– ஆர். மீனாலதா, மும்பை.ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் கரஞ்சி.தேவையானவை:கோதுமை மாவு (சலித்தது) – 2 கப், ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் – ½ கப் (ஒன்றிரண்டாக பொடித்தது), ஃப்ரெஷ் தேங்காப்பூ – 1 கப், கசகசா (வறுத்தது) – டேபிள் ஸ்பூன், வெள்ளை எள் பொடி – 1 டேபிள் ஸ்பூன், நெய் – ½ கப், வெல்லம் (பொடி செய்தது) – 11/2 கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், பால் + தண்ணீர் – 1¼ கப் (1+ ¼), ரீஃபைன்டு ஆயில் – ½ லிட்டர்..செய்முறை:முதலில் வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், தேங்காய்ப் பூவைப் போட்டு பொன்னிறக் கலர் வரும்வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்..இத்துடன் பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ், வெல்லம், கசகசா, எள்பொடி, ஏலப்பொடி ஆகியவைகளை போட்டு மிக்ஸ் செய்யவும்..வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு நடுவே குழித்து அதில் சூடாக்கிய நெய் விட்டு கலந்து பிறகு பாலை விட்டு நன்கு பிசைந்து சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்..பின்னர் இம்மாவை எடுத்து மறுமுறை பிசைந்து ஒரே அளவு உருண்டைகளாக (பெரிய எலுமிச்சை அளவு)செய்து கொள்ளவும்..இதை சப்பாத்தி மாதிரி சிறு வட்டமாக இட்டு, உள்ளே தேங்காப்பூ மிக்ஸை வைத்து அரைச் சந்திரப் பிறை வடிவில் மடித்து ஓரங்களை அழகாக மடித்து விடவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மடித்து வைத்திருப்பதை மெதுவாகப் போட்டு, திருப்பிவிட்டு, பொன்னிறம் வந்ததும் எடுத்துத் தட்டில் போட்டு ஆற விடவும்..பிறகு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். பண்டிகைகள் சமயம் க்ரஞ்சி செய்வது மராட்டியர்களின் வழக்கம்.. சாபூதானா ஸ்பெஷல் கிச்சடி!. தேவையானவை:சாபூதானா (சுத்தம் செய்த ஜவ்வரிசி) – 2 கப், உருளைக் கிழங்கு – 2 மீடியம் சைஸ், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை – 1 கப், கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 + இஞ்சி – 1 சிறுதுண்டு (பொடியாக அரிந்து கொள்ளவும்.), ரீஃபைன்டு ஆயில் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையானது, எலுமிச்சம் பழம் – ½ மூடி, தேங்காயப் பூ (ஃப்ரெஷ்) – ½ கப்,கொத்தமல்லி இலை – 1 கப்..செய்முறை:முதலில் சாபூதானாவை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் போட்டு,மூழ்குமளவு தண்ணீர் விட்டு சுமார் 5 – 6 மணி நேரங்கள்ஊற விடவும்..உருளைக் கிழங்குகளை வெந்தெடுத்து, தோல் நீக்கி சிறு – சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். வறுத்த கடலையை மிக்ஸியிலிட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்..ஊறிய சாபூதானாவிலிருந்து மீதி நீரை வடித்தெடுக்கவும். குண்டு குண்டாக இருக்கும் சாபூதானாவுடன் பொடித்த நிலக்கடலை, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு தாளித்தும், கட் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பொடியாக அரிந்து வைத்திருக்கும் இஞ்சி – பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்..இத்துடன் ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 7 – 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்..அடுப்பிலிருந்து இறக்கிய பின்பு, இதன் மீது பரவலாக அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, ஃப்ரெஷ் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி இலைகளைத் தூவி சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும். மிகவும்ஹெல்த்தியான ஐட்டம் இது. இதை மராட்டியர்கள் விரத நாட்களில் செய்து உண்ணுவர்.. தாலி பீட்! (Thaali Peeth).தேவையானவை:கோதுமை மாவு – 1 கப், சோள மாவு – 1 கப், கேப்பை மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப் (சலித்தது), மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன், ஓமம் – 1 சிட்டிகை, எண்ணெய் – 1 கப்,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் அரைத்த விழுது, உப்பு + தண்ணீர் – தேவையானது, வறுத்த எள் – 1 டீஸ்பூன், ஃப்ரெஷ் கொத்துமல்லி இலை – 1 கப், வெண்ணெய் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1½ கப்..செய்முறை:ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 வகையான மாக்களைப் (கோதுமை, சோளம், கேப்பை, கடலை மா, அரிசி மா) போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவம்..பின்னர் இதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஓமம், வறுத்த எள், பூண்டு – இஞ்சி பேஸ்ட், உப்பு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலைகளையும் இத்துடன் போட்டு சிறிது – சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும். மிகவும் கெட்டியாக இல்லாமல் தளர இருக்க வேண்டும்..பிறகு இதை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக போட்டுக் கொள்ளவும்..ப்ளாஸ்டிக் ஷீட் அல்லது பட்டர் பேப்பரை விரித்து இந்த உருண்டையை வைத்து கை விரல்களால் தட்டிப் பெரிசாக்கவும். சிறிது கனமாக இருக்கலாம்.தட்டிய மாவுக் கலவையில் கை விரலரல் நடுவிரல் ஒரு துளை, நான்கு புறமும் நன்கு துளைகள் (வடைக்குப் பொடுவது பொல) பொடவும்..அடுப்பின் மீது தொசைக்கல் அல்லது நான்ஸ்டிக் கல்லை வைத்து சூடானதும், தட்டி வைத்திருப்பதை மெதுவாக அதில் பொட்டு துளைகளில் எண்ணெய் விட்டு, ஒரு தட்டு கொண்டு லேசாக மூடி வைத்து, அடுப்பை ஸிம்மில் வைக்கவும். 2 -3 நிமிடங்கள் சென்ற பின், மூடியை எடுத்துவிட்டு, வெந்த பக்கத்தைத் திருப்பிப் போட்டு மீண்டும் மூடவும்..மேலும் 2 -3 நிமிடங்கள் சென்ற பின்பு, எடுத்து தட்டில் போட்டு, நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் வைத்துச் சாப்பிட, ருசியாக இருக்கும். தயிர் அல்லது ஊறுகாயும் இந்த தாலி பீட்டிற்குப் பொருந்தும். மிகவும் சத்தானது தாலி பீட்..ஷங்கர் பாலி! (Shankar Pali).தேவையானவை:சீனி (பொடி செய்தது) – 1 கப், கோதுமை மாவு (சலித்தது) – 1 கப், பொொடி ரவை – 1 கப், மிதமான சூடுள்ள பால் – 1 கப், உருக்கிய நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், பொடி உப்பு – சிறிது, எண்ணெய் – ½ லிட்டர்..செய்முறை:அகலமான பாத்திரமொன்றில் கோதுமை மாவு, பொடி ரவை, உப்பு, உருக்கிய நெய், சீனி, ஏலப் பொடி ஆகியவைகளைப் போட்டு மிக்ஸ் செய்யவும். பின்னர் மிதமான சூடுள்ள பாலை விட்டு நன்றாகப் பிசையவும்..பிசைந்த மாவை மெல்லிய துணி கொண்டு சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்..மாவை சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி சப்பாத்தி மாதிரி இட்டு, டயமண்ட் வடிவில் கட் செய்யவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்து வைத்திருப்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து, சாப்பிட, டேஸ்ட்டியாக இருக்கும் இந்த சங்கர் பாலி..Yummy கோகனெட் ரவா லாடு.தேவையானவை:நல்ல பொடி ரவை – 1 ½ கப், நெய் – 1 கப், ஃப்ரெஷ் தேங்காப்பூ – 1 கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், சீனி – 1 கப்..செய்முறை:முதலில் அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து கொஞ்சம் நெய்யை விட்டு சூடானதும் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீனியைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு ஃப்ரெஷ் தேங்காய்ப்பூவைப் போட்டு லேசாக வதக்கவும்..அகலமான பாத்திரத்தில் வறுத்த ரவை; பொடி செய்த சீனி, தேங்காய்ப்பூ, ஏலப்பொடி போட்டு நன்றாக மிக்ஸ் செய்து ஒரு தட்டிப் போட்டு மூடி அரை மணி நேரம் வைக்கவும்..பின்னர் கலவையை, நெய்யை சூடாக்கி அதில் விட்டுப் பிசிறி உருண்டைகளாகப் பிடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். சாப்பிட மிகவும் Yummyயாக இருக்கும் இந்த கோகனெட் ரவா லாடு. ஈஸியாக செய்யக்கூடிய ஸ்வீட் ஐட்டம்..தேங்காய்ப்பால் மிக்ஸ்ட் ஸாபூதானா ஸ்பெஷல்!.தேவை:ஸாபூதானா (ஜவ்வரிசி) – 1 தம்ளர் (சுத்தம் செய்தது), அரிசி மாவு – அரை தம்ளர், தேங்காய் – 1, மிளகு – சீரகப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், தயிர் (புளிக்காதது) – அரை கப், நெய் + ரீஃபைன்டு ஆயில் – 250 கிராம் (150 + 100) கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, உப்பு – தேவையானது..செய்முறை:முதலில் தேங்காயை உடைத்து, துருவி எடுத்த பூவை மிக்ஸியிலிட்டு அரைத்து தேங்காய்ப்பாலை ஃப்ரெஷ்ஷாக எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்..வாணலியி்ல் சிறிது நெய்விட்டு, ஜவ்வரிசியை அதில் போட்டு லேசாக வறுத்தெடுத்து, தேங்காய்ப்பாலில் ஊற விடவும். ஊறிய பின், நைஸாக அரைத்தெடுக்கவும்..அரைத்தெடுத்த ஜவ்வரிசி மாவில், அரிசி மாவு, மிளகு – சீரகப் பொடி, துருவிய இஞ்சி, தேவையான உப்பு, தயிர், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும்..கனமான வாணலி அல்லது அப்பக் காரையை அடுப்பின் மீது வைத்து, நெய் – எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு கரண்டியால் சாபூதானா மிக்ஸ் கலவையை எடுத்து மெதுவாக விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்..மாறுபட்ட சுவையான, சத்தான ப்ரேக் பாஸ்ட். இதற்கு சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்..(மராட்டிய சிநேகிதிகள் திருமதி சாவந்த் மற்றும் ஜெயினி கூறிய ரெசிபிகள்)
– ஆர். மீனாலதா, மும்பை.ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் கரஞ்சி.தேவையானவை:கோதுமை மாவு (சலித்தது) – 2 கப், ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் – ½ கப் (ஒன்றிரண்டாக பொடித்தது), ஃப்ரெஷ் தேங்காப்பூ – 1 கப், கசகசா (வறுத்தது) – டேபிள் ஸ்பூன், வெள்ளை எள் பொடி – 1 டேபிள் ஸ்பூன், நெய் – ½ கப், வெல்லம் (பொடி செய்தது) – 11/2 கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், பால் + தண்ணீர் – 1¼ கப் (1+ ¼), ரீஃபைன்டு ஆயில் – ½ லிட்டர்..செய்முறை:முதலில் வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்ததும், தேங்காய்ப் பூவைப் போட்டு பொன்னிறக் கலர் வரும்வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்..இத்துடன் பொடி செய்த ட்ரை ஃப்ரூட்ஸ், வெல்லம், கசகசா, எள்பொடி, ஏலப்பொடி ஆகியவைகளை போட்டு மிக்ஸ் செய்யவும்..வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவைப் போட்டு நடுவே குழித்து அதில் சூடாக்கிய நெய் விட்டு கலந்து பிறகு பாலை விட்டு நன்கு பிசைந்து சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்..பின்னர் இம்மாவை எடுத்து மறுமுறை பிசைந்து ஒரே அளவு உருண்டைகளாக (பெரிய எலுமிச்சை அளவு)செய்து கொள்ளவும்..இதை சப்பாத்தி மாதிரி சிறு வட்டமாக இட்டு, உள்ளே தேங்காப்பூ மிக்ஸை வைத்து அரைச் சந்திரப் பிறை வடிவில் மடித்து ஓரங்களை அழகாக மடித்து விடவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மடித்து வைத்திருப்பதை மெதுவாகப் போட்டு, திருப்பிவிட்டு, பொன்னிறம் வந்ததும் எடுத்துத் தட்டில் போட்டு ஆற விடவும்..பிறகு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். பண்டிகைகள் சமயம் க்ரஞ்சி செய்வது மராட்டியர்களின் வழக்கம்.. சாபூதானா ஸ்பெஷல் கிச்சடி!. தேவையானவை:சாபூதானா (சுத்தம் செய்த ஜவ்வரிசி) – 2 கப், உருளைக் கிழங்கு – 2 மீடியம் சைஸ், வறுத்து தோல் நீக்கிய நிலக்கடலை – 1 கப், கடுகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 4 + இஞ்சி – 1 சிறுதுண்டு (பொடியாக அரிந்து கொள்ளவும்.), ரீஃபைன்டு ஆயில் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையானது, எலுமிச்சம் பழம் – ½ மூடி, தேங்காயப் பூ (ஃப்ரெஷ்) – ½ கப்,கொத்தமல்லி இலை – 1 கப்..செய்முறை:முதலில் சாபூதானாவை வாயகன்ற ஒரு பாத்திரத்தில் போட்டு,மூழ்குமளவு தண்ணீர் விட்டு சுமார் 5 – 6 மணி நேரங்கள்ஊற விடவும்..உருளைக் கிழங்குகளை வெந்தெடுத்து, தோல் நீக்கி சிறு – சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். வறுத்த கடலையை மிக்ஸியிலிட்டு ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்..ஊறிய சாபூதானாவிலிருந்து மீதி நீரை வடித்தெடுக்கவும். குண்டு குண்டாக இருக்கும் சாபூதானாவுடன் பொடித்த நிலக்கடலை, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு தாளித்தும், கட் செய்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, பொடியாக அரிந்து வைத்திருக்கும் இஞ்சி – பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்..இத்துடன் ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் 7 – 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்..அடுப்பிலிருந்து இறக்கிய பின்பு, இதன் மீது பரவலாக அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, ஃப்ரெஷ் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி இலைகளைத் தூவி சாப்பிட்டால் செம டேஸ்ட்டாக இருக்கும். மிகவும்ஹெல்த்தியான ஐட்டம் இது. இதை மராட்டியர்கள் விரத நாட்களில் செய்து உண்ணுவர்.. தாலி பீட்! (Thaali Peeth).தேவையானவை:கோதுமை மாவு – 1 கப், சோள மாவு – 1 கப், கேப்பை மாவு – 1 கப், கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப் (சலித்தது), மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன், ஓமம் – 1 சிட்டிகை, எண்ணெய் – 1 கப்,பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் – 1 டேபிள் ஸ்பூன் அரைத்த விழுது, உப்பு + தண்ணீர் – தேவையானது, வறுத்த எள் – 1 டீஸ்பூன், ஃப்ரெஷ் கொத்துமல்லி இலை – 1 கப், வெண்ணெய் – 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1½ கப்..செய்முறை:ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 வகையான மாக்களைப் (கோதுமை, சோளம், கேப்பை, கடலை மா, அரிசி மா) போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவம்..பின்னர் இதில் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, ஓமம், வறுத்த எள், பூண்டு – இஞ்சி பேஸ்ட், உப்பு கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி இலைகளையும் இத்துடன் போட்டு சிறிது – சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாகப் பிசையவும். மிகவும் கெட்டியாக இல்லாமல் தளர இருக்க வேண்டும்..பிறகு இதை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக போட்டுக் கொள்ளவும்..ப்ளாஸ்டிக் ஷீட் அல்லது பட்டர் பேப்பரை விரித்து இந்த உருண்டையை வைத்து கை விரல்களால் தட்டிப் பெரிசாக்கவும். சிறிது கனமாக இருக்கலாம்.தட்டிய மாவுக் கலவையில் கை விரலரல் நடுவிரல் ஒரு துளை, நான்கு புறமும் நன்கு துளைகள் (வடைக்குப் பொடுவது பொல) பொடவும்..அடுப்பின் மீது தொசைக்கல் அல்லது நான்ஸ்டிக் கல்லை வைத்து சூடானதும், தட்டி வைத்திருப்பதை மெதுவாக அதில் பொட்டு துளைகளில் எண்ணெய் விட்டு, ஒரு தட்டு கொண்டு லேசாக மூடி வைத்து, அடுப்பை ஸிம்மில் வைக்கவும். 2 -3 நிமிடங்கள் சென்ற பின், மூடியை எடுத்துவிட்டு, வெந்த பக்கத்தைத் திருப்பிப் போட்டு மீண்டும் மூடவும்..மேலும் 2 -3 நிமிடங்கள் சென்ற பின்பு, எடுத்து தட்டில் போட்டு, நடுவில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் வைத்துச் சாப்பிட, ருசியாக இருக்கும். தயிர் அல்லது ஊறுகாயும் இந்த தாலி பீட்டிற்குப் பொருந்தும். மிகவும் சத்தானது தாலி பீட்..ஷங்கர் பாலி! (Shankar Pali).தேவையானவை:சீனி (பொடி செய்தது) – 1 கப், கோதுமை மாவு (சலித்தது) – 1 கப், பொொடி ரவை – 1 கப், மிதமான சூடுள்ள பால் – 1 கப், உருக்கிய நெய் – 3 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், பொடி உப்பு – சிறிது, எண்ணெய் – ½ லிட்டர்..செய்முறை:அகலமான பாத்திரமொன்றில் கோதுமை மாவு, பொடி ரவை, உப்பு, உருக்கிய நெய், சீனி, ஏலப் பொடி ஆகியவைகளைப் போட்டு மிக்ஸ் செய்யவும். பின்னர் மிதமான சூடுள்ள பாலை விட்டு நன்றாகப் பிசையவும்..பிசைந்த மாவை மெல்லிய துணி கொண்டு சுமார் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்..மாவை சிறு சிறு உருண்டைகளாக ஆக்கி சப்பாத்தி மாதிரி இட்டு, டயமண்ட் வடிவில் கட் செய்யவும்..அடிக்கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்து வைத்திருப்பதை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொன்னிறமாக வறுத்தெடுத்து, சாப்பிட, டேஸ்ட்டியாக இருக்கும் இந்த சங்கர் பாலி..Yummy கோகனெட் ரவா லாடு.தேவையானவை:நல்ல பொடி ரவை – 1 ½ கப், நெய் – 1 கப், ஃப்ரெஷ் தேங்காப்பூ – 1 கப், ஏலப்பொடி – 1 டீஸ்பூன், சீனி – 1 கப்..செய்முறை:முதலில் அடிக்கனமான வாணலியை அடுப்பின் மீது வைத்து கொஞ்சம் நெய்யை விட்டு சூடானதும் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். சீனியைப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு ஃப்ரெஷ் தேங்காய்ப்பூவைப் போட்டு லேசாக வதக்கவும்..அகலமான பாத்திரத்தில் வறுத்த ரவை; பொடி செய்த சீனி, தேங்காய்ப்பூ, ஏலப்பொடி போட்டு நன்றாக மிக்ஸ் செய்து ஒரு தட்டிப் போட்டு மூடி அரை மணி நேரம் வைக்கவும்..பின்னர் கலவையை, நெய்யை சூடாக்கி அதில் விட்டுப் பிசிறி உருண்டைகளாகப் பிடிக்கவும். காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். சாப்பிட மிகவும் Yummyயாக இருக்கும் இந்த கோகனெட் ரவா லாடு. ஈஸியாக செய்யக்கூடிய ஸ்வீட் ஐட்டம்..தேங்காய்ப்பால் மிக்ஸ்ட் ஸாபூதானா ஸ்பெஷல்!.தேவை:ஸாபூதானா (ஜவ்வரிசி) – 1 தம்ளர் (சுத்தம் செய்தது), அரிசி மாவு – அரை தம்ளர், தேங்காய் – 1, மிளகு – சீரகப் பொடி – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை, துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன், தயிர் (புளிக்காதது) – அரை கப், நெய் + ரீஃபைன்டு ஆயில் – 250 கிராம் (150 + 100) கறிவேப்பிலை – 1 ஆர்க்கு, உப்பு – தேவையானது..செய்முறை:முதலில் தேங்காயை உடைத்து, துருவி எடுத்த பூவை மிக்ஸியிலிட்டு அரைத்து தேங்காய்ப்பாலை ஃப்ரெஷ்ஷாக எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்..வாணலியி்ல் சிறிது நெய்விட்டு, ஜவ்வரிசியை அதில் போட்டு லேசாக வறுத்தெடுத்து, தேங்காய்ப்பாலில் ஊற விடவும். ஊறிய பின், நைஸாக அரைத்தெடுக்கவும்..அரைத்தெடுத்த ஜவ்வரிசி மாவில், அரிசி மாவு, மிளகு – சீரகப் பொடி, துருவிய இஞ்சி, தேவையான உப்பு, தயிர், கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி சேர்த்து மிக்ஸ் செய்யவும்..கனமான வாணலி அல்லது அப்பக் காரையை அடுப்பின் மீது வைத்து, நெய் – எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு கரண்டியால் சாபூதானா மிக்ஸ் கலவையை எடுத்து மெதுவாக விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்..மாறுபட்ட சுவையான, சத்தான ப்ரேக் பாஸ்ட். இதற்கு சட்னி தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்..(மராட்டிய சிநேகிதிகள் திருமதி சாவந்த் மற்றும் ஜெயினி கூறிய ரெசிபிகள்)