பாகம் – 5.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.இல்லறவியல் (இல்+அறம்+இயல்) .அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை நம்முள் விதைத்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. திருவள்ளுவப் பெருமானின் இல்வாழ்க்கை , வாழ்க்கைத் துணை நலம் போன்ற அதிகாரங்கள், சங்ககால பாடல்கள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள், அனைத்தும் பின்னிப் பிணைந்து நமக்குள் நிழலாடும் போது ஒருவேளை இப்படியும் தம்பதிகள் வாழ்ந்து சென்றிருப்பார்களோ என சந்தோஷப் பெருமிதம் தோன்றும்..ஐந்திணை ஐம்பதில் காணப்படும் ஓர் அன்புப் பெருக்கு….(பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று 'ஐந்திணை ஐம்பது' இந்நூல் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்திணைகளுக்கும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டது . பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல்தான் பின்வருவது). "சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி."(ஐந்திணை ஐம்பது-38)..பாலை நிலத்தில் ஓடிக் களைத்து தாகம் எடுக்க தண்ணீர் வேண்டி ஆண் மானும் பெண் மானும் ஓர் சுனையருகே வருகின்றன. ஒரு மான் மட்டுமே அருந்த நீர் உள்ளது. ஒன்றை விட்டு மற்றொன்று நீரை அருந்தவில்லை. ஆண்மான் அருந்தட்டுமே என பெண்மானும் தன் இணை அருந்தட்டுமே என ஆண்மானுமாய் இரு மான்களும் நீரை பருகுவது போல பாசாங்கு செய்கின்றன. இங்கு இவர்களின் உயரிய அன்பு பெருக்கை காணமுடிகிறது..இப்படி மனதாலும் செயலாலும் ஒத்திசைந்து ஒருவருக்ககொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை உண்மையாகவே அறவாழ்க்கையாக அமையும்தானே….முப்பாலாம் திருக்குறளில் ஐந்தாம் அதிகாரம் "இல்வாழ்க்கை".."அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது".இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை..இதை எண்ணும் போது என் இதயத்துள் நிழலாடிய தம்பதி "சிவஞான செல்வரான அரசர் கண்டராதித்தர் மற்றும் அவரின் பட்டமகிஷி 'பெரிய பிராட்டி' என நாடு நகரமெல்லாம் போற்றப்படும் செம்பியன் மாதேவி"..சிவபக்தரான இவர்கள் இருவரையும் இணைத்து ஆதர்ச தம்பதிகளாய் வலம் வரச்செய்து கணவன் மறைவிற்குப் பின்னும் கணவனின் மனோராஜ்ய கனவுகளை நிறைவேற்றும் ஒரே குறிக்கோளுடன் வாழச்செய்த சிவபெருமானின் திருவிளையாடலைத் துதிப்பதா? இவற்றை எழுத்தாக்கி நமக்கெல்லாம் ஓர் இலக்கிய கனவு விருந்து படைத்த கல்கியை கொண்டாடுவதா? திருக்குறள் எனும் வேதம் தந்து அதிலே இந்த கதாபாத்திரங்களை நினைவுக்குள் கொண்டுவரும் திருவள்ளுவரின் மாயாஜாலத்தை வியப்பதா ஒன்றும் புரியத்தான் இல்லை போங்கள்….எனது கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வரிகளுக்காய் நம் பொன்னியின் செல்வன் புதினத்துள் ஓர் உலா வருவோம் வாருங்கள்….(பெரிய பிராட்டியார் தன் மகன் மதுராந்தகனிடம் பேசும் உரையாடல் இடம் : பழையாறை அரண்மனை).சுந்தரமூர்த்தி சுவாமிகள் மரங்களுக்கிடையில் மறைந்திருந்த மழபாடி திருக்கோயிலை கண்டுபிடித்து ஓடி வந்து இறைவன் சன்னதியில் "பொன்னார் மேனியனே!" என்ற பதிகத்தை பாடினாராம் .இந்த வரலாற்றைக் கேட்டது முதற்கொண்டு, .மன்னே! மாமணியே!மழபாடியுள் மாணிக்கமே!அன்னே உன்னையல்லால்இனியாரை நினைக்கேனே!.வரிகள் என் மனதில் பதிந்து விட்டன. கோவிலுக்கு அடிக்கடி போவேன். நடராஜ மூர்த்தியின் முன்னால் நின்று அந்த வரிகளை ஓயாது சொல்லுவேன். நாளாக ஆக என் உள்ளத்தில் மழப்பாடி இறைவர் குடிகொண்டு விட்டார். சிவபெருமானையே நான் மணந்து கொள்ளப் போவதாக மனக்கோட்டை கட்டினேன். என்னை நான் உமையாகவும் ,பார்வதியாகவும், தாட்சாய ணியாகவும் எண்ணிக்கொள்வேன். அவர்கள் சிவபெருமானை பதியாக அடைவதற்குத் தவம் செய்தது போல நானும் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்வேன். யாராவது என் கலியாணத்தைப் பற்றி பேச்சு எடுத்தால் வெறுப்பு அடைவேன். இவ்விதம் என் குழந்தைப் பருவம் சென்றது. மங்கைப் பருவத்தை அடைந்த போது என் உள்ளம் சிவபெருமானுடைய பக்தியில் முன்னைவிட அதிகமாக ஈடுபட்டது . வீட்டாரும் ஊராரும் என்னைப் 'பிச்சி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை .வீட்டில் உண்டு உறங்கிய நேரம் போக மிச்ச பொழுதையெல்லாம் கோவிலிலேயே கழித்தேன். பூஜைக்குரிய மலர்களைப் பறித்து விதவிதமான மாலைகளைத் தொடுத்து நடராஜப் பெருமானுக்கு அணியச் செய்து பார்த்து மகிழ்வேன்!.நெடு நேரம் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். இவ்விதம் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு மனதில் இறைவனையே தியானித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கலகலவென்று சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தேன். என் எதிரே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் முன்னால் நின்ற ஒருவர் மீது தான் என் கண்களும் கருத்தும் சென்றன. நான் மனதில் தியானித்துக்கொண்டிருந்த சிவபெருமான். தாமே தம் பரிவாரங்களுடன் என்னை ஆட்கொள்ள வந்துவிட்டார் என்று எண்ணிக் கொண்டேன். எழுந்து நின்று தலை குனிந்து வணங்கி நின்றேன் .என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பொழிந்தது. இதை அவர் கவனித்து இருக்க வேண்டும்..'இந்தப் பெண் யார்? இவள் ஏன் கண்ணீர் விட்டு அழுகிறாள்?' என்று ஒரு குரல் கேட்டது..அதற்கு என் தந்தையின் குரல் , 'இவள் என் மகள். பிஞ்சிலே பழுத்தவளைப் போல இவளுக்கு இப்போதே சிவபக்தி வந்துவிட்டது. ஓயாமல் இப்படி கோவிலில் வந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பதிகம் பாடுவதும் ,கண்ணீர் விடுவதுமாயிருக்கிறாள் !"என்று கூறிய மறுமொழி என் காதில் விழுந்தது..மறுபடி நான் நிமிர்ந்து பார்த்தபோது, முன்னால் நின்றவர் சிவபெருமான் இல்லையென்றும் யாரோ அரச குலத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன் .எனக்கு அவமானம் தாங்கவில்லை .அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி போய் வீட்டை அடைந்தேன். ஆனால் என்னை ஆட்கொண்டவர் என்னை விடவில்லை. என் தந்தையுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார். மகனே! அவர்தான் என் கணவரும், உன் அருமை தந்தையுமாகிய கண்டராதித்த தேவர்!"."பிறகு உன் தந்தையைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டேன். அவர் சிறிது காலத்துக்கு முன்புதான் சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவ ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்கு பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகிவிட்டார். மறுபடி கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது .என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். நானோ சிவபெருமானே மனித உருவங்கொண்டு என்னை ஆட்கொள்ள வந்திருப்பதாக எண்ணிப் பரவசம் கொண்டிருந்தேன். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன்.."மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம் .சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம்."."உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை .அவர் புண்ணிய புருஷர். அவருடைய உள்ளம் சதா சர்வகாலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தனது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தரசோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். முன்னமே சொன்னேனே, அது போல் அவருக்கு மறுபடியும் மணம் செய்து கொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால், அவருடைய மன உறுதியை க் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நான் சிவபக்தியில் ஈடுபட்ட 'பிச்சி' என்று அறிந்ததனாலேயே அவர் என் மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரை தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. இந்த உலகில் இறைவனைக் கண்ணார கண்டு மகிழ்ந்த மகான்கள் வெகு சிலர்தான். சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து, உன் தந்தைக்குக் காட்சி தந்து, அவரை இம்மண்ணுலகிலிருந்து அழைத்துப் போனார். நான் இப்போது உன்னை என் ஊனக்கண்களால் பார்ப்பதுபோல உன் தந்தை பரமசிவனைத் தரிசித்தார்..(செம்பியன் மாதேவி , திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி மற்றும் மக்கள், இடம்: சபா மண்டபம்)."பாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் வந்திருந்த பெரியவரைப் பார்த்து," ஐயா இந்த இளம் பிள்ளையைப் பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் பதிகங்களை சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தரமூர்த்தியின் பாடல்களையும் தனித்தனியாக தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும் இது என் கணவருடைய விருப்பம். அதை என் வாணாளில் நிறைவேற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்..இப்படி தனது வாழ்நாளின் கடைசிவரை இல்லற தர்மத்தை இம்மியளவும் பிசகாமல் செய்து வாழ்ந்த மகாராஜா கண்டராதித்தர் ,மகாராணி செம்பியன் மாதேவியார் இருவரும் இன்றும் எனது இல்வாழ்க்கை வழிகாட்டி…
பாகம் – 5.-சுசீலா மாணிக்கம்.ஓவியம்: பத்மவாசன்.இல்லறவியல் (இல்+அறம்+இயல்) .அறமும் பொருளும் ஈட்டப்பட்ட மனித வாழ்வு இல்லறத்தில்தான் முழுமையடைகிறது எனலாம். சங்க காலம் தொட்டே நம் தமிழ் மரபு பற்பல இல்லற விழுமியங்களை நம்முள் விதைத்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது. திருவள்ளுவப் பெருமானின் இல்வாழ்க்கை , வாழ்க்கைத் துணை நலம் போன்ற அதிகாரங்கள், சங்ககால பாடல்கள் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள், அனைத்தும் பின்னிப் பிணைந்து நமக்குள் நிழலாடும் போது ஒருவேளை இப்படியும் தம்பதிகள் வாழ்ந்து சென்றிருப்பார்களோ என சந்தோஷப் பெருமிதம் தோன்றும்..ஐந்திணை ஐம்பதில் காணப்படும் ஓர் அன்புப் பெருக்கு….(பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று 'ஐந்திணை ஐம்பது' இந்நூல் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்திணைகளுக்கும் பத்துப் பத்துப் பாடல்களைக் கொண்டது . பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல்தான் பின்வருவது). "சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்பிணைமான் இனிதுண்ண வேண்டிக் – கலைமாத்தன்கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி."(ஐந்திணை ஐம்பது-38)..பாலை நிலத்தில் ஓடிக் களைத்து தாகம் எடுக்க தண்ணீர் வேண்டி ஆண் மானும் பெண் மானும் ஓர் சுனையருகே வருகின்றன. ஒரு மான் மட்டுமே அருந்த நீர் உள்ளது. ஒன்றை விட்டு மற்றொன்று நீரை அருந்தவில்லை. ஆண்மான் அருந்தட்டுமே என பெண்மானும் தன் இணை அருந்தட்டுமே என ஆண்மானுமாய் இரு மான்களும் நீரை பருகுவது போல பாசாங்கு செய்கின்றன. இங்கு இவர்களின் உயரிய அன்பு பெருக்கை காணமுடிகிறது..இப்படி மனதாலும் செயலாலும் ஒத்திசைந்து ஒருவருக்ககொருவர் விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கை உண்மையாகவே அறவாழ்க்கையாக அமையும்தானே….முப்பாலாம் திருக்குறளில் ஐந்தாம் அதிகாரம் "இல்வாழ்க்கை".."அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது".இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவை..இதை எண்ணும் போது என் இதயத்துள் நிழலாடிய தம்பதி "சிவஞான செல்வரான அரசர் கண்டராதித்தர் மற்றும் அவரின் பட்டமகிஷி 'பெரிய பிராட்டி' என நாடு நகரமெல்லாம் போற்றப்படும் செம்பியன் மாதேவி"..சிவபக்தரான இவர்கள் இருவரையும் இணைத்து ஆதர்ச தம்பதிகளாய் வலம் வரச்செய்து கணவன் மறைவிற்குப் பின்னும் கணவனின் மனோராஜ்ய கனவுகளை நிறைவேற்றும் ஒரே குறிக்கோளுடன் வாழச்செய்த சிவபெருமானின் திருவிளையாடலைத் துதிப்பதா? இவற்றை எழுத்தாக்கி நமக்கெல்லாம் ஓர் இலக்கிய கனவு விருந்து படைத்த கல்கியை கொண்டாடுவதா? திருக்குறள் எனும் வேதம் தந்து அதிலே இந்த கதாபாத்திரங்களை நினைவுக்குள் கொண்டுவரும் திருவள்ளுவரின் மாயாஜாலத்தை வியப்பதா ஒன்றும் புரியத்தான் இல்லை போங்கள்….எனது கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வரிகளுக்காய் நம் பொன்னியின் செல்வன் புதினத்துள் ஓர் உலா வருவோம் வாருங்கள்….(பெரிய பிராட்டியார் தன் மகன் மதுராந்தகனிடம் பேசும் உரையாடல் இடம் : பழையாறை அரண்மனை).சுந்தரமூர்த்தி சுவாமிகள் மரங்களுக்கிடையில் மறைந்திருந்த மழபாடி திருக்கோயிலை கண்டுபிடித்து ஓடி வந்து இறைவன் சன்னதியில் "பொன்னார் மேனியனே!" என்ற பதிகத்தை பாடினாராம் .இந்த வரலாற்றைக் கேட்டது முதற்கொண்டு, .மன்னே! மாமணியே!மழபாடியுள் மாணிக்கமே!அன்னே உன்னையல்லால்இனியாரை நினைக்கேனே!.வரிகள் என் மனதில் பதிந்து விட்டன. கோவிலுக்கு அடிக்கடி போவேன். நடராஜ மூர்த்தியின் முன்னால் நின்று அந்த வரிகளை ஓயாது சொல்லுவேன். நாளாக ஆக என் உள்ளத்தில் மழப்பாடி இறைவர் குடிகொண்டு விட்டார். சிவபெருமானையே நான் மணந்து கொள்ளப் போவதாக மனக்கோட்டை கட்டினேன். என்னை நான் உமையாகவும் ,பார்வதியாகவும், தாட்சாய ணியாகவும் எண்ணிக்கொள்வேன். அவர்கள் சிவபெருமானை பதியாக அடைவதற்குத் தவம் செய்தது போல நானும் கண்ணை மூடிக்கொண்டு தவம் செய்வேன். யாராவது என் கலியாணத்தைப் பற்றி பேச்சு எடுத்தால் வெறுப்பு அடைவேன். இவ்விதம் என் குழந்தைப் பருவம் சென்றது. மங்கைப் பருவத்தை அடைந்த போது என் உள்ளம் சிவபெருமானுடைய பக்தியில் முன்னைவிட அதிகமாக ஈடுபட்டது . வீட்டாரும் ஊராரும் என்னைப் 'பிச்சி' என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவே இல்லை .வீட்டில் உண்டு உறங்கிய நேரம் போக மிச்ச பொழுதையெல்லாம் கோவிலிலேயே கழித்தேன். பூஜைக்குரிய மலர்களைப் பறித்து விதவிதமான மாலைகளைத் தொடுத்து நடராஜப் பெருமானுக்கு அணியச் செய்து பார்த்து மகிழ்வேன்!.நெடு நேரம் கண்ணை மூடிக் கொண்டு தியானத்தில் ஆழ்ந்திருப்பேன். இவ்விதம் ஒரு நாள் கண்ணை மூடிக்கொண்டு மனதில் இறைவனையே தியானித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கலகலவென்று சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்தேன். என் எதிரே ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களில் முன்னால் நின்ற ஒருவர் மீது தான் என் கண்களும் கருத்தும் சென்றன. நான் மனதில் தியானித்துக்கொண்டிருந்த சிவபெருமான். தாமே தம் பரிவாரங்களுடன் என்னை ஆட்கொள்ள வந்துவிட்டார் என்று எண்ணிக் கொண்டேன். எழுந்து நின்று தலை குனிந்து வணங்கி நின்றேன் .என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பொழிந்தது. இதை அவர் கவனித்து இருக்க வேண்டும்..'இந்தப் பெண் யார்? இவள் ஏன் கண்ணீர் விட்டு அழுகிறாள்?' என்று ஒரு குரல் கேட்டது..அதற்கு என் தந்தையின் குரல் , 'இவள் என் மகள். பிஞ்சிலே பழுத்தவளைப் போல இவளுக்கு இப்போதே சிவபக்தி வந்துவிட்டது. ஓயாமல் இப்படி கோவிலில் வந்து உட்கார்ந்து, கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்வதும், பதிகம் பாடுவதும் ,கண்ணீர் விடுவதுமாயிருக்கிறாள் !"என்று கூறிய மறுமொழி என் காதில் விழுந்தது..மறுபடி நான் நிமிர்ந்து பார்த்தபோது, முன்னால் நின்றவர் சிவபெருமான் இல்லையென்றும் யாரோ அரச குலத்தவர் என்றும் தெரிந்து கொண்டேன் .எனக்கு அவமானம் தாங்கவில்லை .அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி போய் வீட்டை அடைந்தேன். ஆனால் என்னை ஆட்கொண்டவர் என்னை விடவில்லை. என் தந்தையுடன் எங்கள் வீட்டுக்கே வந்து விட்டார். மகனே! அவர்தான் என் கணவரும், உன் அருமை தந்தையுமாகிய கண்டராதித்த தேவர்!"."பிறகு உன் தந்தையைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டேன். அவர் சிறிது காலத்துக்கு முன்புதான் சோழநாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அதுமுதல் பற்பல சிவ ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்து வந்தார். அவருக்கு பிராயம் அப்போது நாற்பதாகியிருந்தது. இளம் வயதில் அவர் மணந்து கொண்டிருந்த மாதரசி காலமாகிவிட்டார். மறுபடி கலியாணம் செய்து கொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. மீண்டும் புரிந்து கொள்வதில்லையென்று விரதம் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய புனித உள்ளம் இந்தப் பேதையைக் கண்டதினால் சலனமடைந்தது .என் தந்தையின் முன்னிலையில் என் விருப்பத்தை அவர் கேட்டார். நானோ சிவபெருமானே மனித உருவங்கொண்டு என்னை ஆட்கொள்ள வந்திருப்பதாக எண்ணிப் பரவசம் கொண்டிருந்தேன். அவரை மணந்துகொள்ளப் பூரண சம்மதம் என்பதைத் தெரிவித்தேன்.."மகனே! எனக்கும், உன் தந்தைக்கும் திருமணம் நடந்த பிறகு நாங்கள் இருவரும் மனம்விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம் .சிவபெருமானுடைய திருப்பணிக்கே எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்வது என்றும், இருவரும் மகப்பேற்றை விரும்புவதில்லை என்றும் தீர்மானித்திருந்தோம்."."உன் தந்தைக்கு இராஜ்யம் ஆளும் ஆசை இல்லை; இராஜரீக காரியங்களில் பற்றுதலும் இல்லை .அவர் புண்ணிய புருஷர். அவருடைய உள்ளம் சதா சர்வகாலமும் நடராஜப் பெருமானின் இணையடித் தாமரைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஆகவே, தனது தம்பியாகிய அரிஞ்சயரிடமும், அவருடைய புதல்வர் சுந்தரசோழரிடமும் இராஜ்ய காரியங்கள் முழுவதையும் ஒப்படைத்திருந்தார். தாம் சிவபெருமானுடைய கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்தார். முன்னமே சொன்னேனே, அது போல் அவருக்கு மறுபடியும் மணம் செய்து கொள்ளும் எண்ணமே இருக்கவில்லை. ஆனால், அவருடைய மன உறுதியை க் கலைக்க நான் ஒருத்தி வந்து சேர்ந்தேன். நான் சிவபக்தியில் ஈடுபட்ட 'பிச்சி' என்று அறிந்ததனாலேயே அவர் என் மீது பிரியங் கொண்டு என்னைத் திருமணம் புரிந்தார். அவரைப் பதியாக அடைந்த நான் பாக்கியசாலி. எத்தனையோ ஜன்மங்களில் அவரை அடைய நான் தவம் செய்திருக்க வேண்டும். அவரை தந்தையாகப் பெற்ற நீயும் பாக்கியசாலி. இந்த உலகில் இறைவனைக் கண்ணார கண்டு மகிழ்ந்த மகான்கள் வெகு சிலர்தான். சிவபெருமான் ரிஷபாரூடராய் வந்து, உன் தந்தைக்குக் காட்சி தந்து, அவரை இம்மண்ணுலகிலிருந்து அழைத்துப் போனார். நான் இப்போது உன்னை என் ஊனக்கண்களால் பார்ப்பதுபோல உன் தந்தை பரமசிவனைத் தரிசித்தார்..(செம்பியன் மாதேவி , திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி மற்றும் மக்கள், இடம்: சபா மண்டபம்)."பாடல்கள் முடிவடைந்ததும் செம்பியன் மாதேவி நம்பியாண்டாருடன் வந்திருந்த பெரியவரைப் பார்த்து," ஐயா இந்த இளம் பிள்ளையைப் பார்த்தால் ஞானசம்பந்தரே மீண்டும் வந்து அவதரித்திருப்பது போலத் தோன்றுகிறது. இவரை அழைத்துக் கொண்டு தமிழகமெங்கும் ஊர் ஊராகச் செல்லுங்கள். அங்கங்கே கிடைக்கும் தெய்வீகமான தேவாரப் பதிகங்களை சேகரித்துக் கொண்டு வாருங்கள். அப்பர் பதிகங்களையும், சம்பந்தர் பதிகங்களையும், சுந்தரமூர்த்தியின் பாடல்களையும் தனித்தனியாக தொகுக்க வேண்டும். சிவாலயங்கள் எல்லாவற்றிலும் தினந்தோறும் பாடச் செய்ய வேண்டும் இது என் கணவருடைய விருப்பம். அதை என் வாணாளில் நிறைவேற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன்..இப்படி தனது வாழ்நாளின் கடைசிவரை இல்லற தர்மத்தை இம்மியளவும் பிசகாமல் செய்து வாழ்ந்த மகாராஜா கண்டராதித்தர் ,மகாராணி செம்பியன் மாதேவியார் இருவரும் இன்றும் எனது இல்வாழ்க்கை வழிகாட்டி…