சிறுகதை: -தனுஜா ஜெயராமன்ஒவியம்: பிள்ளை.கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட ஃபங்க் வைத்த தலைமுடியைக் கைகளால் ஸ்டைலாக கோதிக்கொண்டே தன் அழகை தானே ரசித்துக்கொண்டிருந்தான்."டேய் ரமேஷ்! வர்ற வாரம் பொண்ணு வீட்ல வரச்சொல்லியிருக்காங்க. இந்த இடம் குதிரும்னு மனசுக்குத் தோணுதுறா! பாத்துட்டு வந்துருவோமா?""போம்மா! நீயும் ஒவ்வொரு முறையும் இதே பாட்டைத்தான் பாடுற. ஆனா ஒன்னும் பிரியோஜனமில்லயே, நான் வர்லை.""என்னடா இப்படிச் சொல்ற? வயசாகிட்டேப் போகுதுல்ல. காலாகாலத்துல நடக்கவேண்டியது நடக்க வேணாமா?""க்கும்! காலம்தான் நடக்குது… மத்தபடி வேற ஒன்னும் நடக்கமாட்டேங்குதே" என்றான் சலிப்புடன்…"டேய்! கவலைப்படாதடா இந்த முறை அந்த வடபழனி முருகன் கண்ணைத் தொறப்பாரு…""ஏம்மா! அவர் மட்டும் பக்கத்துக்கு ஒண்ணா பாந்தமா இருக்காருல்ல! எனக்கு ஒரு நல்லவழி பண்ணனும்னு அவருக்குத் தோணலையே…""அபச்சாரம்! கடவுளைக் கிண்டலடிக்காதடா! அப்புறம் வாயாடிப் பொண்ணா பாத்து தலையில் கட்டிட போறாரு.""அப்படியாவது ஒரு பொண்ணை தலையில கட்டினா நல்லதுதானே!""உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. இந்தா பொண்ணு போட்டோ… ஞாயித்திகெழமை ரெடியாரு.. பாக்கப் போறோம்…" எனக் கையில் திணித்துவிட்டு அம்மா போயேவிட்டாள்.போட்டோவில் பொண்ணு கிளி மாதிரி மூக்கும் முழியுமாகவே தெரிந்தாள். களையான முகம். எல்லாவற்றையும் விட நெளி நெளியான நீண்டக் கூந்தல் ரமேஷைக் கவர்ந்திழுத்தது.."அம்மா! என உற்சாகமாய் கத்திக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவன்… கோவிச்சுக்காதம்மா. நான் பொண்ணு பாக்க வரேன்… ஆனா எல்லா விஷயத்தையும் முழுசா சொல்லி வைச்சிடு. இந்த வாட்டி ஒரு பிரச்னையும் வரக்கூடாது சரியா…""சரிடா!" என வேலையைத் தொடர்ந்தாள்..ஞாயிற்றுகிழமை பெண்பார்க்கும் படலம். பெண்ணின் அப்பா ஜோக் என்ற பெயரில் அவரே பேசி, அவரே சிரித்துக்கொண்டிருந்தார். கொடுமையாக இருந்தது. மரியாதைக்காக அசடு வழிய, தர்மசங்கடத்துடன் சிரித்து வைத்தான் ரமேஷ். மாப்பிள்ளை கெத்துடன் ஸ்டைலாக அமர்ந்திருந்தவன் அவ்வப்போது தன் நீண்ட ஃபங்க் முடியை ஸ்டைலாக நீவி விட்டுக்கொண்டிருந்தான்."அம்மா! எல்லாத்தையும் சொல்லிட்டே இல்லை" என காதைக் கடித்தான்."அதெல்லாம் சொல்லிட்டேன்டா. நீ பேசாம இரேன்…"பெண்ணின் அம்மா கொண்டுவந்து வைத்த மிக்சர், ஜாங்கிரி வைகையறா செம்மையாக இருந்தது. ஆனால், நாகரீகம் கருதி இரண்டை எடுத்து வாயில் போட்டவன் சுவையில் அலைபாய்ந்த நாக்கை மிகச் சிரமப்பட்டே அடக்கி வைத்தான்.நல்லவேளை! "பொண்ணை வரச்சொல்லுங்கோ" என யாரோ ஒரு புண்ணியவான் குரல் கொடுக்க… நளினமாக அல்ல கௌதம்மேனன் கதாநாயகி போல சற்று காலை அகட்டி வித்தியாசமாக நடந்தபடி வந்தாள் மல்லிகா. போட்டோவில் பார்த்ததைவிட கொஞ்சமல்ல… நிறையவே குண்டாக இருந்தாள். அனேகமாக அது பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவாகத்தான் இருக்கவேண்டும்.எதிரே வந்து அமர்ந்தவள் ரமேஷை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள்.பார்த்ததும் மல்லிகாவை ஏனோ பிடித்துப்போனது. எதிர்பார்த்த அளவு இல்லையெனினும் பரவாயில்லை ரகமாக இருந்தாள். அவளுடைய நீண்ட கருங்கூந்தலில் மனதைத் தொலைத்தான்."பொண்ணை இப்பவே நல்லா பாத்துக்கோடா! இது நொள்ளை… அது நொட்டைன்னு அப்புறம் வந்து உயிரெடுக்கக்கூடாது" எனக் காதில் ஓதிய அம்மாவைக் கண்களால் முறைத்தான்."ம்… என்ன சொல்றாரு மாப்பிள்ளை" எனப் பெண்ணின் அப்பா ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டவர் போல கபகபவெனச் சிரித்தார்."அம்மா! பெண்ணைப் பிடிச்சிருக்கோ இல்லையோ இவரை எனக்குச் சுத்தமா புடிக்கலை…" என்றான் எரிச்சலுடன் காதில்."பேசாம இருடா! இவரோடையா வாழப்போற" என அடக்கினாள் அம்மா.."அப்புறம் உங்களுக்கு எங்கப் பொண்ணை புடிச்சா மேற்கொண்டு பேசலாம்" எனப் பேச்சை துவக்கினார் மற்றொரு பெரிசு."அம்மா!" எனக் காதை கடித்தான்."பெரியவங்க தப்பா நினைக்கலைன்னா… பையன் தனியாகப் பொண்ணுகிட்ட இரண்டு வார்த்தை பேச விரும்பறான்" என தயக்கத்துடன் சொன்னாள் அம்மா."அதுக்கென்ன பேசிட்டா போச்சு!" என மறுபடியும் பி. எஸ். வீரப்பாவை போல சிரித்து பயமுறுத்தினார் பெண்ணின் அப்பா.பெண்ணைக் கட்டினால் இந்தக் கொடுமையை வாழ்நாள் முழுக்க அனுபவிக்க நேருமோ என ரமேஷின் மனம் பீதியில் உறைந்தது. இதற்காக பொண்ணை பிடிக்கவில்லை என சொல்லிவிடலாமா என ஒரு நிமிடம் நினைத்தவன் முப்பத்தியெட்டு வயதிலும் இதுவரை ஒரு கல்யாணம் கூட ஆகாத தன் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மனதை தேற்றி கொண்டு மல்லிகாவிற்காக ஆவலுடன் காத்திருந்தான்.அதற்குள்… "அந்த ரூம்ல மல்லிகா வெயிட் பண்றா! போய் பேசுங்க மாப்பிளை" எனத் தேவையில்லாத வெட்கத்துடன் வந்து நெளிந்தபடி சொன்னாள் உறவுக்கார பெண்ணொருத்தி. ஆனால், 'மாப்பிள்ளை' என அவள் அழைத்தது மனசுக்கு ஒத்தடம் கொடுத்ததுபோல இருந்தது ரமேஷிற்கு. இதுநாள் வரை கிடைக்காத பாக்யம் என மனது மகிழ்ந்தது.ஆர்வமுடன் எழுந்து ரூமினுள் நுழைந்தான். மல்லிகா வெட்கத்தில் முகத்தைக் காட்டாமல் திரும்பி நின்றிருந்தாள். பின்புறம் தெரிந்த அவளுடைய நீண்ட கூந்தல் அவனை பெருமூச்செறிய செய்தது. "க்கும்" என தொண்டையை சொருகியவனை மெதுவாக வெட்கத்துடன் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா.."என்னைப் பிடிச்சிருக்கா?""ம்…" என்றாள் மெதுவாக."உன் பின்னல் ரொம்ப அழகாக இருக்கு…" எனக் கண்கள் மின்னப் பார்த்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.மல்லிகாவை ஆசையாகப் பார்த்தவாறு பேக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து, தன் ஃபங்க் தலைமுடியைச் சீவி விட்டுக்கொண்டான் ஸ்டைலாக."ஆனா!" எனத் தயங்கியவளை…"ஆனா என்ன? தைரியமாச் சொல்லு?""உங்க ஹேர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கலை" என்றாள்."அப்ப இந்தா வச்சுக்க" எனத் தனது விக்கைக் கழட்டி நீட்டியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.ரமேஷின் வழுக்கைத் தலை விளக்கு வெளிச்சத்தில் டாலடித்தது."உங்களுக்கு முடி கிடையாதா?" என அதிர்ந்தவளை…"ஏன்? உங்க வீட்ல சொல்லலையா?" எனக் கேட்டான் கவலையுடன்… அந்த வீரப்பனையும் அவன் சிரிப்பையும் நினைத்தால் மனதுக்குள் ஆத்திரம் மறுபடியும் வந்து போனது."இல்லை" எனத தலையை ஆட்டினாள் ஏமாற்றத்துடன்.."அப்ப உனக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான் ஈனஸ்வரத்தில்…ஒரு நிமிடம் யோசித்தவள்… "பிடிச்சிருக்கு" என்றாள் மறுபடியும் வெட்கத்துடன்…"அப்பாடா! எங்க பிடிக்கலைன்னு சொல்லிடுவியோன்னு மனசு பக்குனு இருந்தது தெரியுமா?" என்றான் மகிழ்வுடன்…"நீங்க இவ்வளவு தூரம் உண்மையா இருக்குறதால நானும் உங்கக்கிட்ட உண்மையைச் சொல்லிடுறேன்…" என தனது நீண்ட ஜவுரி முடியை அவிழ்த்து அவன் கையில் திணித்தாள்.எலி வாலை விடச் சிறிய கூந்தலைக் கண்டு மனதுக்குள் அதிர்ந்தான்."உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குல்ல?" என ஆர்வமாகக் கேட்டவளை…"பிடிச்சிருக்கு" என்று தலையாட்டியவன்.."உங்கொப்பனைத்தான் எனக்குப் பிடிக்கலை. அந்தச் சிரிப்புவாயனை இனி வாழ்நாள் முழுக்க எப்படித்தான் சமாளிக்க போறேனோ" என மனதிற்குள் நினைத்து கொண்டவனுக்கு சற்று கவலையாகத்தான் இருந்தது.
சிறுகதை: -தனுஜா ஜெயராமன்ஒவியம்: பிள்ளை.கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட ஃபங்க் வைத்த தலைமுடியைக் கைகளால் ஸ்டைலாக கோதிக்கொண்டே தன் அழகை தானே ரசித்துக்கொண்டிருந்தான்."டேய் ரமேஷ்! வர்ற வாரம் பொண்ணு வீட்ல வரச்சொல்லியிருக்காங்க. இந்த இடம் குதிரும்னு மனசுக்குத் தோணுதுறா! பாத்துட்டு வந்துருவோமா?""போம்மா! நீயும் ஒவ்வொரு முறையும் இதே பாட்டைத்தான் பாடுற. ஆனா ஒன்னும் பிரியோஜனமில்லயே, நான் வர்லை.""என்னடா இப்படிச் சொல்ற? வயசாகிட்டேப் போகுதுல்ல. காலாகாலத்துல நடக்கவேண்டியது நடக்க வேணாமா?""க்கும்! காலம்தான் நடக்குது… மத்தபடி வேற ஒன்னும் நடக்கமாட்டேங்குதே" என்றான் சலிப்புடன்…"டேய்! கவலைப்படாதடா இந்த முறை அந்த வடபழனி முருகன் கண்ணைத் தொறப்பாரு…""ஏம்மா! அவர் மட்டும் பக்கத்துக்கு ஒண்ணா பாந்தமா இருக்காருல்ல! எனக்கு ஒரு நல்லவழி பண்ணனும்னு அவருக்குத் தோணலையே…""அபச்சாரம்! கடவுளைக் கிண்டலடிக்காதடா! அப்புறம் வாயாடிப் பொண்ணா பாத்து தலையில் கட்டிட போறாரு.""அப்படியாவது ஒரு பொண்ணை தலையில கட்டினா நல்லதுதானே!""உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. இந்தா பொண்ணு போட்டோ… ஞாயித்திகெழமை ரெடியாரு.. பாக்கப் போறோம்…" எனக் கையில் திணித்துவிட்டு அம்மா போயேவிட்டாள்.போட்டோவில் பொண்ணு கிளி மாதிரி மூக்கும் முழியுமாகவே தெரிந்தாள். களையான முகம். எல்லாவற்றையும் விட நெளி நெளியான நீண்டக் கூந்தல் ரமேஷைக் கவர்ந்திழுத்தது.."அம்மா! என உற்சாகமாய் கத்திக்கொண்டே சமையலறைக்குள் நுழைந்தவன்… கோவிச்சுக்காதம்மா. நான் பொண்ணு பாக்க வரேன்… ஆனா எல்லா விஷயத்தையும் முழுசா சொல்லி வைச்சிடு. இந்த வாட்டி ஒரு பிரச்னையும் வரக்கூடாது சரியா…""சரிடா!" என வேலையைத் தொடர்ந்தாள்..ஞாயிற்றுகிழமை பெண்பார்க்கும் படலம். பெண்ணின் அப்பா ஜோக் என்ற பெயரில் அவரே பேசி, அவரே சிரித்துக்கொண்டிருந்தார். கொடுமையாக இருந்தது. மரியாதைக்காக அசடு வழிய, தர்மசங்கடத்துடன் சிரித்து வைத்தான் ரமேஷ். மாப்பிள்ளை கெத்துடன் ஸ்டைலாக அமர்ந்திருந்தவன் அவ்வப்போது தன் நீண்ட ஃபங்க் முடியை ஸ்டைலாக நீவி விட்டுக்கொண்டிருந்தான்."அம்மா! எல்லாத்தையும் சொல்லிட்டே இல்லை" என காதைக் கடித்தான்."அதெல்லாம் சொல்லிட்டேன்டா. நீ பேசாம இரேன்…"பெண்ணின் அம்மா கொண்டுவந்து வைத்த மிக்சர், ஜாங்கிரி வைகையறா செம்மையாக இருந்தது. ஆனால், நாகரீகம் கருதி இரண்டை எடுத்து வாயில் போட்டவன் சுவையில் அலைபாய்ந்த நாக்கை மிகச் சிரமப்பட்டே அடக்கி வைத்தான்.நல்லவேளை! "பொண்ணை வரச்சொல்லுங்கோ" என யாரோ ஒரு புண்ணியவான் குரல் கொடுக்க… நளினமாக அல்ல கௌதம்மேனன் கதாநாயகி போல சற்று காலை அகட்டி வித்தியாசமாக நடந்தபடி வந்தாள் மல்லிகா. போட்டோவில் பார்த்ததைவிட கொஞ்சமல்ல… நிறையவே குண்டாக இருந்தாள். அனேகமாக அது பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவாகத்தான் இருக்கவேண்டும்.எதிரே வந்து அமர்ந்தவள் ரமேஷை ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள்.பார்த்ததும் மல்லிகாவை ஏனோ பிடித்துப்போனது. எதிர்பார்த்த அளவு இல்லையெனினும் பரவாயில்லை ரகமாக இருந்தாள். அவளுடைய நீண்ட கருங்கூந்தலில் மனதைத் தொலைத்தான்."பொண்ணை இப்பவே நல்லா பாத்துக்கோடா! இது நொள்ளை… அது நொட்டைன்னு அப்புறம் வந்து உயிரெடுக்கக்கூடாது" எனக் காதில் ஓதிய அம்மாவைக் கண்களால் முறைத்தான்."ம்… என்ன சொல்றாரு மாப்பிள்ளை" எனப் பெண்ணின் அப்பா ஏதோ ஹாஸ்யத்தைக் கேட்டவர் போல கபகபவெனச் சிரித்தார்."அம்மா! பெண்ணைப் பிடிச்சிருக்கோ இல்லையோ இவரை எனக்குச் சுத்தமா புடிக்கலை…" என்றான் எரிச்சலுடன் காதில்."பேசாம இருடா! இவரோடையா வாழப்போற" என அடக்கினாள் அம்மா.."அப்புறம் உங்களுக்கு எங்கப் பொண்ணை புடிச்சா மேற்கொண்டு பேசலாம்" எனப் பேச்சை துவக்கினார் மற்றொரு பெரிசு."அம்மா!" எனக் காதை கடித்தான்."பெரியவங்க தப்பா நினைக்கலைன்னா… பையன் தனியாகப் பொண்ணுகிட்ட இரண்டு வார்த்தை பேச விரும்பறான்" என தயக்கத்துடன் சொன்னாள் அம்மா."அதுக்கென்ன பேசிட்டா போச்சு!" என மறுபடியும் பி. எஸ். வீரப்பாவை போல சிரித்து பயமுறுத்தினார் பெண்ணின் அப்பா.பெண்ணைக் கட்டினால் இந்தக் கொடுமையை வாழ்நாள் முழுக்க அனுபவிக்க நேருமோ என ரமேஷின் மனம் பீதியில் உறைந்தது. இதற்காக பொண்ணை பிடிக்கவில்லை என சொல்லிவிடலாமா என ஒரு நிமிடம் நினைத்தவன் முப்பத்தியெட்டு வயதிலும் இதுவரை ஒரு கல்யாணம் கூட ஆகாத தன் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் மனதை தேற்றி கொண்டு மல்லிகாவிற்காக ஆவலுடன் காத்திருந்தான்.அதற்குள்… "அந்த ரூம்ல மல்லிகா வெயிட் பண்றா! போய் பேசுங்க மாப்பிளை" எனத் தேவையில்லாத வெட்கத்துடன் வந்து நெளிந்தபடி சொன்னாள் உறவுக்கார பெண்ணொருத்தி. ஆனால், 'மாப்பிள்ளை' என அவள் அழைத்தது மனசுக்கு ஒத்தடம் கொடுத்ததுபோல இருந்தது ரமேஷிற்கு. இதுநாள் வரை கிடைக்காத பாக்யம் என மனது மகிழ்ந்தது.ஆர்வமுடன் எழுந்து ரூமினுள் நுழைந்தான். மல்லிகா வெட்கத்தில் முகத்தைக் காட்டாமல் திரும்பி நின்றிருந்தாள். பின்புறம் தெரிந்த அவளுடைய நீண்ட கூந்தல் அவனை பெருமூச்செறிய செய்தது. "க்கும்" என தொண்டையை சொருகியவனை மெதுவாக வெட்கத்துடன் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா.."என்னைப் பிடிச்சிருக்கா?""ம்…" என்றாள் மெதுவாக."உன் பின்னல் ரொம்ப அழகாக இருக்கு…" எனக் கண்கள் மின்னப் பார்த்தவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.மல்லிகாவை ஆசையாகப் பார்த்தவாறு பேக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து, தன் ஃபங்க் தலைமுடியைச் சீவி விட்டுக்கொண்டான் ஸ்டைலாக."ஆனா!" எனத் தயங்கியவளை…"ஆனா என்ன? தைரியமாச் சொல்லு?""உங்க ஹேர் ஸ்டைல் எனக்குப் பிடிக்கலை" என்றாள்."அப்ப இந்தா வச்சுக்க" எனத் தனது விக்கைக் கழட்டி நீட்டியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.ரமேஷின் வழுக்கைத் தலை விளக்கு வெளிச்சத்தில் டாலடித்தது."உங்களுக்கு முடி கிடையாதா?" என அதிர்ந்தவளை…"ஏன்? உங்க வீட்ல சொல்லலையா?" எனக் கேட்டான் கவலையுடன்… அந்த வீரப்பனையும் அவன் சிரிப்பையும் நினைத்தால் மனதுக்குள் ஆத்திரம் மறுபடியும் வந்து போனது."இல்லை" எனத தலையை ஆட்டினாள் ஏமாற்றத்துடன்.."அப்ப உனக்கு என்னைப் பிடிக்கலையா?" என்றான் ஈனஸ்வரத்தில்…ஒரு நிமிடம் யோசித்தவள்… "பிடிச்சிருக்கு" என்றாள் மறுபடியும் வெட்கத்துடன்…"அப்பாடா! எங்க பிடிக்கலைன்னு சொல்லிடுவியோன்னு மனசு பக்குனு இருந்தது தெரியுமா?" என்றான் மகிழ்வுடன்…"நீங்க இவ்வளவு தூரம் உண்மையா இருக்குறதால நானும் உங்கக்கிட்ட உண்மையைச் சொல்லிடுறேன்…" என தனது நீண்ட ஜவுரி முடியை அவிழ்த்து அவன் கையில் திணித்தாள்.எலி வாலை விடச் சிறிய கூந்தலைக் கண்டு மனதுக்குள் அதிர்ந்தான்."உங்களுக்கும் என்னை பிடிச்சிருக்குல்ல?" என ஆர்வமாகக் கேட்டவளை…"பிடிச்சிருக்கு" என்று தலையாட்டியவன்.."உங்கொப்பனைத்தான் எனக்குப் பிடிக்கலை. அந்தச் சிரிப்புவாயனை இனி வாழ்நாள் முழுக்க எப்படித்தான் சமாளிக்க போறேனோ" என மனதிற்குள் நினைத்து கொண்டவனுக்கு சற்று கவலையாகத்தான் இருந்தது.