கதை சிறிசு; தத்துவம் பெரிசு!.-சேலம் சுபா.ஓவியம்; சேகர்.இந்த அறிவியல் உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப முன்னேற ஏராளமான வழி வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. ஆனால், அவற்றை பயன்படுத்திக்கொள்ள மறுத்து இன்னும் குண்டுசட்டிக் குதிரையாய் தம்மை சுருக்கிக் கொள்பவர்களுக்காக மட்டுமே இந்த அன்பான ஆலோசனைகள். குட்டிக் கதையுடன் துவங்குவோமா?.ஒரு குளம் இருந்தது. அதில் சில மீன்கள் துள்ளி விகையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன. அந்த மீன்களின் மீது பற்றுகொண்ட சிறுவன் பதறியபடி அங்கு வந்தான். அவன் மீன்களிடம் இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் குளத்தில் நீர் வற்றப்போவதாகவும் உயிர் மேல் ஆசை இருந்தால் தான் கொண்டு வந்துள்ள நீர் நிறைந்த தொட்டியில் வந்து விடுமாறும், நீரானது மீண்டும் நீர் குளத்தில் நிரம்பியதும் விட்டு விடுவதாகவும் கூறினான்..எல்லா மீன்களும் பதறியடித்து தொட்டியில் ஏறிக்குதிக்க ஒரு மீன் மட்டும் குளத்தை விட்டு வர மறுத்தது. சிறுவன் அதை அழைத்தபோது, "இதோ பாரப்பா எனக்குத் தெரியும், இதில் நீர் வற்றாது. நான் நம்பும் கடவுள் என்னைக் காப்பாற்றுவார். பிறந்த இடத்தை விட்டு வர மாட்டேன்" எனப் பிடிவாதம் பிடித்து அவனுடன் செல்ல மறுத்தது. அவனும் வேறு வழியின்றி சென்று விட்டான். அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் நீர் மெதுவாக வற்றத்துவங்கியது. நம்ம மீனுக்கு பகீரென்றது. இருக்காதா பின்னே?.அலறியது துடித்தது… ஆனாலும் தளராமல் "ஐயோ கடவுளே இது என்ன சோதனை? உன்னை நம்பிய என்னைக் காப்பாற்ற வாய்ப்பு தர மாட்டாயா?" என்று இறைஞ்சியது. கடவுளும் தோன்றினார் "முட்டாள் மீனே! உனக்காகவே அந்த சிறுவனை தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்தேன். ஏனெனில் நீ என் பக்தன்… அவன் மூலம் உயிர் தப்பிக்கும் வாய்ப்பைத் தந்தும் பொறந்த இடத்தை விட்டுச் செல்ல மறுத்து அதை நீ பயன் படுத்திக்கொள்ளாமல் இப்போது தலைக்கு மேல் வெள்ளம். சாரி… தலைக்கு கீழ் தண்ணி வற்றிய பின் வருந்தி என்ன லாபம்? வாய்ப்பைத்தான் நான் தர முடியும் அதை வரமாக்கி வாழ வேண்டியது உங்கள் கடமை… வா நான் காத்திருக்கிறேன்" என்று கூலாக சொல்லி மறைந்தார். மீனும் அடடா… வந்த வாய்ப்பைத் தவிர்த்தால் இதுதான் நிலை என்று வருந்தி மடிந்தது. கதை முடிஞ்சுருச்சு..இப்படித்தான் நாமும் வாய்ப்புகள் வரும்போது சில சவுகரியங்களை நினைத்து, அதை பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டுப் பிறகு புலம்புவதால் என்ன பயன்? ஒரு சிலர் பெரிய வாய்ப்பு வரும்வரை தேடி வரும் சிறிய வாய்ப்புகளையும் தவறவிட்டு இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிப்பார்கள். சிறிய வாய்ப்பு என்றாலும் அதை ஏற்று அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களைப் பெரிய வாய்ப்புக்கு உரமாக்கி அதை எளிதாக்கலாமே?.வெற்றி பெறத் துடிப்பவரின் கண்களுக்கு வாய்ப்புகள் எளிதில் தென்படும் . ஆம். நாம் எதை எண்ணுகிறோமோ அது நிச்சயம் நம்மைத் தேடி வரும். ஏனெனில் இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறது. ஆனால், அதுவரை நாம் சோம்பியிராமல் முயற்சியில் இறங்க வேண்டும். வரும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலும் முன்னேற முயல வேண்டும்..தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விடாதவர்களே மாபெரும் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். நாமும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமெனில் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றும் வாய்ப்புக்களை உருவாக்கவும் முயல்வோமே? சிலர் ரிஸ்க் எடுக்க பயம் கொண்டு 'இருக்கும் நிலையே சொர்க்கம்' என்று எண்ணுவர். அதை விடுத்து அதற்கு மேலான வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. ரிஸ்க் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை..ஆனால், அதே சமயம் நமக்கு சம்பந்தமில்லாத சிறிதும் ஆர்வமில்லாத வாய்ப்புகள் வந்தால் அதை நிராகரித்து விடுவதே சரி. நீங்கள்தானே சொன்னீர்கள் எந்த வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கசாப்புக்கடைக்காரருக்கு பிரஷ் தந்து ஓவியம் வரைய சொன்னால் எப்படி இருக்கும்? உங்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை மட்டுமே எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக நழுவ விட வேண்டாம் என்கிறேன். ஏனெனில் நீங்கள் நழுவவிடும் வாய்ப்பு உங்கள் வெற்றியின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதோ இந்த நிமிடத்திலிருந்து, வரும் வாய்ப்புகளை ஏற்று வளமுடன் வாழ்வோம்.
கதை சிறிசு; தத்துவம் பெரிசு!.-சேலம் சுபா.ஓவியம்; சேகர்.இந்த அறிவியல் உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கேற்ப முன்னேற ஏராளமான வழி வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. ஆனால், அவற்றை பயன்படுத்திக்கொள்ள மறுத்து இன்னும் குண்டுசட்டிக் குதிரையாய் தம்மை சுருக்கிக் கொள்பவர்களுக்காக மட்டுமே இந்த அன்பான ஆலோசனைகள். குட்டிக் கதையுடன் துவங்குவோமா?.ஒரு குளம் இருந்தது. அதில் சில மீன்கள் துள்ளி விகையாடி மகிழ்ந்து கொண்டிருந்தன. அந்த மீன்களின் மீது பற்றுகொண்ட சிறுவன் பதறியபடி அங்கு வந்தான். அவன் மீன்களிடம் இன்னும் சிறிது நேரத்தில் அந்தக் குளத்தில் நீர் வற்றப்போவதாகவும் உயிர் மேல் ஆசை இருந்தால் தான் கொண்டு வந்துள்ள நீர் நிறைந்த தொட்டியில் வந்து விடுமாறும், நீரானது மீண்டும் நீர் குளத்தில் நிரம்பியதும் விட்டு விடுவதாகவும் கூறினான்..எல்லா மீன்களும் பதறியடித்து தொட்டியில் ஏறிக்குதிக்க ஒரு மீன் மட்டும் குளத்தை விட்டு வர மறுத்தது. சிறுவன் அதை அழைத்தபோது, "இதோ பாரப்பா எனக்குத் தெரியும், இதில் நீர் வற்றாது. நான் நம்பும் கடவுள் என்னைக் காப்பாற்றுவார். பிறந்த இடத்தை விட்டு வர மாட்டேன்" எனப் பிடிவாதம் பிடித்து அவனுடன் செல்ல மறுத்தது. அவனும் வேறு வழியின்றி சென்று விட்டான். அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் நீர் மெதுவாக வற்றத்துவங்கியது. நம்ம மீனுக்கு பகீரென்றது. இருக்காதா பின்னே?.அலறியது துடித்தது… ஆனாலும் தளராமல் "ஐயோ கடவுளே இது என்ன சோதனை? உன்னை நம்பிய என்னைக் காப்பாற்ற வாய்ப்பு தர மாட்டாயா?" என்று இறைஞ்சியது. கடவுளும் தோன்றினார் "முட்டாள் மீனே! உனக்காகவே அந்த சிறுவனை தகுந்த நேரத்தில் அனுப்பி வைத்தேன். ஏனெனில் நீ என் பக்தன்… அவன் மூலம் உயிர் தப்பிக்கும் வாய்ப்பைத் தந்தும் பொறந்த இடத்தை விட்டுச் செல்ல மறுத்து அதை நீ பயன் படுத்திக்கொள்ளாமல் இப்போது தலைக்கு மேல் வெள்ளம். சாரி… தலைக்கு கீழ் தண்ணி வற்றிய பின் வருந்தி என்ன லாபம்? வாய்ப்பைத்தான் நான் தர முடியும் அதை வரமாக்கி வாழ வேண்டியது உங்கள் கடமை… வா நான் காத்திருக்கிறேன்" என்று கூலாக சொல்லி மறைந்தார். மீனும் அடடா… வந்த வாய்ப்பைத் தவிர்த்தால் இதுதான் நிலை என்று வருந்தி மடிந்தது. கதை முடிஞ்சுருச்சு..இப்படித்தான் நாமும் வாய்ப்புகள் வரும்போது சில சவுகரியங்களை நினைத்து, அதை பயன்படுத்திக் கொள்ளாமல் தவற விட்டுப் பிறகு புலம்புவதால் என்ன பயன்? ஒரு சிலர் பெரிய வாய்ப்பு வரும்வரை தேடி வரும் சிறிய வாய்ப்புகளையும் தவறவிட்டு இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவிப்பார்கள். சிறிய வாய்ப்பு என்றாலும் அதை ஏற்று அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களைப் பெரிய வாய்ப்புக்கு உரமாக்கி அதை எளிதாக்கலாமே?.வெற்றி பெறத் துடிப்பவரின் கண்களுக்கு வாய்ப்புகள் எளிதில் தென்படும் . ஆம். நாம் எதை எண்ணுகிறோமோ அது நிச்சயம் நம்மைத் தேடி வரும். ஏனெனில் இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை நிறைவேற்றக் காத்திருக்கிறது. ஆனால், அதுவரை நாம் சோம்பியிராமல் முயற்சியில் இறங்க வேண்டும். வரும் வாய்ப்புகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலும் முன்னேற முயல வேண்டும்..தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விடாதவர்களே மாபெரும் சாதனையாளர்களாக வெற்றியாளர்களாக உருவாகிறார்கள். நாமும் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமெனில் கிடைக்கும் வாய்ப்புகளை ஏற்றும் வாய்ப்புக்களை உருவாக்கவும் முயல்வோமே? சிலர் ரிஸ்க் எடுக்க பயம் கொண்டு 'இருக்கும் நிலையே சொர்க்கம்' என்று எண்ணுவர். அதை விடுத்து அதற்கு மேலான வாய்ப்புக் கிடைத்தால் பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. ரிஸ்க் இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை..ஆனால், அதே சமயம் நமக்கு சம்பந்தமில்லாத சிறிதும் ஆர்வமில்லாத வாய்ப்புகள் வந்தால் அதை நிராகரித்து விடுவதே சரி. நீங்கள்தானே சொன்னீர்கள் எந்த வாய்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கசாப்புக்கடைக்காரருக்கு பிரஷ் தந்து ஓவியம் வரைய சொன்னால் எப்படி இருக்கும்? உங்களுக்குத் தகுந்த வாய்ப்புகளை மட்டுமே எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக நழுவ விட வேண்டாம் என்கிறேன். ஏனெனில் நீங்கள் நழுவவிடும் வாய்ப்பு உங்கள் வெற்றியின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதோ இந்த நிமிடத்திலிருந்து, வரும் வாய்ப்புகளை ஏற்று வளமுடன் வாழ்வோம்.