ஹாய் கண்மணீஸ்…புது வருஷத்தன்னிக்கு உங்களுக்கெல்லாம், 'இளமை, இதோ… இதோ…' பாட்டைத்தான் (40 வருஷமா) நிறைய பேர் அனுப்பியிருப்பாங்க! கரெக்டா?ஆனா, நான் கொஞ்சம் வித்யாசம்!.நான் அனுப்பியது, 'வரவு எட்டணா… செலவு பத்தணா…' பழைய பாடலை!காரணம், செலிப்ரேஷனை விட, அதில் உள்ள ஷார்ப் மெசேஜ் அவசியங்கிறதனால!.ஜனவரி 3ம் தேதி நாளிதழில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் தந்த துயரப்பூச்சு மிக அடர்த்தியானது!மனைவி, 2 மகன்களைக் கொன்று, சென்னை வங்கி அதிகாரி தற்கொலை!மனைவி, 2 மகன்களைக் கொன்ற பூ வியாபாரி – கேரளாவில் பயங்கரம்!இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் கடன் தொல்லை.ஆடம்பர வாழ்க்கை + சூதாட்டம் + கடன் தொல்லை + நெருக்கடி + குடும்பச் சண்டை + விரக்தி = அழகிய அப்பாவிக் குழந்தைகளின் அநியாயச் சாவு!இன்றைக்கு நம்மில் பலருக்கும் மற்றவர்களைப் பார்த்து வாழும் ஆசை மிக அதிகமாகக் காணப்படுகிறது. மத்தவங்க மதிக்கணும், பெருமைப்படணும்னு நினைச்சே வாழறோம் (உள்ளுர ஆசை… பொறாமைப்பட வைக்கணும்?!). நமக்குத் தேவையோ இல்லையோ, தவணையில் கார் வாங்குவது (அதுவும் பெரிய கார்)… காருக்கேற்ற வீடு வாங்குவது, மிகப் பிரபலமான பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது, பிறந்த நாள், மண நாள் போன்றவற்றை கடன் வாங்கியாவது விமரிசையாகக் கொண்டாடுவது, விலையுயர்ந்த நாய்களை பிள்ளைகளுக்குப் பரிசளிப்பது, கிரெடிட் கார்டில் பிளாஸ்மா டீ.வி வாங்குவது… இப்படி ஏகப்பட்ட பியர் சோஷியல் பிரஷரில் தொங்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்!முகநூலிலோ, வாட்ஸ்அப் ஸ்டேடஸிலோ எந்தத் தோழியோ, சம வயது உறவினரோ வெளிநாட்டில் குதூகலமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை, 'ஷேர்' செய்துவிட்டால்… பதிலுக்கு நாமும் என்னவாவது… எப்படியாவது…?உங்களைத் தூண்டிவிட, வெறுப்பேற்ற அவர்கள் போடும் போஸ்ட்டுகளால் நீங்கள் ஏன் தடுமாறணும்? அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்! நம்ப வாழ்க்கையை நாம்ப வாழ்வோம்!யானை சாப்பிடுதேன்னு பூனையும் சாப்பிட்டா, பூனைக்கு செரிக்குமா?பெண்களாகிய நாம், நல்ல நிர்வாகிகள். இயல்பாகவே, அமைதி நாடுபவர்கள். நாம் மனசு வெச்சா, ஆடம்பரங்களை அறவே தவிர்க்கலாம். கடன் இல்லாத, அமைதியான, நிம்மதியான, எளிமையான, அர்த்தப்பூர்வமான வாழ்க்கை வாழலாம். கூந்தல் உள்ள சீமாட்டிகள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டுக்கலாம். அவர்களைப் பார்த்து நாமும் வாழ நினைத்தால், ஆடம்பர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு, 'சேமிப்பு' என்பதே இல்லாமல், சிரமமாகி விடும்!.உங்களையும் மீறி பகட்டான, தேவையற்ற எண்ணங்கள் ஏதேனும் வந்தால் உடனே, 'ரத்தன் டாடாவே நமஹ' என்று உச்சரியுங்கள்.84 வயதில், ஒரே ஒரு கப் கேக்கை மட்டுமே வெட்டி, தம்முடைய பிறந்த நாளைக் கொண்டாடிய மனிதரல்லவா!டாடா குழுமத் தலைவரே, அப்படின்னா? நாம்ப…?அநாவசிய, ஆடம்பர விழாக்களைக் கொண்டாட, இந்தக் கொடுந்தொற்று காலத்திலாவது மனசுக்குள் 144 போட்டுடலாமே!அப்படியும் ஏதாவது ஆடம்பர மோகம் தலைதூக்கினால், அந்த கப் கேக்கை ஞாபகப்படுத்திக்கோங்க ப்ளீஸ்!அது சாதா கேக் அல்ல! புத்திமதி கேக்!பிரச்னைக்கு வழிவகுக்கும் பகட்டு வாழ்க்கைக்கு, 'டாடா' சொல்லும், 'ரத்தின' கேக்! மீண்டும் பேசுவோம்.
ஹாய் கண்மணீஸ்…புது வருஷத்தன்னிக்கு உங்களுக்கெல்லாம், 'இளமை, இதோ… இதோ…' பாட்டைத்தான் (40 வருஷமா) நிறைய பேர் அனுப்பியிருப்பாங்க! கரெக்டா?ஆனா, நான் கொஞ்சம் வித்யாசம்!.நான் அனுப்பியது, 'வரவு எட்டணா… செலவு பத்தணா…' பழைய பாடலை!காரணம், செலிப்ரேஷனை விட, அதில் உள்ள ஷார்ப் மெசேஜ் அவசியங்கிறதனால!.ஜனவரி 3ம் தேதி நாளிதழில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் தந்த துயரப்பூச்சு மிக அடர்த்தியானது!மனைவி, 2 மகன்களைக் கொன்று, சென்னை வங்கி அதிகாரி தற்கொலை!மனைவி, 2 மகன்களைக் கொன்ற பூ வியாபாரி – கேரளாவில் பயங்கரம்!இரண்டு சம்பவங்களுக்கும் காரணம் கடன் தொல்லை.ஆடம்பர வாழ்க்கை + சூதாட்டம் + கடன் தொல்லை + நெருக்கடி + குடும்பச் சண்டை + விரக்தி = அழகிய அப்பாவிக் குழந்தைகளின் அநியாயச் சாவு!இன்றைக்கு நம்மில் பலருக்கும் மற்றவர்களைப் பார்த்து வாழும் ஆசை மிக அதிகமாகக் காணப்படுகிறது. மத்தவங்க மதிக்கணும், பெருமைப்படணும்னு நினைச்சே வாழறோம் (உள்ளுர ஆசை… பொறாமைப்பட வைக்கணும்?!). நமக்குத் தேவையோ இல்லையோ, தவணையில் கார் வாங்குவது (அதுவும் பெரிய கார்)… காருக்கேற்ற வீடு வாங்குவது, மிகப் பிரபலமான பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது, பிறந்த நாள், மண நாள் போன்றவற்றை கடன் வாங்கியாவது விமரிசையாகக் கொண்டாடுவது, விலையுயர்ந்த நாய்களை பிள்ளைகளுக்குப் பரிசளிப்பது, கிரெடிட் கார்டில் பிளாஸ்மா டீ.வி வாங்குவது… இப்படி ஏகப்பட்ட பியர் சோஷியல் பிரஷரில் தொங்கி ஊசலாடிக் கொண்டிருக்கிறோம்!முகநூலிலோ, வாட்ஸ்அப் ஸ்டேடஸிலோ எந்தத் தோழியோ, சம வயது உறவினரோ வெளிநாட்டில் குதூகலமாக இருப்பதாக ஒரு புகைப்படத்தை, 'ஷேர்' செய்துவிட்டால்… பதிலுக்கு நாமும் என்னவாவது… எப்படியாவது…?உங்களைத் தூண்டிவிட, வெறுப்பேற்ற அவர்கள் போடும் போஸ்ட்டுகளால் நீங்கள் ஏன் தடுமாறணும்? அவங்க வாழ்க்கையை அவங்க வாழட்டும்! நம்ப வாழ்க்கையை நாம்ப வாழ்வோம்!யானை சாப்பிடுதேன்னு பூனையும் சாப்பிட்டா, பூனைக்கு செரிக்குமா?பெண்களாகிய நாம், நல்ல நிர்வாகிகள். இயல்பாகவே, அமைதி நாடுபவர்கள். நாம் மனசு வெச்சா, ஆடம்பரங்களை அறவே தவிர்க்கலாம். கடன் இல்லாத, அமைதியான, நிம்மதியான, எளிமையான, அர்த்தப்பூர்வமான வாழ்க்கை வாழலாம். கூந்தல் உள்ள சீமாட்டிகள் எப்படி வேண்டுமானாலும் கொண்டை போட்டுக்கலாம். அவர்களைப் பார்த்து நாமும் வாழ நினைத்தால், ஆடம்பர வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு, 'சேமிப்பு' என்பதே இல்லாமல், சிரமமாகி விடும்!.உங்களையும் மீறி பகட்டான, தேவையற்ற எண்ணங்கள் ஏதேனும் வந்தால் உடனே, 'ரத்தன் டாடாவே நமஹ' என்று உச்சரியுங்கள்.84 வயதில், ஒரே ஒரு கப் கேக்கை மட்டுமே வெட்டி, தம்முடைய பிறந்த நாளைக் கொண்டாடிய மனிதரல்லவா!டாடா குழுமத் தலைவரே, அப்படின்னா? நாம்ப…?அநாவசிய, ஆடம்பர விழாக்களைக் கொண்டாட, இந்தக் கொடுந்தொற்று காலத்திலாவது மனசுக்குள் 144 போட்டுடலாமே!அப்படியும் ஏதாவது ஆடம்பர மோகம் தலைதூக்கினால், அந்த கப் கேக்கை ஞாபகப்படுத்திக்கோங்க ப்ளீஸ்!அது சாதா கேக் அல்ல! புத்திமதி கேக்!பிரச்னைக்கு வழிவகுக்கும் பகட்டு வாழ்க்கைக்கு, 'டாடா' சொல்லும், 'ரத்தின' கேக்! மீண்டும் பேசுவோம்.