-மனநல ஆலோசகர் ஆனந்தி கார்த்திக்.தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞர்!.நாம் அனைவரும் நமது உடல் ஆரோக்கியத்தை மிகச் சிறப்பாகப் பேணி வருகிறோம். உடலில் சிறு பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று கொள்கிறோம். ஆனால், மனநலம் குறித்த பிரச்னைகளை வெளியே பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம். மன நல சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதை பயத்துடனும் தயக்கத்துடனும்தான் மேற்கொள்கிறோம். உடல் நலனை பாதுகாத்துப் பராமரிப்பது போலதான் மனநலத்தையும் பராமரிக்க வேண்டும் என்கிறார் சென்னையை சேர்ந்த மன நல கவுன்சிலர் ஆனந்தி கார்த்திக். இவர் மனநலம் குறித்த கேஸ் ஹிஸ்டரி ஒன்றை "சவாலே சமாளி" பகுதிக்காக நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவரது பகிர்விலிருந்து சில துளிகள் …."நான் ஆனந்தி கார்த்திக். சென்னையில் கவுன்சிலிங் துறையில் கடந்தபதினாறு ஆண்டுகளாக மனநலம்குறித்த சிகிச்சையில் ஆலோசகராகஇருந்து வருகிறேன்.தற்போது சைக்கோ தெரபியில்ஒரு சூப்பரவைஸரின் மேற்பார்வையில்டிரைனராக பணிபுரிந்து வருகிறேன்.இதுவரை என்னிடம் மனநலம்சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்காக ஆலோசனை கேட்டு வருபவர்கள் பலர். அவர்களுக்கு எனது தொடர்ந்த ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் அளித்து வருகிறேன்..அப்படி என்னிடம் வந்தவரில் ஒருவர்தான் அந்த இருபத்தி ஐந்து வயது இளைஞர். பொறியியல் படித்து விட்டு அயல்நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகியிருந்தார். அவரது அயல்நாட்டு MS படிப்பிற்கு பணம் தர வீட்டில் தயங்கியிருந்தனர். அந்த இளைஞர் மருத்துவ மாணவி ஒருவரையும் காதலித்து வந்தார். அவரது மேற்படிப்பு ஆசையை நிராகரித்த அவரது குடும்பம், அவர் தங்களது குடும்ப வியாபாரத்தை நடத்திச் செல்ல விரும்பியதும், அவரது காதலை ஏற்காத நிலையும் அவரை மிகப்பெரிய டிப்ரஷனில் தள்ளி விட்டது..அந்த இளைஞரை நான் கவுன்சிலிங் செய்த போது அவருக்குள் தற்கொலை எண்ணம் விரவிக்கிடப்பதைக் கண்டறிந்தேன். அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு ஆலோசனை மட்டுமல்லாது; மருந்துகளும் தேவை என்பதை உணர்ந்தேன். அவரை MD சைக்காலஜிஸ்ட் மருத்துவரைப் பார்த்து விட்டு பின்னர் வந்து என்னைச் சந்திக்குமாறு அறிவுறுத்தினேன். மனநல மருத்துவர் அந்த இளைஞருக்கு மருந்துகளை பரிந்துரை செய்வார் என்பதாலேயே மருத்துவரைப் பார்க்கச் சொன்னேன். ஆனால், அந்த இளைஞருக்கு மருத்துவரைப் பார்க்கவோ மருந்துகளை எடுத்துக் கொள்ளவோ நிறைய தயக்கம் இருந்தது. அறிவியல் பூர்வமாக விளக்கி சொல்லி எனது தொடர்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகே அந்த இளைஞர் மருத்துவரைப் பார்க்க சம்மதித்தார். அப்போதும் பாதி நாட்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டும் பாதி நாட்கள் மருந்துகளை எடுக்காமலும் கவுன்சிலிங் வருவார். அப்போதெல்லாம் அவரை தவறாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் சொல்வேன். அவர் மருந்து எடுத்துக்கொள்ளாத நாட்களில் வரும் எமோஷன் இம்பேலன்ஸிங், அதாவது உணர்ச்சி தடுமாறல்கள் ஏற்படுவதையும், தூக்கமின்மை, மன அமைதியின்மை மற்றும் இதர மனச்சிக்கல்களையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன். அந்த சில நேரங்களில் (உணர்வுகள் தாறுமாறாக உணர்ச்சி மாறும் போதெல்லாம்) தற்கொலை எண்ணம் தலைதூக்குவதை உணர முடிந்தது..அவருக்கு மருந்துகளை விட கவுன்சிலிங் சிகிச்சை குறித்த நம்பிக்கைகள் அதிகமிருந்தது. அப்போது அவர் தொடர்ந்து, அதாவது வாரம் ஒரு முறை கவுன்சிலிங்கிற்காக என்னிடம் வந்துக்கொண்டிருந்தார். அவர் கவுன்சிலிங் வருவது அவரது அன்னை மற்றும் காதலியைத் தவிர இதர குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. அவர் சாதாரணமாக இருக்கும்போது மற்றவர்களிடம் இணக்கமாக இருப்பார். ஆனால், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது அவரது மனநிலை வேறு மாதிரியானதாக இருக்கும். அதனால் இது இரண்டுக்குமான வேறுபாடுகளை விளக்கிச் சொல்லி மருந்தின் அவசியத்தை உணர்த்தினேன். மேலும், அவரது நிலை குறித்து அவரது அம்மா மற்றும் காதலி இருவரையும் அழைத்துப் பேசினேன். மருத்துவ மாணவியான அவரது காதலியிடம் பேசுவது எனக்கு சுலபமானதாகவும், உபயோகமாகவும் இருந்தது. அந்த இளைஞரின் அம்மாவிடம் அவரைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் குறித்து விளக்கிக் கூறினேன்..இது போன்ற மனநிலையில் உள்ளவர் களுக்குப் பொதுவாகவே 'தாம் தோற்றுவிடுவோமோ' என்ற பயம் ஆட்டுவிக்கும். எனது தொடர்ந்த ஆலோசனையில் அந்தத் தோல்வி பயமே அவரது மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் எனப் புரிய வைத்தேன். அவர் என்னை மிக அதிகமாக நம்பினார். அந்த நம்பிக்கை அவரது மன அழுத்தத்தைக் குறைக்க எனக்குப் பெரிதும் உதவியதென்றால் மிகையில்லை...எனது தொடர்ந்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் பூரணமாக குணமாகிய அவரது மனநிலை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு சமூக விழாவில் அவரையும் அவரது (காதலியான) மனைவியையும் பார்த்தபோது எனக்குப் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பல சோதனைகளுக்குப் பிறகான பெரும் சாதனையாகவே இதை உணர்ந்தேன்..மனநல பிரச்னைகளுக்கு காலம் தாழ்த்தாது சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மன ஆரோக்கியத்தைக் காக்க முடியும். இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு பயமோ தயக்கமோ தேவையில்லை. மனநல சந்தேகங்களுக்கு மனநல மருத்துவரையோ அல்லது கவுன்சிலரையோ தயக்கமின்றி அணுகுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எத்தகைய மன அழுத்தத்தையும் தொடர்ந்த சிகிச்சையில் பரிபூரணமாக சரி செய்ய முடியும். நம்புங்கள்.".தொகுப்பு: தனுஜா ஜெயராமன்
-மனநல ஆலோசகர் ஆனந்தி கார்த்திக்.தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞர்!.நாம் அனைவரும் நமது உடல் ஆரோக்கியத்தை மிகச் சிறப்பாகப் பேணி வருகிறோம். உடலில் சிறு பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்று கொள்கிறோம். ஆனால், மனநலம் குறித்த பிரச்னைகளை வெளியே பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம். மன நல சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதை பயத்துடனும் தயக்கத்துடனும்தான் மேற்கொள்கிறோம். உடல் நலனை பாதுகாத்துப் பராமரிப்பது போலதான் மனநலத்தையும் பராமரிக்க வேண்டும் என்கிறார் சென்னையை சேர்ந்த மன நல கவுன்சிலர் ஆனந்தி கார்த்திக். இவர் மனநலம் குறித்த கேஸ் ஹிஸ்டரி ஒன்றை "சவாலே சமாளி" பகுதிக்காக நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவரது பகிர்விலிருந்து சில துளிகள் …."நான் ஆனந்தி கார்த்திக். சென்னையில் கவுன்சிலிங் துறையில் கடந்தபதினாறு ஆண்டுகளாக மனநலம்குறித்த சிகிச்சையில் ஆலோசகராகஇருந்து வருகிறேன்.தற்போது சைக்கோ தெரபியில்ஒரு சூப்பரவைஸரின் மேற்பார்வையில்டிரைனராக பணிபுரிந்து வருகிறேன்.இதுவரை என்னிடம் மனநலம்சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்காக ஆலோசனை கேட்டு வருபவர்கள் பலர். அவர்களுக்கு எனது தொடர்ந்த ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் அளித்து வருகிறேன்..அப்படி என்னிடம் வந்தவரில் ஒருவர்தான் அந்த இருபத்தி ஐந்து வயது இளைஞர். பொறியியல் படித்து விட்டு அயல்நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகியிருந்தார். அவரது அயல்நாட்டு MS படிப்பிற்கு பணம் தர வீட்டில் தயங்கியிருந்தனர். அந்த இளைஞர் மருத்துவ மாணவி ஒருவரையும் காதலித்து வந்தார். அவரது மேற்படிப்பு ஆசையை நிராகரித்த அவரது குடும்பம், அவர் தங்களது குடும்ப வியாபாரத்தை நடத்திச் செல்ல விரும்பியதும், அவரது காதலை ஏற்காத நிலையும் அவரை மிகப்பெரிய டிப்ரஷனில் தள்ளி விட்டது..அந்த இளைஞரை நான் கவுன்சிலிங் செய்த போது அவருக்குள் தற்கொலை எண்ணம் விரவிக்கிடப்பதைக் கண்டறிந்தேன். அவரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு ஆலோசனை மட்டுமல்லாது; மருந்துகளும் தேவை என்பதை உணர்ந்தேன். அவரை MD சைக்காலஜிஸ்ட் மருத்துவரைப் பார்த்து விட்டு பின்னர் வந்து என்னைச் சந்திக்குமாறு அறிவுறுத்தினேன். மனநல மருத்துவர் அந்த இளைஞருக்கு மருந்துகளை பரிந்துரை செய்வார் என்பதாலேயே மருத்துவரைப் பார்க்கச் சொன்னேன். ஆனால், அந்த இளைஞருக்கு மருத்துவரைப் பார்க்கவோ மருந்துகளை எடுத்துக் கொள்ளவோ நிறைய தயக்கம் இருந்தது. அறிவியல் பூர்வமாக விளக்கி சொல்லி எனது தொடர்ந்த ஆலோசனைகளுக்குப் பிறகே அந்த இளைஞர் மருத்துவரைப் பார்க்க சம்மதித்தார். அப்போதும் பாதி நாட்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டும் பாதி நாட்கள் மருந்துகளை எடுக்காமலும் கவுன்சிலிங் வருவார். அப்போதெல்லாம் அவரை தவறாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திச் சொல்வேன். அவர் மருந்து எடுத்துக்கொள்ளாத நாட்களில் வரும் எமோஷன் இம்பேலன்ஸிங், அதாவது உணர்ச்சி தடுமாறல்கள் ஏற்படுவதையும், தூக்கமின்மை, மன அமைதியின்மை மற்றும் இதர மனச்சிக்கல்களையும் எடுத்துச் சொல்லி புரிய வைத்தேன். அந்த சில நேரங்களில் (உணர்வுகள் தாறுமாறாக உணர்ச்சி மாறும் போதெல்லாம்) தற்கொலை எண்ணம் தலைதூக்குவதை உணர முடிந்தது..அவருக்கு மருந்துகளை விட கவுன்சிலிங் சிகிச்சை குறித்த நம்பிக்கைகள் அதிகமிருந்தது. அப்போது அவர் தொடர்ந்து, அதாவது வாரம் ஒரு முறை கவுன்சிலிங்கிற்காக என்னிடம் வந்துக்கொண்டிருந்தார். அவர் கவுன்சிலிங் வருவது அவரது அன்னை மற்றும் காதலியைத் தவிர இதர குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாது. அவர் சாதாரணமாக இருக்கும்போது மற்றவர்களிடம் இணக்கமாக இருப்பார். ஆனால், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது அவரது மனநிலை வேறு மாதிரியானதாக இருக்கும். அதனால் இது இரண்டுக்குமான வேறுபாடுகளை விளக்கிச் சொல்லி மருந்தின் அவசியத்தை உணர்த்தினேன். மேலும், அவரது நிலை குறித்து அவரது அம்மா மற்றும் காதலி இருவரையும் அழைத்துப் பேசினேன். மருத்துவ மாணவியான அவரது காதலியிடம் பேசுவது எனக்கு சுலபமானதாகவும், உபயோகமாகவும் இருந்தது. அந்த இளைஞரின் அம்மாவிடம் அவரைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் குறித்து விளக்கிக் கூறினேன்..இது போன்ற மனநிலையில் உள்ளவர் களுக்குப் பொதுவாகவே 'தாம் தோற்றுவிடுவோமோ' என்ற பயம் ஆட்டுவிக்கும். எனது தொடர்ந்த ஆலோசனையில் அந்தத் தோல்வி பயமே அவரது மன அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் எனப் புரிய வைத்தேன். அவர் என்னை மிக அதிகமாக நம்பினார். அந்த நம்பிக்கை அவரது மன அழுத்தத்தைக் குறைக்க எனக்குப் பெரிதும் உதவியதென்றால் மிகையில்லை...எனது தொடர்ந்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு முற்றிலும் பூரணமாக குணமாகிய அவரது மனநிலை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு சமூக விழாவில் அவரையும் அவரது (காதலியான) மனைவியையும் பார்த்தபோது எனக்குப் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பல சோதனைகளுக்குப் பிறகான பெரும் சாதனையாகவே இதை உணர்ந்தேன்..மனநல பிரச்னைகளுக்கு காலம் தாழ்த்தாது சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மன ஆரோக்கியத்தைக் காக்க முடியும். இத்தகைய சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு பயமோ தயக்கமோ தேவையில்லை. மனநல சந்தேகங்களுக்கு மனநல மருத்துவரையோ அல்லது கவுன்சிலரையோ தயக்கமின்றி அணுகுங்கள். அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எத்தகைய மன அழுத்தத்தையும் தொடர்ந்த சிகிச்சையில் பரிபூரணமாக சரி செய்ய முடியும். நம்புங்கள்.".தொகுப்பு: தனுஜா ஜெயராமன்