– ஆர். மீனலதா, மும்பை.'சித்தரை மாதம் பெளர்ணமி நேரம்!'.'சித்திரை நிலா ஒரே நிலா!'.'சித்திரை மாத நிலவு போல ஜொலிக்குது பாரு!'.சித்திரை மாதத்திற்கே ஏக போகமானது சித்திரா பெளர்ணமி (நிலவு). சித்திரை நிலவு குறித்து எத்தனை எத்தனை பாடல்கள்! வேறு எந்த மாதத்தின் கூடவும், 'நிலவு' என்கிற வார்த்தை இணைந்த பாடல் கிடையாது..மங்களகரமான 'ஸ்ரீசுபகிருது' ஆண்டு 14.04.2022 அன்று ஆரம்பமாக, அடுத்த இரண்டு நாட்களில் வரும் சித்திரா பெளர்ணமியை (16.04.2022), அநேகர் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள்..கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் முழுநிலவு தோன்றுகையில், தங்களது வீட்டு வாசல்களில் அழகாக கோலமிட்டு, பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம் – குங்குமமிட்டு, அருகம்புல் வைப்பது வழக்கம். பின்னர் ஒரு முறத்தின் மீது கோலமிட்டு வாழை இலையைப் போட்டு, அதில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மாங்காய், தேங்காய், பருப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகள் படைப்பார்கள். தேங்காயை உடைத்து எடுத்த தண்ணீருடன் அனைத்தையும் நிவேதனம் செய்து, தூப-தீபம் காட்டி வணங்கி புத்தாண்டில் நல்லது நடக்க வேண்டி வழிபடுவார்கள்..வேறு சில இடங்களில், சித்ரா பெளர்ணமி தினம் கடற்கரை, நீர் நிலைகளருகே மக்கள் கூடி, மணலில் உறல் தோண்டி, அதற்குத் 'திருவுறல்' எனப் பெயரிட்டு, இறைவனை அதைச் சுற்றி வலம் வருமாறு செய்வார்கள். சித்திரையில் கிடைக்கும் மா, பலா, வாழை ஆகிய கனிகளை நிவேதனம் செய்து வணங்கி, மற்றவர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார்கள் என சிலப்பதிகாரக் குறிப்பொன்று கூறுகிறது.. சித்திரா பெளர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.சித்திரா பெளர்ணமியன்று பலர் கூடி நிலாச் சோறு உண்பார்கள்..'சித்திர குப்தர் வழிபாடு' சித்திரா பெளர்ணமியன்றுதான் நடைபெறும். மக்களின் பாவ-புண்ணியங்களைக் கணக்கெடுத்து எமதர்மராஜனிடம் சமர்ப்பிக்கும் தேவலோக பிரதிநிதி சித்திர குப்தருக்கு விசேஷ வழிபாடுகள் நடத்தப்படும் நாள். லவங்கம், ஏலம், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த அன்னம் தயார் செய்யப்பட்டு, நிவேதனம் செய்து, பிரசாதமாக அளிக்கப்படும். இறுதியில் அக்னிதேவன் வழிபாடும் செய்யப்படுகிறது.விரதம் இருந்து அன்னதானம் செய்பவர்களும் உண்டு. சித்திரகுப்தனைப் போல மாக்கோலம் அல்லது பொடிக் கோலமிட்டு, அவர் கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல அமைத்து பூஜை செய்வார்கள். சித்திரகுப்தன் வரலாற்றையும் படிப்பார்கள்..சித்திர குப்த ஸ்லோகம்:.'சித்திர குப்தம் மஹா பிராக்ஞம்.லேகனீபத்ர தாரிணம்.சித்ர ரத்னாம்பரதரம்.மத் யஸ்தம் ஸர்வ தேஹினாம்!'.சிட்டுப் போல் பறந்துவரும் சித்திரை வசந்தத்தை அன்புடன் வரவேற்று, சித்திரா பெளர்ணமியை அழகாக கொண்டாடி, சித்திர குப்தனை வணங்கி வழிபட, வாழ்வில் நல்லதே நடக்கும்.
– ஆர். மீனலதா, மும்பை.'சித்தரை மாதம் பெளர்ணமி நேரம்!'.'சித்திரை நிலா ஒரே நிலா!'.'சித்திரை மாத நிலவு போல ஜொலிக்குது பாரு!'.சித்திரை மாதத்திற்கே ஏக போகமானது சித்திரா பெளர்ணமி (நிலவு). சித்திரை நிலவு குறித்து எத்தனை எத்தனை பாடல்கள்! வேறு எந்த மாதத்தின் கூடவும், 'நிலவு' என்கிற வார்த்தை இணைந்த பாடல் கிடையாது..மங்களகரமான 'ஸ்ரீசுபகிருது' ஆண்டு 14.04.2022 அன்று ஆரம்பமாக, அடுத்த இரண்டு நாட்களில் வரும் சித்திரா பெளர்ணமியை (16.04.2022), அநேகர் பலவிதமாகக் கொண்டாடுகிறார்கள்..கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் முழுநிலவு தோன்றுகையில், தங்களது வீட்டு வாசல்களில் அழகாக கோலமிட்டு, பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம் – குங்குமமிட்டு, அருகம்புல் வைப்பது வழக்கம். பின்னர் ஒரு முறத்தின் மீது கோலமிட்டு வாழை இலையைப் போட்டு, அதில் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மாங்காய், தேங்காய், பருப்பு வகைகள், காய்கறி மற்றும் பழவகைகள் படைப்பார்கள். தேங்காயை உடைத்து எடுத்த தண்ணீருடன் அனைத்தையும் நிவேதனம் செய்து, தூப-தீபம் காட்டி வணங்கி புத்தாண்டில் நல்லது நடக்க வேண்டி வழிபடுவார்கள்..வேறு சில இடங்களில், சித்ரா பெளர்ணமி தினம் கடற்கரை, நீர் நிலைகளருகே மக்கள் கூடி, மணலில் உறல் தோண்டி, அதற்குத் 'திருவுறல்' எனப் பெயரிட்டு, இறைவனை அதைச் சுற்றி வலம் வருமாறு செய்வார்கள். சித்திரையில் கிடைக்கும் மா, பலா, வாழை ஆகிய கனிகளை நிவேதனம் செய்து வணங்கி, மற்றவர்களுக்கு பிரசாதமாக விநியோகிப்பார்கள் என சிலப்பதிகாரக் குறிப்பொன்று கூறுகிறது.. சித்திரா பெளர்ணமி தினத்தில் கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.சித்திரா பெளர்ணமியன்று பலர் கூடி நிலாச் சோறு உண்பார்கள்..'சித்திர குப்தர் வழிபாடு' சித்திரா பெளர்ணமியன்றுதான் நடைபெறும். மக்களின் பாவ-புண்ணியங்களைக் கணக்கெடுத்து எமதர்மராஜனிடம் சமர்ப்பிக்கும் தேவலோக பிரதிநிதி சித்திர குப்தருக்கு விசேஷ வழிபாடுகள் நடத்தப்படும் நாள். லவங்கம், ஏலம், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த அன்னம் தயார் செய்யப்பட்டு, நிவேதனம் செய்து, பிரசாதமாக அளிக்கப்படும். இறுதியில் அக்னிதேவன் வழிபாடும் செய்யப்படுகிறது.விரதம் இருந்து அன்னதானம் செய்பவர்களும் உண்டு. சித்திரகுப்தனைப் போல மாக்கோலம் அல்லது பொடிக் கோலமிட்டு, அவர் கையில் ஏடும், எழுத்தாணியும் இருப்பது போல அமைத்து பூஜை செய்வார்கள். சித்திரகுப்தன் வரலாற்றையும் படிப்பார்கள்..சித்திர குப்த ஸ்லோகம்:.'சித்திர குப்தம் மஹா பிராக்ஞம்.லேகனீபத்ர தாரிணம்.சித்ர ரத்னாம்பரதரம்.மத் யஸ்தம் ஸர்வ தேஹினாம்!'.சிட்டுப் போல் பறந்துவரும் சித்திரை வசந்தத்தை அன்புடன் வரவேற்று, சித்திரா பெளர்ணமியை அழகாக கொண்டாடி, சித்திர குப்தனை வணங்கி வழிபட, வாழ்வில் நல்லதே நடக்கும்.