மினி தொடர்-1.கதை: –அன்னக்கிளி வேலு .ஓவியம்: தமிழ்.'ரோஜா! என்ன அழகான பெயர் '.அன்றைய தபால்களை திறந்து கொண்டிருந்த டெஸ்பாச் ரெங்கசாமி, ' புதுசா ஒரு டைபிஸ்ட் போட்டிருக்காங்கப்பா, பேரு ரோஜா ' என்றவுடன், ஆச்சரியமும் ஆவலும் கொண்டவனாய் ரெங்கசாமி சொன்ன பெயரைத்தான், அப்படி சொல்லிப் பார்த்துக் கொண்டான் ராஜா. அந்த ஆபிசில் மேனேஜர் முதல் சுத்தம் செய்கிறவர் வரை எல்லோருமே, ஆண்கள்தான், அதிலும் கல்யாணமானவர்கள், இவனைத் தவிர. ஆபிஸுக்குள் முதன் முதலாய் ஒரு பெண் என்று நினைக்கும்போதே ராஜாவுக்கு சிலிர்ப்பு உண்டானது..' டிரான்ஸ்பரா… புது போஸ்டிங்கா ' என்று மறுபடியும் கேட்டான் அவன்..'புது போஸ்டிங்பா, ஊர் சேலமாம், D/O சங்கரலிங்கம்னு போட்டிருக்கு ' என்று பதில் வந்தது. ராஜாவின் மனத்திரையில் இளையராஜாவின் இசையில் பத்து தேவதைகள், 'தம்தன.. நம்தன.. நம்தன….' என்று நடனமாடினார்கள்..' ரோஜா…. ராஜா….! ராஜா…. ரோஜா….!'.D/O என்று போட்டிருப்பதால், கல்யாணம் ஆகாதவளா, நேரடி அப்பாய்ன்ட்மென்ட் என்றால் வயது எப்படியும் ஒரு இருபது இருக்காதா? இல்லை இருபத்திரெண்டோ, இருபத்தி மூன்றோ இருக்குமா? எப்போது வந்து சேருவாள், அடுத்த மாதமா, இல்லை அடுத்த வாரமா, இல்லை நாளையேவா? மீண்டும் குழப்பம். உயரமாய் இருப்பாளா, கட்டையாய் இருப்பாளா இல்லை சுமாரான உயரமா ? கருப்பாய் இருப்பாளா, வெள்ளையாய் இருப்பாளா, இல்லை மாநிறமா ? யோசிக்க யோசிக்க ராஜாவுக்கு மண்டை ஜிவ்வென்றது. வேலையே ஒடவில்லை..ஒரு வழியாய் வேலைக்கு வந்து சேர்ந்தாள் ரோஜா, அவனது கனவுக் கன்னி. அப்பாவுடன் வந்திருந்தாள். காலையில் ஆபிஸுக்குள் நுழையும்போதே ராஜாவைத்தான் முதலில் பார்த்தார்கள் அவர்கள். தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், ஆபீஸ் டைமில் ஆரம்பித்து வேலை சம்பந்தமாய் பேசி, தங்கிக்கொள்ள லேடிஸ் ஹாஸ்டல் ஏதும் கிடைக்குமா, போக வர ஷேர் ஆட்டோ கிடைக்குமா என்பது வரை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். ராஜா ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னான். அவள் ஆபிசில் சேர்ந்த உடனே மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவனுக்கு தெரிந்த ஒரு லேடிஸ் ஹாஸ்டலைப் பார்த்தான். நல்ல வேலையாய் ஒரு ரூம் காலி இருந்தது. பாரம் பூர்த்தி செய்து, பணம் கட்டி ரூம் சாவியை வாங்கிக் கொடுத்தான் ராஜா. ரோஜாவின் இதழில் புன்னகை. அவளது அப்பாவுக்கும் பூரண நிம்மதி. ராஜாவுக்கும் ரொம்பவும் திருப்தியாய் இருந்தது..திரும்பி ஆபிஸ் போய் அவளை மேனேஜெர் ரூமில் விட்டுவிட்டு போய் தன் இருக்கையில் உட்கார்ந்தான். வேலை எதுவும் ஓட வில்லை. நெளிந்தான். பர்ஸ்ட் இம்ப்ரஸன்… பெஸ்ட் இம்ப்ரஸன்… அவனுக்கு ரொம்பவும் திருப்தியாய் இருந்தது. எப்படியும் அவளது மனதில் தனக்கு ஒரு இடம் உண்டு என்று அப்போதே முடிவு செய்து கொண்டான்..ஒரு வழியாய் இவனுக்கு பக்கத்து இருக்கையிலேயே உட்கார சொல்லி விட்டார் மேனேஜர். முதலில் இருந்த டைபிஸ்ட் வேலையை விட்டுப் போன பிறகு வேறு ஆள் போடாததால் மெசினைத் தன் ரூமில் கொண்டுபோய் வைத்துக் கொண்டிருந்தார் மேனேஜர். இப்பொழுது ரோஜா வந்து விட்டாள், அதுவும் பக்கத்து சீட்டிற்கே. மேனேஜர் ரூமுக்குள் இருந்த டைப்பிங் மெசின் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது. உயரத்தில் இறக்கை கட்டி பறந்தான் அவன்..எப்படியும் அவளோடு பேசிப்பேசியே அவளிடம் ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டான். அதற்கு தகுந்தாற்போல் மேனேஜரும் அவளிடம் சொல்லியிருந்தார் 'ஆபிஸ்லயே ரொம்ப டீஸண்ட்டான ஸ்டாப்ஃ ராஜா. எல்லா வேலையையும் நீங்க அவர்கிட்டேயிருந்தே கத்துக்கலாம் ' என்றார். அது முதல், விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்தான் ராஜா. மற்றவர்கள் யாரும் அவளை நெருங்க முடியாதபடியும் பார்த்துக் கொண்டான். அவள் கொஞ்சநேரம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் கூட, வழிய சென்று சொல்லிக் கொடுப்பான்..அன்று சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் மேனேஜர் ரூமிலிருந்த அவளது பெர்சனல் பைலை எடுத்து அவளது விவரங்களை மனதிற்குள் ஏற்றிக் கொண்டான். வயது இருபத்து ஒன்று. சொந்த ஊர் திருச்சி. ஆனால் இப்போது இருப்பது சேலத்தில். அப்பா ரயில்வேயில் இஞ்சினீயர். அம்மா ஹவுஸ் ஓய்ப். பி.எஸ்.ஸி முடித்து டைப்பிங்கும் முடித்திருக்கிறாள். கூடப்பிறந்தது பி.ஸி.ஏ படிக்கும் ஒரு தம்பி மட்டும்..ஒரு நாள் அவள் வரவில்லையென்றதும் துடித்துப் போனான், இவன். உடனே, அவளுக்கு போன் செய்தான். பெரும்பாலும் மேனேஜரிடம் சொல்லாமல் யாரும் லீவு எடுப்பதில்லை. பொறுமை இழந்தவனாய் உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் அவளே போனடித்தாள். தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் லீவு எடுத்துக் கொண்டதாகவும் மேனேஜரிடம் காலையிலேயே தெரியப்படுத்தி விட்டதாகவும் சொல்லி, முடித்துக் கொண்டாள்..அவளுக்கு உடம்புக்கு என்ன, காய்ச்சலா, தலைவலியா, உடல் வலியா. என்னதான் ஆனது. அவளிடம் கேட்கவும் கூச்சம், அவளாக சொல்வாள் என்று நினைத்தால் அவளோ பொதுவாய் உடல் நிலை சரியில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். அப்படியென்றால் கொஞ்சம் நம்மிடமிருந்து தூரப்படுத்திக் கொள்கிறாளோ. கொஞ்சம் கவலையும் வந்தது. நாம் நெருங்கிப் போனால் அவள் தூரப் போகிறாளோ..எந்த வேலையுமே அன்று ஓடவில்லை. உடனே லேடீஸ் ஹாஸ்டல் போய் பார்த்து விட்டு வந்து விடலாமா என்று கூட தோன்றியது. இப்போது போனால் ஹாஸ்டலில் இருப்பவர்கள் தப்பாய் நினைத்து விடுவார்களோ. மற்றவர்கள் சரி, ரோஜா என்ன நினைப்பாளோ. ஒருவழியாய் சாயங்காலம் போய் பார்த்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டான். போகிறபோது கொஞ்சம் பழங்கள் ஏதும் வாங்கிக் கொள்ளலாமா என்று ஒரு யோசனையும் வந்தது. பழங்கள் கொண்டு போனால் அதிகப் பிரசங்கித்தனம் போல் தோன்றுமோ. ஒரு வேளை அவள் சிரிப்பாளோ. அப்புறம் அவமானமாய் போய்விடுமோ என்றும் யோசித்தான். பிறகு ஒரு வழியாய் போக வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான். இன்னும் இருபது மணி நேரம் தானே, அப்புறம் இந்த சீட்டிலேயே வந்து உட்கார்ந்திருப்பாளே என்று சமாதானம் செய்து கொண்டான்..அன்றிரவு தூக்கமே வராமல் புரண்டு புரண்டு படுத்தான் ராஜா. மனது அவளையே சுற்றிச்சுற்றி வந்தது. எதற்கும் இப்போது ஒரு தடவை உடம்பு எப்படி இருக்கிறதென்று ஒரு போன் பண்ணி பார்க்கலாமா என்று தோன்றியது. மணியை பார்த்தான். மணி பத்து. இந்நேரத்தில் போன் பண்ணினால் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று யோசித்துக் கொண்டே தூங்கியும் விட்டான்..காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே ஆபிஸ் வந்து விட்டான், அவளை பார்க்கவேண்டும் என்கிற வெறியில். வருகிற வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அவள் குணமாகி ஆபிஸ் வந்து சேரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு வந்தான்..ஒரு வழியாய் ஒன்பதரை மணிக்கு ஆபிஸ் வந்து சேர்ந்து விட்டாள் ரோஜா. ராஜாவுக்கு தலை கால் புரியவில்லை. அவ்வளவு சந்தோஷம். ஒரு தடவை ராஜாவைப் பார்த்து புன்னகைத்தவள் குட்மார்னிங் சொல்லி விட்டு தனது வேலைகளை ஆரம்பித்து விட்டாள். உடம்புக்கு என்ன ஆனது என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. நாமே கேட்டுவிடலாமா என்று யோசித்து, பிறகு சரி நேற்று நடந்தது நேற்றோடு போகட்டும், அதை ஏன் கிளறுவானேன் என்று முடிவு செய்து கொண்டான். திடீரென்று யோசனை வந்தவனாய், ' ரோஜா டிராயரைத் திறந்தீங்களா' என்றான் தனிவான குரலில். இல்லை என்பது போல் ஆச்சரியம் கலந்து பார்த்தாள். உடனே டிராயரை திறந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.."காலையில கோயிலுக்கு போயிருந்தேன். உங்களுக்கு உடம்பு சரியாகி ஆபிஸ் திரும்பனும்னு வேண்டிகிட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்தேன். நீங்க இல்லாததால பிரசாதத்தை டிராயர்ல வெச்சேன்," என்றான். புருவத்தை சுருக்கிக் கொண்டு அப்போதுதான் மேஜை டிராயரைத் திறந்தாள். மீண்டும் தனிவான குரலில் ராஜா சொன்னான் "தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ்.".கோவிலில் வாங்கிய பிரசாதம் என்னவோ விபூதி மட்டும் தான். ஆனால் இவனோ ஒரு சிவப்பு ரோஜாவையும் சேர்த்து வைத்திருந்தான். அது அவன் பணம் கொடுத்து வாங்கியது. அவளுக்குத் தன் காதலை தெரிவிப்பதாக ஒரு எண்ணம் அவனுக்கு. இப்போதுதான் அவனுக்கு மனது அடித்துக் கொண்டது. விபூதியை மட்டும் வைத்துக் கொள்வாளா, இல்லை ரோஜாவையும் எடுத்து வைத்துக் கொள்வாளா. இல்லை இரண்டையுமே வைத்துக் கொள்ள மாட்டாளா. நெஞ்சு ஏனோ திக் திக்கென்று அடித்துக் கொண்டது. நெற்றியில் திருநீறு சிறியதாய் இட்டிருந்தாள். மனதுக்கு இதமாய் இருந்தது. ரோஜாவை வைத்திருக்கிறாளா என்று பார்த்தான். இந்தப் பக்கத்தில் இல்லை. ஒருவேளை இடது புறம் செருகியிருப்பாளோ. என்னென்னவோ செய்து பார்த்தான், தலையில் ரோஜா இருக்கிறதா என்று பார்க்க. வேலையில் மனது ஒடவே இல்லை. அவனது தர்மசங்கடமான சூழ்நிலையை உணர்ந்து கடவுளே போய் அவளை இவன் பக்கம் திரும்ப சொல்லியிருப்பாரோ என்னவோ, 'ஸார்' என்று இவனிடம் திரும்பினாள். சட்டென அவள் தலையைக் கவனித்தான், இடதுபுறமும் ரோஜா இல்லை. சொரேல் என்றது இவனுக்குள்..ரோஜா, ஏன் ரோஜாவை வைத்துக் கொள்ளவில்லை. என் காதலை உணர்த்தத்தானே அதை வைத்தேன். அதையேன் நீ உணர மறுக்கிறாய்? உணர மட்டும்தான் மறுக்கிறாயா இல்லை உனக்கு என்னை பிடிக்கவே இல்லையா… கவலையானான்..ஒரு நாள், நெற்றியைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள். ராஜாவுக்குத் தாளவில்லை. தலைவலியா என்று கேட்டு விடலாமா என்று யோசித்தான். அது டீசென்ட்டாக இருக்காதோ என்றும் தோன்றியது. ராஜாவுக்கு வேலையே ஓடவில்லை. எப்போது தலையை உயர்த்திப் பார்ப்பாள், கேட்கலாம் என்று காத்திருந்தான். நிமிடத்திற்கொரு தடவை அவள் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்தும் கொண்டான். அப்படியே செய்து கொண்டிருந்தால் மற்றவர்கள் நம்மைப் பற்றி தப்பாய் ஏதும் எடுத்துக் கொள்வார்களோ என்றும் யோசனை வந்தது. கடவுளே போய் அவளைத் தட்டி இவன் பக்கம் திரும்பச் சொன்னது போல திரும்பினாள். அவளும் நோக்க இவனும் நோக்கினான். கண்கள் லேசாய் சிவந்திருந்தன. என்ன ஆச்சு என்பது போல் சைகையில் கேட்டான். 'ஒண்ணுமில்லை ஸார் தலைவலி…' என்றாள் குரலைத் தனித்து. குரல் கரகரத்திருந்தது. ராஜாவுக்குத் தாளவில்லை. ' கொஞ்சம் இருங்க இதோ வந்துடறேன் ' என்று சொல்லி எழுந்து வேகமாய் போனான். ஆபிஸ் ஸ்டாப் யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால் அவசரத்திற்கு கொடுக்க வேண்டி மருந்து மாத்திரைகள் ஒரு பாக்ஸில் வைத்திருப்பார்கள். அதிலிருந்து ஒரு தலை வலி மாத்திரையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அவளிடம் கொடுத்து 'போட்டுக்கோங்க தலைவலி பறந்து போய்டும்' என்றான். அவள் என்ன நினைத்தாளோ, கொஞ்சம் யோசித்து… தடுமாறி… பிறகு அந்த மாத்திரையை வாங்கிக் கொண்டாள். அவள் அதைப்போட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் இவனுக்கே வலி குறைந்தது போல உணர்ந்தான்..வேறொரு சந்தர்ப்பத்தில் காய்ச்சலோடு வந்திருக்கிறாள் என்று தெரிந்து துடித்தே போனான். பாக்ஸில் காய்ச்சல் மாத்திரையும் இல்லை. உடனே ஒரு சின்ன வேலை என்று மேனேஜரிடம் பொய் சொல்லிக் கொண்டு மொபெட்டில் கிளம்பிப் போய் மெடிக்கல் ஷாப்பிலிருந்து காய்ச்சல் மாத்திரை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்லி அவள் மாத்திரையைப் போட்டுக் கொண்ட பிறகுதான் இவனுக்கு நிம்மதியே பிறந்தது. இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலும் சரி, அவளைப் பற்றி யோசிக்காவிட்டாலும் சரி, எதையோ இழந்தது போலவே இருந்தது..(தொடரும்)
மினி தொடர்-1.கதை: –அன்னக்கிளி வேலு .ஓவியம்: தமிழ்.'ரோஜா! என்ன அழகான பெயர் '.அன்றைய தபால்களை திறந்து கொண்டிருந்த டெஸ்பாச் ரெங்கசாமி, ' புதுசா ஒரு டைபிஸ்ட் போட்டிருக்காங்கப்பா, பேரு ரோஜா ' என்றவுடன், ஆச்சரியமும் ஆவலும் கொண்டவனாய் ரெங்கசாமி சொன்ன பெயரைத்தான், அப்படி சொல்லிப் பார்த்துக் கொண்டான் ராஜா. அந்த ஆபிசில் மேனேஜர் முதல் சுத்தம் செய்கிறவர் வரை எல்லோருமே, ஆண்கள்தான், அதிலும் கல்யாணமானவர்கள், இவனைத் தவிர. ஆபிஸுக்குள் முதன் முதலாய் ஒரு பெண் என்று நினைக்கும்போதே ராஜாவுக்கு சிலிர்ப்பு உண்டானது..' டிரான்ஸ்பரா… புது போஸ்டிங்கா ' என்று மறுபடியும் கேட்டான் அவன்..'புது போஸ்டிங்பா, ஊர் சேலமாம், D/O சங்கரலிங்கம்னு போட்டிருக்கு ' என்று பதில் வந்தது. ராஜாவின் மனத்திரையில் இளையராஜாவின் இசையில் பத்து தேவதைகள், 'தம்தன.. நம்தன.. நம்தன….' என்று நடனமாடினார்கள்..' ரோஜா…. ராஜா….! ராஜா…. ரோஜா….!'.D/O என்று போட்டிருப்பதால், கல்யாணம் ஆகாதவளா, நேரடி அப்பாய்ன்ட்மென்ட் என்றால் வயது எப்படியும் ஒரு இருபது இருக்காதா? இல்லை இருபத்திரெண்டோ, இருபத்தி மூன்றோ இருக்குமா? எப்போது வந்து சேருவாள், அடுத்த மாதமா, இல்லை அடுத்த வாரமா, இல்லை நாளையேவா? மீண்டும் குழப்பம். உயரமாய் இருப்பாளா, கட்டையாய் இருப்பாளா இல்லை சுமாரான உயரமா ? கருப்பாய் இருப்பாளா, வெள்ளையாய் இருப்பாளா, இல்லை மாநிறமா ? யோசிக்க யோசிக்க ராஜாவுக்கு மண்டை ஜிவ்வென்றது. வேலையே ஒடவில்லை..ஒரு வழியாய் வேலைக்கு வந்து சேர்ந்தாள் ரோஜா, அவனது கனவுக் கன்னி. அப்பாவுடன் வந்திருந்தாள். காலையில் ஆபிஸுக்குள் நுழையும்போதே ராஜாவைத்தான் முதலில் பார்த்தார்கள் அவர்கள். தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டவுடன், ஆபீஸ் டைமில் ஆரம்பித்து வேலை சம்பந்தமாய் பேசி, தங்கிக்கொள்ள லேடிஸ் ஹாஸ்டல் ஏதும் கிடைக்குமா, போக வர ஷேர் ஆட்டோ கிடைக்குமா என்பது வரை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். ராஜா ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதில் சொன்னான். அவள் ஆபிசில் சேர்ந்த உடனே மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து அவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அவனுக்கு தெரிந்த ஒரு லேடிஸ் ஹாஸ்டலைப் பார்த்தான். நல்ல வேலையாய் ஒரு ரூம் காலி இருந்தது. பாரம் பூர்த்தி செய்து, பணம் கட்டி ரூம் சாவியை வாங்கிக் கொடுத்தான் ராஜா. ரோஜாவின் இதழில் புன்னகை. அவளது அப்பாவுக்கும் பூரண நிம்மதி. ராஜாவுக்கும் ரொம்பவும் திருப்தியாய் இருந்தது..திரும்பி ஆபிஸ் போய் அவளை மேனேஜெர் ரூமில் விட்டுவிட்டு போய் தன் இருக்கையில் உட்கார்ந்தான். வேலை எதுவும் ஓட வில்லை. நெளிந்தான். பர்ஸ்ட் இம்ப்ரஸன்… பெஸ்ட் இம்ப்ரஸன்… அவனுக்கு ரொம்பவும் திருப்தியாய் இருந்தது. எப்படியும் அவளது மனதில் தனக்கு ஒரு இடம் உண்டு என்று அப்போதே முடிவு செய்து கொண்டான்..ஒரு வழியாய் இவனுக்கு பக்கத்து இருக்கையிலேயே உட்கார சொல்லி விட்டார் மேனேஜர். முதலில் இருந்த டைபிஸ்ட் வேலையை விட்டுப் போன பிறகு வேறு ஆள் போடாததால் மெசினைத் தன் ரூமில் கொண்டுபோய் வைத்துக் கொண்டிருந்தார் மேனேஜர். இப்பொழுது ரோஜா வந்து விட்டாள், அதுவும் பக்கத்து சீட்டிற்கே. மேனேஜர் ரூமுக்குள் இருந்த டைப்பிங் மெசின் இங்கே கொண்டு வந்து போடப்பட்டது. உயரத்தில் இறக்கை கட்டி பறந்தான் அவன்..எப்படியும் அவளோடு பேசிப்பேசியே அவளிடம் ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டான். அதற்கு தகுந்தாற்போல் மேனேஜரும் அவளிடம் சொல்லியிருந்தார் 'ஆபிஸ்லயே ரொம்ப டீஸண்ட்டான ஸ்டாப்ஃ ராஜா. எல்லா வேலையையும் நீங்க அவர்கிட்டேயிருந்தே கத்துக்கலாம் ' என்றார். அது முதல், விழுந்து விழுந்து சொல்லிக் கொடுத்தான் ராஜா. மற்றவர்கள் யாரும் அவளை நெருங்க முடியாதபடியும் பார்த்துக் கொண்டான். அவள் கொஞ்சநேரம் எதுவும் கேட்கவில்லை என்றாலும் கூட, வழிய சென்று சொல்லிக் கொடுப்பான்..அன்று சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் மேனேஜர் ரூமிலிருந்த அவளது பெர்சனல் பைலை எடுத்து அவளது விவரங்களை மனதிற்குள் ஏற்றிக் கொண்டான். வயது இருபத்து ஒன்று. சொந்த ஊர் திருச்சி. ஆனால் இப்போது இருப்பது சேலத்தில். அப்பா ரயில்வேயில் இஞ்சினீயர். அம்மா ஹவுஸ் ஓய்ப். பி.எஸ்.ஸி முடித்து டைப்பிங்கும் முடித்திருக்கிறாள். கூடப்பிறந்தது பி.ஸி.ஏ படிக்கும் ஒரு தம்பி மட்டும்..ஒரு நாள் அவள் வரவில்லையென்றதும் துடித்துப் போனான், இவன். உடனே, அவளுக்கு போன் செய்தான். பெரும்பாலும் மேனேஜரிடம் சொல்லாமல் யாரும் லீவு எடுப்பதில்லை. பொறுமை இழந்தவனாய் உட்கார்ந்திருந்தான். கொஞ்ச நேரத்தில் அவளே போனடித்தாள். தான் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் லீவு எடுத்துக் கொண்டதாகவும் மேனேஜரிடம் காலையிலேயே தெரியப்படுத்தி விட்டதாகவும் சொல்லி, முடித்துக் கொண்டாள்..அவளுக்கு உடம்புக்கு என்ன, காய்ச்சலா, தலைவலியா, உடல் வலியா. என்னதான் ஆனது. அவளிடம் கேட்கவும் கூச்சம், அவளாக சொல்வாள் என்று நினைத்தால் அவளோ பொதுவாய் உடல் நிலை சரியில்லை என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். அப்படியென்றால் கொஞ்சம் நம்மிடமிருந்து தூரப்படுத்திக் கொள்கிறாளோ. கொஞ்சம் கவலையும் வந்தது. நாம் நெருங்கிப் போனால் அவள் தூரப் போகிறாளோ..எந்த வேலையுமே அன்று ஓடவில்லை. உடனே லேடீஸ் ஹாஸ்டல் போய் பார்த்து விட்டு வந்து விடலாமா என்று கூட தோன்றியது. இப்போது போனால் ஹாஸ்டலில் இருப்பவர்கள் தப்பாய் நினைத்து விடுவார்களோ. மற்றவர்கள் சரி, ரோஜா என்ன நினைப்பாளோ. ஒருவழியாய் சாயங்காலம் போய் பார்த்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டான். போகிறபோது கொஞ்சம் பழங்கள் ஏதும் வாங்கிக் கொள்ளலாமா என்று ஒரு யோசனையும் வந்தது. பழங்கள் கொண்டு போனால் அதிகப் பிரசங்கித்தனம் போல் தோன்றுமோ. ஒரு வேளை அவள் சிரிப்பாளோ. அப்புறம் அவமானமாய் போய்விடுமோ என்றும் யோசித்தான். பிறகு ஒரு வழியாய் போக வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டான். இன்னும் இருபது மணி நேரம் தானே, அப்புறம் இந்த சீட்டிலேயே வந்து உட்கார்ந்திருப்பாளே என்று சமாதானம் செய்து கொண்டான்..அன்றிரவு தூக்கமே வராமல் புரண்டு புரண்டு படுத்தான் ராஜா. மனது அவளையே சுற்றிச்சுற்றி வந்தது. எதற்கும் இப்போது ஒரு தடவை உடம்பு எப்படி இருக்கிறதென்று ஒரு போன் பண்ணி பார்க்கலாமா என்று தோன்றியது. மணியை பார்த்தான். மணி பத்து. இந்நேரத்தில் போன் பண்ணினால் அவள் அதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று யோசித்துக் கொண்டே தூங்கியும் விட்டான்..காலையில் கொஞ்சம் சீக்கிரமாகவே ஆபிஸ் வந்து விட்டான், அவளை பார்க்கவேண்டும் என்கிற வெறியில். வருகிற வழியில் ஒரு பிள்ளையார் கோவிலுக்குப் போய் அவள் குணமாகி ஆபிஸ் வந்து சேரவேண்டுமென்று வேண்டிக்கொண்டு வந்தான்..ஒரு வழியாய் ஒன்பதரை மணிக்கு ஆபிஸ் வந்து சேர்ந்து விட்டாள் ரோஜா. ராஜாவுக்கு தலை கால் புரியவில்லை. அவ்வளவு சந்தோஷம். ஒரு தடவை ராஜாவைப் பார்த்து புன்னகைத்தவள் குட்மார்னிங் சொல்லி விட்டு தனது வேலைகளை ஆரம்பித்து விட்டாள். உடம்புக்கு என்ன ஆனது என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. நாமே கேட்டுவிடலாமா என்று யோசித்து, பிறகு சரி நேற்று நடந்தது நேற்றோடு போகட்டும், அதை ஏன் கிளறுவானேன் என்று முடிவு செய்து கொண்டான். திடீரென்று யோசனை வந்தவனாய், ' ரோஜா டிராயரைத் திறந்தீங்களா' என்றான் தனிவான குரலில். இல்லை என்பது போல் ஆச்சரியம் கலந்து பார்த்தாள். உடனே டிராயரை திறந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.."காலையில கோயிலுக்கு போயிருந்தேன். உங்களுக்கு உடம்பு சரியாகி ஆபிஸ் திரும்பனும்னு வேண்டிகிட்டு பிரசாதம் வாங்கிக்கிட்டு வந்தேன். நீங்க இல்லாததால பிரசாதத்தை டிராயர்ல வெச்சேன்," என்றான். புருவத்தை சுருக்கிக் கொண்டு அப்போதுதான் மேஜை டிராயரைத் திறந்தாள். மீண்டும் தனிவான குரலில் ராஜா சொன்னான் "தப்பா எடுத்துக்காதீங்க, ப்ளீஸ்.".கோவிலில் வாங்கிய பிரசாதம் என்னவோ விபூதி மட்டும் தான். ஆனால் இவனோ ஒரு சிவப்பு ரோஜாவையும் சேர்த்து வைத்திருந்தான். அது அவன் பணம் கொடுத்து வாங்கியது. அவளுக்குத் தன் காதலை தெரிவிப்பதாக ஒரு எண்ணம் அவனுக்கு. இப்போதுதான் அவனுக்கு மனது அடித்துக் கொண்டது. விபூதியை மட்டும் வைத்துக் கொள்வாளா, இல்லை ரோஜாவையும் எடுத்து வைத்துக் கொள்வாளா. இல்லை இரண்டையுமே வைத்துக் கொள்ள மாட்டாளா. நெஞ்சு ஏனோ திக் திக்கென்று அடித்துக் கொண்டது. நெற்றியில் திருநீறு சிறியதாய் இட்டிருந்தாள். மனதுக்கு இதமாய் இருந்தது. ரோஜாவை வைத்திருக்கிறாளா என்று பார்த்தான். இந்தப் பக்கத்தில் இல்லை. ஒருவேளை இடது புறம் செருகியிருப்பாளோ. என்னென்னவோ செய்து பார்த்தான், தலையில் ரோஜா இருக்கிறதா என்று பார்க்க. வேலையில் மனது ஒடவே இல்லை. அவனது தர்மசங்கடமான சூழ்நிலையை உணர்ந்து கடவுளே போய் அவளை இவன் பக்கம் திரும்ப சொல்லியிருப்பாரோ என்னவோ, 'ஸார்' என்று இவனிடம் திரும்பினாள். சட்டென அவள் தலையைக் கவனித்தான், இடதுபுறமும் ரோஜா இல்லை. சொரேல் என்றது இவனுக்குள்..ரோஜா, ஏன் ரோஜாவை வைத்துக் கொள்ளவில்லை. என் காதலை உணர்த்தத்தானே அதை வைத்தேன். அதையேன் நீ உணர மறுக்கிறாய்? உணர மட்டும்தான் மறுக்கிறாயா இல்லை உனக்கு என்னை பிடிக்கவே இல்லையா… கவலையானான்..ஒரு நாள், நெற்றியைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள். ராஜாவுக்குத் தாளவில்லை. தலைவலியா என்று கேட்டு விடலாமா என்று யோசித்தான். அது டீசென்ட்டாக இருக்காதோ என்றும் தோன்றியது. ராஜாவுக்கு வேலையே ஓடவில்லை. எப்போது தலையை உயர்த்திப் பார்ப்பாள், கேட்கலாம் என்று காத்திருந்தான். நிமிடத்திற்கொரு தடவை அவள் பக்கம் திரும்பி திரும்பிப் பார்த்தும் கொண்டான். அப்படியே செய்து கொண்டிருந்தால் மற்றவர்கள் நம்மைப் பற்றி தப்பாய் ஏதும் எடுத்துக் கொள்வார்களோ என்றும் யோசனை வந்தது. கடவுளே போய் அவளைத் தட்டி இவன் பக்கம் திரும்பச் சொன்னது போல திரும்பினாள். அவளும் நோக்க இவனும் நோக்கினான். கண்கள் லேசாய் சிவந்திருந்தன. என்ன ஆச்சு என்பது போல் சைகையில் கேட்டான். 'ஒண்ணுமில்லை ஸார் தலைவலி…' என்றாள் குரலைத் தனித்து. குரல் கரகரத்திருந்தது. ராஜாவுக்குத் தாளவில்லை. ' கொஞ்சம் இருங்க இதோ வந்துடறேன் ' என்று சொல்லி எழுந்து வேகமாய் போனான். ஆபிஸ் ஸ்டாப் யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்றால் அவசரத்திற்கு கொடுக்க வேண்டி மருந்து மாத்திரைகள் ஒரு பாக்ஸில் வைத்திருப்பார்கள். அதிலிருந்து ஒரு தலை வலி மாத்திரையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து அவளிடம் கொடுத்து 'போட்டுக்கோங்க தலைவலி பறந்து போய்டும்' என்றான். அவள் என்ன நினைத்தாளோ, கொஞ்சம் யோசித்து… தடுமாறி… பிறகு அந்த மாத்திரையை வாங்கிக் கொண்டாள். அவள் அதைப்போட்டு தண்ணீர் குடித்த பிறகு தான் இவனுக்கே வலி குறைந்தது போல உணர்ந்தான்..வேறொரு சந்தர்ப்பத்தில் காய்ச்சலோடு வந்திருக்கிறாள் என்று தெரிந்து துடித்தே போனான். பாக்ஸில் காய்ச்சல் மாத்திரையும் இல்லை. உடனே ஒரு சின்ன வேலை என்று மேனேஜரிடம் பொய் சொல்லிக் கொண்டு மொபெட்டில் கிளம்பிப் போய் மெடிக்கல் ஷாப்பிலிருந்து காய்ச்சல் மாத்திரை வாங்கி வந்து அவளிடம் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்லி அவள் மாத்திரையைப் போட்டுக் கொண்ட பிறகுதான் இவனுக்கு நிம்மதியே பிறந்தது. இப்போதெல்லாம் அவளைப் பார்க்காவிட்டாலும் சரி, அவளைப் பற்றி யோசிக்காவிட்டாலும் சரி, எதையோ இழந்தது போலவே இருந்தது..(தொடரும்)