FB பகிர்வு; மங்கையர் மலரில் பதிவு
நிறைய பேர் மூன்று முதல் நான்கு காமெடி வசனங்கள் எழுதி உள்ளனர்.
1. ஊரடங்குக் காலத்தில் கூட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஒன்றுவிடாமல் சுத்தி வந்து, நம்மள போனை கீழே வைக்க விடாமல் பண்ணது இவர்தான்.
2. இதை நம்பலாமா…? இவனை நம்பலாமா…?!
1. நம்மள வச்சி காமெடி கிமெடி பண்றாங்களோ?!
– வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்
…………………………………………………
- அது என்ன லபேசா?
- அதுவா அண்ணே…? அடுத்த வாரம் வங்கக்கடலில் ஒரு புயல் உருவாகி இருக்காம். அந்தப் புயலுக்கு புதுசா ஒரு நல்ல பேர் சொல்றவங்களுக்குப் பரிசு கொடுக்கிறதா மங்கையர் மலரில் சொல்லியிருக்காங்க. அதுக்காக நான் கண்டுபிடிச்ச பேர்தாண்ணே அது. ஹி… ஹி… ஹி…
– உஷா முத்துராமன், திருநகர்
…………………………………………………
- அண்ணே, துபாயில் எல்லா இடத்திலேயும் விசாரிச்சிட்டேன்… விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து மட்டும் இல்லவே இல்லையாம்!
- ஏண்டா, இதற்காகவா நீ துபாய் போன… நம்ம ஊரில் உள்ள தெருதாண்டா அது!
– அன்பு பாலா
…………………………………………………
- புதுசா ஓமைக்ரான் வைரஸ் பரவுதாம்!
- மறுபடியும் முதல்லேர்ந்தா? இருந்தா ஊருக்கு… இல்லேன்னா சாமிக்கு!
– ராதிகா ரவீந்திரன்
…………………………………………………
- அண்ணே, நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்காண்ணே?
- உனக்குக் குடுக்கலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பாழாப்போன மழை வந்து அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சுப்பா!
– ஜெகதா நாராயணசாமி, சென்னை
…………………………………………………
- அடுத்து உருவாகிற புயலுக்கு உன் பெயரை வைக்கப்போறாங்களாம்!
- மைண்ட் வாய்ஸ் – நம்ம பெயரிலேயே, ‘வைகைப் புயல்’னு இருக்குறதால இப்படிச் சொல்றாங்களோ!
– ஹேமலதா ஸ்ரீனிவாசன்
…………………………………………………
- ஓமைக்ரான் இந்த வழியாதான் போகுதுன்னாங்க… நீங்க பாத்தீங்களாண்ணே?
- ஓ… மைக்குக்காரனா?அவன் ஊர விட்டுப் போயிட்டானே தம்பி…!
– விஜி சம்பத்
…………………………………………………
- ஏம்ப்பா! ஒரு அட்ரஸ் கேட்டது தப்பா?
- அட்ரஸ் கேட்டது தப்பில்லை! இது எந்த ஏரியானு கேட்காம, எந்த ஏரினு கேட்ட பாரு! அதுதான் தப்பு!
– ரவிகுமார் கிருஷ்ணசாமி
…………………………………………………
- கோவிச்சுக்காதீங்க… நல்லவங்க இருக்குற இடத்துல அதிக மழை பெய்யத்தாங்க செய்யும்… இவர்கூட ரொம்ப நல்லவர்தான்!
- ஏம்பா நல்லாதானே போயிட்டு இருக்கு… நைஸா, என்னையத் தூக்குறதுக்கு இப்படி ஐடியா பண்றீயே!
– கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்.
…………………………………………………
- ஓமைக்ரான்… ஓமைக்கரான்ன்னு சொல்லுறாங்களே… அது என்னன்னு தெரியுமா?
- மைண்ட் வாய்ஸ்… (தெரியலைன்னு சொன்னாலும் வம்பு… தெரியும்னு சொன்னாலும் வம்பு… ஏதாவது ஒரு பதிலை சொல்லி வைப்போம்) அது… அண்ணே, மை போட்டு பார்க்கிற ஏதோ சமாச்சாரம்னு நினைக்கிறேன்!
– தி.வள்ளி
…………………………………………………
- புதுசா ஓமைக்ரான்னு ஒரு வைரஸ் பரவுதாமே… தெரியுமா?
- அதெல்லாம் இருக்கட்டும்… வைரசுக்கு தமிழ் பெயர் வைக்கணும்னு ஒரு கதையைக் கிளப்பி விடுவோமே!
– கவிதா பாலாஜிகணேஷ்
…………………………………………………
- டேய், இங்க பாரு… இவ்வளவு பணத்த எப்பவாவது நீ மொத்தமா பாத்திருக்கியா?
- பாத்திருக்கேனே, நீங்க அண்ணி நகைய அடகு வச்சி, சேட்கிட்ட பணம் வாங்கினத மறைஞ்சி நிண்ணு பாத்தேனே!
– ஜெயகாந்தி மகாதேவன்
………………………….
- என்னப்பா, புது வருஷம் பிறக்கப்போகுது… புதுசா என்ன செய்யலாம்னு இருக்க?
- என்னத்த செய்யறது! வருஷம் ஒவ்வொண்ணும்தான் நம்பள வச்சு நல்லா செய்யுதே!
………………………….
1.அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
2.என்னப்பா… சொல்லு… சொல்லு!
1.கொசுவுக்கு மட்டும் எல்லா குரூப் ரத்தமும் ஒத்துப்போகுதே… அது எப்படிண்ணே?
2.கொசுக்கடியே பரவாயில்ல… இவன் கடி தாங்கலடா சாமி!
………………………….
- இவனுக்கு ஆபரேஷன்னு சொன்னதிலிருந்து பணத்துக்கு நாயா அலையறாண்ணே. நீ ஏதாவது உதவி பண்ணக் கூடாதா?
- ஆபரேஷன் செஞ்சா ஒருவேளை பேயா அலைஞ்சிடுவானோன்னு பயந்துதான் செய்யலைண்ணே!
– கிருஷ்ணவேணி
…………………………………………………
- தீக்குளிக்கப்போறேன்னு போனீயே… ஏன் திரும்பி வந்துட்டே!
- ஆமாய்யா… பெட்ரோல் விலை நூறு ரூவாயாம். கிருஷ்ணாயில் கேட்டா ரேஷன் கடையில காலின்னு கையை விரிக்கான். பத்தாததுக்கு, ‘தீப்பெட்டி’ வெல வேற கூட்டிட்டாங்க. இதுக்கு உசுரோடவே இருந்துட்டுப் போயிடலாம்ன்னு திரும்பிட்டேன்.
– கோமதி சிவாயம்
…………………………………………………
- இவன் பேரு ஜெய்பீம், அவன் பேரு மாநாடு… ரெண்டு பேர்ல உனக்கு யாரை புடிக்கும்?!
- என்னை விட்டுடுப்பா… நான் ஒரு டம்மி பீஸு… என்கிட்டே ஐந்து கோடியெல்லாம் கிடையாது!
– தாரை செ.ஆசைத்தம்பி
…………………………………………………
- ஏம்பா, இந்த பர்ஸில் கொஞ்சம் பணம் இருக்கு. அதைப் பாதுகாப்பா வச்சுக்குங்க. ரெண்டு நாள்ல வாங்கிக்கிறேன்.
- இது அவனா இருப்பானோ… தேவையில்லாம இவங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேனே!
– கலைமதி சிவகுரு
………………………………………………………..
- என்னடா… யோசனை பண்ணிட்டிருக்க…?
- வீட்டை சுத்தி தண்ணி தேங்காம பார்த்துக்கங்கன்னு சொன்னாங்களே, இப்ப ஊரை சுத்தி தண்ணி நிக்குதே, இதுக்கு என்ன சொல்வாங்கன்னு யோசிக்கிறேன்!
– மகாலக்ஷ்மி சுப்ரமணியன்
………………………………………………………..
1.இவனுகளுக்கு ஒரு வேலை போட்டுக் கொடுப்பா!
2.என்னது… வேலையா? ப்ளஸ் டூ முடிச்ச வருஷத்த சொல்லுன்னா, பிறந்த வருஷத்த சொல்றான். என்ன டோட்டல்ன்னா ஹோட்டல் பேரை சொல்றான்!
1.சரிப்பா… குத்து மதிப்பா நீயே போட்டுக்கோ!
2.குத்துன்னா என்ன? மதிப்புன்ன என்ன?
1.அய்யய்யோ… கேட்டதே தப்பாப் போச்சே! விடுறா சாமி!
– ஜானகி பரந்தாமன்
………………………………………………………………
- தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டீர்களா?
- அதைத்தானே தேடிக்கிட்டிருக்கேன்…!
– சம்பத் அண்ணாசாமி