-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத் தாகூர் என்றாலே, கவிஞர் என்றே நமக்கு ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் படைப்புலகம் பன்முகத்தன்மை கொண்டது. கலையின் பல்வேறு அம்சங்களில் அவரது வீச்சு நம்மை பிரமிப்பிற்கு உள்ளாக்குகிறது. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்..கவிஞர்ரவீந்திரநாத் தாகூர் தனது முதல் கவிதையை 5வது வயதில் புனைந்தார். அது மிகவும் எளிமையான கவிதை. மழையைப் பற்றி பின்வருமாறு அழகாக எழுதினார்..சுட்டெரிக்கும் வெயில் எல்லோரையும் ஆத்திரமடையச் செய்தது.ஆனால், மழை அவர்களுக்கு நம்பிக்கையும், ஆசுவாசத்தையும் கொடுத்தது.மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் குளத்தில் வாடின.ஆனால், இப்போது அவை குளத்தில் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன.இவ்வாறு ஆரம்பித்த அவரது கவிதைப் பயணம், சாயங்கால சங்கீதம் (சாந்திய சங்கீத்), காலை சங்கீதம் (பிரபாத் சங்கீத்), சோனார் தோரி, மானஸி, பாடல்களின் அஞ்சலி (கீதாஞ்சலி) போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகளாகத் தொடர்ந்தது..அவரது கவிதைகள் வங்காளத்தை தாண்டி அறிய வேண்டுமென்று எண்ணி, கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில், சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, அதற்கு பிரபல ஆங்கில இலக்கியவாதி ஈட்ஸ் (Yeats) முன்னுரை அளித்தார். ஈட்ஸ் ஆங்கில இலக்கிய பிதாமகர்களில் ஒருவர். அவர் பின்னர் 1923ல் நோபல் பரிசு பெற்றார். கீதாஞ்சலி என்ற அந்தச் சிறு கவிதைத் தொகுப்பு, 1913ம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றது. .கவிதைகளில் பகடி செய்தல், தொலைநோக்குப் பார்வை, சத்சித் ஆனந்த உன்னத நிலை என்று பல்வேறு உணர்வுகளைக் கையாண்டார். சமஸ்கிருத வார்த்தைகளை அதிகமாக கொண்ட சுத்த வங்காளம் முதல் வட்டார வங்காளம் என்று பல்வேறு மொழி நடைகளைப் பிரயோகித்தார். வங்காள கிராமியப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ரவீந்திரநாத், மதம் மற்றும் சமூக ரீதியான கட்டுப்பாடுகளை கவிதைகள் வாயிலாக எதிர்த்தார். வங்காளத்தின் பௌல் மக்களின் அகமனிதன் கோட்பாட்டை, அதாவது மனிதனுக்குள் வசிக்கும் இறைவன் என்ற கோட்பாட்டை, அகமனிதன் பேசுவதைப் போல் கவிதைகள் வடித்துள்ளார்..சிறுகதை எழுத்தாளர்ரவீந்திரநாத் தனது 16வது வயதில், பிக்காரிணி (பிச்சைக்காரப் பெண்) என்ற முதல் சிறுகதையை எழுதினார். வங்காள மொழியின் சிறுகதை இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், கிட்டத்தட்ட 84 சிறுகதைகள் எழுதினார். அதில் பாதி சிறுகதைகள், 1891 முதல் 1895ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அவரது சிறுகதைகள் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து எழுதப்பட்டவை. ரவீந்திரநாத் பெரும் பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பண்ணையில் வேலை பார்த்த குடியானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அடித்தட்டு மக்களைப் பற்றி, அவரது அக்கறையான சிறுகதைகளை படிப்பதன் மூலம், அவர் அவர்களுக்காக எவ்வளவு தூரம் இரங்கினார் என்பது தெரியவருகிறது. மேலும், அறிவுக்கு சவால் விடும் விடுகதைகள், நவீன சிந்தனைகள் என்று பல்வேறு கோணங்களில் சிறுகதைகள் படைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அடையாளம் (ஹைமந்தி), தனிமையில் வாடும் பெண்களின் மனநிலை (நஸ்டனிர்), திருமணத்திற்கு பின் ஒடுக்கப்படும் பெண்கள்(ஸ்திர் பத்ரா), இந்து-முஸ்லிம் பிரச்சனை (முஸல்மனிர் கோல்போ) என்று பல்வேறு உணர்வுகளை கையாண்டுள்ளார்..நாவலாசிரியர்எட்டு நாவல்களும் , நான்கு குறுநாவல்களும் எழுதினார். நாவல்களில் விதவைப் பெண் விரக தாபங்கள்(சோகர் பாலி), சமூகப் பிரச்னைகள்(கோரா), கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களின் இடையே போராட்டம் (காரே பைர்), திருமணத்திற்கு பின் பெண்ணின் மீதான அடக்குமுறை (ஜோகாஜாக்) என பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எடுத்து, தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஷெஷர் கோபிதா என்ற நாவலில், கதாநாயகன் கவிஞனாக வருவதால், கிட்டத்தட்ட கவிதைப் போன்ற நாவலைப் படைத்துள்ளார். சோகர் பாலி என்ற நாவல் எழுதிய பின்பு, அதன் முடிவில் தவறு செய்துவிட்டேன் என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். அந்த கால கட்டுக்கோப்புகளால், விதவை காசிக்கு செல்வதாக முடித்து விட்டார். விதவை மறுமணம் செய்திருக்குமாறு முடிவு வைத்திருக்க வேண்டுமென்று பின்னர் தெரிவித்தார்..பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்2230 பாடல்களை ரவீந்திரநாத் எழுதி, அவற்றுக்கு அவரே இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களில் பிரம்ம சமாஜத்தின் இறைவனைக் குறித்த துதிப் பாடல்கள் முதல், உணர்வுப்பூர்வமான காதல் பாடல்கள் வரை பல்வேறு உணர்வுகள் உள்ளன. மனிதர்களின் பல்வேறு மெல்லிய உணர்வுகளில் பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்கள், ரபீந்திர சங்கீத் (Rabindra Sangeet) என்று தனியாக குறிப்பிடப் படுகின்றன. பல்வேறு இந்துஸ்தானி ராகங்களில் பாடல்களை இசையமைத்துள்ளார். சில பாடல்களை, ராகங்களுக்கு ஏற்ப சந்தங்களில் (rhymes) எழுதியுள்ளார். சில ராகங்களை கலந்து, புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேற்கத்திய, கிராமிய, இந்துஸ்தானி, வட்டார சங்கீதம் என்று பல்வேறு சங்கீதங்களின் பிரத்யேக அம்சங்களை எடுத்து, இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களில் இரண்டு தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதங்களாக உள்ளன. இந்தப் பாடல்களில் ஒன்று, இலங்கையின் தேசிய கீதத்திற்கு ஆதாரமாக உள்ளது..நாடக ஆசிரியர்தனது 20வது வயதில், வால்மீகியின் மேதாவித்தனம் (வால்மீகி பிரதிபா) என்ற இசை நாடகத்தின் மூலமாக, நாடகங்களை எழுதத் தொடங்கினார். நாடகங்களை உணர்வுகளின் பரிமளிப்பாகப் பார்த்தார். அவர் அவற்றை இயக்கங்களின் பரிமளிப்பாகப் பார்க்கவில்லை (play of feelings, not of action). தியாகம்(விசர்ஜன்) , தீண்டத்தகாத பெண்( சந்தாலிகா) , சிவப்பு (ரக்தகரபை) என்று பல்வேறு நாடகங்களை படைத்தார். நாடகங்களில் பல்வேறு சமூகப் பிரச்சனைகள், சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள் போன்ற கருக்களை கையாண்டார். மேலும், சித்ராங்கதா, சந்தாலிகா, ஸ்யாமா போன்ற நாட்டிய நாடகங்களைப் படைத்தார்..தேசியவாதிஇந்திய சுதந்திர போராட்டத்தை ஆதரித்தார். இங்கிலாந்து இந்தியாவினை அடிமைப்படுத்துவதை எதிர்த்தார். 1915ம் ஆண்டு, ரவீந்திரநாத்திற்கு சர் பட்டம், இங்கிலாந்தில் அளிக்கப்பட்டது. 1919ம் ஆண்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட சர் பட்டத்தை தூக்கியெறிந்தார். காந்தியின் சுதந்திர போராட்டத்தினை ஆதரித்தார். காந்தி மற்றும் அம்பேத்காரின் இடையே நிலவிய பிரச்சனையை நடுவில் இருந்து தீர்த்து வைத்தார். காந்தியின் ஒரு உண்ணாவிரதத்தையும் முடித்து வைத்தார்..கல்வியாளர்கிளிப்பிள்ளையைப் போல், ஒப்புவிக்கும் முறையைக் கொண்ட கல்வி முறையை வெறுத்தார். இயற்கை சார்ந்த கல்வியறிவை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் சாந்திநிகேதனில் புதிய பள்ளிக் கூடத்தை 1901ம் ஆண்டு நிறுவினார். விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகத்தை 1922ம் ஆண்டு நிறுவினார். அது இந்தியாவினையும் , உலகினையும் இணைக்கும் நூலாக விளங்கி, நாடுகள் மற்றும் புவியியல் கோடுகளை தாண்டி மனிதவளத்தைக் கற்பிக்கும் நிலையமாக விளங்குகிறது. சத்யஜித் ரே, இந்திரா காந்தி போன்றவர்கள் இங்கு பயின்றவர்கள்..உலகம் சுற்றும் பயணிதனது கவிதைகளை உலகளாவில் பரப்ப, சாந்தி நிகேதனுக்கு நிதி திரட்ட என்று பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். தனது வாழ்நாளில், கிட்டத்தட்ட 35 நாடுகளுக்கு பயணித்தார்..புனைவிலி (non fiction) புத்தக எழுத்தாளர்புனைவு கதைகள் மட்டுமன்றி, புனைவிலி புத்தகங்கள் எழுதியுள்ளார். தனது பயணக் கட்டுரைகள், இந்திய வரலாறு, கட்டுரைகள் என்று பல்வேறு புனைவிலி புத்தகங்கள் எழுதியுள்ளார்.நடிகர்16வது வயதில் தனது சகோதரரின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர், தனது நாடகங்களிலும் பிரதானப் பாத்திரங்களில் நடித்துள்ளார்..ஓவியர்சிறு வயது முதல் ஓவியங்கள் வரைவதில் ஆர்வமிருந்தாலும், தனது 69ம் வயது முதல் பல்வேறு ஓவியங்களை வரையத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். பசிபிக் வடமேற்கு ஆதிவாசிகள் முதல் நவீன ஓவியப் பாணி வரை என்று பல்வேறு ஓவிய அம்சங்களை தனது ஓவியத்தில் புகுத்தினார். அவரது ஓவியங்கள் உலகில் பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ளன..தத்துவஞானிமனிதன் நாடு என்ற எல்லைக்குள் சிக்காமல், உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக விளங்க வேண்டும் என்ற வசுதேவ குடும்பம் என்ற பரந்த தத்துவத்தை கொண்டு பல்வேறு கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நாடு என்பது ஒரு இடத்தை மேற்பார்வை இடுவதற்கான அம்சம் மட்டுமே. எல்லைகள் தாண்டி, உலகம் இயங்க வேண்டும் என்ற பரந்த தத்துவத்தை முன்வைத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தை முன்வைத்தார்..கிராம மேம்பாட்டு ஆர்வலர்விவசாய பொருளாதார நிபுணர் லியோனார்ட் எல்ம்ஹெர்ஸ்ட் (Leonard Elmhirst) உடன், 1921ம் ஆண்டு, கிராம மேம்பாட்டு நிறுவனத்தை (Institute for rural reconstruction), சாந்திநிகேதன் அருகே சுருள் என்ற இடத்தில் நிறுவினார். அவர் மேற்கத்திய மற்றும் இந்திய பாரம்பரியம் சார்ந்த மேம்பாட்டை விரும்பினார். அவர் காந்தியைப் போன்று மொத்தமாக மேற்கத்திய எதிர்ப்பை விரும்பவில்லை..தீண்டாமை எதிர்ப்பு போராளிசாதிகளை எதிர்த்தார். சாதிகளுக்கு எதிராக படைப்புகளைப் படைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை கதாநாயகர்களாகக் கொண்டு, படைப்புகளைப் படைத்தார். குருவாயூர் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய, முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி கண்டார்..விஞ்ஞான ஆர்வலர்விஞ்ஞானத்தைக் குறித்து பேரார்வம் கொண்டிருந்தார். தனது பிரயாணங்களின் போது, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடினார். இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸூக்கு நண்பராக இருந்தார். இயற்பியல், உயிரியல், வானியல் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதினார்..பன்மொழிப் புலவர்வங்காள மொழி, ஆங்கிலம், மைதிலி போன்ற மொழிகளில் கவிதைகள் படைத்துள்ளார். வங்காள மொழியில் பல்வேறு வட்டார வழக்குகளில் கவிதைகள் படைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஞானமுடையவர். காளிதாசரின் படைப்புகளை விரும்பினார்..ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் மே 7 அவரது படைப்புகள் மேன் மேலும் தமிழில் வர வேண்டும். தமிழ் கூறும் நல்லுலகு அவரது படைப்புகளால் பயன் பெற வேண்டும்.
-வெங்கட்ராமன் ராமசுப்பிரமணியன்.ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே. இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத் தாகூர் என்றாலே, கவிஞர் என்றே நமக்கு ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் படைப்புலகம் பன்முகத்தன்மை கொண்டது. கலையின் பல்வேறு அம்சங்களில் அவரது வீச்சு நம்மை பிரமிப்பிற்கு உள்ளாக்குகிறது. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்..கவிஞர்ரவீந்திரநாத் தாகூர் தனது முதல் கவிதையை 5வது வயதில் புனைந்தார். அது மிகவும் எளிமையான கவிதை. மழையைப் பற்றி பின்வருமாறு அழகாக எழுதினார்..சுட்டெரிக்கும் வெயில் எல்லோரையும் ஆத்திரமடையச் செய்தது.ஆனால், மழை அவர்களுக்கு நம்பிக்கையும், ஆசுவாசத்தையும் கொடுத்தது.மீன்களும், நீர்வாழ் உயிரினங்களும் குளத்தில் வாடின.ஆனால், இப்போது அவை குளத்தில் மகிழ்ச்சியாக விளையாடுகின்றன.இவ்வாறு ஆரம்பித்த அவரது கவிதைப் பயணம், சாயங்கால சங்கீதம் (சாந்திய சங்கீத்), காலை சங்கீதம் (பிரபாத் சங்கீத்), சோனார் தோரி, மானஸி, பாடல்களின் அஞ்சலி (கீதாஞ்சலி) போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகளாகத் தொடர்ந்தது..அவரது கவிதைகள் வங்காளத்தை தாண்டி அறிய வேண்டுமென்று எண்ணி, கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில், சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, அதற்கு பிரபல ஆங்கில இலக்கியவாதி ஈட்ஸ் (Yeats) முன்னுரை அளித்தார். ஈட்ஸ் ஆங்கில இலக்கிய பிதாமகர்களில் ஒருவர். அவர் பின்னர் 1923ல் நோபல் பரிசு பெற்றார். கீதாஞ்சலி என்ற அந்தச் சிறு கவிதைத் தொகுப்பு, 1913ம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றது. .கவிதைகளில் பகடி செய்தல், தொலைநோக்குப் பார்வை, சத்சித் ஆனந்த உன்னத நிலை என்று பல்வேறு உணர்வுகளைக் கையாண்டார். சமஸ்கிருத வார்த்தைகளை அதிகமாக கொண்ட சுத்த வங்காளம் முதல் வட்டார வங்காளம் என்று பல்வேறு மொழி நடைகளைப் பிரயோகித்தார். வங்காள கிராமியப் பாடல்களால் ஈர்க்கப்பட்ட ரவீந்திரநாத், மதம் மற்றும் சமூக ரீதியான கட்டுப்பாடுகளை கவிதைகள் வாயிலாக எதிர்த்தார். வங்காளத்தின் பௌல் மக்களின் அகமனிதன் கோட்பாட்டை, அதாவது மனிதனுக்குள் வசிக்கும் இறைவன் என்ற கோட்பாட்டை, அகமனிதன் பேசுவதைப் போல் கவிதைகள் வடித்துள்ளார்..சிறுகதை எழுத்தாளர்ரவீந்திரநாத் தனது 16வது வயதில், பிக்காரிணி (பிச்சைக்காரப் பெண்) என்ற முதல் சிறுகதையை எழுதினார். வங்காள மொழியின் சிறுகதை இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், கிட்டத்தட்ட 84 சிறுகதைகள் எழுதினார். அதில் பாதி சிறுகதைகள், 1891 முதல் 1895ம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை. அவரது சிறுகதைகள் சுற்றுப்புறத்தை கூர்ந்து அவதானித்து எழுதப்பட்டவை. ரவீந்திரநாத் பெரும் பண்ணையார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பண்ணையில் வேலை பார்த்த குடியானவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அடித்தட்டு மக்களைப் பற்றி, அவரது அக்கறையான சிறுகதைகளை படிப்பதன் மூலம், அவர் அவர்களுக்காக எவ்வளவு தூரம் இரங்கினார் என்பது தெரியவருகிறது. மேலும், அறிவுக்கு சவால் விடும் விடுகதைகள், நவீன சிந்தனைகள் என்று பல்வேறு கோணங்களில் சிறுகதைகள் படைத்தார். ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் அடையாளம் (ஹைமந்தி), தனிமையில் வாடும் பெண்களின் மனநிலை (நஸ்டனிர்), திருமணத்திற்கு பின் ஒடுக்கப்படும் பெண்கள்(ஸ்திர் பத்ரா), இந்து-முஸ்லிம் பிரச்சனை (முஸல்மனிர் கோல்போ) என்று பல்வேறு உணர்வுகளை கையாண்டுள்ளார்..நாவலாசிரியர்எட்டு நாவல்களும் , நான்கு குறுநாவல்களும் எழுதினார். நாவல்களில் விதவைப் பெண் விரக தாபங்கள்(சோகர் பாலி), சமூகப் பிரச்னைகள்(கோரா), கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களின் இடையே போராட்டம் (காரே பைர்), திருமணத்திற்கு பின் பெண்ணின் மீதான அடக்குமுறை (ஜோகாஜாக்) என பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எடுத்து, தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். ஷெஷர் கோபிதா என்ற நாவலில், கதாநாயகன் கவிஞனாக வருவதால், கிட்டத்தட்ட கவிதைப் போன்ற நாவலைப் படைத்துள்ளார். சோகர் பாலி என்ற நாவல் எழுதிய பின்பு, அதன் முடிவில் தவறு செய்துவிட்டேன் என்று பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தார். அந்த கால கட்டுக்கோப்புகளால், விதவை காசிக்கு செல்வதாக முடித்து விட்டார். விதவை மறுமணம் செய்திருக்குமாறு முடிவு வைத்திருக்க வேண்டுமென்று பின்னர் தெரிவித்தார்..பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்2230 பாடல்களை ரவீந்திரநாத் எழுதி, அவற்றுக்கு அவரே இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களில் பிரம்ம சமாஜத்தின் இறைவனைக் குறித்த துதிப் பாடல்கள் முதல், உணர்வுப்பூர்வமான காதல் பாடல்கள் வரை பல்வேறு உணர்வுகள் உள்ளன. மனிதர்களின் பல்வேறு மெல்லிய உணர்வுகளில் பாடல்களை எழுதி, இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்கள், ரபீந்திர சங்கீத் (Rabindra Sangeet) என்று தனியாக குறிப்பிடப் படுகின்றன. பல்வேறு இந்துஸ்தானி ராகங்களில் பாடல்களை இசையமைத்துள்ளார். சில பாடல்களை, ராகங்களுக்கு ஏற்ப சந்தங்களில் (rhymes) எழுதியுள்ளார். சில ராகங்களை கலந்து, புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மேற்கத்திய, கிராமிய, இந்துஸ்தானி, வட்டார சங்கீதம் என்று பல்வேறு சங்கீதங்களின் பிரத்யேக அம்சங்களை எடுத்து, இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களில் இரண்டு தற்போது இந்தியா மற்றும் பங்களாதேஷின் தேசிய கீதங்களாக உள்ளன. இந்தப் பாடல்களில் ஒன்று, இலங்கையின் தேசிய கீதத்திற்கு ஆதாரமாக உள்ளது..நாடக ஆசிரியர்தனது 20வது வயதில், வால்மீகியின் மேதாவித்தனம் (வால்மீகி பிரதிபா) என்ற இசை நாடகத்தின் மூலமாக, நாடகங்களை எழுதத் தொடங்கினார். நாடகங்களை உணர்வுகளின் பரிமளிப்பாகப் பார்த்தார். அவர் அவற்றை இயக்கங்களின் பரிமளிப்பாகப் பார்க்கவில்லை (play of feelings, not of action). தியாகம்(விசர்ஜன்) , தீண்டத்தகாத பெண்( சந்தாலிகா) , சிவப்பு (ரக்தகரபை) என்று பல்வேறு நாடகங்களை படைத்தார். நாடகங்களில் பல்வேறு சமூகப் பிரச்சனைகள், சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகள் போன்ற கருக்களை கையாண்டார். மேலும், சித்ராங்கதா, சந்தாலிகா, ஸ்யாமா போன்ற நாட்டிய நாடகங்களைப் படைத்தார்..தேசியவாதிஇந்திய சுதந்திர போராட்டத்தை ஆதரித்தார். இங்கிலாந்து இந்தியாவினை அடிமைப்படுத்துவதை எதிர்த்தார். 1915ம் ஆண்டு, ரவீந்திரநாத்திற்கு சர் பட்டம், இங்கிலாந்தில் அளிக்கப்பட்டது. 1919ம் ஆண்டு, ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து, தனக்கு அளிக்கப்பட்ட சர் பட்டத்தை தூக்கியெறிந்தார். காந்தியின் சுதந்திர போராட்டத்தினை ஆதரித்தார். காந்தி மற்றும் அம்பேத்காரின் இடையே நிலவிய பிரச்சனையை நடுவில் இருந்து தீர்த்து வைத்தார். காந்தியின் ஒரு உண்ணாவிரதத்தையும் முடித்து வைத்தார்..கல்வியாளர்கிளிப்பிள்ளையைப் போல், ஒப்புவிக்கும் முறையைக் கொண்ட கல்வி முறையை வெறுத்தார். இயற்கை சார்ந்த கல்வியறிவை ஊக்குவிக்கும் எண்ணத்துடன் சாந்திநிகேதனில் புதிய பள்ளிக் கூடத்தை 1901ம் ஆண்டு நிறுவினார். விஸ்வபாரதி என்ற பல்கலைக்கழகத்தை 1922ம் ஆண்டு நிறுவினார். அது இந்தியாவினையும் , உலகினையும் இணைக்கும் நூலாக விளங்கி, நாடுகள் மற்றும் புவியியல் கோடுகளை தாண்டி மனிதவளத்தைக் கற்பிக்கும் நிலையமாக விளங்குகிறது. சத்யஜித் ரே, இந்திரா காந்தி போன்றவர்கள் இங்கு பயின்றவர்கள்..உலகம் சுற்றும் பயணிதனது கவிதைகளை உலகளாவில் பரப்ப, சாந்தி நிகேதனுக்கு நிதி திரட்ட என்று பல்வேறு பயணங்களை மேற்கொண்டார். தனது வாழ்நாளில், கிட்டத்தட்ட 35 நாடுகளுக்கு பயணித்தார்..புனைவிலி (non fiction) புத்தக எழுத்தாளர்புனைவு கதைகள் மட்டுமன்றி, புனைவிலி புத்தகங்கள் எழுதியுள்ளார். தனது பயணக் கட்டுரைகள், இந்திய வரலாறு, கட்டுரைகள் என்று பல்வேறு புனைவிலி புத்தகங்கள் எழுதியுள்ளார்.நடிகர்16வது வயதில் தனது சகோதரரின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர், தனது நாடகங்களிலும் பிரதானப் பாத்திரங்களில் நடித்துள்ளார்..ஓவியர்சிறு வயது முதல் ஓவியங்கள் வரைவதில் ஆர்வமிருந்தாலும், தனது 69ம் வயது முதல் பல்வேறு ஓவியங்களை வரையத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். பசிபிக் வடமேற்கு ஆதிவாசிகள் முதல் நவீன ஓவியப் பாணி வரை என்று பல்வேறு ஓவிய அம்சங்களை தனது ஓவியத்தில் புகுத்தினார். அவரது ஓவியங்கள் உலகில் பல்வேறு அருங்காட்சியகங்களில் உள்ளன..தத்துவஞானிமனிதன் நாடு என்ற எல்லைக்குள் சிக்காமல், உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக விளங்க வேண்டும் என்ற வசுதேவ குடும்பம் என்ற பரந்த தத்துவத்தை கொண்டு பல்வேறு கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். நாடு என்பது ஒரு இடத்தை மேற்பார்வை இடுவதற்கான அம்சம் மட்டுமே. எல்லைகள் தாண்டி, உலகம் இயங்க வேண்டும் என்ற பரந்த தத்துவத்தை முன்வைத்தார். உலகளாவிய சகோதரத்துவத்தை முன்வைத்தார்..கிராம மேம்பாட்டு ஆர்வலர்விவசாய பொருளாதார நிபுணர் லியோனார்ட் எல்ம்ஹெர்ஸ்ட் (Leonard Elmhirst) உடன், 1921ம் ஆண்டு, கிராம மேம்பாட்டு நிறுவனத்தை (Institute for rural reconstruction), சாந்திநிகேதன் அருகே சுருள் என்ற இடத்தில் நிறுவினார். அவர் மேற்கத்திய மற்றும் இந்திய பாரம்பரியம் சார்ந்த மேம்பாட்டை விரும்பினார். அவர் காந்தியைப் போன்று மொத்தமாக மேற்கத்திய எதிர்ப்பை விரும்பவில்லை..தீண்டாமை எதிர்ப்பு போராளிசாதிகளை எதிர்த்தார். சாதிகளுக்கு எதிராக படைப்புகளைப் படைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை கதாநாயகர்களாகக் கொண்டு, படைப்புகளைப் படைத்தார். குருவாயூர் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய, முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி கண்டார்..விஞ்ஞான ஆர்வலர்விஞ்ஞானத்தைக் குறித்து பேரார்வம் கொண்டிருந்தார். தனது பிரயாணங்களின் போது, ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகளை சந்தித்து உரையாடினார். இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸூக்கு நண்பராக இருந்தார். இயற்பியல், உயிரியல், வானியல் போன்றவற்றில் கட்டுரைகள் எழுதினார்..பன்மொழிப் புலவர்வங்காள மொழி, ஆங்கிலம், மைதிலி போன்ற மொழிகளில் கவிதைகள் படைத்துள்ளார். வங்காள மொழியில் பல்வேறு வட்டார வழக்குகளில் கவிதைகள் படைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஞானமுடையவர். காளிதாசரின் படைப்புகளை விரும்பினார்..ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாள் மே 7 அவரது படைப்புகள் மேன் மேலும் தமிழில் வர வேண்டும். தமிழ் கூறும் நல்லுலகு அவரது படைப்புகளால் பயன் பெற வேண்டும்.