சிறுகதை : அன்னக்கிளி வேலு.ஓவியம்: தமிழ்."ஏங்க, ரெண்டுமூணு நாளா இந்த ராணி வேலைக்கு வரலை, சொல்லிட்டு போகவும் இல்லை, போனும் பண்ணலை, நீங்க ஆபிஸ் போற வழியில ஒரு எட்டு போயி என்னன்னு பாத்துட்டு வாங்களேன்," என்றாள் மீனாக்ஷி.."அடியேய்… அவங்க வீடு என்னவோ நான் போற வழியிலதான் இருக்குங்கற மாதிரி பேசறே… அவங்க வீடு மெயின் ரோடுலேர்ந்து ரெண்டு கிலோ மீட்டர் உள்ளே போகணும். ரோடு வேற குண்டும் குழியுமா இருக்கும். வண்டி போறது ரொம்ப கஷ்டம். அதுமட்டுமில்லாம, ஏதாவது அவசர வேலையா இருந்திருக்கும். வருவா, வருவா…விடு…" என்றேன்.."வீடெல்லாம் குப்பையாக் கிடக்கு. பாத்திரம் எல்லாம் சிங்க் முழுசும் ரொம்பிப் போய் நான் தேய்க்கிறேன் இப்போ. வாஷிங் மிஷின் போடாம ரெண்டு கூடை துணி சேர்ந்து போச்சு… இவளுக்கு லீவு என்ன வேண்டி கிடக்கு. சம்பளத்துல மூணு நாளைக்கு புடிச்சா விட்டுடுவாளா… போங்க.. போயி என்னன்னு பார்த்துட்டு ரெண்டு சத்தம் போட்டுட்டு வாங்க," என்று விடாமல் சொன்னாள் அவள்..இந்தராணி எனக்குத் தெரிந்து ஆறு ஏழு வீடுகளில் வேலை செய்கிறவள். எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வேலை செய்கிறாள். ஆரம்பத்தில் முன்னூறு ரூபாய் கொடுத்தமாதிரி ஞாபகம். இப்போது ஆயிரம் ரூபாய் வாங்குகிறாள். பார்க்கிறவர்களுக்கு அவள் வீட்டுவேலை செய்கிறமாதிரி தெரியாது. ஏதோ ஆபிஸ் போகிற மாதிரிதான் தெரிவாள். ஒரு மொபெட் வைத்திருக்கிறாள். ஒரு தோல்பை தொங்கப் போட்டுக்கொண்டு வருவாள், மடமடவென வேலைகளை செய்வாள், பறந்து விடுவாள். இங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போதே இரண்டு மூன்று போன் கால்கள் வந்துவிடும். "தோ, மீனாக்ஷி அக்கா வீட்டுலதான் இருக்கேன், அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்," என்று ஓடுவாள்.கல்யாணம் ஆனவள்தான். புருஷன்காரன் ரிக்க்ஷா ஒட்டிக் கொண்டிருந்தான். பாவம், போன வருடம்தான் ஒரு விபத்தில் இறந்து போனான். மாதக் கணக்கில் கேஸ் நடந்து இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் முடிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு வக்கீல்தான் அவளது கேஸை எடுத்து நடத்தினார். ஆறு லட்சம் வந்தது. வக்கீல் ஒரு லட்சம் எடுத்துக் கொண்டார்..முதலில் நான் அவளது கோர்ட் கேஸில் அதிகமாய் ஆர்வம் காட்டவில்லை."ஏங்க, இத்தனை வருஷமா நம்ம வீட்டுல வேலை செய்றா, ஒவ்வொருத்தர் வீட்டுல ரெண்டாயிரம் மூவாயிரம் வாங்கறா… நம்மகிட்ட இன்னும் ஆயிரம்தான் வாங்கிகிட்டு இருக்கா. உங்களை என்ன ஆயிரக் கணக்குல பணச்செலவா செய்யச் சொல்றேன். கோர்ட் கேஸுன்னு ஒரு பெண்பிள்ளை தனியா அலைய முடியுமா… அதுவுமில்லாம அவகிட்டயும் மொபெட் இருக்கு. நீங்க அழைச்சுக்கிட்டு போய் வரணும்னு இல்லை, நீங்க உங்க வண்டில போனா, அவ அவளோட மொபெட்டுல பின்னாடியே வந்துடப் போறா.ஏதோ 'சம்மன்' கறா, 'அஃபிடாவிட்' ங்கறா, வக்காலத்துங்கரா. எனக்கென்ன தெரியும், அதுபத்தி எல்லாம்.. போயி எங்கே, என்ன வேலையோ, பார்த்து உதவுங்க… நம்ம வீட்டு பொண்ணா இருந்தா செய்யமாட்டோமா," என்று அவள் சென்ட்டிமென்ட்டாக சொன்னது என்னை உந்தியது..நான்கைந்து தடவை கோர்ட்டுக்கும், வக்கீல் ஆபிஸ்க்கும், தாலுக்கா ஆபிஸ்க்கும், வி.ஏ.ஓ, ரெவென்யூ ஆபிசர் என்றும் பல இடங்களுக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போகவேண்டியிருந்தது. சிலசமயங்களில் தனது மொபெட்டில் வந்துவிடுவாள். சில சமயம் மொபெட் ரிப்பேர் என்பாள். என் வண்டியில் கூட்டிப் போவேன்..ஏற்கனவே நான் சொன்னது போல ஆபிஸ் போகிறவர்கள் போலத்தான் ட்ரெஸ் செய்வாள். பார்த்தால் வீடுகளில் வேலை செய்கிறவள் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. வித விதமான பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்வாள். சிலசமயம் ஆளையே சுண்டி இழுக்கும். எங்கேயிருந்துதான்தான் அப்படிப்பட்ட ஸ்ப்ரே வாங்குவாளோ என்று நான் அதிசயப் பட்டதும் உண்டு..ஒருவழியாக பணம் வந்து சேர்ந்தது அவளுக்கு. ஒரு நாள் நான் ஆபிசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். நான் வரும் வழியில் ஒரு இடத்தில் எனக்காக காத்திருந்தவளைப் போல நின்று கொண்டு என்னை கைக்காட்டி நிறுத்தினாள்.."சார்… நான் இத்தனை வருஷம் பாத்த ஆளுங்கள்லேயே ரொம்பவும் மதிக்கற மாதிரியான, நம்பகத்தன்மையான ஆளா உங்களை மட்டும்தான் பார்க்கறேன்," என்றாள்..எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்காக இவ்வளவு பீடிகை போட்டு, தூக்கி வைத்து பேசுகிறாள் என்று எனக்குள் கேள்வி.."பணம் வந்தது எப்படியோ அவரோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சு போச்சு. நான் ஒரு லட்சம்தான் வந்திச்சுனு சொல்லிட்டேன். அதுவும் இன்னும் கோர்ட்லேர்ந்து வரலைனு சொல்லிட்டேன். என் கணக்குலே இருந்தா சிக்கல். தயவு செஞ்சு இதை உங்க கணக்குல போட்டு வெச்சுக்கங்க. நான் அடிக்கடி பணம் எடுத்துக் கொடுங்கன்னு கேட்டுத் தொல்லை பண்ணமாட்டேன். இது எனக்குத் தேவையும் இல்லை. எனக்கு வீடுகள்லேர்ந்து வர்ற சம்பளமே தேவைக்கதிமகமாவே இருக்கு. எப்போ வேணுமோ அப்போ இதை வாங்கிக்கறேன்," என்றாள். மிகவும் கெஞ்சினாள்..முதலில் மறுத்துப் பார்த்தேன். அவள் விடுவதாயில்லை. "சார், உங்களை விட்டா நம்பிக்கையான ஆள் வேற யாரும் இல்லை சார், மறுக்காதீங்க ப்ளீஸ்" என்று கெஞ்சலாய், என் கைகளில் பணக்கட்டைத் திணித்தாள்..அவளது கெஞ்சலும், கொஞ்சலும் வேறு வழியின்றி கைப்பையில் பணத்தை போட்டுக்கொண்டு வீட்டிற்கு போக வைத்தது. மீனாட்ஷிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பணக்கட்டை எடுத்து மறைத்து வைத்தேன். மறுநாள் அது என்னுடைய கணக்கில் எறிக் கொண்டது. அதற்குப் பிறகு ராணி பணப் பேச்சை எடுக்கவே இல்லை..அந்த நினைவுகளோடு மெயின் ரோடிலிருந்து பிரிந்து குண்டும் குழியுமாய் இருந்த கிளை ரோட்டில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் போய் அவளது வீட்டை கண்டுபிடித்து மொபெட்டை நிறுத்திவிட்டு கதவைத் தட்டினேன். அது தானாக திறந்து கொண்டது. படுத்திருந்தாள். ஊதுபத்தி வாசனை அறை முழுவதும். சுவற்றில் ஒரு போட்டோவில் புது மாலை தொங்கியது. அவளது கணவன் என்று புரிந்தது. அதற்கு முன்னாலிருந்த ஒரு ஊதுபத்தி ஸ்டாண்டிலிருந்துதான் புகை கிளம்பிக் கொண்டிருந்தது. அடுத்தநொடி "வாங்க சார்," என்று முனகியபடி மெல்ல எழுந்தாள், இல்லை எழுந்திருக்க முயற்சித்தாள். அவளது கண்கள் சிவந்திருந்தன.."உடம்பு முடியலையா," என்றேன் கதவருகில் நின்றபடியே. "உடம்புக்கென்ன சார், மனசுதான் கெடந்து அடிச்சுக்குது…" என்றவள் "அவரோட நினைவு நாள் இன்னிக்கு. நேத்திக்கு இறந்தமாதிரி இருக்கு. ஒரு வருஷமே ஓடிப்போச்சு… காலையிலேர்ந்து அழுது, ஜூரமே வந்திடும்போல இருக்கு. மண்டை வலி வேற," என்றாள்..படுக்கையில் உட்கார்ந்திருந்தவளின் அருகில் போய் கழுத்தில் தொட்டுப் பார்த்தேன், காய்ச்சல் ஏதும் இருக்குமோ என்று. சட்டென என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்..எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "ராணி எண்ணப் பண்றே…என்னை விடு. நான் ஆபீஸ்க்கு போய்க்கிட்டிருக்கேன்," என்றேன். அவளது பிடி மேலும் இறுகியது..ஆபிஸ் வந்து உட்கார்ந்த பிறகும் நான் நானாக இல்லை. குற்ற உணர்வு உறுத்தியது. எப்படி அவளுக்கு இடம் கொடுத்தேன். எது அவளை என்னிடம் அடைக்கலம் தேடவைத்தது. பத்து வருடங்களாக வேலைக்கு வைத்திருப்பதா? அவசரம் என்று கேட்டபோதெல்லாம் சம்பளத்தில் முன்பணமாக கொஞ்சம் கொஞ்சம் கொடுத்ததா? அவள் கணவனின் சாவுக்கான பணத்தை பெற்றுத்தர கோர்ட்டுக்கும், தாலுக்கா ஆபிஸ்க்கும் இன்ன பிற இடங்களுக்கெல்லாம் கூடவே கூட்டிக்கொண்டு அலைந்ததா? அதனால் எனது அருகாமை அவளுக்கு கிடைத்ததே அதுவா? அவள் பணத்தை பாதுகாப்பாய் என் கணக்கில் போடச்சொல்லி கொடுத்தபோது பெற்றுக் கொண்டதா? தெரியவில்ல. ஆனால் தவறு நேர்ந்து விட்டது..அவள் வேலைக்கு வருவாளா மாட்டாளா என்று கேட்கப் போய் நடந்தது வேறாயிற்று… கணவனின் நினைவுகள் வந்து வாட்டியதால் வேலைக்கு வரவில்லையா? இனியாவது வருவாளா? வந்தால் எப்படி நம் வீட்டில் வேலைக்கு விடுவது? என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவள் என்ன நினைத்துக் கொள்வாள்? என்னை எந்த பார்வையோடு பார்ப்பாள்? அவளைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு என்னை ஆட்டுமே… இத்தோடு நின்றுவிடுமா… பேசாமல் பணத்தை பேங்கிலிருந்து எடுத்துப் போய் கொடுத்துவிட்டு, இனி வேலைக்கு வராதே என்று சொல்லிவிடலாமா.. திரும்பவும் அவளது வீட்டிற்கேவா… பயம் வந்தது..மண்டை வலித்தது. சரி கொஞ்சம் ஆறப் போடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன். அதற்குள் வீட்டிலிருந்து போன். 'ராணியைப் போய் பார்த்தீர்களா, கேட்டீர்களா, என்ன சொன்னாள், ஏன் எனக்கு போன் பண்ணவில்லை,' என்று எகிறப் போகிறாளோ என்று யோசித்து, தடுமாறி போனை எடுத்தேன்.."ஏன் முழு ரிங்கும் அடிச்சபிறகுதான் போனை எடுக்கணுமா?" என்றவள் நான் பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, "விஷயம் தெரியுமா? டி.வி.ல நியூஸ் பார்த்தேன். நம்ம ராணி பீச்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாளாம், அவளோட வண்டியையும் காமிச்சாங்க. அது அவ வண்டியேதான். 'என் சாவுக்கு யாரும் காரணமில்லே, என் வீட்டுக்காரரோட நினைவு வாட்டுச்சு, அதனால சாகறேன்.' அப்படின்னு ஒரு லெட்டர் எழுதி ஜாக்கெட்டுக்குள்ளே வெச்சிருந்திருக்கா…" என்று நிறுத்தினாள்..'கடவுளே, ஏதோ சபலத்தில் தெரியாம தப்பு பண்ணிட்டேன். அதுக்காக என்னை எந்த வம்புலேயும் மாட்டி விட்டுடாதே,' என்று வேண்டியபடியே வீட்டை அடைந்தேன். கொஞ்ச நேரம் ராணியின் தற்கொலைப் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு சொன்னாள்…."ஏங்க, அவதான் போயிட்டாள். போகட்டும். புதுசா ஒரு வேலைக்காரி கிடைச்சிருக்கா, வாணி னு பேரு. மூவாயிரம் கேட்கறாளாம், நம்ம ஷிவானி அக்காதான் சொன்னாங்க. அவங்க வீட்டுலேயும் அவதான் வேலை பண்றாளாம், இதுவரை எந்த கம்ப்ளைண்ட்டும் இல்லையாம்," என்றாள்..உடனே நான் இடைமறித்து, "வேண்டாம்டா சாமி! இனிமே ஒரு வேலைக்காரியும் வேணாம், இன்னிலேர்ந்து வீட்டு வேலைகள் எல்லாத்துலேயும் நானும் ஹெல்ப் பண்றேன். நாமளே பண்ணிக்கலாம். வேலைக்காரியே வேணாம்" என்றேன்.அவள் ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
சிறுகதை : அன்னக்கிளி வேலு.ஓவியம்: தமிழ்."ஏங்க, ரெண்டுமூணு நாளா இந்த ராணி வேலைக்கு வரலை, சொல்லிட்டு போகவும் இல்லை, போனும் பண்ணலை, நீங்க ஆபிஸ் போற வழியில ஒரு எட்டு போயி என்னன்னு பாத்துட்டு வாங்களேன்," என்றாள் மீனாக்ஷி.."அடியேய்… அவங்க வீடு என்னவோ நான் போற வழியிலதான் இருக்குங்கற மாதிரி பேசறே… அவங்க வீடு மெயின் ரோடுலேர்ந்து ரெண்டு கிலோ மீட்டர் உள்ளே போகணும். ரோடு வேற குண்டும் குழியுமா இருக்கும். வண்டி போறது ரொம்ப கஷ்டம். அதுமட்டுமில்லாம, ஏதாவது அவசர வேலையா இருந்திருக்கும். வருவா, வருவா…விடு…" என்றேன்.."வீடெல்லாம் குப்பையாக் கிடக்கு. பாத்திரம் எல்லாம் சிங்க் முழுசும் ரொம்பிப் போய் நான் தேய்க்கிறேன் இப்போ. வாஷிங் மிஷின் போடாம ரெண்டு கூடை துணி சேர்ந்து போச்சு… இவளுக்கு லீவு என்ன வேண்டி கிடக்கு. சம்பளத்துல மூணு நாளைக்கு புடிச்சா விட்டுடுவாளா… போங்க.. போயி என்னன்னு பார்த்துட்டு ரெண்டு சத்தம் போட்டுட்டு வாங்க," என்று விடாமல் சொன்னாள் அவள்..இந்தராணி எனக்குத் தெரிந்து ஆறு ஏழு வீடுகளில் வேலை செய்கிறவள். எங்கள் வீட்டில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக வேலை செய்கிறாள். ஆரம்பத்தில் முன்னூறு ரூபாய் கொடுத்தமாதிரி ஞாபகம். இப்போது ஆயிரம் ரூபாய் வாங்குகிறாள். பார்க்கிறவர்களுக்கு அவள் வீட்டுவேலை செய்கிறமாதிரி தெரியாது. ஏதோ ஆபிஸ் போகிற மாதிரிதான் தெரிவாள். ஒரு மொபெட் வைத்திருக்கிறாள். ஒரு தோல்பை தொங்கப் போட்டுக்கொண்டு வருவாள், மடமடவென வேலைகளை செய்வாள், பறந்து விடுவாள். இங்கே வேலை செய்து கொண்டிருக்கும்போதே இரண்டு மூன்று போன் கால்கள் வந்துவிடும். "தோ, மீனாக்ஷி அக்கா வீட்டுலதான் இருக்கேன், அஞ்சு நிமிசத்துல வந்துடுவேன்," என்று ஓடுவாள்.கல்யாணம் ஆனவள்தான். புருஷன்காரன் ரிக்க்ஷா ஒட்டிக் கொண்டிருந்தான். பாவம், போன வருடம்தான் ஒரு விபத்தில் இறந்து போனான். மாதக் கணக்கில் கேஸ் நடந்து இரண்டு மாதங்களுக்கு முன்னால்தான் முடிந்தது. எனக்குத் தெரிந்த ஒரு வக்கீல்தான் அவளது கேஸை எடுத்து நடத்தினார். ஆறு லட்சம் வந்தது. வக்கீல் ஒரு லட்சம் எடுத்துக் கொண்டார்..முதலில் நான் அவளது கோர்ட் கேஸில் அதிகமாய் ஆர்வம் காட்டவில்லை."ஏங்க, இத்தனை வருஷமா நம்ம வீட்டுல வேலை செய்றா, ஒவ்வொருத்தர் வீட்டுல ரெண்டாயிரம் மூவாயிரம் வாங்கறா… நம்மகிட்ட இன்னும் ஆயிரம்தான் வாங்கிகிட்டு இருக்கா. உங்களை என்ன ஆயிரக் கணக்குல பணச்செலவா செய்யச் சொல்றேன். கோர்ட் கேஸுன்னு ஒரு பெண்பிள்ளை தனியா அலைய முடியுமா… அதுவுமில்லாம அவகிட்டயும் மொபெட் இருக்கு. நீங்க அழைச்சுக்கிட்டு போய் வரணும்னு இல்லை, நீங்க உங்க வண்டில போனா, அவ அவளோட மொபெட்டுல பின்னாடியே வந்துடப் போறா.ஏதோ 'சம்மன்' கறா, 'அஃபிடாவிட்' ங்கறா, வக்காலத்துங்கரா. எனக்கென்ன தெரியும், அதுபத்தி எல்லாம்.. போயி எங்கே, என்ன வேலையோ, பார்த்து உதவுங்க… நம்ம வீட்டு பொண்ணா இருந்தா செய்யமாட்டோமா," என்று அவள் சென்ட்டிமென்ட்டாக சொன்னது என்னை உந்தியது..நான்கைந்து தடவை கோர்ட்டுக்கும், வக்கீல் ஆபிஸ்க்கும், தாலுக்கா ஆபிஸ்க்கும், வி.ஏ.ஓ, ரெவென்யூ ஆபிசர் என்றும் பல இடங்களுக்கு அவளைக் கூட்டிக் கொண்டு போகவேண்டியிருந்தது. சிலசமயங்களில் தனது மொபெட்டில் வந்துவிடுவாள். சில சமயம் மொபெட் ரிப்பேர் என்பாள். என் வண்டியில் கூட்டிப் போவேன்..ஏற்கனவே நான் சொன்னது போல ஆபிஸ் போகிறவர்கள் போலத்தான் ட்ரெஸ் செய்வாள். பார்த்தால் வீடுகளில் வேலை செய்கிறவள் என்று யாரும் சொல்லிவிடமுடியாது. வித விதமான பாடி ஸ்ப்ரே அடித்துக் கொள்வாள். சிலசமயம் ஆளையே சுண்டி இழுக்கும். எங்கேயிருந்துதான்தான் அப்படிப்பட்ட ஸ்ப்ரே வாங்குவாளோ என்று நான் அதிசயப் பட்டதும் உண்டு..ஒருவழியாக பணம் வந்து சேர்ந்தது அவளுக்கு. ஒரு நாள் நான் ஆபிசிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். நான் வரும் வழியில் ஒரு இடத்தில் எனக்காக காத்திருந்தவளைப் போல நின்று கொண்டு என்னை கைக்காட்டி நிறுத்தினாள்.."சார்… நான் இத்தனை வருஷம் பாத்த ஆளுங்கள்லேயே ரொம்பவும் மதிக்கற மாதிரியான, நம்பகத்தன்மையான ஆளா உங்களை மட்டும்தான் பார்க்கறேன்," என்றாள்..எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை எதற்காக இவ்வளவு பீடிகை போட்டு, தூக்கி வைத்து பேசுகிறாள் என்று எனக்குள் கேள்வி.."பணம் வந்தது எப்படியோ அவரோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சு போச்சு. நான் ஒரு லட்சம்தான் வந்திச்சுனு சொல்லிட்டேன். அதுவும் இன்னும் கோர்ட்லேர்ந்து வரலைனு சொல்லிட்டேன். என் கணக்குலே இருந்தா சிக்கல். தயவு செஞ்சு இதை உங்க கணக்குல போட்டு வெச்சுக்கங்க. நான் அடிக்கடி பணம் எடுத்துக் கொடுங்கன்னு கேட்டுத் தொல்லை பண்ணமாட்டேன். இது எனக்குத் தேவையும் இல்லை. எனக்கு வீடுகள்லேர்ந்து வர்ற சம்பளமே தேவைக்கதிமகமாவே இருக்கு. எப்போ வேணுமோ அப்போ இதை வாங்கிக்கறேன்," என்றாள். மிகவும் கெஞ்சினாள்..முதலில் மறுத்துப் பார்த்தேன். அவள் விடுவதாயில்லை. "சார், உங்களை விட்டா நம்பிக்கையான ஆள் வேற யாரும் இல்லை சார், மறுக்காதீங்க ப்ளீஸ்" என்று கெஞ்சலாய், என் கைகளில் பணக்கட்டைத் திணித்தாள்..அவளது கெஞ்சலும், கொஞ்சலும் வேறு வழியின்றி கைப்பையில் பணத்தை போட்டுக்கொண்டு வீட்டிற்கு போக வைத்தது. மீனாட்ஷிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பணக்கட்டை எடுத்து மறைத்து வைத்தேன். மறுநாள் அது என்னுடைய கணக்கில் எறிக் கொண்டது. அதற்குப் பிறகு ராணி பணப் பேச்சை எடுக்கவே இல்லை..அந்த நினைவுகளோடு மெயின் ரோடிலிருந்து பிரிந்து குண்டும் குழியுமாய் இருந்த கிளை ரோட்டில் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் போய் அவளது வீட்டை கண்டுபிடித்து மொபெட்டை நிறுத்திவிட்டு கதவைத் தட்டினேன். அது தானாக திறந்து கொண்டது. படுத்திருந்தாள். ஊதுபத்தி வாசனை அறை முழுவதும். சுவற்றில் ஒரு போட்டோவில் புது மாலை தொங்கியது. அவளது கணவன் என்று புரிந்தது. அதற்கு முன்னாலிருந்த ஒரு ஊதுபத்தி ஸ்டாண்டிலிருந்துதான் புகை கிளம்பிக் கொண்டிருந்தது. அடுத்தநொடி "வாங்க சார்," என்று முனகியபடி மெல்ல எழுந்தாள், இல்லை எழுந்திருக்க முயற்சித்தாள். அவளது கண்கள் சிவந்திருந்தன.."உடம்பு முடியலையா," என்றேன் கதவருகில் நின்றபடியே. "உடம்புக்கென்ன சார், மனசுதான் கெடந்து அடிச்சுக்குது…" என்றவள் "அவரோட நினைவு நாள் இன்னிக்கு. நேத்திக்கு இறந்தமாதிரி இருக்கு. ஒரு வருஷமே ஓடிப்போச்சு… காலையிலேர்ந்து அழுது, ஜூரமே வந்திடும்போல இருக்கு. மண்டை வலி வேற," என்றாள்..படுக்கையில் உட்கார்ந்திருந்தவளின் அருகில் போய் கழுத்தில் தொட்டுப் பார்த்தேன், காய்ச்சல் ஏதும் இருக்குமோ என்று. சட்டென என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்..எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. "ராணி எண்ணப் பண்றே…என்னை விடு. நான் ஆபீஸ்க்கு போய்க்கிட்டிருக்கேன்," என்றேன். அவளது பிடி மேலும் இறுகியது..ஆபிஸ் வந்து உட்கார்ந்த பிறகும் நான் நானாக இல்லை. குற்ற உணர்வு உறுத்தியது. எப்படி அவளுக்கு இடம் கொடுத்தேன். எது அவளை என்னிடம் அடைக்கலம் தேடவைத்தது. பத்து வருடங்களாக வேலைக்கு வைத்திருப்பதா? அவசரம் என்று கேட்டபோதெல்லாம் சம்பளத்தில் முன்பணமாக கொஞ்சம் கொஞ்சம் கொடுத்ததா? அவள் கணவனின் சாவுக்கான பணத்தை பெற்றுத்தர கோர்ட்டுக்கும், தாலுக்கா ஆபிஸ்க்கும் இன்ன பிற இடங்களுக்கெல்லாம் கூடவே கூட்டிக்கொண்டு அலைந்ததா? அதனால் எனது அருகாமை அவளுக்கு கிடைத்ததே அதுவா? அவள் பணத்தை பாதுகாப்பாய் என் கணக்கில் போடச்சொல்லி கொடுத்தபோது பெற்றுக் கொண்டதா? தெரியவில்ல. ஆனால் தவறு நேர்ந்து விட்டது..அவள் வேலைக்கு வருவாளா மாட்டாளா என்று கேட்கப் போய் நடந்தது வேறாயிற்று… கணவனின் நினைவுகள் வந்து வாட்டியதால் வேலைக்கு வரவில்லையா? இனியாவது வருவாளா? வந்தால் எப்படி நம் வீட்டில் வேலைக்கு விடுவது? என்னைப் பார்க்கும்போதெல்லாம் அவள் என்ன நினைத்துக் கொள்வாள்? என்னை எந்த பார்வையோடு பார்ப்பாள்? அவளைப் பார்க்கும்போதெல்லாம் குற்ற உணர்வு என்னை ஆட்டுமே… இத்தோடு நின்றுவிடுமா… பேசாமல் பணத்தை பேங்கிலிருந்து எடுத்துப் போய் கொடுத்துவிட்டு, இனி வேலைக்கு வராதே என்று சொல்லிவிடலாமா.. திரும்பவும் அவளது வீட்டிற்கேவா… பயம் வந்தது..மண்டை வலித்தது. சரி கொஞ்சம் ஆறப் போடலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன். அதற்குள் வீட்டிலிருந்து போன். 'ராணியைப் போய் பார்த்தீர்களா, கேட்டீர்களா, என்ன சொன்னாள், ஏன் எனக்கு போன் பண்ணவில்லை,' என்று எகிறப் போகிறாளோ என்று யோசித்து, தடுமாறி போனை எடுத்தேன்.."ஏன் முழு ரிங்கும் அடிச்சபிறகுதான் போனை எடுக்கணுமா?" என்றவள் நான் பதில் சொல்ல தடுமாறிக் கொண்டிருக்கும்போதே, "விஷயம் தெரியுமா? டி.வி.ல நியூஸ் பார்த்தேன். நம்ம ராணி பீச்ல விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டாளாம், அவளோட வண்டியையும் காமிச்சாங்க. அது அவ வண்டியேதான். 'என் சாவுக்கு யாரும் காரணமில்லே, என் வீட்டுக்காரரோட நினைவு வாட்டுச்சு, அதனால சாகறேன்.' அப்படின்னு ஒரு லெட்டர் எழுதி ஜாக்கெட்டுக்குள்ளே வெச்சிருந்திருக்கா…" என்று நிறுத்தினாள்..'கடவுளே, ஏதோ சபலத்தில் தெரியாம தப்பு பண்ணிட்டேன். அதுக்காக என்னை எந்த வம்புலேயும் மாட்டி விட்டுடாதே,' என்று வேண்டியபடியே வீட்டை அடைந்தேன். கொஞ்ச நேரம் ராணியின் தற்கொலைப் பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு பிறகு சொன்னாள்…."ஏங்க, அவதான் போயிட்டாள். போகட்டும். புதுசா ஒரு வேலைக்காரி கிடைச்சிருக்கா, வாணி னு பேரு. மூவாயிரம் கேட்கறாளாம், நம்ம ஷிவானி அக்காதான் சொன்னாங்க. அவங்க வீட்டுலேயும் அவதான் வேலை பண்றாளாம், இதுவரை எந்த கம்ப்ளைண்ட்டும் இல்லையாம்," என்றாள்..உடனே நான் இடைமறித்து, "வேண்டாம்டா சாமி! இனிமே ஒரு வேலைக்காரியும் வேணாம், இன்னிலேர்ந்து வீட்டு வேலைகள் எல்லாத்துலேயும் நானும் ஹெல்ப் பண்றேன். நாமளே பண்ணிக்கலாம். வேலைக்காரியே வேணாம்" என்றேன்.அவள் ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.