-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.."நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான். என்னோட அப்பா எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது இறந்துட்டாரு. மூணாம் வகுப்பு நான் படிச்சதோடு சரி. உடனே நான் வேலைக்குப் போய்ட்டேன். வீட்ல அவ்வளவு வறுமை. இங்கே திருச்சிக்கு வந்து நான் என்னோட மனைவி ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க சேர்ந்து ஒரு டிபன் கடை ஆரம்பித்தோம். அப்போ சின்ன வயசுல நான் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டது என்னால மறக்கவே முடியலை. அதனோட பாதிப்புல தான் எங்க கடையில சாப்பிடுறவங்களுக்கு இரண்டு ரூபா தோசைப் போட ஆரம்பித்தோம். ஊரு பூராவும் வெளியூர்லயும் இப்ப எங்களுக்கு இரண்டு ரூபாய்த் தோசைக் கடைன்னு பேராகி விட்டது." என்கிறார் சின்னத்தம்பி. அவருக்கு வயது நாற்பத்திஎட்டு..திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் மேட்டுத் தெருவில் அமைந்துள்ளது, அவர்களது இரண்டு ரூபாய் தோசைக் கடை. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுகிறது. இரவு நேரம் அதுவும் தெரு முக்காக இருப்பதால் தெருவோரமாக அமர்ந்து சாப்பிடவும் வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப வசதியாக அமைந்து போயிற்று. சின்னத்தம்பி, அவரது மனைவி வெள்ளையம்மாள், அவர்களது மகள்கள் முத்துலெட்சுமி, சங்கீதா ஆகிய நால்வரும் அங்கு பரபரப்பாகச் சுழன்று வேலை செய்கின்றனர். கடையைச் சுற்றிலும் அருகாமையில் நான்கு தெரு மக்கள் வாடிக்கையாளர்கள். இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு தினசரி வெளியூர்களில் இருந்தும், இரண்டு ரூபாய் தோசைச் சாப்பிட ஆர்வமுடன் இங்கு வந்து விடுகிறார்கள்..அந்த பரபரப்பான நேரத்தில், வெள்ளையம்மாளிடம் நேரம் கிடைக்கும் போது, அவ்வப்போது பேசினோம்..உங்கள் இருவரின் பூர்விகம்? .என் கணவருக்கு திருமயம் அருகே கோனாபட்டு. எனக்குப் பூர்விகம் சிவகங்கை மாவட்டம் இரணியூர். எங்களுக்கு 2௦௦2ல் திருமணம் நடந்தது. அப்போது என் கணவர் அங்கு அக்கம்பக்கம் ஊர்களில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். முத்துலெட்சுமி, சங்கீதா என்று இரண்டு மகள்கள். 2௦௦9ல் குடும்பத்துடன் எல்லோரும் திருச்சிக்கு வந்து வந்து விட்டோம். இங்கு ஏதாவது டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது..இந்தக் கடையினை எப்போது தொடங்கினீர்கள்?.இதே இடத்தில் 2௦11ல் டிபன் கடை தொடங்கினோம், அப்போது காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளுக்கும் டிபன் மற்றும் சிற்றுண்டி உணவு கடையாக நடத்தினோம். அப்போது சுமாராகத்தான் நடந்து கொண்டு இருந்தது. 2௦16ல் இரவு நேர டிபன் கடையாக மட்டும் மாத்தினோம். இரவு ஏழு மணிக்குத் தொடங்குவோம். இரவு பன்னிரண்டு மணி வரை நடக்கும். அதன் பின்னர் நாங்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு பண்ணி விட்டு என் கணவர், நான், மகள்கள் என நான்கு பேரும் வீட்டுக்குப் போய் படுக்க இரண்டு மணி ஆகி விடும். மறுநாள் காலையில் ஏழு மணிக்கு எழுந்து விடுவோம்..அப்புறம் என்ன? பகல் முழுவதும் ஓய்வுதானே? .அதுதாங்க இல்லை. மறு நாள் காலையில எந்திரிச்சி தோசை மாவு, இட்லி மாவுக்கு அரிசி உளுந்து ஊற வைக்குறது. அப்புறம் அதைக் களைஞ்சி கிரைண்டர்ல போட்டு மாவாட்டி எடுத்து வைக்கணும். மத்த கடைக்காரங்க மாதிரி மாவு மில்லுல இத்தனை கிலோன்னு பணத்துக்கு நாங்க மாவு வாங்கினா எங்களுக்குக் கட்டுப்படியே ஆகாது. அந்த மாவுல ரெண்டு ரூபாய்க்கு எல்லாம் தோசைச் சுட்டு ஜனங்களுக்குத் திருப்தியா தரவே முடியாது. மத்தியானத்துக்குள்ளே எல்லா மாவும் அரைச்சி வெச்சுடுவோம். மத்தியானம் சாப்பிட்டு வந்து சாயந்திரமா சாம்பார், குருமா, சட்னி வகைகளை மாலை ஆறரை ஏழு மணிக்குள்ளாற ரெடி பண்ணிடுவோம். நைட்டு ஏழு மணிக்கு இரண்டு ரூபாய் தோசைச் சுட ஆரம்பிச்சுடுவோம். கட்டாக்கட்டியா நாங்க நாலு பேருமே நின்னு பாக்குறதால ஏதோ கொஞ்சம் எங்களுக்கு வருமானம் வருது. நாங்க நாலு பெரும் வெளியே வேலைக்குப் போனா என்ன சம்பளம் கிடைக்குமோ அதை விடக் கொஞ்சம் கூடக் கிடைக்குது. உண்மையச் சொல்லப் போனா எங்களுக்குப் பெரிய லாபம்லாம் கிடையவே கிடையாது. இதுல ராத்திரிக்கும் பகலுக்கும் எங்களுக்கு பொழைப்பு சரியாப் போய்டும்..நீங்க என்னென்ன வெரைட்டி வெச்சிருக்கீங்க?.முதல் ஐட்டம் இரண்டு ரூபாய் தோசை. இட்லி அஞ்சு ரூபாய். புரோட்டா ஏழு ரூபாய். இரண்டு ரூபா தோசைங்கறது குட்டி குட்டியா ரவுண்டு ரவுண்டா இருக்கும். அதும் மேலே இட்லிப் பொடித் தூவி பொடி தோசை நான்கு ரூபாய். இரண்டு ரூபாய் தோசை மேலேயே ஆனியன், கேரட், மல்லித்தழை, இட்லிப் பொடி தூவி எடுத்துத் தந்தா அந்த மசால் தோசை அஞ்சு ரூபாய். இதெல்லாம் இந்த ரேட்டுக்கு எங்களுக்கு விபரம் தெரிஞ்சு வெளியே எங்கேயும் கிடைக்காது. சாம்பார், தேங்காய்ச்சட்னி, காரச் சட்னி, குருமா, காரக் குருமா அஞ்சு வகை தந்து வருகிறோம். இரண்டு ரூபா தோசை இல்லாம மத்த கடைகள் மாதிரி பெரிய தோசை வேணும்னாலும் அதுவும் ஊத்தித் தர்றோம். நல்லா முறுகலா நெய் தோசை மாதிரி இருக்கும். நாங்க அதை இங்கே இருபத்தைந்து ரூபாய்க்கு தர்றோம். அதே லெவல்ல தோசைக்கு மத்த கடைகள்ல அம்பது அறுபது ரூபாய் வாங்குவாங்க. விறகு அடுப்பு தாங்க பயன்படுத்தி வர்றோம். இங்கே வர்றவங்க குறைந்த பணத்துல வயிறு நிறைய மனசு நெறைவா சாப்பிட்டுப் போகணும். எங்களுக்கு அது தாங்க ஆத்ம திருப்தி..இரண்டு ரூபாய் தோசை ஐடியா உங்களுக்கு எப்பிடி வந்தது? இதனை எவ்வளவு வருசமா போட்டுட்டு வர்றீங்க?.அஞ்சு வருசமா இரண்டு ரூபாய் தோசை போட்டு வர்றோம். 2௦17ல் தொடங்கி, இன்னைய வரைக்கும் நாங்க அந்த விலையையும் ஏத்தலை. தோசையோட அளவையும் அதன் திக்னசையும் குறைக்கவே இல்லை. இதை எப்போ எப்பிடி ஆரம்பிச்சோம்னு சொல்றேன்..அப்போ 2௦17ஆம் வருஷம். எங்க கடைக்கு எதிரே அங்காளம்மன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக்குறவங்க இந்தக் கோயில் உள்ளே பஜனை வைப்பாங்க. அதுல ஒரு கோஷ்டிங்க எங்கள்ட்ட நைட் டிபன் ஆர்டர் தந்திருந்தாங்க. எங்களுக்கு அப்போ ஒரு யோசனை. அவுங்கள்ட்ட தனியா பைசா வாங்காம அவுங்க எல்லார்க்கும் ஆளுக்கு ஒரு குட்டி தோசை சைசுக்கு குட்டி குட்டி தொசையாச் சுட்டுத் தரலாம்னு தோணிச்சு. சுமார் நூறு நூத்தைம்பது தோசை குட்டி குட்டியா அன்னைக்கி நைட்டு சுட்டுத் தந்தோம். அந்தக் குட்டி தோசைக்கு நாங்க யார்ட்டயும் பணம் வாங்கிக்கலை. அன்று எங்களோட சொந்த செலவாத் தந்தோம்.. மறுநாள் என்னாச்சுன்னா… டிபன் வாங்க கடைக்கு வந்தவங்க அந்தக் குட்டி குட்டி தோசை மாதிரியே சுட்டுக் கொடுங்க. அது ரொம்ப நால்லா இருக்குனு கேக்க ஆரம்பிச்சாங்க. அப்போ ஆரம்பிச்சது தான். அப்பவுலேந்து ஐந்து வருசமாகி இன்னைக்கு வரைக்கும் அந்தக் குட்டி தோசைக்கு இரண்டு ரூபாதான் வாங்குறோம். சாதாரணமா சாப்பிடுறவங்க ஐந்து தோசைக்கு மேலே சாப்பிட முடியாது. அவுங்களுக்கு பத்து ரூபாய்க்குள்ளே நைட் டிபன் செலவு அடங்கிடும். கொஞ்சம் கூடுதலா சாப்பிடுறவங்க பத்து தோசைகுள்ளே சாப்பிடலாம். அவுங்களுக்கும் இருபது ரூபாய்க்குள்ளே நைட் டிபன் முடிஞ்சிடும்..நாங்க தொடங்குனப்ப எல்லாம் இந்த இரண்டு ரூபாய் தோசை ஒரு நாளைக்கு இருநூறு முந்நூறு தான் போகும். ஒரு வருசமா வெளியே எல்லார்கிட்டேயும் தெரிஞ்சதுக்கு அப்புறமா இப்போ, ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் தோசை மட்டும் ஆயிரத்து இருநூறு, ஆயிரத்து முந்நூறு போய்ட்டு இருக்கு. வெளியூர்ல இருந்தெல்லாம் போன் போட்டுப் பேசி, இரண்டு ரூபாய் தோசை நூறு வேணும், இருநூறு வேணும், முந்நூறு வேணும்னு ஆர்டர் தந்துட்டு, நைட்டு வந்து வாங்கிட்டுப் போறாங்க. தெருவுல சின்ன புள்ளைங்க கையில ஒரு தட்டைத் தூக்கியாந்துட்டு ரெண்டு ரூபாய்க் காசைத் தந்துட்டு ஒரு தோசை வாங்கிட்டுப் போகும். அந்தச் சின்னப் பிள்ளைக்கு அந்த ஒரு தோசை போதும். வாழ்க்கையில அந்தச் சின்னக் குழந்தையோட பசிய ஒரு இரண்டு ரூபாய்க் காசுல நம்மளாலே தீர்த்து வைக்க முடியுதுனு நெனைக்கும் போது எங்களுக்கு கிடைக்கிற மன திருப்திக்கு எந்தவொரு எல்லையும் கிடையாது.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.."நேத்து வடித்து வுட்ட கஞ்சியிலக் கொஞ்சம் எடுத்து வைத்து, மறுநாள் காலையில அதுலக் கொஞ்சம் தண்ணி ஊத்தி சூடு பண்ணித் தருவாங்க எங்க அம்மா. காலம்பர ஆகாரம் எங்களுக்கு அது தான். என்னோட அப்பா எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது இறந்துட்டாரு. மூணாம் வகுப்பு நான் படிச்சதோடு சரி. உடனே நான் வேலைக்குப் போய்ட்டேன். வீட்ல அவ்வளவு வறுமை. இங்கே திருச்சிக்கு வந்து நான் என்னோட மனைவி ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க சேர்ந்து ஒரு டிபன் கடை ஆரம்பித்தோம். அப்போ சின்ன வயசுல நான் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டது என்னால மறக்கவே முடியலை. அதனோட பாதிப்புல தான் எங்க கடையில சாப்பிடுறவங்களுக்கு இரண்டு ரூபா தோசைப் போட ஆரம்பித்தோம். ஊரு பூராவும் வெளியூர்லயும் இப்ப எங்களுக்கு இரண்டு ரூபாய்த் தோசைக் கடைன்னு பேராகி விட்டது." என்கிறார் சின்னத்தம்பி. அவருக்கு வயது நாற்பத்திஎட்டு..திருச்சி, உறையூர், பாண்டமங்கலம் மேட்டுத் தெருவில் அமைந்துள்ளது, அவர்களது இரண்டு ரூபாய் தோசைக் கடை. இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுகிறது. இரவு நேரம் அதுவும் தெரு முக்காக இருப்பதால் தெருவோரமாக அமர்ந்து சாப்பிடவும் வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப வசதியாக அமைந்து போயிற்று. சின்னத்தம்பி, அவரது மனைவி வெள்ளையம்மாள், அவர்களது மகள்கள் முத்துலெட்சுமி, சங்கீதா ஆகிய நால்வரும் அங்கு பரபரப்பாகச் சுழன்று வேலை செய்கின்றனர். கடையைச் சுற்றிலும் அருகாமையில் நான்கு தெரு மக்கள் வாடிக்கையாளர்கள். இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு தினசரி வெளியூர்களில் இருந்தும், இரண்டு ரூபாய் தோசைச் சாப்பிட ஆர்வமுடன் இங்கு வந்து விடுகிறார்கள்..அந்த பரபரப்பான நேரத்தில், வெள்ளையம்மாளிடம் நேரம் கிடைக்கும் போது, அவ்வப்போது பேசினோம்..உங்கள் இருவரின் பூர்விகம்? .என் கணவருக்கு திருமயம் அருகே கோனாபட்டு. எனக்குப் பூர்விகம் சிவகங்கை மாவட்டம் இரணியூர். எங்களுக்கு 2௦௦2ல் திருமணம் நடந்தது. அப்போது என் கணவர் அங்கு அக்கம்பக்கம் ஊர்களில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். முத்துலெட்சுமி, சங்கீதா என்று இரண்டு மகள்கள். 2௦௦9ல் குடும்பத்துடன் எல்லோரும் திருச்சிக்கு வந்து வந்து விட்டோம். இங்கு ஏதாவது டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்பதே எங்களின் எண்ணமாக இருந்தது..இந்தக் கடையினை எப்போது தொடங்கினீர்கள்?.இதே இடத்தில் 2௦11ல் டிபன் கடை தொடங்கினோம், அப்போது காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளுக்கும் டிபன் மற்றும் சிற்றுண்டி உணவு கடையாக நடத்தினோம். அப்போது சுமாராகத்தான் நடந்து கொண்டு இருந்தது. 2௦16ல் இரவு நேர டிபன் கடையாக மட்டும் மாத்தினோம். இரவு ஏழு மணிக்குத் தொடங்குவோம். இரவு பன்னிரண்டு மணி வரை நடக்கும். அதன் பின்னர் நாங்கள் எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு பண்ணி விட்டு என் கணவர், நான், மகள்கள் என நான்கு பேரும் வீட்டுக்குப் போய் படுக்க இரண்டு மணி ஆகி விடும். மறுநாள் காலையில் ஏழு மணிக்கு எழுந்து விடுவோம்..அப்புறம் என்ன? பகல் முழுவதும் ஓய்வுதானே? .அதுதாங்க இல்லை. மறு நாள் காலையில எந்திரிச்சி தோசை மாவு, இட்லி மாவுக்கு அரிசி உளுந்து ஊற வைக்குறது. அப்புறம் அதைக் களைஞ்சி கிரைண்டர்ல போட்டு மாவாட்டி எடுத்து வைக்கணும். மத்த கடைக்காரங்க மாதிரி மாவு மில்லுல இத்தனை கிலோன்னு பணத்துக்கு நாங்க மாவு வாங்கினா எங்களுக்குக் கட்டுப்படியே ஆகாது. அந்த மாவுல ரெண்டு ரூபாய்க்கு எல்லாம் தோசைச் சுட்டு ஜனங்களுக்குத் திருப்தியா தரவே முடியாது. மத்தியானத்துக்குள்ளே எல்லா மாவும் அரைச்சி வெச்சுடுவோம். மத்தியானம் சாப்பிட்டு வந்து சாயந்திரமா சாம்பார், குருமா, சட்னி வகைகளை மாலை ஆறரை ஏழு மணிக்குள்ளாற ரெடி பண்ணிடுவோம். நைட்டு ஏழு மணிக்கு இரண்டு ரூபாய் தோசைச் சுட ஆரம்பிச்சுடுவோம். கட்டாக்கட்டியா நாங்க நாலு பேருமே நின்னு பாக்குறதால ஏதோ கொஞ்சம் எங்களுக்கு வருமானம் வருது. நாங்க நாலு பெரும் வெளியே வேலைக்குப் போனா என்ன சம்பளம் கிடைக்குமோ அதை விடக் கொஞ்சம் கூடக் கிடைக்குது. உண்மையச் சொல்லப் போனா எங்களுக்குப் பெரிய லாபம்லாம் கிடையவே கிடையாது. இதுல ராத்திரிக்கும் பகலுக்கும் எங்களுக்கு பொழைப்பு சரியாப் போய்டும்..நீங்க என்னென்ன வெரைட்டி வெச்சிருக்கீங்க?.முதல் ஐட்டம் இரண்டு ரூபாய் தோசை. இட்லி அஞ்சு ரூபாய். புரோட்டா ஏழு ரூபாய். இரண்டு ரூபா தோசைங்கறது குட்டி குட்டியா ரவுண்டு ரவுண்டா இருக்கும். அதும் மேலே இட்லிப் பொடித் தூவி பொடி தோசை நான்கு ரூபாய். இரண்டு ரூபாய் தோசை மேலேயே ஆனியன், கேரட், மல்லித்தழை, இட்லிப் பொடி தூவி எடுத்துத் தந்தா அந்த மசால் தோசை அஞ்சு ரூபாய். இதெல்லாம் இந்த ரேட்டுக்கு எங்களுக்கு விபரம் தெரிஞ்சு வெளியே எங்கேயும் கிடைக்காது. சாம்பார், தேங்காய்ச்சட்னி, காரச் சட்னி, குருமா, காரக் குருமா அஞ்சு வகை தந்து வருகிறோம். இரண்டு ரூபா தோசை இல்லாம மத்த கடைகள் மாதிரி பெரிய தோசை வேணும்னாலும் அதுவும் ஊத்தித் தர்றோம். நல்லா முறுகலா நெய் தோசை மாதிரி இருக்கும். நாங்க அதை இங்கே இருபத்தைந்து ரூபாய்க்கு தர்றோம். அதே லெவல்ல தோசைக்கு மத்த கடைகள்ல அம்பது அறுபது ரூபாய் வாங்குவாங்க. விறகு அடுப்பு தாங்க பயன்படுத்தி வர்றோம். இங்கே வர்றவங்க குறைந்த பணத்துல வயிறு நிறைய மனசு நெறைவா சாப்பிட்டுப் போகணும். எங்களுக்கு அது தாங்க ஆத்ம திருப்தி..இரண்டு ரூபாய் தோசை ஐடியா உங்களுக்கு எப்பிடி வந்தது? இதனை எவ்வளவு வருசமா போட்டுட்டு வர்றீங்க?.அஞ்சு வருசமா இரண்டு ரூபாய் தோசை போட்டு வர்றோம். 2௦17ல் தொடங்கி, இன்னைய வரைக்கும் நாங்க அந்த விலையையும் ஏத்தலை. தோசையோட அளவையும் அதன் திக்னசையும் குறைக்கவே இல்லை. இதை எப்போ எப்பிடி ஆரம்பிச்சோம்னு சொல்றேன்..அப்போ 2௦17ஆம் வருஷம். எங்க கடைக்கு எதிரே அங்காளம்மன் கோயில். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக்குறவங்க இந்தக் கோயில் உள்ளே பஜனை வைப்பாங்க. அதுல ஒரு கோஷ்டிங்க எங்கள்ட்ட நைட் டிபன் ஆர்டர் தந்திருந்தாங்க. எங்களுக்கு அப்போ ஒரு யோசனை. அவுங்கள்ட்ட தனியா பைசா வாங்காம அவுங்க எல்லார்க்கும் ஆளுக்கு ஒரு குட்டி தோசை சைசுக்கு குட்டி குட்டி தொசையாச் சுட்டுத் தரலாம்னு தோணிச்சு. சுமார் நூறு நூத்தைம்பது தோசை குட்டி குட்டியா அன்னைக்கி நைட்டு சுட்டுத் தந்தோம். அந்தக் குட்டி தோசைக்கு நாங்க யார்ட்டயும் பணம் வாங்கிக்கலை. அன்று எங்களோட சொந்த செலவாத் தந்தோம்.. மறுநாள் என்னாச்சுன்னா… டிபன் வாங்க கடைக்கு வந்தவங்க அந்தக் குட்டி குட்டி தோசை மாதிரியே சுட்டுக் கொடுங்க. அது ரொம்ப நால்லா இருக்குனு கேக்க ஆரம்பிச்சாங்க. அப்போ ஆரம்பிச்சது தான். அப்பவுலேந்து ஐந்து வருசமாகி இன்னைக்கு வரைக்கும் அந்தக் குட்டி தோசைக்கு இரண்டு ரூபாதான் வாங்குறோம். சாதாரணமா சாப்பிடுறவங்க ஐந்து தோசைக்கு மேலே சாப்பிட முடியாது. அவுங்களுக்கு பத்து ரூபாய்க்குள்ளே நைட் டிபன் செலவு அடங்கிடும். கொஞ்சம் கூடுதலா சாப்பிடுறவங்க பத்து தோசைகுள்ளே சாப்பிடலாம். அவுங்களுக்கும் இருபது ரூபாய்க்குள்ளே நைட் டிபன் முடிஞ்சிடும்..நாங்க தொடங்குனப்ப எல்லாம் இந்த இரண்டு ரூபாய் தோசை ஒரு நாளைக்கு இருநூறு முந்நூறு தான் போகும். ஒரு வருசமா வெளியே எல்லார்கிட்டேயும் தெரிஞ்சதுக்கு அப்புறமா இப்போ, ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் தோசை மட்டும் ஆயிரத்து இருநூறு, ஆயிரத்து முந்நூறு போய்ட்டு இருக்கு. வெளியூர்ல இருந்தெல்லாம் போன் போட்டுப் பேசி, இரண்டு ரூபாய் தோசை நூறு வேணும், இருநூறு வேணும், முந்நூறு வேணும்னு ஆர்டர் தந்துட்டு, நைட்டு வந்து வாங்கிட்டுப் போறாங்க. தெருவுல சின்ன புள்ளைங்க கையில ஒரு தட்டைத் தூக்கியாந்துட்டு ரெண்டு ரூபாய்க் காசைத் தந்துட்டு ஒரு தோசை வாங்கிட்டுப் போகும். அந்தச் சின்னப் பிள்ளைக்கு அந்த ஒரு தோசை போதும். வாழ்க்கையில அந்தச் சின்னக் குழந்தையோட பசிய ஒரு இரண்டு ரூபாய்க் காசுல நம்மளாலே தீர்த்து வைக்க முடியுதுனு நெனைக்கும் போது எங்களுக்கு கிடைக்கிற மன திருப்திக்கு எந்தவொரு எல்லையும் கிடையாது.