களஞ்சியம்.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் மார்ச்– 1990, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….டாக்டர். சுந்தரிமேனன்.ஓவியம்; கலா.நாம் நமக்கென்று பெண்கள் பத்திரிகைகளை ஆரம்பித்து, நம்முடைய மன, உடல் கஷ்டங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற பத்திரிகைகளிலும் பெண்களின் பிரச்னைகளைப் பேசுகிறார்கள். ஆனால் ஆணின் உடல், மன உபாதைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே! அது நம் மகன், கணவர் ஆகியோரை மேலும் புரிந்துகொள்ள உதவும்..பெண் சிறு பெண்ணாக இருக்கும்போதே 'நல்ல புருஷனாகக் கிடைக்கணும்' என்று சொல்வது போலவே, ஆணாக இருந்தால், 'நீ நல்லாப் படிக்கணும், பெரியவனாகி எங்களையெல்லாம் காப்பாத்தணும். உன்னை நம்பித்தான் இந்தக் குடும்பமே இருக்கு' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்..சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று அவன் தலையிலே ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்புக்களை ஏற்றி விடுகிறார்கள். இதனால் சிலருக்கு அகங்காரம் வளர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரும் பயம், பொறுப்புணர்ச்சி, பணிந்து போகும் தன்மை என வளர்ந்து விடுகிறார்கள்..'பருவ வயது' ஆணுக்கு மிகவும் சிக்கலான ஒன்று. பெண்களுக்கு அது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவளுக்கு உதவி புரிய, யோசனை சொல்ல அம்மா, அத்தைப் பாட்டி முன் வருகிறார்கள்..ஆனால், ஆணின் 'டீன் ஏஜ்' சொல்லத் தெரியாமல் அவஸ்தைப்படும் வயது. வீட்டு நபர்களைப் பார்த்தாலே கோபம் வரும். நண்பர்களுடன் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கத் தோன்றும். சிகரெட், மது இவற்றை ருசித்துப் பார்த்தால் என்ன எனத் தோன்றும். பெண்களைக் கண்டால் 'விறுவிறு' என இருக்கும்..பெண்ணுக்கு இயல்பாக உடலில் மென்மையும், தாயால் போதிக்கப்படும் நாணமும் மெருகிடுவது போல ஆணுக்கு இயற்கையாகவே வேகம் உண்டாகிறது. கார், ஜீப் எல்லாம் வேகமாக ஓட்டத் தோன்றும்..துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் தந்தைமார், தங்களின் வயதுப் பையன்களுக்குச் சரியாக வழிகாட்டுவதில்லை. தாயும், தந்தையும் இந்த வயதுப் பையன்களைச் சமாளிக்க மிகவும் திண்டாடுவார்கள்..இதற்காகத்தான் ஆரம்ப முதலே அவர்களைப் பெற்றோரின் அன்புக்குக் கட்டுப்படுபவர்களாக, அதே சமயம் சுதந்திரமான மனப்போக்கு உடையவர்களாக வளர்ப்பது நல்லது. இந்த வளர்ப்பு அவர்களின் பருவ வயதில் பயன்படும். அதுவும் போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் காலம் இது. அவர்களை நல்ல நண்பனாகப் பாவித்துப் பேச வேண்டும். வீட்டில் நடக்கும் எந்தக் காரியத்திற்கும் அவர்களையும் ஆலோசனை கேட்க வேண்டும். இதனாலெல்லாம் அவன் அந்த வீட்டின் முக்கியமான நபர் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும். இந்தப் பருவத்தில் அவர்களை மிகமிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். இங்கே வழி மாறிப் போய்விட்டால் வாழ்க்கை முழுவதுமே வீணாகிவிடும்..இருபதுகளின் கடைசியில் அரித்தெடுத்துத் திருமணம் செய்து வைக்கிறோம். (அல்லது அவர்களே செய்து கொள்கிறார்கள்.) பிறகு அவர்களைத் திண்டாடச் செய்யவும் விடுகிறோம். நாமே பார்த்து முடிவு செய்த பெண்ணை அவன் தலையில் கட்டி, நாமே அவன் பெண்டாட்டிதாசன் எனப் பட்டமும் கட்டுகிறோம்..மருமகள் ஒருபுறம், தாயார் ஒருபுறமாக யாருக்குச் சொல்வது எனத் தெரியாமல் மன அமைதி இழந்து தவிக்கும் கால கட்டம் முப்பதுகளில் ஆரம்பிக்கிறது. அதே சமயம் குழந்தைகள், ஸ்கூல் அட்மிஷன், வேலையில் கவனம், பிரமோஷன் என எல்லாப் பக்கமும் டென்ஷன் நிறைந்த காலகட்டமாகிறது.இதே முப்பதுகளில்தான் ஆண்களுக்கு உடல் உபாதைகளும் ஆரம்பிக் கின்றன. இவர்களுடைய தாய், தந்தையர் சொத்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ பரம்பரையாக வியாதியை மகனுக்குத் தருகிறார்கள். பரம்பரை வியாதிகள் எல்லாம் இந்தச் சமயத்தில்தான் தலைகாட்ட ஆரம்பிக்கும். சர்க்கரை வியாதி போன்ற பரம்பரை வியாதி உள்ளவர்கள் முன்ஜாக்கிரதையாக டாக்டரிடம் சென்று அடிக்கடிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது..குழந்தை இல்லாதவர்களும் முப்பதுகளில்தான் உணர ஆரம்பிக்கிறார்கள். குழந்தை பிறக்காததற்குப் பெண் மட்டுமே காரணம் என்பது இந்த ஆண்களின் கண்டுபிடிப்பு, என்னிடம் வரும் பல கணவன்மார்களும், "நான் நார்மலாத்தான் இருக்கேன். குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை இல்லை. என் மனைவியைப் பரிசோதனை பண்ணுங்க. டி & சி. செய்து பாருங்க." என்பார்கள். ஆனால், குழந்தைப் பிறக்காததற்கு ஆண்களும், 50% காரணமாக இருக்கிறார்கள். ஆண் மலடுகளும் உண்டு என்பதை இவர்கள் ஒப்புக் கொள்வதே இல்லை. நார்மலான உறவு இருப்பதாலேயே இவன் காரணமில்லை என்றாகி விடாது. ஒரு குறிப்பிட்ட அளவு உயிரணுக்கள் இருந்தால் மட்டுமே குழந்தை தரிக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் தங்கள் உயிரணுக்களை அதிகரித்துக் கொள்ள இன்றைக்குப் பல மருந்துகள் வந்துள்ளன. குழந்தை பிறக்க இன்றைக்கு விஞ்ஞானம் எத்தனையோ முறைகளைக் கையாளுகிறது. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, 'என் மேலே தப்பே இல்லை' என்று சொல்லாதீர்கள்..அதே போல அதிகமாகச் சைக்கிள் பிரயாணம் செய்பவர்களுக்கும், ஸ்கூட்டரை அடிக்கடி உதைப்பவர்களுக்கும் ஹெர்னியா வரலாம். அதற்கான கவச உடையை அணிந்து கொள்வது நல்லது. ஸ்கூட்டர், பைக் இவற்றை நல்ல கண்டிஷனில் வைத்துக் கொண்டால் இதைத் தவிர்க்கலாம்..சிகரெட், மது, இவற்றை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் உடல் நிலையில் பல சிக்கல்களை இவை ஏற்படுத்தும். தெரிந்தே நாம் நெருப்பில் கைவைப்பது போல, நம்மை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறது என்பதை மறந்து விடலாமா?.பெண்களைவிட ஆண்களுக்கு எளிதாக வியாதிகள் தொற்றிக் கொள்ளும். ஹார்ட்-அட்டாக் பெண்களுக்கு அதிகம் வருவதில்லை. பெண்களுக்கு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனே இதற்குக் காரணம். ஆனால் ஆண்களுக்கு இந்தப் பாதுகாப்பு இல்லை. தவிரவும் இவர்களே அலைச்சல், பிரயாணம், மன உளைச்சல் என அதிகம் அனுபவிக்கிறார்கள். இதனால் எளிதில் வியாதிகள் அண்டும்..இல்லத்தரசிகள் கூடியவரை கணவருக்கு அதிக உளைச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'டிப்ரெஷன்' எனும் மனவியாதியில் கொண்டு போய்விட்டு விடும் அபாயம் உண்டு..நாற்பதுகளில் இரத்த அழுத்தம், ஸ்பாண்டிலைடிஸ், ஆர்த்தரைடிஸ் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆண்கள் சிறு வயதிலிருந்தே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் இவ்வயதினை எளிதில் கடந்து விடலாம்..இந்த வயதில் அதிகாலையில் 'வாக்' மிகமிக நல்லது. ஒரு நாற்பது நிமிடங்கள் நடந்து விட்டு வாருங்கள். அதுவே மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தலையாய மனப்பயிற்சியும் கூட. எப்படி…?.சொந்த வியாபாரமோ, நிறுவனத்திலோ இருப்பவர்கள் இந்த வயதில் ஒரு பொறுப்பான பதவியை எட்டுகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது, இந்தச் சிக்கலை எப்படி அவிழ்ப்பது என சதா 'டென்ஷன்'தான்..இவர்கள் அதிகாலை 'வாக்' போகும்போது முதலில் சிறிது நேரம் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆழ்ந்த மூச்சு விட்டுச் சுற்றுச் சூழலில் மனம் லயிக்கச் செய்ய வேண்டும். பிறகு அன்றைய நாளின் பணிகளைத் திட்டமிடலாம். பிறகு பிரச்னைகளுக்கான தீர்வைக் கவனிக்கலாம். தெளிவான மனத்தில் எளிதாக யோசனைகள் வரும்..இது நம்மை நாமே தினமும் புதுப்பித்துக் கொள்ள மிகச் சிறந்த உபயோகமாகும். நாற்பதுகளில் கட்டாயம் 'வாக்கிங்' பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனைவிமார் கணவன்மாருக்கு வற்புறுத்திச் சொல்லி இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்..நாற்பதுகளின் கடைசியில் சிறுநீர்ப்பையின் அடியில் இருக்கும் ப்ராஸ்டேட் எனும் கிளாண்ட் பெருத்துக் கொள்வதால் சிறுநீர் கழிக்கச் சிரமம் ஏற்படும். இதை மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சை மேற்கொள்ளவது நல்லது. ஏனெனில் மிகச் சிலருக்கு இது ப்ராஸ்டேட் கேன்சராக மாறுகிறது..நாற்பதுகளின் கடைசிகளிலும், ஐம்பதுகளிலும் ஆண்கள் மனோரீதியாக அவஸ்தைப்படுகிறார்கள். பெண்கள் போராடிப் போராடி மனவலிமை பெற்று விடுகிறாள். ஆனால், ஆண் ஆரம்பத்தில் வீரியமாக இருந்தாலும், காலப்போக்கில் குழந்தையாகி விடுகிறான்..குடும்பம், குழந்தைகளின் உயர் படிப்பு, திருமணம், மனைவியின் வீடு ஆசை, பெற்றோர்களின் நச்சரிப்பு என அவஸ்தைப்படுகிறான்..வயதான பெற்றோர்கள் இந்தக் காலத்தில் பந்தாடப்படுகிறார்கள். "ஏன், நீங்கள்தான் இவர்களைக் காலம் பூராவும் கழுத்திலே கட்டிக்கொண்ட தொங்கணுமா? உங்கள் தம்பிக்கு எழுதிப் போடுங்கள்!" – இது மனைவி.."அன்புள்ள அண்ணா, உங்கள் கடிதம் கிடைத்தது. இங்கே டில்லியில் குளிர் அதிகம். பாவம், அப்பாவால் தாங்க முடியாது. தவிரவும் விஜியும் வேலைக்குப் போகிறாள் – இப்போதுதான் ரொம்பப் பிரயத்தனப்பட்டு சின்ன ஃப்ளாட் கிடைச்சிருக்கு…"இத்யாதி தம்பி சிகாமணியின் பதில்..இந்தச் சமயத்தில்தான் ஆண் மெனோபாஸும் ஆரம்பிக்கிறது. இதனால் சிடுசிடுப்பு, உடல் சோர்வு, 'நான் ஆண்' என்ற அகம்பாவத்தின் வீழ்ச்சி இப்படிக் களைத்துப் போகிறான். பெண்களுக்கு இருக்கும் அத்தனை மன உபாதைகளும் ஆண் மெனோபாஸிலும் உண்டு..இவற்றை நாம்தான் புரிந்துகொண்டு செல்ல வேண்டும். மேலும் மேலும் அவர்கள் தலையில் பிரச்னை மூட்டைகளைத் தூக்கி வைப்பதைவிட அன்பாகப் பகிர்ந்து கொள்ளலாம். மிகச் சிலரே இந்த வயதிலும் அகம்பாவமாக நடந்து கொள்கிறார்கள். பலரும் குடும்பத்திற்கு வளைந்துவிடும் ஆணாகவே மாறி விடுகிறார்கள்..வேலையிலிருந்து ஓய்வு பெறுவதும் இந்த வயதில்தான். அதற்கும் மனோரீதியாகக் கணவன்மார்களைத் தயார்ப்படுத்த வேண்டியது மனைவிமாரின் பொறுப்பு.."எட்டு மணி நேரமாவது உங்க உபத்திரவம் இல்லாமல் இருந்தேன். இப்போது இருபத்து நான்கு மணி நேரமும் உங்கள் பிடுங்கலாயப் போச்சு. நச்சு நச்சுன்னு தொந்தரவு பண்ணாம கிருஷ்ணா, ராமான்னு ஈஸிசேரிலே கிடங்கோ." என விரட்டும் மனைவிமாரும் உண்டு. வாலிப வயதில் மகனை எப்படி மிகமிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டுமோ, அதேபோலத்தான் இந்த வயதில் கணவரையும் போற்ற வேண்டும். இல்லையெனில் அவர் வெகு எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாவார்..மனைவி பூவும் பொட்டுமாய்ச் சுமங்கலியாய்ப் போய்விட்டால் நாம் இந்தப் மாட்டுப் பெண்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாட வேண்டுமோ என்ற பயம், தாம் முந்திக் கொண்டுவிட்டால், தம் மனைவியிடமிருந்து எல்லா வற்றையும் பிடுங்கிக் கொண்டு, அவரைக் கேவலமாக நடத்துவார்களோ என்ற அச்சம். இந்த ஊஞ்சலாட்டத்தில் ஆணின் கடைசிக் காலம் கழிகிறது..இந்த வரப் போகும் பருவங்களையெல்லாம் நாம் முன்கூட்டியே யோசித்துக் கொள்வதுதான் நல்லது. அதற்கு ஏற்றாற்போல நம் குடும்பத்தையும், குழந்தைகளையும் பழக்கிக் கொண்டால், பல அச்சங்களையும், பிரச்னைகளையும் தவிர்க்கலாம்..ரொம்ப அழகாகக் கண்ணதாசன் பாடிவிட்டுப் போய்விட்டாரே….வீடு வரை உறவுவீதி வரை மனைவிகாடு வரை பிள்ளைகடைசி வரை யாரோ?என்று!
களஞ்சியம்.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் மார்ச்– 1990, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….டாக்டர். சுந்தரிமேனன்.ஓவியம்; கலா.நாம் நமக்கென்று பெண்கள் பத்திரிகைகளை ஆரம்பித்து, நம்முடைய மன, உடல் கஷ்டங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற பத்திரிகைகளிலும் பெண்களின் பிரச்னைகளைப் பேசுகிறார்கள். ஆனால் ஆணின் உடல், மன உபாதைகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே! அது நம் மகன், கணவர் ஆகியோரை மேலும் புரிந்துகொள்ள உதவும்..பெண் சிறு பெண்ணாக இருக்கும்போதே 'நல்ல புருஷனாகக் கிடைக்கணும்' என்று சொல்வது போலவே, ஆணாக இருந்தால், 'நீ நல்லாப் படிக்கணும், பெரியவனாகி எங்களையெல்லாம் காப்பாத்தணும். உன்னை நம்பித்தான் இந்தக் குடும்பமே இருக்கு' என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள்..சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்று அவன் தலையிலே ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்புக்களை ஏற்றி விடுகிறார்கள். இதனால் சிலருக்கு அகங்காரம் வளர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். பலரும் பயம், பொறுப்புணர்ச்சி, பணிந்து போகும் தன்மை என வளர்ந்து விடுகிறார்கள்..'பருவ வயது' ஆணுக்கு மிகவும் சிக்கலான ஒன்று. பெண்களுக்கு அது விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவளுக்கு உதவி புரிய, யோசனை சொல்ல அம்மா, அத்தைப் பாட்டி முன் வருகிறார்கள்..ஆனால், ஆணின் 'டீன் ஏஜ்' சொல்லத் தெரியாமல் அவஸ்தைப்படும் வயது. வீட்டு நபர்களைப் பார்த்தாலே கோபம் வரும். நண்பர்களுடன் எப்போதும் வெளியே சுற்றிக்கொண்டு இருக்கத் தோன்றும். சிகரெட், மது இவற்றை ருசித்துப் பார்த்தால் என்ன எனத் தோன்றும். பெண்களைக் கண்டால் 'விறுவிறு' என இருக்கும்..பெண்ணுக்கு இயல்பாக உடலில் மென்மையும், தாயால் போதிக்கப்படும் நாணமும் மெருகிடுவது போல ஆணுக்கு இயற்கையாகவே வேகம் உண்டாகிறது. கார், ஜீப் எல்லாம் வேகமாக ஓட்டத் தோன்றும்..துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் தந்தைமார், தங்களின் வயதுப் பையன்களுக்குச் சரியாக வழிகாட்டுவதில்லை. தாயும், தந்தையும் இந்த வயதுப் பையன்களைச் சமாளிக்க மிகவும் திண்டாடுவார்கள்..இதற்காகத்தான் ஆரம்ப முதலே அவர்களைப் பெற்றோரின் அன்புக்குக் கட்டுப்படுபவர்களாக, அதே சமயம் சுதந்திரமான மனப்போக்கு உடையவர்களாக வளர்ப்பது நல்லது. இந்த வளர்ப்பு அவர்களின் பருவ வயதில் பயன்படும். அதுவும் போதைப் பொருட்கள் அதிகம் புழங்கும் காலம் இது. அவர்களை நல்ல நண்பனாகப் பாவித்துப் பேச வேண்டும். வீட்டில் நடக்கும் எந்தக் காரியத்திற்கும் அவர்களையும் ஆலோசனை கேட்க வேண்டும். இதனாலெல்லாம் அவன் அந்த வீட்டின் முக்கியமான நபர் என்ற உணர்வை ஏற்படுத்த முடியும். இந்தப் பருவத்தில் அவர்களை மிகமிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும். இங்கே வழி மாறிப் போய்விட்டால் வாழ்க்கை முழுவதுமே வீணாகிவிடும்..இருபதுகளின் கடைசியில் அரித்தெடுத்துத் திருமணம் செய்து வைக்கிறோம். (அல்லது அவர்களே செய்து கொள்கிறார்கள்.) பிறகு அவர்களைத் திண்டாடச் செய்யவும் விடுகிறோம். நாமே பார்த்து முடிவு செய்த பெண்ணை அவன் தலையில் கட்டி, நாமே அவன் பெண்டாட்டிதாசன் எனப் பட்டமும் கட்டுகிறோம்..மருமகள் ஒருபுறம், தாயார் ஒருபுறமாக யாருக்குச் சொல்வது எனத் தெரியாமல் மன அமைதி இழந்து தவிக்கும் கால கட்டம் முப்பதுகளில் ஆரம்பிக்கிறது. அதே சமயம் குழந்தைகள், ஸ்கூல் அட்மிஷன், வேலையில் கவனம், பிரமோஷன் என எல்லாப் பக்கமும் டென்ஷன் நிறைந்த காலகட்டமாகிறது.இதே முப்பதுகளில்தான் ஆண்களுக்கு உடல் உபாதைகளும் ஆரம்பிக் கின்றன. இவர்களுடைய தாய், தந்தையர் சொத்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ பரம்பரையாக வியாதியை மகனுக்குத் தருகிறார்கள். பரம்பரை வியாதிகள் எல்லாம் இந்தச் சமயத்தில்தான் தலைகாட்ட ஆரம்பிக்கும். சர்க்கரை வியாதி போன்ற பரம்பரை வியாதி உள்ளவர்கள் முன்ஜாக்கிரதையாக டாக்டரிடம் சென்று அடிக்கடிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது..குழந்தை இல்லாதவர்களும் முப்பதுகளில்தான் உணர ஆரம்பிக்கிறார்கள். குழந்தை பிறக்காததற்குப் பெண் மட்டுமே காரணம் என்பது இந்த ஆண்களின் கண்டுபிடிப்பு, என்னிடம் வரும் பல கணவன்மார்களும், "நான் நார்மலாத்தான் இருக்கேன். குடும்ப வாழ்க்கையிலும் பிரச்னை இல்லை. என் மனைவியைப் பரிசோதனை பண்ணுங்க. டி & சி. செய்து பாருங்க." என்பார்கள். ஆனால், குழந்தைப் பிறக்காததற்கு ஆண்களும், 50% காரணமாக இருக்கிறார்கள். ஆண் மலடுகளும் உண்டு என்பதை இவர்கள் ஒப்புக் கொள்வதே இல்லை. நார்மலான உறவு இருப்பதாலேயே இவன் காரணமில்லை என்றாகி விடாது. ஒரு குறிப்பிட்ட அளவு உயிரணுக்கள் இருந்தால் மட்டுமே குழந்தை தரிக்க முடியும். அப்படி இல்லாதவர்கள் தங்கள் உயிரணுக்களை அதிகரித்துக் கொள்ள இன்றைக்குப் பல மருந்துகள் வந்துள்ளன. குழந்தை பிறக்க இன்றைக்கு விஞ்ஞானம் எத்தனையோ முறைகளைக் கையாளுகிறது. அவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர, 'என் மேலே தப்பே இல்லை' என்று சொல்லாதீர்கள்..அதே போல அதிகமாகச் சைக்கிள் பிரயாணம் செய்பவர்களுக்கும், ஸ்கூட்டரை அடிக்கடி உதைப்பவர்களுக்கும் ஹெர்னியா வரலாம். அதற்கான கவச உடையை அணிந்து கொள்வது நல்லது. ஸ்கூட்டர், பைக் இவற்றை நல்ல கண்டிஷனில் வைத்துக் கொண்டால் இதைத் தவிர்க்கலாம்..சிகரெட், மது, இவற்றை அறவே தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் உடல் நிலையில் பல சிக்கல்களை இவை ஏற்படுத்தும். தெரிந்தே நாம் நெருப்பில் கைவைப்பது போல, நம்மை நம்பி ஒரு குடும்பமே இருக்கிறது என்பதை மறந்து விடலாமா?.பெண்களைவிட ஆண்களுக்கு எளிதாக வியாதிகள் தொற்றிக் கொள்ளும். ஹார்ட்-அட்டாக் பெண்களுக்கு அதிகம் வருவதில்லை. பெண்களுக்கு உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனே இதற்குக் காரணம். ஆனால் ஆண்களுக்கு இந்தப் பாதுகாப்பு இல்லை. தவிரவும் இவர்களே அலைச்சல், பிரயாணம், மன உளைச்சல் என அதிகம் அனுபவிக்கிறார்கள். இதனால் எளிதில் வியாதிகள் அண்டும்..இல்லத்தரசிகள் கூடியவரை கணவருக்கு அதிக உளைச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'டிப்ரெஷன்' எனும் மனவியாதியில் கொண்டு போய்விட்டு விடும் அபாயம் உண்டு..நாற்பதுகளில் இரத்த அழுத்தம், ஸ்பாண்டிலைடிஸ், ஆர்த்தரைடிஸ் போன்றவை ஏற்பட வாய்ப்பு அதிகம். ஆண்கள் சிறு வயதிலிருந்தே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி இவற்றை மேற்கொண்டால் இவ்வயதினை எளிதில் கடந்து விடலாம்..இந்த வயதில் அதிகாலையில் 'வாக்' மிகமிக நல்லது. ஒரு நாற்பது நிமிடங்கள் நடந்து விட்டு வாருங்கள். அதுவே மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தலையாய மனப்பயிற்சியும் கூட. எப்படி…?.சொந்த வியாபாரமோ, நிறுவனத்திலோ இருப்பவர்கள் இந்த வயதில் ஒரு பொறுப்பான பதவியை எட்டுகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காண்பது, இந்தச் சிக்கலை எப்படி அவிழ்ப்பது என சதா 'டென்ஷன்'தான்..இவர்கள் அதிகாலை 'வாக்' போகும்போது முதலில் சிறிது நேரம் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆழ்ந்த மூச்சு விட்டுச் சுற்றுச் சூழலில் மனம் லயிக்கச் செய்ய வேண்டும். பிறகு அன்றைய நாளின் பணிகளைத் திட்டமிடலாம். பிறகு பிரச்னைகளுக்கான தீர்வைக் கவனிக்கலாம். தெளிவான மனத்தில் எளிதாக யோசனைகள் வரும்..இது நம்மை நாமே தினமும் புதுப்பித்துக் கொள்ள மிகச் சிறந்த உபயோகமாகும். நாற்பதுகளில் கட்டாயம் 'வாக்கிங்' பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மனைவிமார் கணவன்மாருக்கு வற்புறுத்திச் சொல்லி இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்..நாற்பதுகளின் கடைசியில் சிறுநீர்ப்பையின் அடியில் இருக்கும் ப்ராஸ்டேட் எனும் கிளாண்ட் பெருத்துக் கொள்வதால் சிறுநீர் கழிக்கச் சிரமம் ஏற்படும். இதை மருத்துவரிடம் காட்டிச் சிகிச்சை மேற்கொள்ளவது நல்லது. ஏனெனில் மிகச் சிலருக்கு இது ப்ராஸ்டேட் கேன்சராக மாறுகிறது..நாற்பதுகளின் கடைசிகளிலும், ஐம்பதுகளிலும் ஆண்கள் மனோரீதியாக அவஸ்தைப்படுகிறார்கள். பெண்கள் போராடிப் போராடி மனவலிமை பெற்று விடுகிறாள். ஆனால், ஆண் ஆரம்பத்தில் வீரியமாக இருந்தாலும், காலப்போக்கில் குழந்தையாகி விடுகிறான்..குடும்பம், குழந்தைகளின் உயர் படிப்பு, திருமணம், மனைவியின் வீடு ஆசை, பெற்றோர்களின் நச்சரிப்பு என அவஸ்தைப்படுகிறான்..வயதான பெற்றோர்கள் இந்தக் காலத்தில் பந்தாடப்படுகிறார்கள். "ஏன், நீங்கள்தான் இவர்களைக் காலம் பூராவும் கழுத்திலே கட்டிக்கொண்ட தொங்கணுமா? உங்கள் தம்பிக்கு எழுதிப் போடுங்கள்!" – இது மனைவி.."அன்புள்ள அண்ணா, உங்கள் கடிதம் கிடைத்தது. இங்கே டில்லியில் குளிர் அதிகம். பாவம், அப்பாவால் தாங்க முடியாது. தவிரவும் விஜியும் வேலைக்குப் போகிறாள் – இப்போதுதான் ரொம்பப் பிரயத்தனப்பட்டு சின்ன ஃப்ளாட் கிடைச்சிருக்கு…"இத்யாதி தம்பி சிகாமணியின் பதில்..இந்தச் சமயத்தில்தான் ஆண் மெனோபாஸும் ஆரம்பிக்கிறது. இதனால் சிடுசிடுப்பு, உடல் சோர்வு, 'நான் ஆண்' என்ற அகம்பாவத்தின் வீழ்ச்சி இப்படிக் களைத்துப் போகிறான். பெண்களுக்கு இருக்கும் அத்தனை மன உபாதைகளும் ஆண் மெனோபாஸிலும் உண்டு..இவற்றை நாம்தான் புரிந்துகொண்டு செல்ல வேண்டும். மேலும் மேலும் அவர்கள் தலையில் பிரச்னை மூட்டைகளைத் தூக்கி வைப்பதைவிட அன்பாகப் பகிர்ந்து கொள்ளலாம். மிகச் சிலரே இந்த வயதிலும் அகம்பாவமாக நடந்து கொள்கிறார்கள். பலரும் குடும்பத்திற்கு வளைந்துவிடும் ஆணாகவே மாறி விடுகிறார்கள்..வேலையிலிருந்து ஓய்வு பெறுவதும் இந்த வயதில்தான். அதற்கும் மனோரீதியாகக் கணவன்மார்களைத் தயார்ப்படுத்த வேண்டியது மனைவிமாரின் பொறுப்பு.."எட்டு மணி நேரமாவது உங்க உபத்திரவம் இல்லாமல் இருந்தேன். இப்போது இருபத்து நான்கு மணி நேரமும் உங்கள் பிடுங்கலாயப் போச்சு. நச்சு நச்சுன்னு தொந்தரவு பண்ணாம கிருஷ்ணா, ராமான்னு ஈஸிசேரிலே கிடங்கோ." என விரட்டும் மனைவிமாரும் உண்டு. வாலிப வயதில் மகனை எப்படி மிகமிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டுமோ, அதேபோலத்தான் இந்த வயதில் கணவரையும் போற்ற வேண்டும். இல்லையெனில் அவர் வெகு எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாவார்..மனைவி பூவும் பொட்டுமாய்ச் சுமங்கலியாய்ப் போய்விட்டால் நாம் இந்தப் மாட்டுப் பெண்களிடம் மாட்டிக் கொண்டு திண்டாட வேண்டுமோ என்ற பயம், தாம் முந்திக் கொண்டுவிட்டால், தம் மனைவியிடமிருந்து எல்லா வற்றையும் பிடுங்கிக் கொண்டு, அவரைக் கேவலமாக நடத்துவார்களோ என்ற அச்சம். இந்த ஊஞ்சலாட்டத்தில் ஆணின் கடைசிக் காலம் கழிகிறது..இந்த வரப் போகும் பருவங்களையெல்லாம் நாம் முன்கூட்டியே யோசித்துக் கொள்வதுதான் நல்லது. அதற்கு ஏற்றாற்போல நம் குடும்பத்தையும், குழந்தைகளையும் பழக்கிக் கொண்டால், பல அச்சங்களையும், பிரச்னைகளையும் தவிர்க்கலாம்..ரொம்ப அழகாகக் கண்ணதாசன் பாடிவிட்டுப் போய்விட்டாரே….வீடு வரை உறவுவீதி வரை மனைவிகாடு வரை பிள்ளைகடைசி வரை யாரோ?என்று!