– ஆர். மீனலதா, மும்பை.படங்கள்: பிரபுராம்.அன்பான அழைப்பு! மரியாதை! என்ன விஷயம்?.பிள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதி யெனக் கடவுள்களின் படங்கள் 10, சுவரில் மாட்டும் வண்ண ஓவியங்கள் 6, டின்னர் செட் 5, டிஸைனர் கண்ணாடி தம்ளர்கள் 4 டஜன், கிட்டத்தட்ட ஒரே விதமான மெலமைன் செட்கள் 3 டஜன், அலங்காரப் பொருட்கள், கேஸரோல்கள், கடிகாரங்கள் இத்யாதி! இத்யாதி!.எங்கே? மிகவும் நெருங்கிய தோழியின் புதுமனைப் புகுவிழா சமயம் வந்த பரிசுப் பொருட்கள்தான் மேலே கூறியவைகள்...'பரிசுகளைத் தவிக்கவும்; வாழ்த்துகளும் ஆசிகளும் போதும்' என்று அன்புடன் கூறி அழைத்திருந்தாலும், வருகிறவர்கள் வலுக்கட்டாயமாக பரிசு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள்..2 பெட் ரூம்கள், ஹால், கிச்சன் என்று இருக்கும் வீட்டில் தோழியின் குடும்பத்தினர் 5 பேர்கள். ஏற்கெனவே, புது வீட்டிற்காக அவர்கள் விருப்பப்படி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். இப்போது வந்தவைகளை எங்கே வைப்பதென திண்டாட்டமாக உள்ளது..ஆண்டு நிறைவா? காது குத்தலா? திருமணமா? உற்றமும், சுற்றமும் வந்து வாழ்த்தினால் போதுமென்றாலும், வருபவர்களுக்கு மனசு கேட்பதில்லை..நவராத்திரி சமயம், சிறு – சிறு பரிசுப் பொருட்கள்? ரவிக்கைத் துண்டுகள் கைமாறிச் செல்வதைப் போல, விழாவிற்கு வருகின்ற பரிசுகளும், வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு மாறி மாறி பிறரிடம் சென்று விடுகின்றன. அப்போதுகூட சுவர் ஓவியமா? டின்னர் செட்டா? எதைக் கொடுக்கலாமென மனதிற்குள் ஆயிரத்தெட்டு எண்ணங்கள் ஓடும். மனசே வராது..சிலவற்றைக் கொடுத்தாலும், மீதி இருப்பவை கொடுக்கவும் மனசில்லாமல், உபயோகப்படுத்தவும் முடியாமல் பரண் மற்றும் அலமாரிகளுக்குள் புகுந்துவிடும். தேதவப்படுகையில் இருப்பதை மறந்து மறந்துவிடுவோம். அல்லது தேடி, கிடைக்காமல், திண்டாடி, கடைசியில் கடைக்குச் சென்று புதிதாக வாங்க வைக்கும்..இதில் ஒரு தமாஷ் என்னவென்றால் உபயோகமற்ற பொருளை ஜிகினா காகிதத்தினுள் அழகாக பேக் செய்து தன் பெயர் எழுதாமல், விழாவிற்குச் சென்று பரிசளித்து, விருந்தை சாப்பிட்டும் சிலர் வருவதுண்டு. பிரித்துப் பார்க்கையில், ஓட்டைக் கடிகாரம், லேசாக கீறல் விழுந்த டிசைனர் தட்டு போன்றவைகள் இருப்பதைக் கண்டு, கொடுத்தவர்களைத் திட்டுவார்கள். தேவையா இது?.மிகவும் தெரிந்த ஒருவரிடம் பேசுகையில் அவர், "என் பெண் கல்யாணம் வரவிருக்கிறது. நுழைவு வாயிலில் உண்டியல்கள் வைத்து, 'இதனுள் ஒரு ரூபாய் மட்டும் பரிசாக போட்டால் போதும். சித்தி விநாயகர் கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படும். புண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும். மணமக்களுக்கு ஆசிகள் ஒன்றே போதும்' என உண்டியல் அருகே எழுதி வைக்கப் போகிறேன்" என்று கூறியதும்,.நல்ல விஷயமாக இருக்கிறதே என்று பாராட்டினேன்..கல்யாண தினத்தன்று அங்கு சென்ற சமயம், அவர் கூறிய மாதிரியே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்… அவரவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை என்ன செய்வதெனத் தெரியாமல், உண்டியலருகே வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தையும் உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தனர்.."தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்.".மிகவும் தெரிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கையில் உரிமையுடன் அவர்கள் தேவைகளை கேட்டுத் தெரிந்து பொருட்களாகவோ, பணமாகவோ பரிசாக கொடுத்து விடுவது சிறந்ததாகும்..அவர்களுக்கும் உதவியாக இருக்கும். எதுவும் தேவைப்படவில்லையெனில், வற்புறுத்திக் கொடுப்பதை தவிர்க்கலாம்..கிஃப்ட் கூப்பன் கூட தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். ₹ 1,000/-, ₹ 2,000/-,₹ 5,000/-க்கு கிஃப்ட் கூப்பனை பரிசளிக்க, சிலர் அதை எங்கோயோ வைத்துவிட்டு மறந்து போவார்கள். குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு, கண்ணில்பட, உபயோகமில்லாமல் போகும்..மேலும், கிஃப்ட் கூப்பன் உபயோகித்து தேவைப்படும் பொருட்கள் வாங்குகையில் மேலே அதிகமாக பணம் போட வேண்டி வரும்..சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.."பரிசுகள் வேண்டாம்" என்று கூற முடியாத நிகழ்வு ஒன்றும் உள்ளது. அது என்ன?.குழந்தைகள் பிறந்த நாள் அன்று பார்ட்டி வைக்கிறார்கள். வருகின்ற குழந்தைகளுடன் சில பெற்றோர்களும் வருவதுண்டு. அவர்கள் கிஃப்ட் கொடுக்க, இவர்கள் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க, லங்ச் பாக்ஸ், ஸ்கூல் பேக், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், பென்சில் பாக்ஸ் எனக் குவியும்..வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ், டீ, காஃபி என அமர்க்களப்படும்..அனைவரும் சென்றபின், வந்த பொருட்களை எடுத்து வைப்பதும், வீட்டை க்ளீன் செய்வதும் பெரிய காரியம்..தவிர, பள்ளிக்கூடத்திலுள்ள ஆசிரியைகள், கூடப் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கும் ஸ்வீட் + கிஃப்ட் கொடுக்க வேண்டும்.."சுத்தி – சுத்தி வந்தீக!" கதைதான்..பார்ட்டி வைக்க வேண்டாமென நினைத்தாலும் பிறர் வீடுகளில் பார்ட்டிக்கு அழைக்கையில், குழந்தை மனது சங்கடப்படுமென்கிற எண்ணத்தில் நிறுத்த இயலாமல் தொடர வேண்டியதாக உள்ளது..ஒரு விதத்தில் இது மனதிற்க மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளதெனினும், இந்த வருட பிறந்தநாள் பார்ட்டியின்போது என்ன கிஃப்ட்? என்ன மெனு? என பெற்றோர்கள் யோசனை செய்வது இருக்கிறதே – அப்பப்பா!.கொஞ்சம் டென்ஷன்தான்..மற்றைய விசேஷங்கள் மாதிரி "நோ கிஃப்ட்" என்று இது போன்றத் தருணங்களில் கூறுவது சங்கடமான காரியம். ஏனெனனில், குழந்தையின் எதிர்பார்ப்பு இதில் அடங்கியுள்ளது. வருடா வருடம் தொடரும் கதை இது. பார்ட்டிக்கு இரு மாதங்களுக்கு முன்பே ப்ளான் ஆரம்பமாகிவிடும்..மக்களே!."நோ கிஃப்ட் ப்ளீஸ்!" என அழைப்பு கிடைத்தால், உள்ளத்தில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், மகிழ்வுடன் சென்று மனதார வாழ்த்தி, வயிறார சாப்பிட்டு வருவதே அன்பான அழைப்பிற்கு அளிக்கும் மரியாதை.சரிதானே?
– ஆர். மீனலதா, மும்பை.படங்கள்: பிரபுராம்.அன்பான அழைப்பு! மரியாதை! என்ன விஷயம்?.பிள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதி யெனக் கடவுள்களின் படங்கள் 10, சுவரில் மாட்டும் வண்ண ஓவியங்கள் 6, டின்னர் செட் 5, டிஸைனர் கண்ணாடி தம்ளர்கள் 4 டஜன், கிட்டத்தட்ட ஒரே விதமான மெலமைன் செட்கள் 3 டஜன், அலங்காரப் பொருட்கள், கேஸரோல்கள், கடிகாரங்கள் இத்யாதி! இத்யாதி!.எங்கே? மிகவும் நெருங்கிய தோழியின் புதுமனைப் புகுவிழா சமயம் வந்த பரிசுப் பொருட்கள்தான் மேலே கூறியவைகள்...'பரிசுகளைத் தவிக்கவும்; வாழ்த்துகளும் ஆசிகளும் போதும்' என்று அன்புடன் கூறி அழைத்திருந்தாலும், வருகிறவர்கள் வலுக்கட்டாயமாக பரிசு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள்..2 பெட் ரூம்கள், ஹால், கிச்சன் என்று இருக்கும் வீட்டில் தோழியின் குடும்பத்தினர் 5 பேர்கள். ஏற்கெனவே, புது வீட்டிற்காக அவர்கள் விருப்பப்படி பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். இப்போது வந்தவைகளை எங்கே வைப்பதென திண்டாட்டமாக உள்ளது..ஆண்டு நிறைவா? காது குத்தலா? திருமணமா? உற்றமும், சுற்றமும் வந்து வாழ்த்தினால் போதுமென்றாலும், வருபவர்களுக்கு மனசு கேட்பதில்லை..நவராத்திரி சமயம், சிறு – சிறு பரிசுப் பொருட்கள்? ரவிக்கைத் துண்டுகள் கைமாறிச் செல்வதைப் போல, விழாவிற்கு வருகின்ற பரிசுகளும், வண்ணக் காகிதத்தில் சுற்றப்பட்டு மாறி மாறி பிறரிடம் சென்று விடுகின்றன. அப்போதுகூட சுவர் ஓவியமா? டின்னர் செட்டா? எதைக் கொடுக்கலாமென மனதிற்குள் ஆயிரத்தெட்டு எண்ணங்கள் ஓடும். மனசே வராது..சிலவற்றைக் கொடுத்தாலும், மீதி இருப்பவை கொடுக்கவும் மனசில்லாமல், உபயோகப்படுத்தவும் முடியாமல் பரண் மற்றும் அலமாரிகளுக்குள் புகுந்துவிடும். தேதவப்படுகையில் இருப்பதை மறந்து மறந்துவிடுவோம். அல்லது தேடி, கிடைக்காமல், திண்டாடி, கடைசியில் கடைக்குச் சென்று புதிதாக வாங்க வைக்கும்..இதில் ஒரு தமாஷ் என்னவென்றால் உபயோகமற்ற பொருளை ஜிகினா காகிதத்தினுள் அழகாக பேக் செய்து தன் பெயர் எழுதாமல், விழாவிற்குச் சென்று பரிசளித்து, விருந்தை சாப்பிட்டும் சிலர் வருவதுண்டு. பிரித்துப் பார்க்கையில், ஓட்டைக் கடிகாரம், லேசாக கீறல் விழுந்த டிசைனர் தட்டு போன்றவைகள் இருப்பதைக் கண்டு, கொடுத்தவர்களைத் திட்டுவார்கள். தேவையா இது?.மிகவும் தெரிந்த ஒருவரிடம் பேசுகையில் அவர், "என் பெண் கல்யாணம் வரவிருக்கிறது. நுழைவு வாயிலில் உண்டியல்கள் வைத்து, 'இதனுள் ஒரு ரூபாய் மட்டும் பரிசாக போட்டால் போதும். சித்தி விநாயகர் கோயிலுக்கு காணிக்கையாகச் செலுத்தப்படும். புண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும். மணமக்களுக்கு ஆசிகள் ஒன்றே போதும்' என உண்டியல் அருகே எழுதி வைக்கப் போகிறேன்" என்று கூறியதும்,.நல்ல விஷயமாக இருக்கிறதே என்று பாராட்டினேன்..கல்யாண தினத்தன்று அங்கு சென்ற சமயம், அவர் கூறிய மாதிரியே ஏற்பாடு செய்திருந்தார். ஆனால்… அவரவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை என்ன செய்வதெனத் தெரியாமல், உண்டியலருகே வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தையும் உண்டியலில் போட்டுக் கொண்டிருந்தனர்.."தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்.".மிகவும் தெரிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைக்கையில் உரிமையுடன் அவர்கள் தேவைகளை கேட்டுத் தெரிந்து பொருட்களாகவோ, பணமாகவோ பரிசாக கொடுத்து விடுவது சிறந்ததாகும்..அவர்களுக்கும் உதவியாக இருக்கும். எதுவும் தேவைப்படவில்லையெனில், வற்புறுத்திக் கொடுப்பதை தவிர்க்கலாம்..கிஃப்ட் கூப்பன் கூட தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். ₹ 1,000/-, ₹ 2,000/-,₹ 5,000/-க்கு கிஃப்ட் கூப்பனை பரிசளிக்க, சிலர் அதை எங்கோயோ வைத்துவிட்டு மறந்து போவார்கள். குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு, கண்ணில்பட, உபயோகமில்லாமல் போகும்..மேலும், கிஃப்ட் கூப்பன் உபயோகித்து தேவைப்படும் பொருட்கள் வாங்குகையில் மேலே அதிகமாக பணம் போட வேண்டி வரும்..சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம் கதைதான்.."பரிசுகள் வேண்டாம்" என்று கூற முடியாத நிகழ்வு ஒன்றும் உள்ளது. அது என்ன?.குழந்தைகள் பிறந்த நாள் அன்று பார்ட்டி வைக்கிறார்கள். வருகின்ற குழந்தைகளுடன் சில பெற்றோர்களும் வருவதுண்டு. அவர்கள் கிஃப்ட் கொடுக்க, இவர்கள் ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க, லங்ச் பாக்ஸ், ஸ்கூல் பேக், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள், பென்சில் பாக்ஸ் எனக் குவியும்..வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ், கூல்டிரிங்க்ஸ், டீ, காஃபி என அமர்க்களப்படும்..அனைவரும் சென்றபின், வந்த பொருட்களை எடுத்து வைப்பதும், வீட்டை க்ளீன் செய்வதும் பெரிய காரியம்..தவிர, பள்ளிக்கூடத்திலுள்ள ஆசிரியைகள், கூடப் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கும் ஸ்வீட் + கிஃப்ட் கொடுக்க வேண்டும்.."சுத்தி – சுத்தி வந்தீக!" கதைதான்..பார்ட்டி வைக்க வேண்டாமென நினைத்தாலும் பிறர் வீடுகளில் பார்ட்டிக்கு அழைக்கையில், குழந்தை மனது சங்கடப்படுமென்கிற எண்ணத்தில் நிறுத்த இயலாமல் தொடர வேண்டியதாக உள்ளது..ஒரு விதத்தில் இது மனதிற்க மகிழ்வாகவும் நிறைவாகவும் உள்ளதெனினும், இந்த வருட பிறந்தநாள் பார்ட்டியின்போது என்ன கிஃப்ட்? என்ன மெனு? என பெற்றோர்கள் யோசனை செய்வது இருக்கிறதே – அப்பப்பா!.கொஞ்சம் டென்ஷன்தான்..மற்றைய விசேஷங்கள் மாதிரி "நோ கிஃப்ட்" என்று இது போன்றத் தருணங்களில் கூறுவது சங்கடமான காரியம். ஏனெனனில், குழந்தையின் எதிர்பார்ப்பு இதில் அடங்கியுள்ளது. வருடா வருடம் தொடரும் கதை இது. பார்ட்டிக்கு இரு மாதங்களுக்கு முன்பே ப்ளான் ஆரம்பமாகிவிடும்..மக்களே!."நோ கிஃப்ட் ப்ளீஸ்!" என அழைப்பு கிடைத்தால், உள்ளத்தில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், மகிழ்வுடன் சென்று மனதார வாழ்த்தி, வயிறார சாப்பிட்டு வருவதே அன்பான அழைப்பிற்கு அளிக்கும் மரியாதை.சரிதானே?