நீங்க கோயிலுக்குச் சென்று கும்பிடுபவரா… இல்ல, குடும்பமே கோயில் என்றிருப்பவரா?– ஜெயந்தி மகாதேவன், பாலவாக்கம்..தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடும் நாட்டியக்காரி. அத்தனை ஆட்டத்துக்கு நடுவிலும் தலைக் கும்பத்திலே ஒரு கண்ணாகவே இருப்பாளாம்! நானும் அப்படித்தான்… வேலைகளையும் விடாமல் கடவுள் நினைப்பையும் விடாமல் இருக்கும் ரகம்..அப்படியே கோயிலுக்குப் போனாலும் கூட்டம் சேரும் விசேஷ நாட்களை அதிகவனமாகத் தவிர்த்துவிடுவேன். நாமும் சாமியைப் பார்க்க முடியாது. சாமியும் நம்பளை பார்க்க முடியாது. யாரும் போகாத, பாடல் பெற்ற, புராதனக் கோயில்களைத் தேடிச் சென்று பார்ப்பது மிகவும் பிடிக்கும்… ஏகாந்த தரிசனம்..சமீபத்தில் போன கோயில் மண்டியாவில் உள்ள தொண்டணூர் நம்பி நாராயணன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் கோயில். ஸ்ரீரங்கத்தை விட்டு வந்தஸ்ரீ ராமானுஜர் தமது தர்மப் பிரசாரத்தை மீண்டும் ஆரம்பித்தது இங்கேதான். துவாபர யுகத்தில் தர்மரால் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள். பகவத்கீதையை அருளும் ஸ்ரீகிருஷ்ணராக. பார்த்தசாரதிப் பெருமாள் கொள்ளை அழகு போங்க!(ஐயாயிரம் வருடப் பழைமையான திருக்கோயில் என்பதால் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது!).சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?– மஞ்சுவாசுதேவன், பெங்களூரு..ஒரு ஜாடியில30 பூச்சிகளை போடறோம்னு வெச்சுக்குங்க!அதுல அஞ்சோ, பத்தோதான் மேலே வருது. இது அதிர்ஷ்டமா? இல்ல அந்தப் பூச்சிகளோட திறமையான்னு தெரியல!.வலுத்தவன் ஜெயிக்கிறான்னு வெச்சுக்கலாம்! ஆனால், சூழ்நிலையும், தெய்வ அருளும் அமைந்து வரும்போது, பலவீனமானவனும், ஜெயிப்பதைப் பார்க்கிறோமே!.அப்ப. அதிர்ஷ்டம்னா என்ன?.'திருஷ்டம்' னா கண்ணுக்குத் தெரிவது: 'அ' திருஷ்டம்' கண்களுக்குத் தெரியாதது. எந்த விஷயத்தைக் கண்ணால் பார்க்க முடியாதோ அதுதான் அதிர்ஷ்டம்! அது இஷ்டத்துக்கு வர்றதனால அதிர்ஷ்டம்!.கே. பாக்யராஜ். டி. ராஜேந்தர். எந்த இயக்குநரின் க்ளைமேக்ஸ் ரசிகர்களைப் பிரமிக்க வைத்தது?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.கே. பாக்யராஜ் அதில் மன்னன். மிக மிக சாதாரணக் கதை! கதை இப்படித்தான் முடியும்னு தெரியும். ஆனால், அதிலேயே வலுவான திரைக்கதை, யதார்த்தமான வசனம் வைச்சு ரசிகர்களின் ரசனையைத் தொட்டு விடுவதில் ராஜாதி ராஜா!.அந்த ஏழு நாட்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு, மெளன கீதங்கள், தூறல் நின்னு போச்சு, எல்லாமே வெள்ளி விழாப் படங்கள். காரணம் சிம்ப்ளி ஸ்வீட் க்ளைமேக்ஸ்!.அதிலும் அவர் 'திரைக்கதை – வசனம் – டைரக்ஷன் – கே. பாக்யராஜ்' என்று கார்டை வித்யாசமாக ஒரு ட்விஸ்ட்டான சமயத்தில், எதிர்பாராத ஷாட்டில் ஃப்ரீஸ் செய்து போடும் யுக்திக்கே தியேட்டரில் கிளாப்ஸ் விழும். அது அந்தக் காலத்துல ஒரு புதுமைத்தான்!.அது சரி, டி.ஆரை ஏன் அநாவசியமா இழுத்தீங்க? அதச் சொல்லுங்க மொதல்ல… கேள்வியே சரியில்லையே கார்த்திக் ஸார்… அவர் நல்லா பாட்டு எழுதுவாரு… இசையமைப்பாரு! பாட்டெல்லாம் கேக்கிற மாதிரி இருக்கும்… அவ்வளவுதான். அநியாயத்துக்குக் கேள்வி கேட்கறீங்க? ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆகாது!.ரயிலுக்குள் சத்தமாகப் பாட்டு கேட்பதோ, செல்ஃபோனில் சத்தமாகப் பேசுவதோ தடை விதிக்கப்பட்டுள்ளதே?– ரமா முருகேஷ், கடலூர்.நல்ல விஷயம்! ஒரு மாமி, சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறியவர், இறங்கும்வரை செல்ஃபோனில் தன்னுடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள அனைவரையும் அழைத்து…."ஆமாம்… தனியாத்தான் வர்றேன்… மது வந்து கார்ல டிராப் பண்ணினான்… மன்னி இட்லி வார்த்து மொளாகப் பொடி வெச்சுக் கொடுத்தா… ஆமாமா… கூட்டமாகத்தான் இருக்கு! சித்தி புடைவை வெச்சு கொடுத்தா சில்க் காட்டன். சேப்பு கலர்ல.. சித்ரா, வர்க் ஃப்ரம் ஹோமாம்! வர முடியாதாம். 'கால்' இருக்காம். மாப்ளை யூபர் டாக்ஸி புக் பண்ணிடுவார்"இதையே ரிப்பீட்டு! சென்ட்ரல் வரும்வரை!.அப்படியே இரவு நேரம் சைட் சீட்டிலே எதிரும் புதிருமாக நெருக்கி, உட்கார்ந்து தொடை மேல் கால் போட்டு, சில்மிஷம் செய்தவாறே இரவெல்லாம் யூ-ட்யூப், ஃபேஸ்புக், பார்த்தபடி நம்மை தூங்கவிடாமல் டார்ச்சர் செய்துவிட்டு, காலையில் ஒண்ணுமே தெரியாத அப்பாவியாக ரிஃப்ரெஷ் மோடில் இறங்கிப் போகும் இளஞ்ஜோடிகளுக்கும் ஏதாவது செக் வையுங்க ரயில்வே ஆபிசர்!
நீங்க கோயிலுக்குச் சென்று கும்பிடுபவரா… இல்ல, குடும்பமே கோயில் என்றிருப்பவரா?– ஜெயந்தி மகாதேவன், பாலவாக்கம்..தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு ஆடும் நாட்டியக்காரி. அத்தனை ஆட்டத்துக்கு நடுவிலும் தலைக் கும்பத்திலே ஒரு கண்ணாகவே இருப்பாளாம்! நானும் அப்படித்தான்… வேலைகளையும் விடாமல் கடவுள் நினைப்பையும் விடாமல் இருக்கும் ரகம்..அப்படியே கோயிலுக்குப் போனாலும் கூட்டம் சேரும் விசேஷ நாட்களை அதிகவனமாகத் தவிர்த்துவிடுவேன். நாமும் சாமியைப் பார்க்க முடியாது. சாமியும் நம்பளை பார்க்க முடியாது. யாரும் போகாத, பாடல் பெற்ற, புராதனக் கோயில்களைத் தேடிச் சென்று பார்ப்பது மிகவும் பிடிக்கும்… ஏகாந்த தரிசனம்..சமீபத்தில் போன கோயில் மண்டியாவில் உள்ள தொண்டணூர் நம்பி நாராயணன் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் கோயில். ஸ்ரீரங்கத்தை விட்டு வந்தஸ்ரீ ராமானுஜர் தமது தர்மப் பிரசாரத்தை மீண்டும் ஆரம்பித்தது இங்கேதான். துவாபர யுகத்தில் தர்மரால் கட்டப்பட்ட கோயில் என்கிறார்கள். பகவத்கீதையை அருளும் ஸ்ரீகிருஷ்ணராக. பார்த்தசாரதிப் பெருமாள் கொள்ளை அழகு போங்க!(ஐயாயிரம் வருடப் பழைமையான திருக்கோயில் என்பதால் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது!).சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்கிறார்களே… அப்படி என்றால் என்ன?– மஞ்சுவாசுதேவன், பெங்களூரு..ஒரு ஜாடியில30 பூச்சிகளை போடறோம்னு வெச்சுக்குங்க!அதுல அஞ்சோ, பத்தோதான் மேலே வருது. இது அதிர்ஷ்டமா? இல்ல அந்தப் பூச்சிகளோட திறமையான்னு தெரியல!.வலுத்தவன் ஜெயிக்கிறான்னு வெச்சுக்கலாம்! ஆனால், சூழ்நிலையும், தெய்வ அருளும் அமைந்து வரும்போது, பலவீனமானவனும், ஜெயிப்பதைப் பார்க்கிறோமே!.அப்ப. அதிர்ஷ்டம்னா என்ன?.'திருஷ்டம்' னா கண்ணுக்குத் தெரிவது: 'அ' திருஷ்டம்' கண்களுக்குத் தெரியாதது. எந்த விஷயத்தைக் கண்ணால் பார்க்க முடியாதோ அதுதான் அதிர்ஷ்டம்! அது இஷ்டத்துக்கு வர்றதனால அதிர்ஷ்டம்!.கே. பாக்யராஜ். டி. ராஜேந்தர். எந்த இயக்குநரின் க்ளைமேக்ஸ் ரசிகர்களைப் பிரமிக்க வைத்தது?– சி. கார்த்திகேயன், சாத்தூர்.கே. பாக்யராஜ் அதில் மன்னன். மிக மிக சாதாரணக் கதை! கதை இப்படித்தான் முடியும்னு தெரியும். ஆனால், அதிலேயே வலுவான திரைக்கதை, யதார்த்தமான வசனம் வைச்சு ரசிகர்களின் ரசனையைத் தொட்டு விடுவதில் ராஜாதி ராஜா!.அந்த ஏழு நாட்கள், சுவர் இல்லாத சித்திரங்கள், முந்தானை முடிச்சு, மெளன கீதங்கள், தூறல் நின்னு போச்சு, எல்லாமே வெள்ளி விழாப் படங்கள். காரணம் சிம்ப்ளி ஸ்வீட் க்ளைமேக்ஸ்!.அதிலும் அவர் 'திரைக்கதை – வசனம் – டைரக்ஷன் – கே. பாக்யராஜ்' என்று கார்டை வித்யாசமாக ஒரு ட்விஸ்ட்டான சமயத்தில், எதிர்பாராத ஷாட்டில் ஃப்ரீஸ் செய்து போடும் யுக்திக்கே தியேட்டரில் கிளாப்ஸ் விழும். அது அந்தக் காலத்துல ஒரு புதுமைத்தான்!.அது சரி, டி.ஆரை ஏன் அநாவசியமா இழுத்தீங்க? அதச் சொல்லுங்க மொதல்ல… கேள்வியே சரியில்லையே கார்த்திக் ஸார்… அவர் நல்லா பாட்டு எழுதுவாரு… இசையமைப்பாரு! பாட்டெல்லாம் கேக்கிற மாதிரி இருக்கும்… அவ்வளவுதான். அநியாயத்துக்குக் கேள்வி கேட்கறீங்க? ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆகாது!.ரயிலுக்குள் சத்தமாகப் பாட்டு கேட்பதோ, செல்ஃபோனில் சத்தமாகப் பேசுவதோ தடை விதிக்கப்பட்டுள்ளதே?– ரமா முருகேஷ், கடலூர்.நல்ல விஷயம்! ஒரு மாமி, சதாப்தி எக்ஸ்பிரஸில் ஏறியவர், இறங்கும்வரை செல்ஃபோனில் தன்னுடைய கான்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள அனைவரையும் அழைத்து…."ஆமாம்… தனியாத்தான் வர்றேன்… மது வந்து கார்ல டிராப் பண்ணினான்… மன்னி இட்லி வார்த்து மொளாகப் பொடி வெச்சுக் கொடுத்தா… ஆமாமா… கூட்டமாகத்தான் இருக்கு! சித்தி புடைவை வெச்சு கொடுத்தா சில்க் காட்டன். சேப்பு கலர்ல.. சித்ரா, வர்க் ஃப்ரம் ஹோமாம்! வர முடியாதாம். 'கால்' இருக்காம். மாப்ளை யூபர் டாக்ஸி புக் பண்ணிடுவார்"இதையே ரிப்பீட்டு! சென்ட்ரல் வரும்வரை!.அப்படியே இரவு நேரம் சைட் சீட்டிலே எதிரும் புதிருமாக நெருக்கி, உட்கார்ந்து தொடை மேல் கால் போட்டு, சில்மிஷம் செய்தவாறே இரவெல்லாம் யூ-ட்யூப், ஃபேஸ்புக், பார்த்தபடி நம்மை தூங்கவிடாமல் டார்ச்சர் செய்துவிட்டு, காலையில் ஒண்ணுமே தெரியாத அப்பாவியாக ரிஃப்ரெஷ் மோடில் இறங்கிப் போகும் இளஞ்ஜோடிகளுக்கும் ஏதாவது செக் வையுங்க ரயில்வே ஆபிசர்!