மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு!.என்னுடைய தோட்ட அனுபவம்.இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செடிகளை சுற்றி கிளறி வைப்பேன். பிச்சி, மல்லி செடிகளுக்கு, அரிசி, உளுந்து கழுவிய நீரையும், கருவேப்பிலை செடிக்கு மட்டன், சிக்கன் கழுவிய நீரையும், விடுவேன். ரோஜா செடிக்கு முட்டை ஓட்டை பொடியாக உடைத்து செடியைச் சுற்றி புதைத்து விடுவேன். வெங்காயம், உருளைக்கிழங்கு பீட்ரூட் இவற்றின் தோலையும் செடியைச் சுற்றி வைப்பேன். இடை இடையே உரமண், செம்மண் சேர்த்துக் கொள்வேன்.அதனால் செடி பசுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பூக்களும் நிறைய பூக்கும்.பூச்சிகள் வருவது போல் இருந்தால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து அரை பக்கெட் தண்ணீரில் கலந்து செடிகளின் மேல் தெளித்து விடுவேன். பாரிஜாதம், துளசி, மணிப்ளேன் போன்ற பல வகையான செடிகளும் வைத்திருக்கிறேன்..மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்: வளர்ப்பு பைகள், தேங்காய் நார்க்கழிவு, மண்புழு உரம், விதைகள்..பராமரிக்கும் முறை:1) செடிகள் வளர்ப்பதற்கு தேங்காய் நார் பைகள் நன்றாக இருக்கும். இது அதிக நேரம் ஈரத்தன்மையுடனும், பளு அற்றதாகவும் இருக்கும்..2) பை அல்லது தொட்டியின் அடிப்புறம் நீர் வெளியேற துவாரங்கள் தேவை..3) செடி பைகளையோ,தொட்டியையோ நெருக்கமாக வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்..4) கோடையில் காலை, மாலை இரு வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்..5) பூச்சி அண்டாமல் இருக்க வேம்பு பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்.6) பஞ்சகவ்யம் 50 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கலாம்.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.***********************.என் வீட்டு மொட்டைமாடியில், ஓமவல்லி, கத்தாழை, மஞ்சள், கருவேப்பிலை, மாமரம், பிரண்டை , மல்லிகை , ரோஜா, துளசி என்று தொட்டியில் வளர்த்து வருகிறேன்! மா இலைகளும் துளசியும் மல்லிகையும், ரோஜாவும், பூஜைக்கும் பண்டிகைகளுக்கும் பயன் படுத்துவேன்! பிரண்டை, கருவேப்பிலை சமையலுக்கு! தர்பூசணி, காய்கறிகளை குரங்குகள் அழித்து விட்டன! தற்காப்பு வேலி அமைத்தபின் மீண்டும் அவற்றை மீண்டும் பயிர் செய்வேன்!– வசந்தா கோவிந்தன், பெங்களூரு.***********************.எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் எல்லாவித பூச்செடிகளையும் வைத்திருக்கிறோம். எங்க வீட்டு மாடியில் மாடித்தோட்டம் போட வேண்டுமென்பதற்காகவே மாடியில் வீடு கட்டவில்லை. வயதான தென்னை மரங்கள் காய்த்து ஓய்ந்ததும் அவற்றை அறுத்து உட்காருவதற்கு ஆசனமாக மாடியில் அமைத்திருக்கிறோம். சிறுசிறு தொட்டிகளை வாங்கி அதில் துளசி, செம்பருத்தி போன்ற செடிகளை நட்டு பராமரித்து வருகிறோம்..வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களையும் சாமி படத்துக்கு வைக்கும் பூக்கள் காய்ந்த பிறகு அவற்றை மாடி தோட்டத்தில் உள்ள தொட்டியில் போடுவோம் . அவை நல்ல எருவாக மாறி செடி செழித்து வளரும் காலை, மாலை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவதால் எங்கள் மாடி தோட்டம் பலவித பலன்களைக் கொடுக்கிறது.– உஷா முத்துராமன், திருநகர். .***********************.எங்கள் வீட்டில் மாடி தோட்டம் அமைத்து அதில் பச்சைமிளகாய், தக்காளி, அவரை (செடி வகை) கொத்தமல்லி, சில கீரை வகைகள், மூலிகை செடிகள், துளசி, கற்பூரவல்லி, புதினா என ரசாயன கலப்பற்ற செடிகளை வளர்த்து வருகிறோம். இதன் ருசியே தனிதான். சமைக்கும்போது சீக்கிரமும் காய்கள் வெந்து விடும்..1) கீரை வகைகளை விளைவிக்க அரை அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதும். அகலமான சிறு தொட்டிகள், பிளாஸ்டிக் பைகளில் கூட கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை வளர்த்து விடலாம்..2) வீட்டில் உள்ள மரங்களின் உதிர்ந்த இலைகள், மக்கிய காய்கறி குப்பைகள், காய்ந்த சருகுகள் ஆகியவற்றை மண்ணுடன் கலந்து விட சூப்பரான உரம் தயார்..3) காய்ந்த சாணம் அல்லது வறட்டியை நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு கைகளால் உதிக்க உதிர்ந்துவிடும். ஆட்டுப்புழுக்கை கிடைத்தால் இன்னும் நல்லது. இவற்றை எல்லாம் சிறந்த உரமாக மாடித் தோட்டத்துக்குப் பயன் படுத்தலாம்..4) செடிகளுக்கு காலையில் நீர் விடுவதை விட மாலையில் விடுதல் நல்லது..5) பசுமையான செடிகள் மாடியில் வளர்வதால் நம் வீடும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் செடிகளுக்கு நடுவே நடக்கும்போது மனமும் குளிர்ச்சிடையும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை.***********************.இதோ எங்க மாடித்தோட்டம்!.ஏற்கெனவே எங்க மாடி பால்கனியில் பூச்செடிகள் இருக்கின்றன. இப்போது சில மாதங்களாக என் மகனும் மருமகளும் சேர்ந்து மொட்டை மாடியில் அரசு தோட்டக்கலை அலுவலகத்தில் காய், கனி, கீரை செடிகளுக்குத் தேவையான பைகள், விதைகள், தென்னை நார் உரம் (கோகோபிட்) போன்ற எல்லாவற்றையும் வாங்கிவந்து மாடித்தோட்டம் அமைத்திருக் கிறார்கள். அன்றாடம் மாடி ஏற முடியாத எனக்கு செடிகளின் வளர்ச்சியை கேமராவில் படம் பிடித்துக் காட்டுவார்கள்..அதுமட்டுமில்லாமல்; ஆன்லைனில் பலவித அடினியம், செம்பருத்தி செடிகளையும் வரவழைத்து வளர்த்து வருகிறோம்.– இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்..***********************.சிம்பிளான மாடித்தோட்டம்..கலர் கலர் க்ரோபேக் கிடையாது. பெயிண்ட் / பிளாஸ்டிக் டப்பாதான். தேவையான காய், கீரை செடி மட்டும் வளர்க்கிறேன். தினமும் தண்ணீர் விட்டு பூச்சி வராமல் பார்த்துக் கொள்கிறேன். ஒரு பாகற்காய் கொடி 200 காய் காய்த்தது மறக்க முடியாதது. நிழலுக்கான அமைப்பு இருந்தாலன்றி சம்மரில் செடி வளர்ப்பதைத் தவிருங்கள். சிறந்த முறையில் மாடித்தோட்டம் பராமரித்ததற்காக பரிசும் பெற்று இருக்கிறேன்.– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்..***********************.முதல் முறையாக மாடித்தோட்டம் அமைக்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில செடிகள் அதில் தவறாது இடம் பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும். துளசி, கற்பூரவல்லி, தொட்டால் சிணுங்கி, பேபி ரோஸ், சங்கு பூ, கற்றாழை, புதினா, கொத்தமல்லி.– சுந்தரி காந்தி, பூந்தமல்லி..***********************.அபார்ட்மெண்ட் ஒன்றின், கீழ் ப்ளோரில் நான் வசிப்பதால் மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பது, சிரமம். ஆனால், மாடித் தோட்டம் குறித்து கேள்விப்பட்ட டிப்ஸை சொல்லலாமே..சில தொட்டிகளில் கறிவேப்பிலை செடியை நட்டு, கவனமாக வளர்க்கலாம். தினசரி ப்ரெஷ் கறிவேப்பிலை ஐந்தை வெறும் வயிற்றில் மென்று விழுங்கினால், ஆரோக்கியம் நிச்சயம். கோவையில், தன் வீட்டு மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை வளர்த்த தோழியின் அனுபவம் இது.– என்.கோமதி, நெல்லை.***********************.பராமரிப்பு டிப்ஸ்….மல்லி செடிகள் அதிகமாகப் பூப்பதற்கு அதன் நுனிகளையும் இலைகளையும் அதிகமாக இல்லாமல் நீக்கி விடவும். தண்ணீர் அதிகம் தேவையில்லை.செடி முருங்கையை மாடியில் வைத்து வளர்க்கலாம். வேரின் அருகே கட்டிப் பெருங்காயம் வைக்க, பூக்கள் உதிராமல் அதிகமாக காய் பிடிக்கும்.செம்பருத்தி, செடிகளில் வரும் பூச்சிகளை விரட்ட இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை சரிசமமாக அரைத்து நீரில் கலந்து வடிகட்டி ஸ்ப்ரே செய்தால் பூச்சிகள் ஒழியும்.புளித்த மோர், இட்லி மாவு தீர்ந்த பின் கழுவுகிற புளித்த தண்ணீரை பூச்செடிகளுக்கு ஊற்ற பூச்சிகள் அண்டாது நன்றாகப் பூக்கும்.– ஷெண்பகம் பாண்டியன் , சத்துவாச்சாரி .
மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு!.என்னுடைய தோட்ட அனுபவம்.இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செடிகளை சுற்றி கிளறி வைப்பேன். பிச்சி, மல்லி செடிகளுக்கு, அரிசி, உளுந்து கழுவிய நீரையும், கருவேப்பிலை செடிக்கு மட்டன், சிக்கன் கழுவிய நீரையும், விடுவேன். ரோஜா செடிக்கு முட்டை ஓட்டை பொடியாக உடைத்து செடியைச் சுற்றி புதைத்து விடுவேன். வெங்காயம், உருளைக்கிழங்கு பீட்ரூட் இவற்றின் தோலையும் செடியைச் சுற்றி வைப்பேன். இடை இடையே உரமண், செம்மண் சேர்த்துக் கொள்வேன்.அதனால் செடி பசுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பூக்களும் நிறைய பூக்கும்.பூச்சிகள் வருவது போல் இருந்தால் மஞ்சளையும், வேப்பிலையையும் அரைத்து அரை பக்கெட் தண்ணீரில் கலந்து செடிகளின் மேல் தெளித்து விடுவேன். பாரிஜாதம், துளசி, மணிப்ளேன் போன்ற பல வகையான செடிகளும் வைத்திருக்கிறேன்..மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள்: வளர்ப்பு பைகள், தேங்காய் நார்க்கழிவு, மண்புழு உரம், விதைகள்..பராமரிக்கும் முறை:1) செடிகள் வளர்ப்பதற்கு தேங்காய் நார் பைகள் நன்றாக இருக்கும். இது அதிக நேரம் ஈரத்தன்மையுடனும், பளு அற்றதாகவும் இருக்கும்..2) பை அல்லது தொட்டியின் அடிப்புறம் நீர் வெளியேற துவாரங்கள் தேவை..3) செடி பைகளையோ,தொட்டியையோ நெருக்கமாக வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்..4) கோடையில் காலை, மாலை இரு வேளையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்..5) பூச்சி அண்டாமல் இருக்க வேம்பு பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்.6) பஞ்சகவ்யம் 50 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்துத் தெளிக்கலாம்.– வி.கலைமதி சிவகுரு, கோணம்.***********************.என் வீட்டு மொட்டைமாடியில், ஓமவல்லி, கத்தாழை, மஞ்சள், கருவேப்பிலை, மாமரம், பிரண்டை , மல்லிகை , ரோஜா, துளசி என்று தொட்டியில் வளர்த்து வருகிறேன்! மா இலைகளும் துளசியும் மல்லிகையும், ரோஜாவும், பூஜைக்கும் பண்டிகைகளுக்கும் பயன் படுத்துவேன்! பிரண்டை, கருவேப்பிலை சமையலுக்கு! தர்பூசணி, காய்கறிகளை குரங்குகள் அழித்து விட்டன! தற்காப்பு வேலி அமைத்தபின் மீண்டும் அவற்றை மீண்டும் பயிர் செய்வேன்!– வசந்தா கோவிந்தன், பெங்களூரு.***********************.எங்கள் வீட்டு மாடியில் நாங்கள் எல்லாவித பூச்செடிகளையும் வைத்திருக்கிறோம். எங்க வீட்டு மாடியில் மாடித்தோட்டம் போட வேண்டுமென்பதற்காகவே மாடியில் வீடு கட்டவில்லை. வயதான தென்னை மரங்கள் காய்த்து ஓய்ந்ததும் அவற்றை அறுத்து உட்காருவதற்கு ஆசனமாக மாடியில் அமைத்திருக்கிறோம். சிறுசிறு தொட்டிகளை வாங்கி அதில் துளசி, செம்பருத்தி போன்ற செடிகளை நட்டு பராமரித்து வருகிறோம்..வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களையும் சாமி படத்துக்கு வைக்கும் பூக்கள் காய்ந்த பிறகு அவற்றை மாடி தோட்டத்தில் உள்ள தொட்டியில் போடுவோம் . அவை நல்ல எருவாக மாறி செடி செழித்து வளரும் காலை, மாலை தண்ணீர் ஊற்றி பராமரித்து வருவதால் எங்கள் மாடி தோட்டம் பலவித பலன்களைக் கொடுக்கிறது.– உஷா முத்துராமன், திருநகர். .***********************.எங்கள் வீட்டில் மாடி தோட்டம் அமைத்து அதில் பச்சைமிளகாய், தக்காளி, அவரை (செடி வகை) கொத்தமல்லி, சில கீரை வகைகள், மூலிகை செடிகள், துளசி, கற்பூரவல்லி, புதினா என ரசாயன கலப்பற்ற செடிகளை வளர்த்து வருகிறோம். இதன் ருசியே தனிதான். சமைக்கும்போது சீக்கிரமும் காய்கள் வெந்து விடும்..1) கீரை வகைகளை விளைவிக்க அரை அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதும். அகலமான சிறு தொட்டிகள், பிளாஸ்டிக் பைகளில் கூட கீரை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை வளர்த்து விடலாம்..2) வீட்டில் உள்ள மரங்களின் உதிர்ந்த இலைகள், மக்கிய காய்கறி குப்பைகள், காய்ந்த சருகுகள் ஆகியவற்றை மண்ணுடன் கலந்து விட சூப்பரான உரம் தயார்..3) காய்ந்த சாணம் அல்லது வறட்டியை நீரில் அரை மணி நேரம் ஊறவிட்டு கைகளால் உதிக்க உதிர்ந்துவிடும். ஆட்டுப்புழுக்கை கிடைத்தால் இன்னும் நல்லது. இவற்றை எல்லாம் சிறந்த உரமாக மாடித் தோட்டத்துக்குப் பயன் படுத்தலாம்..4) செடிகளுக்கு காலையில் நீர் விடுவதை விட மாலையில் விடுதல் நல்லது..5) பசுமையான செடிகள் மாடியில் வளர்வதால் நம் வீடும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் செடிகளுக்கு நடுவே நடக்கும்போது மனமும் குளிர்ச்சிடையும்.– கே.எஸ்.கிருஷ்ணவேணி, சென்னை.***********************.இதோ எங்க மாடித்தோட்டம்!.ஏற்கெனவே எங்க மாடி பால்கனியில் பூச்செடிகள் இருக்கின்றன. இப்போது சில மாதங்களாக என் மகனும் மருமகளும் சேர்ந்து மொட்டை மாடியில் அரசு தோட்டக்கலை அலுவலகத்தில் காய், கனி, கீரை செடிகளுக்குத் தேவையான பைகள், விதைகள், தென்னை நார் உரம் (கோகோபிட்) போன்ற எல்லாவற்றையும் வாங்கிவந்து மாடித்தோட்டம் அமைத்திருக் கிறார்கள். அன்றாடம் மாடி ஏற முடியாத எனக்கு செடிகளின் வளர்ச்சியை கேமராவில் படம் பிடித்துக் காட்டுவார்கள்..அதுமட்டுமில்லாமல்; ஆன்லைனில் பலவித அடினியம், செம்பருத்தி செடிகளையும் வரவழைத்து வளர்த்து வருகிறோம்.– இந்திராணி பொன்னுசாமி, ஈக்காட்டுதாங்கல்..***********************.சிம்பிளான மாடித்தோட்டம்..கலர் கலர் க்ரோபேக் கிடையாது. பெயிண்ட் / பிளாஸ்டிக் டப்பாதான். தேவையான காய், கீரை செடி மட்டும் வளர்க்கிறேன். தினமும் தண்ணீர் விட்டு பூச்சி வராமல் பார்த்துக் கொள்கிறேன். ஒரு பாகற்காய் கொடி 200 காய் காய்த்தது மறக்க முடியாதது. நிழலுக்கான அமைப்பு இருந்தாலன்றி சம்மரில் செடி வளர்ப்பதைத் தவிருங்கள். சிறந்த முறையில் மாடித்தோட்டம் பராமரித்ததற்காக பரிசும் பெற்று இருக்கிறேன்.– ஜெயகாந்தி மகாதேவன், பாலவாக்கம்..***********************.முதல் முறையாக மாடித்தோட்டம் அமைக்க நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில செடிகள் அதில் தவறாது இடம் பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும். துளசி, கற்பூரவல்லி, தொட்டால் சிணுங்கி, பேபி ரோஸ், சங்கு பூ, கற்றாழை, புதினா, கொத்தமல்லி.– சுந்தரி காந்தி, பூந்தமல்லி..***********************.அபார்ட்மெண்ட் ஒன்றின், கீழ் ப்ளோரில் நான் வசிப்பதால் மாடித் தோட்டம் அமைத்து பராமரிப்பது, சிரமம். ஆனால், மாடித் தோட்டம் குறித்து கேள்விப்பட்ட டிப்ஸை சொல்லலாமே..சில தொட்டிகளில் கறிவேப்பிலை செடியை நட்டு, கவனமாக வளர்க்கலாம். தினசரி ப்ரெஷ் கறிவேப்பிலை ஐந்தை வெறும் வயிற்றில் மென்று விழுங்கினால், ஆரோக்கியம் நிச்சயம். கோவையில், தன் வீட்டு மாடித்தோட்டத்தில் கறிவேப்பிலை வளர்த்த தோழியின் அனுபவம் இது.– என்.கோமதி, நெல்லை.***********************.பராமரிப்பு டிப்ஸ்….மல்லி செடிகள் அதிகமாகப் பூப்பதற்கு அதன் நுனிகளையும் இலைகளையும் அதிகமாக இல்லாமல் நீக்கி விடவும். தண்ணீர் அதிகம் தேவையில்லை.செடி முருங்கையை மாடியில் வைத்து வளர்க்கலாம். வேரின் அருகே கட்டிப் பெருங்காயம் வைக்க, பூக்கள் உதிராமல் அதிகமாக காய் பிடிக்கும்.செம்பருத்தி, செடிகளில் வரும் பூச்சிகளை விரட்ட இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை சரிசமமாக அரைத்து நீரில் கலந்து வடிகட்டி ஸ்ப்ரே செய்தால் பூச்சிகள் ஒழியும்.புளித்த மோர், இட்லி மாவு தீர்ந்த பின் கழுவுகிற புளித்த தண்ணீரை பூச்செடிகளுக்கு ஊற்ற பூச்சிகள் அண்டாது நன்றாகப் பூக்கும்.– ஷெண்பகம் பாண்டியன் , சத்துவாச்சாரி .