு நட்பு வட்டத்தினை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். தங்களுடைய பணம் பெருக்கும் உத்திகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அவர்கள் நேரத்தை வீணாக்கும் வீண் செலவு செய்யும் கூட்டத்தோடு தங்களைச் சேர்த்துக்கொள்வதில்லை..உதாரணமாக, வாரன் பபெட், பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் மிகவும் நட்பாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரது தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்கள். 10. எல்லா கோடீஸ்வரர்களும் ஈகை காரியங்களுக்குத் தாராளமாக பண உதவி செய்கிறார்கள். சமுதாயத்திற்குத் தாங்கள் பட்ட கடனை மறுபடி செலுத்துகிறார்கள். ஈகை செய்வதன் மூலம் அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்து அத்தகைய மன மகிழ்ச்சியானது அவர் களுடைய வாழ்க்கையில் எல்லா அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது. அவர்களது தொழில் வீறு கொண்டு நடை போடுகிறது.உதாரணமாக, வாரன் பபெட், அசிம் ப்ரேம்ஜி போன்ற கோடீஸ்வரர்கள் தங்களது சொத்தின் பெரும் பகுதியை அறக்கட்டளைக்களுக்கு ஒதுக்கி, சமூகத்திற்கான ஈகைக்கு பணம் தாராளமாக கொடுக்கிறார்கள்.