-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. .ஒரு கல்யாண மண்டபம். அங்கே திருமணம். எங்கள் ஆட்கள் முதல் நாள் மாலை அங்கு சென்றிருப்பார்கள். கல்யாண மண்டப சமையல் கட்டில் முன்னேற்பாடு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதில் ஒன்றுதான், "மேம்பொடி" தயாரித்தல் என்பது. அந்தப் பொடி வகைகளை வறுத்து அரைத்து எடுக்கும்போது, அதன் வாசமானது அந்த ஏரியாவையே கம கமக்க வைத்திருக்கும். அப்போது காபி சாப்பிட சமையல்கட்டுக்கு வரும் கல்யாணக்காரர்கள், "கல்யாண சமையல்னா, நம்ம மணி அய்யர் சமையல்தான்…" என்று எங்கள் காதுபடவே சொல்லிக்கொண்டு "மேம்பொடி" வாசம் ஊரையே தூக்குதே…" என்பார்கள். அது என்ன 'மேம்பொடி?' "கடைசியாகச் சொல்கிறோம்." என்கின்றனர் திருச்சி மணி அய்யர் கேட்டரிங் சர்வீசஸ் நடத்தி வருகின்ற கங்காதரன் – கோமதி தம்பதியினர்..கேட்டரிங் சர்வீஸ் தொழிலில் ஏறத்தாழ எழுபது எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமும், வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து நன்மதிப்பும் வரவேற்பும் பெற்றுள்ளவர்கள். கங்காதரனின் தாத்தா கங்காதரன். இது அவரது காலத்தில் மிகச் சிறிய அளவில் செய்துகொண்டிருந்த தொழில். கங்காதரனின் அப்பா மணி அய்யர் காலத்தில் காலத்துக்கு ஏற்றார்போல விரிவடைந்தது தொழில். அப்போதுதான் "மணி அய்யர் கேட்டரிங் சர்வீசஸ்" என்கிற பெயர் நிலை பெற்றது. இப்போது அமரர் மணி அய்யர் மகன் கங்காதரன், கங்காதரனின் மகன் கிருஷ்ணா என்கிற சுப்பிரமணியன் என நான்காவது தலைமுறையாகத் தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது அவர்களது குடும்பம். அவர்கள் திருச்சி மலைகோட்டை பகுதியில் வசித்து வருகிறார்கள்.."எனக்கு வயது ஐம்பத்தியாறு. கல்யாண சமையல் தொழிலுக்கு என் பள்ளி கல்லூரி நாட்களிலேயே அப்பாவுடன் இணைந்து சென்று வந்துள்ளேன். அவரது கைப்பக்குவம் அப்படியே எனக்கும் வந்தது, கடவுள் தந்துள்ள வரமாகும். ஏறத்தாழ மறைமுகமாகவும் பின்னர் முழு வீச்சில் நானே நேரடியாகவும் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் இயங்கி வருகிறேன். வேறு எந்தத் தொழிலிலும் இல்லாது இந்தத் தொழிலில்தான் வாடிக்கையாளரின் உடனடி நேரடி ஆத்ம திருப்தி பளிச்சென வெளிப்படும். காரணம், நாங்கள் சமைத்துத் தருகின்ற உணவு பதார்த்தங்களின் ருசியானது, அவர்களை வெளிப்படையாகப் பேச வைத்துவிடும். ஒரு கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் நாங்களே ஏற்றுக்கொண்டு முன்னின்று திறம்படச் செய்து தருகிறோம். திருமண அழைப்பிதழ், மண்டபத்துக்கு வாழை மரம் கட்டுவது முதல், மூன்று நாள் திருமணத்தில் மூன்றாம் நாள் நிகழ்வாக கட்டுசாதக் கூடை கட்டி சந்தோஷமாக அனுப்பி வைப்பது வரை எங்களது தலையாயக் கடமையாக ஏற்றுச் செயல்படுவது எங்களது தனிச் சிறப்பாகும்" என்கிறார் கங்காதரன்.."என் அப்பா காலத்தில் என் அப்பாவுடனும், இப்போது எனது அண்ணன் காலத்தில் அவருடனும் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் ஐந்து கல்யாணங்கள் மற்றும் சுப நிகழ்வுகளில் கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்துத் திறம்பட நிறைவேற்றித் தந்து வருகிறோம். எனது அண்ணன் கங்காதரன், அவரது மனைவி கோமதி, அவர்களது மகன் கிருஷ்ணா, அவர்களது மருமகள் சுபஸ்ரீ என என்னைச் சேர்த்து ஐந்து பேரும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஏற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு மிகச் சிறப்பாகவே எங்களது சர்வீசை திருப்தியுடன் செய்துவருகிறோம்" எனச் சொல்கிறார் கங்காதரனின் தம்பி விசுவநாதன்.."என் கொள்ளுத் தாத்தாவிடம் இருந்து என் தாத்தாவுக்கு, என் தாத்தாவிடம் இருந்து என் அப்பாவுக்கு, இன்று, என் அப்பாவும் நானுமாக இணைந்து இப்போது நான்காவது தலைமுறையாக இந்தத் தொழிலை நான் மிகவும் விரும்பி வணங்கி ஏற்றுக்கொண்டு இயங்கி வருகிறேன். நான் படித்தது பொறியியல். என்னை மிகவும் ஈர்த்தது இந்த சமையைலியல். ஒரு கல்யாணத்துக்கு எவ்வளவு பேருக்கு சாப்பாடு என்பதுதான் எங்களது முதல் கேள்வி. முந்நூறு பேருக்கு என்றால் நாங்கள், அறுநூறு பேருக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு சென்று விடுவோம். அதனால், நாங்கள் ஏற்றுக்கொண்ட கல்யாண காண்ட்ராக்டில் திடீரென அதிகம் பேர் சாப்பிட வந்து விட்டாலும் சாப்பாடு பற்றாக்குறை என்பதே இருக்காது. முன் கூட்டியே திட்டமிட்டு விடுவோம். பந்தி நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருப்போம். அதற்கு ஏற்றவாறு விரைந்து செயல்படுவோம். எந்தக் காரணம் கொண்டும் கல்யாணக்காரர்களை ஏதேனும் ஒரு தர்மசங்கடத்திலோ சிரமத்திலோ கொண்டுபோய் விட்டுவிட மாட்டோம். கண்ணும் கருத்துமான எங்கள் செயல்பாடுகள்தான், தொடர்ந்து எங்களுக்கு நிறைய நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்துகொண்டே இருக்கிறது." என்கிறார் கங்காதரனின் மகன் கிருஷ்ணா.."2௦2௦ல் எங்கள் திருமணம். நான் படித்தது பொறியியல் மெட்டீரியல் சயின்ஸ். அம்மா அப்பா அரசு உத்தியோகஸ்தர்கள். அதனால் என்ன? நான் புகுந்தது நளபாகச் சக்ரவர்த்தியின் வீடு. எண்ணெய்க் கரண்டியை நான் மட்டும் பிடிக்காமல் இருக்க முடியுமா என்ன? கல்யாணம் ஆகி நான் வந்து அறுபது நாட்கள் இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு திடீரென எண்ணூறு ஊத்தப்பம் ஆர்டர் வீடு தேடி வந்துவிட்டது. என் அன்பு மாமியாருடன் நானும் சேர்ந்து, அன்று விறு விறுவென ஊத்தப்பங்கள் வார்த்துத் தந்து அதற்கான சாம்பார் சட்னி வகையறாவையும் என் மாமியாருடன் இணைந்து தயார் செய்து அனுப்பி வைத்தோம். அதிலிருந்து படிப்படியாகப் பயிற்சி பெற்று இப்போது, ஒரு கல்யாண மண்டபத்து சமையல் வேலைகளை நான் ஒரு ஆளே மேற்பார்வையிட்டு அதனை நிறைவேற்றித் தரும் அளவுக்கு வந்துவிட்டேன்" எனச் சொல்கிறார் கங்காதரனின் மருமகள் சுபஸ்ரீ கிருஷ்ணா.."என் கணவர் அவரது கல்யாணத்துக்குப் பெண் தேடுகையில், சமையல்கார வீட்டுப் பெண்தான் வேண்டும் என்று தேடி இருக்கிறார். என் அப்பா வீட்டிலேயே ஸ்வீட் தயாரித்து வெளியே அனுப்பி வைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். என் அப்பாவும் என் கணவரின் அப்பாவும் நண்பர்கள். அப்புறம் என்ன? இதோ, எங்களுக்குத் திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் ஆகிறது. எனக்குக் கல்யாணம் ஆகி முப்பது நாளிலேயே என் புகுந்த வீட்டுத் தகப்பனான என் மாமனாருடனும் என் அன்புக் கணவருடனும் அவ்வப்போது கேட்டரிங் வேலைகளுக்குச் சென்றுவிட்டேன். அவர்களுடன் கூட இருந்து ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். அப்போதே வீட்டில் ஆர்டர்கள் அடிப்படையில் "கேரியர் சாப்பாடு" சர்வீஸ் ஆறேழு ஆண்டுகள் செய்தேன். இப்போது எனது அண்ணன் அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே. நகரில் 'கேரியர் சாப்பாடு' சர்வீஸ் நடத்திவருகிறார். நான் முழுதாகவே எனது கணவர் நடத்திவரும் கேட்டரிங் சர்வீசில் எனது பங்களிப்பைச் செய்து வருகிறேன்..எங்கள் மணி அய்யர் கேட்டரிங் சர்வீசின் சிறப்புகள்தான் என்ன? நிறைய. அவைகளில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். பில்ட்டர் காபி. டிகாக்ஷன் தயாரிப்பில் தனிக் கவனம் செலுத்துவோம். இனிப்பில் அக்கார அடிசல், ரசமலாய் அதன் தித்திப்பில் உங்களைத் திக்கு முக்காட வைத்துவிடும். மணி அய்யர் சமையல்னா பாயாசம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு தனி ஆகாசமே திறந்திருக்கும். இளநீர் பாயாசம், சதசதயம் எனப்படும் கசகசா பாயாசம், அடைபிரதமன் ஆகியன சிறப்பானவைகள் ஆகும். இதில் இளநீர் பாயாசம் மட்டும் சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறுவது இல்லை. காரணம், அதற்கு ஏகப்பட்ட டிமான்ட்! அதனால் நாங்கள் இளநீர் பாயசத்துக்கு தனியாக ஒரு ஸ்டால் ஒன்றினைப் போட்டு விடுவோம்..இட்லி, ஊத்தப்பம், தோசை, அடை, இடியாப்பம், சேவை, பணியாரம் போன்றவைகளுக்கு தேவையான மாவு வகைகளை ஆட்கள் வைத்து மண்டபத்திலேயே எங்கள் கண்ணெதிரே அரைத்து எடுத்து வைத்துக் கொள்வோம். இட்லி என்றால் இட்லி மாதிரியும், தோசை என்றால் தோசை மாதிரியும் இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு அந்தந்த மாவு பதம் முக்கியம் இல்லையா? அதனால் மண்டபத்தில் நாங்களே ஆட்களை வைத்து தனியாக மாவு அரைத்துக்கொள்கிறோம்..அதுபோல பொடி வகைகளையும் வெளியில் இருந்து வாங்குவதே இல்லை. மெனக்கெட்டு ஒவ்வொன்றையும் நாங்களே தனித்தனியாகத் தயாரிக்கிறோம். சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், இட்லி மிளகாய்ப் பொடி, பருப்புப் பொடி, மேம்பொடி ஆகியவைகளை நாங்களே அரைத்துத் தயாரித்துக் கொள்கிறோம். இந்த "மேம்பொடி" என்பதுதான். நல்லதொரு கம கம மணத்தினையும் தர வல்லது. அது என்னங்க மேம்பொடி?.மிளகாய் வத்தல், மல்லி, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம் இவைகளை குறிப்பிட்ட அதனதன் அளவுகளில் எடுத்துக்கொண்டு வறுக்கவேண்டும். அதுவும் கறுத்துப்போகாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து, அவைகளை ஒன்றாக்கி அரைக்க வேண்டும். மேம்பொடி ரெடி. இந்த மேம்பொடியினை சாம்பாருக்கும் வத்தக் குழம்புக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ரசத்துக்கு மேம்பொடி தயாரிப்பு தனி. மிளகு, சீரகம், துவரம் பருப்பு, மிளகாய் வத்தல் இவைகளை அது அதற்கு உண்டான அளவுகளில் எடுத்துக்கொண்டு பொன்னிறமாக வறுத்து அரைக்க வேண்டும். ரசத்துக்கான 'கம கம' மேம்பொடி ரெடி" என்கிறார் கோமதி கங்காதரன்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு. .ஒரு கல்யாண மண்டபம். அங்கே திருமணம். எங்கள் ஆட்கள் முதல் நாள் மாலை அங்கு சென்றிருப்பார்கள். கல்யாண மண்டப சமையல் கட்டில் முன்னேற்பாடு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அதில் ஒன்றுதான், "மேம்பொடி" தயாரித்தல் என்பது. அந்தப் பொடி வகைகளை வறுத்து அரைத்து எடுக்கும்போது, அதன் வாசமானது அந்த ஏரியாவையே கம கமக்க வைத்திருக்கும். அப்போது காபி சாப்பிட சமையல்கட்டுக்கு வரும் கல்யாணக்காரர்கள், "கல்யாண சமையல்னா, நம்ம மணி அய்யர் சமையல்தான்…" என்று எங்கள் காதுபடவே சொல்லிக்கொண்டு "மேம்பொடி" வாசம் ஊரையே தூக்குதே…" என்பார்கள். அது என்ன 'மேம்பொடி?' "கடைசியாகச் சொல்கிறோம்." என்கின்றனர் திருச்சி மணி அய்யர் கேட்டரிங் சர்வீசஸ் நடத்தி வருகின்ற கங்காதரன் – கோமதி தம்பதியினர்..கேட்டரிங் சர்வீஸ் தொழிலில் ஏறத்தாழ எழுபது எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமும், வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து நன்மதிப்பும் வரவேற்பும் பெற்றுள்ளவர்கள். கங்காதரனின் தாத்தா கங்காதரன். இது அவரது காலத்தில் மிகச் சிறிய அளவில் செய்துகொண்டிருந்த தொழில். கங்காதரனின் அப்பா மணி அய்யர் காலத்தில் காலத்துக்கு ஏற்றார்போல விரிவடைந்தது தொழில். அப்போதுதான் "மணி அய்யர் கேட்டரிங் சர்வீசஸ்" என்கிற பெயர் நிலை பெற்றது. இப்போது அமரர் மணி அய்யர் மகன் கங்காதரன், கங்காதரனின் மகன் கிருஷ்ணா என்கிற சுப்பிரமணியன் என நான்காவது தலைமுறையாகத் தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது அவர்களது குடும்பம். அவர்கள் திருச்சி மலைகோட்டை பகுதியில் வசித்து வருகிறார்கள்.."எனக்கு வயது ஐம்பத்தியாறு. கல்யாண சமையல் தொழிலுக்கு என் பள்ளி கல்லூரி நாட்களிலேயே அப்பாவுடன் இணைந்து சென்று வந்துள்ளேன். அவரது கைப்பக்குவம் அப்படியே எனக்கும் வந்தது, கடவுள் தந்துள்ள வரமாகும். ஏறத்தாழ மறைமுகமாகவும் பின்னர் முழு வீச்சில் நானே நேரடியாகவும் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொழிலில் இயங்கி வருகிறேன். வேறு எந்தத் தொழிலிலும் இல்லாது இந்தத் தொழிலில்தான் வாடிக்கையாளரின் உடனடி நேரடி ஆத்ம திருப்தி பளிச்சென வெளிப்படும். காரணம், நாங்கள் சமைத்துத் தருகின்ற உணவு பதார்த்தங்களின் ருசியானது, அவர்களை வெளிப்படையாகப் பேச வைத்துவிடும். ஒரு கல்யாணத்துக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் நாங்களே ஏற்றுக்கொண்டு முன்னின்று திறம்படச் செய்து தருகிறோம். திருமண அழைப்பிதழ், மண்டபத்துக்கு வாழை மரம் கட்டுவது முதல், மூன்று நாள் திருமணத்தில் மூன்றாம் நாள் நிகழ்வாக கட்டுசாதக் கூடை கட்டி சந்தோஷமாக அனுப்பி வைப்பது வரை எங்களது தலையாயக் கடமையாக ஏற்றுச் செயல்படுவது எங்களது தனிச் சிறப்பாகும்" என்கிறார் கங்காதரன்.."என் அப்பா காலத்தில் என் அப்பாவுடனும், இப்போது எனது அண்ணன் காலத்தில் அவருடனும் இணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் ஐந்து கல்யாணங்கள் மற்றும் சுப நிகழ்வுகளில் கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்துத் திறம்பட நிறைவேற்றித் தந்து வருகிறோம். எனது அண்ணன் கங்காதரன், அவரது மனைவி கோமதி, அவர்களது மகன் கிருஷ்ணா, அவர்களது மருமகள் சுபஸ்ரீ என என்னைச் சேர்த்து ஐந்து பேரும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஏற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு மிகச் சிறப்பாகவே எங்களது சர்வீசை திருப்தியுடன் செய்துவருகிறோம்" எனச் சொல்கிறார் கங்காதரனின் தம்பி விசுவநாதன்.."என் கொள்ளுத் தாத்தாவிடம் இருந்து என் தாத்தாவுக்கு, என் தாத்தாவிடம் இருந்து என் அப்பாவுக்கு, இன்று, என் அப்பாவும் நானுமாக இணைந்து இப்போது நான்காவது தலைமுறையாக இந்தத் தொழிலை நான் மிகவும் விரும்பி வணங்கி ஏற்றுக்கொண்டு இயங்கி வருகிறேன். நான் படித்தது பொறியியல். என்னை மிகவும் ஈர்த்தது இந்த சமையைலியல். ஒரு கல்யாணத்துக்கு எவ்வளவு பேருக்கு சாப்பாடு என்பதுதான் எங்களது முதல் கேள்வி. முந்நூறு பேருக்கு என்றால் நாங்கள், அறுநூறு பேருக்குத் தேவையான உணவுப் பொருட்களோடு சென்று விடுவோம். அதனால், நாங்கள் ஏற்றுக்கொண்ட கல்யாண காண்ட்ராக்டில் திடீரென அதிகம் பேர் சாப்பிட வந்து விட்டாலும் சாப்பாடு பற்றாக்குறை என்பதே இருக்காது. முன் கூட்டியே திட்டமிட்டு விடுவோம். பந்தி நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு கணக்கு போட்டுக்கொண்டிருப்போம். அதற்கு ஏற்றவாறு விரைந்து செயல்படுவோம். எந்தக் காரணம் கொண்டும் கல்யாணக்காரர்களை ஏதேனும் ஒரு தர்மசங்கடத்திலோ சிரமத்திலோ கொண்டுபோய் விட்டுவிட மாட்டோம். கண்ணும் கருத்துமான எங்கள் செயல்பாடுகள்தான், தொடர்ந்து எங்களுக்கு நிறைய நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தந்துகொண்டே இருக்கிறது." என்கிறார் கங்காதரனின் மகன் கிருஷ்ணா.."2௦2௦ல் எங்கள் திருமணம். நான் படித்தது பொறியியல் மெட்டீரியல் சயின்ஸ். அம்மா அப்பா அரசு உத்தியோகஸ்தர்கள். அதனால் என்ன? நான் புகுந்தது நளபாகச் சக்ரவர்த்தியின் வீடு. எண்ணெய்க் கரண்டியை நான் மட்டும் பிடிக்காமல் இருக்க முடியுமா என்ன? கல்யாணம் ஆகி நான் வந்து அறுபது நாட்கள் இருக்கும். ஒரு நிகழ்ச்சிக்கு திடீரென எண்ணூறு ஊத்தப்பம் ஆர்டர் வீடு தேடி வந்துவிட்டது. என் அன்பு மாமியாருடன் நானும் சேர்ந்து, அன்று விறு விறுவென ஊத்தப்பங்கள் வார்த்துத் தந்து அதற்கான சாம்பார் சட்னி வகையறாவையும் என் மாமியாருடன் இணைந்து தயார் செய்து அனுப்பி வைத்தோம். அதிலிருந்து படிப்படியாகப் பயிற்சி பெற்று இப்போது, ஒரு கல்யாண மண்டபத்து சமையல் வேலைகளை நான் ஒரு ஆளே மேற்பார்வையிட்டு அதனை நிறைவேற்றித் தரும் அளவுக்கு வந்துவிட்டேன்" எனச் சொல்கிறார் கங்காதரனின் மருமகள் சுபஸ்ரீ கிருஷ்ணா.."என் கணவர் அவரது கல்யாணத்துக்குப் பெண் தேடுகையில், சமையல்கார வீட்டுப் பெண்தான் வேண்டும் என்று தேடி இருக்கிறார். என் அப்பா வீட்டிலேயே ஸ்வீட் தயாரித்து வெளியே அனுப்பி வைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். என் அப்பாவும் என் கணவரின் அப்பாவும் நண்பர்கள். அப்புறம் என்ன? இதோ, எங்களுக்குத் திருமணம் ஆகி முப்பது ஆண்டுகள் ஆகிறது. எனக்குக் கல்யாணம் ஆகி முப்பது நாளிலேயே என் புகுந்த வீட்டுத் தகப்பனான என் மாமனாருடனும் என் அன்புக் கணவருடனும் அவ்வப்போது கேட்டரிங் வேலைகளுக்குச் சென்றுவிட்டேன். அவர்களுடன் கூட இருந்து ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டேன். அப்போதே வீட்டில் ஆர்டர்கள் அடிப்படையில் "கேரியர் சாப்பாடு" சர்வீஸ் ஆறேழு ஆண்டுகள் செய்தேன். இப்போது எனது அண்ணன் அதனைத் தொடர்ந்து திருச்சி கே.கே. நகரில் 'கேரியர் சாப்பாடு' சர்வீஸ் நடத்திவருகிறார். நான் முழுதாகவே எனது கணவர் நடத்திவரும் கேட்டரிங் சர்வீசில் எனது பங்களிப்பைச் செய்து வருகிறேன்..எங்கள் மணி அய்யர் கேட்டரிங் சர்வீசின் சிறப்புகள்தான் என்ன? நிறைய. அவைகளில் சிலவற்றை மட்டும் சொல்கிறேன். பில்ட்டர் காபி. டிகாக்ஷன் தயாரிப்பில் தனிக் கவனம் செலுத்துவோம். இனிப்பில் அக்கார அடிசல், ரசமலாய் அதன் தித்திப்பில் உங்களைத் திக்கு முக்காட வைத்துவிடும். மணி அய்யர் சமையல்னா பாயாசம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு தனி ஆகாசமே திறந்திருக்கும். இளநீர் பாயாசம், சதசதயம் எனப்படும் கசகசா பாயாசம், அடைபிரதமன் ஆகியன சிறப்பானவைகள் ஆகும். இதில் இளநீர் பாயாசம் மட்டும் சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறுவது இல்லை. காரணம், அதற்கு ஏகப்பட்ட டிமான்ட்! அதனால் நாங்கள் இளநீர் பாயசத்துக்கு தனியாக ஒரு ஸ்டால் ஒன்றினைப் போட்டு விடுவோம்..இட்லி, ஊத்தப்பம், தோசை, அடை, இடியாப்பம், சேவை, பணியாரம் போன்றவைகளுக்கு தேவையான மாவு வகைகளை ஆட்கள் வைத்து மண்டபத்திலேயே எங்கள் கண்ணெதிரே அரைத்து எடுத்து வைத்துக் கொள்வோம். இட்லி என்றால் இட்லி மாதிரியும், தோசை என்றால் தோசை மாதிரியும் இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு அந்தந்த மாவு பதம் முக்கியம் இல்லையா? அதனால் மண்டபத்தில் நாங்களே ஆட்களை வைத்து தனியாக மாவு அரைத்துக்கொள்கிறோம்..அதுபோல பொடி வகைகளையும் வெளியில் இருந்து வாங்குவதே இல்லை. மெனக்கெட்டு ஒவ்வொன்றையும் நாங்களே தனித்தனியாகத் தயாரிக்கிறோம். சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், இட்லி மிளகாய்ப் பொடி, பருப்புப் பொடி, மேம்பொடி ஆகியவைகளை நாங்களே அரைத்துத் தயாரித்துக் கொள்கிறோம். இந்த "மேம்பொடி" என்பதுதான். நல்லதொரு கம கம மணத்தினையும் தர வல்லது. அது என்னங்க மேம்பொடி?.மிளகாய் வத்தல், மல்லி, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம் இவைகளை குறிப்பிட்ட அதனதன் அளவுகளில் எடுத்துக்கொண்டு வறுக்கவேண்டும். அதுவும் கறுத்துப்போகாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து, அவைகளை ஒன்றாக்கி அரைக்க வேண்டும். மேம்பொடி ரெடி. இந்த மேம்பொடியினை சாம்பாருக்கும் வத்தக் குழம்புக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். ரசத்துக்கு மேம்பொடி தயாரிப்பு தனி. மிளகு, சீரகம், துவரம் பருப்பு, மிளகாய் வத்தல் இவைகளை அது அதற்கு உண்டான அளவுகளில் எடுத்துக்கொண்டு பொன்னிறமாக வறுத்து அரைக்க வேண்டும். ரசத்துக்கான 'கம கம' மேம்பொடி ரெடி" என்கிறார் கோமதி கங்காதரன்.