சேலம் கீதா ரமேஷ்(புதுமை + பழமை) புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே பெட்டியில் அடைபட்டு சிவனே என்று இருக்கும் கண்கவர் பொம்மைகளுக்குக் கொண்டாட்டம்தான். நவராத்திரியின் சக்தி வழிபாட்டுக் காகப் பெண்களும், குழந்தைகளும், பெட்டியில் அடுக்கியுள்ள பழையப் பொம்மைகளுக்குச் சுதந்திரம் தந்து, சுத்தம் செய்து அவற்றை டிங்கரிங் பஞ்சரிங் செய்து, அழகுப்படுத்தி கொலுவில் அடுக்கிக் காண்பவர்களை வியக்க வைப்பது தனி சுகம்தான்.“போன வருஷம் சதுரகிரி மலை செட் போட்டு அசத்தின. இந்த நவராத்திரிக்கு என்ன மாதிரி தீம் பண்ணப் போறம்மா?” போன்ற கேள்விகளையும் “இந்தத் தடவை புதுசா ஏதாவது செய்யணும். யாரும் செய்யாததா இருக்கணும்...” என்று ஆவலுடன் தேடும் பெண்களையும் பார்க்கலாம்.அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக பெருந்தோற்று காரணமாக விருந்தாளிகள் அழைக்காமல், வீட்டோடு நவராத்திரியைக் கொண்டாடியப் பெண்கள் இந்த வருடம் அதி உற்சாகத்துடன் மீண்டும் களம் இறங்கி உள்ளதைக் காணமுடிகிறது..அதில் ஒருவர்தான் கைவினையில் அசத்தும் கீதாவும் ஆன்மிகத்தில் ஆதாரத்துடன் அசத்தும் அவர் கணவர் ரமேஷும். வருடம்தோறும் புதுப்புது கான்செப்ட்டாகத் தங்கள் வீட்டுக் கொலுவை அரும்பாடுபட்டு உருவாக்கு கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் கொலுவைப் பார்த்துவிட்டு வெளியே செல்லும்போது புதியதாக ஒரு ஆன்மிகத் தகவலை அறிந்துகொண்ட மனநிறைவுடன் செல்கிறார்கள்.இந்த வருடம், நாமும் சென்று கொலுவைக் கண்டுகளித்து நவராத்திரி ஸ்பெஷல் பற்றி அவர்களிடமே கேட்டோம். வீடு நிறையப் பொம்மைகளுடன், விருந்தாளிகளும் இருக்க அவர்களுக்கு வயிறார உணவு தந்துக்கொண்டே நம்மிடம் பேசினார் கீதா ரமேஷ்.“கணவரும் நானும் பிறந்து வளர்ந்து இருப்பதே சேலம் செவ்வாய்ப்பேட்டைதான். கணவர் வெள்ளித்தொழில் செய்கிறார். மகன் ரூபேஷ் கல்லூரியிலும், பொண்ணு வைஷ்ணவி பிளஸ் ஒன்னும் படிக்கிறார்கள். கல்யாணம் ஆகி ஆறு வருசமிருக்கும். .அம்மன் வந்து உன் வீட்டுக்கு நான் வருகிறேன் என்று சொல்வது போலவும், நான் பொம்மைகளை அடுக்குவது போலவும் கனவு வந்தது. முதலில் நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், திரும்பத்திரும்ப அதேபோல் கனவு வரவும் கணவரிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் சொல்லி என்ன செய்யலாம்? என்று பேசியதில் நவராத்திரி பொம்மைக்கொலு வைத்தால் என்ன? எனும் ஆர்வம் வந்தது. ஆனால், அதற்கு கணவரைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை. காரணம், தொடர்ந்து பதினொரு நாட்கள் முழுமையான விரதம் இருக்கவேண்டும் என்பதாலும் வீட்டில் இந்தப்பழக்கம் இல்லாததாலும் இது சரிவருமா எனும் கேள்வி? ஆனால், நானும் என் கணவரும் உறுதியாக இருந்தோம்.முதல் வருடம் கொலு பற்றி அதிகம் அறியாத நிலையில் மூன்று படிக்கட்டுகள் வைத்து, வாங்கியிருந்தப் பொம்மைகளை வைத்து வழிபட்டோம். எனக்குக் கைவினைக் கலையில ரொம்ப ஆர்வம். அந்த ஆர்வத்துல இரண்டாம் வருடம் படிக்கட்டுப் பொம்மைகளுடன் சின்னதா இமயமலை செட் வாங்கி வெச்சோம். அப்புறம் எங்களுக்கே ஆர்வம் வந்து, அடுத்த வருடம் இன்னும் பெரிய இமயமலையை உருவாக்கி, அதில் கங்கை உற்பத்தியாவது போன்று கொலுவில் வைத்தோம். இப்படியே ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டுக்கொலு அக்கம்பக்கத்தில் பேமஸ் ஆக ஆரம்பித்து, எல்லோரும் பார்க்க வந்தாங்க. அப்புறம்தான் வருகிறவர்கள் வெறுமனே பொம்மைகளை மட்டும் பார்த்துப் போகாமல் ஏதாவது நல்ல ஆன்மிகச் செய்தியை அவர்களுக்குக் கொலு மூலம் சொன்னால் என்ன எண்ணம் தோன்றியது.அந்த வருடம் பழனி மலை செட் செய்து ரோப் கார், நீர் வீழ்ச்சியையும் சேர்த்தோம். மேலிருந்து விழும் தண்ணீரில் மின்சாரம் தயாரிப்பதுபோல “நீர் மின் நிலையத்தை” யும் வடிவமைத்தோம். ஆன்மிகத்துக்குப் பழனியும் அறிவியலுக்கு நீர் மின் நிலையமும் அமைத்ததை அனைவரும் பாராட்டினார்கள்.கணவர் ரமேஷ் வேதங்களும் படித்தவர் என்பதால் அதிலிருக்கும் விசயங்களை முயற்சி செய்தால் என்ன? என்று இருவரும் யோசித்தோம்...” கீதா நிறுத்தினார் “என் நெருங்கிய நண்பர்தான் “உங்களோட ப்ராஜெக்ட்ல மத்தவங்கக்கிட்ட இல்லாத நேர்த்தியும் அழகும் தெரியுது. இன்னும் வித்தியாசமா யோசியேன்”. என்றார். அப்பதான் ஏன் வேதங்களில் இருந்து தீம்களை எடுக்கக்கூடாது என்று ஆராய்ந்தேன். மகாபாரதத்துல காந்தாரிக்குத் துரியோதனன் முதலான நூறு குழந்தைகள் பிறந்த வரலாற்றைப் படித்தேன் அதையே ஏன் நாம் கொலுவில் வடிவமைக்கக் கூடாது என்று நினைத்து, கீதாவிடம் சொல்ல... இருவரும் வெகு சிரமப்பட்டு, அதை வடிவமைத்து அந்த வருடமே கொலுவில் வைத்தோம். வந்தவர்களுக்கு விளக்கியும் கூறினோம்..உலகத்தின் முதல் டெஸ்ட்டியூப் குழந்தை துரியோதனனும் அவன் சகோதர்களும்தான் என்று ஆதாரத்துடன் காண்பித்ததை அனைவரும் வியந்துப் பாராட்டினர். அவர்கள் நண்பர்கள், உறவினரையும் அழைத்து வர எங்களுக்குப் பெரும் மனநிறைவு. சிரமப்பட்டது வீண்போக வில்லை. அதேபோல் பகவத்கீதையின் கர்மயோகங்கள் பற்றிய கான்செப்டும் பெரும் பாராட்டு தந்தது” ரமேஷ் நிறுத்த... கீதா தொடர்ந்தார், “பொதுவா தெய்வச் சிலைகளோட மங்களகரமானச் சிலைகளை வைப்பதுதான் நம்பிக்கை. நாங்க அந்த நம்பிக்கையை உடைச்சு நவராத்திரி கொலுவில சுடுகாட்டுல ஒரு பிணம் எரிவது போன்ற காட்சியைச் சித்தரித்தோம்... “ஒர் உயிர் இறந்தபின் எங்கே செல்கிறது? அதன் நிலைகள் என்ன?” என்பதைப் பற்றிய கான்சப்ட் ஒரு வருடம் வைத்தோம். மரணத்திற்குப்பின் ஒர் ஆத்மா மீண்டும் பிறவி எடுக்கும்வரை பயணிக்கும் நிலைகளை ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண சரீரம் எனும் விளக்கங்களை எல்லாம் புரியும்படி உருவாக்கினோம். ஆனால், முதல் நாள் இந்தக் காட்சியை வைத்தமைக்கு அவ்வளவு எதிர்ப்பு. நாங்கள் கண்டுகொள்ளவில்லை. இறப்பும் பிறப்பும் அந்தக் கடவுளின் செயல் என்பதில் தெளிவாக இருந்தோம். போகப் போக இதைப்பார்த்து நாங்கள் சொன்ன விளக்கங்களைக் கேட்டு புரிந்து கொண்டு எங்களைப் பாராட்டினார்கள். இப்படி நிறைய அனுபவங்கள்...”இந்த வருடம் இவர்கள் தந்திருக்கும் கான்செப்ட் தசமஹாதேவியரின் அவதாரங்கள். தசமகாதேவியரான மாகாளி, தாரா லலிதா திரிபுரசுந்தரி, பைரவி, பகுளாமுகி, கமலாத்மிகா, தூமாவதி, மாதங்கி, சின்னமஸ்தா, ஆகியோரை வடிவமைத்து உள்ளனர். இதற்காக பல நாட்கள் குடும்பமே வேலை செய்துள்ளது. சார்ட் பேப்பரில் உருவங்களை முறைப்படி வரைந்து, வண்ணங்கள் தீட்டி, நடுநாயகமாக அசுரனை வதம் செய்யும் மகாகாளி தேவியை கூடாரத்தில் நிர்மாணித்து வைத்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. தினம் இவர் களுக்குத் தகுந்த மலர்கள் மற்றும் பிரசாதங்களுடன் சிறப்பாக பூஜைகள் நிகழ்கிறது.“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்ற பழமொழிக்கு கீதாவின் மகள் வைஷ்ணவி சான்று. இவரும் தாயைப் போல கலைகளில் சிறந்தவராக உள்ளார். நாற்காலியில் சார்ட் பேப்பர் கொண்டு கிருஷ்ணன் மற்றும் தேரை வடிவமைத்து இருப்பது பாராட்டுக்குரியது .ரமேசும் கீதாவும் நவராத்திரி பூஜையை வேதங்களில் கூறியிருக்கும் முறைகளுடன் செய்வது குறிப்பிடத்தக்கது. அமாவாசையன்று கலசத்தில் அம்மனை எழுந்தருளச் செய்ய விரதமிருப்பது முதல் கொலுவுக்கு வருபவர் களையும் அம்மனின் வடிவங்களாகப் பாவித்து அவர்களுக்குரிய மரியாதையையும் அன்பளிப்புகளையும் தருவது வரை பார்த்துப்பார்த்து செய்கின்றனர். தினம் செய்யும் பிரசாதங்களையும் அதற்கென உள்ள பாத்திரங்களைக்கொண்டு மாமியார், அம்மாவின் உதவியுடன் வீட்டிலேயே செய்து படைக்கிறார்கள். ஒரு நாளைக்குச் சராசரி அறுபதுக்கும் மேல் வருபவர்களுக்கு எப்போதும் பிரசாதம் கிடைத்துக்கொண்டே இருப்பதும் சிறப்பு..நவராத்திரி நாட்களில் துர்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அங்க பூஜை எனப்படும் சந்தோசப் பூஜையைத் தவறாமல் ஸ்ரீ துர்க்காஷ்டோத்ர சத நாமாவளி படித்து நிவேதனம் படைத்து, செய்வது குறிப்பிடத்தக்கது. உச்சிக்கால பூஜை, மாலை ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய மலர் மாலை, வஸ்திரம், கோலம், நிவேதனம், வீணை, பாட்டு போன்ற இசை நிகழ்ச்சிகளுடன் வருபவர்களுக்கும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திர புத்தகங்கள் தந்து, பாடவைப்பது என இவர்கள் வீட்டுக்கொலு தேவலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. (கீதா பாட்டுப் பாடுவதிலும் சூப்பராம்.)இங்கு வந்து வேண்டி, அது நிறைவேறியதும் பொம்மைகள் வாங்கி வந்து தருபவர்களும் உண்டு. அவர்கள் மூலம் அந்த அம்மனே தங்கள் வழிபாட்டை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாக மகிழ்வு கொள்கின்றனர் இந்தத் தம்பதியினர்.
சேலம் கீதா ரமேஷ்(புதுமை + பழமை) புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே பெட்டியில் அடைபட்டு சிவனே என்று இருக்கும் கண்கவர் பொம்மைகளுக்குக் கொண்டாட்டம்தான். நவராத்திரியின் சக்தி வழிபாட்டுக் காகப் பெண்களும், குழந்தைகளும், பெட்டியில் அடுக்கியுள்ள பழையப் பொம்மைகளுக்குச் சுதந்திரம் தந்து, சுத்தம் செய்து அவற்றை டிங்கரிங் பஞ்சரிங் செய்து, அழகுப்படுத்தி கொலுவில் அடுக்கிக் காண்பவர்களை வியக்க வைப்பது தனி சுகம்தான்.“போன வருஷம் சதுரகிரி மலை செட் போட்டு அசத்தின. இந்த நவராத்திரிக்கு என்ன மாதிரி தீம் பண்ணப் போறம்மா?” போன்ற கேள்விகளையும் “இந்தத் தடவை புதுசா ஏதாவது செய்யணும். யாரும் செய்யாததா இருக்கணும்...” என்று ஆவலுடன் தேடும் பெண்களையும் பார்க்கலாம்.அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக பெருந்தோற்று காரணமாக விருந்தாளிகள் அழைக்காமல், வீட்டோடு நவராத்திரியைக் கொண்டாடியப் பெண்கள் இந்த வருடம் அதி உற்சாகத்துடன் மீண்டும் களம் இறங்கி உள்ளதைக் காணமுடிகிறது..அதில் ஒருவர்தான் கைவினையில் அசத்தும் கீதாவும் ஆன்மிகத்தில் ஆதாரத்துடன் அசத்தும் அவர் கணவர் ரமேஷும். வருடம்தோறும் புதுப்புது கான்செப்ட்டாகத் தங்கள் வீட்டுக் கொலுவை அரும்பாடுபட்டு உருவாக்கு கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் கொலுவைப் பார்த்துவிட்டு வெளியே செல்லும்போது புதியதாக ஒரு ஆன்மிகத் தகவலை அறிந்துகொண்ட மனநிறைவுடன் செல்கிறார்கள்.இந்த வருடம், நாமும் சென்று கொலுவைக் கண்டுகளித்து நவராத்திரி ஸ்பெஷல் பற்றி அவர்களிடமே கேட்டோம். வீடு நிறையப் பொம்மைகளுடன், விருந்தாளிகளும் இருக்க அவர்களுக்கு வயிறார உணவு தந்துக்கொண்டே நம்மிடம் பேசினார் கீதா ரமேஷ்.“கணவரும் நானும் பிறந்து வளர்ந்து இருப்பதே சேலம் செவ்வாய்ப்பேட்டைதான். கணவர் வெள்ளித்தொழில் செய்கிறார். மகன் ரூபேஷ் கல்லூரியிலும், பொண்ணு வைஷ்ணவி பிளஸ் ஒன்னும் படிக்கிறார்கள். கல்யாணம் ஆகி ஆறு வருசமிருக்கும். .அம்மன் வந்து உன் வீட்டுக்கு நான் வருகிறேன் என்று சொல்வது போலவும், நான் பொம்மைகளை அடுக்குவது போலவும் கனவு வந்தது. முதலில் நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், திரும்பத்திரும்ப அதேபோல் கனவு வரவும் கணவரிடமும் வீட்டுப் பெரியவர்களிடமும் சொல்லி என்ன செய்யலாம்? என்று பேசியதில் நவராத்திரி பொம்மைக்கொலு வைத்தால் என்ன? எனும் ஆர்வம் வந்தது. ஆனால், அதற்கு கணவரைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை. காரணம், தொடர்ந்து பதினொரு நாட்கள் முழுமையான விரதம் இருக்கவேண்டும் என்பதாலும் வீட்டில் இந்தப்பழக்கம் இல்லாததாலும் இது சரிவருமா எனும் கேள்வி? ஆனால், நானும் என் கணவரும் உறுதியாக இருந்தோம்.முதல் வருடம் கொலு பற்றி அதிகம் அறியாத நிலையில் மூன்று படிக்கட்டுகள் வைத்து, வாங்கியிருந்தப் பொம்மைகளை வைத்து வழிபட்டோம். எனக்குக் கைவினைக் கலையில ரொம்ப ஆர்வம். அந்த ஆர்வத்துல இரண்டாம் வருடம் படிக்கட்டுப் பொம்மைகளுடன் சின்னதா இமயமலை செட் வாங்கி வெச்சோம். அப்புறம் எங்களுக்கே ஆர்வம் வந்து, அடுத்த வருடம் இன்னும் பெரிய இமயமலையை உருவாக்கி, அதில் கங்கை உற்பத்தியாவது போன்று கொலுவில் வைத்தோம். இப்படியே ஒவ்வொரு வருடமும் எங்கள் வீட்டுக்கொலு அக்கம்பக்கத்தில் பேமஸ் ஆக ஆரம்பித்து, எல்லோரும் பார்க்க வந்தாங்க. அப்புறம்தான் வருகிறவர்கள் வெறுமனே பொம்மைகளை மட்டும் பார்த்துப் போகாமல் ஏதாவது நல்ல ஆன்மிகச் செய்தியை அவர்களுக்குக் கொலு மூலம் சொன்னால் என்ன எண்ணம் தோன்றியது.அந்த வருடம் பழனி மலை செட் செய்து ரோப் கார், நீர் வீழ்ச்சியையும் சேர்த்தோம். மேலிருந்து விழும் தண்ணீரில் மின்சாரம் தயாரிப்பதுபோல “நீர் மின் நிலையத்தை” யும் வடிவமைத்தோம். ஆன்மிகத்துக்குப் பழனியும் அறிவியலுக்கு நீர் மின் நிலையமும் அமைத்ததை அனைவரும் பாராட்டினார்கள்.கணவர் ரமேஷ் வேதங்களும் படித்தவர் என்பதால் அதிலிருக்கும் விசயங்களை முயற்சி செய்தால் என்ன? என்று இருவரும் யோசித்தோம்...” கீதா நிறுத்தினார் “என் நெருங்கிய நண்பர்தான் “உங்களோட ப்ராஜெக்ட்ல மத்தவங்கக்கிட்ட இல்லாத நேர்த்தியும் அழகும் தெரியுது. இன்னும் வித்தியாசமா யோசியேன்”. என்றார். அப்பதான் ஏன் வேதங்களில் இருந்து தீம்களை எடுக்கக்கூடாது என்று ஆராய்ந்தேன். மகாபாரதத்துல காந்தாரிக்குத் துரியோதனன் முதலான நூறு குழந்தைகள் பிறந்த வரலாற்றைப் படித்தேன் அதையே ஏன் நாம் கொலுவில் வடிவமைக்கக் கூடாது என்று நினைத்து, கீதாவிடம் சொல்ல... இருவரும் வெகு சிரமப்பட்டு, அதை வடிவமைத்து அந்த வருடமே கொலுவில் வைத்தோம். வந்தவர்களுக்கு விளக்கியும் கூறினோம்..உலகத்தின் முதல் டெஸ்ட்டியூப் குழந்தை துரியோதனனும் அவன் சகோதர்களும்தான் என்று ஆதாரத்துடன் காண்பித்ததை அனைவரும் வியந்துப் பாராட்டினர். அவர்கள் நண்பர்கள், உறவினரையும் அழைத்து வர எங்களுக்குப் பெரும் மனநிறைவு. சிரமப்பட்டது வீண்போக வில்லை. அதேபோல் பகவத்கீதையின் கர்மயோகங்கள் பற்றிய கான்செப்டும் பெரும் பாராட்டு தந்தது” ரமேஷ் நிறுத்த... கீதா தொடர்ந்தார், “பொதுவா தெய்வச் சிலைகளோட மங்களகரமானச் சிலைகளை வைப்பதுதான் நம்பிக்கை. நாங்க அந்த நம்பிக்கையை உடைச்சு நவராத்திரி கொலுவில சுடுகாட்டுல ஒரு பிணம் எரிவது போன்ற காட்சியைச் சித்தரித்தோம்... “ஒர் உயிர் இறந்தபின் எங்கே செல்கிறது? அதன் நிலைகள் என்ன?” என்பதைப் பற்றிய கான்சப்ட் ஒரு வருடம் வைத்தோம். மரணத்திற்குப்பின் ஒர் ஆத்மா மீண்டும் பிறவி எடுக்கும்வரை பயணிக்கும் நிலைகளை ஸ்தூல உடல், சூட்சும உடல், காரண சரீரம் எனும் விளக்கங்களை எல்லாம் புரியும்படி உருவாக்கினோம். ஆனால், முதல் நாள் இந்தக் காட்சியை வைத்தமைக்கு அவ்வளவு எதிர்ப்பு. நாங்கள் கண்டுகொள்ளவில்லை. இறப்பும் பிறப்பும் அந்தக் கடவுளின் செயல் என்பதில் தெளிவாக இருந்தோம். போகப் போக இதைப்பார்த்து நாங்கள் சொன்ன விளக்கங்களைக் கேட்டு புரிந்து கொண்டு எங்களைப் பாராட்டினார்கள். இப்படி நிறைய அனுபவங்கள்...”இந்த வருடம் இவர்கள் தந்திருக்கும் கான்செப்ட் தசமஹாதேவியரின் அவதாரங்கள். தசமகாதேவியரான மாகாளி, தாரா லலிதா திரிபுரசுந்தரி, பைரவி, பகுளாமுகி, கமலாத்மிகா, தூமாவதி, மாதங்கி, சின்னமஸ்தா, ஆகியோரை வடிவமைத்து உள்ளனர். இதற்காக பல நாட்கள் குடும்பமே வேலை செய்துள்ளது. சார்ட் பேப்பரில் உருவங்களை முறைப்படி வரைந்து, வண்ணங்கள் தீட்டி, நடுநாயகமாக அசுரனை வதம் செய்யும் மகாகாளி தேவியை கூடாரத்தில் நிர்மாணித்து வைத்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. தினம் இவர் களுக்குத் தகுந்த மலர்கள் மற்றும் பிரசாதங்களுடன் சிறப்பாக பூஜைகள் நிகழ்கிறது.“தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்” என்ற பழமொழிக்கு கீதாவின் மகள் வைஷ்ணவி சான்று. இவரும் தாயைப் போல கலைகளில் சிறந்தவராக உள்ளார். நாற்காலியில் சார்ட் பேப்பர் கொண்டு கிருஷ்ணன் மற்றும் தேரை வடிவமைத்து இருப்பது பாராட்டுக்குரியது .ரமேசும் கீதாவும் நவராத்திரி பூஜையை வேதங்களில் கூறியிருக்கும் முறைகளுடன் செய்வது குறிப்பிடத்தக்கது. அமாவாசையன்று கலசத்தில் அம்மனை எழுந்தருளச் செய்ய விரதமிருப்பது முதல் கொலுவுக்கு வருபவர் களையும் அம்மனின் வடிவங்களாகப் பாவித்து அவர்களுக்குரிய மரியாதையையும் அன்பளிப்புகளையும் தருவது வரை பார்த்துப்பார்த்து செய்கின்றனர். தினம் செய்யும் பிரசாதங்களையும் அதற்கென உள்ள பாத்திரங்களைக்கொண்டு மாமியார், அம்மாவின் உதவியுடன் வீட்டிலேயே செய்து படைக்கிறார்கள். ஒரு நாளைக்குச் சராசரி அறுபதுக்கும் மேல் வருபவர்களுக்கு எப்போதும் பிரசாதம் கிடைத்துக்கொண்டே இருப்பதும் சிறப்பு..நவராத்திரி நாட்களில் துர்க்கையை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அங்க பூஜை எனப்படும் சந்தோசப் பூஜையைத் தவறாமல் ஸ்ரீ துர்க்காஷ்டோத்ர சத நாமாவளி படித்து நிவேதனம் படைத்து, செய்வது குறிப்பிடத்தக்கது. உச்சிக்கால பூஜை, மாலை ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரிய மலர் மாலை, வஸ்திரம், கோலம், நிவேதனம், வீணை, பாட்டு போன்ற இசை நிகழ்ச்சிகளுடன் வருபவர்களுக்கும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திர புத்தகங்கள் தந்து, பாடவைப்பது என இவர்கள் வீட்டுக்கொலு தேவலோகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. (கீதா பாட்டுப் பாடுவதிலும் சூப்பராம்.)இங்கு வந்து வேண்டி, அது நிறைவேறியதும் பொம்மைகள் வாங்கி வந்து தருபவர்களும் உண்டு. அவர்கள் மூலம் அந்த அம்மனே தங்கள் வழிபாட்டை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதாக மகிழ்வு கொள்கின்றனர் இந்தத் தம்பதியினர்.