புகைப்படங்கள் நன்றி; கல்கி கேலரிFacebook வாசகீஸ் பதிவுகள் * புகைப்படம் எடுப்பதைக் கடுமையாக வெறுத்தார் காந்தியடிகள் . ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மனிதர் அவர்தான்.* இந்தியாவில் 53 முக்கிய சாலைகளுக்கும், வெளிநாடுகளிலுள்ள 48 சாலைகளுக்கும் காந்தியின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது* முதன்முதலில் 'தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்* 'மகாத்மா' என்று அழைத்தவர் இரவீந்திரநாத் தாகூர்* அமைதிக்கான நோபல் பரிசுக்கு 5 முறை (1937, 1938, 1939, 1947, 1948) காந்தி பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.* நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று காந்தி நம்பினார், ஒவ்வொரு நாளும் சுமார் 18 கி.மீ. வரை அவர் நடப்பாராம். -பி. மஹதி, திருச்சி*********************************************.காந்தியடிகளின் பொன்மொழிகள் * பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும். * தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய தவறு எதுவுமில்லை..* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. * கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். * சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. * செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. * நல்ல நண்பனை விரும்பினால், முதலில் நீ நல்ல நண்பனாய் இரு. * பெண்களே... ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.பி. பாரதி, திருச்சி********************************************* உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள் ஒருநாளும் தனித்து வரமாட்டார்கள் ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போதே அவன் மேதை ஆகிறான். நாளையே இழந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்து விடு. வாழ நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் உன் வாழ்க்கை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்து விடாதே. -நந்தினி கிருஷ்ணன், மதுரை *********************************************.அந்த பெட்டிகள் இல்லையே! * அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்ததே கிடையாது. வெளிநாடுகளுக்கு செல்வதானால் கப்பலில் மட்டுமே செல்வார். உள்ளூர் பயணம் முழுவதும் ரயிலில்தான். அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணம் செய்வார். ஒருமுறை ஒருவர் அண்ணலிடம், "ஏன் எப்போதும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணிக்கிறீர்கள்..?" என்று கேட்டார். அதற்கு காந்திஜி, "என்ன செய்வது..! ரயில்களில் நான்காம் வகுப்பு பெட்டிகள் இல்லையே.." என்றாராம்.-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்********************************************* மகான் வழி நடப்போம்காந்திமகான், நோ்மை ,கண்ணியம், அகிம்சை, இவைகளின் மொத்த உருவம். ,அவர் என் வாழ்க்கையே என் சக்தி என்பாா் !அதே போல தியாக வாழ்க்கை வாழ்ந்து பெரும் சக்தியாக விளங்கினாா், அவாிடம் பிடித்த அம்சம் பணிவான ஆளுமையே. அதோடல்லாமல் அபாிமிதமான மனக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தவா். மேலும் அவருக்குள்ளே அவா் ஒரு புரட்சியாளா். அவரது கொள்கைகள் உலக அளவில் பின்பற்றப்பட்டது, அதற்கு சாட்சி, Living the right என்ற புத்தகமே. அந்த மகான் வழியில் நடப்போம் நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடுவோம். ஜெய்ஹிநத்!!! -நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்********************************************* மிகச் சிறந்த மனிதர் மகாத்மாமகாத்மா காந்தி மிக எளிமையானவர். மனசாட்சியின் குரலுக்கு உண்மையான மதிப்பளித்து, இறைவன் குரலாக அதனை ஏற்று, ஒவ்வொரு வினாடியும் அதற்குக் கீழ்படிந்து நடந்த ஒரே மனிதர் உலகில் மகாத்மா காந்தி மட்டுமே. அதனால்தான், அப்படி ஒரு மனிதர், ரத்தமும், சதையுமாக உலகில் நடமாடினார் என்பதை எதிர்கால சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார், உலகின் புகழ் மிக்க விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன். நடந்து முடிந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், வாழ்ந்து மறைந்த மிகச் சிறந்த முதல் மூன்று மனிதர்களை வரிசைப்படுத்துங்கள் என்று "டைம்" ஆங்கில வார ஏடு, தன் உலகளாவிய வாசகர்களுக்கு, புத்தாயிரம் ஆண்டு பிறக்க இருந்த சமயம் ஒரு போட்டியை அறிவித்தது. அதன் உலக வாசகர்கள், உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மிகச்சிறந்த மனிதர்களில் முதலிடம் பிடித்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் என்றும், இரண்டாவது மிகச் சிறந்த மனிதர் மகாத்மா காந்தி என்றும் தேர்வு செய்தனர். அதை "டைம்" பத்திரிகை அங்கீகரித்து, வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்த நாற்பத்தி ஐந்தாம் நாள் நான் பிறந்ததால், தேசப்பற்று மிக்க என் தந்தை, எனக்கு 'ஜெயகாந்தி' என்று பெயரிட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன். -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்*********************************************.விலக்குங்கள் இவற்றை... ஏழு அம்சங்களை மோசமான குற்றங்களாக கருதி அவற்றை விலக்க வேண்டும் என காந்தி வலியுறுத்துகிறார். அவை...உழைக்காமல் கிடைக்கும் சொத்துமனசாட்சியில்லாமல் செய்யும் செயலால் கிடைக்கும் சந்தோஷம்நல்ல குணமில்லாமல் கிடைக்கும் அறிவுநெறிமுறையற்ற வர்த்தகம்மனிதாபிமானத்தை நினைக்காத அறிவியல்தியாகம் இல்லாத மத நெறிகள்கொள்கை இல்லாத அரசியல் -மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்*********************************************.காந்தியடிகள் திருநெல்வேலி பயணம்திருநெல்வேலியில் காந்தியடிகள் தங்கியிருந்து சென்றது பலர் தெரியாத ஒரு தகவல். திருநெல்வேலி டவுனில் எங்களது உறவினர் தியாகி சாவடி கூத்தநயினார் சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்தார்.காந்தியடிகள் தங்கிய பொழுது அவருக்காக தயார் செய்யபட்ட , அவர் உபயோகப்படுத்திய கட்டில், கல்வெட்டு தற்பொழுது திருநெல்வேலி பயணத்தின் பொழுது பார்த்து வியந்தேன். அந்த சமயம் காந்தியடிகளுக்கு பிடித்தமான வெள்ளாட்டு பால் , வேர்கடலை சாப்பிடார். அந்த நேரத்தில், காந்தியடிகள், ஆங்கிலேய அரசாங்கம் அனுமதித்த நாள்களைவிட அதிக நாள் அங்கு தங்கியதற்காக தியாகி கூத்த நயினாருக்கு சிறைத்தண்டனை,மற்றும் அபராதம் விதித்தது என்பது கூடுதல் செய்தி திருநெல்வேலி டவுன் சந்தி பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள காந்தி சிலை அருகே அமைந்துள்ள அந்த வீடு இன்னமும் பழமைமாறமல் பாதுகாப்பது நல்ல செய்தி. பின்பு இதே வீட்டிற்கு பன்டிட் ஜவர்கலால் நேரு மற்றும் இந்திரா காந்தியும் வந்து சென்றது கூறிப்பிடதக்கது.காந்தியடிகள் குற்றாலம் அருவியில் குளிக்கச் சென்றபோது, அருவியில் குளிக்க தாழ்த்தப் பட்டோருக்கு அனுமதி மறுக்கப் படும் என்ற விவரம் தெரியவந்த தும், வேதனை அடைந்த காந்திய டிகள் அருவியில் குளிக்காமலேயே திரும்பி விட்டார் என்றும் கூறுவர். -சுந்தரி காந்தி பூந்தமல்லி********************************************* சபர்மதி ஆசிரமம் "இருபது வருடங்களுக்கு முன்பு, நானும், என் கணவரும் அலகாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று இருந்தோம். சபர்மதி ஆற்றின் கரையோரம் அமைதியோடு இருந்த ஆசிரமத்தில், காந்திஜி அவர்கள் நூல் நூற்றிய ராட்டை, அவர் பயன்படுத்திய கண்ணாடி, கடிகாரம் , அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் என அனைத்தையும் அழகிய கண்ணாடி செல்பிள் காட்சி படுத்தி வைத்து உள்ளனர்.அவற்றைப் பார்க்கும்போது மனதில் ஒரு பரவசம். அண்ணல் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் நாமும் உள்ளோம் என்ற எண்ணமே எங்களுக்குள் ஒரு சிலிர்ப்பைத் தந்தது. ஆசிரமத்தில் உள்ள தபால் நிலையத்தில், நாம் போஸ்ட் செய்யும் கடிதத்தில் காந்திஜியை சிறப்பிக்கும் வண்ணமாக, ராட்டை சின்னம் கொண்ட முத்திரையைத் தான் கடிதத்தில் பதிக்கின்றார்கள். இதை அறிந்ததும், நாங்கள் எங்களின் நண்பர்கள் அனைவருக்கும், எங்களுக்கும் அங்கிருந்து கடிதங்களை போஸ்ட் செய்தோம்.இன்றுவரை, அந்த சிறப்பு மிக்க கடிதத்தை சபர்மதியின் நினைவாக வைத்துள்ளேன். என் பேரக்குழந்தைகளுக்கு காட்டி மகிழ்ந்தேன். -பானு பெரியதம்பி, சேலம். *********************************************.என் உள்ளத்தை கவர்ந்த அவரது குணாதிசயங்கள்மோகனதாசர் கல்வி பயின்று வரும் போது 'சிரவண பித்ரு பக்தி நாடகம் என்ற புத்தகத்தை படித்து விட்டு அதில் சிரவணன் என்பவனின் தாயும் ,தந்தையும், குருடர்கள். அவர்கள் தலயாத்திரை செல்ல விரும்பியதால் சிரவணன் ஒரு காவடி கட்டி ஒரு தட்டில் தாயையும் மறுதட்டில் தந்தையையும் வைத்துத் தோளில் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச்சுற்றி வந்தான்.இவ்வாறு சிரவணன் தன் பெற்றோரிடம் காட்டிய பேரன்பை கண்டு வியந்து தாமும் அவனை போலவே பெற்றோர்களிடம் அன்பும், பணிவும் பூண்டொழுக வேண்டும் என்று உறுதி கொண்டது மிகவும் கவர்ந்தது.அரிசந்திரன் நாடகத்தை பார்த்து விட்டு உண்மை பேசுவதில் உறுதியும் தந்தையாரிடம் ஒப்பற்ற மதிப்பும், மரியாதையும், தாயிடம் அளவற்ற அன்பும், பள்ளிப் படிப்பில் ஆர்வமும், ஆசிரியரிடம் பணிவும், இராம ஜெபத்தில் ஒரு நம்பிக்கையும் இளமையிலே மகாத்மா காந்தியிடம் உறுதியாக அமைந்தது என்னை மிகவும் கவர்ந்த குணம் ஆகும்.-வி.கலைமதிசிவகுரு, கோணம்.
புகைப்படங்கள் நன்றி; கல்கி கேலரிFacebook வாசகீஸ் பதிவுகள் * புகைப்படம் எடுப்பதைக் கடுமையாக வெறுத்தார் காந்தியடிகள் . ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்ட மனிதர் அவர்தான்.* இந்தியாவில் 53 முக்கிய சாலைகளுக்கும், வெளிநாடுகளிலுள்ள 48 சாலைகளுக்கும் காந்தியின் பெயர் சூட்டப்பெற்றுள்ளது* முதன்முதலில் 'தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்* 'மகாத்மா' என்று அழைத்தவர் இரவீந்திரநாத் தாகூர்* அமைதிக்கான நோபல் பரிசுக்கு 5 முறை (1937, 1938, 1939, 1947, 1948) காந்தி பரிந்துரைக்கப்பட்டார். பரிசு வழங்கப்படவில்லை. 2006ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது.* நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று காந்தி நம்பினார், ஒவ்வொரு நாளும் சுமார் 18 கி.மீ. வரை அவர் நடப்பாராம். -பி. மஹதி, திருச்சி*********************************************.காந்தியடிகளின் பொன்மொழிகள் * பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும். * தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய தவறு எதுவுமில்லை..* தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல. * கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். * சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. * செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது. * நல்ல நண்பனை விரும்பினால், முதலில் நீ நல்ல நண்பனாய் இரு. * பெண்களே... ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.பி. பாரதி, திருச்சி********************************************* உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள் ஒருநாளும் தனித்து வரமாட்டார்கள் ஒருவனிடம் துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போதே அவன் மேதை ஆகிறான். நாளையே இழந்துவிடுவாய் என்றால் இன்றே வாழ்ந்து விடு. வாழ நாள் நிறைய இருக்கிறது என்றால் கற்றுக் கொண்டே இரு. உன் மனதில் இருக்கும் எண்ணங்கள் தான் உன் வாழ்க்கை மாற்றும் வண்ணங்கள் என்பதை மறந்து விடாதே. -நந்தினி கிருஷ்ணன், மதுரை *********************************************.அந்த பெட்டிகள் இல்லையே! * அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்ததே கிடையாது. வெளிநாடுகளுக்கு செல்வதானால் கப்பலில் மட்டுமே செல்வார். உள்ளூர் பயணம் முழுவதும் ரயிலில்தான். அதுவும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணம் செய்வார். ஒருமுறை ஒருவர் அண்ணலிடம், "ஏன் எப்போதும் மூன்றாம் வகுப்பு பெட்டியிலேயே பயணிக்கிறீர்கள்..?" என்று கேட்டார். அதற்கு காந்திஜி, "என்ன செய்வது..! ரயில்களில் நான்காம் வகுப்பு பெட்டிகள் இல்லையே.." என்றாராம்.-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்********************************************* மகான் வழி நடப்போம்காந்திமகான், நோ்மை ,கண்ணியம், அகிம்சை, இவைகளின் மொத்த உருவம். ,அவர் என் வாழ்க்கையே என் சக்தி என்பாா் !அதே போல தியாக வாழ்க்கை வாழ்ந்து பெரும் சக்தியாக விளங்கினாா், அவாிடம் பிடித்த அம்சம் பணிவான ஆளுமையே. அதோடல்லாமல் அபாிமிதமான மனக்கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்தவா். மேலும் அவருக்குள்ளே அவா் ஒரு புரட்சியாளா். அவரது கொள்கைகள் உலக அளவில் பின்பற்றப்பட்டது, அதற்கு சாட்சி, Living the right என்ற புத்தகமே. அந்த மகான் வழியில் நடப்போம் நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடுவோம். ஜெய்ஹிநத்!!! -நா.புவனாநாகராஜன் செம்பனாா்கோவில்********************************************* மிகச் சிறந்த மனிதர் மகாத்மாமகாத்மா காந்தி மிக எளிமையானவர். மனசாட்சியின் குரலுக்கு உண்மையான மதிப்பளித்து, இறைவன் குரலாக அதனை ஏற்று, ஒவ்வொரு வினாடியும் அதற்குக் கீழ்படிந்து நடந்த ஒரே மனிதர் உலகில் மகாத்மா காந்தி மட்டுமே. அதனால்தான், அப்படி ஒரு மனிதர், ரத்தமும், சதையுமாக உலகில் நடமாடினார் என்பதை எதிர்கால சந்ததியினர் நம்பக்கூட மாட்டார்கள் என்று குறிப்பிட்டார், உலகின் புகழ் மிக்க விஞ்ஞானி, ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன். நடந்து முடிந்த இரண்டாயிரம் ஆண்டுகளில், வாழ்ந்து மறைந்த மிகச் சிறந்த முதல் மூன்று மனிதர்களை வரிசைப்படுத்துங்கள் என்று "டைம்" ஆங்கில வார ஏடு, தன் உலகளாவிய வாசகர்களுக்கு, புத்தாயிரம் ஆண்டு பிறக்க இருந்த சமயம் ஒரு போட்டியை அறிவித்தது. அதன் உலக வாசகர்கள், உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளில் வாழ்ந்த மிகச்சிறந்த மனிதர்களில் முதலிடம் பிடித்தவர், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் என்றும், இரண்டாவது மிகச் சிறந்த மனிதர் மகாத்மா காந்தி என்றும் தேர்வு செய்தனர். அதை "டைம்" பத்திரிகை அங்கீகரித்து, வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இறந்த நாற்பத்தி ஐந்தாம் நாள் நான் பிறந்ததால், தேசப்பற்று மிக்க என் தந்தை, எனக்கு 'ஜெயகாந்தி' என்று பெயரிட்டதை எண்ணி பெருமை கொள்கிறேன். -ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்*********************************************.விலக்குங்கள் இவற்றை... ஏழு அம்சங்களை மோசமான குற்றங்களாக கருதி அவற்றை விலக்க வேண்டும் என காந்தி வலியுறுத்துகிறார். அவை...உழைக்காமல் கிடைக்கும் சொத்துமனசாட்சியில்லாமல் செய்யும் செயலால் கிடைக்கும் சந்தோஷம்நல்ல குணமில்லாமல் கிடைக்கும் அறிவுநெறிமுறையற்ற வர்த்தகம்மனிதாபிமானத்தை நினைக்காத அறிவியல்தியாகம் இல்லாத மத நெறிகள்கொள்கை இல்லாத அரசியல் -மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்*********************************************.காந்தியடிகள் திருநெல்வேலி பயணம்திருநெல்வேலியில் காந்தியடிகள் தங்கியிருந்து சென்றது பலர் தெரியாத ஒரு தகவல். திருநெல்வேலி டவுனில் எங்களது உறவினர் தியாகி சாவடி கூத்தநயினார் சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள பிள்ளையின் வீட்டில் தங்கியிருந்தார்.காந்தியடிகள் தங்கிய பொழுது அவருக்காக தயார் செய்யபட்ட , அவர் உபயோகப்படுத்திய கட்டில், கல்வெட்டு தற்பொழுது திருநெல்வேலி பயணத்தின் பொழுது பார்த்து வியந்தேன். அந்த சமயம் காந்தியடிகளுக்கு பிடித்தமான வெள்ளாட்டு பால் , வேர்கடலை சாப்பிடார். அந்த நேரத்தில், காந்தியடிகள், ஆங்கிலேய அரசாங்கம் அனுமதித்த நாள்களைவிட அதிக நாள் அங்கு தங்கியதற்காக தியாகி கூத்த நயினாருக்கு சிறைத்தண்டனை,மற்றும் அபராதம் விதித்தது என்பது கூடுதல் செய்தி திருநெல்வேலி டவுன் சந்தி பிள்ளையார் கோவில் அருகே அமைந்துள்ள காந்தி சிலை அருகே அமைந்துள்ள அந்த வீடு இன்னமும் பழமைமாறமல் பாதுகாப்பது நல்ல செய்தி. பின்பு இதே வீட்டிற்கு பன்டிட் ஜவர்கலால் நேரு மற்றும் இந்திரா காந்தியும் வந்து சென்றது கூறிப்பிடதக்கது.காந்தியடிகள் குற்றாலம் அருவியில் குளிக்கச் சென்றபோது, அருவியில் குளிக்க தாழ்த்தப் பட்டோருக்கு அனுமதி மறுக்கப் படும் என்ற விவரம் தெரியவந்த தும், வேதனை அடைந்த காந்திய டிகள் அருவியில் குளிக்காமலேயே திரும்பி விட்டார் என்றும் கூறுவர். -சுந்தரி காந்தி பூந்தமல்லி********************************************* சபர்மதி ஆசிரமம் "இருபது வருடங்களுக்கு முன்பு, நானும், என் கணவரும் அலகாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று இருந்தோம். சபர்மதி ஆற்றின் கரையோரம் அமைதியோடு இருந்த ஆசிரமத்தில், காந்திஜி அவர்கள் நூல் நூற்றிய ராட்டை, அவர் பயன்படுத்திய கண்ணாடி, கடிகாரம் , அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் என அனைத்தையும் அழகிய கண்ணாடி செல்பிள் காட்சி படுத்தி வைத்து உள்ளனர்.அவற்றைப் பார்க்கும்போது மனதில் ஒரு பரவசம். அண்ணல் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் நாமும் உள்ளோம் என்ற எண்ணமே எங்களுக்குள் ஒரு சிலிர்ப்பைத் தந்தது. ஆசிரமத்தில் உள்ள தபால் நிலையத்தில், நாம் போஸ்ட் செய்யும் கடிதத்தில் காந்திஜியை சிறப்பிக்கும் வண்ணமாக, ராட்டை சின்னம் கொண்ட முத்திரையைத் தான் கடிதத்தில் பதிக்கின்றார்கள். இதை அறிந்ததும், நாங்கள் எங்களின் நண்பர்கள் அனைவருக்கும், எங்களுக்கும் அங்கிருந்து கடிதங்களை போஸ்ட் செய்தோம்.இன்றுவரை, அந்த சிறப்பு மிக்க கடிதத்தை சபர்மதியின் நினைவாக வைத்துள்ளேன். என் பேரக்குழந்தைகளுக்கு காட்டி மகிழ்ந்தேன். -பானு பெரியதம்பி, சேலம். *********************************************.என் உள்ளத்தை கவர்ந்த அவரது குணாதிசயங்கள்மோகனதாசர் கல்வி பயின்று வரும் போது 'சிரவண பித்ரு பக்தி நாடகம் என்ற புத்தகத்தை படித்து விட்டு அதில் சிரவணன் என்பவனின் தாயும் ,தந்தையும், குருடர்கள். அவர்கள் தலயாத்திரை செல்ல விரும்பியதால் சிரவணன் ஒரு காவடி கட்டி ஒரு தட்டில் தாயையும் மறுதட்டில் தந்தையையும் வைத்துத் தோளில் தூக்கிக் கொண்டு ஊர் ஊராகச்சுற்றி வந்தான்.இவ்வாறு சிரவணன் தன் பெற்றோரிடம் காட்டிய பேரன்பை கண்டு வியந்து தாமும் அவனை போலவே பெற்றோர்களிடம் அன்பும், பணிவும் பூண்டொழுக வேண்டும் என்று உறுதி கொண்டது மிகவும் கவர்ந்தது.அரிசந்திரன் நாடகத்தை பார்த்து விட்டு உண்மை பேசுவதில் உறுதியும் தந்தையாரிடம் ஒப்பற்ற மதிப்பும், மரியாதையும், தாயிடம் அளவற்ற அன்பும், பள்ளிப் படிப்பில் ஆர்வமும், ஆசிரியரிடம் பணிவும், இராம ஜெபத்தில் ஒரு நம்பிக்கையும் இளமையிலே மகாத்மா காந்தியிடம் உறுதியாக அமைந்தது என்னை மிகவும் கவர்ந்த குணம் ஆகும்.-வி.கலைமதிசிவகுரு, கோணம்.