முகநூல் வாசகியர்களின் தேர்ந்தெடுத்த சில பதிவுகள்….ஜெயா சம்பத்செலிபிரிட்டினா நம் சுயத்தை இழந்து விடுவோம். நாம் விரும்பியபடி நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்குப் போக முடியாது. எப்போதும் கேமரா கண்கள் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தவரை, சாதாரண பெண்மணியாகவே இருந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்து, அதன் மூலம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கவே ஆசைப் படுகிறேன்..ஹேமலதா ஶ்ரீனிவாசன்சராசரி பெண்மணியாக வாழ்ந்து நாம் யாரென்றே இவ்வுலகத்துக்கு உணர்த்தாமல் மடிவதில் என்ன பெருமை உள்ளது?.செலிபிரிட்டியாக இருந்தாலும் சிம்பிளாக, யாரும் எளிதில் அணுகக்கூடியவராக, நம் பிராபல்யத்தின் மூலம் சமூகத்துக்கு நல்லது செய்பவராக வாழ்ந்து மடிய வேண்டும். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும். சுயத்தை இழக்காமல் செலிபிரிட்டியாக வாழ்வது நம் கையிலேதான் உள்ளது..சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்சாதாரண பெண்மணியாக இருந்து வாழ்க்கையில் ஏதாவது அமைதியாக சாதித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் நம்முடைய இலட்சியத்தை அடைய முடியும். செலிபிாிட்டியாக இருந்தால் எளிதாக எந்த முடிவையும் எடுக்க முடியாது..மீனலதாஆரம்பத்தில் அநேக பெண்களும் சராசரிப் பெண்கள்தான். அவரவர்களது முயற்சி மற்றும் திறமை தான் செலிபிரிட்டியாக உதவுகிறது. மிகப் பெரிய செலிபிரட்டியாக வாழ்பவர்கள், அந்நிலையை தக்கவைக்க பாடுபடவேண்டும். சராசரி செலிபிரட்டி பெண்மணியாக வாழ சின்ன ஆசை.ராதிகா ரவீந்திரன்செலிபிரிட்டிகளுக்குத் தான் இப்போது மவுசு அதிகம். இன்றைய தலைமுறையினர்கள் அவர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். செலிபிரிட்டிகள் மக்களுக்கு சொல்லும் செய்திகள் எளிதில் அதிக மக்களை சென்றடைகிறது.செலிபிரிட்டியானாலும் கொள்கைகளோடு வாழ்ந்து சமுதாயத்திற்கு என்னால் முடிந்த நல்லதை செய்ய விரும்புகிறேன். நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி வளமான பாரதத்திற்கு வழிகாட்டும் செலிபிரிட்டியாக ஆசை..அன்பு பாலாசராசரி பெண்ணாகவே வாழ ஆசைப்படுகிறேன். கணவருக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளை பொறுப்பாக வளர்க்கும் தாயாக, வயதான பெற்றோரை கவனிக்கும் தாதியாகவே இருக்க ஆசை.பணம், புகழ் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாதவர்கள் செலிபிரட்டிகள். நிறைய செலிபிரட்டிகளின் மரணம் புரியாத புதிராகவே இருக்கும் நிலை உள்ளது. எனவே நான் நானாக இருக்கவே ஆசை.மகாலக்ஷ்மி சுப்பிரமணியன்செலிபிரிட்டியாக இருக்க ஆசைப்பட்டாலும், நினைத்தபோது விரும்பியதை செய்ய முடியாமல் மீடியாக்கள் முன் பொய்யாக நடிக்க வேண்டும். சாதாரண பெண்ணாக நம் சின்ன சாதனைகள் மூலம் பேசப்பட்டாலே மகிழ்ச்சிதான். செலிபிரிட்டியாக இருப்பது எளிதல்ல. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியைக் கொடுத்து புகழ் வருகிறது எனில் அது தேவையில்லை..உஷா பாஸ்கர்செலிபிரிட்டிகளுக்கு மவுசு அதிகம் தான். ஆனால், அவர்கள் நடை , உடை, பேச்சு அனைத்தும் போலியானவை. அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுவர். கொஞ்ச நாட்களில் அவர்கள் சொல்லும், செயலும் மறந்து விடும். ஆகையால் என்றும் நாம் நாமாக, சராசரி பெண்ணாக இருப்பது நமக்கும், நம் குடும்பத்துக்கும் நல்லது. நிரந்திரமானது..கவிதா ஹரிஹரன்பிறக்கும் பொழுதே செலிபிரிட்டியா பிறக்கிறது வெகு சிலரே. சாதாரணமான பெண்ணாக பிறந்து, சாதித்து செலிபிரிட்டியா மாற வேண்டும் என்று விரும்புகிறேன்..மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செலிபிரிட்டியாக இருந்தாலும், அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், பிரச்சனைகளை சமாளித்து, எனக்கு நான் சாதாரணமாக இருப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. செலிபிரட்டி என்றால் சாதித்த சாதாரணமானவர்கள் தானே?.ராதா நரசிம்மன்செலிபிரிட்டியாக இருக்கவே ஆசை. குடும்ப குத்து விளக்காய் இருந்து மறைந்தால் ஒரு குடும்பத்திற்கு தான் பெருமை. அதே செலிபிரிட்டி சுதா மூர்த்தி போன்று இருந்தால் நாட்டுக்கே பெருமை. நாம் பிறந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யலாம். வெற்றி அடைந்து வீரு நடை போட செலிபிரிட்டியானால் தான் முடியும்! அதுதான் எனக்கு பிடிக்கும்..கிருஷ்ணவேணிபோலியான வாழ்க்கை வாழ எனக்கு பிடிக்காது. செலிபிரிட்டி ஆக இருந்தால் ரொம்ப செயற்கையாக நடமாட வேண்டும். போலியான சிரிப்பு, அழகான நடை , அலட்டலான பேச்சு , தேவையோ இல்லையோ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சராசரி பெண்ணாக வாழ்வதுதான் சுலபம். நினைத்தபடி வாழலாம், சிரிக்கலாம் ,ஃப்ரீயாக இருக்கலாம். அமைதியான, நிம்மதியான வாழ்க்கை, சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைந்ததாக இருந்தாலே போதும்..தீபிகாசராசரி வாழ்க்கை வாழ்ந்து போராடிச்சுடுச்சு. செலிபிரிட்டியா வாழனும்னு ஆசை. அப்ப தான் புடிச்ச கடைல, புடிச்ச கலர்ல, புது புடவையா கட்டலாம். நகநட்டுனு தினுசுதினசா போடலாம். மேக்கப் செலவெல்லாம் கம்பெனியே பார்த்துக்கும். அப்புறம் என்ன கிளம்புகள், நாமலும் ஒரு நாள் செலிபிரிடியா ஆகலாம்..சுதா திருநாராயணன்செலிபிரிட்டி ஆக வாழ வேண்டும். ஆனால் எளிமையாக இருக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கு நம் செல்வாக்காலும், சரீரத்தாலும் உதவும் எண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை அன்புடன் அக்கா, அண்ணா, அம்மா, அப்பா என்று அழைக்கும் வண்ணம் இருக்கவேண்டும். இதுதான் இந்த சாதாரண பெண்ணின் செலிபிரிட்டி ஆசை..ஶ்ரீ வித்யாஅன்பும் அமைதியும் நிறைந்த எளிய வாழ்க்கையே மகிழ்ச்சியின் ஊற்று. மிகக்குறைந்த உடையில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி கோடிகள் குவிக்கும் நடிகையர், பெண்மையை இழிவு செய்யும் ஆபாசப்பாடலை எட்டுக்கட்டையில் கூச்சமில்லாமல் பாடிப் பொருளீட்டும் பாடகிகள், இதே குற்றத்தைச் செய்யும் ஆண்கள், இறை தந்த திறமையைக் கொண்டு செலிபிரிட்டிகள் ஆனவர்கள், அந்த நன்றி இன்றி ஆன்மிகத்தைப் பழிப்பதைப் பார்க்கும் போது செலிபிரிட்டிகள் மீதான மயக்கம் கலைந்து விடுகிறது..தி.வள்ளிசாதாரண பெண்களுக்கு இருக்கும் நிம்மதியும் அமைதியும் செலிபிரிட்டிகளுக்கு கண்டிப்பாக கிடைக்காது. மறைந்த ஜெயலலிதா அவர்களே ஒரு உதாரணம். சகலவித திறமைகளும் இருந்தும் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து மறைந்தார்..புகழ் இருந்தும், பணம் இருந்தும், நல்ல உறவுகளும், நட்புகளும் தாங்கிப்பிடிக்கும் குடும்பமும் இல்லாதது எவ்வளவு பெரிய மனவேதனை? எனவே சாதாரண பெண்ணாக நிம்மதியான வாழ்க்கையே போதுமானது..ஜானகி பரந்தாமன்நான் எப்போதோ செலிபிரிட்டி ஆகிவிட்டேனே! மங்கையர் மலரின் நாற்பது வருட வாசகியே ஒரு செலிபிரிட்டி தானே? இதில் எந்தவித ஐயமுமில்லை . பல வருடங்களுக்கு முன்பு ஒரு வாசகி கேட்டாள் – "அது யாருங்க, பி. ஜானகி, பாளையங்கோட்டை ?அவங்க பெயரை அடிக்கடி மங்கையர் மலரில் பார்க்கிறேன் . மங்கையர் மலர் அவருக்கு 'துணுக்கு ராணி' பட்டம் கொடுத்திருக்கிறது என்றார். " அது 'நான் தான்' என்று சொல்லும் பொழுது , நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை..அவர் அடைந்த பிரமிப்பு எனக்கு விருது கிடைத்தது போல் இருந்தது .இப்படி பட்ட செலிபிரிட்டியைத்தான் நான் விரும்புகிறேன் . குடும்பத்துக்காக புகழை இழக்கலாம், ஆனால்,புகழுக்காக குடும்பத்தை இழக்கக்கூடாது..ஜெயகாந்தி மகாதேவன்கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவையனைத்தையும் கொடுத்துத்தான் ஒரு செலிபிரிட்டி உருவாக முடியும்.அப்படி உருவாகும்போது, பல தடைகளும் எதிர்ப்புகளும் வரும். அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தான் தேர்ந்தெடுத்த துறையில் தன்னலம் பாராது உழைத்து செலிபிரிட்டி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்..வெறும் 'லைம் லைட்' செலிபிரிட்டியாக இல்லாமல் வாழ்நாள் சேவையாளர்களாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசா, இந்திரா காந்தி அம்மையார், கேன்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் வி. சாந்தா அம்மையார் போன்ற செலிபிரிட்டியாக வாழ ஆசை..என். ஜெகாதாம்பாசராசரி பெண்ணாக இருக்கத்தான் எனக்கு பிடிக்கும். அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டத்திற்கு சுலபமாக வந்து விடலாம். ஆனால் மேல் மட்டத்திலேயே இருந்து பழகிவிட்டால், சராசரி நிலைமைக்கு வரவும் முடியாது, மனமும் இடம் தராது..செலிபிரிட்டி வாழ்வில் சிக்கல்கள் அதிகம். சராசரி வாழ்வில் நிம்மதி அதிகம். சராசரி பெண்ணாக இருந்தால், நாமே ராஜா, நாமே மந்திரி. எனவே சராசரி பெண்ணாக இருக்கத்தான் எனக்கு பிடிக்கும்..உமா முரளிஆசை! ஆசை! செலிபிரிட்டியாக வாழ ஆசை! சிரித்த முகமாய், சிறந்த செலிபிரிட்டியாக வலம் வந்தால் சிறப்புதானே? சிந்திக்க வைக்கும் நல்லுள்ளம் கொண்ட பெண்மணியாய், எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும்..சொகுசு வாழ்க்கைக்காக அல்ல! சொல்லிக்கொள்ளும் வாழ்க்கைக்காக. அகிலம் போற்றும் அப்துல்கலாம் ஐயா போல் எளிமையான செலிபிரிட்டியாக வாழ ஆசை. அத்தனைக்கும் ஆசைப்படு, தவறில்லை! சொந்தம் கொண்டாடுவது தான் தவறு!
முகநூல் வாசகியர்களின் தேர்ந்தெடுத்த சில பதிவுகள்….ஜெயா சம்பத்செலிபிரிட்டினா நம் சுயத்தை இழந்து விடுவோம். நாம் விரும்பியபடி நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்குப் போக முடியாது. எப்போதும் கேமரா கண்கள் நம்மை கவனித்துக் கொண்டே இருக்கும். என்னைப் பொறுத்தவரை, சாதாரண பெண்மணியாகவே இருந்து, நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்து, அதன் மூலம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடிக்கவே ஆசைப் படுகிறேன்..ஹேமலதா ஶ்ரீனிவாசன்சராசரி பெண்மணியாக வாழ்ந்து நாம் யாரென்றே இவ்வுலகத்துக்கு உணர்த்தாமல் மடிவதில் என்ன பெருமை உள்ளது?.செலிபிரிட்டியாக இருந்தாலும் சிம்பிளாக, யாரும் எளிதில் அணுகக்கூடியவராக, நம் பிராபல்யத்தின் மூலம் சமூகத்துக்கு நல்லது செய்பவராக வாழ்ந்து மடிய வேண்டும். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும். சுயத்தை இழக்காமல் செலிபிரிட்டியாக வாழ்வது நம் கையிலேதான் உள்ளது..சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்சாதாரண பெண்மணியாக இருந்து வாழ்க்கையில் ஏதாவது அமைதியாக சாதித்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் நம்முடைய இலட்சியத்தை அடைய முடியும். செலிபிாிட்டியாக இருந்தால் எளிதாக எந்த முடிவையும் எடுக்க முடியாது..மீனலதாஆரம்பத்தில் அநேக பெண்களும் சராசரிப் பெண்கள்தான். அவரவர்களது முயற்சி மற்றும் திறமை தான் செலிபிரிட்டியாக உதவுகிறது. மிகப் பெரிய செலிபிரட்டியாக வாழ்பவர்கள், அந்நிலையை தக்கவைக்க பாடுபடவேண்டும். சராசரி செலிபிரட்டி பெண்மணியாக வாழ சின்ன ஆசை.ராதிகா ரவீந்திரன்செலிபிரிட்டிகளுக்குத் தான் இப்போது மவுசு அதிகம். இன்றைய தலைமுறையினர்கள் அவர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். செலிபிரிட்டிகள் மக்களுக்கு சொல்லும் செய்திகள் எளிதில் அதிக மக்களை சென்றடைகிறது.செலிபிரிட்டியானாலும் கொள்கைகளோடு வாழ்ந்து சமுதாயத்திற்கு என்னால் முடிந்த நல்லதை செய்ய விரும்புகிறேன். நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி வளமான பாரதத்திற்கு வழிகாட்டும் செலிபிரிட்டியாக ஆசை..அன்பு பாலாசராசரி பெண்ணாகவே வாழ ஆசைப்படுகிறேன். கணவருக்கு நல்ல மனைவியாக, குழந்தைகளை பொறுப்பாக வளர்க்கும் தாயாக, வயதான பெற்றோரை கவனிக்கும் தாதியாகவே இருக்க ஆசை.பணம், புகழ் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லாதவர்கள் செலிபிரட்டிகள். நிறைய செலிபிரட்டிகளின் மரணம் புரியாத புதிராகவே இருக்கும் நிலை உள்ளது. எனவே நான் நானாக இருக்கவே ஆசை.மகாலக்ஷ்மி சுப்பிரமணியன்செலிபிரிட்டியாக இருக்க ஆசைப்பட்டாலும், நினைத்தபோது விரும்பியதை செய்ய முடியாமல் மீடியாக்கள் முன் பொய்யாக நடிக்க வேண்டும். சாதாரண பெண்ணாக நம் சின்ன சாதனைகள் மூலம் பேசப்பட்டாலே மகிழ்ச்சிதான். செலிபிரிட்டியாக இருப்பது எளிதல்ல. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியைக் கொடுத்து புகழ் வருகிறது எனில் அது தேவையில்லை..உஷா பாஸ்கர்செலிபிரிட்டிகளுக்கு மவுசு அதிகம் தான். ஆனால், அவர்கள் நடை , உடை, பேச்சு அனைத்தும் போலியானவை. அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் செயல்படுவர். கொஞ்ச நாட்களில் அவர்கள் சொல்லும், செயலும் மறந்து விடும். ஆகையால் என்றும் நாம் நாமாக, சராசரி பெண்ணாக இருப்பது நமக்கும், நம் குடும்பத்துக்கும் நல்லது. நிரந்திரமானது..கவிதா ஹரிஹரன்பிறக்கும் பொழுதே செலிபிரிட்டியா பிறக்கிறது வெகு சிலரே. சாதாரணமான பெண்ணாக பிறந்து, சாதித்து செலிபிரிட்டியா மாற வேண்டும் என்று விரும்புகிறேன்..மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செலிபிரிட்டியாக இருந்தாலும், அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், பிரச்சனைகளை சமாளித்து, எனக்கு நான் சாதாரணமாக இருப்பேன் என்று நம்பிக்கை உள்ளது. செலிபிரட்டி என்றால் சாதித்த சாதாரணமானவர்கள் தானே?.ராதா நரசிம்மன்செலிபிரிட்டியாக இருக்கவே ஆசை. குடும்ப குத்து விளக்காய் இருந்து மறைந்தால் ஒரு குடும்பத்திற்கு தான் பெருமை. அதே செலிபிரிட்டி சுதா மூர்த்தி போன்று இருந்தால் நாட்டுக்கே பெருமை. நாம் பிறந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யலாம். வெற்றி அடைந்து வீரு நடை போட செலிபிரிட்டியானால் தான் முடியும்! அதுதான் எனக்கு பிடிக்கும்..கிருஷ்ணவேணிபோலியான வாழ்க்கை வாழ எனக்கு பிடிக்காது. செலிபிரிட்டி ஆக இருந்தால் ரொம்ப செயற்கையாக நடமாட வேண்டும். போலியான சிரிப்பு, அழகான நடை , அலட்டலான பேச்சு , தேவையோ இல்லையோ சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். சராசரி பெண்ணாக வாழ்வதுதான் சுலபம். நினைத்தபடி வாழலாம், சிரிக்கலாம் ,ஃப்ரீயாக இருக்கலாம். அமைதியான, நிம்மதியான வாழ்க்கை, சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைந்ததாக இருந்தாலே போதும்..தீபிகாசராசரி வாழ்க்கை வாழ்ந்து போராடிச்சுடுச்சு. செலிபிரிட்டியா வாழனும்னு ஆசை. அப்ப தான் புடிச்ச கடைல, புடிச்ச கலர்ல, புது புடவையா கட்டலாம். நகநட்டுனு தினுசுதினசா போடலாம். மேக்கப் செலவெல்லாம் கம்பெனியே பார்த்துக்கும். அப்புறம் என்ன கிளம்புகள், நாமலும் ஒரு நாள் செலிபிரிடியா ஆகலாம்..சுதா திருநாராயணன்செலிபிரிட்டி ஆக வாழ வேண்டும். ஆனால் எளிமையாக இருக்க வேண்டும். உதவி தேவைப்படுபவர்களுக்கு நம் செல்வாக்காலும், சரீரத்தாலும் உதவும் எண்ணம் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை அன்புடன் அக்கா, அண்ணா, அம்மா, அப்பா என்று அழைக்கும் வண்ணம் இருக்கவேண்டும். இதுதான் இந்த சாதாரண பெண்ணின் செலிபிரிட்டி ஆசை..ஶ்ரீ வித்யாஅன்பும் அமைதியும் நிறைந்த எளிய வாழ்க்கையே மகிழ்ச்சியின் ஊற்று. மிகக்குறைந்த உடையில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி கோடிகள் குவிக்கும் நடிகையர், பெண்மையை இழிவு செய்யும் ஆபாசப்பாடலை எட்டுக்கட்டையில் கூச்சமில்லாமல் பாடிப் பொருளீட்டும் பாடகிகள், இதே குற்றத்தைச் செய்யும் ஆண்கள், இறை தந்த திறமையைக் கொண்டு செலிபிரிட்டிகள் ஆனவர்கள், அந்த நன்றி இன்றி ஆன்மிகத்தைப் பழிப்பதைப் பார்க்கும் போது செலிபிரிட்டிகள் மீதான மயக்கம் கலைந்து விடுகிறது..தி.வள்ளிசாதாரண பெண்களுக்கு இருக்கும் நிம்மதியும் அமைதியும் செலிபிரிட்டிகளுக்கு கண்டிப்பாக கிடைக்காது. மறைந்த ஜெயலலிதா அவர்களே ஒரு உதாரணம். சகலவித திறமைகளும் இருந்தும் ஒரு நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து மறைந்தார்..புகழ் இருந்தும், பணம் இருந்தும், நல்ல உறவுகளும், நட்புகளும் தாங்கிப்பிடிக்கும் குடும்பமும் இல்லாதது எவ்வளவு பெரிய மனவேதனை? எனவே சாதாரண பெண்ணாக நிம்மதியான வாழ்க்கையே போதுமானது..ஜானகி பரந்தாமன்நான் எப்போதோ செலிபிரிட்டி ஆகிவிட்டேனே! மங்கையர் மலரின் நாற்பது வருட வாசகியே ஒரு செலிபிரிட்டி தானே? இதில் எந்தவித ஐயமுமில்லை . பல வருடங்களுக்கு முன்பு ஒரு வாசகி கேட்டாள் – "அது யாருங்க, பி. ஜானகி, பாளையங்கோட்டை ?அவங்க பெயரை அடிக்கடி மங்கையர் மலரில் பார்க்கிறேன் . மங்கையர் மலர் அவருக்கு 'துணுக்கு ராணி' பட்டம் கொடுத்திருக்கிறது என்றார். " அது 'நான் தான்' என்று சொல்லும் பொழுது , நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை..அவர் அடைந்த பிரமிப்பு எனக்கு விருது கிடைத்தது போல் இருந்தது .இப்படி பட்ட செலிபிரிட்டியைத்தான் நான் விரும்புகிறேன் . குடும்பத்துக்காக புகழை இழக்கலாம், ஆனால்,புகழுக்காக குடும்பத்தை இழக்கக்கூடாது..ஜெயகாந்தி மகாதேவன்கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவையனைத்தையும் கொடுத்துத்தான் ஒரு செலிபிரிட்டி உருவாக முடியும்.அப்படி உருவாகும்போது, பல தடைகளும் எதிர்ப்புகளும் வரும். அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, தான் தேர்ந்தெடுத்த துறையில் தன்னலம் பாராது உழைத்து செலிபிரிட்டி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்..வெறும் 'லைம் லைட்' செலிபிரிட்டியாக இல்லாமல் வாழ்நாள் சேவையாளர்களாக வாழ்ந்து மறைந்த அன்னை தெரசா, இந்திரா காந்தி அம்மையார், கேன்சர் இன்ஸ்டிடியூட் டாக்டர் வி. சாந்தா அம்மையார் போன்ற செலிபிரிட்டியாக வாழ ஆசை..என். ஜெகாதாம்பாசராசரி பெண்ணாக இருக்கத்தான் எனக்கு பிடிக்கும். அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டத்திற்கு சுலபமாக வந்து விடலாம். ஆனால் மேல் மட்டத்திலேயே இருந்து பழகிவிட்டால், சராசரி நிலைமைக்கு வரவும் முடியாது, மனமும் இடம் தராது..செலிபிரிட்டி வாழ்வில் சிக்கல்கள் அதிகம். சராசரி வாழ்வில் நிம்மதி அதிகம். சராசரி பெண்ணாக இருந்தால், நாமே ராஜா, நாமே மந்திரி. எனவே சராசரி பெண்ணாக இருக்கத்தான் எனக்கு பிடிக்கும்..உமா முரளிஆசை! ஆசை! செலிபிரிட்டியாக வாழ ஆசை! சிரித்த முகமாய், சிறந்த செலிபிரிட்டியாக வலம் வந்தால் சிறப்புதானே? சிந்திக்க வைக்கும் நல்லுள்ளம் கொண்ட பெண்மணியாய், எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும்..சொகுசு வாழ்க்கைக்காக அல்ல! சொல்லிக்கொள்ளும் வாழ்க்கைக்காக. அகிலம் போற்றும் அப்துல்கலாம் ஐயா போல் எளிமையான செலிபிரிட்டியாக வாழ ஆசை. அத்தனைக்கும் ஆசைப்படு, தவறில்லை! சொந்தம் கொண்டாடுவது தான் தவறு!