ஓவியம்: பிரபுராம். "போருக்குச் சென்ற மன்னருக்கு கழுத்து வலியாம் வைத்தியரே!"."திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி வந்திருப்பார்…!" -வி ரேவதி, தஞ்சை.*************************************."உங்க ஜோக்ஸுக்கு முதல் வாசகி உங்க மனைவிதானாமே சார்?"."கடைசி வாசகியும் அவதான்; படிச்சுப் பார்த்துட்டு, கிழிச்சு டஸ்ட் பின்ல போட்டுடுவா?" -வி ரேவதி, தஞ்சை.*************************************."பள்ளிக்கூட நாட்களிலேயே தலைவர் மாறுவேடப் போட்டிகள்ல நிறைய பரிசு வாங்கியிருக்காராம்..?"."அதான் கைது பண்ண முடியாமல் போலீஸ் திணறிட்டாங்களா…?"-வி. ரேவதி, தஞ்சை.*************************************.கூட்டத்துல பேச வந்த தலைவர் நாற்காலியில உட்காராம தரையில உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே?.அவருக்கு நாற்காலி ஆசை இல்லை என்கிறதை சூசகமா சொல்றாரு!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.இன்ஸ்பெக்டர் ஏன் ஏட்டய்யாவை இந்த திட்டு திட்டறார்?.தீவிரவாதியை பிடிச்சுக்கிட்டு வரச் சொன்னதுக்கு தீவிர வியாதி உள்ள ஒருத்தனை பிடிச்சுக்கிட்டு வந்திட்டாராம்!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.எங்க தலைவருக்கு தன்மானத்தோட வாழறதுதான் பிடிக்கும். உங்க தலைவருக்கு?.சன்மானத்தோட!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.தலைவர் பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்ததாச் சொல்றாங்களே! நம்ப முடியலயே!.திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்தார் என்பதையா?.பள்ளிக்கூடத்துல படிச்சார் என்பதை!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.
ஓவியம்: பிரபுராம். "போருக்குச் சென்ற மன்னருக்கு கழுத்து வலியாம் வைத்தியரே!"."திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி வந்திருப்பார்…!" -வி ரேவதி, தஞ்சை.*************************************."உங்க ஜோக்ஸுக்கு முதல் வாசகி உங்க மனைவிதானாமே சார்?"."கடைசி வாசகியும் அவதான்; படிச்சுப் பார்த்துட்டு, கிழிச்சு டஸ்ட் பின்ல போட்டுடுவா?" -வி ரேவதி, தஞ்சை.*************************************."பள்ளிக்கூட நாட்களிலேயே தலைவர் மாறுவேடப் போட்டிகள்ல நிறைய பரிசு வாங்கியிருக்காராம்..?"."அதான் கைது பண்ண முடியாமல் போலீஸ் திணறிட்டாங்களா…?"-வி. ரேவதி, தஞ்சை.*************************************.கூட்டத்துல பேச வந்த தலைவர் நாற்காலியில உட்காராம தரையில உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே?.அவருக்கு நாற்காலி ஆசை இல்லை என்கிறதை சூசகமா சொல்றாரு!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.இன்ஸ்பெக்டர் ஏன் ஏட்டய்யாவை இந்த திட்டு திட்டறார்?.தீவிரவாதியை பிடிச்சுக்கிட்டு வரச் சொன்னதுக்கு தீவிர வியாதி உள்ள ஒருத்தனை பிடிச்சுக்கிட்டு வந்திட்டாராம்!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.எங்க தலைவருக்கு தன்மானத்தோட வாழறதுதான் பிடிக்கும். உங்க தலைவருக்கு?.சன்மானத்தோட!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா..*************************************.தலைவர் பள்ளிக்கூடத்துல படிக்கும் போதே திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்ததாச் சொல்றாங்களே! நம்ப முடியலயே!.திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்தார் என்பதையா?.பள்ளிக்கூடத்துல படிச்சார் என்பதை!-சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா.