அது ஒரு பாரம்பர்ய உணவைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா. நிபுணத்துவம் வாய்ந்த செப்களும் உணவியல் வல்லுனர்களும் சுவைத்து 2022 ன் சிறந்த பாரம்பர்ய உணவாகத் தேர்ந்தெடுத்தது ஸ்மர்ட்டிகா நிறுவனத்தின் மேங்கோ சிங் எனப்படும் மாங்காய் வடையை. அப்படி என்ன புதுமை இந்த மாங்காய் வடையில் எனும் கேள்வியுடன் இதன் நிறுவனர் காயத்ரி சுந்தரை சந்தித்தோம். “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” மகளாக பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து அதேபோன்ற வசதியான இடத்தில் திருமணம் செய்த ஒரு பெண் சோம்பியிராமல் தனக்கென சுய அடையாளத்தைப் பெரும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் .இந்த வெற்றிக்குப் பின் அவரது இடைவிடாத முயற்சி உழைப்புடன் குடும்ப உறவுகளின் ஈடுபாடும் வழிகாட்டலும் இருப்பதை மனமுவந்து ஒப்புக்கொள்கிறார் சேலத்தில் பிறந்து சென்னையில் வசிக்கும் காயத்ரி சுந்தர்.சாதித்த மகிழ்ச்சியில் வெற்றிப் புன்னகையுடன் நம்மை வரவேற்றார் காயத்ரி.. குடும்பத்தினர் மீதும் சமூகத்தின் மீதும் அன்பும் அக்கறையும் வழிய தனது தொழில் வளர்ந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் காயத்ரி. உங்களைப்பற்றி...? நான் காயத்ரி சுந்தர். சொந்த ஊர் சேலம் இளம்பிள்ளை. தாத்தா கிருஷ்ணசாமி ஊரிலேயே பெரிய தொழிலதிபர். நாற்பது வருசத்துக்கு முன்பே ஊரில் நூறு தறிகளைப் போட்ட பெருமை எங்கள் தாத்தாவுக்கு உண்டு .என் அப்பா செல்வராஜ் அம்மா குமுதா. அப்பாவுடன் பிறந்த பெரியப்பா சித்தப்பா இரண்டு பேர் என எங்கள் குடும்பம் இருபது பேருக்கும் அதிகமான கூட்டுக் குடும்பம் .அப்பாவும் பெரியப்பா கோவிந்தராஜும் சீல் பாக்டரி வைத்திருந்தார்கள். சித்தப்பாக்கள் நரசிம்மன் ஸ்ரீரங்கன் இருவரும்தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் சுடிதார் மெட்டீரியல் கொண்டு வந்தது. என் தாத்தா படிக்க வில்லை என்றாலும் தன் மகன்களைப் படிக்க வைத்தார். அதேபோல் எங்களுக்கும் நல்ல கல்வி தரப்பட்டது. முக்கியமாக, சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்றே வெளியூர்களில் உள்ள கான்வென்டில் படிக்க வைத்தார்கள். நான் ஏற்காட்டில் உள்ள கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். வீட்டின் கடைக்குட்டி பெண் என்பதால் தாத்தா விருப்பத்தின்படி திருமணம் செய்ய முடிவெடுத்து நல்ல மாப்பிள்ளை வந்ததால் திருமணமும் ஆயிற்று. என் அப்பாவுக்கோ என்னை நல்ல மருத்துவராக வேண்டும் எனும் ஆசை இருந்தது. எனக்கும் அந்தக் கனவு இருந்தது. ஆனால் நினைப்பது எல்லாம் நடக்காதே? எனக்குப் படிக்க முடியவில்லை. எனும் குறையைப் போக்க அப்பா திருமணத்துக்கு முன்னே தொலைதூரக் கல்வியாக டெல்லி யுனிவர்சிட்டியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்க இணைத்து விட்டார். சேலத்தில் சுந்தருடன் திருமணம் புகுந்த வீடும் ஜவுளி சார்ந்த தொழில் அதிபர்கள்தான். மாமனார் ராஜசேகர் மாமியார் ஜெயலட்சுமி. என் கணவர் கவர்ந்த ஐ டி பணி புரிந்ததால் திருமணத்துக்குப் பின் லண்டனுக்கு சென்றார் . நானும் என் டிகிரியை முடித்து சேலத்திலேயே இருந்தேன். முதல் பெண் பிறந்தாள்...பின் அவர் துபாய் சென்றதும் குழந்தையுடன் நானும் அவருடன் சென்றேன். தற்போது என் பெரிய பெண் மதுமிதா பட்டப்படிப்பு முடித்துப் பணியிலும் சிறியவள் ரத்திகா பள்ளி இறுதியிலும் உள்ளனர்..எப்படி வந்தது இந்த சுவை மிகுந்த தொழில் ஆர்வம்? முதலில் துபாய் வாழ்க்கை புது அனுபவங்களுடன் சுவாரசியமாகவே இருந்தது. ஆனால், போகப் போக கிராமத்தில் எனக்குக் கிடைத்த சரிவிகித உணவு என் குழந்தைக்கு கிடைக்கவில்லையே என்ற உண்மை உரைத்தது .நான் சிறு வயதில் காலை முதலில் குடிப்பதே உயிர் நீரான இளநீர்தான். பாட்டி அம்மாக்கள் என போட்டி போட்டுக்கொண்டு எங்களின் உணவு விசயத்தில் சத்துள்ளதாக செய்து தருவார்கள். மேட்டூர் மீன், தோட்டத்தில் வளர்த்த நாட்டுக் கோழி, பச்சைப்பசேல் காய்கள் கீரைகள் பழங்கள், கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் போன்றவைகளை உண்ட நினைவுகள் ஏக்கத்தையே தந்தது. அடுப்பில் தோசைக்கு சட்டியை வைத்தபின் கொல்லைக்குப் போய் முடக்கத்தான் கீரையை பறித்து வந்து அதை தோசையில் கலந்து பாட்டி சுட்டதைப் பார்த்து வளர்ந்தவள் நான் .துபாயில் எல்லாமே கிடைத்தாலும் நம் வீட்டுப் பாரம்பரிய உணவுகளை இழந்தது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல், சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருந்து பழகிட்டேன் என்பதால் இங்கு நேரங்கள் வீணாவது போல் தோன்ற ஒரு ஐ டி கம்பெனிக்கு பயிற்சியாளராக பணிக்கு சென்றேன். முதல் பணி என்பதால் ஆர்வத்துடன் சென்றேன். அந்த நேரத்தில் என் மகளை மழலையர் பள்ளியில் விட்டுச் செல்வோம். அப்போது பிரெஞ்சு பிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து வாங்கித் தருவேன். ஆனால் சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட்டு வளர்ந்து இப்போது சத்தில்லாத அயல் நாட்டு உணவை குழந்தைக்குத் தருகிறோமே என்ற குற்ற உணர்வும் எனக்குள் வந்தது. மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்கே வந்தோம் அங்கிருந்த போதே என் இரண்டாவது மகளும் பிறந்து விட்டாள். அவளுக்கு ஆறு மாதம் இருக்கும்போது சென்னைக்கு வந்தோம். இங்கு குழந்தைகள் வளர்ப்பில் நேரம் பிசியாக இருந்தாலும் என் மனதில் ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வம் மட்டும் கனன்று கொண்டே இருந்தது. தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் ஆர்வம் . அப்படிப் பார்த்தபோதுதான் எல்லா உணவுகளிலும் சத்தே இல்லாத ரீபைண்ட் எண்ணையை சேர்த்துவதைப் பார்த்து சோசியல் மீடியாவில் என் கருத்தைப் பதிவிட்டேன் செக்கு எண்ணெய். எள்ளு எண்ணையின் பயன்களையும் விளக்கி . அதைப் பார்த்த ஒருவர் உங்களால் நல்ல எண்ணையை வாங்கித் தர முடியுமா எனக் கேட்க எனக்கு என் ஊரிலிருந்து வரும் செக்கு நல்ல எண்ணையில் ஒரு பங்கை அவருக்குத் தந்தேன். அதுதான் முதல் புள்ளி. அவர் அதை உபயோகித்துப் பார்த்துவிட்டு திரும்ப என்னிடம் கேட்க வாங்கித்தந்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் தொழில் ஆர்வம். அதன் பின் எப்படி வளர்ந்தது?தொழில் என்பதையும் தாண்டி நல்லதையே தருவோம் என்னை சார்ந்த இந்த சமூகத்துக்கு எனும் எண்ணமே எனக்கு இருந்தது. இரண்டு வருடங்கள் எண்ணெய்கள் குறித்த பதிவுகள் விற்பனைகள் என இருந்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி நிறைய பேர் எண்ணெய் விற்கத் துவங்க இனி எண்ணையில் மட்டும் கவனம் செலுத்தாமல் வேறு ஏதாவது செய்யலாமே என யோசித்தேன். இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். என்னதான் பெண்கள் தொழில் செய்யும் ஆர்வத்துடன் இருந்தாலும் அதற்கு ஆதரவு தந்து வழிநடத்திச் செல்லும் பங்கு ஆண்களிடமே உள்ளது. என் அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாய் என் கணவர் இருந்ததே என் மிகப்பெரும் பலம். என் பாட்டி அம்மா அக்கா சித்தி பெரியம்மா புகுந்த வீட்டில் மாமியார் நாத்தானார் என எல்லோரும் சமையலில் பெஸ்ட் என்பதால் அவர்கள் தயாரித்த பாரம்பர்ய மசாலாப் பொருட்களை கேட்டு வாங்கி எண்ணையுடன் தந்தோம். இதற்கும் மதிப்பு இருந்தது .இதை பிராண்டட் செய்தால் பொது சந்தைக்கும் கொண்டு செல்லலாமே என்று தோண உடனே அரசின் உணவு அங்கீகாரத்துடன் ஸ்மர்டிகா (Smartika) எனும் நிறுவனத்தைத் துவங்கினோம்.மாங்காய் வடை செய்யும் எண்ணம் எப்படி வந்தது? தாத்தா அப்பா போன்றவர்களின் தொழில்களைப் பார்த்தே நான் வளர்ந்ததாலோ என்னவோ என் ஆர்வமும் சுய தொழில் மீதே இருந்தது. ஆனாலும் அதிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். புதுமையாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பதப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் பாரம்பரிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன்..என் பாட்டி காசிக்கு சென்று இலந்தப் பழம் சாப்பிடு வதில்லை என்று முடிவு செய்த பின் அதற்கு மாற்றாக மாங்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காய வைத்து சாப்பிடுவார்கள் .அதைப் பார்த்தபோது கிடைத்த ஐடியா தான் இந்த மாங்காய் வடை. உப்பு, காரம், புளிப்புடன் சூப்பராக இருக்கும் இதையே நம் அடையாள மாக்கினால் என்ன என்று நானும் நினைத்துள்ளேன் .ஆனால் .என் பெரியம்மா பெண் ராதா தான் முதலில் இந்த மாங்காய் வடையை செய்யலாம் என ஆலோசனை தந்தார். அவர் சொன்னதும் அதைப்பற்றிக் கேட்ட என் கணவர் ஏன் நாம் இதில் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்று என்னை ஊக்குவித்தார். ருசியும் புதுமை தொழில் போட்டிகள் குறைவு இரண்டு வருடம் கெடாது போன்ற சிறப்புகள் இருக்கவே துணிச்சலாக இதில் நாம் முதலீடு செய்யலாம் என்ற ஐடியா தந்தார். உடனே செயலில் இறங்கினோம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் பிடிக்கும்..இந்த மேங்கோசிங்கிற்கு வாடிக்கையாளர் களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதிலும் ஒரு மைனஸ் இருந்தது. சீசன் முடிந்து விட்டால் மாங்காய் கிடைக்காது. எனவே, வருடம் முழுவதும் கிடைக்கும் படி, மிஷின்களை வைத்து எப்படி இதைத் தயாரிப்பது என நானும் என் கணவரும் நிறைய தேடல்களுடன் இறங்கினோம். இயற்கையான முறையில் ஐந்து நாட்களில் செய்வதை மிஷின்கள் உதவியோடு ஒரே நாளில் எப்படி செய்வது என திட்டமிட்டோம். வெற்றியும் கிடைத்தது. இதன் ருசியை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தந்தனர். 15 பேர் பெரும்பாலும் பெண்கள் கொண்ட யூனிட்டை வைத்து மேங்கோசிங்க் தயாரித்து இங்கும் சிங்கப்பூர் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறோம்,” என்கிறார் காயத்ரி.உங்களுக்கு வந்த பாராட்டுகள்? மக்கள் நல்ல உணவுக்கு ஏங்குவதை என்னால் நன்றாக உணர் முடிகிறது. ஏனெனில் நானும் ஏங்கியதால். என்னிடம் பொருள்களை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் இங்கேதான் வருவார்கள் கண்டம் தாண்டி இருந்தாலும். தங்கள் குழந்தைக்கு வேறு பொருட்கள் கொடுத்தால் ஒத்துக் கொள்வதில்லை என செலவைப் பற்றியும் கவலைப்படாமல் என்னிடம் இருந்து பொருட்களை வாங்குபவர்கள்தான் என் உந்துசக்தி. சத்துமாவு, நெய், பிரண்டைப் பொடி என என் தயாரிப்பு களுக்கு பெரியவர்களுடன் குழந்தை ரசிகர்களும் அதிகம். அதனாலேயே தொடர்ந்து அவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். பாட்டி கால உணவுகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு,” என்கிறார் காயத்ரி..எவ்வித பின்விளைவுகளும் இல்லாத இயற்கை முறையில் இவர் தயாரிக்கும் மாங்காய் வடைகளை கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பயணிகளும் வயது வித்தியாசமின்றி அனைவரும் ருசித்து மகிழலாம் .திரும்ப திரும்ப விரும்பும் வகையில் உள்ளது இதன் சுவை .மாங்காயுடன் ஏலக்காய் நெல்லிக்காய் பேரிச்சை அன்னாசி சுக்கு போன்றவைகளை சேர்த்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் தற்போது தயாரித்துள்ளது சிறப்பு . தான் மட்டுமல்லாமல் தன் உறவுகளையும் தொழிலில் இணைத்து நல்லதொரு மகளாக மனைவியாக, மருமகளாக, தாயாக, சமூகம் மேல் அக்கறை கொண்ட தொழில்முனைவோராக வலம் வருகிறார் காயத்ரி. இப்போது இருபது பெண்களுக்கும் மேல் தன்னிடம் பணியில் இருந்தாலும் நூறு பெண்களுக்காவது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே லட்சியம் என சொல்லும் காயத்ரி சுந்தருக்குப் பாராட்டுகள்.
அது ஒரு பாரம்பர்ய உணவைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கும் விழா. நிபுணத்துவம் வாய்ந்த செப்களும் உணவியல் வல்லுனர்களும் சுவைத்து 2022 ன் சிறந்த பாரம்பர்ய உணவாகத் தேர்ந்தெடுத்தது ஸ்மர்ட்டிகா நிறுவனத்தின் மேங்கோ சிங் எனப்படும் மாங்காய் வடையை. அப்படி என்ன புதுமை இந்த மாங்காய் வடையில் எனும் கேள்வியுடன் இதன் நிறுவனர் காயத்ரி சுந்தரை சந்தித்தோம். “பார்ன் வித் சில்வர் ஸ்பூன்” மகளாக பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து அதேபோன்ற வசதியான இடத்தில் திருமணம் செய்த ஒரு பெண் சோம்பியிராமல் தனக்கென சுய அடையாளத்தைப் பெரும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார் .இந்த வெற்றிக்குப் பின் அவரது இடைவிடாத முயற்சி உழைப்புடன் குடும்ப உறவுகளின் ஈடுபாடும் வழிகாட்டலும் இருப்பதை மனமுவந்து ஒப்புக்கொள்கிறார் சேலத்தில் பிறந்து சென்னையில் வசிக்கும் காயத்ரி சுந்தர்.சாதித்த மகிழ்ச்சியில் வெற்றிப் புன்னகையுடன் நம்மை வரவேற்றார் காயத்ரி.. குடும்பத்தினர் மீதும் சமூகத்தின் மீதும் அன்பும் அக்கறையும் வழிய தனது தொழில் வளர்ந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் காயத்ரி. உங்களைப்பற்றி...? நான் காயத்ரி சுந்தர். சொந்த ஊர் சேலம் இளம்பிள்ளை. தாத்தா கிருஷ்ணசாமி ஊரிலேயே பெரிய தொழிலதிபர். நாற்பது வருசத்துக்கு முன்பே ஊரில் நூறு தறிகளைப் போட்ட பெருமை எங்கள் தாத்தாவுக்கு உண்டு .என் அப்பா செல்வராஜ் அம்மா குமுதா. அப்பாவுடன் பிறந்த பெரியப்பா சித்தப்பா இரண்டு பேர் என எங்கள் குடும்பம் இருபது பேருக்கும் அதிகமான கூட்டுக் குடும்பம் .அப்பாவும் பெரியப்பா கோவிந்தராஜும் சீல் பாக்டரி வைத்திருந்தார்கள். சித்தப்பாக்கள் நரசிம்மன் ஸ்ரீரங்கன் இருவரும்தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் சுடிதார் மெட்டீரியல் கொண்டு வந்தது. என் தாத்தா படிக்க வில்லை என்றாலும் தன் மகன்களைப் படிக்க வைத்தார். அதேபோல் எங்களுக்கும் நல்ல கல்வி தரப்பட்டது. முக்கியமாக, சரளமாக ஆங்கிலம் பேச வேண்டும் என்றே வெளியூர்களில் உள்ள கான்வென்டில் படிக்க வைத்தார்கள். நான் ஏற்காட்டில் உள்ள கான்வென்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். வீட்டின் கடைக்குட்டி பெண் என்பதால் தாத்தா விருப்பத்தின்படி திருமணம் செய்ய முடிவெடுத்து நல்ல மாப்பிள்ளை வந்ததால் திருமணமும் ஆயிற்று. என் அப்பாவுக்கோ என்னை நல்ல மருத்துவராக வேண்டும் எனும் ஆசை இருந்தது. எனக்கும் அந்தக் கனவு இருந்தது. ஆனால் நினைப்பது எல்லாம் நடக்காதே? எனக்குப் படிக்க முடியவில்லை. எனும் குறையைப் போக்க அப்பா திருமணத்துக்கு முன்னே தொலைதூரக் கல்வியாக டெல்லி யுனிவர்சிட்டியில் பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிக்க இணைத்து விட்டார். சேலத்தில் சுந்தருடன் திருமணம் புகுந்த வீடும் ஜவுளி சார்ந்த தொழில் அதிபர்கள்தான். மாமனார் ராஜசேகர் மாமியார் ஜெயலட்சுமி. என் கணவர் கவர்ந்த ஐ டி பணி புரிந்ததால் திருமணத்துக்குப் பின் லண்டனுக்கு சென்றார் . நானும் என் டிகிரியை முடித்து சேலத்திலேயே இருந்தேன். முதல் பெண் பிறந்தாள்...பின் அவர் துபாய் சென்றதும் குழந்தையுடன் நானும் அவருடன் சென்றேன். தற்போது என் பெரிய பெண் மதுமிதா பட்டப்படிப்பு முடித்துப் பணியிலும் சிறியவள் ரத்திகா பள்ளி இறுதியிலும் உள்ளனர்..எப்படி வந்தது இந்த சுவை மிகுந்த தொழில் ஆர்வம்? முதலில் துபாய் வாழ்க்கை புது அனுபவங்களுடன் சுவாரசியமாகவே இருந்தது. ஆனால், போகப் போக கிராமத்தில் எனக்குக் கிடைத்த சரிவிகித உணவு என் குழந்தைக்கு கிடைக்கவில்லையே என்ற உண்மை உரைத்தது .நான் சிறு வயதில் காலை முதலில் குடிப்பதே உயிர் நீரான இளநீர்தான். பாட்டி அம்மாக்கள் என போட்டி போட்டுக்கொண்டு எங்களின் உணவு விசயத்தில் சத்துள்ளதாக செய்து தருவார்கள். மேட்டூர் மீன், தோட்டத்தில் வளர்த்த நாட்டுக் கோழி, பச்சைப்பசேல் காய்கள் கீரைகள் பழங்கள், கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் போன்றவைகளை உண்ட நினைவுகள் ஏக்கத்தையே தந்தது. அடுப்பில் தோசைக்கு சட்டியை வைத்தபின் கொல்லைக்குப் போய் முடக்கத்தான் கீரையை பறித்து வந்து அதை தோசையில் கலந்து பாட்டி சுட்டதைப் பார்த்து வளர்ந்தவள் நான் .துபாயில் எல்லாமே கிடைத்தாலும் நம் வீட்டுப் பாரம்பரிய உணவுகளை இழந்தது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. அது மட்டுமல்லாமல், சின்ன வயசுல இருந்தே துறுதுறுன்னு இருந்து பழகிட்டேன் என்பதால் இங்கு நேரங்கள் வீணாவது போல் தோன்ற ஒரு ஐ டி கம்பெனிக்கு பயிற்சியாளராக பணிக்கு சென்றேன். முதல் பணி என்பதால் ஆர்வத்துடன் சென்றேன். அந்த நேரத்தில் என் மகளை மழலையர் பள்ளியில் விட்டுச் செல்வோம். அப்போது பிரெஞ்சு பிரை போன்ற உணவுகளை ஆர்டர் செய்து வாங்கித் தருவேன். ஆனால் சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட்டு வளர்ந்து இப்போது சத்தில்லாத அயல் நாட்டு உணவை குழந்தைக்குத் தருகிறோமே என்ற குற்ற உணர்வும் எனக்குள் வந்தது. மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்கே வந்தோம் அங்கிருந்த போதே என் இரண்டாவது மகளும் பிறந்து விட்டாள். அவளுக்கு ஆறு மாதம் இருக்கும்போது சென்னைக்கு வந்தோம். இங்கு குழந்தைகள் வளர்ப்பில் நேரம் பிசியாக இருந்தாலும் என் மனதில் ஏதாவது செய்ய வேண்டும் எனும் ஆர்வம் மட்டும் கனன்று கொண்டே இருந்தது. தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதில் ஆர்வம் . அப்படிப் பார்த்தபோதுதான் எல்லா உணவுகளிலும் சத்தே இல்லாத ரீபைண்ட் எண்ணையை சேர்த்துவதைப் பார்த்து சோசியல் மீடியாவில் என் கருத்தைப் பதிவிட்டேன் செக்கு எண்ணெய். எள்ளு எண்ணையின் பயன்களையும் விளக்கி . அதைப் பார்த்த ஒருவர் உங்களால் நல்ல எண்ணையை வாங்கித் தர முடியுமா எனக் கேட்க எனக்கு என் ஊரிலிருந்து வரும் செக்கு நல்ல எண்ணையில் ஒரு பங்கை அவருக்குத் தந்தேன். அதுதான் முதல் புள்ளி. அவர் அதை உபயோகித்துப் பார்த்துவிட்டு திரும்ப என்னிடம் கேட்க வாங்கித்தந்தேன். அப்படி ஆரம்பித்ததுதான் தொழில் ஆர்வம். அதன் பின் எப்படி வளர்ந்தது?தொழில் என்பதையும் தாண்டி நல்லதையே தருவோம் என்னை சார்ந்த இந்த சமூகத்துக்கு எனும் எண்ணமே எனக்கு இருந்தது. இரண்டு வருடங்கள் எண்ணெய்கள் குறித்த பதிவுகள் விற்பனைகள் என இருந்தேன். நல்ல வரவேற்பு இருந்தது. மக்களிடையே விழிப்புணர்வு அதிகமாகி நிறைய பேர் எண்ணெய் விற்கத் துவங்க இனி எண்ணையில் மட்டும் கவனம் செலுத்தாமல் வேறு ஏதாவது செய்யலாமே என யோசித்தேன். இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். என்னதான் பெண்கள் தொழில் செய்யும் ஆர்வத்துடன் இருந்தாலும் அதற்கு ஆதரவு தந்து வழிநடத்திச் செல்லும் பங்கு ஆண்களிடமே உள்ளது. என் அத்தனை முயற்சிகளுக்கும் உறுதுணையாய் என் கணவர் இருந்ததே என் மிகப்பெரும் பலம். என் பாட்டி அம்மா அக்கா சித்தி பெரியம்மா புகுந்த வீட்டில் மாமியார் நாத்தானார் என எல்லோரும் சமையலில் பெஸ்ட் என்பதால் அவர்கள் தயாரித்த பாரம்பர்ய மசாலாப் பொருட்களை கேட்டு வாங்கி எண்ணையுடன் தந்தோம். இதற்கும் மதிப்பு இருந்தது .இதை பிராண்டட் செய்தால் பொது சந்தைக்கும் கொண்டு செல்லலாமே என்று தோண உடனே அரசின் உணவு அங்கீகாரத்துடன் ஸ்மர்டிகா (Smartika) எனும் நிறுவனத்தைத் துவங்கினோம்.மாங்காய் வடை செய்யும் எண்ணம் எப்படி வந்தது? தாத்தா அப்பா போன்றவர்களின் தொழில்களைப் பார்த்தே நான் வளர்ந்ததாலோ என்னவோ என் ஆர்வமும் சுய தொழில் மீதே இருந்தது. ஆனாலும் அதிலும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். புதுமையாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பதப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் பாரம்பரிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்த வேண்டும் என நினைத்தேன்..என் பாட்டி காசிக்கு சென்று இலந்தப் பழம் சாப்பிடு வதில்லை என்று முடிவு செய்த பின் அதற்கு மாற்றாக மாங்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காய வைத்து சாப்பிடுவார்கள் .அதைப் பார்த்தபோது கிடைத்த ஐடியா தான் இந்த மாங்காய் வடை. உப்பு, காரம், புளிப்புடன் சூப்பராக இருக்கும் இதையே நம் அடையாள மாக்கினால் என்ன என்று நானும் நினைத்துள்ளேன் .ஆனால் .என் பெரியம்மா பெண் ராதா தான் முதலில் இந்த மாங்காய் வடையை செய்யலாம் என ஆலோசனை தந்தார். அவர் சொன்னதும் அதைப்பற்றிக் கேட்ட என் கணவர் ஏன் நாம் இதில் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்று என்னை ஊக்குவித்தார். ருசியும் புதுமை தொழில் போட்டிகள் குறைவு இரண்டு வருடம் கெடாது போன்ற சிறப்புகள் இருக்கவே துணிச்சலாக இதில் நாம் முதலீடு செய்யலாம் என்ற ஐடியா தந்தார். உடனே செயலில் இறங்கினோம். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் பிடிக்கும்..இந்த மேங்கோசிங்கிற்கு வாடிக்கையாளர் களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதிலும் ஒரு மைனஸ் இருந்தது. சீசன் முடிந்து விட்டால் மாங்காய் கிடைக்காது. எனவே, வருடம் முழுவதும் கிடைக்கும் படி, மிஷின்களை வைத்து எப்படி இதைத் தயாரிப்பது என நானும் என் கணவரும் நிறைய தேடல்களுடன் இறங்கினோம். இயற்கையான முறையில் ஐந்து நாட்களில் செய்வதை மிஷின்கள் உதவியோடு ஒரே நாளில் எப்படி செய்வது என திட்டமிட்டோம். வெற்றியும் கிடைத்தது. இதன் ருசியை மக்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவு தந்தனர். 15 பேர் பெரும்பாலும் பெண்கள் கொண்ட யூனிட்டை வைத்து மேங்கோசிங்க் தயாரித்து இங்கும் சிங்கப்பூர் துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்து வருகிறோம்,” என்கிறார் காயத்ரி.உங்களுக்கு வந்த பாராட்டுகள்? மக்கள் நல்ல உணவுக்கு ஏங்குவதை என்னால் நன்றாக உணர் முடிகிறது. ஏனெனில் நானும் ஏங்கியதால். என்னிடம் பொருள்களை வாங்கியவர்கள் மீண்டும் மீண்டும் இங்கேதான் வருவார்கள் கண்டம் தாண்டி இருந்தாலும். தங்கள் குழந்தைக்கு வேறு பொருட்கள் கொடுத்தால் ஒத்துக் கொள்வதில்லை என செலவைப் பற்றியும் கவலைப்படாமல் என்னிடம் இருந்து பொருட்களை வாங்குபவர்கள்தான் என் உந்துசக்தி. சத்துமாவு, நெய், பிரண்டைப் பொடி என என் தயாரிப்பு களுக்கு பெரியவர்களுடன் குழந்தை ரசிகர்களும் அதிகம். அதனாலேயே தொடர்ந்து அவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். பாட்டி கால உணவுகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு,” என்கிறார் காயத்ரி..எவ்வித பின்விளைவுகளும் இல்லாத இயற்கை முறையில் இவர் தயாரிக்கும் மாங்காய் வடைகளை கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் பயணிகளும் வயது வித்தியாசமின்றி அனைவரும் ருசித்து மகிழலாம் .திரும்ப திரும்ப விரும்பும் வகையில் உள்ளது இதன் சுவை .மாங்காயுடன் ஏலக்காய் நெல்லிக்காய் பேரிச்சை அன்னாசி சுக்கு போன்றவைகளை சேர்த்து குழந்தைகள் விரும்பும் வண்ணம் தற்போது தயாரித்துள்ளது சிறப்பு . தான் மட்டுமல்லாமல் தன் உறவுகளையும் தொழிலில் இணைத்து நல்லதொரு மகளாக மனைவியாக, மருமகளாக, தாயாக, சமூகம் மேல் அக்கறை கொண்ட தொழில்முனைவோராக வலம் வருகிறார் காயத்ரி. இப்போது இருபது பெண்களுக்கும் மேல் தன்னிடம் பணியில் இருந்தாலும் நூறு பெண்களுக்காவது வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே லட்சியம் என சொல்லும் காயத்ரி சுந்தருக்குப் பாராட்டுகள்.