பகவானை அடைவதற்கு இரண்டு முறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை, மற்றொன்று பூனைக்குட்டி முறை..சமஸ்கிருதத்தில் இதை மர்க்கட கிசோர நியாயம், மார்ஜார கிசோர நியாயம் என்றும் கூறுவர்..மர்க்கட கிசோர நியாயம்.குரங்குக் குட்டியானது அதன் தாயின் வயிற்றைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும். தாய் மரத்துக்கு மரம் தாவும்போது தன் குட்டியைப் பற்றி யாதொரு கவலையும் கொள்ளாது. குட்டிதான் தன்னைக் காத்துக் கொள்ளத் தாயின் வயிற்றை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்..இப்படிப்பட்ட குரங்கின் ரீதியிலேயே சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகவானை இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள். பகவானே அருள் செய்யட்டும் என்று காத்திராமல் அவன் உதறினாலும் விடுவதில்லை என்று அவனைப் பிடித்துக் கொள்வார்கள். இதுபோன்ற பக்தர்களிடம் பகவான் தப்ப முடியாமல் வலையில் விழுந்த மீன் போலச் சிக்கி விடுகிறார்..மார்ஜார கிசோர நியாயம்.பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய் பூனையே தன் வாயினால் கவ்விக்கொண்டு செல்கிறது..இந்த பூனைக்குட்டி போல தன் முயற்சியின்றி தாய்விட்ட வழி என்றிருப்பது போலவே பகவானை சரணடைந்து இருப்பது ஒரு வகை பக்தி. அவரைப் பணிவுடன் வேண்டி, அவரை துதித்தும், அவரது புகழ்பாடி அருளை வேண்டுவார்கள். அவருடைய பொற்பாத கமலங்களில் தங்களது உள்ளத்தைக் கிடத்துமாறு செய்வர் ஒரு சில பக்தர்கள்..நம்மில் பலருக்கு குரங்குக் குட்டியைப் போல பகவான் அருளைப் பெற்றே தீர வேண்டும் என்றிருக்கப் போதவில்லை..அதே நேரம் நல்லதோ கெட்டதோ நமக்கென்ன இருக்கிறது? என்று சரணாகதி அடையும் பக்குவமும் இல்லை..இரண்டும் இல்லாவிட்டால், எப்படித்தான் உருப்படுவது? இரண்டு நியாயங்களும் நம்மால் கடைப்பிடிக்க முடியாவிடில் என்ன செய்வது? யாரிடம் போவது?.மூன்றாவது நியாயம்.இதற்கு தீர்வாக ஆதிசங்கரர் மூன்றாவது நியாயத்தைச் சொல்கிறார்.இங்கே மனதை அவர் ஒரு குரங்காகத்தான் சொல்கிறார். ஓயாமல் அலைபாய்வதில் அது குரங்காகத்தான் இருக்கிறது. ஆனால், சுவாமியை தாயாக கட்டிக் கொள்கிற விஷயத்தில் மட்டும் நம் மனம் குரங்காக இருக்கவில்லை..இந்த மனக் குரங்கு சில சமயம்தான் நேர்மறையான வழியில் போகிறது. பல சமயம் அடர்ந்த காட்டுக்குள் போய் வழி இன்றித் தவிக்கிறது, அலைகிறது..பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம். உண்மையில் மனமானது கண்டபடி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் சுவாமியின் அருளை நாம் கோர வேண்டும்..ஒரு குழந்தைக்குப் பொரி உருண்டையின் மேல் மிகவும் பிரியம். ஆனால், லாடு கிடைத்தால், அதே குழந்தை பொரி உருண்டையை தூக்கி எறிந்துவிட்டு லாடுவை எடுத்துக் கொள்கிறது. அதுபோல மற்ற எல்லாவற்றையும் விட அழகான பொருள் கிடைத்தால் மனம் அதில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கும்..அப்பேர்ப்பட்ட அனைத்திலும் அழகிய வஸ்து ஈசுவரனே!.பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. "என் உண்மை நிலையை உணர அருள்வாயாக!" என்று வேண்டினாலே போதும். ஏனெனில் நம் உண்மை ஸ்வரூபம் ஆனந்த மயமானது. பரமாத்வாவேதான் அது!.பக்தி மார்க்கத்திலே சொல்லப்படும் இரண்டு விதமான சரணாகதிகளானாலும் சரி, ஞான மார்க்கத்திலே சொல்லப்படும் மனக் கட்டுப்பாடும் சரி, எதற்கும் முதலிலே வழியாக இருப்பது பக்திதான். எனவே ஆதி சங்கரர் சொல்வைதப்போல "இந்த என் மனக்குரங்கை பக்தி என்ற கயிற்றால் கட்டி, உன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ளப்பா" என்று பரமாத்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்..– சாராம்சம் மஹா பெரியவர் அருளிய தெய்வத்தின் குரலிலிருந்து.
பகவானை அடைவதற்கு இரண்டு முறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை, மற்றொன்று பூனைக்குட்டி முறை..சமஸ்கிருதத்தில் இதை மர்க்கட கிசோர நியாயம், மார்ஜார கிசோர நியாயம் என்றும் கூறுவர்..மர்க்கட கிசோர நியாயம்.குரங்குக் குட்டியானது அதன் தாயின் வயிற்றைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும். தாய் மரத்துக்கு மரம் தாவும்போது தன் குட்டியைப் பற்றி யாதொரு கவலையும் கொள்ளாது. குட்டிதான் தன்னைக் காத்துக் கொள்ளத் தாயின் வயிற்றை மிகவும் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்..இப்படிப்பட்ட குரங்கின் ரீதியிலேயே சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பகவானை இறுக்கப் பிடித்துக் கொள்வார்கள். பகவானே அருள் செய்யட்டும் என்று காத்திராமல் அவன் உதறினாலும் விடுவதில்லை என்று அவனைப் பிடித்துக் கொள்வார்கள். இதுபோன்ற பக்தர்களிடம் பகவான் தப்ப முடியாமல் வலையில் விழுந்த மீன் போலச் சிக்கி விடுகிறார்..மார்ஜார கிசோர நியாயம்.பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய் பூனையே தன் வாயினால் கவ்விக்கொண்டு செல்கிறது..இந்த பூனைக்குட்டி போல தன் முயற்சியின்றி தாய்விட்ட வழி என்றிருப்பது போலவே பகவானை சரணடைந்து இருப்பது ஒரு வகை பக்தி. அவரைப் பணிவுடன் வேண்டி, அவரை துதித்தும், அவரது புகழ்பாடி அருளை வேண்டுவார்கள். அவருடைய பொற்பாத கமலங்களில் தங்களது உள்ளத்தைக் கிடத்துமாறு செய்வர் ஒரு சில பக்தர்கள்..நம்மில் பலருக்கு குரங்குக் குட்டியைப் போல பகவான் அருளைப் பெற்றே தீர வேண்டும் என்றிருக்கப் போதவில்லை..அதே நேரம் நல்லதோ கெட்டதோ நமக்கென்ன இருக்கிறது? என்று சரணாகதி அடையும் பக்குவமும் இல்லை..இரண்டும் இல்லாவிட்டால், எப்படித்தான் உருப்படுவது? இரண்டு நியாயங்களும் நம்மால் கடைப்பிடிக்க முடியாவிடில் என்ன செய்வது? யாரிடம் போவது?.மூன்றாவது நியாயம்.இதற்கு தீர்வாக ஆதிசங்கரர் மூன்றாவது நியாயத்தைச் சொல்கிறார்.இங்கே மனதை அவர் ஒரு குரங்காகத்தான் சொல்கிறார். ஓயாமல் அலைபாய்வதில் அது குரங்காகத்தான் இருக்கிறது. ஆனால், சுவாமியை தாயாக கட்டிக் கொள்கிற விஷயத்தில் மட்டும் நம் மனம் குரங்காக இருக்கவில்லை..இந்த மனக் குரங்கு சில சமயம்தான் நேர்மறையான வழியில் போகிறது. பல சமயம் அடர்ந்த காட்டுக்குள் போய் வழி இன்றித் தவிக்கிறது, அலைகிறது..பகவானிடம் நாம் செல்வம், ஆரோக்கியம், புகழ் இப்படி எது எதையோ வேண்டுகிறோம். உண்மையில் மனமானது கண்டபடி அலையாமல் அதைக் கட்டுப்படுத்துவதற்குத்தான் சுவாமியின் அருளை நாம் கோர வேண்டும்..ஒரு குழந்தைக்குப் பொரி உருண்டையின் மேல் மிகவும் பிரியம். ஆனால், லாடு கிடைத்தால், அதே குழந்தை பொரி உருண்டையை தூக்கி எறிந்துவிட்டு லாடுவை எடுத்துக் கொள்கிறது. அதுபோல மற்ற எல்லாவற்றையும் விட அழகான பொருள் கிடைத்தால் மனம் அதில் மயங்கிக் கட்டுண்டு கிடக்கும்..அப்பேர்ப்பட்ட அனைத்திலும் அழகிய வஸ்து ஈசுவரனே!.பகவானிடம் புதிதாக ஒன்றும் நாம் கேட்டுப் பெற வேண்டியதில்லை. "என் உண்மை நிலையை உணர அருள்வாயாக!" என்று வேண்டினாலே போதும். ஏனெனில் நம் உண்மை ஸ்வரூபம் ஆனந்த மயமானது. பரமாத்வாவேதான் அது!.பக்தி மார்க்கத்திலே சொல்லப்படும் இரண்டு விதமான சரணாகதிகளானாலும் சரி, ஞான மார்க்கத்திலே சொல்லப்படும் மனக் கட்டுப்பாடும் சரி, எதற்கும் முதலிலே வழியாக இருப்பது பக்திதான். எனவே ஆதி சங்கரர் சொல்வைதப்போல "இந்த என் மனக்குரங்கை பக்தி என்ற கயிற்றால் கட்டி, உன் ஆதீனத்தில் வைத்துக் கொள்ளப்பா" என்று பரமாத்மாவிடம் பிரார்த்தனை செய்வோம்..– சாராம்சம் மஹா பெரியவர் அருளிய தெய்வத்தின் குரலிலிருந்து.