Facebook வாசகீஸ் பதிவுகள்!.தமிழ் புத்தாண்டை தஞ்சாவூர் வழக்கப்படி வரவேற்பேன்.புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்க செல்லும் முன்,வாசல் தெளித்து, கோலம் போட்டு காவி இடுவேன்..பிறகு பூஜை அறையிலும் கோலம் போட்டு, ஒரு தாம்பாளத்தில், மா, பலா, வாழை, ஆப்பிள் சாத்துக்குடி, மாதுளம்பழம், வெற்றிலை, பாக்கு, பூ , நகை ,பணம் , மஞ்சள், குங்குமம் , தேங்காய், ஊதுபத்தி, கற்பூரம் , முகம்பார்க்கும் கண்ணாடியை தயாராக வைப்பேன்..அதிகாலையில் எழுந்து வந்து முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு, அதன்பிறகே அந்நாளை தொடங்குவேன் .– சௌம்யா சுப்பிரமணியன்.எங்க வீட்ல புத்தாண்டுக்கு முந்தின நாள் இரவே பூஜை ரூம் வேலைகளை முடித்து , ஒரு பெரிய தாம்பாளத்தில் கண்ணாடியை வைத்து , அதற்கு முன்னால் தங்கம், வெள்ளி , காசு, பணம், தாம்பூலம் பழங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிடுவேன். வீட்ல இருக்கிற வங்களை காலை எழுந்ததும் நேராக பூஜைரூம் போய் பார்க்கவேண்டும் என்று சொல்லி வைத்துவிடுவேன்..அன்று வடை, பாயசம், மற்ற பதார்த்தங்களுடன் மாங்காய் பச்சடி, தக்காளி தயிர் பச்சடி செய்வோம். வேப்பம்பூ பச்சடி மட்டும் செய்வதில்லை.– இந்திராணி.தமிழ் புத்தாண்டு வரும் முதல் நாளே, வாசலில் சுண்ணாம்புக் கரை கட்டி, சாணி போட்டு மெழுகி, கோலம் போட்டு, செம்மண் கட்டிவிடுவோம். அதைப் பார்க்கும்போது மனதில் ஒரு குதூகலம் வந்துவிடும். நிலைப்படியில் மாவிலை கட்டி விட்டு, சித்திரை பிறக்கும் அதிகாலையில், வீட்டில் உள்ள அனைவரும் முதலில் பார்ப்பது பூஜையறையில் தாம்பாளத்தில் உள்ள சித்திரைக் கனியைத் தான். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் நிறைந்து இருக்கும் என்பதே இதன் ஐதீகம் என அம்மா கூறுவார்கள். இன்றளவும் இதை கடைபிடிக்கின்றோம். வடை,பாயசத்தோடு மதிய விருந்து இருக்கும்.– பானு பெரியதம்பி.அன்று, வாசலில் மாவிலை தோரணம் கட்டி வைப்போம். வாசலில் கோலம் போட்டு காவி இடுவோம். பூஜை அறையில் பழம், வெற்றிலை பாக்கு, பூ, வைத்து சாமி கும்பிடுவோம். அன்று கண்டிப்பாக வேப்பம்பூ ,மாங்காய் வெல்லம் சேர்த்து பச்சடி செய்வோம்.– சாந்தி சீனிவாசன்.வாசலில் செம்மண் கோலங்கள், மாக்கோலங்கள், குட்டடி வாழை , நிலைகளில் மாவிலை தோரணங்கள் என அலங்கரிப்பு. புத்தாடை கட்டி கோவிலுக்கு செல்லுதல் . அறுசுவை உணவு .குறிப்பாக அன்று வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக அமரந்து வாழை இலையில் உணவருந்துதல் பேரின்பமாக இருக்கும். அன்று யாருக்காவது அன்னதானம் வழங்குதல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் . மாலையில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.– ஜானகி பரந்தாமன்.வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் புளிப்பும் மாறி மாறி வரும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உணர்த்த மாங்காய் புளிப்பும் ,வேப்பம் பூவின் கசப்பும், இனிப்பு வெல்லமும் கலந்த பச்சடி சமையலில் உண்டு ! மற்றபடி பருப்பும், பாயசமும், அப்பளமும், வடையும், பண்டிகை சமையலாக உண்டு!– வசந்தா கோவிந்தன்.கர்நாடக வழக்கப்படி நம் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வந்தோம். வாசலில் வேப்பம்பூவுடன் தோரணம், ஒப்பட்டு(போளி), பேவுபெல்லா என்கிற வேப்பம்பூ பச்சடி என… பிறகு, நாட்டுப் பெண் வந்ததும் பாலக்காடு ஸ்டைல்…அதாவது தமிழ் வருஷப்பிறப்பன்று 'கனி காணுதல்' என்றழைத்து சில மாற்றங்களுடன் கொண்டாடுகிறோம். அடபிரதமன், சக்க பாயசம், அவியல், ஓளான், மாங்கா பச்சடி, பப்படாம் என சமையல்..சமையல் எதுவாக இருப்பினும், புது வருடம் அமோகமாக இருக்கனும். விவசாயிகள் சந்தோஷமாக இருக்கனும். நோய்நொடி எதுவுமின்றி அனைத்து மக்களும் நலமாக இருக்கனும் என்பதே வருட பிறப்பன்று பொதுவான பிராத்தனை.– ராதா நரசிம்மன்.தமிழ் புத்தாண்டு அன்று காலையில் முதலில் செம்மண் காவியிட்டு பெரிய படிக்கோலம் போடுவோம். வாசலில் மாவிலைத் தோரணம். பித்ரு தினம், ஆதலால், தந்தை இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்வார்கள்..சமையலில் பருப்பு, வாழைக்காய் பொரியல், பூசணிக்காய் அல்லது புடலங்காய் கூட்டு, சௌசௌ அல்லது வெண்டைக்காய் சேர்த்த மோர் குழம்பு, ரசம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஃப்ரஷ் வேப்பம் பூவை நெய்யில் வறுத்துப் போட்ட மாங்காய் பச்சடி, மற்றும் வடை, பாயசம் முதலியவை உண்டு..மகாராஷ்டிராவில் குடிபாட்வா என்று புது வருஷத்தை கொண்டாடுவார்கள். அன்று அவர்கள் எல்லோருக்கும் எள்ளு மிட்டாய் கொடுப்பார்கள். 'தில் குட் காவோ, கோட் கோட் போலோ' என்று சொல்லி, மிட்டாயை கொடுப்பார்கள். எள்ளும் வெல்லமும் சாப்பிட்டு இனிப்பாக பேசுங்கள் என்று அதற்குப் பொருள்.) அன்று வீட்டிற்கு வருபவர்களுக்கு தாம்பூலத்தில் மஞ்சள் குங்குமம் ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது எங்கள் வழக்கம்.– சுதா திருநாராயணன்.புத்தாண்டுக்கு முந்திய நாள் வீட்டில் வலை அடித்து எல்லா ரூம்களையும் சுத்தமாக துடைத்து விட்டு, பூஜை ரூமில் சாமி படங்கள், விளக்கு வகைகள் எல்லாம் துடைத்து வைத்து விட்டு காலை 4 மணிக்கு எழும்பி குளித்து புத்தாடை அணிந்து பூஜை செய்து, இறைவனை வணங்குவோம். பெரியவர்களிடம் காலில் விழுந்து, கைநீட்டம் வாங்கிக் கொண்டு, சின்ன பிள்ளைகளுக்கு, ஆசீர்வாதம் பண்ணி காசு கொடுப்போம்..இட்லி வடையோடு டிபன் முடித்துவிட்டு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்கி, நெய் விளக்கு ஏற்றிவிட்டு பிரசாதத்தோடு 1ருபாய் வைத்து தருவார்கள். அந்த 1ருபாய் காசை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்வோம்..– கலைமதி சிவகுரு.சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு விமரிசையாகக் கொண்டாடுவோம். அன்று ஸ்னானம் செய்து மடியாக மடிசார் புடவை கட்டிக்கொண்டு சமையல் செய்வோம். ஆமை வடை, போளி அன்றைய ஸ்பெஷல். மேலும் வாழ்வில் அறுசுவையும் இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் மாங்காய் பச்சடியில் ஆறு சுவைகள்..வாசலில் மாவிலைத் தோரணத்துடன் கூரைப்பூவையும் நிலையில் சொருகுவோம். வாசலில் மாக்கோலம் போடுவோம். பூஜையில் நைவேத்தியப் பொருட்களுடன் புதுப்பஞ்சாங்கம் வைத்து வழிபடுவோம். அன்று மாலை கோவிலில் வேத விற்பன்னர்கள் பஞ்சாங்கம் படிப்பதைக் கேட்க வேண்டும் என்பது ஐதீகம்.– ஹேமலதா ஶ்ரீனிவாசன்.பட்டுப்பாவாடை அணிந்து பட்டாம் பூச்சி போல் பறந்து வரும் சித்திரைப் பெண்ணை வரவேற்க, வாயிலில் அழகான கோலம். உள்ளே கடவுள் படம், மூர்த்தி அருகேயும் அழகான கோலம் இடுவது..கடவுள் படமருகே, மஞ்சள் குங்குமம் இட்ட புதுப் பஞ்சாங்கம் வைப்பது. பூஜை செய்த பின், புதுப் பஞ்சாங்கம் படித்து, நிவேதனம், ஆரத்தி, கடவுள் பிரார்த்தனை செய்வது. கோவில் சென்று இறைவனை வணங்கி, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்பது. –மீனலதா
Facebook வாசகீஸ் பதிவுகள்!.தமிழ் புத்தாண்டை தஞ்சாவூர் வழக்கப்படி வரவேற்பேன்.புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்க செல்லும் முன்,வாசல் தெளித்து, கோலம் போட்டு காவி இடுவேன்..பிறகு பூஜை அறையிலும் கோலம் போட்டு, ஒரு தாம்பாளத்தில், மா, பலா, வாழை, ஆப்பிள் சாத்துக்குடி, மாதுளம்பழம், வெற்றிலை, பாக்கு, பூ , நகை ,பணம் , மஞ்சள், குங்குமம் , தேங்காய், ஊதுபத்தி, கற்பூரம் , முகம்பார்க்கும் கண்ணாடியை தயாராக வைப்பேன்..அதிகாலையில் எழுந்து வந்து முகம் பார்க்கும் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துவிட்டு, அதன்பிறகே அந்நாளை தொடங்குவேன் .– சௌம்யா சுப்பிரமணியன்.எங்க வீட்ல புத்தாண்டுக்கு முந்தின நாள் இரவே பூஜை ரூம் வேலைகளை முடித்து , ஒரு பெரிய தாம்பாளத்தில் கண்ணாடியை வைத்து , அதற்கு முன்னால் தங்கம், வெள்ளி , காசு, பணம், தாம்பூலம் பழங்கள் எல்லாம் எடுத்து வைத்துவிடுவேன். வீட்ல இருக்கிற வங்களை காலை எழுந்ததும் நேராக பூஜைரூம் போய் பார்க்கவேண்டும் என்று சொல்லி வைத்துவிடுவேன்..அன்று வடை, பாயசம், மற்ற பதார்த்தங்களுடன் மாங்காய் பச்சடி, தக்காளி தயிர் பச்சடி செய்வோம். வேப்பம்பூ பச்சடி மட்டும் செய்வதில்லை.– இந்திராணி.தமிழ் புத்தாண்டு வரும் முதல் நாளே, வாசலில் சுண்ணாம்புக் கரை கட்டி, சாணி போட்டு மெழுகி, கோலம் போட்டு, செம்மண் கட்டிவிடுவோம். அதைப் பார்க்கும்போது மனதில் ஒரு குதூகலம் வந்துவிடும். நிலைப்படியில் மாவிலை கட்டி விட்டு, சித்திரை பிறக்கும் அதிகாலையில், வீட்டில் உள்ள அனைவரும் முதலில் பார்ப்பது பூஜையறையில் தாம்பாளத்தில் உள்ள சித்திரைக் கனியைத் தான். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமும், ஐஸ்வர்யமும் நிறைந்து இருக்கும் என்பதே இதன் ஐதீகம் என அம்மா கூறுவார்கள். இன்றளவும் இதை கடைபிடிக்கின்றோம். வடை,பாயசத்தோடு மதிய விருந்து இருக்கும்.– பானு பெரியதம்பி.அன்று, வாசலில் மாவிலை தோரணம் கட்டி வைப்போம். வாசலில் கோலம் போட்டு காவி இடுவோம். பூஜை அறையில் பழம், வெற்றிலை பாக்கு, பூ, வைத்து சாமி கும்பிடுவோம். அன்று கண்டிப்பாக வேப்பம்பூ ,மாங்காய் வெல்லம் சேர்த்து பச்சடி செய்வோம்.– சாந்தி சீனிவாசன்.வாசலில் செம்மண் கோலங்கள், மாக்கோலங்கள், குட்டடி வாழை , நிலைகளில் மாவிலை தோரணங்கள் என அலங்கரிப்பு. புத்தாடை கட்டி கோவிலுக்கு செல்லுதல் . அறுசுவை உணவு .குறிப்பாக அன்று வீட்டில் உள்ளவர்கள் ஒன்றாக அமரந்து வாழை இலையில் உணவருந்துதல் பேரின்பமாக இருக்கும். அன்று யாருக்காவது அன்னதானம் வழங்குதல் மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் . மாலையில் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறும்.– ஜானகி பரந்தாமன்.வாழ்க்கையில் இனிப்பும், கசப்பும் புளிப்பும் மாறி மாறி வரும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உணர்த்த மாங்காய் புளிப்பும் ,வேப்பம் பூவின் கசப்பும், இனிப்பு வெல்லமும் கலந்த பச்சடி சமையலில் உண்டு ! மற்றபடி பருப்பும், பாயசமும், அப்பளமும், வடையும், பண்டிகை சமையலாக உண்டு!– வசந்தா கோவிந்தன்.கர்நாடக வழக்கப்படி நம் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வந்தோம். வாசலில் வேப்பம்பூவுடன் தோரணம், ஒப்பட்டு(போளி), பேவுபெல்லா என்கிற வேப்பம்பூ பச்சடி என… பிறகு, நாட்டுப் பெண் வந்ததும் பாலக்காடு ஸ்டைல்…அதாவது தமிழ் வருஷப்பிறப்பன்று 'கனி காணுதல்' என்றழைத்து சில மாற்றங்களுடன் கொண்டாடுகிறோம். அடபிரதமன், சக்க பாயசம், அவியல், ஓளான், மாங்கா பச்சடி, பப்படாம் என சமையல்..சமையல் எதுவாக இருப்பினும், புது வருடம் அமோகமாக இருக்கனும். விவசாயிகள் சந்தோஷமாக இருக்கனும். நோய்நொடி எதுவுமின்றி அனைத்து மக்களும் நலமாக இருக்கனும் என்பதே வருட பிறப்பன்று பொதுவான பிராத்தனை.– ராதா நரசிம்மன்.தமிழ் புத்தாண்டு அன்று காலையில் முதலில் செம்மண் காவியிட்டு பெரிய படிக்கோலம் போடுவோம். வாசலில் மாவிலைத் தோரணம். பித்ரு தினம், ஆதலால், தந்தை இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்வார்கள்..சமையலில் பருப்பு, வாழைக்காய் பொரியல், பூசணிக்காய் அல்லது புடலங்காய் கூட்டு, சௌசௌ அல்லது வெண்டைக்காய் சேர்த்த மோர் குழம்பு, ரசம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி, ஃப்ரஷ் வேப்பம் பூவை நெய்யில் வறுத்துப் போட்ட மாங்காய் பச்சடி, மற்றும் வடை, பாயசம் முதலியவை உண்டு..மகாராஷ்டிராவில் குடிபாட்வா என்று புது வருஷத்தை கொண்டாடுவார்கள். அன்று அவர்கள் எல்லோருக்கும் எள்ளு மிட்டாய் கொடுப்பார்கள். 'தில் குட் காவோ, கோட் கோட் போலோ' என்று சொல்லி, மிட்டாயை கொடுப்பார்கள். எள்ளும் வெல்லமும் சாப்பிட்டு இனிப்பாக பேசுங்கள் என்று அதற்குப் பொருள்.) அன்று வீட்டிற்கு வருபவர்களுக்கு தாம்பூலத்தில் மஞ்சள் குங்குமம் ரவிக்கைத்துணி வைத்துக் கொடுப்பது எங்கள் வழக்கம்.– சுதா திருநாராயணன்.புத்தாண்டுக்கு முந்திய நாள் வீட்டில் வலை அடித்து எல்லா ரூம்களையும் சுத்தமாக துடைத்து விட்டு, பூஜை ரூமில் சாமி படங்கள், விளக்கு வகைகள் எல்லாம் துடைத்து வைத்து விட்டு காலை 4 மணிக்கு எழும்பி குளித்து புத்தாடை அணிந்து பூஜை செய்து, இறைவனை வணங்குவோம். பெரியவர்களிடம் காலில் விழுந்து, கைநீட்டம் வாங்கிக் கொண்டு, சின்ன பிள்ளைகளுக்கு, ஆசீர்வாதம் பண்ணி காசு கொடுப்போம்..இட்லி வடையோடு டிபன் முடித்துவிட்டு அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வணங்கி, நெய் விளக்கு ஏற்றிவிட்டு பிரசாதத்தோடு 1ருபாய் வைத்து தருவார்கள். அந்த 1ருபாய் காசை எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்வோம்..– கலைமதி சிவகுரு.சித்திரையில் தமிழ் வருடப்பிறப்பு விமரிசையாகக் கொண்டாடுவோம். அன்று ஸ்னானம் செய்து மடியாக மடிசார் புடவை கட்டிக்கொண்டு சமையல் செய்வோம். ஆமை வடை, போளி அன்றைய ஸ்பெஷல். மேலும் வாழ்வில் அறுசுவையும் இருக்கும் என்பதை உணர்த்தும் வண்ணம் மாங்காய் பச்சடியில் ஆறு சுவைகள்..வாசலில் மாவிலைத் தோரணத்துடன் கூரைப்பூவையும் நிலையில் சொருகுவோம். வாசலில் மாக்கோலம் போடுவோம். பூஜையில் நைவேத்தியப் பொருட்களுடன் புதுப்பஞ்சாங்கம் வைத்து வழிபடுவோம். அன்று மாலை கோவிலில் வேத விற்பன்னர்கள் பஞ்சாங்கம் படிப்பதைக் கேட்க வேண்டும் என்பது ஐதீகம்.– ஹேமலதா ஶ்ரீனிவாசன்.பட்டுப்பாவாடை அணிந்து பட்டாம் பூச்சி போல் பறந்து வரும் சித்திரைப் பெண்ணை வரவேற்க, வாயிலில் அழகான கோலம். உள்ளே கடவுள் படம், மூர்த்தி அருகேயும் அழகான கோலம் இடுவது..கடவுள் படமருகே, மஞ்சள் குங்குமம் இட்ட புதுப் பஞ்சாங்கம் வைப்பது. பூஜை செய்த பின், புதுப் பஞ்சாங்கம் படித்து, நிவேதனம், ஆரத்தி, கடவுள் பிரார்த்தனை செய்வது. கோவில் சென்று இறைவனை வணங்கி, அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்திப்பது. –மீனலதா