- ஹேமலதா சுகுமாரன், பெங்களூருமும்பை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது எங்களுக்குப் புதியதாக ஒரு தமிழ் ஆசிரியை வந்தார். இனிய குரல். களையான முகம். நல்ல புலமை, நகைச்சுவை கலந்து விளக்கும் விதம் – முதல்நாளே வகுப்பு முழுவதையும் கவர்ந்துவிட்டார். அவர் பெயர் புலவர் பவானி வாஞ்சிநாதன். ஆஷ் துரையை கொன்ற வீரரின் வரலாறு. அவர் பெயர் மூலம்தான் எங்களுக்குத் தெரியவந்தது.பவானி டீச்சர் பாடம் எடுத்த இன்னா நாற்பது, நாற்பதாண்டுகள் கழிந்த பிறகும், இன்றும் நினைவில் நிற்கிறது. ஆசிரியை மாணவி என்ற உறவு மரியாதை கலந்த நட்பாக உருமாறி இன்றளவும் தொடர்கிறது.பம்பாய் தமிழ் சங்கத்தின் செயலாளராக இருந்து, கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிய ஆசுகவி அவர் இன்றும் பல பாடல்களை இயற்றி, பாடி சாயிசமித் மூலம் சேவைகள் பல செய்து வருகிறார்.என் விருப்பத்திற்கு இணங்க நாங்கள் திருச்சியில் வசித்துக் கொண்டிருந்தபொழுது அவரும் அவர் கணவரும் எங்கள் வீட்டில் வந்து தங்கினார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை எல்லோரும் அறிவர். அதிகம் பிராபல்லியமாகாத அழகு கொஞ்சம் மலையடிப்பட்டி அனந்த பத்மநாபரை பவானி டீச்சருக்கு தரிசனம் செய்விக்க என் கணவர் விழைந்தார்..இது ஒரு குடவரைக் கோயில். குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட பதினைந்து அடி பெருமாள். தலைக்குப் பக்கவாட்டிலிருந்து கீழிறங்கி அருள்பாலிக்கும் கையழகைக் காண மட்டுமே கண் கோடி வேண்டும். தாமரை தாங்கும் பத்ம பாதங்கள், நாபியில் பிரம்மா, சுற்றிலும் கருடன், நாரதர் மற்றும் தேவர்கள், எல்லாமே புடைப்புச் சிற்பங்கள். இரு புறச் சுற்றுச் சுவற்றில் நரசிம்மர், ஹயக்கீரவர், நின்ற வண்ணமும், அமர்ந்த வண்ணமும் ஆளுயரத்திற்கு மேற்பட்டு அருள்பாலிக்கும் பெருமாள். ஆக அமர்ந்த, கிடந்த நின்ற என்ற மூன்று திருக்கோலங்களிலும் ஐந்துவித மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுகிறது. வேண்டுவோர் கண் கோளாறுகளைத் தீர்க்கும் இறைவனாக இருப்பதால் இவருக்குக் கண் நிறைந்த பெருமாள் என்று பெயர். பட்டர்களும் நமக்கு நன்றாக விளக்கி தரிசனம் செய்விக்கிறார்கள். அவர்கள் தினம் ஸ்ரீரங்கத்திலிரந்து (36 கி.மீ.) வந்து போகிறார்கள். விசேஷ நாட்களில் வெள்ளிக் கண் மலர், கவசம் சாற்றப்பட்டு, தொங்கும் கைகளில் அணி ஆபரணங்களோடு காட்சியளிக்கும் கண் நிறைந்த பெருமாள் காண்போர் மனக்கண்ணிலும் என்றும் நிறைந்து நிற்பார்..பிரதான வாயிலருகே அழகு கொஞ்சும் கமலவல்லித் தாயார்.அடிவாரத்தில் உள்ளது பெருமாள் கோயில். வெளியே வந்து குன்றின் மேல் இன்னும் கொஞ்சம் ஏறினால் சிவன் கோயில். கருவரையிலுள்ள லிங்கத் திருமேனி மற்றும் குகைகயின் சுற்றுச் சுவர்களில் முருகர், சப்த மாதர், வீரபத்திரர் எல்லாமே குகையைக் குடைந்து வடிவமைத்த அற்புதமான புடைப்புச் சிற்பங்கள். அளவிட முடியாத வியக்க வைக்கும் ஆற்றலின் வெளிப்பாடு நம் முன்னோர்களின் ஒளிர வேண்டிய கலைத்திறன்கள் எங்கெங்கோ ஒளிந்திருக்கின்றன.குன்றின்மேல் ஒரு இடத்தில் பெரிய பாதங்கள், ராமருடையது என்று சொல்கிறார்கள். கிழே மிக அழகான பளிங்கு போல் ஒரு சுனை. இதன் நீர் திருமஞ்சனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக மக்கள் வசிக்காத இடமானதாலும் பலரும் அறியாத கோயிலானதாலும் சுற்று சூழலும் மனதிற்கு மிக இதமாக இருக்கிறது.
- ஹேமலதா சுகுமாரன், பெங்களூருமும்பை பள்ளியில் நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபொழுது எங்களுக்குப் புதியதாக ஒரு தமிழ் ஆசிரியை வந்தார். இனிய குரல். களையான முகம். நல்ல புலமை, நகைச்சுவை கலந்து விளக்கும் விதம் – முதல்நாளே வகுப்பு முழுவதையும் கவர்ந்துவிட்டார். அவர் பெயர் புலவர் பவானி வாஞ்சிநாதன். ஆஷ் துரையை கொன்ற வீரரின் வரலாறு. அவர் பெயர் மூலம்தான் எங்களுக்குத் தெரியவந்தது.பவானி டீச்சர் பாடம் எடுத்த இன்னா நாற்பது, நாற்பதாண்டுகள் கழிந்த பிறகும், இன்றும் நினைவில் நிற்கிறது. ஆசிரியை மாணவி என்ற உறவு மரியாதை கலந்த நட்பாக உருமாறி இன்றளவும் தொடர்கிறது.பம்பாய் தமிழ் சங்கத்தின் செயலாளராக இருந்து, கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிய ஆசுகவி அவர் இன்றும் பல பாடல்களை இயற்றி, பாடி சாயிசமித் மூலம் சேவைகள் பல செய்து வருகிறார்.என் விருப்பத்திற்கு இணங்க நாங்கள் திருச்சியில் வசித்துக் கொண்டிருந்தபொழுது அவரும் அவர் கணவரும் எங்கள் வீட்டில் வந்து தங்கினார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதரை எல்லோரும் அறிவர். அதிகம் பிராபல்லியமாகாத அழகு கொஞ்சம் மலையடிப்பட்டி அனந்த பத்மநாபரை பவானி டீச்சருக்கு தரிசனம் செய்விக்க என் கணவர் விழைந்தார்..இது ஒரு குடவரைக் கோயில். குன்றைக் குடைந்து உருவாக்கப்பட்ட பதினைந்து அடி பெருமாள். தலைக்குப் பக்கவாட்டிலிருந்து கீழிறங்கி அருள்பாலிக்கும் கையழகைக் காண மட்டுமே கண் கோடி வேண்டும். தாமரை தாங்கும் பத்ம பாதங்கள், நாபியில் பிரம்மா, சுற்றிலும் கருடன், நாரதர் மற்றும் தேவர்கள், எல்லாமே புடைப்புச் சிற்பங்கள். இரு புறச் சுற்றுச் சுவற்றில் நரசிம்மர், ஹயக்கீரவர், நின்ற வண்ணமும், அமர்ந்த வண்ணமும் ஆளுயரத்திற்கு மேற்பட்டு அருள்பாலிக்கும் பெருமாள். ஆக அமர்ந்த, கிடந்த நின்ற என்ற மூன்று திருக்கோலங்களிலும் ஐந்துவித மூர்த்திகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுகிறது. வேண்டுவோர் கண் கோளாறுகளைத் தீர்க்கும் இறைவனாக இருப்பதால் இவருக்குக் கண் நிறைந்த பெருமாள் என்று பெயர். பட்டர்களும் நமக்கு நன்றாக விளக்கி தரிசனம் செய்விக்கிறார்கள். அவர்கள் தினம் ஸ்ரீரங்கத்திலிரந்து (36 கி.மீ.) வந்து போகிறார்கள். விசேஷ நாட்களில் வெள்ளிக் கண் மலர், கவசம் சாற்றப்பட்டு, தொங்கும் கைகளில் அணி ஆபரணங்களோடு காட்சியளிக்கும் கண் நிறைந்த பெருமாள் காண்போர் மனக்கண்ணிலும் என்றும் நிறைந்து நிற்பார்..பிரதான வாயிலருகே அழகு கொஞ்சும் கமலவல்லித் தாயார்.அடிவாரத்தில் உள்ளது பெருமாள் கோயில். வெளியே வந்து குன்றின் மேல் இன்னும் கொஞ்சம் ஏறினால் சிவன் கோயில். கருவரையிலுள்ள லிங்கத் திருமேனி மற்றும் குகைகயின் சுற்றுச் சுவர்களில் முருகர், சப்த மாதர், வீரபத்திரர் எல்லாமே குகையைக் குடைந்து வடிவமைத்த அற்புதமான புடைப்புச் சிற்பங்கள். அளவிட முடியாத வியக்க வைக்கும் ஆற்றலின் வெளிப்பாடு நம் முன்னோர்களின் ஒளிர வேண்டிய கலைத்திறன்கள் எங்கெங்கோ ஒளிந்திருக்கின்றன.குன்றின்மேல் ஒரு இடத்தில் பெரிய பாதங்கள், ராமருடையது என்று சொல்கிறார்கள். கிழே மிக அழகான பளிங்கு போல் ஒரு சுனை. இதன் நீர் திருமஞ்சனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகமாக மக்கள் வசிக்காத இடமானதாலும் பலரும் அறியாத கோயிலானதாலும் சுற்று சூழலும் மனதிற்கு மிக இதமாக இருக்கிறது.