இயற்கை அதிசயம்.வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன்.ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன் பீவர்கள், வட அமெரிக்காவிலும், மற்ற வகை பீவர்கள் ஸ்பெயின், ஃப்ரான்ஸ், ஸ்கேண்டினேவிய நாடுகளிலும் காணப்படுபவை. ஆனால், பீவர்களின் பெரும்பாலும் வசிப்பது ரஷ்யாவில்தான்.. உணவு.இவை தாவரங்களை மட்டுமே உண்ணும் தாவர பட்சிணிகள். (herbivorous) வேர்கள், கிளைகள், குச்சிகள், புல், துளிர்கள் இவையே பீவரின் உணவு..எப்படி அணை கட்டுகிறது பீவர்?.இவை நுணுக்கமான தொழில் நுட்பத்துடன் நீரின் குறுக்கே அணை கட்டுவது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஓடை அல்லது ஆற்றில் ஓடிவரும் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு அணை கட்டுகிறது. மரக்குச்சிகள், சேறு, கூழாங்கற்கள், மரக்கிளைகள் இவற்றை வாயால் கவ்வி இழுத்துவந்து அணை கட்டுகிறது. அதன் மேல் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது..இதன் முன்பக்க வெட்டுப் பற்கள் மிகக் கூரானவை. கரையோரமாக வளர்ந்திருக்கும்.ஆஸ்பென் போன்ற மரங்களின் அடிப்பகுதியைக் கடித்தே அதைச் சாய்த்துவிடும்..அதுவும் எட்டு நிமிடங்களில்….கிளைகளைப் பற்களால் உடைத்து நீரில் இழுத்துச் செல்லும். இதன் பற்கள் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதோடு, வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்குமாம். கற்கள், குச்சிகளையும் இழுத்து வரிசையாக அடுக்கி அணை போல் கட்டிவிடும். இதனால் நீரின் ஓட்டம் தடைப்பட்டு ஒரே இடத்தில் தங்கிவிடும். மரக்கிளைகளை அடுக்கி அவற்றின் மேல் மண் சேற்றை வைத்துப் பூசி (Plastering) இந்த இருப்பிடம் கட்டப்படுகின்றன. சருகுகள் குடிலுக்குத் 'தரை'யாகின்றன. இந்த 'பொறியாளர்கள்', 24 மணி நேரத்துக்குள் பலமான அணைகட்டி விடுகின்றன..சதுப்பு நிலம், சிறிய ஆறுகள், ஏரிகளில் கரையோரமாக குடில்கள் கட்டும் பீவர், பெரிய ஆறுகளில், ஏரிகளில் எப்படிக் கட்டும் தெரியுமா?.நீருக்கடியில், மரங்களின் வேர்கள் வழியாக தமது இருப்பிடத்துக்குச் செல்லும்படி சுரங்கம் போல நுழைவாயிலைக் கட்டிக்கொள்ளுமாம். ஒவ்வொரு வருடமும் மேலும் மேலும் குச்சிகளை தன் இருப்பிடத்தைச் சுற்றிக் கட்டி சேற்றால் இன்சுலேட் செய்து, பலமான கோட்டை ஆக்கிக் கொள்கிறது. நீருக்கடியில் நீந்திச் சென்றே இருப்பிடத்துக்குள் நுழையும் அல்லது வெளியே வரும்..கோட்டைக்குள் விரிசல் ஏற்பட்டால் அதை ஓடும் நீரின் சத்தத்தை வைத்தே அறிந்துகொண்டு, சரி செய்துகொள்ளுமாம் இந்த புத்திசாலி பிராணிகள். இதனால் அதன் எதிரிகளிடமிருந்து மறைந்துகொள்ள முடிகிறது..குடில் கட்டியதும், இதற்குள் பாதுகாப்பாக உறங்கிக்கொள்ளும். இவை அனேகமாக ஒரே இணையுடன் (monogamous) வாழுபவை. பாதுகாப்பாக, தன் குட்டிகளையும் தன்னையும் ஓநாய், நரி, சிங்கம் போன்ற விலங்கு களிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறது..குளிர் காலத்தில் இந்த இருப்பிடம் வெதுவெதுப்பாகவும் இருக்கும். சென்ற வருடம் ஈன்ற குட்டிகள், இந்த வருடம் பிறந்தவை என்று அனைத்தும் இந்தக் குடிலுக்குள் வாழ்கின்றன. இவை காலனிகளாக வாழக்கூடியவை. சுமார் 7 முதல் 12 உறுப்பினர்கள் வரை இந்த குடிலுக்குள் வசிப்பர். இளம் பீவர்கள், இரண்டு வருடம் இந்த குடிலில் இருந்துவிட்டு, வெளியேறி, வேறு குடில் கட்டிக்கொள்கிறது அல்லது மற்றோர் குடிலுக்குச் செல்கிறது. பீவரின் வகையைப் பொறுத்து, இவற்றின் கர்ப்பக் காலம் இரண்டு மாதம் முதல் நான்கு மாதம் வரை இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 20 வருடங்கள்..வாட்டர் ஃப்ரூப் உடல்.பீவர்களின் மற்றொரு சிறப்பு அதன் அடர்ந்த ரோமம் கொண்ட (Fur) சருமம்.தண்ணீருக்கடியில் பல நிமிடங்கள் இருந்தாலும் இதன் உடல் நனைவதில்லை..அதன் உடலின் பின்பகுதியில் ஒரு சுரப்பியிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் கசியும்..அது உடல் முழுவதும் பரவி அதன் சருமம் முழுவதும் பரவிவிடும். அதனால் தண்ணீர் உடலில் ஒட்டுவதில்லை. சருமம் நனைந்து எடை அதிகரிக்கும் சுமையும் இல்லை. இயற்கை எல்லா உயிருக்கும் எப்படி பாதுகாப் பளிக்கிறது பாருங்கள்.. ஆனால்.. மனிதர்களோ அதன் சருமத்திலிருந்து கோட் செய்வதற்காக, அவற்றை பொறி வைத்துப் பிடித்துக் கொல்கிறார்கள்..!.உறைபனியில்.பீவர்கள் பகல் நேரத்தைவிட, இரவில், அதுவும் குறிப்பாக, விடிவதற்கு சற்று முற்பட்ட நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பனிக்காலத்தில் ஏரிகள், ஆறுகள் உறைந்து போனாலும் தன் இருப்பிடத்துக்குள்ளேயே இருக்கின்றன. ஏதாவது ஒரு மரத்தின் கிளை அல்லது வேரை அகழ்ந்து எடுத்து வந்து குடும்பத்தினருடன் உண்ணுகின்றன..உறுதியான அணைகள்.1868ல் மார்கன் என்ற ஆராய்ச்சியாளர், அமெரிக்கன் பீவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புத்தகம் வெளியிட்டார். அதில், 125 சதுர கிலோ மீட்டரில் 64 பீவர் அணைகளைக் கண்டறிந்து அவற்றை மிக கவனமாக தனது பொறியாளர்கள் மூலம் மேப் போட்டு பதிவு செய்திருக்கிறார்..இதில் வியப்பான செய்தி என்னவென்றால், சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள், மேப்பில் காணப்பட்ட அந்த பீவர் அணைகள் 150 வருடங்களுக்குப் பிறகும் அப்படியே இருப்பதைக் கண்டு வியந்து போய்விட்டார்கள். பீவர்களை, சுற்றுச்சூழலின் பொறியாளர்கள் (Ecosystem Engineers) என்று சொல்கிறார்கள்..அணைகட்டி, இவை உருவாக்கும் குடில்கள், மண் அரிப்பையும், வெள்ளத்தையும் தடுப்பதால், தவளை போன்ற சில சிறு உயிரினங் களுக்கும், மீன்களுக்கும் கூட புகலிடமாக இவை இருக்குமாம். சின்னச்சின்ன நீர்ப் பறவைகளும் அந்தக் குடிலுக்கு மேலே கூடு கட்டிக்கொள்ளுமாம்.
இயற்கை அதிசயம்.வியந்தவர்: பத்மினி பட்டாபிராமன்.ரோடன்ட் என்னும் (Rodent) பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த விலங்கு பீவர் (Beaver). பாலூட்டி வகையைச் சேர்ந்தது. குளம், ஏரி, ஆறுகள் போன்ற சுத்தமான நீர்நிலைகளின் அருகே வசிக்கக்கூடியவை. அமெரிக்கன் பீவர்கள், வட அமெரிக்காவிலும், மற்ற வகை பீவர்கள் ஸ்பெயின், ஃப்ரான்ஸ், ஸ்கேண்டினேவிய நாடுகளிலும் காணப்படுபவை. ஆனால், பீவர்களின் பெரும்பாலும் வசிப்பது ரஷ்யாவில்தான்.. உணவு.இவை தாவரங்களை மட்டுமே உண்ணும் தாவர பட்சிணிகள். (herbivorous) வேர்கள், கிளைகள், குச்சிகள், புல், துளிர்கள் இவையே பீவரின் உணவு..எப்படி அணை கட்டுகிறது பீவர்?.இவை நுணுக்கமான தொழில் நுட்பத்துடன் நீரின் குறுக்கே அணை கட்டுவது இயற்கையின் அதிசயங்களில் ஒன்று. ஓடை அல்லது ஆற்றில் ஓடிவரும் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஒரு அணை கட்டுகிறது. மரக்குச்சிகள், சேறு, கூழாங்கற்கள், மரக்கிளைகள் இவற்றை வாயால் கவ்வி இழுத்துவந்து அணை கட்டுகிறது. அதன் மேல் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்கிறது..இதன் முன்பக்க வெட்டுப் பற்கள் மிகக் கூரானவை. கரையோரமாக வளர்ந்திருக்கும்.ஆஸ்பென் போன்ற மரங்களின் அடிப்பகுதியைக் கடித்தே அதைச் சாய்த்துவிடும்..அதுவும் எட்டு நிமிடங்களில்….கிளைகளைப் பற்களால் உடைத்து நீரில் இழுத்துச் செல்லும். இதன் பற்கள் ஆரஞ்சு நிறத்தில் இருப்பதோடு, வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்குமாம். கற்கள், குச்சிகளையும் இழுத்து வரிசையாக அடுக்கி அணை போல் கட்டிவிடும். இதனால் நீரின் ஓட்டம் தடைப்பட்டு ஒரே இடத்தில் தங்கிவிடும். மரக்கிளைகளை அடுக்கி அவற்றின் மேல் மண் சேற்றை வைத்துப் பூசி (Plastering) இந்த இருப்பிடம் கட்டப்படுகின்றன. சருகுகள் குடிலுக்குத் 'தரை'யாகின்றன. இந்த 'பொறியாளர்கள்', 24 மணி நேரத்துக்குள் பலமான அணைகட்டி விடுகின்றன..சதுப்பு நிலம், சிறிய ஆறுகள், ஏரிகளில் கரையோரமாக குடில்கள் கட்டும் பீவர், பெரிய ஆறுகளில், ஏரிகளில் எப்படிக் கட்டும் தெரியுமா?.நீருக்கடியில், மரங்களின் வேர்கள் வழியாக தமது இருப்பிடத்துக்குச் செல்லும்படி சுரங்கம் போல நுழைவாயிலைக் கட்டிக்கொள்ளுமாம். ஒவ்வொரு வருடமும் மேலும் மேலும் குச்சிகளை தன் இருப்பிடத்தைச் சுற்றிக் கட்டி சேற்றால் இன்சுலேட் செய்து, பலமான கோட்டை ஆக்கிக் கொள்கிறது. நீருக்கடியில் நீந்திச் சென்றே இருப்பிடத்துக்குள் நுழையும் அல்லது வெளியே வரும்..கோட்டைக்குள் விரிசல் ஏற்பட்டால் அதை ஓடும் நீரின் சத்தத்தை வைத்தே அறிந்துகொண்டு, சரி செய்துகொள்ளுமாம் இந்த புத்திசாலி பிராணிகள். இதனால் அதன் எதிரிகளிடமிருந்து மறைந்துகொள்ள முடிகிறது..குடில் கட்டியதும், இதற்குள் பாதுகாப்பாக உறங்கிக்கொள்ளும். இவை அனேகமாக ஒரே இணையுடன் (monogamous) வாழுபவை. பாதுகாப்பாக, தன் குட்டிகளையும் தன்னையும் ஓநாய், நரி, சிங்கம் போன்ற விலங்கு களிடமிருந்து பாதுகாத்துக்கொள்கிறது..குளிர் காலத்தில் இந்த இருப்பிடம் வெதுவெதுப்பாகவும் இருக்கும். சென்ற வருடம் ஈன்ற குட்டிகள், இந்த வருடம் பிறந்தவை என்று அனைத்தும் இந்தக் குடிலுக்குள் வாழ்கின்றன. இவை காலனிகளாக வாழக்கூடியவை. சுமார் 7 முதல் 12 உறுப்பினர்கள் வரை இந்த குடிலுக்குள் வசிப்பர். இளம் பீவர்கள், இரண்டு வருடம் இந்த குடிலில் இருந்துவிட்டு, வெளியேறி, வேறு குடில் கட்டிக்கொள்கிறது அல்லது மற்றோர் குடிலுக்குச் செல்கிறது. பீவரின் வகையைப் பொறுத்து, இவற்றின் கர்ப்பக் காலம் இரண்டு மாதம் முதல் நான்கு மாதம் வரை இருக்கும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 20 வருடங்கள்..வாட்டர் ஃப்ரூப் உடல்.பீவர்களின் மற்றொரு சிறப்பு அதன் அடர்ந்த ரோமம் கொண்ட (Fur) சருமம்.தண்ணீருக்கடியில் பல நிமிடங்கள் இருந்தாலும் இதன் உடல் நனைவதில்லை..அதன் உடலின் பின்பகுதியில் ஒரு சுரப்பியிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் கசியும்..அது உடல் முழுவதும் பரவி அதன் சருமம் முழுவதும் பரவிவிடும். அதனால் தண்ணீர் உடலில் ஒட்டுவதில்லை. சருமம் நனைந்து எடை அதிகரிக்கும் சுமையும் இல்லை. இயற்கை எல்லா உயிருக்கும் எப்படி பாதுகாப் பளிக்கிறது பாருங்கள்.. ஆனால்.. மனிதர்களோ அதன் சருமத்திலிருந்து கோட் செய்வதற்காக, அவற்றை பொறி வைத்துப் பிடித்துக் கொல்கிறார்கள்..!.உறைபனியில்.பீவர்கள் பகல் நேரத்தைவிட, இரவில், அதுவும் குறிப்பாக, விடிவதற்கு சற்று முற்பட்ட நேரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பனிக்காலத்தில் ஏரிகள், ஆறுகள் உறைந்து போனாலும் தன் இருப்பிடத்துக்குள்ளேயே இருக்கின்றன. ஏதாவது ஒரு மரத்தின் கிளை அல்லது வேரை அகழ்ந்து எடுத்து வந்து குடும்பத்தினருடன் உண்ணுகின்றன..உறுதியான அணைகள்.1868ல் மார்கன் என்ற ஆராய்ச்சியாளர், அமெரிக்கன் பீவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புத்தகம் வெளியிட்டார். அதில், 125 சதுர கிலோ மீட்டரில் 64 பீவர் அணைகளைக் கண்டறிந்து அவற்றை மிக கவனமாக தனது பொறியாளர்கள் மூலம் மேப் போட்டு பதிவு செய்திருக்கிறார்..இதில் வியப்பான செய்தி என்னவென்றால், சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள், மேப்பில் காணப்பட்ட அந்த பீவர் அணைகள் 150 வருடங்களுக்குப் பிறகும் அப்படியே இருப்பதைக் கண்டு வியந்து போய்விட்டார்கள். பீவர்களை, சுற்றுச்சூழலின் பொறியாளர்கள் (Ecosystem Engineers) என்று சொல்கிறார்கள்..அணைகட்டி, இவை உருவாக்கும் குடில்கள், மண் அரிப்பையும், வெள்ளத்தையும் தடுப்பதால், தவளை போன்ற சில சிறு உயிரினங் களுக்கும், மீன்களுக்கும் கூட புகலிடமாக இவை இருக்குமாம். சின்னச்சின்ன நீர்ப் பறவைகளும் அந்தக் குடிலுக்கு மேலே கூடு கட்டிக்கொள்ளுமாம்.