விஜய் டீ.வி. 'சூப்பர் சிங்கர் ஜூனியர் – 8' இறுதிப் போட்டியைப் பார்த்தீங்களா?.– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி..நிகழ்ச்சி என்னவோ ஜாலியாதான் இருந்தது. ஆனா, ரிசல்ட்? கிரான்ட் ஃபினாலே அன்னிக்கு ரொம்பக் கஷ்டமான பாடல்களை அநாயாசமாகப் பாடி அசத்தியது நேஹாதான்! 'காலத்தை வென்றவன்', 'இசையரசி' பாட்டையெல்லாம் ஒன் டேக்ல பாட முடியுமா? (எனக்கு, 'கவண்' படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியும் இருக்குமோ?!).கிருஷாங்கின் வயசுக்கு அவனது திறமை அபாரம்தான்! ஆனால், நேஹாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது ஏமாற்றம்தான்! கிருஷாங் டைட்டில் வின்னர் என்றால், நேஹாவுக்கு இரண்டாம் இடமாவது தந்திருக்கலாம்..'பொதுமக்கள் வோட்டிங்'படி என்று சொல்லிச் சமாளிப்பார்கள். என்ன செய்வது? நடுநிலையாக ரசிக்கும் நம்மில் பலரும், வோட்டிங் தளத்துக்குப் போய், வாக்களிக்க ஆர்வம் காட்டுவதில்லையே!.மற்றபடி, ம.கா.பா., ப்ரியங்காவின் காம்பியரிங் விறுவிறுப்பாக இருந்தது. சேட்டை செல்லம்ஸ்!.இரண்டு மைனஸ்:.மூக்குத்தி முருகனை, அநாவசியமாக தொடர்ச்சியாகச் சீண்டியது.சிறப்பு விருந்தினரான யுவன் ஷங்கர் ராஜா, எந்த பாவமும் காட்டாமல் ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தது. எஸ்.பி.பி., விவேக், கிரேஸி மோகனைப் பார்த்துக் கத்துக்கங்கப்பா! செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியையும் பாராட்டையும், உத்வேகத்தையும், நம்பிக்கையையும் தூவி விட்டுச் செல்லும் பெரு மனசுக்காரங்க அவங்க!.**********************************.'குமுதம்' வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து….– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்."இனிமே அவருக்குப் பதிலா யாரு பார்த்துப்பாங்க? அந்த மாதிரி டேலன்ட்டா ஓர் அனுபவசாலி கிடைக்கிறது கஷ்டம்தான் இல்லீங்க?" – ப்ரியா கல்யாணராமனின் மரணச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட பலரும் என்னிடம் கேட்டது இதைத்தான்!.'குமுதம்' வாசகர்களின் நாடி பிடித்துப் பார்த்து, அதற்கேற்ப விஷயமும் விஷமமும் கலந்த ஜனரஞ்சகமான ஜிஞ்சாமிர்தம் கொடுக்கத் தெரிந்த ஸ்பெஷலிஸ்ட் அவர்!.'ஜாக்கிரதை வயசு 16' எழுதிய அதே பேனாவால், 'தமிழச்சி ஆண்டாள்' எழுதக்கூடிய ஜாலம் தெரிந்தவர். ஏகப்பட்ட 'குழும'ப் பத்திரிகைகளை ஒருசேரக் கட்டி மேய்த்த அசுர உழைப்பாளி!.**********************************.கால் கடுக்க க்யூவில் நின்ற அனுபவங்களில் மறக்க முடியாதது?.– மஞ்சு வாசுதேவன், பெங்களுரு.நல்லவேளை… நான் யாழ்ப்பாணத்தில் இல்லை. பெட்ரோல், இலவச சத்துமாவு வாங்க க்யூவில் நிற்க….மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ.வும் இல்லை… ஆட்சியைப் பிடிக்கும் அவசரக் க்யூவில் நிற்க…. உக்ரைனோ, லிபியாவோ இல்லவே இல்லை… குழந்தைக் குட்டியுடன் இமிக்ரேஷன் க்யூவில் பரிதவிக்க….பெங்களூரில் இல்லை. புதிய 'ஐகியா' ஸ்டோரின் அடேங்கப்பா… க்யூவில் நிற்க….சர்க்கரை அட்டைதான் வெச்சுருக்கோம்… ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பை வாங்க முட்டி மோதியதில்லை.பேரன் – பேத்தி இல்லை… எந்த ஸ்கூல் முன்பும் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக, முதல் நாள் இரவிலிருந்தே இடம் பிடிக்கும் அவஸ்தை இல்லை….நான் ஒரு பக்தை! அஞ்சோ, ஏழோ வருஷத்துக்கு ஒரு முறை 'திருப்பதி' போகும் சாதாரண பக்தை! அதனால் 2,388 படிகள் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஏறி, கால் கடுக்க க்யூவில் நின்று பெருமாளை தரிசித்த அனுபவம் மட்டுமே நெஞ்சின் அடுக்குகளில் உள்ளது..திருமலை தேவஸ்தானத்தின் உள்சுற்றுக்குள் வந்ததும், செண்பக மலரின் வாசனை வீசும்… பெருமாளை நெருங்கி விட்டோம் என மனமும் மலரும்! (திருப்பதி கோயிலின் ஸ்தல விருட்சம் செண்பக மரம்!).நுழைவு வாயிலில், சிவப்புக் கம்பளங்களின் மீது ஊற்றெடுக்கும் ஜில்லென்ற நீர் பாதங்களில் பட்டதுமே… கால் கடுப்பு எல்லாம் பறந்தே விடும். தள்ளுமுள்ளு, கோவிந்தா கோஷத்துடன் நகர்ந்து, பச்சைக் கற்பூர வாசனையுடன் பூக்களின் நறுமணத்தோட, மெல்லிய வெளிச்சத்தில் ஏழுமலையானை தரிசித்ததும், என்ன ஒரு முப்பது விநாடிகள் இருக்குமா… அந்தத் திவ்ய தரிசனமே… போதுமே அடுத்த அஞ்சு வருஷத்துக்குத் தாங்கும்! கண்ணில் நிரப்பிக் கொண்டாயிற்று!.**********************************.'O2' படம் பார்த்தீங்களா அனு மேடம்?.– பொன்.இந்திராணி, ஈக்காட்டுத்தாங்கல்.மலைப்பகுதியில் ஏற்படும் பலத்த மழையாலும், நிலச் சரிவாலும் புதையுண்டு போகிறது ஓர் ஆம்னி பஸ்! அந்தப் பேருந்தில் சிக்கிக்கொண்ட எட்டுப் பயணிகள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் தவிப்பது பற்றிய கதை! 'இயற்கையை நாம் வஞ்சித்தபோதும், அந்த இயற்கையே ஒரு விதத்தில் காப்பாற்றும் சக்தியும் ஆகிறது' என்று மேம்போக்காக ஒரு மெசேஜும் சொல்கிறார்கள்..நயன்தாராவுக்கு டெய்லர் மேட் ரோல்! வழக்கம் போல டென்ஷன் மம்மி! கொஞ்சம் மாறுபட்ட ரோல்களையும் ட்ரை பண்ணுங்க மிஸஸ் விக்கி! இப்பதான் கல்யாணமாயிடுச்சே! கலகலப்பாவும் நடிக்கலாமே! புதிய கதைக்களம்! ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் பாராட்டு லிஸ்டில் இடம் பெறுகின்றனர். ஆனால், சுவாரசியம் என்ற ஆக்ஸிஜன் லெவல் குறைவாக உள்ளதால் படம் ஆவரேஜ்தான்!
விஜய் டீ.வி. 'சூப்பர் சிங்கர் ஜூனியர் – 8' இறுதிப் போட்டியைப் பார்த்தீங்களா?.– எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி..நிகழ்ச்சி என்னவோ ஜாலியாதான் இருந்தது. ஆனா, ரிசல்ட்? கிரான்ட் ஃபினாலே அன்னிக்கு ரொம்பக் கஷ்டமான பாடல்களை அநாயாசமாகப் பாடி அசத்தியது நேஹாதான்! 'காலத்தை வென்றவன்', 'இசையரசி' பாட்டையெல்லாம் ஒன் டேக்ல பாட முடியுமா? (எனக்கு, 'கவண்' படம்தான் ஞாபகத்துக்கு வந்தது. அப்படியும் இருக்குமோ?!).கிருஷாங்கின் வயசுக்கு அவனது திறமை அபாரம்தான்! ஆனால், நேஹாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது ஏமாற்றம்தான்! கிருஷாங் டைட்டில் வின்னர் என்றால், நேஹாவுக்கு இரண்டாம் இடமாவது தந்திருக்கலாம்..'பொதுமக்கள் வோட்டிங்'படி என்று சொல்லிச் சமாளிப்பார்கள். என்ன செய்வது? நடுநிலையாக ரசிக்கும் நம்மில் பலரும், வோட்டிங் தளத்துக்குப் போய், வாக்களிக்க ஆர்வம் காட்டுவதில்லையே!.மற்றபடி, ம.கா.பா., ப்ரியங்காவின் காம்பியரிங் விறுவிறுப்பாக இருந்தது. சேட்டை செல்லம்ஸ்!.இரண்டு மைனஸ்:.மூக்குத்தி முருகனை, அநாவசியமாக தொடர்ச்சியாகச் சீண்டியது.சிறப்பு விருந்தினரான யுவன் ஷங்கர் ராஜா, எந்த பாவமும் காட்டாமல் ஆணி அடிச்ச மாதிரி உட்கார்ந்திருந்தது. எஸ்.பி.பி., விவேக், கிரேஸி மோகனைப் பார்த்துக் கத்துக்கங்கப்பா! செல்லும் இடமெல்லாம் மகிழ்ச்சியையும் பாராட்டையும், உத்வேகத்தையும், நம்பிக்கையையும் தூவி விட்டுச் செல்லும் பெரு மனசுக்காரங்க அவங்க!.**********************************.'குமுதம்' வார இதழ் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மறைவு குறித்து….– ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்."இனிமே அவருக்குப் பதிலா யாரு பார்த்துப்பாங்க? அந்த மாதிரி டேலன்ட்டா ஓர் அனுபவசாலி கிடைக்கிறது கஷ்டம்தான் இல்லீங்க?" – ப்ரியா கல்யாணராமனின் மரணச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட பலரும் என்னிடம் கேட்டது இதைத்தான்!.'குமுதம்' வாசகர்களின் நாடி பிடித்துப் பார்த்து, அதற்கேற்ப விஷயமும் விஷமமும் கலந்த ஜனரஞ்சகமான ஜிஞ்சாமிர்தம் கொடுக்கத் தெரிந்த ஸ்பெஷலிஸ்ட் அவர்!.'ஜாக்கிரதை வயசு 16' எழுதிய அதே பேனாவால், 'தமிழச்சி ஆண்டாள்' எழுதக்கூடிய ஜாலம் தெரிந்தவர். ஏகப்பட்ட 'குழும'ப் பத்திரிகைகளை ஒருசேரக் கட்டி மேய்த்த அசுர உழைப்பாளி!.**********************************.கால் கடுக்க க்யூவில் நின்ற அனுபவங்களில் மறக்க முடியாதது?.– மஞ்சு வாசுதேவன், பெங்களுரு.நல்லவேளை… நான் யாழ்ப்பாணத்தில் இல்லை. பெட்ரோல், இலவச சத்துமாவு வாங்க க்யூவில் நிற்க….மகாராஷ்ட்ரா எம்.எல்.ஏ.வும் இல்லை… ஆட்சியைப் பிடிக்கும் அவசரக் க்யூவில் நிற்க…. உக்ரைனோ, லிபியாவோ இல்லவே இல்லை… குழந்தைக் குட்டியுடன் இமிக்ரேஷன் க்யூவில் பரிதவிக்க….பெங்களூரில் இல்லை. புதிய 'ஐகியா' ஸ்டோரின் அடேங்கப்பா… க்யூவில் நிற்க….சர்க்கரை அட்டைதான் வெச்சுருக்கோம்… ரேஷன் கடையில் பொங்கல் பரிசுப்பை வாங்க முட்டி மோதியதில்லை.பேரன் – பேத்தி இல்லை… எந்த ஸ்கூல் முன்பும் எல்.கே.ஜி. அட்மிஷனுக்காக, முதல் நாள் இரவிலிருந்தே இடம் பிடிக்கும் அவஸ்தை இல்லை….நான் ஒரு பக்தை! அஞ்சோ, ஏழோ வருஷத்துக்கு ஒரு முறை 'திருப்பதி' போகும் சாதாரண பக்தை! அதனால் 2,388 படிகள் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஏறி, கால் கடுக்க க்யூவில் நின்று பெருமாளை தரிசித்த அனுபவம் மட்டுமே நெஞ்சின் அடுக்குகளில் உள்ளது..திருமலை தேவஸ்தானத்தின் உள்சுற்றுக்குள் வந்ததும், செண்பக மலரின் வாசனை வீசும்… பெருமாளை நெருங்கி விட்டோம் என மனமும் மலரும்! (திருப்பதி கோயிலின் ஸ்தல விருட்சம் செண்பக மரம்!).நுழைவு வாயிலில், சிவப்புக் கம்பளங்களின் மீது ஊற்றெடுக்கும் ஜில்லென்ற நீர் பாதங்களில் பட்டதுமே… கால் கடுப்பு எல்லாம் பறந்தே விடும். தள்ளுமுள்ளு, கோவிந்தா கோஷத்துடன் நகர்ந்து, பச்சைக் கற்பூர வாசனையுடன் பூக்களின் நறுமணத்தோட, மெல்லிய வெளிச்சத்தில் ஏழுமலையானை தரிசித்ததும், என்ன ஒரு முப்பது விநாடிகள் இருக்குமா… அந்தத் திவ்ய தரிசனமே… போதுமே அடுத்த அஞ்சு வருஷத்துக்குத் தாங்கும்! கண்ணில் நிரப்பிக் கொண்டாயிற்று!.**********************************.'O2' படம் பார்த்தீங்களா அனு மேடம்?.– பொன்.இந்திராணி, ஈக்காட்டுத்தாங்கல்.மலைப்பகுதியில் ஏற்படும் பலத்த மழையாலும், நிலச் சரிவாலும் புதையுண்டு போகிறது ஓர் ஆம்னி பஸ்! அந்தப் பேருந்தில் சிக்கிக்கொண்ட எட்டுப் பயணிகள், ஆக்ஸிஜன் கிடைக்காமல் தவிப்பது பற்றிய கதை! 'இயற்கையை நாம் வஞ்சித்தபோதும், அந்த இயற்கையே ஒரு விதத்தில் காப்பாற்றும் சக்தியும் ஆகிறது' என்று மேம்போக்காக ஒரு மெசேஜும் சொல்கிறார்கள்..நயன்தாராவுக்கு டெய்லர் மேட் ரோல்! வழக்கம் போல டென்ஷன் மம்மி! கொஞ்சம் மாறுபட்ட ரோல்களையும் ட்ரை பண்ணுங்க மிஸஸ் விக்கி! இப்பதான் கல்யாணமாயிடுச்சே! கலகலப்பாவும் நடிக்கலாமே! புதிய கதைக்களம்! ஒளிப்பதிவாளரும் கலை இயக்குநரும் பாராட்டு லிஸ்டில் இடம் பெறுகின்றனர். ஆனால், சுவாரசியம் என்ற ஆக்ஸிஜன் லெவல் குறைவாக உள்ளதால் படம் ஆவரேஜ்தான்!