வாசகர் ஜமாய்க்கிறாங்க!.தொகுப்பு: – என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.இன்கோர் டால்னா:.தேவையானவை: பலாக்காய் அரை கிலோ, உருளைக்கிழங்கு 3 (தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய்ப் பால் 1 கப், சீரகம் 1 டீஸ்பூன், மசாலா பவுடர் 1 டீஸ்பூன், சர்க்கரை கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு, தக்காளி 1, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள், பிரிஞ்சி இலை, உப்பு, மிளகாய்த் தூள் தேவையான அளவு, தயிர் 1 டேபிள் ஸ்பூன்..செய்முறை: பலாக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பிறகு அதை அரை வேக்காடு வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இஞ்சி, சீரகம், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரை டீஸ்பூன் சீரகம் (மீதமுள்ளது) பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக சிறு தீயில் வதக்கவும். அதில் தோல் சிவி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, பலாக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக சிறு தீயில் வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி, தயிர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவைச் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியானவுடன் அது மூழ்கும் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்துக் கிளறவும். மீண்டும் கலவைக் கெட்டியானதும் அது முழ்கும் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டு காய்கறிகளை வேக விடவும். முக்கால் பங்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் மசாலாப் பவுடர், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கிச் சுடச்சுட பரிமாறவும். சுவையான இன்கோர் டால்னா ரெடி. இது சாதம், சப்பாத்தி, தோசை, பூரிக்கு நல்ல காம்பினேஷன்..*******************.பலாக்காய் கோஃப்தா கறி:.தேவையானவை: கோஃப்தா தயாரிக்க: பலாக்காய் அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மசாலா பவுடர் 1 டீஸ்பூன், தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு..தொக்கு தயாரிக்க: தக்காளி 4, பெரிய வெங்காயம் 2, தயிர் 200 கிராம், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன், மசாலாப் பவுடர் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, கொத்துமல்லி சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு..செய்முறை: தோல் நீக்கிய பலாக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கோஃப்தா தயாரிக்க தேவையான மீதிப் பொருள்களுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கோஃப்தா கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, வெங்காய விழுது ஆகியவைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் தக்காளித் துண்டுகள், சர்க்கரை, உப்பு, தயிர், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொதிக்க விடவும்..எண்ணெய் தனியாகப் பிரிந்து மேலே மிதக்கும்போது கலவையில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களை இட்டு மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி மசாலா பவுடரையும், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியையும் பரவலாக அதன் மேல் தூவி, சுடச்சுடப் பரிமாறவும். இந்த பலாக்காய் கோஃப்தா தோசை, சப்பாத்தி, பூரி, சாதத்துடனும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த பலாப்பழ சீசனில் நீங்களும் இதைச் செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாமே!.*******************.முக்கனி கலவை லட்டு.தேவையானவை: வாழைப்பழம் 4, பலாச்சுளை 10, மாம்பழம் பெரியது 2, தேங்காய்த் துருவல் 1 கப், மைதா மாவு கால் கிலோ, ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், கேசரிப் பவுடர் 1 சிட்டிகை, சர்க்கரை 300 கிராம், நெய் 3 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, சமையல் சோடா 1 சிட்டிகை..செய்முறை: மைதா மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன் 150 கிராம் சர்க்கரை, உப்பு, சோடா உப்புச் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பலாப் பழம், மாம்பழத்தையும் தோல் இல்லாமல் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்..அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் மீதமுள்ள 150 கிராம் சர்க்கரை, கேசரி பவுடர் போட்டுக் காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதித்து பாகாகி வரும்போது நறுக்கி வைத்துள்ள பழங்களை ஒன்றாகப் போட்டுக் கிளறவும். சிறு தீயில் நன்றாகக் கொதித்து கெட்டியானதும் ஏலக்காய்த் தூள், நெய் போட்டு இறக்கி, ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்..ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் ஒவ்வொரு பழ பூரண உருண்டைகளாக எடுத்து மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். இரு புறமும் சிவந்ததும் திருப்பி எடுக்கவும். இதுவே முக்கனி கலவை லட்டு. இது ஒரு வாரம் வரை கெடாது இருக்கும். அனைவரும் உண்ணக்கூடிய சத்தான உணவு.
வாசகர் ஜமாய்க்கிறாங்க!.தொகுப்பு: – என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.இன்கோர் டால்னா:.தேவையானவை: பலாக்காய் அரை கிலோ, உருளைக்கிழங்கு 3 (தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய்ப் பால் 1 கப், சீரகம் 1 டீஸ்பூன், மசாலா பவுடர் 1 டீஸ்பூன், சர்க்கரை கால் டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், இஞ்சி சிறு துண்டு, தக்காளி 1, நெய் 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், பூண்டு 3 பற்கள், பிரிஞ்சி இலை, உப்பு, மிளகாய்த் தூள் தேவையான அளவு, தயிர் 1 டேபிள் ஸ்பூன்..செய்முறை: பலாக்காயை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பிறகு அதை அரை வேக்காடு வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இஞ்சி, சீரகம், பூண்டு இவற்றை விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் அரை டீஸ்பூன் சீரகம் (மீதமுள்ளது) பிரிஞ்சி இலை ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக சிறு தீயில் வதக்கவும். அதில் தோல் சிவி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, பலாக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக சிறு தீயில் வதக்கவும். பின்பு நறுக்கிய தக்காளி, தயிர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் ஆகியவைச் சேர்த்துக் கிளறவும். கலவை கெட்டியானவுடன் அது மூழ்கும் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்துக் கிளறவும். மீண்டும் கலவைக் கெட்டியானதும் அது முழ்கும் அளவிற்குத் தண்ணீரைச் சேர்த்து, உப்பு, சர்க்கரை போட்டு காய்கறிகளை வேக விடவும். முக்கால் பங்கு வெந்தவுடன் தேங்காய்ப் பால் சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வெந்தவுடன் மசாலாப் பவுடர், நெய் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கிச் சுடச்சுட பரிமாறவும். சுவையான இன்கோர் டால்னா ரெடி. இது சாதம், சப்பாத்தி, தோசை, பூரிக்கு நல்ல காம்பினேஷன்..*******************.பலாக்காய் கோஃப்தா கறி:.தேவையானவை: கோஃப்தா தயாரிக்க: பலாக்காய் அரை கிலோ, பெரிய வெங்காயம் 1, மசாலா பவுடர் 1 டீஸ்பூன், தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், கடலை மாவு 2 டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு..தொக்கு தயாரிக்க: தக்காளி 4, பெரிய வெங்காயம் 2, தயிர் 200 கிராம், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், சர்க்கரை 1 டீஸ்பூன், மசாலாப் பவுடர் 1 டீஸ்பூன், சீரகத் தூள் 1 டீஸ்பூன், தனியா தூள் 1 டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை 2, கொத்துமல்லி சிறிதளவு, மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் தேவையான அளவு..செய்முறை: தோல் நீக்கிய பலாக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு ஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். அரைத்த விழுதை கோஃப்தா தயாரிக்க தேவையான மீதிப் பொருள்களுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கோஃப்தா கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பிரிஞ்சி இலை, வெங்காய விழுது ஆகியவைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் தக்காளித் துண்டுகள், சர்க்கரை, உப்பு, தயிர், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொதிக்க விடவும்..எண்ணெய் தனியாகப் பிரிந்து மேலே மிதக்கும்போது கலவையில் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களை இட்டு மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி மசாலா பவுடரையும், பொடியாக நறுக்கிய கொத்துமல்லியையும் பரவலாக அதன் மேல் தூவி, சுடச்சுடப் பரிமாறவும். இந்த பலாக்காய் கோஃப்தா தோசை, சப்பாத்தி, பூரி, சாதத்துடனும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இந்த பலாப்பழ சீசனில் நீங்களும் இதைச் செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாமே!.*******************.முக்கனி கலவை லட்டு.தேவையானவை: வாழைப்பழம் 4, பலாச்சுளை 10, மாம்பழம் பெரியது 2, தேங்காய்த் துருவல் 1 கப், மைதா மாவு கால் கிலோ, ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன், கேசரிப் பவுடர் 1 சிட்டிகை, சர்க்கரை 300 கிராம், நெய் 3 தேக்கரண்டி, உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப, சமையல் சோடா 1 சிட்டிகை..செய்முறை: மைதா மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். அத்துடன் 150 கிராம் சர்க்கரை, உப்பு, சோடா உப்புச் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். வாழைப் பழத்தை தோலுரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பலாப் பழம், மாம்பழத்தையும் தோல் இல்லாமல் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்..அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கால் தம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்ததும் மீதமுள்ள 150 கிராம் சர்க்கரை, கேசரி பவுடர் போட்டுக் காய்ச்ச வேண்டும். நன்றாகக் கொதித்து பாகாகி வரும்போது நறுக்கி வைத்துள்ள பழங்களை ஒன்றாகப் போட்டுக் கிளறவும். சிறு தீயில் நன்றாகக் கொதித்து கெட்டியானதும் ஏலக்காய்த் தூள், நெய் போட்டு இறக்கி, ஆறிய பிறகு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்..ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும் ஒவ்வொரு பழ பூரண உருண்டைகளாக எடுத்து மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். இரு புறமும் சிவந்ததும் திருப்பி எடுக்கவும். இதுவே முக்கனி கலவை லட்டு. இது ஒரு வாரம் வரை கெடாது இருக்கும். அனைவரும் உண்ணக்கூடிய சத்தான உணவு.