வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி..ஒவ்வொரு முறையும் புதிதாகப் புயல் உருவாகும்போது எவ்வாறு அதற்குப் பெயர் சூட்டப்படுகிறது? ஏன் அதற்குப் பெயரிட வேண்டும் என்ற கேள்வி பலரிடம் எழுவதுண்டு. அதற்கு பதிலளிக்கும் விதமாக உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிர்க்கவும் பேரிடர் அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது..புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையான பெயர்களே சூட்டப்படுகின்றன. இது நூற்றுக்கணக்கான கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது..புயலுக்கு பெண்களின் பெயர் வைக்கும் வழக்கம்: தொடக்கத்தில் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டது. 1900ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்குப் பெண்களின் பெயர் வைக்கும் வழக்கம் தொடங்கியது. பின்னர் பெயர் வைப்பதில் மேலும் ஒழுங்கான ஆற்றல்மிக்க நடைமுறையைக் கொண்டிருப்பதற்குப் பெயர் பட்டியல் தயாரிக்க வானிலை ஆய்வாளர்கள் தீர்மானித்தனர்..ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்: ஒருமுறை சூட்டப்படும் புயலின் பெயர் மீண்டும் மறுமுறை பயன்படுத்தப் படாது. புயல்களுக்கான பெயர்கள் அதிகபட்சம் எட்டு எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயர் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது..கடந்த 2020ஆம் ஆண்டு புயல்களுக்குச் சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கியப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்களை அளித்தன. அவற்றில் இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன..வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயர் சூட்டி வந்த காலத்தில் தங்களுக்குப் பிடிக்காத பெண்கள் அரசியல்வாதிகள் பெயர்களைச் சூட்டி வந்தார்கள்!.புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட்ராக் (1852-1922) என்பவர். இவர் முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்து வந்தார். முதலில் கிரேக்க எழுத்துக்களைக் கொண்ட பெயர் களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் புயல் களுக்குச் சூட்ட அவர் முடிவு செய்தார். பின்னர் புயல்களின் பெயர்கள் வரிசையில் அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமர்களின் பெயர்களும் இடம் பிடித்தன..இந்தியப் பங்களிப்பு: உலக அளவில் ஆறு சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும்போது அதற்குப் பெயர் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் வழங்கப் பட்டுள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அகர வரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவை பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்..தமிழ்ப் பெயர்: சமீபத்தில் உருவான அசானி புயலைத் தொடர்ந்து அடுத்து வந்த புதிய புயலுக்கு சித்ரங் எனப் பெயரிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா அளித்துள்ள குர்மி, பிரவாஹோ, ஜார், முரசு போன்ற பெயர்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன..புயல் காற்றுக்கு உள்ள பெயர்கள்! பலத்த காற்று மணிக்கு ஐம்பத்தைந்து கிலோ மீட்டரிலிருந்து எழுபத்தைந்து கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசும்போது அதனை கேல் (Gale) என்பர். மணிக்கு எழுபத்தைந்து முதல் நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அதை ஸ்டார்ம் (Storm) என்பர். மணிக்கு நூற்று இருபது கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேல் வீசினால் அதனை ஹரிகேன் (Hurricane) என்பர்.
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!.-ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி..ஒவ்வொரு முறையும் புதிதாகப் புயல் உருவாகும்போது எவ்வாறு அதற்குப் பெயர் சூட்டப்படுகிறது? ஏன் அதற்குப் பெயரிட வேண்டும் என்ற கேள்வி பலரிடம் எழுவதுண்டு. அதற்கு பதிலளிக்கும் விதமாக உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிர்க்கவும் பேரிடர் அபாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயர் சூட்டப்படுகிறது..புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையான பெயர்களே சூட்டப்படுகின்றன. இது நூற்றுக்கணக்கான கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது..புயலுக்கு பெண்களின் பெயர் வைக்கும் வழக்கம்: தொடக்கத்தில் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டது. 1900ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்குப் பெண்களின் பெயர் வைக்கும் வழக்கம் தொடங்கியது. பின்னர் பெயர் வைப்பதில் மேலும் ஒழுங்கான ஆற்றல்மிக்க நடைமுறையைக் கொண்டிருப்பதற்குப் பெயர் பட்டியல் தயாரிக்க வானிலை ஆய்வாளர்கள் தீர்மானித்தனர்..ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும்: ஒருமுறை சூட்டப்படும் புயலின் பெயர் மீண்டும் மறுமுறை பயன்படுத்தப் படாது. புயல்களுக்கான பெயர்கள் அதிகபட்சம் எட்டு எழுத்துக்களைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயர் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது..கடந்த 2020ஆம் ஆண்டு புயல்களுக்குச் சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயர்கள் அடங்கியப் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா 13 பெயர்களை அளித்தன. அவற்றில் இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பெயர்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன..வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயர் சூட்டி வந்த காலத்தில் தங்களுக்குப் பிடிக்காத பெண்கள் அரசியல்வாதிகள் பெயர்களைச் சூட்டி வந்தார்கள்!.புயல்களுக்குப் பெயர் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட்ராக் (1852-1922) என்பவர். இவர் முதலில் பிரிட்டனிலும் பின்னர் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்து வந்தார். முதலில் கிரேக்க எழுத்துக்களைக் கொண்ட பெயர் களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயர்களையும் புயல் களுக்குச் சூட்ட அவர் முடிவு செய்தார். பின்னர் புயல்களின் பெயர்கள் வரிசையில் அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமர்களின் பெயர்களும் இடம் பிடித்தன..இந்தியப் பங்களிப்பு: உலக அளவில் ஆறு சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும்போது அதற்குப் பெயர் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் வழங்கப் பட்டுள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது. வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. அகர வரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயர்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவை பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்..தமிழ்ப் பெயர்: சமீபத்தில் உருவான அசானி புயலைத் தொடர்ந்து அடுத்து வந்த புதிய புயலுக்கு சித்ரங் எனப் பெயரிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா அளித்துள்ள குர்மி, பிரவாஹோ, ஜார், முரசு போன்ற பெயர்களும் எதிர்காலத்தில் பயன்படுத்தப்படவுள்ளன..புயல் காற்றுக்கு உள்ள பெயர்கள்! பலத்த காற்று மணிக்கு ஐம்பத்தைந்து கிலோ மீட்டரிலிருந்து எழுபத்தைந்து கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசும்போது அதனை கேல் (Gale) என்பர். மணிக்கு எழுபத்தைந்து முதல் நூற்றி இருபது கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால் அதை ஸ்டார்ம் (Storm) என்பர். மணிக்கு நூற்று இருபது கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேல் வீசினால் அதனை ஹரிகேன் (Hurricane) என்பர்.