பகுதி – 14 வாழ்க்கையில் குருவின் அருள் என்பது கிடைக்காமல் போவதுதான் மிகப் பெரிய நஷ்டம். எப்பேற்பட்டக் கஷ்டத்தில் நாம் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாலும் சரியான தருணத்தில் நம்மைத் தேடி வந்து அருள் புரியும் குருவின் கடாக்ஷம் , அனைத்து விதமான கஷ்டங்களையும் சட்டென நீக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பது குருஅருள்தான். அந்தக் குரு அருளால் மட்டுமே திரு அருளைப் பெற்றுத் தரமுடியும்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஆசார்யலாபம் (ஆசார்யன்/ குரு கிடைத்தல் ) என்பது மிகப் பெரிய விஷயம். எல்லாருக்கும் அப்படி கிடைத்துவிடாது. அப்படி கிடைப்பதற்கு ஆறு காரணங்கள் சேர்ந்து அமைய பெற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த ஆறிலும் முக்கியமானது, விஷ்ணுவின் கடாக்ஷம். மனிதன் பிறக்கும்போதே பகவான் செய்யும் விசேஷ கடாக்ஷம் யாருக்கு வாய்க்கிறதோ, அவரே நல்ல ஆசார்யரைப் பெற்று உய்ய முடியும் என்கிறது ஸ்ரீமத் பாகவதரஸம்.க்ஷத்ரபந்து மிகக் கொடுமையான ஒரு மனிதன். உலகமே தூஷித்த அந்த மனிதன், குரு அருளால் எப்படி மிகப் பெரிய பேறு பெற்றான் என்ற கதை புராணத்தில் மெய் சிலிர்க்கும்வண்ணம் விவரிக்கப்பட்டிருக்கிறது. க்ஷத்ரபந்து செய்த கொடுமைகள் நாளுக்கு நாளுக்கு எல்லை மீறிப் போகவே, ஒருகட்டத்தில் அவனை நாட்டை விட்டே துரத்தி விட்டார்கள். எங்காவது கண்காணாமல் போய்விடு, காட்டிற்குச் சென்று விடு. நீ செய்யும் கொடுமைகளை இனியும் எங்களால் பொறுத்துகொள்ள முடியாது என ஒட்டுமொத்த மக்களும் அவனைத் துரத்திவிட... சரி, என்று க்ஷத்ரபந்துவும் நாட்டைவிட்டு காட்டிற்கு வந்துவிட்டான். காட்டில் வனவிலங்குகளை மட்டுமல்லாமல், வருவோர் போவோரையை எல்லாம் துன்புறுத்துவது, அவர்களிடம் இருக்கும் பொருட்களைக் கொள்ளை அடித்து உண்பது, பொருட்களை அவர்கள் கொடுக்கமறுத்தால் அவர்களையே கொன்று குவிப்பது போன்ற மிகப் பெரிய கொடூரமானச் செயல்களைச் செய்துவந்தான்.க்ஷத்ரபந்துவின் அதிர்ஷ்டம் ஒரு நல்ல குருவின் தரிசனம் அவன் இருப்பிடம் தேடி வந்தது. ஒருநாள் கடும் வெயிலில் ஒரு ரிஷி அவன் இருந்த காட்டு வழிக்கு வந்தார். தாகம் மேலிட அங்கே இருந்த குளத்தில் இறங்கி, தண்ணீர் பருகினார் அந்த ரிஷி. தண்ணீரைக் குடித்துவிட்டு அவர் அக்குளத்திலிருந்து ஏற முற்படும்போது, அவரது கால் அக்குளத்தில் இருந்த சேற்றில் மாட்டிக்கொண்டது. ஒரு ரிஷி சேற்றில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதை பார்த்து க்ஷத்ரபந்துவிற்கு அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிசயமாகத் தோன்றியது. இதுவரை எந்த ஒரு ஜீவனுக்குமே சிறு நன்மைகூட செய்யாத கொடியவனான அவனுக்குள் அப்படி ஒரு எண்ணம் பூக்க, உடனே அருகில் இருந்த மரக்கிளைகளை எல்லாம் எடுத்து வெட்டி அந்தக் கிளைகளையும் கொடிகளையும் எடுத்து ரிஷியின் பக்கம் கொடுத்தான். ரிஷி இடைவிடாமல் கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். க்ஷத்ரபந்துவின் உதவியோடு அந்த ரிஷி நல்லபடியாக கரையேறி விட்டார். அவரது கனிவான பார்வை கொடியவனான க்ஷத்ரபந்துவை அவருக்கு காய்கனிகளைக் கொடுக்கச் செய்தது. பிறரிடமிருந்து பொருட்களை மட்டுமே எடுத்து வந்தவன் என்னவோ அந்தக் குருவின் பார்வை பலத்தால், முதன்முதலாக அவருக்குக் காய்கனிகளைக் கொடுத்து அவரது அருட்பார்வைக்குப் பாத்திரமானான். அவனின் இந்த அன்பான செயல்களைப் பார்த்து ரிஷி, “ நீரொம்ப நல்லவனாக இருக்கிறாய். மிகவும் உத்தமமான செயல்களைச் செய்கிறாயே” என்று அவனைப் பாராட்டினார். அவனோ, “சாமீ. நான் ஒரு சத்ரியகுலத்து ராஜா. நான் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுக்கமுடியாமல், வெறுப்பு மேலிட என்னை மொத்தமாக நாட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். எனக்கு தெரிந்ததெல்லாம் கொடுஞ்செயல்கள் மட்டுமே. இன்றுதான் முதல்முறையாக வாழ்க்கையில் உங்களைப் பார்த்த உடன் ஒரு சிறு நல்ல செயலைச் செய்திருக்கிறேன்” என்றான் சிரித்தபடி.“அப்பா எனக்கு மிகப் பெரிய உதவி செய்திருக்கும் நீ... இனி பாவச் செயல்களைச் செய்வதை எல்லாம் விட்டுவிடப்பா” என்று ரிஷி கூற, அதற்குக்ஷத்ரபந்துவோ, “இத்தனை காலங்கள் இப்படியே செய்து பழகிவிட்டேன் சாமீ. இனி எல்லாம் நான் திருந்திட முடியாது. இப்படியே என்னை விட்டுவிடுங்கள். நான் ஏகப்பட்ட பேர்களைக் கொன்று குவிச்சிருக்கேன். என் மனசு உங்களைகூடக் கொல்ல சொல்லி தூண்டலாம். அப்படி என் மனசு மாறுவதற்குள், நீங்க இங்கேருந்து கிளம்பிடுங்க சாமீ” என்றான்.” சரிப்பா... நான் இங்கேயிருந்து கிளம்பறேன். ஆனா, எனக்கு உதவி செஞ்ச உனக்கு நான் திரும்ப ஏதாவது உதவி செய்யனும் இல்லயா? அதானே தர்மம். அதனால, இன்னிலேர்ந்து நீ என்ன வேலை பண்ணாலும் பரவாயில்ல. ஆனா கோவிந்தா அப்படீங்கற நாமத்தை மட்டும் சொல்லிண்டே நீ எல்லா வேலையும் செய்” என்றார் அந்த ரிஷி.“எந்த வேலை செஞ்சாலும் கோவிந்தான்னு சொல்லலாமா சாமீ? நான் மனிதர்களையும், மிருகங்களையும் கொலை செய்யும்போதுகூட கோவிந்தான்னு சொல்லலாமா, அது தப்பில்லையா?” என்று கேட்ட க்ஷத்ரபந்துவைப் பார்த்து, “நான்தான் சொல்லிட்டேனேப்பா… நீ என்ன வேலை பண்ணாலும் பரவாயில்லை... ஆனா கோவிந்தான்னு மட்டும் மனசுக்குள்ள சொல்லிண்டே நீ எல்லாத்தையும் பண்ணு” என்றார் ரிஷி..குரு சொல்வதை அப்படியே கேட்டால் நிச்சயம் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்று க்ஷத்ரபந்துவுக்குத் தெரியாது. சரி, யாரோ ஒரு பெரியவர் வந்து கோவிந்தா என்று சொல்லச் சொல்லி சென்றிருக்கிறார். அந்த நாமத்தைச் சொல்லித்தான் பார்ப்போமே என்று அந்த நொடிமுதல், நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும்போதும், உணவு உட்கொள்ளும்போதும், விலங்குகளைக் கொல்ல முற்படும்போது மென எப்பவும் கோவிந்த நாமத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டான் க்ஷத்ரபந்து. பாவங்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமே அவனைவிட்டு மெல்ல விலகிவிட்டது. விலங்குகளை அடித்துக் கொல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு விலங்குகளை அணுகும்போதெல்லாம் அவனுள்ளிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த அந்த கோவிந்த நாமம் அவனை விலங்குகளை ஏன் அடித்துக் கொல்லவேண்டும்? அதுவும் ஒரு ஜீவன்தானே? இதோ காட்டில் கிடைக்கும் காய்களையும், கனிகளையும் சாப்பிடுவோமே என்று எண்ண வைத்தது. மனிதர்களை அடித்து அவர்களிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும்பொதெல்லாம், அந்தரிஷி, குரு சொல்லித் தந்தபடி சொல்லிக்கொண்டிருந்த கோவிந்த நாமம்... பாவம் இந்த மனிதர்கள் எங்கெல்லாமோ கஷ்டப்பட்டு உழைத்து பொருட்களைச் சம்பாதித்து வைத்துள்ளார்கள். அவர்கள் சம்பாத்யத்தை நாம் எடுப்பது சரியில்லையே என்று எண்ணவைத்தது.குரு ரூபமாக ரிஷி சொல்லித் தந்த கோவிந்த நாமம்க்ஷத்ரபந்துவை அடியோடு மாற்றியேவிட்டது. தன் உயிர்மூச்சு நிற்கும் வரையிலும் கோவிந்த நாமத்தைச் சொல்லிச்சொல்லி அப்படியே மறுஜென்மமும் எடுத்து... குரு உபதேசித்த கோவிந்த நாமம் அவனைத் தொடர்ந்து பற்றதன் அடுத்த ஜென்மத்தில், மிக நல்ல பக்திமான்கள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்து மோட்சத்தை அடைந்தான் க்ஷத்ரபந்து. குருவின் அருட்பார்வையால் முதலில் அவனுக்குக் கிடைத்தது திருமாலின் திருநாமம். அந்தத் திருமாலின் திருநாமத்தால் கிடைக்கப்பெற்றது மோட்ச பதவியே. எதுவுமே தெரியாமல் இருந்தவனுக்கு வந்து வழிகாட்டித் தந்தார் அந்தக் குரு.எதுவுமே தெரியாமல் இருக்கும் நமக்கும் நிச்சயம் வழிகாட்டித் தருவார் குரு என்று சத்தியமாக நம்புவோம். குருவின் பாதம் பணிவோம். குரு அருள் திரு அருள் வளரும்...
பகுதி – 14 வாழ்க்கையில் குருவின் அருள் என்பது கிடைக்காமல் போவதுதான் மிகப் பெரிய நஷ்டம். எப்பேற்பட்டக் கஷ்டத்தில் நாம் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தாலும் சரியான தருணத்தில் நம்மைத் தேடி வந்து அருள் புரியும் குருவின் கடாக்ஷம் , அனைத்து விதமான கஷ்டங்களையும் சட்டென நீக்கிவிடும் என்பதில் சந்தேகமே இல்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய அதிர்ஷ்டம் என்பது குருஅருள்தான். அந்தக் குரு அருளால் மட்டுமே திரு அருளைப் பெற்றுத் தரமுடியும்.ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஆசார்யலாபம் (ஆசார்யன்/ குரு கிடைத்தல் ) என்பது மிகப் பெரிய விஷயம். எல்லாருக்கும் அப்படி கிடைத்துவிடாது. அப்படி கிடைப்பதற்கு ஆறு காரணங்கள் சேர்ந்து அமைய பெற வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அந்த ஆறிலும் முக்கியமானது, விஷ்ணுவின் கடாக்ஷம். மனிதன் பிறக்கும்போதே பகவான் செய்யும் விசேஷ கடாக்ஷம் யாருக்கு வாய்க்கிறதோ, அவரே நல்ல ஆசார்யரைப் பெற்று உய்ய முடியும் என்கிறது ஸ்ரீமத் பாகவதரஸம்.க்ஷத்ரபந்து மிகக் கொடுமையான ஒரு மனிதன். உலகமே தூஷித்த அந்த மனிதன், குரு அருளால் எப்படி மிகப் பெரிய பேறு பெற்றான் என்ற கதை புராணத்தில் மெய் சிலிர்க்கும்வண்ணம் விவரிக்கப்பட்டிருக்கிறது. க்ஷத்ரபந்து செய்த கொடுமைகள் நாளுக்கு நாளுக்கு எல்லை மீறிப் போகவே, ஒருகட்டத்தில் அவனை நாட்டை விட்டே துரத்தி விட்டார்கள். எங்காவது கண்காணாமல் போய்விடு, காட்டிற்குச் சென்று விடு. நீ செய்யும் கொடுமைகளை இனியும் எங்களால் பொறுத்துகொள்ள முடியாது என ஒட்டுமொத்த மக்களும் அவனைத் துரத்திவிட... சரி, என்று க்ஷத்ரபந்துவும் நாட்டைவிட்டு காட்டிற்கு வந்துவிட்டான். காட்டில் வனவிலங்குகளை மட்டுமல்லாமல், வருவோர் போவோரையை எல்லாம் துன்புறுத்துவது, அவர்களிடம் இருக்கும் பொருட்களைக் கொள்ளை அடித்து உண்பது, பொருட்களை அவர்கள் கொடுக்கமறுத்தால் அவர்களையே கொன்று குவிப்பது போன்ற மிகப் பெரிய கொடூரமானச் செயல்களைச் செய்துவந்தான்.க்ஷத்ரபந்துவின் அதிர்ஷ்டம் ஒரு நல்ல குருவின் தரிசனம் அவன் இருப்பிடம் தேடி வந்தது. ஒருநாள் கடும் வெயிலில் ஒரு ரிஷி அவன் இருந்த காட்டு வழிக்கு வந்தார். தாகம் மேலிட அங்கே இருந்த குளத்தில் இறங்கி, தண்ணீர் பருகினார் அந்த ரிஷி. தண்ணீரைக் குடித்துவிட்டு அவர் அக்குளத்திலிருந்து ஏற முற்படும்போது, அவரது கால் அக்குளத்தில் இருந்த சேற்றில் மாட்டிக்கொண்டது. ஒரு ரிஷி சேற்றில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பதை பார்த்து க்ஷத்ரபந்துவிற்கு அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிசயமாகத் தோன்றியது. இதுவரை எந்த ஒரு ஜீவனுக்குமே சிறு நன்மைகூட செய்யாத கொடியவனான அவனுக்குள் அப்படி ஒரு எண்ணம் பூக்க, உடனே அருகில் இருந்த மரக்கிளைகளை எல்லாம் எடுத்து வெட்டி அந்தக் கிளைகளையும் கொடிகளையும் எடுத்து ரிஷியின் பக்கம் கொடுத்தான். ரிஷி இடைவிடாமல் கோவிந்தா கோவிந்தா என்ற நாமத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். க்ஷத்ரபந்துவின் உதவியோடு அந்த ரிஷி நல்லபடியாக கரையேறி விட்டார். அவரது கனிவான பார்வை கொடியவனான க்ஷத்ரபந்துவை அவருக்கு காய்கனிகளைக் கொடுக்கச் செய்தது. பிறரிடமிருந்து பொருட்களை மட்டுமே எடுத்து வந்தவன் என்னவோ அந்தக் குருவின் பார்வை பலத்தால், முதன்முதலாக அவருக்குக் காய்கனிகளைக் கொடுத்து அவரது அருட்பார்வைக்குப் பாத்திரமானான். அவனின் இந்த அன்பான செயல்களைப் பார்த்து ரிஷி, “ நீரொம்ப நல்லவனாக இருக்கிறாய். மிகவும் உத்தமமான செயல்களைச் செய்கிறாயே” என்று அவனைப் பாராட்டினார். அவனோ, “சாமீ. நான் ஒரு சத்ரியகுலத்து ராஜா. நான் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுக்கமுடியாமல், வெறுப்பு மேலிட என்னை மொத்தமாக நாட்டைவிட்டே துரத்திவிட்டார்கள். எனக்கு தெரிந்ததெல்லாம் கொடுஞ்செயல்கள் மட்டுமே. இன்றுதான் முதல்முறையாக வாழ்க்கையில் உங்களைப் பார்த்த உடன் ஒரு சிறு நல்ல செயலைச் செய்திருக்கிறேன்” என்றான் சிரித்தபடி.“அப்பா எனக்கு மிகப் பெரிய உதவி செய்திருக்கும் நீ... இனி பாவச் செயல்களைச் செய்வதை எல்லாம் விட்டுவிடப்பா” என்று ரிஷி கூற, அதற்குக்ஷத்ரபந்துவோ, “இத்தனை காலங்கள் இப்படியே செய்து பழகிவிட்டேன் சாமீ. இனி எல்லாம் நான் திருந்திட முடியாது. இப்படியே என்னை விட்டுவிடுங்கள். நான் ஏகப்பட்ட பேர்களைக் கொன்று குவிச்சிருக்கேன். என் மனசு உங்களைகூடக் கொல்ல சொல்லி தூண்டலாம். அப்படி என் மனசு மாறுவதற்குள், நீங்க இங்கேருந்து கிளம்பிடுங்க சாமீ” என்றான்.” சரிப்பா... நான் இங்கேயிருந்து கிளம்பறேன். ஆனா, எனக்கு உதவி செஞ்ச உனக்கு நான் திரும்ப ஏதாவது உதவி செய்யனும் இல்லயா? அதானே தர்மம். அதனால, இன்னிலேர்ந்து நீ என்ன வேலை பண்ணாலும் பரவாயில்ல. ஆனா கோவிந்தா அப்படீங்கற நாமத்தை மட்டும் சொல்லிண்டே நீ எல்லா வேலையும் செய்” என்றார் அந்த ரிஷி.“எந்த வேலை செஞ்சாலும் கோவிந்தான்னு சொல்லலாமா சாமீ? நான் மனிதர்களையும், மிருகங்களையும் கொலை செய்யும்போதுகூட கோவிந்தான்னு சொல்லலாமா, அது தப்பில்லையா?” என்று கேட்ட க்ஷத்ரபந்துவைப் பார்த்து, “நான்தான் சொல்லிட்டேனேப்பா… நீ என்ன வேலை பண்ணாலும் பரவாயில்லை... ஆனா கோவிந்தான்னு மட்டும் மனசுக்குள்ள சொல்லிண்டே நீ எல்லாத்தையும் பண்ணு” என்றார் ரிஷி..குரு சொல்வதை அப்படியே கேட்டால் நிச்சயம் வாழ்க்கையில் நல்லதே நடக்கும் என்று க்ஷத்ரபந்துவுக்குத் தெரியாது. சரி, யாரோ ஒரு பெரியவர் வந்து கோவிந்தா என்று சொல்லச் சொல்லி சென்றிருக்கிறார். அந்த நாமத்தைச் சொல்லித்தான் பார்ப்போமே என்று அந்த நொடிமுதல், நிற்கும்போதும் நடக்கும்போதும், உட்காரும்போதும், உணவு உட்கொள்ளும்போதும், விலங்குகளைக் கொல்ல முற்படும்போது மென எப்பவும் கோவிந்த நாமத்தைச் சொல்ல ஆரம்பித்து விட்டான் க்ஷத்ரபந்து. பாவங்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமே அவனைவிட்டு மெல்ல விலகிவிட்டது. விலங்குகளை அடித்துக் கொல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு விலங்குகளை அணுகும்போதெல்லாம் அவனுள்ளிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த அந்த கோவிந்த நாமம் அவனை விலங்குகளை ஏன் அடித்துக் கொல்லவேண்டும்? அதுவும் ஒரு ஜீவன்தானே? இதோ காட்டில் கிடைக்கும் காய்களையும், கனிகளையும் சாப்பிடுவோமே என்று எண்ண வைத்தது. மனிதர்களை அடித்து அவர்களிடம் இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்துகொள்ள வேண்டும் என்று தோன்றும்பொதெல்லாம், அந்தரிஷி, குரு சொல்லித் தந்தபடி சொல்லிக்கொண்டிருந்த கோவிந்த நாமம்... பாவம் இந்த மனிதர்கள் எங்கெல்லாமோ கஷ்டப்பட்டு உழைத்து பொருட்களைச் சம்பாதித்து வைத்துள்ளார்கள். அவர்கள் சம்பாத்யத்தை நாம் எடுப்பது சரியில்லையே என்று எண்ணவைத்தது.குரு ரூபமாக ரிஷி சொல்லித் தந்த கோவிந்த நாமம்க்ஷத்ரபந்துவை அடியோடு மாற்றியேவிட்டது. தன் உயிர்மூச்சு நிற்கும் வரையிலும் கோவிந்த நாமத்தைச் சொல்லிச்சொல்லி அப்படியே மறுஜென்மமும் எடுத்து... குரு உபதேசித்த கோவிந்த நாமம் அவனைத் தொடர்ந்து பற்றதன் அடுத்த ஜென்மத்தில், மிக நல்ல பக்திமான்கள் நிரம்பிய குடும்பத்தில் பிறந்து மோட்சத்தை அடைந்தான் க்ஷத்ரபந்து. குருவின் அருட்பார்வையால் முதலில் அவனுக்குக் கிடைத்தது திருமாலின் திருநாமம். அந்தத் திருமாலின் திருநாமத்தால் கிடைக்கப்பெற்றது மோட்ச பதவியே. எதுவுமே தெரியாமல் இருந்தவனுக்கு வந்து வழிகாட்டித் தந்தார் அந்தக் குரு.எதுவுமே தெரியாமல் இருக்கும் நமக்கும் நிச்சயம் வழிகாட்டித் தருவார் குரு என்று சத்தியமாக நம்புவோம். குருவின் பாதம் பணிவோம். குரு அருள் திரு அருள் வளரும்...