கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே…' என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. எஸ். ஜானகி அம்மாவின் குரலில் கணீரென ஒலிக்கும் இப்பாடல். கேட்போர் மனதை ஈர்க்கும் இனிமையான நாதஸ்வர இசை. அதை வாசித்தது வேறு யாரும் இல்லை; சமீபத்தில் கர்நாடக சங்கீத உலகமே தலை வணங்கி, அவர்தம் நூற்றாண்டினை விமரிசையாகக் கொண்டாடிய மாபெரும் நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம்தான்..திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஓர் ஊர் காருகுறிச்சி. இந்த ஊரில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம். இவரது தந்தையின் பெயர் பலவேசம் பிள்ளை..காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையார் ஒருவரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேச பிள்ளை என்னும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாதஸ்வரம் இசைக்க வேண்டும். நெல் தானியம் அளந்து கொடுப்பது பலவேசத்திற்கு பரம்பரை வேலையாக இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியிலும் இருந்தார். பெரும் பண்ணையார் நடேச பிள்ளைக்கு அளித்த மரியாதை, பலவேசம் பிள்ளைக்கு சமூகத்தில் கலைக்கு உள்ள மரியாதையை உணர்த்தியது. தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவியை சேர்ந்த ஒரு நாதஸ்வரக் கலைஞரிடம் அக்கலையை கற்கச் சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன் அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாதஸ்வரக் கலைஞராக மாற்றியது..அருணாசலம், சுத்தமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாதஸ்வரமும் களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சாவூரில் பிறந்த நாதஸ்வரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று அவர் தந்தை பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளைக்கு தன் மகனை சீடனாக்க விரும்பினார்..காருகுறிச்சியில் உள்ள பண்ணைக்கு நாதஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அவருடன் வாசிக்க வந்த "காக்காயி" நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல்போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் இராசரத்தினம் பிள்ளை. மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக் கண்ட இராசரத்தினம் பிள்ளை, சிறுவன் தன்னுடனேயே இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையின் சீடரானார்..காருகுறிச்சி அருணாசலத்திற்கு ஒரு சமயம் ஜனாதிபதி மாளிகையில் நாதஸ்வரம் இசைக்க வாய்ப்பு கிடைத்தது. தில்லி விமான நிலையத்தி லிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு காரில் வந்தார். அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரை வரவேற்பதற்காக வாயிலில் நின்றதுடன், கார் வந்ததும் தானே வந்து கதவைத் திறந்தார். இதனைக் கண்டதும் அருணாசலம் ஒரு நிமிடம் ஆடிபோய், "என்னங்க இது… நாட்டின் முதல் குடிமகன் நீங்கள்…இது மாதிரி செய்யலாமா?" என்று பதறினார். இதனைக் கண்ட ஜனாதிபதி, "ஏன் பதறுகிறீர்கள்? காருகுறிச்சி அருணாசலம் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் இந்த ராதாகிருஷ்ணன் நாதஸ்வர மேதையாக முடியாது" என்று கூறி வித்வானுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்..இத்தகைய பெருமைகளுக்கு பாத்திரமான காருகுறிச்சி அருணாசலத்திற்கு அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டம், காருகுறிச்சி கிராமத்தில் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது..நாதஸ்வரம்.முற்காலத்தில் 'மங்கல வாத்யம்' என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் கருங்காலி, வேங்கை, தோதகத்தி, சந்தன மரங்களால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது ஆச்சா மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் 'சீவாளி' "எனப்படும் ஊதுகின்ற அமைப்பைகாவிரி கொள்ளிடக் கரைகளில் வளரும் நாணல் நறுக்கினைப் பதம் செய்து தயாரிப்பர். . . முற்காலத்தில் புகழ் பெற்ற வித்வான்கள் வெண்கலம், தந்தத்தினால் செய்யப்பட்ட நாதஸ்வரங்களில் வாசித்து வந்தனர்..சீவாளி என்ற கருவி ஊதுவதற்காக நாதஸ்வரத்தில் பொருத்தப்படும் ஜீவவளி என்பதுதுான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது..திருவாருர் கோயிலில் தந்தத்தினாலேயே செய்யப்பட்ட நாதஸ்வரம் உள்ளது. இனிமையான இசையை எழும்பும் வகையில் இந்த நாதஸ்வரம் உள்ளது..கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயிலில் கல்லினால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருக்கிறது. இதுவும் இனிமையான இசையை எழுப்பக்கூடிய நிலையில் உள்ளது..நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு!.கும்பகோணம் அருகே தயாரிக்கப்படும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் என்.ஜி.என். ரங்கநாத ஆசாரி 1955-ஆம் ஆண்டில் சுத்த மத்தியமம் ஸ்வரத்தை நாதஸ்வரக் கருவியில் உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாதஸ்வரக் கருவிதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். இது உலகில் மிகப் பெரிய ஒரு பரிணாமத்தை உருவாக்கி நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு வித்திட்டது. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை செய்வதற்கு மரங்களில் வலிமையான ஆச்சா மரம் பயன்படுத்தப்படுகிறது. நாதஸ்வர உலகில் மிகப்பெரும் புகழை எட்டிய இராஜரத்தினம் பிள்ளையும் நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலமும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தில்தான் இறுதிவரை வாசித்தனர்.
கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிங்கார வேலனே…' என்ற பாடலைக் கேட்டு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. எஸ். ஜானகி அம்மாவின் குரலில் கணீரென ஒலிக்கும் இப்பாடல். கேட்போர் மனதை ஈர்க்கும் இனிமையான நாதஸ்வர இசை. அதை வாசித்தது வேறு யாரும் இல்லை; சமீபத்தில் கர்நாடக சங்கீத உலகமே தலை வணங்கி, அவர்தம் நூற்றாண்டினை விமரிசையாகக் கொண்டாடிய மாபெரும் நாதஸ்வரக் கலைஞர் காருகுறிச்சி அருணாசலம்தான்..திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலிருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் உள்ள ஓர் ஊர் காருகுறிச்சி. இந்த ஊரில் 1921ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம். இவரது தந்தையின் பெயர் பலவேசம் பிள்ளை..காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையார் ஒருவரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேச பிள்ளை என்னும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாதஸ்வரம் இசைக்க வேண்டும். நெல் தானியம் அளந்து கொடுப்பது பலவேசத்திற்கு பரம்பரை வேலையாக இருந்தபோதிலும், அவ்விழாவிற்கு மாலைகள் கட்டிக்கொடுக்கும் பணியிலும் இருந்தார். பெரும் பண்ணையார் நடேச பிள்ளைக்கு அளித்த மரியாதை, பலவேசம் பிள்ளைக்கு சமூகத்தில் கலைக்கு உள்ள மரியாதையை உணர்த்தியது. தானும் கலைஞனாக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டு, சேரன்மகாதேவியை சேர்ந்த ஒரு நாதஸ்வரக் கலைஞரிடம் அக்கலையை கற்கச் சென்றார். வயதும் சூழலும் ஒத்து வராததால், தனக்குப் பதிலாக தன் மகன் அருணாசலம் கற்கட்டும் என்று பலவேசம் முடிவு செய்தார். இந்தச் சூழல்தான் அருணாசலத்தை நாதஸ்வரக் கலைஞராக மாற்றியது..அருணாசலம், சுத்தமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாதஸ்வரமும் களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சாவூரில் பிறந்த நாதஸ்வரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று அவர் தந்தை பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளைக்கு தன் மகனை சீடனாக்க விரும்பினார்..காருகுறிச்சியில் உள்ள பண்ணைக்கு நாதஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் இராசரத்தினம் பிள்ளை. அவருடன் வாசிக்க வந்த "காக்காயி" நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல்போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் இராசரத்தினம் பிள்ளை. மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக் கண்ட இராசரத்தினம் பிள்ளை, சிறுவன் தன்னுடனேயே இருக்கட்டும் என்று கூறினார். அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளையின் சீடரானார்..காருகுறிச்சி அருணாசலத்திற்கு ஒரு சமயம் ஜனாதிபதி மாளிகையில் நாதஸ்வரம் இசைக்க வாய்ப்பு கிடைத்தது. தில்லி விமான நிலையத்தி லிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு காரில் வந்தார். அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரை வரவேற்பதற்காக வாயிலில் நின்றதுடன், கார் வந்ததும் தானே வந்து கதவைத் திறந்தார். இதனைக் கண்டதும் அருணாசலம் ஒரு நிமிடம் ஆடிபோய், "என்னங்க இது… நாட்டின் முதல் குடிமகன் நீங்கள்…இது மாதிரி செய்யலாமா?" என்று பதறினார். இதனைக் கண்ட ஜனாதிபதி, "ஏன் பதறுகிறீர்கள்? காருகுறிச்சி அருணாசலம் ஜனாதிபதி ஆகலாம். ஆனால் இந்த ராதாகிருஷ்ணன் நாதஸ்வர மேதையாக முடியாது" என்று கூறி வித்வானுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்..இத்தகைய பெருமைகளுக்கு பாத்திரமான காருகுறிச்சி அருணாசலத்திற்கு அவர் பிறந்த திருநெல்வேலி மாவட்டம், காருகுறிச்சி கிராமத்தில் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது..நாதஸ்வரம்.முற்காலத்தில் 'மங்கல வாத்யம்' என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் கருங்காலி, வேங்கை, தோதகத்தி, சந்தன மரங்களால் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது ஆச்சா மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் 'சீவாளி' "எனப்படும் ஊதுகின்ற அமைப்பைகாவிரி கொள்ளிடக் கரைகளில் வளரும் நாணல் நறுக்கினைப் பதம் செய்து தயாரிப்பர். . . முற்காலத்தில் புகழ் பெற்ற வித்வான்கள் வெண்கலம், தந்தத்தினால் செய்யப்பட்ட நாதஸ்வரங்களில் வாசித்து வந்தனர்..சீவாளி என்ற கருவி ஊதுவதற்காக நாதஸ்வரத்தில் பொருத்தப்படும் ஜீவவளி என்பதுதுான் சீவாளியாகியிருக்கிறது. ஜீவன் என்றால் உயிர். வளி என்றால் காற்று. உடலாகிய நாதஸ்வரத்திற்கு காற்றின் மூலம் சீவாளி உயிர் கொடுக்கிறது..திருவாருர் கோயிலில் தந்தத்தினாலேயே செய்யப்பட்ட நாதஸ்வரம் உள்ளது. இனிமையான இசையை எழும்பும் வகையில் இந்த நாதஸ்வரம் உள்ளது..கும்பகோணம், கும்பேஸ்வரர் கோயிலில் கல்லினால் செய்யப்பட்ட நாதஸ்வரம் இருக்கிறது. இதுவும் இனிமையான இசையை எழுப்பக்கூடிய நிலையில் உள்ளது..நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு!.கும்பகோணம் அருகே தயாரிக்கப்படும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நரசிங்கம்பேட்டை கைவினைக் கலைஞர் என்.ஜி.என். ரங்கநாத ஆசாரி 1955-ஆம் ஆண்டில் சுத்த மத்தியமம் ஸ்வரத்தை நாதஸ்வரக் கருவியில் உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கப்பட்ட நாதஸ்வரக் கருவிதான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம். இது உலகில் மிகப் பெரிய ஒரு பரிணாமத்தை உருவாக்கி நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு வித்திட்டது. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை செய்வதற்கு மரங்களில் வலிமையான ஆச்சா மரம் பயன்படுத்தப்படுகிறது. நாதஸ்வர உலகில் மிகப்பெரும் புகழை எட்டிய இராஜரத்தினம் பிள்ளையும் நாதஸ்வர வித்வான் காருகுறிச்சி அருணாசலமும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தில்தான் இறுதிவரை வாசித்தனர்.