மங்கையர் மலரில் வாசகர்களின் FB பகிர்வு பதிவு! .மிகவும் சரி! நண்பர்களிடம் சலுகை எடுத்துக்கொண்டு, அடிக்கடி கடன் கேட்கும்போது, அவர்களுக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படும்..ஆரம்பத்தில் ஓரிரு முறை கொடுப்பார்கள்.அடுத்தடுத்த முறை கேட்டால் கொடுப்பதா? வேண்டாமா? என்ற எண்ணம் தோன்றும்..மேலும் அந்த நேரத்தில் அவர்களிடமும் கையில் பணம் இல்லாமல் இருந்து, இப்பொழுது கொடுக்க இயலாது என்று சொல்ல நேரும்போது, இருவர் இடையிலும், ஒரு திரை விழுந்து, நட்பையும் அன்பையும் முறித்துவிடும்.– லலிதா பாலா .கடன் அன்பை முறிக்கும் என்பது சரியல்ல. அப்படி என்றால் வங்கிகள் ஏன் பலவித கடன்கள் தருகின்றன? தனியார் நிறுவனங்களும் வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவைகளை தருகின்றனவே! நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராவிட்டால் அந்த அன்பு முறிந்து போகும் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதோ என்னவோ? பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள், வாங்கிய கடனை தாமதமானாலும் திருப்பித் தந்து விடுவார்கள்.– சுதா திருநாராயணன்.ரொம்ப ரொம்ப சரி. சுமார் இருபத்தைந்து ஆண்டு கால நட்பு இக்கடனால் முறிந்தது. அதுவும் அவருக்காக வாங்கினாலும் பரவாயில்லை, அவருடைய நண்பர் மிகவும் சிரமப்படுகிறார் பணம் திரும்ப வருவதற்கு நான் கேரண்டி என்றெல்லாம் கூறியதை நம்பி கொடுத்துவிட்டு, என்னுடைய அதிகப்படியான வற்புறுத்தல் காரணமாக பணம் திரும்பி வந்தது. ஆனால் அதற்கு நான் கொடுத்த விலை என்னுடைய உண்மையான நட்பு.– அன்பு பாலா .கடன் அல்ல பணம்தான் அன்பை, பாசத்தை, உறவை முறிக்கும்.– சித்ரா குமார்.கடன் அன்பை முறிக்கும் என்பது நூற்றுக்கு நூறு சாிதான். இரக்கம் கொண்டு கொடுக்கும் கடனால், இரண்டு பக்கமும் விரோதமே பலன். கடன் வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறுதான், கொடுத்தது கேட்டால் அடுத்தது பகைதான்! ஆரம்பத்திலேயே இல்லை என்று சொல்லிவிட்டால்? அதனால் ஏற்படும் வருத்தம் அன்றோடு முடிந்துவிடும். கடனைக் கொடுத்துப்பாா் விரோதத்தை வளா்த்துப்பாா் என்பது புதுமொழி .– ச.சிவசங்காி சரவணன்.கடன் உறவையே முறித்தது. சொந்தத்தில் தம்பியின் படிப்புக்காக அண்ணன் கடன் கொடுக்க, கடன் வாங்கிய தம்பியினால் வெளிநாட்டு படிப்பை தொடர முடியாமல், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, பெரும் சண்டை வந்து அவர்களின் உறவு முறிந்தது. எனவே யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.– உஷா சங்கரன்.கடன் அன்பை முறிக்கும் என்பது மிகச் சரியானதுதான். நாம் மிக நெருக்கமானவர்களிடம் கேட்கும்போது அவர்கள் மனதில் நம்மைப் பற்றித் தாழ்வான அபிப்பிராயம் ஏற்படும். நாம் கடன் வாங்கியதைக் கொடுக்கா விட்டாலும் சரி, நாம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டாலும் சரி, உறவு முறிந்து போய்விடும்.– ஆர். பிருந்தா.கடன் அன்பை முறிக்கும் உண்மையான வாக்கியம்… நட்பு ரீதியாக வாங்கும்போது சட்டென திரும்பி கேட்க முடியாது. தரலை அப்படிங்கறப்போ அது ஒரு ஓரமாக மனசை உறுத்தும்… அடுத்த முறை கேட்கும்போது நிச்சயம் நட்பை பாதிக்கும். அதே நேரத்தில் சில நேரம் பணம் இல்லாத நேரத்தில் கேட்டாங்கன்னா… இல்லைன்னு சொல்லும் போது அதுவும் பிரச்சனைதான். ஆரோக்கியமான நட்புக்கு கடன் வாங்குவது கூடாது. அதே நேரத்தில் சரியான நேரத்தில் கொடுத்து வாங்கினா எப்பவுமே பிரச்னை வராது. பணம் விஷயத்தில் நேர்மையாக நடந்துக்கனும்.– கவி செளமி.கடன் அன்பை முறிக்கும் என்பது எப்பொழுதும் சரியல்ல. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வது மனித இயல்பு. அடுத்தவருக்கு தேவைப்படும் சமயத்தில் செய்த உதவி எத்தனை சிறியதாக இருப்பினும் அது மிக உயர்ந்தது. யாரோ, ஒரு சிலர் ஏமாற்றி விடுவதால் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் தவறாக எடைபோடக்கூடாது. நாடுகளிடையே கொடுக்கல், வாங்கல் இருப்பதால் நல்லுறவு வளரும். கடன் கொடுத்தல் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல. மற்ற பொருளையும் கடன் கொடுப்பதுண்டு.என் கருத்துப்படி பணம் வெறும் காகிதம்தான். நம்மிடம் உள்ள அதிகப்பணம் அடுத்தவருக்கு பயன்படும்போதுதான் அதற்கு மதிப்பும் பெருமையும். ஆனால் கடன் வாங்குபவர் நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.– ராதிகா ரவீந்திரன் .கடன் வாங்கும்போது இருக்கும் பணிவு மற்றும் அடக்கம், திரும்ப கொடுக்கும்போது மறந்து விடும், அதற்கு பெயர் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை என்றாகும். இதனால் அவர்கள் முகத்தில் முழிக்க முடியாதபடி நாம் தள்ளப்படுவோம். வலியவந்து உதவி செய்துவிட்டு பிறகு முதல் எதிரியாகி விடுவோம். இதில் அன்பு மட்டும் அல்ல சமயத்தில் எலும்பு கூட முறியும்.– ஸ்ரீவித்யா பிரசாத்.கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மையான வாசகம். எனக்கு தெரிந்த ஒருவருக்கு அவசரமாக பணம் வேண்டும் என்று 500 ரூபாய் கொடுத்தேன். முதல் முறை சரியாக திருப்பிக் கொடுத்து விட்டார். அடுத்த முறை5000 ரூபாய் கேட்டார். முதல்முறைதான் சரியாக திருப்பி கொடுத்து விட்டாரே இப்போதும் கொடுத்து விடுவார் என்று நினைத்து அவரிடம் கொடுத்தேன். அதற்கு பிறகு அவரை நான் வாழ்க்கையில் பார்க்கவே இல்லை. இப்படி ஏமாற்றும் விதமாக இருப்பதால் கடன் நட்பு, உறவு எல்லாவற்றையும் பிரித்துவிடும். முடிந்த வரை கடன் கொடுக்காமலும் வாங்காமலும் இருப்பது சிறந்தது.-உஷா முத்துராமன்.கடன் அன்பை முறிக்கும் என்பதோடு, அந்தக் கடனை வாங்கியவர்கள் அதை கொடுப்பது வரை மனநிம்மதி இல்லாமல் ஒருவித பயத்துடன் புலம்புவார்கள். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கிடைக்கும் வரை அவன் தருவானா என்ற சந்தேகத்திலே மனநிம்மதியை இழந்து விடுவார்கள். அதனால் கடன் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பதுதான் சரி எனப்படுகிறது.– கலைமதி சிவகுரு .எனக்கு இதில் முழுமையான உடன்பாடு இல்லை. கடன் கேட்பதின் அவசியம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல, கடனுக்கான காரணத்தை நன்கு விசாரித்து கொடுக்கலாம். அது உறவையும், நட்பையும் வளர்க்கும். இதுவரைக்கும் எதாவது மனக் கசப்பு இருந்தால் கூட நீங்கிவிடும். உறவாக இருந்தாலும், நண்பர்கள் ஆனாலும் வேண்டும் என்று ஏமாற்ற மாட்டார்கள். இல்லை என்ற போது உதவி செய்வதில் தவறு இல்லை.– உஷா பாஸ்கர் .உறவுகளுக்குள் கடன் அன்பை முறிக்கும் என்பதே என் அனுபவம். தந்தால் அது திரும்பிவரும் என எதிர்பார்க்காமல் இருக்கும்வரை பிரச்சனை வராது. கேட்டால் பிரச்சனைதான்.– சக்தி அருளானந்தம் சக்தி.கடன் அன்பை முறிக்கும் என்பது அனுபவ உண்மை. ஒரு அவசரத்தில் கடனை வாங்கும்போது உருகி உருகி நன்றி சொல்வார்கள். ஆனால் அந்த நன்றி கடனை ஏனோ தீர்க்க வருவதில்லை. கடனை கொடுத்தவர் திருப்பி கேட்டால் ஏனோ கோபம் வருகிறது. தன்மேல் நம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது. பத்து நாளில் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று வாங்கும்போது சொல்பவர் மாதம் மூன்றாகிலும் கொடுக்க மாட்டார். கொடுத்தவருக்கும் பணமுடை ஏற்படலாம் என்று எண்ண மாட்டார். ஆக திரும்பி கொடுக்கும்போது வாங்கினபோது இருந்த நன்றி உணர்ச்சி மறைந்து கடன் கொடுத்தவர்மேல் மனதில் கோபம் வரும். இதனால் இருவரிடையே இருந்த அன்பு மறைந்துதான் போகும்.– ராஜலக்ஷ்மி கெளரிசங்கர்.கடன் கண்டிப்பாக அன்பை முறிக்கும். கிட்டப் போனால் முட்டப் பகை. அவசரத் தேவைக்கு வாங்கும் போது இனிக்கும். கொடுக்கும்போது அதுவும் வட்டியுடன் சேர்த்துக் கொடுக்கும்போது கசக்கும். நண்பன்தானே மெதுவாக கொடுக்கலாம் என்கின்ற எண்ணம் வந்து விடும். கடன் கொடுத்தவருக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு, பணத்தை திருப்பிக்கேட்கும்போதுதான், அவர்கள் உறவினர்கள் ஆனாலும், நண்பர்கள் ஆனாலும், அவர்களுக்குள் விரிசல் ஆரம்பிக்கும். இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு, நீ சௌக்கியமா, நான் சௌக்கியம், என்று இருப்பதுதான் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் நல்லது.– ஜெகதாம்பாள்.உறவுகளுக்கிடையே கடன் கொடுப்பது, வாங்குவது அன்பை முறிக்கும். பணம் கொடுக்கும்போது மகிழ்ச்சியோடு வாங்குபவர்கள் கொடுக்கும்போது ஏதோ நாம்தான் வாங்கியது போல அலட்சியமாக பணத்தை கொடுப்பர். சொந்த அனுபவமாக தோழி அவசரத் தேவை என வாங்கியவள் சில வருடங்கள் ஆகியும் கொடுக்காததால் அதைக் கொண்டு வீட்டில் சண்டை, சச்சரவு. அண்மையில் பணத்தை கொடுக்க வந்தவர் நீங்கள் பணத்தை திரும்ப தரவேண்டாம் என சொல்வீர்கள் என நினைத்தேன் என்றதோடு எல்லோருக்கும் அப்படி சொல்ற மனசு இருக்காதுதான் என்று சொன்னதுதான் வேதனையின் உச்சம். அதிலிருந்து கடன் அன்பை முறிக்கும் என்று புரிந்துகொண்டதோடு உதவி எனில் பொருளாக செய்து விடுகிறேன்.– மகாலக்ஷ்மி சுப்பிரமணியன் .சரியே. நண்பர்கள் என்றாலும், ஏன் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்றாலும் கூட கடன் என்று வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். உரிமை எடுத்துக் கொண்டு கொடுக்கா விட்டால் என்ன தவறு என்று நாமாகவே தீர்மானித்துக் கொண்டு நாணயம் தவறுவது நிச்சயம் நட்பை, உறவை முறிக்கும்!– லலிதா சண்முகம்.கடன் அன்பை முறிக்கும் என்பது மிகச் சரியானது. மருத்துவ எமர்ஜென்சி தவிர வேறு எதற்கும் கடன் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். சிறிய தொகை வராவிட்டால் பரவாயில்லை என்றால் கொடுப்பேன். அதுவும் மிக தகுதியானவர்களுக்கு மட்டுமே.– தி. வள்ளி.முற்றிலும் சரி. நாம் கொடுக்கும் பணத்தை கையில் வாங்கும் வரைதான் நன்றி இருக்கும். அதன்பின், அந்த நன்றியையும் சிரிப்பையும் காண முடியாது. திரும்பிக் கேட்டால், அவர்களின் பணத்தை நாம் கேட்பது போல் பார்ப்பார்கள். ஓடி ஒளிவதும், வீட்டில் இல்லை என்று ஏமாற்றுவதும், அப்பப்பா — அந்த அலப்பரையை தாங்க முடியாது.– ப்ரீதா ரங்கசாமி .கடன் அன்பை மட்டும் அல்ல உறவையும் முறிக்கும். கேட்கும்போது தயங்கித் தயங்கி கேட்பவர்கள், வாங்கிக் கொள்ளும்போது சிரித்த முகத்துடன் எண்ணி ஒரே மாதத்தில் தந்துவிடுவேன் என்று சத்தியம் பண்ணாத குறையாக வாங்கிக்கொண்டு போவார்கள். மாதங்கள் உருண்டோடினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நம்மிடமே அடுத்தடுத்து கேட்பதும், திரும்பவும் தரவில்லை என்றால் போகும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டா போகப் போகிறாய். இருந்தாலும் உனக்கு கொடுக்க மனசே வர மாட்டேன் என்கிறது என்று அங்கலாய்க்கும் உறவினர்கள் நண்பர்கள் தான் அதிகம். கொடுத்த கடனை திரும்பக் கேட்டால் பகை தான் மிஞ்சும். கடன் கொடுப்பது அன்பை மட்டும் அல்ல நம் தர்ம சிந்தனையையும் முறிக்கும்.– கிருஷ்ணவேணி.என் பார்வையில் கடன் அன்பை முறிக்கும். கொடுத்த கடனை சூழ்நிலை கருதி கேட்கும்பொழுது கொடுக்க முடியாத சூழலில் கடன் பெற்றவர் இருந்தால் சிறு மனக்கசப்பு ஏற்படும். அதுவே விரிசலாகி அன்பை முறித்துவிடும்.– பார்வதி முத்தமிழ் .தொழில் செய்பவர்களுக்கு அல்லது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்குக் கொடுக்கலாம். ஏனெனில் உழைப்பு மிக்கவர்களே தொழில் தொடங்குவார்கள். ஒரு உழைப்பாளி இன்னொரு உழைப்பாளியை ஏமாற்ற மாட்டார்.– பரிமளா வெங்கடேஷன் ராவ்.சரியான பழமொழிதான், என் தோழிக்கு பணம் கொடுத்து விட்டுட்டு என் கணவர் கொடுத்த பணத்தை வாங்கியாச்சா, கேட்டு வாங்கு என்று சொல்லும்பொழுது தோழியிடம் கேட்க தயக்கமாக இருக்கும். நான் கேட்கவும் மாட்டேன். இதனால் அவள் மீது சிறிது வருத்தம் இருந்தது உண்டு. காரணம், தினமும் ஏதாவது காரணம் சொல்லி என் கணவரை நான் சமாளிக்க வேண்டி இருந்தது.எதற்கு இந்தக் கவலை, சமாளிப்பு, வருத்தம் இதற்கு பணம் கொடுக்காமலே இருக்கலாமோ என்றுதான் தோன்றும் பலமுறை..– த. கவிதா தாமரைச்செல்வன்
மங்கையர் மலரில் வாசகர்களின் FB பகிர்வு பதிவு! .மிகவும் சரி! நண்பர்களிடம் சலுகை எடுத்துக்கொண்டு, அடிக்கடி கடன் கேட்கும்போது, அவர்களுக்கு ஒரு தர்மசங்கடம் ஏற்படும்..ஆரம்பத்தில் ஓரிரு முறை கொடுப்பார்கள்.அடுத்தடுத்த முறை கேட்டால் கொடுப்பதா? வேண்டாமா? என்ற எண்ணம் தோன்றும்..மேலும் அந்த நேரத்தில் அவர்களிடமும் கையில் பணம் இல்லாமல் இருந்து, இப்பொழுது கொடுக்க இயலாது என்று சொல்ல நேரும்போது, இருவர் இடையிலும், ஒரு திரை விழுந்து, நட்பையும் அன்பையும் முறித்துவிடும்.– லலிதா பாலா .கடன் அன்பை முறிக்கும் என்பது சரியல்ல. அப்படி என்றால் வங்கிகள் ஏன் பலவித கடன்கள் தருகின்றன? தனியார் நிறுவனங்களும் வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்றவைகளை தருகின்றனவே! நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கடன் வாங்கிவிட்டு திருப்பித் தராவிட்டால் அந்த அன்பு முறிந்து போகும் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டதோ என்னவோ? பொறுப்புணர்ச்சி உள்ளவர்கள், வாங்கிய கடனை தாமதமானாலும் திருப்பித் தந்து விடுவார்கள்.– சுதா திருநாராயணன்.ரொம்ப ரொம்ப சரி. சுமார் இருபத்தைந்து ஆண்டு கால நட்பு இக்கடனால் முறிந்தது. அதுவும் அவருக்காக வாங்கினாலும் பரவாயில்லை, அவருடைய நண்பர் மிகவும் சிரமப்படுகிறார் பணம் திரும்ப வருவதற்கு நான் கேரண்டி என்றெல்லாம் கூறியதை நம்பி கொடுத்துவிட்டு, என்னுடைய அதிகப்படியான வற்புறுத்தல் காரணமாக பணம் திரும்பி வந்தது. ஆனால் அதற்கு நான் கொடுத்த விலை என்னுடைய உண்மையான நட்பு.– அன்பு பாலா .கடன் அல்ல பணம்தான் அன்பை, பாசத்தை, உறவை முறிக்கும்.– சித்ரா குமார்.கடன் அன்பை முறிக்கும் என்பது நூற்றுக்கு நூறு சாிதான். இரக்கம் கொண்டு கொடுக்கும் கடனால், இரண்டு பக்கமும் விரோதமே பலன். கடன் வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறுதான், கொடுத்தது கேட்டால் அடுத்தது பகைதான்! ஆரம்பத்திலேயே இல்லை என்று சொல்லிவிட்டால்? அதனால் ஏற்படும் வருத்தம் அன்றோடு முடிந்துவிடும். கடனைக் கொடுத்துப்பாா் விரோதத்தை வளா்த்துப்பாா் என்பது புதுமொழி .– ச.சிவசங்காி சரவணன்.கடன் உறவையே முறித்தது. சொந்தத்தில் தம்பியின் படிப்புக்காக அண்ணன் கடன் கொடுக்க, கடன் வாங்கிய தம்பியினால் வெளிநாட்டு படிப்பை தொடர முடியாமல், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்க, பெரும் சண்டை வந்து அவர்களின் உறவு முறிந்தது. எனவே யாரிடமும் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.– உஷா சங்கரன்.கடன் அன்பை முறிக்கும் என்பது மிகச் சரியானதுதான். நாம் மிக நெருக்கமானவர்களிடம் கேட்கும்போது அவர்கள் மனதில் நம்மைப் பற்றித் தாழ்வான அபிப்பிராயம் ஏற்படும். நாம் கடன் வாங்கியதைக் கொடுக்கா விட்டாலும் சரி, நாம் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டாலும் சரி, உறவு முறிந்து போய்விடும்.– ஆர். பிருந்தா.கடன் அன்பை முறிக்கும் உண்மையான வாக்கியம்… நட்பு ரீதியாக வாங்கும்போது சட்டென திரும்பி கேட்க முடியாது. தரலை அப்படிங்கறப்போ அது ஒரு ஓரமாக மனசை உறுத்தும்… அடுத்த முறை கேட்கும்போது நிச்சயம் நட்பை பாதிக்கும். அதே நேரத்தில் சில நேரம் பணம் இல்லாத நேரத்தில் கேட்டாங்கன்னா… இல்லைன்னு சொல்லும் போது அதுவும் பிரச்சனைதான். ஆரோக்கியமான நட்புக்கு கடன் வாங்குவது கூடாது. அதே நேரத்தில் சரியான நேரத்தில் கொடுத்து வாங்கினா எப்பவுமே பிரச்னை வராது. பணம் விஷயத்தில் நேர்மையாக நடந்துக்கனும்.– கவி செளமி.கடன் அன்பை முறிக்கும் என்பது எப்பொழுதும் சரியல்ல. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்வது மனித இயல்பு. அடுத்தவருக்கு தேவைப்படும் சமயத்தில் செய்த உதவி எத்தனை சிறியதாக இருப்பினும் அது மிக உயர்ந்தது. யாரோ, ஒரு சிலர் ஏமாற்றி விடுவதால் ஒட்டு மொத்தமாக எல்லோரையும் தவறாக எடைபோடக்கூடாது. நாடுகளிடையே கொடுக்கல், வாங்கல் இருப்பதால் நல்லுறவு வளரும். கடன் கொடுத்தல் என்பது பணத்தை மட்டும் குறிப்பதல்ல. மற்ற பொருளையும் கடன் கொடுப்பதுண்டு.என் கருத்துப்படி பணம் வெறும் காகிதம்தான். நம்மிடம் உள்ள அதிகப்பணம் அடுத்தவருக்கு பயன்படும்போதுதான் அதற்கு மதிப்பும் பெருமையும். ஆனால் கடன் வாங்குபவர் நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.– ராதிகா ரவீந்திரன் .கடன் வாங்கும்போது இருக்கும் பணிவு மற்றும் அடக்கம், திரும்ப கொடுக்கும்போது மறந்து விடும், அதற்கு பெயர் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை என்றாகும். இதனால் அவர்கள் முகத்தில் முழிக்க முடியாதபடி நாம் தள்ளப்படுவோம். வலியவந்து உதவி செய்துவிட்டு பிறகு முதல் எதிரியாகி விடுவோம். இதில் அன்பு மட்டும் அல்ல சமயத்தில் எலும்பு கூட முறியும்.– ஸ்ரீவித்யா பிரசாத்.கடன் அன்பை முறிக்கும் என்பது உண்மையான வாசகம். எனக்கு தெரிந்த ஒருவருக்கு அவசரமாக பணம் வேண்டும் என்று 500 ரூபாய் கொடுத்தேன். முதல் முறை சரியாக திருப்பிக் கொடுத்து விட்டார். அடுத்த முறை5000 ரூபாய் கேட்டார். முதல்முறைதான் சரியாக திருப்பி கொடுத்து விட்டாரே இப்போதும் கொடுத்து விடுவார் என்று நினைத்து அவரிடம் கொடுத்தேன். அதற்கு பிறகு அவரை நான் வாழ்க்கையில் பார்க்கவே இல்லை. இப்படி ஏமாற்றும் விதமாக இருப்பதால் கடன் நட்பு, உறவு எல்லாவற்றையும் பிரித்துவிடும். முடிந்த வரை கடன் கொடுக்காமலும் வாங்காமலும் இருப்பது சிறந்தது.-உஷா முத்துராமன்.கடன் அன்பை முறிக்கும் என்பதோடு, அந்தக் கடனை வாங்கியவர்கள் அதை கொடுப்பது வரை மனநிம்மதி இல்லாமல் ஒருவித பயத்துடன் புலம்புவார்கள். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கிடைக்கும் வரை அவன் தருவானா என்ற சந்தேகத்திலே மனநிம்மதியை இழந்து விடுவார்கள். அதனால் கடன் கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பதுதான் சரி எனப்படுகிறது.– கலைமதி சிவகுரு .எனக்கு இதில் முழுமையான உடன்பாடு இல்லை. கடன் கேட்பதின் அவசியம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பது போல, கடனுக்கான காரணத்தை நன்கு விசாரித்து கொடுக்கலாம். அது உறவையும், நட்பையும் வளர்க்கும். இதுவரைக்கும் எதாவது மனக் கசப்பு இருந்தால் கூட நீங்கிவிடும். உறவாக இருந்தாலும், நண்பர்கள் ஆனாலும் வேண்டும் என்று ஏமாற்ற மாட்டார்கள். இல்லை என்ற போது உதவி செய்வதில் தவறு இல்லை.– உஷா பாஸ்கர் .உறவுகளுக்குள் கடன் அன்பை முறிக்கும் என்பதே என் அனுபவம். தந்தால் அது திரும்பிவரும் என எதிர்பார்க்காமல் இருக்கும்வரை பிரச்சனை வராது. கேட்டால் பிரச்சனைதான்.– சக்தி அருளானந்தம் சக்தி.கடன் அன்பை முறிக்கும் என்பது அனுபவ உண்மை. ஒரு அவசரத்தில் கடனை வாங்கும்போது உருகி உருகி நன்றி சொல்வார்கள். ஆனால் அந்த நன்றி கடனை ஏனோ தீர்க்க வருவதில்லை. கடனை கொடுத்தவர் திருப்பி கேட்டால் ஏனோ கோபம் வருகிறது. தன்மேல் நம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது. பத்து நாளில் திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று வாங்கும்போது சொல்பவர் மாதம் மூன்றாகிலும் கொடுக்க மாட்டார். கொடுத்தவருக்கும் பணமுடை ஏற்படலாம் என்று எண்ண மாட்டார். ஆக திரும்பி கொடுக்கும்போது வாங்கினபோது இருந்த நன்றி உணர்ச்சி மறைந்து கடன் கொடுத்தவர்மேல் மனதில் கோபம் வரும். இதனால் இருவரிடையே இருந்த அன்பு மறைந்துதான் போகும்.– ராஜலக்ஷ்மி கெளரிசங்கர்.கடன் கண்டிப்பாக அன்பை முறிக்கும். கிட்டப் போனால் முட்டப் பகை. அவசரத் தேவைக்கு வாங்கும் போது இனிக்கும். கொடுக்கும்போது அதுவும் வட்டியுடன் சேர்த்துக் கொடுக்கும்போது கசக்கும். நண்பன்தானே மெதுவாக கொடுக்கலாம் என்கின்ற எண்ணம் வந்து விடும். கடன் கொடுத்தவருக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டு, பணத்தை திருப்பிக்கேட்கும்போதுதான், அவர்கள் உறவினர்கள் ஆனாலும், நண்பர்கள் ஆனாலும், அவர்களுக்குள் விரிசல் ஆரம்பிக்கும். இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு, நீ சௌக்கியமா, நான் சௌக்கியம், என்று இருப்பதுதான் இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் நல்லது.– ஜெகதாம்பாள்.உறவுகளுக்கிடையே கடன் கொடுப்பது, வாங்குவது அன்பை முறிக்கும். பணம் கொடுக்கும்போது மகிழ்ச்சியோடு வாங்குபவர்கள் கொடுக்கும்போது ஏதோ நாம்தான் வாங்கியது போல அலட்சியமாக பணத்தை கொடுப்பர். சொந்த அனுபவமாக தோழி அவசரத் தேவை என வாங்கியவள் சில வருடங்கள் ஆகியும் கொடுக்காததால் அதைக் கொண்டு வீட்டில் சண்டை, சச்சரவு. அண்மையில் பணத்தை கொடுக்க வந்தவர் நீங்கள் பணத்தை திரும்ப தரவேண்டாம் என சொல்வீர்கள் என நினைத்தேன் என்றதோடு எல்லோருக்கும் அப்படி சொல்ற மனசு இருக்காதுதான் என்று சொன்னதுதான் வேதனையின் உச்சம். அதிலிருந்து கடன் அன்பை முறிக்கும் என்று புரிந்துகொண்டதோடு உதவி எனில் பொருளாக செய்து விடுகிறேன்.– மகாலக்ஷ்மி சுப்பிரமணியன் .சரியே. நண்பர்கள் என்றாலும், ஏன் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் என்றாலும் கூட கடன் என்று வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். உரிமை எடுத்துக் கொண்டு கொடுக்கா விட்டால் என்ன தவறு என்று நாமாகவே தீர்மானித்துக் கொண்டு நாணயம் தவறுவது நிச்சயம் நட்பை, உறவை முறிக்கும்!– லலிதா சண்முகம்.கடன் அன்பை முறிக்கும் என்பது மிகச் சரியானது. மருத்துவ எமர்ஜென்சி தவிர வேறு எதற்கும் கடன் கொடுப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். சிறிய தொகை வராவிட்டால் பரவாயில்லை என்றால் கொடுப்பேன். அதுவும் மிக தகுதியானவர்களுக்கு மட்டுமே.– தி. வள்ளி.முற்றிலும் சரி. நாம் கொடுக்கும் பணத்தை கையில் வாங்கும் வரைதான் நன்றி இருக்கும். அதன்பின், அந்த நன்றியையும் சிரிப்பையும் காண முடியாது. திரும்பிக் கேட்டால், அவர்களின் பணத்தை நாம் கேட்பது போல் பார்ப்பார்கள். ஓடி ஒளிவதும், வீட்டில் இல்லை என்று ஏமாற்றுவதும், அப்பப்பா — அந்த அலப்பரையை தாங்க முடியாது.– ப்ரீதா ரங்கசாமி .கடன் அன்பை மட்டும் அல்ல உறவையும் முறிக்கும். கேட்கும்போது தயங்கித் தயங்கி கேட்பவர்கள், வாங்கிக் கொள்ளும்போது சிரித்த முகத்துடன் எண்ணி ஒரே மாதத்தில் தந்துவிடுவேன் என்று சத்தியம் பண்ணாத குறையாக வாங்கிக்கொண்டு போவார்கள். மாதங்கள் உருண்டோடினாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் நம்மிடமே அடுத்தடுத்து கேட்பதும், திரும்பவும் தரவில்லை என்றால் போகும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டா போகப் போகிறாய். இருந்தாலும் உனக்கு கொடுக்க மனசே வர மாட்டேன் என்கிறது என்று அங்கலாய்க்கும் உறவினர்கள் நண்பர்கள் தான் அதிகம். கொடுத்த கடனை திரும்பக் கேட்டால் பகை தான் மிஞ்சும். கடன் கொடுப்பது அன்பை மட்டும் அல்ல நம் தர்ம சிந்தனையையும் முறிக்கும்.– கிருஷ்ணவேணி.என் பார்வையில் கடன் அன்பை முறிக்கும். கொடுத்த கடனை சூழ்நிலை கருதி கேட்கும்பொழுது கொடுக்க முடியாத சூழலில் கடன் பெற்றவர் இருந்தால் சிறு மனக்கசப்பு ஏற்படும். அதுவே விரிசலாகி அன்பை முறித்துவிடும்.– பார்வதி முத்தமிழ் .தொழில் செய்பவர்களுக்கு அல்லது புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்குக் கொடுக்கலாம். ஏனெனில் உழைப்பு மிக்கவர்களே தொழில் தொடங்குவார்கள். ஒரு உழைப்பாளி இன்னொரு உழைப்பாளியை ஏமாற்ற மாட்டார்.– பரிமளா வெங்கடேஷன் ராவ்.சரியான பழமொழிதான், என் தோழிக்கு பணம் கொடுத்து விட்டுட்டு என் கணவர் கொடுத்த பணத்தை வாங்கியாச்சா, கேட்டு வாங்கு என்று சொல்லும்பொழுது தோழியிடம் கேட்க தயக்கமாக இருக்கும். நான் கேட்கவும் மாட்டேன். இதனால் அவள் மீது சிறிது வருத்தம் இருந்தது உண்டு. காரணம், தினமும் ஏதாவது காரணம் சொல்லி என் கணவரை நான் சமாளிக்க வேண்டி இருந்தது.எதற்கு இந்தக் கவலை, சமாளிப்பு, வருத்தம் இதற்கு பணம் கொடுக்காமலே இருக்கலாமோ என்றுதான் தோன்றும் பலமுறை..– த. கவிதா தாமரைச்செல்வன்