சிறுகதை – கே. அம்புஜவல்லி, புத்தூர்.ஓவியம்: சேகர்.சி. ஏ. படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி நளினி, கணவரைப் போலவே பட்டப்படிப்பு படித்து, கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் இருக்கிறார். சொந்த ஊர் திருச்சியில் உள்ள குணசீலம். இவர்களின் ஒரே பெண்ணும் பிள்ளையும், வெளி நாட்டில் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி, அவர்களின் குலத் தெய்வம். தங்கள் குடும்பம் இதுவரையிலும் நல்ல முறையில் இருப்பதற்கு, பிரசன்ன வெங்கடேசப் பெருமாளே காரணம் என்று நடேசன் தம்பதிகள் நம்புகிறார்கள்..கணவர் ஓய்வு பெற்றபிறகு, நளினிக்கு இன்னமும் ஐந்து வருட சர்வீஸ் இருக்கிறது. ஆனால், தம்பதிகளுக்கு குணசீலம் சென்று, தங்கள் சொந்த வீட்டில் இருக்க ஆசை. எனவே நளினி வீ ஆர் எஸ் கொடுத்துவிட்டாள்..மிகவும் தேவையான பொருள்களை மட்டும் லாரியில் ஏற்றி குணசீலம் அனுப்பிவிட்டார் நடேசன். இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசாங்க வீட்டை காலி செய்துவிட்டுப் புறப்படவேண்டும். நளினியின் நண்பிகள் பலர், ஓய்வு பெற்றபிறகு தில்லி அருகிலேயே வீடு வாங்கிக்கொண்டு செட்டில் ஆனார்கள். அதைப்போலவே, நளினிக்கும் யோசனை கூறினார்கள். நண்பிகளை பிரிய மனமில்லாவிடினும், ஊர் சென்று பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்தபடி வாழ்கையின் கடைசிப் பகுதியைக் கழிக்க வேண்டும் என்று நளினி நினைத்ததோடு நடேசனும் அதையே விரும்பினார்..நாற்பது ஆண்டுகளாக தமிழ் பண்டிகைகளைத் தவிர, இந்திய மாநில பண்டிகைகள் அத்தனையும் சுற்றி இருப்பவர்களோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்த காலம் நளினியால் சுலபமாக மறக்கமுடியாது. இருபத்து நாலு மணி நேரமும் அலுவலக வேலையிலேயே முற்றிலும் மூழ்கி, எத்தனையோ சாதனைகள் புரிந்தவர் நடேசன். அவருடைய கடுமையான உழைப்பு அவரை மட்டும் உயர்த்தவில்லை, அவருக்குக் கீழ் பணி புரிந்த ஊழியர்களும் மேன்மை பெற்றனர். தில்லியை விட்டு புறப்படும்போது நளினி கண்ணீரை அடக்கமுடியாமல் தவித்தாள்..குணசீலம் வந்து சேர்ந்ததும், வழியிலேயே பெருமாள் கோயில் கோபுர விமானத்தைத் தரிசித்து, பின்னரே வீடு சென்றார்கள். முப்பது பேர் வசிக்கும் அந்தத் தெரு பளிச்சென்று இருந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் வெளியே வந்து, நடேசனும் நளினியும் காரை விட்டு இறங்குவதை அவரவர்கள் வீட்டு வாசலில் நின்றபடியே பார்த்தவண்ணம் இருந்தனர். பார்த்துக்கொண்டிருக்கும் அக்கம்பக்கத்தினருக்கு நளினி கை அசைத்து புன்னகை பூத்தாள். எல்லோரும் கை அசைத்தார்களேயொழிய எவரும் கிட்டே வரவில்லை..நளினிக்கு மீண்டும் தில்ல ஞாபகம். லீவுக்கு குணசீலம் வந்துவிட்டு தில்லி திரும்பி, வீட்டு வாசலுக்கு செல்வதற்குள், வீணாபுரந்தரே, தீப்திசாவ்லா , சுமிபல்லோரா, சுமதிசாமந்த் ஆகியோர் ஆளுக்கு ஒன்றாக ஏதாவது எடுத்து வந்து சாப்பிடக் கொடுத்தது, சுமதி கூஜா நிறைய காப்பி கொண்டு வந்து அத்தனை பேரும் அமர்ந்து காப்பி சாப்பிட்டது…என்று நளினிக்கு ஞாபகம் வந்தது இப்போது..வீட்டுக்குள்ளே சென்ற நளினி, கோயிலுக்கு அருகிலேயே வசிக்கும் வேலைக்காரப் பெண் காளீஸ்வரியை மொபைலில் கூப்பிட்டு வரச்சொன்னாள். கட்டிவைத்த பாத்திரங்களை அவிழ்த்து பாத்திரங்களை ஷெல்ஃபில் அடுக்கி மற்றைய வேலைகளையும் முடித்து, அருகில் உள்ள ஒரு சின்ன ஓட்டலில் ரெடிமேட் சாதம் சாப்பிட்டார்கள். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வாங்கி வைத்து இரவு சமையல் செய்து சாப்பிட்டு களைப்பு மிகுதியால் உறங்கப்போனார்கள்..நளினிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டும் என்றுகூடக் கேட்கவில்லையே… சரி… இந்த ஊர் பழக்கம் போல… என்று சமாதானம் ஆகி உறங்கிப்போனாள்..அதிகாலையில் எழுந்திருந்து, குளித்துமுடித்து, பிரசன்ன வெங்கடாசலபதியைத் தரிசிக்க நடேசனும் நளினியும் சென்றார்கள். வழியில் வரும் தெருக்காரர்கள் ஒரு புன்னகையை உதிர்த்துப் போய்கொண்டே இருக்கிறார்கள். தானே வலுவில் சென்று எப்படி இருக்கீங்க என்று கேட்டாலும், நல்லா இருக்கோம் என்று சுருக் பதில் கூறி, ஓடி விடுகிறார்கள்..மூன்று மாதங்கள் கடந்தன. பிரசன்ன வேங்கடாசலபதியின் தரிசனமும் கோயில் கைங்கர்யம் மட்டுமே மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. தெருவாசிகள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்கொண்டே இருக்கிறார்கள். நளினிக்கு சலிப்பு வந்தது. தில்லி வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தாள். கலகலப்பான சூழ்நிலை. ஒருவருக்கொருவரின் அன்யோன்யம். மீண்டும் தில்லிக்கே சென்று விடலாமா? என்று யோசித்து கணவரிடம் பேசினாள்..எல்லாவற்றையும் கேட்ட நடேசன் சிரித்தார். "நளினி… தில்லியில் நம்மை சுற்றி இருந்தவர்களோடு, குணசீலம் மக்களை ஒப்பிடுவது சரியில்லை. தில்லியில் எல்லோருமே தங்கள் சொந்த பந்தங்களை விட்டு வந்தவர்கள். ஆகவேதான் அவர்கள் நம்மிடம் வெகு அன்யோன்யமாக இருந்தார்கள். குணசீலம்வாசிகளுக்கு, அவரவர்களின் சொந்த பந்தங்கள் அருகிலேயே இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சொந்த பந்தமில்லாதவர்கள். வருடத்துக்கு ஒரு முறை நாம் லீவில் வரும்போது பார்ப்பார்கள். அதேபோலத்தானே இப்போதும் பார்க்கிறார்கள். நம்மிடம் அவர்களுக்கு வெறுப்பு இல்லை. நாமாகப் பேசினாலும் கேட்டதற்கு பதில் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள். அதுதான் அவர்களின் எல்லை. பொதுவாகவே, மக்கள், தங்களுக்கு சொந்த பந்தமில்லாதவர்களிடம் பேச வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏதேனும் லாபம், ஆதாயம் இருந்தால் மட்டுமே பேசுவார்கள். இது இயற்கையாக அமைந்த குணம். தவறான கண்ணோட்டத்தோடு அவர்கள் பழகவில்லை. ஆகவே, நீ இதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதே. விரைவிலேயே அவர்கள் நம்மைத் தேடி வரும் சந்தர்ப்பம் உருவாகும். ஏற்கனவே, என் மனதில் சில திட்டங்களை யோசித்துள்ளேன் என்று சிரித்தபடி கூறினார். என்ன மாயம் மந்திரம் செய்யப்போகிறார் என்று நளினி ஆவலோடு காத்திருந்தாள்..சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கப்படும்.ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படும்.கல்வி சம்பந்தமான ஆலோசனைகள் கூறப்படும்..இப்படியாக குணசீலம் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது..ஒரு நாள் காலை நளினியும் நடேசனும் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது வாசலில் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். நளினி வெளியே வந்து அவளை வரவேற்றாள். நான்கு வீடு தள்ளி இருக்கும் பெண்மணி அவள். "நளினி மேடம், என் பெண்ணும் பையனும் திருச்சிக்குச் சென்று ஹிந்தி படித்து வருகிறார்கள். திருச்சி போய் வந்தாலே களைத்துவிடுகிறார்கள். ஆகவே அடுத்த மாதம் முதல் உங்களிடம் ………………….."."சார்… என் பெயர் ரங்கன்… என் பையன் சி ஏ படிக்கிறான். உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது…………………"..இப்போதெல்லாம் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடேசனும் சரி நளினியும் சரி, வெகு பிஸி. மாலை வேளையில் கோயில் கைங்கர்யங்களைச் செய்து வருகிறார்கள்..கோயிலுக்குப் போகும்போதும் – வரும்போதும் வழியில் பெற்றோர்கள் நின்று பேசிவிட்டுச் செல்கிறார்கள்..தன் கணவரின் கணிப்பு கண்டு நளினி ஆச்சரியம் அடைந்தாள்.
சிறுகதை – கே. அம்புஜவல்லி, புத்தூர்.ஓவியம்: சேகர்.சி. ஏ. படித்து தில்லியில் மத்திய அரசாங்கத்தில் தலைமைப் பதவி வரை வகித்த நடேசன், நாற்பது ஆண்டு கால பணிக்குப் பிறகு ஒய்வு பெறுகிறார். அவர் மனைவி நளினி, கணவரைப் போலவே பட்டப்படிப்பு படித்து, கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் இருக்கிறார். சொந்த ஊர் திருச்சியில் உள்ள குணசீலம். இவர்களின் ஒரே பெண்ணும் பிள்ளையும், வெளி நாட்டில் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி, அவர்களின் குலத் தெய்வம். தங்கள் குடும்பம் இதுவரையிலும் நல்ல முறையில் இருப்பதற்கு, பிரசன்ன வெங்கடேசப் பெருமாளே காரணம் என்று நடேசன் தம்பதிகள் நம்புகிறார்கள்..கணவர் ஓய்வு பெற்றபிறகு, நளினிக்கு இன்னமும் ஐந்து வருட சர்வீஸ் இருக்கிறது. ஆனால், தம்பதிகளுக்கு குணசீலம் சென்று, தங்கள் சொந்த வீட்டில் இருக்க ஆசை. எனவே நளினி வீ ஆர் எஸ் கொடுத்துவிட்டாள்..மிகவும் தேவையான பொருள்களை மட்டும் லாரியில் ஏற்றி குணசீலம் அனுப்பிவிட்டார் நடேசன். இன்னும் இரண்டு நாட்களில் மத்திய அரசாங்க வீட்டை காலி செய்துவிட்டுப் புறப்படவேண்டும். நளினியின் நண்பிகள் பலர், ஓய்வு பெற்றபிறகு தில்லி அருகிலேயே வீடு வாங்கிக்கொண்டு செட்டில் ஆனார்கள். அதைப்போலவே, நளினிக்கும் யோசனை கூறினார்கள். நண்பிகளை பிரிய மனமில்லாவிடினும், ஊர் சென்று பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்தபடி வாழ்கையின் கடைசிப் பகுதியைக் கழிக்க வேண்டும் என்று நளினி நினைத்ததோடு நடேசனும் அதையே விரும்பினார்..நாற்பது ஆண்டுகளாக தமிழ் பண்டிகைகளைத் தவிர, இந்திய மாநில பண்டிகைகள் அத்தனையும் சுற்றி இருப்பவர்களோடு சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்த காலம் நளினியால் சுலபமாக மறக்கமுடியாது. இருபத்து நாலு மணி நேரமும் அலுவலக வேலையிலேயே முற்றிலும் மூழ்கி, எத்தனையோ சாதனைகள் புரிந்தவர் நடேசன். அவருடைய கடுமையான உழைப்பு அவரை மட்டும் உயர்த்தவில்லை, அவருக்குக் கீழ் பணி புரிந்த ஊழியர்களும் மேன்மை பெற்றனர். தில்லியை விட்டு புறப்படும்போது நளினி கண்ணீரை அடக்கமுடியாமல் தவித்தாள்..குணசீலம் வந்து சேர்ந்ததும், வழியிலேயே பெருமாள் கோயில் கோபுர விமானத்தைத் தரிசித்து, பின்னரே வீடு சென்றார்கள். முப்பது பேர் வசிக்கும் அந்தத் தெரு பளிச்சென்று இருந்தது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரும் வெளியே வந்து, நடேசனும் நளினியும் காரை விட்டு இறங்குவதை அவரவர்கள் வீட்டு வாசலில் நின்றபடியே பார்த்தவண்ணம் இருந்தனர். பார்த்துக்கொண்டிருக்கும் அக்கம்பக்கத்தினருக்கு நளினி கை அசைத்து புன்னகை பூத்தாள். எல்லோரும் கை அசைத்தார்களேயொழிய எவரும் கிட்டே வரவில்லை..நளினிக்கு மீண்டும் தில்ல ஞாபகம். லீவுக்கு குணசீலம் வந்துவிட்டு தில்லி திரும்பி, வீட்டு வாசலுக்கு செல்வதற்குள், வீணாபுரந்தரே, தீப்திசாவ்லா , சுமிபல்லோரா, சுமதிசாமந்த் ஆகியோர் ஆளுக்கு ஒன்றாக ஏதாவது எடுத்து வந்து சாப்பிடக் கொடுத்தது, சுமதி கூஜா நிறைய காப்பி கொண்டு வந்து அத்தனை பேரும் அமர்ந்து காப்பி சாப்பிட்டது…என்று நளினிக்கு ஞாபகம் வந்தது இப்போது..வீட்டுக்குள்ளே சென்ற நளினி, கோயிலுக்கு அருகிலேயே வசிக்கும் வேலைக்காரப் பெண் காளீஸ்வரியை மொபைலில் கூப்பிட்டு வரச்சொன்னாள். கட்டிவைத்த பாத்திரங்களை அவிழ்த்து பாத்திரங்களை ஷெல்ஃபில் அடுக்கி மற்றைய வேலைகளையும் முடித்து, அருகில் உள்ள ஒரு சின்ன ஓட்டலில் ரெடிமேட் சாதம் சாப்பிட்டார்கள். வீட்டிற்குத் தேவையான அனைத்தும் வாங்கி வைத்து இரவு சமையல் செய்து சாப்பிட்டு களைப்பு மிகுதியால் உறங்கப்போனார்கள்..நளினிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டும் என்றுகூடக் கேட்கவில்லையே… சரி… இந்த ஊர் பழக்கம் போல… என்று சமாதானம் ஆகி உறங்கிப்போனாள்..அதிகாலையில் எழுந்திருந்து, குளித்துமுடித்து, பிரசன்ன வெங்கடாசலபதியைத் தரிசிக்க நடேசனும் நளினியும் சென்றார்கள். வழியில் வரும் தெருக்காரர்கள் ஒரு புன்னகையை உதிர்த்துப் போய்கொண்டே இருக்கிறார்கள். தானே வலுவில் சென்று எப்படி இருக்கீங்க என்று கேட்டாலும், நல்லா இருக்கோம் என்று சுருக் பதில் கூறி, ஓடி விடுகிறார்கள்..மூன்று மாதங்கள் கடந்தன. பிரசன்ன வேங்கடாசலபதியின் தரிசனமும் கோயில் கைங்கர்யம் மட்டுமே மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது. தெருவாசிகள் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்கொண்டே இருக்கிறார்கள். நளினிக்கு சலிப்பு வந்தது. தில்லி வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தாள். கலகலப்பான சூழ்நிலை. ஒருவருக்கொருவரின் அன்யோன்யம். மீண்டும் தில்லிக்கே சென்று விடலாமா? என்று யோசித்து கணவரிடம் பேசினாள்..எல்லாவற்றையும் கேட்ட நடேசன் சிரித்தார். "நளினி… தில்லியில் நம்மை சுற்றி இருந்தவர்களோடு, குணசீலம் மக்களை ஒப்பிடுவது சரியில்லை. தில்லியில் எல்லோருமே தங்கள் சொந்த பந்தங்களை விட்டு வந்தவர்கள். ஆகவேதான் அவர்கள் நம்மிடம் வெகு அன்யோன்யமாக இருந்தார்கள். குணசீலம்வாசிகளுக்கு, அவரவர்களின் சொந்த பந்தங்கள் அருகிலேயே இருக்கிறார்கள். நாம் அவர்களுக்குச் சொந்த பந்தமில்லாதவர்கள். வருடத்துக்கு ஒரு முறை நாம் லீவில் வரும்போது பார்ப்பார்கள். அதேபோலத்தானே இப்போதும் பார்க்கிறார்கள். நம்மிடம் அவர்களுக்கு வெறுப்பு இல்லை. நாமாகப் பேசினாலும் கேட்டதற்கு பதில் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள். அதுதான் அவர்களின் எல்லை. பொதுவாகவே, மக்கள், தங்களுக்கு சொந்த பந்தமில்லாதவர்களிடம் பேச வேண்டும் என்றால் அவர்களுக்கு ஏதேனும் லாபம், ஆதாயம் இருந்தால் மட்டுமே பேசுவார்கள். இது இயற்கையாக அமைந்த குணம். தவறான கண்ணோட்டத்தோடு அவர்கள் பழகவில்லை. ஆகவே, நீ இதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதே. விரைவிலேயே அவர்கள் நம்மைத் தேடி வரும் சந்தர்ப்பம் உருவாகும். ஏற்கனவே, என் மனதில் சில திட்டங்களை யோசித்துள்ளேன் என்று சிரித்தபடி கூறினார். என்ன மாயம் மந்திரம் செய்யப்போகிறார் என்று நளினி ஆவலோடு காத்திருந்தாள்..சி ஏ படிக்கும் மாணவர்களுக்கு ட்யூஷன் எடுக்கப்படும்.ஹிந்தி கற்றுக்கொடுக்கப்படும்.கல்வி சம்பந்தமான ஆலோசனைகள் கூறப்படும்..இப்படியாக குணசீலம் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டது..ஒரு நாள் காலை நளினியும் நடேசனும் கோயிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது வாசலில் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். நளினி வெளியே வந்து அவளை வரவேற்றாள். நான்கு வீடு தள்ளி இருக்கும் பெண்மணி அவள். "நளினி மேடம், என் பெண்ணும் பையனும் திருச்சிக்குச் சென்று ஹிந்தி படித்து வருகிறார்கள். திருச்சி போய் வந்தாலே களைத்துவிடுகிறார்கள். ஆகவே அடுத்த மாதம் முதல் உங்களிடம் ………………….."."சார்… என் பெயர் ரங்கன்… என் பையன் சி ஏ படிக்கிறான். உங்களின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது…………………"..இப்போதெல்லாம் காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடேசனும் சரி நளினியும் சரி, வெகு பிஸி. மாலை வேளையில் கோயில் கைங்கர்யங்களைச் செய்து வருகிறார்கள்..கோயிலுக்குப் போகும்போதும் – வரும்போதும் வழியில் பெற்றோர்கள் நின்று பேசிவிட்டுச் செல்கிறார்கள்..தன் கணவரின் கணிப்பு கண்டு நளினி ஆச்சரியம் அடைந்தாள்.