பகுதி – 9. 'எங்களாலும் பறக்க முடியும்'.-ஜி.எஸ்.எஸ்..'நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது. கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக, பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் அது அவசரமாக இறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த ஒரு பெண் பயணிக்கு இதற்குள் மாரடைப்பு உண்டாக அதே விமானத்தில் பயணம் செய்த ஒரு ஓய்வு பெற்ற நர்ஸ் அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது நான் விமான ஓட்டியாக இருந்த ஒரு ஜெட் விமானத்தில் எனக்கு நேர்ந்த அனுபவம் நினைவுக்கு வந்தது' என்று தொடங்குகிறார் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி பிறகு செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டியாகச் சேர்ந்த டாமி ஜோ ஷல்ட்ஸ் (Tammie Jo Shults)..'அது நான் விமானம் ஓட்டத் தொடங்கியிருந்த ஆரம்ப கட்டம். விமானம் வானில் சென்று கொண்டிருந்தது. பலவித சுவிட்சுகள் மற்றும் பொத்தான்கள் அடங்கிய இயக்கும் பகுதியின் நடுவே ஒரு ஆரஞ்சு வண்ண ஒளி வெளிப்பட்டது. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அருகிலிருந்த பைலட் பயிற்சியாளர் எனக்கு அவசரமாக ஜாடை காண்பித்தார். என் ஹெல்மெட்டின் மீதிருந்த காற்றுக் கவசத்தை என் மூக்கிலும் வாயிலும் மூடிக்கொண்டேன். என் சீட் பெல்ட்டை மேலும் இறுக்கிக் கொண்டேன். ரேடியோவை மேலும் துல்லியமாக இயங்க வைத்து விமானம் கீழே இறங்குவதற்கான செயல்முறைகளை செய்யத் தொடங்கினேன். ஒருவழியாக விமானத்தைப் பாதுகாப்பாக கீழே இறக்கினேன். அங்கு வந்து சேர்ந்த பொறியாளர்கள் விமானத்திலுள்ள எரிபொருளை உருகிய நிலையில் கண்டதாகவும் இன்னும் பத்து நொடிகள் தாமதமாக விமானத்தை இறக்கி இருந்தால் விமானம் வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் கூறினார்கள்'.பலரது உயிர்களை காப்பாற்றிய டாமி ஜோ ஷல்ட்ஸ் இந்த சம்பவத்தை மிகவும் அமைதியாகவும் பொறுப்பாகவும் கையாண்டதாக சக ஊழியர்கள் கூறுகிறார்கள்..'என் விமான ஓட்டும் பயிற்சியின்போது ஒரு சீனியர் அதிகாரி 'ஒரு பெண்ணாக இருந்து உன்னால் வெற்றிகரமாக விமானத்தை இயக்க முடியுமா?' என்று கேட்டார். 'முடியும் என்று நினைக்கிறேன்' என்று மெல்லிய குரலில் அன்று பதில் கூறினேன். இப்போது யோசித்துப் பார்த்தால் 'என்னால் நிச்சயம் முடியும்' என்று மிகவும் அழுத்தமான குரலில் கூறியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. தீப்பிடித்த ஜெட் விமானத்தை நான் பாதுகாப்பாக இறக்கிய சம்பவத்தை அவருக்கு யாராவது கூறியபோது தான் கேட்ட கேள்வி அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன்' என்றும் கூறுகிறார் டாமி ஜோ ஷல்ட்ஸ்..சில சமயம் வெற்றிக் கொண்டாட்டங்களில் மெல்லிய சோகமும் இழையோடுவதுண்டு..சில வருடங்களுக்கு முன் ஒரு விமான விபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒருவர் இறந்தார். காரணம் வெடித்துச் சிதறிய அதன் இஞ்சின் விமானத்தின் ஒரு கண்ணாடியை தாக்கி உள்ளே இருந்த அந்த பயணியை சிதைத்ததுதான்..ஆனால் அதே சமயம் அந்த விமானம் தரை இறங்கியபோது அதன் விமான ஓட்டியாக டாமி ஜோ ஷல்ட்ஸ் (இவரும் அதே பெயர் கொண்டவர்) கொண்டாடப்பட்டார். விமானத்தில் ஒரே ஒரு என்ஜின் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த விமானத்தை பாதுகாப்பாக கீழே இறக்கினார் அவர்..'ஒரு பயணி இறந்ததில் பெரும் வருத்தம்தான். என்றாலும் நான் விமானத்தைத் தரையிறக்கியதும் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தை நான் ரசித்தேன். காரணம் ஒரு பெண் விமான ஓட்டி ஒரு சாதனையை செய்தார் எனும்போது அது பல இளம் பெண்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதுதான்'..மற்ற பல தொழில்களில் இருப்பது போலவே விமான ஓட்டி பணியிலும் ஆபத்துகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் சுனிதா, சுமிதா. இவர்களில் மூத்தவர் சுனிதா இந்திய ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் ஆனார். தங்கையான சுமிதா விமான ஓட்டுனர். 12 வருடங்கள் இந்திய வான்படையின் ஸ்குவாட்ரன் லீடராகப் பணிபுரிந்து விட்டு பின்னர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்..ஒரு கட்டத்தில் இவர் ஹிமாலயன் ஹெலிசர்வீசஸ் என்ற திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் இருந்து ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு மக்களை அழைத்துச் செல்லும் விமான சர்வீஸ் அது. ஆனால் 2015 நவம்பர் 24 அன்று அவர் சென்ற விமானம் வானில் பறந்தபோது ஜம்முவில் வெடித்துச் சிதறியது. அதில் சுனிதாவும் உயிரிழந்தார்..(தொடர்ந்து பறப்பார்கள்).
பகுதி – 9. 'எங்களாலும் பறக்க முடியும்'.-ஜி.எஸ்.எஸ்..'நியூயார்க் நகரிலிருந்து 2018 ஏப்ரல் 17 அன்று கிளம்பிய ஒரு விமானம் அது. கிளம்பிய அரை மணி நேரத்தில் அதன் ஜெட் எஞ்சின்கள் செயலற்றுப் போக, பிலடெல்பியா சர்வதேச விமான நிலையத்தில் அது அவசரமாக இறக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த ஒரு பெண் பயணிக்கு இதற்குள் மாரடைப்பு உண்டாக அதே விமானத்தில் பயணம் செய்த ஒரு ஓய்வு பெற்ற நர்ஸ் அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது நான் விமான ஓட்டியாக இருந்த ஒரு ஜெட் விமானத்தில் எனக்கு நேர்ந்த அனுபவம் நினைவுக்கு வந்தது' என்று தொடங்குகிறார் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி பிறகு செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான ஓட்டியாகச் சேர்ந்த டாமி ஜோ ஷல்ட்ஸ் (Tammie Jo Shults)..'அது நான் விமானம் ஓட்டத் தொடங்கியிருந்த ஆரம்ப கட்டம். விமானம் வானில் சென்று கொண்டிருந்தது. பலவித சுவிட்சுகள் மற்றும் பொத்தான்கள் அடங்கிய இயக்கும் பகுதியின் நடுவே ஒரு ஆரஞ்சு வண்ண ஒளி வெளிப்பட்டது. நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். அருகிலிருந்த பைலட் பயிற்சியாளர் எனக்கு அவசரமாக ஜாடை காண்பித்தார். என் ஹெல்மெட்டின் மீதிருந்த காற்றுக் கவசத்தை என் மூக்கிலும் வாயிலும் மூடிக்கொண்டேன். என் சீட் பெல்ட்டை மேலும் இறுக்கிக் கொண்டேன். ரேடியோவை மேலும் துல்லியமாக இயங்க வைத்து விமானம் கீழே இறங்குவதற்கான செயல்முறைகளை செய்யத் தொடங்கினேன். ஒருவழியாக விமானத்தைப் பாதுகாப்பாக கீழே இறக்கினேன். அங்கு வந்து சேர்ந்த பொறியாளர்கள் விமானத்திலுள்ள எரிபொருளை உருகிய நிலையில் கண்டதாகவும் இன்னும் பத்து நொடிகள் தாமதமாக விமானத்தை இறக்கி இருந்தால் விமானம் வெடித்துச் சிதறி இருக்கும் என்றும் கூறினார்கள்'.பலரது உயிர்களை காப்பாற்றிய டாமி ஜோ ஷல்ட்ஸ் இந்த சம்பவத்தை மிகவும் அமைதியாகவும் பொறுப்பாகவும் கையாண்டதாக சக ஊழியர்கள் கூறுகிறார்கள்..'என் விமான ஓட்டும் பயிற்சியின்போது ஒரு சீனியர் அதிகாரி 'ஒரு பெண்ணாக இருந்து உன்னால் வெற்றிகரமாக விமானத்தை இயக்க முடியுமா?' என்று கேட்டார். 'முடியும் என்று நினைக்கிறேன்' என்று மெல்லிய குரலில் அன்று பதில் கூறினேன். இப்போது யோசித்துப் பார்த்தால் 'என்னால் நிச்சயம் முடியும்' என்று மிகவும் அழுத்தமான குரலில் கூறியிருக்க வேண்டும் எனத் தோன்றியது. தீப்பிடித்த ஜெட் விமானத்தை நான் பாதுகாப்பாக இறக்கிய சம்பவத்தை அவருக்கு யாராவது கூறியபோது தான் கேட்ட கேள்வி அவருக்கு நினைவுக்கு வந்திருக்கும் என எண்ணுகிறேன்' என்றும் கூறுகிறார் டாமி ஜோ ஷல்ட்ஸ்..சில சமயம் வெற்றிக் கொண்டாட்டங்களில் மெல்லிய சோகமும் இழையோடுவதுண்டு..சில வருடங்களுக்கு முன் ஒரு விமான விபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒருவர் இறந்தார். காரணம் வெடித்துச் சிதறிய அதன் இஞ்சின் விமானத்தின் ஒரு கண்ணாடியை தாக்கி உள்ளே இருந்த அந்த பயணியை சிதைத்ததுதான்..ஆனால் அதே சமயம் அந்த விமானம் தரை இறங்கியபோது அதன் விமான ஓட்டியாக டாமி ஜோ ஷல்ட்ஸ் (இவரும் அதே பெயர் கொண்டவர்) கொண்டாடப்பட்டார். விமானத்தில் ஒரே ஒரு என்ஜின் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த விமானத்தை பாதுகாப்பாக கீழே இறக்கினார் அவர்..'ஒரு பயணி இறந்ததில் பெரும் வருத்தம்தான். என்றாலும் நான் விமானத்தைத் தரையிறக்கியதும் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தை நான் ரசித்தேன். காரணம் ஒரு பெண் விமான ஓட்டி ஒரு சாதனையை செய்தார் எனும்போது அது பல இளம் பெண்களுக்கு உந்துதலாக இருக்கும் என்பதுதான்'..மற்ற பல தொழில்களில் இருப்பது போலவே விமான ஓட்டி பணியிலும் ஆபத்துகள் உண்டு என்பதை மறுக்க முடியாது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் சுனிதா, சுமிதா. இவர்களில் மூத்தவர் சுனிதா இந்திய ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் ஆனார். தங்கையான சுமிதா விமான ஓட்டுனர். 12 வருடங்கள் இந்திய வான்படையின் ஸ்குவாட்ரன் லீடராகப் பணிபுரிந்து விட்டு பின்னர் அரசுப் பணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார்..ஒரு கட்டத்தில் இவர் ஹிமாலயன் ஹெலிசர்வீசஸ் என்ற திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். டெல்லியில் இருந்து ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்துக்கு மக்களை அழைத்துச் செல்லும் விமான சர்வீஸ் அது. ஆனால் 2015 நவம்பர் 24 அன்று அவர் சென்ற விமானம் வானில் பறந்தபோது ஜம்முவில் வெடித்துச் சிதறியது. அதில் சுனிதாவும் உயிரிழந்தார்..(தொடர்ந்து பறப்பார்கள்).