களஞ்சியம்!.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் ஏப்ரல்–1991, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….நாம் நினைக்காமலே பல வாய்ப்புகள் நம் முன் வருகின்றன. அநேகமாக ஆனால், தவறான வாய்ப்பையே நாம் தேர்ந்தெடுத்து விடுகிறோம்..அக்கா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி ராதாவிடம் சொல்லுகிறார்கள். இப்போது ராதா முன் பல வாய்ப்புகள் விரிகின்றன. பாடம் சொல்லிக் கொடுத்ததாகப் பெயர் பண்ணி பெயர் வாங்கிக் கொண்டு போகலாம். வீணாகத் தன்னை அக்கா வேலை வாங்குகின்றாள் என்று பிறரிடம் குறை கூறலாம். பிள்ளைகளின் இயல்புகளைக் கவனித்து அவர்களுக்கு ஏற்ற வண்ணம் சொல்லிக் கொடுப்பதனால் தானும் ஒரு பாடம் படித்துக் கொள்ளலாம்..எவ்வாறாயினும் ராதா ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்?.அலுவலகத்தில் எதிர்பாராமல் மேலதிகாரி இரண்டு நாள் விடுமுறை எடுத்திருக்கிறார். அதனால் ரமாவிற்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவள் அப்போது அரட்டையடித்து பிற்கால மனக்கசப்புகளுக்குக் காரணமாகலாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒழுங்கில்லாமல் கிடக்கும் விவரங்களை ஒன்றுதிரட்டி – ஒரு உருப்படியான வேலையைச் செய்து – எதிர்கால வேலைகளை எளிதாக்கலாம். நாவல் படிக்கலாம். நல்லதோர் கருத்தை எண்ணிப் பார்த்து, அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று எழுதிப் பார்க்கலாம்..எதைச் செய்தாலும் அவளுக்கு திருப்தியே. ஆனால் எந்தத் திருப்தியை அவள் விரும்புகிறாள்?.சூழ்நிலையின் இழுத்த இழுப்பிற்கு நாம் சென்றோமானால், முன் யோசனையில்லாமல் சின்னச் சின்ன திருப்திகளில் நம் சக்திகளைச் சிதறடிப்போமானால், அது யார் தவறு?.ரமா சொல்லலாம். 'எத்தனையோ நாளைக்குப் பிறகு நாலைந்து மணி நேரம் கிடைத்திருக்கிறது. நல்ல கருத்தைச் சிந்தித்துப் பெரிய ஆசைகளை வளர்த்துக் கொண்டால், நாளைக்குப் பழையபடி 10 முதல் 5 மணி உலகத்திற்குப் போவது கஷ்டமல்லவா!.சரி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் இப்படியொரு வாய்ப்பு வருகிறது என்றே வைத்துக் கொள்வோமே. அதனை எதிர்பார்க்குமளவு சிறந்ததோர் திட்டம் அவள் உள்ளத்தில் பதிந்துவிட்டால், அந்த ஆவலிலே அன்றாட வேலைகளின் கசப்பு அகன்று விடாதா! அடுத்தடுத்து புது வழிகள் பிறந்து விடாதா!.ஆடம்பரப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு, அஞ்சல் வழி படிப்பிற்குப் பணம் கட்டுவாள். சரியான கேள்விகள் எழுப்பி, சக அலுவலர்களின் படிப்பையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்வாள். தொலைக்காட்சி முன் உட்காரும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, பின் தூங்கி முன்னெழுந்து காலையில் கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வாள்..மனத்தை வழிக்குக் கொண்டு வர அநேக திறமைசாலிகள் "அடுத்து செய்ய வேண்டியன' என்றோர் பட்டியலைத் தம் பையில் வைத்திருக்கின்றனர். அதன் மூலம் சூழ்நிலையைத் தம் கையில் வைத்திருக்கின்றனர்.மின்சார வண்டி நின்றுவிட்டதா? மற்றவர்களைப் போல் வேடிக்கை பார்க்கும் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வதில்லை. கிடைத்த நேரத்தில் படிக்கலாம் என்று தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆழ்கின்றனர். அது அவர்கள் விருப்பம்..அடுத்து செய்ய வேண்டியனவற்றை வரையறுப்பதில் இரண்டு நன்மை உண்டு. ஒன்று, உயர்ந்ததோர் நோக்கத்தைப் படிப்படியாகச் செயலாக்க முடிகின்றது. இரண்டு, சூழ்நிலை நம்முள் தோற்றுவிக்கும் வேண்டாத விருப்பத்தை தடை செய்யலாம்..மாலை வேளைக்கு ஒரு வேலை வைத்திருந்தால், அதனைக் கவனித்திருந்திருப்போம். இல்லாவிட்டால் தள்ளுபடி விற்பனை என்று வழியில் பார்த்த விளம்பரம் நம்மைத் தள்ளிக் கொண்டு போய்விடும்..உயர்ந்த நோக்கத்தின் உபயோகம் இதுதான்; சின்ன ஆசைகளை அது மறைக்கச் செய்கிறது. மின்மினிகளை மறைக்கும் கதிரவன் போல் கண்ணில் படும் அழகில் மயங்குவோர் விருப்பம், எரிச்சல் ஊட்டியவர்க்கு எதிரடி கொடுக்குமோர் விருப்பம், சோம்பலில் விருப்பம். வெறுப்பதில் ஓர் விருப்பம் என்று மனிதனின் சின்ன விருப்பங்கள் பல. இவற்றுடனே, எதிர்கால நன்மையை எண்ணும் விருப்பம், அன்பில் விருப்பம், முயற்சியில் விருப்பம், அனைவரும் நலனை அடைவதில் விருப்பம் எனச் சிறந்த விருப்பங்களும் உள்ளன..இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்ய சூழ்நிலை இடம் தரும்போது – உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கின்றான். சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றான். மற்றவனோ சூழ்நிலையின் கைப்பாவை ஆகின்றான். ஆசைப்பட்டு மோசம் போகின்றான்..ஆக, சூழ்நிலையைக் கையாளும் முறையில்தான் நல்ல வாய்ப்பு பிறக்கிறது. சூழ்நிலை எதுவானாலும் அதில் ஒரு நல்லதைக் காண்கின்றான். புத்திசாலி, தன் மனத்திலுமோர் உயர்ந்த பண்பை வலுவாக்கிக் கொள்கின்றான்..கச்சிதமாகச் செய்யும் கவனத்தை வளர்க்குமானால், சாதாரண வேலையும் ஓர் வாய்ப்பே. தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவுமானால், எதிர்ப்படும் இடையூறும் ஓர் வாய்ப்பே..ஒழுங்காக இல்லையே ஓவியத் திறமை என்று எண்ணாமல் உள்ளதை ஒரு பொழுதுபோக்காய்க் கொள்ளலாமே. சுற்றுலா சென்ற விடத்து சாப்பாடு தயாராகவில்லையே என்று சுற்றியிருப்போர் எரிச்சல்படுகையில் இயற்கையை வரைந்து இன்பம் எய்தலாமே!.வீட்டு வேலைகளுக்குப் பின் மிஞ்சுவது அரை மணி நேரந்தான் என்று ஏன் ஆதங்கப்படுகின்றீர்கள்? தொடர்ந்து தினமும் தமிழிலக்கியம் படிக்கலாம். இல்லை, யோகசானமே உங்கள் விருப்பம் என்றால், அதைத் தவறாது செய்யலாம். பூ வேலையில் ஆர்வமுள்ளவர்கள் அதில் புதுமைகள் செய்யலாம். அதிலும் இதிலுமான நுனிப்புல் மேய்வதை விடுத்து, ஏதேனும் ஒன்றில் புலமை பெறலாம்..சூழ்நிலையைக் குறை சொல்பவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாளில் கிடைப்பது சிறிது நேரமே ஆனாலும், ஏதேனும் ஒன்றை விடாப் பிடியாகத் தொடர்ந்து செய்தால், ஒரே துறையில் உள்ளத்தை ஒன்றச் செய்தால், முன்னேற்றம் நிச்சயம். மலைச் சிகரம் ஒன்றில் ஏறியவன் மற்ற சிகரங்களையும் பார்க்க முடிவது போல், பல விஷயங்களை அறிந்து கொள்வது நிச்சயம்..வாழ்க்கை முழுவதுமே வாய்ப்புதான். எதை விரும்புகிறோம் என்று புரிந்துகொண்டால், அதை எப்படியெல்லாம் தேடிக் கொள்ளலாம் என்பதும் தெரிந்துவிடும்.– பத்மாவதி செல்வராஜ்
களஞ்சியம்!.மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் ஏப்ரல்–1991, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக….நாம் நினைக்காமலே பல வாய்ப்புகள் நம் முன் வருகின்றன. அநேகமாக ஆனால், தவறான வாய்ப்பையே நாம் தேர்ந்தெடுத்து விடுகிறோம்..அக்கா பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்படி ராதாவிடம் சொல்லுகிறார்கள். இப்போது ராதா முன் பல வாய்ப்புகள் விரிகின்றன. பாடம் சொல்லிக் கொடுத்ததாகப் பெயர் பண்ணி பெயர் வாங்கிக் கொண்டு போகலாம். வீணாகத் தன்னை அக்கா வேலை வாங்குகின்றாள் என்று பிறரிடம் குறை கூறலாம். பிள்ளைகளின் இயல்புகளைக் கவனித்து அவர்களுக்கு ஏற்ற வண்ணம் சொல்லிக் கொடுப்பதனால் தானும் ஒரு பாடம் படித்துக் கொள்ளலாம்..எவ்வாறாயினும் ராதா ஒரு விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவள் எந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறாள்?.அலுவலகத்தில் எதிர்பாராமல் மேலதிகாரி இரண்டு நாள் விடுமுறை எடுத்திருக்கிறார். அதனால் ரமாவிற்கு நேரம் கிடைத்திருக்கிறது. அவள் அப்போது அரட்டையடித்து பிற்கால மனக்கசப்புகளுக்குக் காரணமாகலாம். அங்கொன்றும் இங்கொன்றும் ஒழுங்கில்லாமல் கிடக்கும் விவரங்களை ஒன்றுதிரட்டி – ஒரு உருப்படியான வேலையைச் செய்து – எதிர்கால வேலைகளை எளிதாக்கலாம். நாவல் படிக்கலாம். நல்லதோர் கருத்தை எண்ணிப் பார்த்து, அதனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று எழுதிப் பார்க்கலாம்..எதைச் செய்தாலும் அவளுக்கு திருப்தியே. ஆனால் எந்தத் திருப்தியை அவள் விரும்புகிறாள்?.சூழ்நிலையின் இழுத்த இழுப்பிற்கு நாம் சென்றோமானால், முன் யோசனையில்லாமல் சின்னச் சின்ன திருப்திகளில் நம் சக்திகளைச் சிதறடிப்போமானால், அது யார் தவறு?.ரமா சொல்லலாம். 'எத்தனையோ நாளைக்குப் பிறகு நாலைந்து மணி நேரம் கிடைத்திருக்கிறது. நல்ல கருத்தைச் சிந்தித்துப் பெரிய ஆசைகளை வளர்த்துக் கொண்டால், நாளைக்குப் பழையபடி 10 முதல் 5 மணி உலகத்திற்குப் போவது கஷ்டமல்லவா!.சரி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் இப்படியொரு வாய்ப்பு வருகிறது என்றே வைத்துக் கொள்வோமே. அதனை எதிர்பார்க்குமளவு சிறந்ததோர் திட்டம் அவள் உள்ளத்தில் பதிந்துவிட்டால், அந்த ஆவலிலே அன்றாட வேலைகளின் கசப்பு அகன்று விடாதா! அடுத்தடுத்து புது வழிகள் பிறந்து விடாதா!.ஆடம்பரப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு, அஞ்சல் வழி படிப்பிற்குப் பணம் கட்டுவாள். சரியான கேள்விகள் எழுப்பி, சக அலுவலர்களின் படிப்பையும் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்வாள். தொலைக்காட்சி முன் உட்காரும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு, பின் தூங்கி முன்னெழுந்து காலையில் கால் மணி நேரம் உடற்பயிற்சி செய்வாள்..மனத்தை வழிக்குக் கொண்டு வர அநேக திறமைசாலிகள் "அடுத்து செய்ய வேண்டியன' என்றோர் பட்டியலைத் தம் பையில் வைத்திருக்கின்றனர். அதன் மூலம் சூழ்நிலையைத் தம் கையில் வைத்திருக்கின்றனர்.மின்சார வண்டி நின்றுவிட்டதா? மற்றவர்களைப் போல் வேடிக்கை பார்க்கும் விருப்பத்தை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வதில்லை. கிடைத்த நேரத்தில் படிக்கலாம் என்று தேர்ந்தெடுத்து வைத்திருந்த ஆராய்ச்சிக் கட்டுரையில் ஆழ்கின்றனர். அது அவர்கள் விருப்பம்..அடுத்து செய்ய வேண்டியனவற்றை வரையறுப்பதில் இரண்டு நன்மை உண்டு. ஒன்று, உயர்ந்ததோர் நோக்கத்தைப் படிப்படியாகச் செயலாக்க முடிகின்றது. இரண்டு, சூழ்நிலை நம்முள் தோற்றுவிக்கும் வேண்டாத விருப்பத்தை தடை செய்யலாம்..மாலை வேளைக்கு ஒரு வேலை வைத்திருந்தால், அதனைக் கவனித்திருந்திருப்போம். இல்லாவிட்டால் தள்ளுபடி விற்பனை என்று வழியில் பார்த்த விளம்பரம் நம்மைத் தள்ளிக் கொண்டு போய்விடும்..உயர்ந்த நோக்கத்தின் உபயோகம் இதுதான்; சின்ன ஆசைகளை அது மறைக்கச் செய்கிறது. மின்மினிகளை மறைக்கும் கதிரவன் போல் கண்ணில் படும் அழகில் மயங்குவோர் விருப்பம், எரிச்சல் ஊட்டியவர்க்கு எதிரடி கொடுக்குமோர் விருப்பம், சோம்பலில் விருப்பம். வெறுப்பதில் ஓர் விருப்பம் என்று மனிதனின் சின்ன விருப்பங்கள் பல. இவற்றுடனே, எதிர்கால நன்மையை எண்ணும் விருப்பம், அன்பில் விருப்பம், முயற்சியில் விருப்பம், அனைவரும் நலனை அடைவதில் விருப்பம் எனச் சிறந்த விருப்பங்களும் உள்ளன..இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்ய சூழ்நிலை இடம் தரும்போது – உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்ததைத் தேர்ந்தெடுக்கின்றான். சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றான். மற்றவனோ சூழ்நிலையின் கைப்பாவை ஆகின்றான். ஆசைப்பட்டு மோசம் போகின்றான்..ஆக, சூழ்நிலையைக் கையாளும் முறையில்தான் நல்ல வாய்ப்பு பிறக்கிறது. சூழ்நிலை எதுவானாலும் அதில் ஒரு நல்லதைக் காண்கின்றான். புத்திசாலி, தன் மனத்திலுமோர் உயர்ந்த பண்பை வலுவாக்கிக் கொள்கின்றான்..கச்சிதமாகச் செய்யும் கவனத்தை வளர்க்குமானால், சாதாரண வேலையும் ஓர் வாய்ப்பே. தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவுமானால், எதிர்ப்படும் இடையூறும் ஓர் வாய்ப்பே..ஒழுங்காக இல்லையே ஓவியத் திறமை என்று எண்ணாமல் உள்ளதை ஒரு பொழுதுபோக்காய்க் கொள்ளலாமே. சுற்றுலா சென்ற விடத்து சாப்பாடு தயாராகவில்லையே என்று சுற்றியிருப்போர் எரிச்சல்படுகையில் இயற்கையை வரைந்து இன்பம் எய்தலாமே!.வீட்டு வேலைகளுக்குப் பின் மிஞ்சுவது அரை மணி நேரந்தான் என்று ஏன் ஆதங்கப்படுகின்றீர்கள்? தொடர்ந்து தினமும் தமிழிலக்கியம் படிக்கலாம். இல்லை, யோகசானமே உங்கள் விருப்பம் என்றால், அதைத் தவறாது செய்யலாம். பூ வேலையில் ஆர்வமுள்ளவர்கள் அதில் புதுமைகள் செய்யலாம். அதிலும் இதிலுமான நுனிப்புல் மேய்வதை விடுத்து, ஏதேனும் ஒன்றில் புலமை பெறலாம்..சூழ்நிலையைக் குறை சொல்பவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். ஒரு நாளில் கிடைப்பது சிறிது நேரமே ஆனாலும், ஏதேனும் ஒன்றை விடாப் பிடியாகத் தொடர்ந்து செய்தால், ஒரே துறையில் உள்ளத்தை ஒன்றச் செய்தால், முன்னேற்றம் நிச்சயம். மலைச் சிகரம் ஒன்றில் ஏறியவன் மற்ற சிகரங்களையும் பார்க்க முடிவது போல், பல விஷயங்களை அறிந்து கொள்வது நிச்சயம்..வாழ்க்கை முழுவதுமே வாய்ப்புதான். எதை விரும்புகிறோம் என்று புரிந்துகொண்டால், அதை எப்படியெல்லாம் தேடிக் கொள்ளலாம் என்பதும் தெரிந்துவிடும்.– பத்மாவதி செல்வராஜ்