இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா?.-பி. வந்தனா, விருத்தாச்சலம்.நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா…! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்குற நாட்டுக்கு, இதெல்லாம் ஜுஜுபின்னு நான் பாட்டுக்கு சும்மா பேனாவுல இங்க் இருக்குன்னு எழுதிடலாம். ஆனா, ஆர்வமும் திறமையும் இருக்குற இளைஞர்கள், ஏதாவது ஒரு விளையாட்டுல பெருசா சாதிக்கணும்னா, இங்க என்ன மாதிரியான சூழல் நிலவுதுன்னு நம்ப மனசாட்சிக்கே தெரியும்தானே!.விளையாட்டு அமைப்புகளில் நிலவும் உதாசினம், பெற்றோர்களின் பொருளாதார நெருக்கடி, சரியான கட்டமைப்பு இன்மை, அரசியல் அழுத்தம், எல்லா அடுக்குகளிலும் ஊழல், தகுந்த பயிற்சியாளர் கிடைக்காதது… இத்தனையும் மீறி தனிநபர்கள் ஜெயிப்பது சாதனைதான்!.பிரக்யானந்தாவின் அம்மா, 'ராம்கோ' நிறுவனம் மட்டுமே தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதாக ஒரு பேட்டியில் சொன்னார். வருத்தமாக இருந்தது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், போட்டி போலவே இல்லாமல், ஒரு கார்னிவல் மூடில், கலர்ஃபுல் திருவிழாவாக நடந்து முடிந்தது. குறைந்த நேர அவகாசத்தில், சிறப்பாகத் திட்டமிட்டு, உணவு, உபசாரம், கேளிக்கை என அசத்திவிட்டனர். மொத்தம் 180 கோடி பட்ஜெட்டாம்! கூடவே இந்த நிதிச்சுமை எல்லாம் எந்த ரூபத்தில் வந்து நம்ப தலையில விடியப் போகுதோன்னு ஒரு குறுகுறுப்பு! குதிரைத்தம்பி… ஓவரா தீனி சாப்பிடிருக்குமோ?.******************.அனுஷா, சமீபத்தில் படித்த கதை அல்லது பார்த்த படம்?.-எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.சாய்ஸ் கொடுத்துட்டதனால, கதையே சொல்லிடறேன்! நீ.த.வெங்கட் எழுதிய 'அம்மா மசாலா' கதைதான்! நம்ப மங்கையர்மலர்ல வந்தது. சின்னக் கதை… ஆனால் சிறப்பு!.ஒரு வயதான பாசக்காரத் தாய், வெளிநாட்டிலிருந்து வரும் மகனின் குடும்பத்துக்காக கண்கள் பூக்கக் காத்துக் கிடக்கிறாள். ஆசை ஆசையாகச் சமைத்து, ஆனந்தம் பொங்கப் பரிமாறுகிறாள். தன்னுடன் தங்காமல் மகன் ஹோட்டலில் தங்கிவிட்டுச் சென்றாலும், வருத்தத்தைக் காண்பிக்காமல், உபசரிக்கிறாள்..அவர்களுக்காக, பிரத்யேகமாகத் தயாரித்த பட்சணம், சாம்பார்பொடி, பருப்புப்பொடி போன்றவற்றை, அன்போடு தர, அவர்களோ அதை நாசூக்காக மறுத்துவிட்டு, அதே ஊரில் உள்ள கடையில் 'அம்மா மசாலா' பொடிகளைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்..அவர்கள் அலட்சியம் செய்த மசாலா பாக்கெட் தனது மகன் கைக்குத்தான் போனது என்ற விவரம் அம்மாவுக்குத் தெரியாது. 'அம்மா மசாலா' என்ற பிரான்டில் தாங்கள் வாங்கியவை, தனது அம்மா தயாரித்ததுதான் என பிள்ளைக்குத் தெரியாது!நெகிழ வைத்த ட்விஸ்ட்!.******************.பெட்ரோல், சமையல் எரிவாயு, எண்ணெய், முதல்கொண்டு மின்சாரக் கட்டணம் வரை இப்படி எல்லாமே உச்சாணிக் கொம்பில் இருந்தால், நடுத்தர வர்க்கம் என்னதான் செய்வது மேடம்?-எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.டோன்ட் வொர்ரி ராஜம் மேடம்! இந்தக் கஷ்டமெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான்! அப்புறம்… அப்புறம் என்ன? அதுவே பழகிடும்!.கடல்நீர் ரொம்பவே உப்பு கரிக்குதுன்னு மனு கொடுத்துச்சாம் ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட அந்த மீன்!.மனுவை வாங்கிப் பார்த்த கடல், வானத்துக்கு சிபாரிசு செஞ்சுது..வானம், மேகத்துக்கிட்ட அனுப்பியது;.மேகமோ, மழைகிட்ட பரிந்துரை செஞ்சது..அருவி, ஓடைக்கிட்ட 'பாஸ்' பண்ணிச்சு!.ஓடை, ஆற்றிடம் அனுப்பியது..ஆறு, மறுபடி கடலிடம் கொண்டுபோய் சேர்த்தது..கடலுக்கு என்ன செய்யறதுன்னே தெரியாமல், அந்த மனுவைக் கிடப்பில் போட்டது..அதுக்குள்ள உப்புநீரிலியே வாழப் பழகிக் கொண்டுவிட்டது ஆற்று மீன்!.இப்படித்தான் நாமும்! எல்லாவற்றுக்கும் முணுமுணுத்து, சலசலத்து… அப்புறம் வேற வழியில்லாம வாழப் பழகிக்கொள்கிறோம். கொள்கிறோம் என்ன? கொண்டுவிட்டோம்! இனிமே… தலைக்கு மேல ஜாண் போனா என்ன? முழம் போனா என்ன?.******************.ஒரு ஜாலி தத்துவம் ப்ளீஸ்…-வி.மோகன், கோவில்பட்டி.எவ்வளவு பெரிய துணிக்கடைக்கு ஓனரா இருந்தாலும் அவருக்குப் பிறக்கும் குழந்தை என்னமோ, சட்டை இல்லாமதான் பிறக்கும்! எப்பூடி!?
இந்த வாரம் எப்படிப் போச்சு அனுஷா?.-பி. வந்தனா, விருத்தாச்சலம்.நிறைய்ய பெருமையும் பெருமிதமா! கொஞ்சம் பயமா…! காமன்வெல்த் போட்டியிலும், செஸ் ஒலிம்பியாட்டிலும், தங்கம், வெள்ளி, வெங்கலம்னு அள்ளி வந்த செல்லங்களுக்குப் பாராட்டு! 135 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்குற நாட்டுக்கு, இதெல்லாம் ஜுஜுபின்னு நான் பாட்டுக்கு சும்மா பேனாவுல இங்க் இருக்குன்னு எழுதிடலாம். ஆனா, ஆர்வமும் திறமையும் இருக்குற இளைஞர்கள், ஏதாவது ஒரு விளையாட்டுல பெருசா சாதிக்கணும்னா, இங்க என்ன மாதிரியான சூழல் நிலவுதுன்னு நம்ப மனசாட்சிக்கே தெரியும்தானே!.விளையாட்டு அமைப்புகளில் நிலவும் உதாசினம், பெற்றோர்களின் பொருளாதார நெருக்கடி, சரியான கட்டமைப்பு இன்மை, அரசியல் அழுத்தம், எல்லா அடுக்குகளிலும் ஊழல், தகுந்த பயிற்சியாளர் கிடைக்காதது… இத்தனையும் மீறி தனிநபர்கள் ஜெயிப்பது சாதனைதான்!.பிரக்யானந்தாவின் அம்மா, 'ராம்கோ' நிறுவனம் மட்டுமே தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதாக ஒரு பேட்டியில் சொன்னார். வருத்தமாக இருந்தது. சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், போட்டி போலவே இல்லாமல், ஒரு கார்னிவல் மூடில், கலர்ஃபுல் திருவிழாவாக நடந்து முடிந்தது. குறைந்த நேர அவகாசத்தில், சிறப்பாகத் திட்டமிட்டு, உணவு, உபசாரம், கேளிக்கை என அசத்திவிட்டனர். மொத்தம் 180 கோடி பட்ஜெட்டாம்! கூடவே இந்த நிதிச்சுமை எல்லாம் எந்த ரூபத்தில் வந்து நம்ப தலையில விடியப் போகுதோன்னு ஒரு குறுகுறுப்பு! குதிரைத்தம்பி… ஓவரா தீனி சாப்பிடிருக்குமோ?.******************.அனுஷா, சமீபத்தில் படித்த கதை அல்லது பார்த்த படம்?.-எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.சாய்ஸ் கொடுத்துட்டதனால, கதையே சொல்லிடறேன்! நீ.த.வெங்கட் எழுதிய 'அம்மா மசாலா' கதைதான்! நம்ப மங்கையர்மலர்ல வந்தது. சின்னக் கதை… ஆனால் சிறப்பு!.ஒரு வயதான பாசக்காரத் தாய், வெளிநாட்டிலிருந்து வரும் மகனின் குடும்பத்துக்காக கண்கள் பூக்கக் காத்துக் கிடக்கிறாள். ஆசை ஆசையாகச் சமைத்து, ஆனந்தம் பொங்கப் பரிமாறுகிறாள். தன்னுடன் தங்காமல் மகன் ஹோட்டலில் தங்கிவிட்டுச் சென்றாலும், வருத்தத்தைக் காண்பிக்காமல், உபசரிக்கிறாள்..அவர்களுக்காக, பிரத்யேகமாகத் தயாரித்த பட்சணம், சாம்பார்பொடி, பருப்புப்பொடி போன்றவற்றை, அன்போடு தர, அவர்களோ அதை நாசூக்காக மறுத்துவிட்டு, அதே ஊரில் உள்ள கடையில் 'அம்மா மசாலா' பொடிகளைக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள்..அவர்கள் அலட்சியம் செய்த மசாலா பாக்கெட் தனது மகன் கைக்குத்தான் போனது என்ற விவரம் அம்மாவுக்குத் தெரியாது. 'அம்மா மசாலா' என்ற பிரான்டில் தாங்கள் வாங்கியவை, தனது அம்மா தயாரித்ததுதான் என பிள்ளைக்குத் தெரியாது!நெகிழ வைத்த ட்விஸ்ட்!.******************.பெட்ரோல், சமையல் எரிவாயு, எண்ணெய், முதல்கொண்டு மின்சாரக் கட்டணம் வரை இப்படி எல்லாமே உச்சாணிக் கொம்பில் இருந்தால், நடுத்தர வர்க்கம் என்னதான் செய்வது மேடம்?-எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.டோன்ட் வொர்ரி ராஜம் மேடம்! இந்தக் கஷ்டமெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான்! அப்புறம்… அப்புறம் என்ன? அதுவே பழகிடும்!.கடல்நீர் ரொம்பவே உப்பு கரிக்குதுன்னு மனு கொடுத்துச்சாம் ஆற்று நீரில் அடித்து வரப்பட்ட அந்த மீன்!.மனுவை வாங்கிப் பார்த்த கடல், வானத்துக்கு சிபாரிசு செஞ்சுது..வானம், மேகத்துக்கிட்ட அனுப்பியது;.மேகமோ, மழைகிட்ட பரிந்துரை செஞ்சது..அருவி, ஓடைக்கிட்ட 'பாஸ்' பண்ணிச்சு!.ஓடை, ஆற்றிடம் அனுப்பியது..ஆறு, மறுபடி கடலிடம் கொண்டுபோய் சேர்த்தது..கடலுக்கு என்ன செய்யறதுன்னே தெரியாமல், அந்த மனுவைக் கிடப்பில் போட்டது..அதுக்குள்ள உப்புநீரிலியே வாழப் பழகிக் கொண்டுவிட்டது ஆற்று மீன்!.இப்படித்தான் நாமும்! எல்லாவற்றுக்கும் முணுமுணுத்து, சலசலத்து… அப்புறம் வேற வழியில்லாம வாழப் பழகிக்கொள்கிறோம். கொள்கிறோம் என்ன? கொண்டுவிட்டோம்! இனிமே… தலைக்கு மேல ஜாண் போனா என்ன? முழம் போனா என்ன?.******************.ஒரு ஜாலி தத்துவம் ப்ளீஸ்…-வி.மோகன், கோவில்பட்டி.எவ்வளவு பெரிய துணிக்கடைக்கு ஓனரா இருந்தாலும் அவருக்குப் பிறக்கும் குழந்தை என்னமோ, சட்டை இல்லாமதான் பிறக்கும்! எப்பூடி!?